என் மலர்
திண்டுக்கல்
- புவிசார் குறியீடு பெற்ற ஆண்டு நல்ல விலையில் பூண்டு விற்பனை இருந்தது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் அதிகபட்சமாக பூண்டு விற்பனை ரூ.300 வரை மட்டுமே இருந்தது.
- 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனையாகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. கொடைக்கானல் நகர் பகுதியில் சுற்றுலாவை பிரதான தொழிலாக கொண்டிருக்கக் கூடிய நிலையில் கொடைக்கானலை சுற்றி ஏராளமான மலைக் கிராமங்கள் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டு முன்னேறி வருகின்றன.
குறிப்பாக மேல்மலை கிராமங்களான வில்பட்டி, பள்ளங்கி, கூக்கால், மன்னவனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. கொடைக்கானல் மலை காய்கறிகளான கேரட், முள்ளங்கி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் சந்தைகளில் அதிகம் இடம் பிடித்து வருகின்றன. இதில் புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது.
புவிசார் குறியீடு பெற்ற ஆண்டு நல்ல விலையில் பூண்டு விற்பனை இருந்தது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் அதிகபட்சமாக பூண்டு விற்பனை ரூ.300 வரை மட்டுமே இருந்தது.
ஆனால் தற்போது மலைப்பூண்டின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனையாகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டுகளில் அதிக பரப்பில் பூண்டு விவசாயம் செய்து விலை மிகவும் குறைந்ததால் பலரும் பூண்டு சாகுபடியை கைவிட்டனர். தற்போது நல்ல விலை கிடைத்து வருவதால் மீண்டும் பூண்டு விவசாயத்தை கையில் எடுக்க முடிவு செய்துள்ளனர். தற்போது வரத்து குறைவாக உள்ள போதிலும் கூடுதல் விலை கிடைத்திருப்பது பூண்டு விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
- காப்பிலியபட்டியில் செயல்பட்டு வரும் உரக்கிடங்கில் மறுசுழற்சி செய்யப்படும் உலர்க ழிவுகளை தரம்பிரிக்கும் பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உரக்கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு சொந்தமான காப்பிலியபட்டியில் செயல்பட்டு வரும் உரக்கிடங்கில் மறுசுழற்சி செய்யப்படும் உலர்க ழிவுகளை தரம்பிரிக்கும் பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உரக்கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். மேலும் ஒட்டன்சத்திரம் காந்திமார்க்கெட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கடைகள், குழந்தைவேலப்பர் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கிரிவலப்பாதை, மின் மயானம் உள்ளிட்டவைகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
இதில் வேலுச்சாமி எம்.பி., மதுரை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் முஜிபூர்ரகுமான், நகர செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, நகர்மன்ற தலைவர் திருமலைசாமி, ஆணையாளர் கணேஷ், இளநிலை உதவியாளர் ஈஸ்வரன், பொதுப்பணி மேற்பார்வையாளர் ராம்ஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தாக அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
- பிரியாணி கடைக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் தெற்கு ரதவீதியில் உள்ள வேணுபிரியாணி கடையில் நேற்று முன்தினம் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட வாடிக்கையாளர் அதில் கரப்பான்பூச்சி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஓட்டல் ஊழியர்களிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை.
இதுகுறித்த செய்தி வெளியே வரவே இன்று மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் அதிகாரிகள் செல்வம், சரவணக்குமார், கண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த குழுவினர் சமையல்அறை மற்றும் உணவு பரிமாற பயன்படுத்தப்படும் பாத்திரம், உணவு பொருட்களின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். சுகாதாரமற்ற முறையில் இருந்ததற்காக 32, 63, 58 ஆகிய பிரிவுகளின்கீழ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்ய தயாரித்து வைக்கப்பட்டிருந்த பிரியாணியின் தரத்தையும் ஆய்வுக்கு எடுத்துச்சென்றனர். மேலும் உணவு தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருட்களை சென்னை கிண்டியில் உள்ள பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சுகாதார குறைபாடு தொடர்பாக 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி சென்றனர்.
