search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dindigul Corporation"

    • திண்டுக்கல் மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது
    • மேயர் மாநகராட்சி விதிகளுக்கு கட்டுப்படாமல் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு மறுஏலம் விட அதிகாரம் உள்ளது என்றார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது. துணைமேயர் ராஜப்பா, ஆணையாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 214 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் தொடங்கியுடன் மேயர் இளமதி பேசியதாவது,

    மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்திருந்தன. சாலைப்பணிகளுக்காக ரூ.36 கோடி நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் என அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது.தற்போது முதற்கட்டமாக ரூ.10 கோடி நிதி கிடைக்கப்ெபற்றுள்ளது. இதனை கொண்டு நகரில் முதற்கட்டமாக மேற்கொள்ளப்படவேண்டிய சாலைப்பணிகள் குறித்து ஆய்வு செய்து உடனடி பணிகள் தொடங்கப்படும்.

    மற்ற சேதமடைந்த சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும். இனிவரும் காலங்களில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும். திண்டுக்கல் மாநகராட்சியில் வரிவசூல் தாமதப்படுவதால் பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குத்தகை பாக்கி, கடை வாடகை, மார்க்கெட் வாடகை போன்றவை நிலுவையில் உள்ளது.

    இதுபோல வாடகை பாக்கி வைத்துள்ள கடைகள் 15 நாட்களுக்குள் அந்த தொகையை கட்டாவிட்டால் பொதுஏலத்திற்கு கொண்டுவரப்படும் என்றார். மேலும் திண்டுக்கல் பஸ்நிலையத்தில் புதிய வணிகவளாக கட்டிடத்தில் 34 கடைகள் கட்டப்பட்டன. அதில் ஒரு கடை கோர்ட்டு பிரச்சினையில் உள்ளது. மற்ற 33 கடைகளுக்கான ஏலம் முடிந்த நிலையிலும் வாடகை பாக்கி உள்ளது. எனவே அதனை செலுத்தாவிட்டால் மீண்டும் மறுஏலத்திற்கு கொண்டுவரப்படும் என்றார்.

    அப்போது குறுக்கிட்ட பா.ஜ.க கவுன்சிலர் தனபால் இந்த கடைகள் ஏலம் விடப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளது என்றும், இதுகுறித்து மாநகராட்சி வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என ஏற்கனவே நாங்கள் கோரிக்கைவிடுத்தோம். தற்போது அதனை நிரூபிக்கும் வகையில் மறுஏலம் விடப்பட்டிருப்பது ஏன் என்றார்.

    இதற்கு பதில் அளித்த மேயர் மாநகராட்சி விதிகளுக்கு கட்டுப்படாமல் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு மறுஏலம் விட அதிகாரம் உள்ளது என்றார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

    • தமிழகத்தில் சென்னை நீங்கலாக 20 மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
    • உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், ஓட்டுனநர்கள் போன்ற கூடுதல் பணியிடங்கள் திண்டுக்கல் மாநகராட்சியில் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி தொடங்கப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் நகராட்சியாக இருந்தபோது உள்ள பணியாளர்களே செயல்பட்டு வந்தனர். இதனால் பல்வேறு பணிகளில் மந்தநிலை காணப்பட்டது. தமிழகத்தில் சென்னை நீங்கலாக 20 மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி 10 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள மதுரை, கோவை, திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளை சிறப்புநிலை அ பிரிவு மாநகராட்சிகளாகவும், சேலம், திருச்சி, தாம்பரம் ஆகிய மாநகராட்சிகளை சிறப்பு நிலை ஆ பிரிவு மாநகராட்சிகளாகவும் தரம் பிரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை மக்கள் தொகை உள்ள மாநகராட்சிகள் தேர்வு நிலை மாநகராட்சி எனவும், 3 முதல் 5 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகள் நிலை 1 மாநகராட்சியாகவும், அதற்கு கீழ் மக்கள் தொகை கொண்ட திண்டுக்கல் மற்றும் சிவகாசி மாநகராட்சிகள் நிலை 2 பிரிவாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    திண்டுக்கல் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்ட பின்பும் மண்டல அலுவலகங்கள் பிரிக்கப்பட்டு அதற்கான செயல்பாடுகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பணிகளுக்கும் பல்வேறு இடங்களில் இருந்து மாநகராட்சி அலுவலகத்திற்கே மக்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதுவரை ஆணையர் பணியிடம் மட்டுமே உள்ளது.

    4 மண்டலங்களுக்கும் தனித்தனியாக உதவி ஆணையர்கள், நியமிக்கப்பட உள்ளனர். இதுதவிர வருவாய் பிரிவிற்கு ஒரு உதவி ஆணையாளர் என மொத்தம் 5 ஆணையாளர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கு அலுவலர், மாமன்ற செயலாளர், ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு உதவி வருவாய் அலுவலர் என ெமாத்தம் 4 உதவி வருவாய் அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், ஓட்டுனநர்கள் போன்ற கூடுதல் பணியிடங்கள் திண்டுக்கல் மாநகராட்சியில் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்களுக்கான தேவைகள் உடனுக்குடன் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

    மேலும் அத்தியாவசிய பணிகள் நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தலைமையில் நடைபெற்றது.
    • தி.மு.க உறுப்பினர்களுடன் அ.தி.மு.க, பா.ஜ.க கவுன்சிலர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. முடிவில் இயல்புகூட்ட பொருள் 76, அவரச கூட்ட பொருள் 16 என மொத்தம் 92 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ராஜப்பா, கமிசனர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துகொள்ளப்பட்டது.

