என் மலர்
மேற்கு வங்காளம்
- ஆசிரியர் நியமன மோசடி தொடர்பாக மேலும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிக்கி உள்ளார்.
- ஆசிரியர் முறைகேடு தொடர்பாக மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் ஆசிரியர் பணி நியமன முறைகேடு பூதாகரமாக வெடித்து உள்ளது. கடந்த 20 14-ம் ஆண்டு அங்குள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடந்தது. இதில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கபிரிவு அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து முறைகேடு நடந்த காலகட்டத்தில் கல்வி மந்திரியாக இருந்தவரும் தற்போது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் வணிகம் மற்றும் தொழில் துறை மந்திரியாக பதவி வகித்தவருமான பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டார். மேலும் அவரது உதவியாளரும், நடிகையுமான அப்ரிதா முகர்ஜி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக ரூ 50 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. கிலோ கணக்கில் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அப்ரிதா முகர்ஜியையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த நிலையில் ஆசிரியர் நியமன மோசடி தொடர்பாக மேலும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிக்கி உள்ளார். அவரது பெயர் மாணிக் பட்டாசார்யா. இவர் தொடக்க கல்வி வாரிய முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்க துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி நேற்று அமலாக்க பிரிவு அலுவலகத்தில் மாணிக் பட்டாச்சாரியா ஆஜரானார். அவரிடம் விடிய விடிய அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். முறைகேடு குறித்து பல்வேறு கேள்விகளை அவரிடம் கேட்டனர். விசாரணை முடிவில் மாணிக் பட்டா சார்யா கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து அவர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். ஆசிரியர் முறைகேடு தொடர்பாக மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். இது அம்மாநில முதல்-மந்திரியும் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- மேற்கு வங்காளத்தில் விஜயதசமி விழா கடந்த வாரம் தொடங்கியது.
- அங்கு துர்கா தேவி சிலை கரைப்பின்போது 8 பேர் உயிரிழந்தனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜையை முன்னிட்டு பொது இடங்களில் துர்கா தேவிக்கு சிலைகள் நிறுவப்பட்டு 10 நாட்கள் வழிபாடு நடத்தப்பட்டது. இதனையடுத்து, சிலை கரைப்பு தினமான நேற்று துர்கா சிலைகள் நீர்நிலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரியில் உள்ள மால் ஆற்றில் துர்கா சிலை கரைப்பின்போது திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கினர். இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் மாயமான பலரை தேடி வருகிறோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
துர்கா சிலைகளைக் கரைகளைச் சென்று 8 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
- திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.இடையே வார்த்தை போர் வெடித்து வருகிறது.
கொல்கத்தா:
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.இடையே வார்த்தை போர் வெடித்து வருகிறது. பா.ஜ.க. தலைவர்கள் தொடர்ச்சியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். அதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையே அந்த மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் பார்த்தாசட்டர்ஜி ஆசிரியர் பணிநியமன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதேபோல கால்நடை கடத்தல் வழக்கில் கட்சியின் மூத்த தலைவர் அனுப்பிரதா கைது செய்யப்பட்டுள்ளர். இந்நிலையில் நிலக்கரி கடத்தல் ஊழல் வழக்கில் அம்மாநில சட்ட அமைச்சர் மோலோய் கட்டக்கின் வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சி.பி.ஐ. சோதனை நடைபெற்றது.
அடுத்தடுத்த கைது, சோதனைகள் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சுகந்தா மஜூம்தார் மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த மூத்ததலைவரும், பாலிவுட் நடிகருமான மிதுன்சக்கரவர்த்தி ஆகியோர் நேற்று ஹுக்கிளி மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது மாநில தலைவர் சுகந்தா மஜூம்தார் பேசிய தாவது:-
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சில அமைச்சர்கள் உள்பட ஒரு சில முக்கிய தலைவர்கள் மட்டுமே குறிப்பிட்ட சில காலத்திற்கு பிறகு சிறைக்கு வெளியே இருப்பார்கள் என்பது தெளிவாகிறது.
