search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி டிசம்பருக்குள் கவிழும்- பா.ஜனதா மாநிலதலைவர் பேச்சு
    X

    திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி டிசம்பருக்குள் கவிழும்- பா.ஜனதா மாநிலதலைவர் பேச்சு

    • மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.இடையே வார்த்தை போர் வெடித்து வருகிறது.

    கொல்கத்தா:

    மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.இடையே வார்த்தை போர் வெடித்து வருகிறது. பா.ஜ.க. தலைவர்கள் தொடர்ச்சியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். அதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

    இதற்கிடையே அந்த மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் பார்த்தாசட்டர்ஜி ஆசிரியர் பணிநியமன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதேபோல கால்நடை கடத்தல் வழக்கில் கட்சியின் மூத்த தலைவர் அனுப்பிரதா கைது செய்யப்பட்டுள்ளர். இந்நிலையில் நிலக்கரி கடத்தல் ஊழல் வழக்கில் அம்மாநில சட்ட அமைச்சர் மோலோய் கட்டக்கின் வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சி.பி.ஐ. சோதனை நடைபெற்றது.

    அடுத்தடுத்த கைது, சோதனைகள் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சுகந்தா மஜூம்தார் மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த மூத்ததலைவரும், பாலிவுட் நடிகருமான மிதுன்சக்கரவர்த்தி ஆகியோர் நேற்று ஹுக்கிளி மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது மாநில தலைவர் சுகந்தா மஜூம்தார் பேசிய தாவது:-

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சில அமைச்சர்கள் உள்பட ஒரு சில முக்கிய தலைவர்கள் மட்டுமே குறிப்பிட்ட சில காலத்திற்கு பிறகு சிறைக்கு வெளியே இருப்பார்கள் என்பது தெளிவாகிறது.

    ஏனென்றால் மீதம் உள்ளவர்கள் உள்ளே இருப்பார்கள். பெரும்பாலான அமைச்சர்கள் ஜெயிலுக்கு சென்று விட்டால் யார் ஆட்சியை நடத்துவார்கள். டிசம்பருக்குள் இப்படி ஒரு நிலை வரும் என்று நாங்கள் இருக்கிறோம்.

    சிறைக்கு செல்லும் அமைச்சர்களில் முதல்வரும் இருப்பாரா என்று தெரியவில்லை. ஒருவேளை முதல்-மந்திரியும் ஜெயிலுக்கு செல்லும் நிலை வரலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 41 எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா கட்சியின் உயர்மட்ட குழுவுடன் நேரடியாக தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

    மிதுன்சக்கரவர்த்தி பேசுகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 38 எம்.எல்.ஏ.க்களில் 21 பேர் என்னுடன் நேரடி தொடர்பில் உள்ளனர் என கூறினார்.

    Next Story
    ×