    அதன்பிறகு உறுப்பினர்கள் பேசிய விபரம் வருமாறு,

    ஜான்பீட்டர்: தமிழகத்தில் காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வந்து அரசு பள்ளி மாணவர்களின் பசியை போக்கிய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்தாலும் இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி தொடர வேண்டும் என்றார்.

    தனபாலன் : தி.மு.க அரசின் சாதனைகளை கூறுவதென்றால் பேசிக்கொள்ளுங்கள். அதற்காக மத்திய அரசை குறைகூறி பேசவேண்டாம் என்றார்.

    பாஸ்கரன்(அ.தி.மு.க): 34-வது வார்டில் எந்தவித அடிப்படை பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. குடிநீர், சாக்கடை வசதிகள் கூட இல்லை. அ.தி.மு.க உறுப்பினர் வார்டு என்பதால் புறக்கணிக்கப்படுகிறதா என்றார்.

    ஜோதிபாசு(சி.பி.எம்): துப்புரவு தொழிலாளர்களுக்கு தமிழக அரசு குறைந்தபட்சம் ரூ.509 கூலி வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் திண்டுக்கல் மாநகராட்சியில் அரசு நிர்ணயித்த கூலியை வழங்காமல் துப்புரவு தொழிலாளர்களை ஏமாற்றுவது ஏன்? என்றார்.

    மார்த்தாண்டன்(தி.மு.க): கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியால் திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.32 கோடி வரிப்பற்றாக்குறை உள்ளது. இதனால் பல்வேறு வார்டுகளில் அடிப்படை பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. இன்னும் 6 மாதங்கள் கழித்துதான் பணிகளை மேற்கொள்ள முடியும்.

    ராஜ்மோகன்(அ.தி.மு.க): கடந்த 10 ஆண்டுகளில் திண்டுக்கல் மாநகராட்சி எந்தஅளவு வளர்ச்சி பெற்றது என்பதை தி.மு.க உறுப்பினர் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மக்களிடம் கேட்டாலே தெரிந்துவிடும். பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டதால் திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தற்போதைய தி.மு.க மாநகராட்சியில் சாக்கடை கழிவுநீரை கூட அகற்ற நடவடிக்கை எடுக்காததால் ஆங்காங்கு தண்ணீர் தேங்கி பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகிறது என்றார்.

    ஜான்பீட்டர்: தமிழக அரசின் நடவடிக்கையால் தற்போது நாய்களுக்கு கருத்தடை ஆப்ரேசன் செய்யப்படுகிறது. அ.தி.மு.க ஆட்சியில் 500 நாய்கள் இருந்த நிலையில் தற்போது ஐநூற்றி 300 நாய்கள் பெருகிவிட்டது என்றார். இதனால் உறுப்பினர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். பின்னர் சுதாரித்துக்கொண்டு 5300 நாய்களாக உள்ளது என்றார்.

    தனபால்: திண்டுக்கல் பஸ்நிலையத்தில் கடைகள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது. எனவே இதுகுறித்து வெள்ளைஅறிக்கை வெளியிடவேண்டும் என பலமுறை தெரிவித்தேன். ஆனால் இதுவரை அதுகுறித்து எந்த அறிக்கையும் அளிக்காததது ஏன்?

    ராஜப்பா(துைணமேயர்): அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதல் தொகைக்கு விலை கேட்டவர்களுக்குத்தான் கடை ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. ஒரு கடைக்கு ரூ.18ஆயிரம் விலை நிர்ணயிக்கப்பட்டது. அதைவிட கூடுதல் தொகைக்கு கேட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. குறைவாக கேட்டவர்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்றார்.

    தொடர்ந்து தி.மு.க உறுப்பினர்களுடன் அ.தி.மு.க, பா.ஜ.க கவுன்சிலர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. முடிவில் இயல்புகூட்ட பொருள் 76, அவரச கூட்ட பொருள் 16 என மொத்தம் 92 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டர் ஆபீசில் முற்றுகையிட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே கேதையறும்பு ஊராட்சி பொது மக்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் தங்களது பகுதியில் ஒட்டன்சத்திரம் நகராட்சி குப்பையையும், திண்டுக்கல் மாநகராட்சியில் இருந்து வெளியேறும் குப்பைகளையும் கொட்டுவதாக புகார் தெரிவித்தனர்.

    இந்த குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை செய்யாமல் உள்ளது. இது குறித்து கிராம சபை கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியும் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிணறுகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று தெரிவித்தனர்.

    திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரை யூனியன் குளத்தூர் கிராமம் விராலிபட்டி ஏ.டி. காலனியை சேர்ந்த மக்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கூறுகையில் எங்களது பகுதியில் கடந்த 4 மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை. சுமார் 75 குடும்பங்களும் நீண்ட தூரம் சென்றும், விலைக்கு வாங்கியும் தண்ணீரை பயன்படுத்தி வருகிறோம்.

    வடமதுரை வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு இதுகுறித்து புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவேண்டும் என்றனர்.

    திண்டுக்கல் நாகல் நகர் 34-வது வார்டு குருநகரை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பகுதியில் கால்வாய் வசதி, சாலை வசதி, உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என்றும், சுடுகாடு காம்பவுண்டு சுவரை இடித்து தருமாறும் மனு அளித்தனர். #tamilnews

    ×