என் மலர்tooltip icon

    மணிப்பூர்

    • இதை "தயங்காமல் அவ்வாறு செய்யுங்கள்" என்று அங்கு போஸ்டரிலும் குறிப்பிட்டுள்ளார்.
    • ஆயுதத்தை வீச வரும் எவரும் விசாரிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் கூறினார்.

    மணிப்பூர் மாநிலத்தில் போலீசிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருட்களை சேகரிக்க பாஜக எம்எல்ஏ ஒருவர் டிராப் பாக்ஸ் ஒன்றை அமைத்துள்ளார்.

    பாஜக எம்எல்ஏ லீஷாங்தெம் சுசிந்த்ரோ மெய்டே, மணிப்பூரின் கிழக்கு இம்பாலில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே ஒரு டிராப் பாக்ஸை அமைத்துள்ளார். அதில், மாநிலம் முழுவதிலும் இருந்து போலீசார் மற்றும் ஆயுதக் களஞ்சியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மக்கள் இந்த டிராப் பாக்ஸில் கைவிடும் வகையில் அமைத்துள்ளார்.

    மேலும் இதை "தயங்காமல் அவ்வாறு செய்யுங்கள்" என்று அங்கு போஸ்டரிலும் குறிப்பிட்டுள்ளார்.

    ஆயுதத்தை வீச வரும் எவரும் விசாரிக்கப்பட மாட்டார்கள் அல்லது அவரது அடையாளத்தை வெளிப்படுத்தும்படி கேட்கப்பட மாட்டார்கள் என்றார்.

    • மணிப்பூர் கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கலவரம் குறித்து விசாரிக்க மணிப்பூரில் ஆளுநர் தலைமையில் அமைதி குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இம்பால்:

    மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தினர் ரோந்து சென்றனர். அப்போது அதிரடியாக நடத்திய சோதனையில் கலவரக்காரர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மணிப்பூர் கலவரத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டத்தை அறிந்து கொள்ளும் வகையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என அம்மாநில அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து, மத்திய அரசு சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய குழுவை விசாரணைக்காக மணிப்பூருக்கு அனுப்பி வைத்தது.

    விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ., அதிகாரிகள் இது குறித்து 6 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே, மணிப்பூரில் நிலைமையை பற்றி அறிந்து கொள்ள அம்மாநில முதல் மந்திரி பைரன் சிங்கை அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

    இந்நிலையில், கலவரம் பாதித்த மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த கவர்னர் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது.

    இதில் மாநில முதல் மந்திரி, மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்தக் குழு சம்பந்தப்பட்ட அமைப்புகள், பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

    • கடந்த மாதம் 3-ந் தேதி முதல் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 310 பேர் காயம் அடைந்தனர்.
    • மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நடப்பதால் மேலும் 1000 வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

    இம்பால்:

    மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.

    இதற்கு நாகர் மற்றும் குகி சமூகத்தார் அடங்கிய சிறுபான்மை பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

    இது தொடர்பாக மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில் மைத்தேயி மற்றும் பழங்குடிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த மாதம் 3-ந் தேதி முதல் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 310 பேர் காயம் அடைந்தனர்.

    அங்கு மீண்டும் இயல்பு நிலை திரும்ப ராணுவம் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அங்கு சென்றார். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.

    இதற்கிடையே குகி தீவிரவாதிகள் நேற்று அதிகாலை நடத்திய துப்பாக்கி சூட்டில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ரஞ்சித் யாதவ் கொல்லப்பட்டார். அசாம் ரைபிள்ஸ் துணை ராணுவ படையின் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் மணிப்பூரில் தாய், மகன் உள்பட 3 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.

    குண்டு காயம் அடைந்த 8 வயது பழங்குடியின சிறுவன், அவரது தாயார் மற்றும் இன்னொரு உறவினர் ஆகிய 3 பேர் ஆம்புலன்சில் சென்று கொண்டு இருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் தான் அந்த ஆம்புலன்ஸ் சென்றது. மேற்கு இம்பால் நோக்கி ஆம்புலன்ஸ் சென்றது.

    மிகப்பெரிய கும்பல் ஆம்புலன்சை வழி மறித்து அவர்களை யார் என்று விசாரித்த அந்த கும்பல் ஆம்புலன்சோடு தீ வைத்தது. இதில் 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

    மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நடப்பதால் மேலும் 1000 வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர். எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 1000 வீரர்கள் விமானம் மூலம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

    மணிப்பூரில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய ஆயுதம் தாங்கிய போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரு சமூகத்தினருக்கிடையிலான மோதல் வன்முறையாக மாறியது

    மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. மத்திய மற்று்ம மாநில அரசுகளின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தற்போது மெல்ல மெல்ல வன்முறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கடந்த வாரம் அமித் ஷா மணிப்பூர் சென்று ஆலோசனை நடத்தினார்.

