search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம்

    • உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • இதில் மாணவ- மாணவிகள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்து பனையம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    இந்த ஊர்வலம் பவானிசாகர் சாலை வழியாக சென்றது. இதில் மாணவ- மாணவிகள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

    தமிழ்நாட்டின் மொத்த மேம்பாட்டிற்கு மற்றும் தாய்மார்களின் நல் வாழ்வி ற்கும் குழந்தைகளின் ஒளி மயமான எதிர்கா லத்திற்கும் திருமணத்திற்கு ஏற்ற வயது முதல் குழந்தையை தாம தப்படுத்தி மேற்கொள்ள வேண்டிய குடும்ப நல முறைகள் எடுத்துரைக்கப் பட்டன.

    மக்கள் தொகை பெருக்க த்தினால் ஏற்படும் தாக்க த்தை குறைத்தல், சுற்று ச்சூழல் பாதிப்பை தடுத்தல், மரம் வளர்ப்பதை ஊக்கு வித்தல், வறுமை ஒழிப்பு குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எடுத்து கூறப்பட்டது.

    குடும்பத் திட்டங்களை மக்கள் இயக்கமாக மலரச் செய்ய என்னை நான் முழுமையாக அர்ப்பணி த்துக் கொள்வேன் என உள்ளிட்ட உறுதிமொழிகளை மாணவ- மாணவிகள் ஏற்றனர்.

    மேலும் என்னுடைய இந்த முயற்சிகள் வெற்றி யடைய இயற்கை எனக்கு துணை நிற்கட்டும் என சுதந்திர அமுத பெரு விழாவினை கொண்டாடி மகிழ்வோம் மற்றும் குடும்ப நல உறுதிமொழி ஏற்று வளம் பெறுவோம் என பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கோஷங்களை எழுப்பி ஊர்வ லமாக சென்று பள்ளியை வந்து அடைந்தனர்.

    Next Story
    ×