என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • தி.மு.க. தலைமையில் அமையும் கூட்டணியே மெகா கூட்டணியாகவும், வெற்றி கூட்டணியாகவும் இருக்கும்.
    • எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமையும் கூட்டணி முகவரி இல்லாத கூட்டணியாகவே இருக்கும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது. இப்பிரச்சினைக்கு மத்திய அரசு நேரடியாக இலங்கை அரசுடன் பேசி நிரந்தர தீர்வு காண வேண்டும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை உச்சநீதிமன்றம் தானாக விடுதலை செய்துள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வரவேற்பு தெரிவித்து ள்ளனர்.

    இப்பிரச்சினையில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதனை கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் குடியரசு தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அதன் மீதான நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டது.

    தற்போது 6 பேர் விடுதலை செய்யப்பட்டவுடன் மத்திய அரசு அவசரகதியில் சீராய்வு மனு தாக்கல் செய்வது ஏன்? குஜராத், மகாராஷ்டிராவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றபோது குற்றவாளிகளுக்கு ஆதரவாக பா.ஜ.க. அரசு செயல்பட்டதை மக்கள் மறக்கமாட்டார்கள்.

    தற்போது காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்காக 2 ஆயிரம் கல்லூரி மாணவ-மாணவிகளை கலாச்சார பண்பாடு நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி நடந்து வருகிறது. இதற்கு கவர்னரும் உடந்தையாக உள்ளார்.

    தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல் மொழி குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தேவையற்றது என்பதால் அதனை அகற்ற வேண்டும். ஏற்கனவே கல்லூரிகளை ஆர்.எஸ்.எஸ். பயிற்சி கூடமாக மத்திய அரசு மாற்றி வருகிறது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அலுவல் மொழியாக 100 சதவீதம் தமிழை கொண்டுவர அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். அவரது தலைமையில் அமையும் கூட்டணி முகவரி இல்லாத கூட்டணியாகவே இருக்கும். அந்த கட்சியினரால் வெற்றி பெற முடியாது. அவர்கள் மக்கள் மனதை விட்டு அகற்றப்பட்டு விட்டனர்.

    தி.மு.க. தலைமையில் அமையும் கூட்டணியே மெகா கூட்டணியாகவும், வெற்றி கூட்டணியாகவும் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திண்டுக்கல் கிழக்கு மாவட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் துணை பொது செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது,

    நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.கவின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தி.மு.கவினர் பழைய பூத் ஏஜென்ட்கள் அனைவரையும் மாற்றிவிட்டு புதிதாக நியமனம் செய்து உள்ளனர்.

    வாக்காளர் ஜாவிதா பட்டியலில் கட்சி நிர்வாகிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த பொழுது எப்படி பம்பரமாக நாம் செயல்பட்டோமோ அதே போல் தற்போது செயல்பட வேண்டும்.

     இது நமது கட்சிக்காக செய்ய வேண்டிய அடிப்படை பணி. சரியாக செயல்படாத பூத் ஏஜெண்டுகளை மாற்ற வேண்டும். புதிதாக வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் திறம்பட செயல்பட வேண்டும்.

    அ.தி.மு.கவுக்கு வருங்காலம் பிரகாசமாக உள்ளது. தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழக மக்கள் மாபெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். எங்கே பார்த்தாலும் இந்த ஆட்சி அவப்பெயரை சம்பாதித்து உள்ளனர். கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் கூட அடுத்த முறை நிச்சயமாக எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வராக வருவார் என என்னிடம் கூறினார். அந்த அளவுக்கு தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுப் போய் உள்ளது.

    சில ஊடகங்கள் மட்டும் தி.மு.க அரசை பாராட்டி வருகிறது. தமிழக மக்களை இனியும் ஏமாற்ற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

    • கோவிலுக்கு வரும் பக்தர்களை வழிமறித்து வியாபாரிகள் பொருட்களை வாங்கச்சொல்லி கட்டாயப்படுத்துவதால் முகம்சுழிக்கும் நிலை ஏற்படுகிறது.
    • கோவில் உதவிஆணையர் லட்சுமி இன்று அடிவாரம் பகுதியில் வாகனத்தில் வந்தபோது அப்போது வியாபாரிகள் ஒன்றுகூடி அவரது வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி ேகாவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இதனால் அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகிறது.