ஏனென்றால் மீதம் உள்ளவர்கள் உள்ளே இருப்பார்கள். பெரும்பாலான அமைச்சர்கள் ஜெயிலுக்கு சென்று விட்டால் யார் ஆட்சியை நடத்துவார்கள். டிசம்பருக்குள் இப்படி ஒரு நிலை வரும் என்று நாங்கள் இருக்கிறோம்.
சிறைக்கு செல்லும் அமைச்சர்களில் முதல்வரும் இருப்பாரா என்று தெரியவில்லை. ஒருவேளை முதல்-மந்திரியும் ஜெயிலுக்கு செல்லும் நிலை வரலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 41 எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா கட்சியின் உயர்மட்ட குழுவுடன் நேரடியாக தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
மிதுன்சக்கரவர்த்தி பேசுகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 38 எம்.எல்.ஏ.க்களில் 21 பேர் என்னுடன் நேரடி தொடர்பில் உள்ளனர் என கூறினார்.
- திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெண் எம்.பி. மகுவா மொய்த்ரா.
- அவ்வப்போது அதிரடி கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்புவார்.
கொல்கத்தா :
மேற்கு வங்காள மாநிலம் கிருஷ்ணாநகர் மக்களவை தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெண் எம்.பி. மகுவா மொய்த்ரா.
தங்கள் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளராக முன்பு இருந்துள்ள மகுவா மொய்த்ரா, அவ்வப்போது அதிரடி கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்புவார்.
இந்த நிலையில் தனது தொகுதியில் நடந்த கிருஷ்ணாநகர் எம்.பி. கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு மகுவா மொய்த்ரா சென்றார். அப்போது அவர் திடீரென சேலையுடன் களமிறங்கி கால்பந்து விளையாடி கலக்கினார். அவர் லாவகமாக பந்தை தட்டிச்சென்றது கால்பந்து ரசிகர்களை கவர்ந்தது. மகுவா மொய்த்ரா சிறிதுநேரம் 'கோல் கீப்பிங்'கும் செய்தார்.
தான் கால்பந்து விளையாடும் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டுள்ள எம்.பி. மகுவா மொய்த்ரா, 'கிருஷ்ணாநகர் எம்.பி. கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் சுவாரசியமான தருணங்கள். ஆம், நான் சேலையில் கால்பந்து ஆடினேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
சிவப்பு-ஆரஞ்சு வண்ண சேலையுடன், கண்களில் 'கூலிங்கிளாஸ்', கால்களில் ஷூக்கள் அணிந்து எம்.பி. மகுவா மொய்த்ரா கால்பந்து விளையாடும் காட்சி சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. அவரை பாராட்டியும், ஆதரவாகவும் பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர் 'அச்சமற்ற இந்தியப் பெண்... இவரால் எதையும் செய்ய முடியும்' என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
- சிபிஐ தங்கள் விசாரணை அறிக்கையை பிரதமர் அலுவலகத்திற்கு அளிக்காது என மம்தா பானர்ஜி பேச்சு
- சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானம் யாருக்கும் எதிரானது அல்ல என கருத்து
கொல்கத்தா:
மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றன. இது தொடர்பாக மேற்கு வங்காள சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கொண்டு வந்த இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், 'பல தொழிலதிபர்கள் நாட்டை விட்டு ஓடுகிறார்கள். மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் தொழிலதிபர்கள் பயத்தில் ஓடுகிறார்கள். ஆனால் பிரதமர் மோடி இதைச் செய்யவில்லை என்று நான் நம்புகிறேன். சிபிஐ தங்கள் விசாரணை அறிக்கையை பிரதமர் அலுவலகத்திற்கு அளிக்காது என்பது உங்களில் பலருக்குத் தெரியாது. சிபிஐ தங்கள் அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் அளிக்கிறது.
இந்த விஷயத்தில் சில பாஜக தலைவர்கள் சதி செய்கிறார்கள். தற்போதைய மத்திய அரசு சர்வாதிகார போக்கில் நடந்து கொள்கிறது. இந்தத் தீர்மானம் குறிப்பாக யாருக்கும் எதிரானது அல்ல, மாறாக மத்திய புலனாய்வு அமைப்புகளின் பாரபட்சமான செயல்பாடுகளுக்கு எதிரானது" என்றார்.