    அதன்பின் கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து போலீசில் சரண் அடையவேண்டும். இல்லையெனில் தேடுதல் வேட்டை நடத்தி, ஆயுதம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    இதனால் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள், பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். செரோயு என்ற பகுதியில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை கிளர்ச்சியாளர்களுக்கும், வீரர்களுக்கும் இடையில் கடும் சண்டை நடைபெற்றது.

    இந்த சண்டையில எல்லை பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு வீரர்கள் காயம் அடைந்தனர்.

    மே மாதம் 3-ந்தேதி நடைபெற்ற பேரணியின்போது வன்முறை ஏற்பட்டது. அதில் இருந்து மணிப்பூரில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

    • மணிப்பூர் மாநிலத்தின் பதட்டமான பகுதிகளில் இன்னும் கடைகள் திறக்கப்படவில்லை.
    • திறந்திருக்கும் ஒருசில பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் வாழும் மைதிக்கள் என்ற சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் கடந்த மே மாதம் 3-ந் தேதி பேரணி நடந்தது.

    இதற்கு மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து மைதிக்கள் மற்றும் குக்கி சமூகங்கள் இடையே தகராறு மூண்டு வன்முறை வெடித்தது. இதில் ஈடுபட்டவர்கள் மாநிலம் முழுவதும் கல்வீச்சு மற்றும் வாகனங்களுக்கு தீவைத்ததில் பொது சொத்துக்கள் சேதம் அடைந்தது.

    வன்முறை மற்றும் கலவரத்தில் இதுவரை 98-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 310 பேர் படுகாயம் அடைந்தனர். கலவரம் பாதித்த பகுதிகளுக்கு பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அதிரடிப்படையினர் விரைந்து சென்று பாதிப்புக்குள்ளான மக்களை மீட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்தனர்.

    மணிப்பூருக்கு மத்திய மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் சென்று ஆய்வு செய்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். வன்முறை நடந்து ஒரு மாதமாகியும் அங்கு இதுவரை இயல்பு நிலை திரும்பவில்லை.

    இதனால் மாநிலத்தின் பதட்டமான பகுதிகளில் இன்னும் கடைகள் திறக்கப்படவில்லை. பல இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

    மாநிலத்தில் பல பெட்ரோல் பங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் மக்கள் பெட்ரோல் வாங்க முடியாமல் தவிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். திறந்திருக்கும் ஒருசில பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சிலர் கள்ளச்சந்தையில் பெட்ரோல் விற்பனை செய்து வருகிறார்கள். அவர்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.200க்கு விற்பனை செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுபோல அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருந்து கடைகள் திறக்கப்படாததாலும், அங்கு போதுமான மருந்துகள் இல்லாததாலும் நோய் பாதித்த முதியவர்கள், குழந்தைகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலைகளில் சரக்கு லாரிகளை மறித்து போராட்டம் நடத்தியதால் மணிப்பூர் மாநிலத்திற்குள் பொருள்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர். அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாட்டுக்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஒரு கிலோ சாதாரண ரக அரிசியின் விலை ரூ.30-ல் இருந்து ரூ.60 ஆக அதிகரித்துள்ளது. வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 70 ஆகவும், ஒரு முட்டை ரூ.10-க்கும் விற்கப்படுகிறது. இது ஏழை மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஒருபுறம் என்றால், மணிப்பூரில் வன்முறை பாதித்த பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம்.களிலும் பணம் இல்லை. இதனால் அவசரத்திற்கு கூட பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

    சில பகுதிகளில் தினமும் சில மணி நேரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பணம் எடுக்க வேறு பகுதிகளுக்கோ, அல்லது பாங்கிகளுக்கோ செல்ல முடியாமல் மக்கள் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். அதோடு பல இடங்களில் இணைய வழிச்சேவை துண்டிக்கப்பட்டிருப்பதால் ஏ.டி.எம்.கள் இயங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே இவற்றை சீரமைத்து அங்கு இயல்பு நிலை திரும்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மணிப்பூர் கலவரம் தொடர்பாக 6 வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும்.
    • மணிப்பூர் வன்முறைக்கு பின்னால் உள்ள கிரிமினல் மற்றும் பொதுவான சதிகள் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கும்.

