search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coal scam case"

    • சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் டெல்லி கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது.
    • கிரிமினல் சதி, ஏமாற்றுதல் மற்றும் யாரும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    சத்தீஷ்கர் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்றது.

    சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் டெல்லி கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. காங்கிரஸ் முன்னாள் மேல் சபை எம்.பி. விஜய் தர்தாவை குற்றவாளியாக அறிவித்து சிறப்பு நீதிபதி சஞ்சய் பன்சால் தீர்ப்பு வழங்கினார்.

    முன்னாள் நிலக்கரி துறை செயலாளர் எச்.சி.குப்தா உள்பட மொத்தம் 7 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தர்தாவின் மகன் தேவேந்திர தர்தா, 2 சீனியர் அரசு ஊழியர்களான சிரோபா, சம்ரியா, தனியார் நிறுவன இயக்குனர் மனோஜ்குமார் ஆகியோரையும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

    கிரிமினல் சதி, ஏமாற்றுதல் மற்றும் யாரும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கான தண்டை விவரம் வருகிற 18-ந்தேதி அறிவிக்கப்படுகிறது.

    • கொல்கத்தாவில் 5 இடங்கள் உள்பட 6 இடங்களில் இச்சோதனை பலத்த பாதுகாப்பு நடந்தது.
    • காட்புட்லியில் உள்ள இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினார்கள்.

    மேற்கு வங்காள மாநிலம் அசன்சோல் மாவட்டம் குனுஸ்டோரியா மற்றும் கஜோரா ஆகிய பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் நிலக்கரி எடுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியிடம் சமீபத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

    இந்த நிலையில் நிலக்கரி முறைகேடு வழக்கு தொடர்பாக மேற்கு வங்காள மாநில சட்டத்துறை அமைச்சர் மோலோய் கட்டக்கின் வீடுகளில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அசன்சோலில் உள்ள மந்திரி மோலோயின் 3 வீடுகளிலும், கொல்கத்தா லேக் கார்டன்ஸ் பகுதியில் வீட்டிலும் சோதனை நடந்தது. கொல்கத்தாவில் 5 இடங்கள் உள்பட 6 இடங்களில் இச்சோதனை பலத்த பாதுகாப்பு நடந்தது.

    சோதனை நடந்த கட்டிடங்களில் மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் பெண் அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர்.

    இந்த சோதனை நடந்தபோது எந்த வீட்டிலும் மந்திரி மோலோய் இல்லை. அசன்சோல் உள்ள வீட்டில் இருந்த மந்திரியின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து செல்போன்களை அதிகாரிகள் வாங்கி வைத்துக் கொண்டனர். பின்னர் அவர்களை ஒரு அறையில் அமர வைத்துவிட்டு சோதனை நடத்தினார்கள்.

    இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் கூறும்போது, நிலக்கரி கடத்தல் ஊழலில் மோலோய் பெயர் அடிப்பட்டு வருவதால், அதில் அவரது பங்கு என்ன என்பதை நாங்கள் கண்டு பிடிக்க வேண்டும். அவர் இந்த ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது என்றனர்.

    இவ்வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்காக அமைச்சர் மோலோய் ஒரு முறை ஆஜராகி இருந்தார். அதன்பின் பல சம்மன்கள் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அசோக் கெலாட் மந்திரி சபையில் உள்துறை மற்றும் உயர்கல்வி மந்திரியாக இருப்பவர் ராஜேந்திர யாதவ்.

    காட்புட்லியில் உள்ள இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினார்கள். இதேபோல உத்தரகாண்டில் உள்ள அவருக்கு சொந்தமான வியாபார நிறுவனங்கள், குடும்ப உறுப்பினர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

    நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா மற்றும் இரண்டு அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. #CoalScam #DelhiCourt #CBIJudge
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய ஆட்சியில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் மேற்கு வங்காளத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் இரு பிரிவுகளை ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா மற்றும் 5 பேர் மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்ற விகாஸ் மெட்டல்ஸ் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனம் (விஎம்பிஎல்) மீது டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    நீதிபதி பரத் பராஷர் முன் நடந்த இந்த விசாரணையின் முடிவில் அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் குற்றவாளிகளுக்கான தண்டனை தொடர்பான வாதம் நடைபெற்றது. அப்போது, குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அதிக அளவில் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ. தரப்பு கோர்ட்டில் வாதிட்டது.


    70 வயது குப்தாவுக்கு பல்வேறு நோய்கள் இருப்பதால் அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அவரது வக்கீல் கோரிக்கை விடுத்தார். இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    அதன்படி குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா, மற்ற இரண்டு அதிகாரிகளான கே.எஸ்.கிரோபா, கே.சி.சம்ரியா ஆகியோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    மற்ற குற்றவாளிகளான விஎம்பிஎல் நிறுவன நிர்வாக இயக்குனர் விகாஸ் பன்டி, நிறுவனத்தின் சார்பில் கையெழுத்திடும் அதிகாரம் கொண்ட அதிகாரி ஆனந்த் மாலிக் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. விஎம்பிஎல் நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. #CoalScam #DelhiCourt #CBIJudge
    ×