- மாணவர்களுக்கு நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
- டி.எஸ்.பி போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினார்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸ் டி.எஸ்.பி. பெனாசிர் பாத்திமா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் பற்றியும், இதனால் ஏற்படும் வாழ்க்கைத் தரம் பாதிப்பு குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினார்.
இதையடுத்து மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணையா, திட்ட அலுவலர் கிருஷ்ணகுமார், உதவி திட்ட அலுவலர் இளையராஜா மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கனரக லாரிகள் மூலம் மண் அள்ளப்படுவதால் கிரா மங்களில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகி செல்வது அடிக்கடி நடந்து வருகிறது.
- மண் அள்ளுவதற்காக வந்த 2 லாரிகளை தாசமநாயக்கன் பட்டி கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள தாசமநாயக்கன்பட்டி பகுதியில் செம்மண், மண் அள்ளப்படுவது தொடர் கதையாக உள்ளது. கனரக லாரிகள் மூலம் மண் அள்ளப்படுவதால் கிரா மங்களில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகி செல்வது அடிக்கடி நடந்து வருகிறது.
எனவே மண் அள்ள செல்லும் லாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும். குடிநீர் குழாய்கள் உடைப்பை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் இன்று காலை மண் அள்ளு வதற்காக வந்த 2 லாரிகளை தாசமநாயக்கன்பட்டி கிராம மக்கள் சிறைபிடித்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன், உதவியாளர் மருதமுத்து ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து லாரி டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இனிமேல் இதுபோல் அனுமதியின்றி மண் அள்ளகூடாது என எச்சரித்து அவர்களை அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அதிகாரிகள் இப்பிரச்சினையில் தலையிட்டு உரிய நட வடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பழனி:
பழனி நகராட்சிக்கு ட்பட்ட பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு போதிய சம்பளம் வழங்க ப்படவில்லை என்றும், குறிப்பிட்ட தேதியில் சம்பளம் கிடைப்பதில்லை என்றும், ஆண், பெண் தொழிலாளர்களுக்கு ஊதிய முரண்பாடு இருப்பதாகவும் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது டன் தங்கள் கோரிக்கை களை நிறைவேற்றக்கோரி கோசங்களும் எழுப்பினர். ஏற்கனவே கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு போராட்ட த்தில் ஈடுபட்டபோது அவர்களின் கோரிக்கை களை நிைறவேற்றி தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
ஆனால் அவ்வாறு செய்யாததால் இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்தனர். தூய்மை பணியாளர்களின் போரா ட்டத்தால் நகராட்சி க்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேக்கம் அடைந்து காண ப்பட்டது. எனவே அதிகாரி கள் இப்பிரச்சினையில் தலையிட்டு உரிய நட வடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- கூலித்தொழிலாளியை மர்மகும்பல் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மகும்பலை தேடி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
நத்தம் அருகே வலைய பட்டிைய சேர்ந்தவர் சின்னையா(45) . கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டின் முன்பு தூங்கிகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் அரிவாளால் சின்னையாவை சரமாரியாக வெட்டினர். இதனால் வலி தாங்கமுடியாமல் அவர் சத்தம் போட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்க த்தினர் ஒன்றுகூடினர்.
இதை பார்த்ததும் அவரை வெட்டிய மர்மகும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றனர். படுகாயங்களுடன் சின்னை யாவை மீட்ட அக்கம்பக்க த்தினர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப ட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசா ரணையில் முன்விரோதம் காரணமாக சின்னையாவை அந்த கும்பல் தாக்கி இருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- கடவா குறிச்சி மலை பகுதியில் கடந்த வாரம் தொடர்ந்து கனமழை பெய்ததை தொடர்ந்து கண்மாய் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது.
- விவசாயிகள் நீர்வளத்துறை அதிகாரி களிடமிருந்து மானிய விலையில் வாங்கி கிராம கண்மாயில் உள்ள பகுதியில் பூஜை செய்து மீன் குஞ்சுகளை நீரில் விட்டனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே முசுவனூத்து ஊராட்சியில் உள்ள முசுவனூத்து கண்மாய் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சரியான மழை இல்லாதால் நிரம்ப வில்லை.