அதேசமயம் சிபிஐ சோதனைகள் குறித்து மம்தா பேசும்போது, 'உங்கள் தலைவரின் வீட்டில் எத்தனை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன?' என பல ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுவேந்து அதிகாரியை குறித்து பேசினார்.
விவாதத்திற்குப் பிறகு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பெங்களூரு எப்.சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது.
- பெங்களூரு அணி முதல் முறையாக துரந்த் கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
கொல்கத்தா:
131-வது துரந்த் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் பெங்களூரு எப்.சி மற்றும் மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் பெங்களூரு எப்.சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி முதல் முறையாக துரந்த் கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
பெங்களூரு அணி சார்பில் சிவசக்தி (10வது நிமிடம்), பிரேசில் வீரர் ஆலன் கோஸ்டா (61வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மும்பை அணிக்காக அபுயா (30-வது நிமிடம்) மட்டுமே ஒரு கோல் அடிக்க சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு அணி துரந்த் கோப்பை சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
- மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி அரசைக் கண்டித்து பாஜக பேரணி நடத்தியது
- தலைமைச் செயலகம் பகுதியை நெருங்கியதும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி அரசில் ஊழல் மலிந்து விட்டதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றும் பாஜக அறிவித்து இருந்தது. அதன்படி, போராட்டத்தில் பங்கேற்க மாநிலத்தின் பல இடங்களில் இருந்து பாஜகவினர் குவியத்தொடங்கினர். ஒவ்வொரு பகுதியில் இருந்தும் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பல இடங்களில் ரெயில் நிலையங்களில் வைத்தே பாஜகவினர் தடுக்கப்பட்டதாக அக்கட்சி போலீசார் மீது குற்றம் சாட்டினர். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, பாஜக தேசிய துணைத்தலைவர் திலீப் கோஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டக்காரர்கள் தலைமைச் செயலகம் பகுதியை நெருங்கியதும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஹவ்ரா பகுதியில் பாஜகவினர் பேரணியாக வந்தபோது அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனை மீறி பாஜகவினர் முன்னேறினர். கூட்டத்தினரை கலைப்பதற்காக, பேரணியாக வந்தவர்கள் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அங்கு ஏற்பட்ட வன்முறையில் காவல் துறை வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது.
வன்முறையின்போது போலீஸ்காரர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். காவலர் ஒருவரை போராட்டக்காரர்கள் விரட்டி விரட்டி தாக்கியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகின. போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பல தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.
- கொல்கத்தா காவல்துறை பணமோசடி வழக்கு பதிவு செய்திருந்தது.
- மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து செயல்படும் மொபைல் கேம் ஆப் நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நிறுவனம் மற்றும் அதன் ஆப்ரேட்டர்களுக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை பணமோசடி வழக்கு தாக்கல் செய்தது. கொல்கத்தா நீதிமன்றத்தில் பெடரல் வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், மொபைல் கேம் ஆப் நிறுவன உரிமையாளர் நிசார் அகமது கானுக்கு சொந்தமான இடங்களில் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனையை நடைபெற்ற இடங்களில் மத்திய காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சோதனையின்போது ரூ.2000, ரூ.500 ரூ.200 மதிப்புள்ள நோட்டுக் கட்டுகள் படுக்கை அறை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கட்டுக்கட்டாக இருந்த அந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
பணத்தை எண்ணும் இயந்திரங்கள் உதவியுடன் அவற்றை எண்ணும் பணி நடைபெற்றது. இதுவரை 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த செயலி மற்றும் அதன் ஆபரேட்டர்கள் சீன கட்டுப்பாட்டில் உள்ள செயலி நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளனரா என்பது குறித்தும் விசாரித்து வருவதாக அமலாக்கத்துறை தகவல்கள் கூறியுள்ளன.
- கொல்கத்தாவில் 5 இடங்கள் உள்பட 6 இடங்களில் இச்சோதனை பலத்த பாதுகாப்பு நடந்தது.
- காட்புட்லியில் உள்ள இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினார்கள்.
