என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுந்தப்பாடி மாரியம்மனுக்கு"

    • கவுந்தப்பாடி ராஜராஜேஸ்வரி புது மாரியம்மன் கோவிலில் கூழ் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி ராஜராஜேஸ்வரி புது மாரியம்மன் கோவிலில் ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி கூழ் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    விநாயகர், பாலமுருகன் மற்றும் ராஜராஜேஸ்வரி புது மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மாலை 6 மணி அளவில் 500 லிட்டர் கூழ் தயார் செய்யப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்கார மகாதீபாரதனை பூஜை நடைபெற்றது.

    இந்த பூஜையில் பெண்கள், குழந்தைகள் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கூழ் பிரசாதம் பெற்று சென்றனர்.

    ×