கடவா குறிச்சி மலை பகுதியில் கடந்த வாரம் தொடர்ந்து கனமழை பெய்ததை தொடர்ந்து கண்மாய் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது.
இதனைத் தொடர்ந்து முசுவனூத்து கிராம விவசாயிகள் கண் மாயில் மீன் வளர்க்க முடிவு செய்தனர். அதன்படி நீர்வளத்துறை அதிகாரி களிடமிருந்து மானிய விலையில் வாங்கி கிராம கண்மாயில் உள்ள பகுதியில் பூஜை செய்து மீன் குஞ்சுகளை நீரில் விட்டனர்.
நிகழ்ச்சியில் முசுவனூத்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபிரகாஷ், கிராம விவசாயிகள் பிச்சை, ராஜேந்திரன், காளியப்பன், முருகன், ரவி, அய்யாவு , திலேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சூரசம்ஹாரத்தை காண பழனி கோவிலுக்கு இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கினர்.
- பக்தர்கள் பாதுகாப்புக்காக கிரிவீதி மற்றும் மலைக்கோவிலில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பழனி:
முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த திங்கட்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இத்திருவிழாவை முன்னிட்டு மலைக்கோவிலில் தினமும் உச்சிகாலத்தின்போது கல்பபூஜை, சண்முகர் தீபாராதனை, தங்கமயில் புறப்பாடு, தங்கச்சப்பரம் புறப்பாடு, வெள்ளி காமதேனு புறப்பாடு ஆகியவை நடைபெற்றன.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு மலைக்கோவில், திருஆவினன்குடி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் ஏராளமான பக்தர்கள் தங்கி சஷ்டி விரதம் மேற்கொண்டனர். 6-ம் நாளான இன்று பக்தர்கள் வாழைத்தண்டுடன் பழங்கள் கலந்த உணவை அருந்தி விரதத்தை முடித்துக்கொண்டனர்.
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று சூரன்களின் பொம்மை தயாரிக்கும் பணி நடைபெற்றது. இன்று நண்பகலில் உச்சிகால பூஜையை தொடர்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு சூரர்களை வதம் செய்ய மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமாரசாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதன்பின் 3.15 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு சாமி பராசக்தி வேலுடன் அடிவாரம் வந்தடைவார். இதனை முன்னிட்டு இன்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து தாரகசூரன் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்குமேல் வடக்கு கிரிவீதியில் முதலாவதாக தாரகசூரவதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகசூரன் வதமும், மேற்குகிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது.
பழனியின் 4 கிரிவீதிகளிலும் 4 சூரர்கள் வதம் செய்யப்படுவது தனிச்சிறப்பாகும். சூரசம்ஹாரத்திற்கு பிறகு ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா கொண்டாடப்பட்டு மலைக்கு வேல் கொண்டு செல்லப்படும். அங்கு பராசக்தி வேலுக்கு சம்ரோக்சன பூஜை செய்யப்பட்டு பின்னர் அர்த்தசாம பூஜை நடைபெறும்.
சூரசம்ஹாரத்தை காண பழனி கோவிலுக்கு இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கினர். பகல் 12 மணிக்கு மேல் மலைக்கோவிலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அதற்கு முன்பாகவே சாமி தரிசனம் செய்ய நீண்டவரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் பாதுகாப்புக்காக கிரிவீதி மற்றும் மலைக்கோவிலில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை காலை மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத சண்முகருக்கும், மாலையில் பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர்(பொறுப்பு) லட்சுமி மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
- வேடசந்தூர் தாசில்தார் விஜயலட்சுமி ஆக்கிரமிப்பில் இருந்த கோவில்களை அகற்ற முயன்றபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- நவம்பர் 17-ந்தேதிக்குள் கோவில்களை அகற்றக்கூடாது என ஒரு தரப்பினர் தெரிவித்தனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள வி.புதுக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட மினுக்கம்பட்டியில் கருப்பணசாமி, அங்காள பரமேஸ்வரி, பாப்பாத்தியம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. நீண்ட காலமாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த கோவில்கள் ஓடைப்புறம்போக்கு பகுதியில் இருப்பதாக தெரியவந்தது.