    கோவிலுக்கு வரும் பக்தர்களை வழிமறித்து வியாபாரிகள் பொருட்களை வாங்கச்சொல்லி கட்டாயப்படுத்துவதால் முகம்சுழிக்கும் நிலை ஏற்படுகிறது. ஒருசில சமயங்களில் வியாபாரிகளுக்கும், பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்படுகிறது. இதனையடுத்து கோவில் அடிவாரம் பகுதியில் தினசரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பழனிகோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கோவில் உதவிஆணையர் லட்சுமி இன்று அடிவாரம் பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வியாபாரிகள் ஒன்றுகூடி அவரது வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது தொடர்பாக கோவில் ஊழியர்கள் தங்கள் மீது அத்துமீறி நடந்து கொள்வதாகவும், பக்தர்கள் வருகை அதிகரிக்கும் சமயங்களில் மட்டுமே தங்கள் வியாபாரம் நடப்பதால் தங்களுக்கு தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.,

    இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்று உதவி ஆணையர் உறுதியளித்ததை தொடர்ந்து அவரது வாகனம் விடுவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2020-21, 2021-22-ம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவிகளுக்கு ஜனவரி மாதம் பட்டமளிப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் அமைந்துள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா கடந்த 11-ந்தேதி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு 2018-2019, 2019-2020-ம் ஆண்டு பட்டம் முடித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2020-21, 2021-22-ம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவிகளுக்கு ஜனவரி மாதம் பட்டமளிப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே பிரதமர் மோடி பட்டமளிப்பு விழா நடத்தி சென்றுள்ள நிலையில் தற்போது காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி வருகை தருவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதற்காக உறுதியான தகவல் இன்னும் வெளிவராத நிலையில் இன்னும் ஓரிருநாளில் அதற்கான அறிவிப்பு வெளிவரும் என்று தெரிகிறது.

    ஜனாதிபதியாக பதியேற்ற பிறகு முதன்முறையாக தமிழகத்திற்கு குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு வருகை தர உள்ளதால் மாணவ-மாணவிகள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தாய் சரண்யா தனது மகனை உள்ளே அனுப்பாததை கண்டித்து பள்ளி நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
    • சுமார் 2 மணிநேரத்திற்கு பின்பு மாணவன் உள்ளே சென்றார். இந்த சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மனைவி சரண்யா. இவர்களது மகன் ரோகன். கீழ்பூமி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். இதே பள்ளியில் மாணவனின் தாய் சரண்யா 4 ஆண்டுகளாக அலுவலக கணக்காளராக பணிபுரிந்து வந்தார்.

    ஆனால் இவருக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படாததால் பள்ளியை விட்டு நின்றுவிட்டார். இதனைதொடர்ந்து இவருக்கு வழங்கப்படவேண்டிய சம்பள பாக்கியில் இருந்து தனது மகனுக்கு தேவையான கல்வி கட்டணத்தை பிடித்தம் செய்து கொள்ளுமாறு கூறியிருந்தார். அதன்படி பள்ளி நிர்வாகமும் ரோகன் செலுத்தி வேண்டிய கல்வி கட்டணத்தை எடுத்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவனை காவலாளி வாசலிலேயே நிறுத்திவிட்டார். இதுகுறித்து கேட்டபோது கல்வி கட்டணம் செலுத்தாதால் உன்னை உள்ளே விடக்கூடாது என்று அறிவுரை வந்துள்ளது என தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன் தனது தாயாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தாய் சரண்யா தனது மகனை உள்ளே அனுப்பாததை கண்டித்து பள்ளி நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    இதுகுறித்து கொடைக்கானல் வருவாய்த்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் சரண்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக வகுப்பறைக்குள் நுழையவிடாமல் இருப்பது எந்தவிதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினார்.

    இதனைதொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்பு மாணவனை வகுப்பறைக்குள் செல்ல அனுமதித்தனர். இதனால் சுமார் 2 மணிநேரத்திற்கு பின்பு மாணவன் உள்ளே சென்றார். இந்த சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


    • கிவி பழ வகை நாற்றுக்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்தப் பகுதியில் பராமரிக்கப்படாமல் புதர்கள் மண்டி காணப்படுகிறது.
    • கொடைக்கானலில் விளையும் பிளம்ஸ், பிச்சீஸ், ஆப்பிள் உள்ளிட்ட நாற்றுகளும் முறையாக பராமரிக்கப்படு வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் ஃபேரிபால்ஸ் பகுதியில் தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு பல்வேறு பழ வகைகள் மட்டுமின்றி உரங்கள் தயாரிப்பது குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து கொடைக்கானல் பகுதி விவசாயிகளுக்கு பழவகை நாற்றுகளும் விற்பனைக்கு கொடுக்கப்படும்.