மேற்கு வங்காள மாநிலம் அசன்சோல் மாவட்டம் குனுஸ்டோரியா மற்றும் கஜோரா ஆகிய பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் நிலக்கரி எடுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியிடம் சமீபத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் நிலக்கரி முறைகேடு வழக்கு தொடர்பாக மேற்கு வங்காள மாநில சட்டத்துறை அமைச்சர் மோலோய் கட்டக்கின் வீடுகளில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அசன்சோலில் உள்ள மந்திரி மோலோயின் 3 வீடுகளிலும், கொல்கத்தா லேக் கார்டன்ஸ் பகுதியில் வீட்டிலும் சோதனை நடந்தது. கொல்கத்தாவில் 5 இடங்கள் உள்பட 6 இடங்களில் இச்சோதனை பலத்த பாதுகாப்பு நடந்தது.
சோதனை நடந்த கட்டிடங்களில் மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் பெண் அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர்.
இந்த சோதனை நடந்தபோது எந்த வீட்டிலும் மந்திரி மோலோய் இல்லை. அசன்சோல் உள்ள வீட்டில் இருந்த மந்திரியின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து செல்போன்களை அதிகாரிகள் வாங்கி வைத்துக் கொண்டனர். பின்னர் அவர்களை ஒரு அறையில் அமர வைத்துவிட்டு சோதனை நடத்தினார்கள்.
இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் கூறும்போது, நிலக்கரி கடத்தல் ஊழலில் மோலோய் பெயர் அடிப்பட்டு வருவதால், அதில் அவரது பங்கு என்ன என்பதை நாங்கள் கண்டு பிடிக்க வேண்டும். அவர் இந்த ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது என்றனர்.
இவ்வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்காக அமைச்சர் மோலோய் ஒரு முறை ஆஜராகி இருந்தார். அதன்பின் பல சம்மன்கள் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அசோக் கெலாட் மந்திரி சபையில் உள்துறை மற்றும் உயர்கல்வி மந்திரியாக இருப்பவர் ராஜேந்திர யாதவ்.
காட்புட்லியில் உள்ள இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினார்கள். இதேபோல உத்தரகாண்டில் உள்ள அவருக்கு சொந்தமான வியாபார நிறுவனங்கள், குடும்ப உறுப்பினர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
- தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பலூர்காட் பகுதியை சேர்ந்த சும்கிசர்கார் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
- தனது சேவல் ஒன்றை பக்கத்து வீட்டை சேர்ந்த பிஸ்வாஸ் என்ற ரிக்ஷா தொழிலாளி எடுத்து வைத்துக்கொண்டதாகவும், அதனை மீட்டு தரவேண்டும் எனவும் கூறியிருந்தார்.
கொல்கத்தா:
தடையை மீறி சேவல் சண்டை நடத்தியவர்களை போலீசார் துரத்தி பிடித்ததை கேள்விபட்டிருப்போம்.
ஆனால் சேவல் யாருடையது என்பதை கண்டுபிடிப்பதற்காக சேவலின் பின்னால் 3 போலீசார் 24 மணி நேரமாக அலைந்த சம்பவம் கொல்கத்தாவில் நடந்துள்ளது.
அங்குள்ள தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பலூர்காட் பகுதியை சேர்ந்த சும்கிசர்கார் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அப்போது தனது சேவல் ஒன்றை பக்கத்து வீட்டை சேர்ந்த பிஸ்வாஸ் என்ற ரிக்ஷா தொழிலாளி எடுத்து வைத்துக்கொண்டதாகவும், அதனை மீட்டு தரவேண்டும் எனவும் கூறியிருந்தார்.
மேலும், நான் கோழி வியாபாரி ஒருவரிடம் இருந்து அந்த சேவலை சமீபத்தில் வாங்கி இருந்தேன். அதனை எடுத்துவைத்துக்கொண்ட பிஸ்வாஸ் அந்த சேவல் தன்னுடையது என சொந்தம் கொண்டாடுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் சும்கிசர்காரை அழைத்துக்கொண்டு பிஸ்வாஸ் வீட்டிற்கு சென்றனர். அங்கு சேவல் இருப்பதை கண்டறிந்த போலீசார் புகார் தொடர்பாக பிஸ்வாசிடம் விசாரித்தனர். அப்போது அவர் இந்த சேவல் தன்னுடையது என உறுதியாக கூறினார்.