இதனையடுத்து இதேபகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார். இதனை தொடர்ந்து இப்பகுதியில் இருந்த வீடுகள் அகற்றப்பட்டன. ஆனால் 3 கோவில்கள் மற்றும் 2 குடிநீர் தொட்டிகள் மட்டும் அகற்றப்படவில்லை.
இதனிடையே அப்பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் கோவில்களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடுத்தார். ஆனால் ஏற்கனவே வழக்கு தொடர்ந்து சுப்பிரமணி மீண்டும் நீதிமன்றத்தை அணுகியதால் ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனையடுத்து வேடசந்தூர் தாசில்தார் விஜயலட்சுமி ஆக்கிரமிப்பில் இருந்த கோவில்களை அகற்ற முயன்றபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பழனி ஆர்.டி.ஓ சரவணன் தலைமையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேடசந்துர் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் கோவில்களை இடிக்க கூடாது என்றும், வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்து செல்ல வசதியாக மேலும் சில நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
நவம்பர் 17-ந்தேதிக்குள் கோவில்களை அகற்றக்கூடாது என ஒரு தரப்பினர் தெரிவித்தனர். அதன்படி கெடு இன்றுடன் நிறைவடைவதால் தாசில்தார் விஜயலட்சுமி, வேடசந்தூர் டி.எஸ்.பி துர்க்காதேவி மற்றும் அதிகாரிகள் கோவில்களை அகற்றும் முயற்சியில் இறங்கினர். ஆனால் பொதுமக்கள் அதிகாரிகளை தடுத்து நிறுத்தியும், ஜே.சி.பி எந்திரத்தை சிறைபிடித்தும் போராட்டம் நடத்தினர்.
அதிகாரிகள் சமரசம் செய்தும் கேட்காமல் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் உருவானது.
- திண்டுக்கல் அங்கு நகர் துணைமின் நிலையத்தில் நாளை 18-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அங்கு நகர் துணைமின் நிலையத்தில் நாளை 18-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திண்டுக்கல் நகர், செட்டி நாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துரை, விராலி ப்பட்டி, சென்னமநாயக்க ன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- வாடிக்கையாளருக்கு பரிமாறப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட போது அதில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
- ஓட்டல் நிர்வாகத்தினர் அலட்சியமாக பதில் அளித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் முத்தழகுபட்டியைச் சேர்ந்தவர் விமல். இவர் நேற்று பிற்பகல் தெற்கு ரத வீதியில் உள்ள வேணு பிரியாணி ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அங்கு பிரியாணி ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தார். பசியோடு இருந்த அவருக்கு பரிமாறப்பட்ட பிரியாணியை சாப்பிட தொடங்கினார். அப்போது அதில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், ஊழியர்கள் மற்றும் ஓட்டல் நிர்வாகத்தினரிடம் தெரிவித்தார்.
ஆனால் ஓட்டல் நிர்வாகத்தினர் அலட்சியமாக பதில் அளித்தனர். இதனால் அவர் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானார். சாப்பிட்டதற்கு பணம் தர வேண்டாம் என்று நிர்வாகம் சார்பில் சமாதானம் செய்ய முயன்றனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஓட்டலில் பரபரப்பு ஏற்பட்டது.
ஓட்டலில் பரிமாறப்பட்ட பிரியாணியில் கரப்பான்பூச்சி கிடந்தது அங்கு சாப்பிட வந்த வாடிக்கையாளர்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் நிறுத்திச் செல்லும் வாகனங்களால் தெற்குரத வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் வாகன ஓட்டுனர்களுக்கும், ஓட்டல் ஊழியர்களுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அளவுக்கு கடை முன்பு ஏராளமான வாகனங்கள் நிறுத்தியிருந்தாலும் போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இது போன்ற சூழலில் தற்போது வாடிக்கையாளர் சாப்பிட்ட பிரியாணியிலும் கரப்பான் பூச்சி கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