    இந்த சூழலில் வெளிநாடு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ குணம் கொண்ட அரிய வகை பழ வகையான கிவி பழங்கள் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து விவசாயிகளுக்கும் இந்த பழ வகை நாற்றுக்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்தப் பகுதியில் பராமரிக்கப்படாமல் புதர்கள் மண்டி காணப்படுகிறது.

    கிவி பழம் கேன்சர் உள்ளிட்ட நோய்களுக்கு சிறந்த தடுப்பு மருந்தாக உள்ள நிலையில் இவ்வகை பழங்கள் கொடைக்கானல் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையப்பகுதியில் அழியும் நிலையில் உள்ளது. தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் பகுதி முழுவதிலும் முறையான பராமரிப்பு இன்றியும் காணப்படுகிறது. மேலும் கொடைக்கானலில் விளையும் பிளம்ஸ், பிச்சீஸ், ஆப்பிள் உள்ளிட்ட நாற்றுகளும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

    எனவே தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தை முறையாக பராமரித்து அழிந்து வரும் கிவி பழங்களை மீட்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேடசந்தூர் அருகே கல்வார்பட்டியில்20சென்ட் பரப்பளவில் மயானம் உள்ளது . அதனை தனிநபர் ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறார்.
    • ஆக்கிரமிப்பை தடுக்க கோரி அப்பகுதி மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே கல்வார்பட்டியில்20சென்ட் பரப்பளவில் மயானம் உள்ளது . அதனை தனிநபர் ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறார். மேலும் அந்த நிலத்துக்கு வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் அவர் மனு கொடுத்துள்ளார்.

    இதனை அறிந்த கல்வார்பட்டி கிராம மக்கள் வேடசந்தூர் தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் தாசில்தார் சக்திவேலன் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

    மேலும் கிராம மக்கள் உடன் சேர்ந்து வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் அவர்கள் கலைந்து சென்றனர்.

    • வேடசந்தூர் துணை மின்நிலையத்தில் நாளை (19-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது என தெரி விக்கப்பட்டுள்ளது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் துணை மின்நிலையத்தில் நாளை (19-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனை யடுத்து வேடசந்தூர் லகுவண ம்பட்டி, நாகம்பட்டி, தம்மண ம்பட்டி, முதலி யார்பட்டி, வெல்ல ணம்பட்டி, நாகக்கோ னனூர், காலணம்பட்டி, ஸ்ரீராமபுரம், அரியபித்தா ம்பட்டி, தட்டாரபட்டி, அய்யம்பா ளையம், ஆண்டிய கவுண்டனூர், மல்வார்பட்டி, சேனன்கோட்டை, முருநெல்லி கோட்டை, சுள்ளெறும்பு, குருநாத நாயக்கனூர்

    மற்றும் அதனை சார்ந்த கிரா மங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது என தெரி விக்கப்பட்டுள்ளது.

    • நல்லூர் மேற்குக் களத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடியிருப்புக்கு தனியார் பட்டா நிலத்தின் வழியாக சென்று வந்துள்ள னர்.
    • பாதை அடைக்கப்பட்டதால் அரவங்குறிச்சியிலிருந்து கோட்டையூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    செந்துறை:

    ‌நத்தம் அருகே கோட்டை யூர் ஊராட்சிக்குட்பட்ட நல்லூர் மேற்குக் களத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடியிருப்புக்கு தனியார் பட்டா நிலத்தின் வழியாக சென்று வந்துள்ள னர். நிலத்தின் உரிமையாளர் திடீரென்று தனது நில த்தினை அடைத்து விட்டார். எனவே குடியிருப்புகளுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். எனவே பாதை அமைக்க வேண்டும் எனக்கோரி திடீரென அரவங்குறிச்சியிலிருந்து கோட்டையூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியசாமி, கிராம நிர்வாக அலுவலர் முருகவேல் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்க ளுடன் சமரசம் பேசினர். அப்போது நத்தம் தாலுகா தாசில்தாரிடம் இது குறித்து தீர்வு காண பேச்சு வார்த்தை யில் கலந்து கொண்டு முடிவெடுக்க கூறிய ஆலோ சனையை ஏற்று மறியலை கைவிட்ட னர்.