இதனால் போலீசார் குழப்பம் அடைந்தனர். உண்மையிலேயே அந்த சேவல் யாருடையது என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் என போலீஸ் நிலையத்தில் கூட்டம் போட்டு ஆலோசனை நடத்தினர்.
அப்போதுதான் போலீஸ் நிலைய அதிகாரி சாந்திநாத் பஞ்சாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. பொதுவாக இரைதேடும் கோழிகள் மாலையில் தங்கள் உரிமையாளர்களின் இருப்பிடத்திற்கு திரும்புவது வழக்கம் என்பதால் அந்த முறையிலேயே இந்த சேவலின் உரிமையாளர் யார் என்பதை கண்டுபிடிக்கலாம் என திட்டம் தீட்டினர்.
அதன்படி சனிக்கிழமை முழுவதும் அந்த சேவலை வெளியில் சுதந்திரமாக திரியவிட்டனர். அதனை 3 போலீஸ்காரர்கள் பின் தொடர்ந்து சென்றனர். மாலை நேரத்தில் அந்த சேவல் புதர்களுக்குள் சுற்றித்திரிந்தது. நள்ளிரவிலும் அங்கும் இங்குமாக சுற்றிய சேவலின் பின்னால் டார்ச்லைட் அடித்தபடியே போலீஸ்காரர்கள் பின்தொடர்ந்து சென்று கண்காணித்தனர்.
சுமார் 24 மணி நேரத்திற்கு பிறகு அந்த சேவல் சும்கிசர்காரின் வீட்டிற்கு சென்றது. இதையடுத்து அந்த சேவலை சும்கிசர்காரிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகே இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.
- மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி லோக்சபா எம்.பி.யாகவும், அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
- சட்டவிரோத பணப் பரிமாற்ற விசாரணைக்காக அமலாக்கத்துறை முன் அபிஷேக் பானர்ஜி இன்று ஆஜரானார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி அக்கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார்.
மேற்கு வங்காளத்தின் அன்சோல் பகுதியில் நடந்த நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளன. இதில் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் சகோதரர் மகனும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் பானர்ஜி எம்.பி.க்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் ரூ.1,300 கோடிக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவிக்கும் தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து இருவரிடமும் அமலாக்கத் துறை ஏற்கனவே விசாரணை நடத்தியது.
இதற்கிடையே, அபிஷேக் பானர்ஜியின் உறவினரான மேனகாவின் வங்கிக்கணக்கில் நடந்த பணப் பரிமாற்றம் குறித்து விசாரிப்பதற்காக, செப்டம்பர் 2-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி அபிஷேக் மற்றும் மேனகாவுக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற விசாரணைக்காக கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அபிஷேக் பானர்ஜி இன்று ஆஜரானார்.
அப்போது அவர் கூறுகையில், விசாரணைக்காக என்னை 30 முறை அழைத்தாலும் நான் வருவேன். பா.ஜ.க. காலில் விழமாட்டேன். தேசியக் கொடி விவகாரத்தில் அமித்ஷாவின் மகனைத் தாக்கியதால் அமலாக்கத்துறை அல்லது சிபிஐ மூலம் என்னை அச்சுறுத்த முடியாது என தெரிவித்தார்.
- மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி லோக்சபா எம்.பி. மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
- சட்டவிரோத பணப் பரிமாற்றம் விசாரணைக்கு ஆஜராகும்படி அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி அக்கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார்.
இதற்கிடையே, மேற்கு வங்காளத்தின் அன்சோல் பகுதியில் நடந்த நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளன. இதில் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் சகோதரர் மகனும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் பானர்ஜி எம்.பி.க்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் ரூ.1,300 கோடிக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவிக்கும் தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து இருவரிடமும் அமலாக்கத் துறை ஏற்கனவே விசாரணை நடத்தியது.
இந்நிலையில், அபிஷேக் பானர்ஜியின் உறவினரான மேனகாவின் வங்கிக்கணக்கில் நடந்த பணப் பரிமாற்றம் குறித்து விசாரிப்பதற்காக, வரும் 2ம் தேதி கொல்கத்தாவில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி அபிஷேக் மற்றும் மேனகாவுக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.