    இதனால் சுமார் 1 மணி நேரம் கோட்டையூர் - அரவங்குறிச்சி வழியாக நத்தம் செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • குறைந்த அளவு பஸ்கள் வருவதால் மா ணவர்கள் படிக்கட்டுகளில் நின்றபடி பயணம் செய்கின்றனர்.
    • அதிகமாக பயணிகளை ஏற்றி வந்த பஸ்களை நிறுத்தி அறிவுரை வழங்கி னர். ஒருசில கண்டக்டர்க ளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரத்திற்கு அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து அதிக அளவு டவுன் பஸ்கள் இயகப்படுகின்றன. இதில் பள்ளி மாணவ-மாணவி கள், கூலித்தொழிலாளிகள் என ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். ஒருசில வழித்தடங்களில் குறைந்த அளவு பஸ்கள் வருவதால் மா ணவர்கள் படிக்கட்டுகளில் நின்றபடி பயணம் செய்கின்றனர். இதனால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்து வருகின்றன.

    எனவே அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி வரக்கூடாது என்று அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களுக்கும், ஆட்டோக்களுக்கும் அறி வுரை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் சாலைப்புதூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அபராதம்

    அப்போது அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்த பஸ்களை நிறுத்தி அறிவுரை வழங்கி னர். ஒருசில கண்டக்டர்க ளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.இதே போன்ற தவறை மீண்டும் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்தனர். போலீசாரின் இதுபோன்ற ஆய்வு தொடர்ந்து நடைபெற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையை முதற்கட்டமாக அகற்றவேண்டும்.
    • மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் உயிரிழந்த த.மா.க நிர்வாகியின் குடும்பத்தினருக்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தார். அதனைதொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக கணக்கீடு செய்து அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தற்போது 19-ந்தேதி முதல் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் தற்போது வந்துள்ள அறிவிப்பு அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையை முதற்கட்டமாக அகற்றவேண்டும். மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெற்பயிர் மட்டுமின்றி வாழை, தென்னை, மானாவாரி பயிர்களும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அரசு இதில் உரிய கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும்.

    தற்போது குறிப்பிட்ட சில தாலுகாக்களுக்கு மட்டும் ரேசன்கார்டுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்கவேண்டும். சோகத்தில் உள்ள விவசாயிகளுக்கு அரசு ஆறுதலான நிவாரணம் வழங்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திண்டுக்கல் மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது
    • மேயர் மாநகராட்சி விதிகளுக்கு கட்டுப்படாமல் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு மறுஏலம் விட அதிகாரம் உள்ளது என்றார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது. துணைமேயர் ராஜப்பா, ஆணையாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 214 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் தொடங்கியுடன் மேயர் இளமதி பேசியதாவது,

    மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்திருந்தன. சாலைப்பணிகளுக்காக ரூ.36 கோடி நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் என அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது.தற்போது முதற்கட்டமாக ரூ.10 கோடி நிதி கிடைக்கப்ெபற்றுள்ளது. இதனை கொண்டு நகரில் முதற்கட்டமாக மேற்கொள்ளப்படவேண்டிய சாலைப்பணிகள் குறித்து ஆய்வு செய்து உடனடி பணிகள் தொடங்கப்படும்.

    மற்ற சேதமடைந்த சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும். இனிவரும் காலங்களில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும். திண்டுக்கல் மாநகராட்சியில் வரிவசூல் தாமதப்படுவதால் பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குத்தகை பாக்கி, கடை வாடகை, மார்க்கெட் வாடகை போன்றவை நிலுவையில் உள்ளது.

    இதுபோல வாடகை பாக்கி வைத்துள்ள கடைகள் 15 நாட்களுக்குள் அந்த தொகையை கட்டாவிட்டால் பொதுஏலத்திற்கு கொண்டுவரப்படும் என்றார். மேலும் திண்டுக்கல் பஸ்நிலையத்தில் புதிய வணிகவளாக கட்டிடத்தில் 34 கடைகள் கட்டப்பட்டன. அதில் ஒரு கடை கோர்ட்டு பிரச்சினையில் உள்ளது. மற்ற 33 கடைகளுக்கான ஏலம் முடிந்த நிலையிலும் வாடகை பாக்கி உள்ளது. எனவே அதனை செலுத்தாவிட்டால் மீண்டும் மறுஏலத்திற்கு கொண்டுவரப்படும் என்றார்.

    அப்போது குறுக்கிட்ட பா.ஜ.க கவுன்சிலர் தனபால் இந்த கடைகள் ஏலம் விடப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளது என்றும், இதுகுறித்து மாநகராட்சி வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என ஏற்கனவே நாங்கள் கோரிக்கைவிடுத்தோம். தற்போது அதனை நிரூபிக்கும் வகையில் மறுஏலம் விடப்பட்டிருப்பது ஏன் என்றார்.

    இதற்கு பதில் அளித்த மேயர் மாநகராட்சி விதிகளுக்கு கட்டுப்படாமல் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு மறுஏலம் விட அதிகாரம் உள்ளது என்றார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

    ×