    இம்பால்:

    மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு நாகா மற்றும் குகி சமூகத்தினர் அடங்கிய சிறுபான்மை பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி பழங்குடிகளுக்கு இடையே அவ்வப்போது ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறியது. இந்த வன்முறை சம்பவங்களில் 80-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    கலவரத்தை கட்டுப்படுத்த அந்த மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 4 நாள் பயணமாக அந்த மாநிலத்துக்கு சென்றார். அங்கு மைதேயி, குகி சமூக தலைவர்களை நேற்று முன்தினம் சந்தித்தார். பிரச்சனைக்கு தீர்வு காண உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக மோரே பகுதிக்கு அமித்ஷா நேற்று சென்றார். இந்த பகுதி இந்தியா-மியான்மர் எல்லையில் உள்ளது.

    அதை தொடர்ந்து காங்போக்பி பகுதியில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்று குகி சமூகத்தினரை சந்தித்தார். அந்த பகுதியில் உள்ள சிவில் சமூக அமைப்புகளையும் சந்தித்தார். இம்பாலில் மைதேயி சமூகத்தினர் தங்கியுள்ள நிவாரண முகாமுக்கும் அவர் சென்றார்.

    இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று அறிவித்து உள்ளார். இது தொடர்பாக இம்பாலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக நிவாரண முகாம்களில் உள்ள குகி மற்றும் மைதேயி குழுக்களை சந்தித்து விவாதித்தேன்.

    கலவரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐேகார்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான நீதி விசாரணை விரைவில் அமைக்கப்படும்.

    மணிப்பூர் கலவரம் தொடர்பாக 6 வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும். மணிப்பூர் வன்முறைக்கு பின்னால் உள்ள கிரிமினல் மற்றும் பொதுவான சதிகள் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கும்.

    இங்கு நிலவும் நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாகும். மணிப்பூர் கவர்னர் தலைமையில் முக்கியப் பிரமுகர்கள் கொண்ட அமைதி குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் அனைத்து அரசியல் கட்சிகள் மைதேயி, குகி சமூகத்தை சேர்ந்தவர்களும் இடம்பெற்று உள்ளனர்.

    கலவரத்தில் காயம் அடைந்தோர், சொத்துக்களை இழந்தோருக்கு நிவாரணம் நாளை அறிவிக்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மேலும் 5 மருத்துவ குழுக்கள் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    ஆயுதங்களை யாரேனும் வீட்டில் பதுக்கி வைத்திருந்தால் உடனே ஒப்படைக்க வேண்டும். மணிப்பூர்-மியான்மர் எல்லை பாதுகாப்பாக இருக்கிறது.

    இவ்வாறு அமித் ஷா கூறினார்.

    • ஆயுதம் வைத்திருந்தால் போலீசில் சரணடைய வேண்டும்.
    • நாளை முதல் தேடுதல் வேட்டை தொடங்கப்படும்.

    மணிப்பூரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    போலிச் செய்திகளுக்கு மணிப்பூர் மக்கள் செவி சாய்க்க வேண்டாம். செயல்பாடுகளை நிறுத்துதல் (SoO) ஒப்பந்தத்தின்படி வன்முறையில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆயுதம் ஏந்தியவர்கள் போலீஸ் முன் சரணடைய வேண்டும். இதற்கான நடவடிக்கை நாளையில் இருந்து தொடங்கும். யாரிடமாவது ஆயுதம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    முன்னதாக,

    மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு நாகா, குகி சமூகத்தினர் அடங்கிய சிறுபான்மை பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே கடந்த மாதம் 3-ந்தேதி மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இதில் 74 பேர் பலியானார்கள். பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த மாதம் 27-ந்தேதி முதல் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது.

    மே 28-ந்தேதி பாதுகாப்பு படையினர் நடத்திய வேட்டையில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வன்முறை காரணமாக பதற்றம் நிலவி வரும் மணிப்பூர் மாநிலத்தில் ஆய்வு செய்ய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முடிவு செய்தார். அதன்படி அவர் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து இம்பாலுக்கு கடந்த 29-ந்தேதி சென்றடைந்தார்.

    மணிப்பூர் சென்ற மாநில முதல்-மந்திரி பிரேன்சிங், ஆளுநர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு சூழலை கேட்டறிந்த அமித் ஷா, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார். மேலும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அமித் ஷா, மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    • வன்முறை காரணமாக பதற்றம் நிலவி வரும் மணிப்பூர் மாநிலத்தில் ஆய்வு செய்ய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முடிவு செய்தார்.
    • மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து இம்பாலுக்கு சென்றடைந்தார்.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு நாகா, குகி சமூகத்தினர் அடங்கிய சிறுபான்மை பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே கடந்த 3-ந்தேதி மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இதில் 74 பேர் பலியானார்கள். பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    கடந்த 27-ந்தேதி முதல் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர் நடத்திய வேட்டையில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வன்முறை காரணமாக பதற்றம் நிலவி வரும் மணிப்பூர் மாநிலத்தில் ஆய்வு செய்ய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முடிவு செய்தார். அதன்படி அவர் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து இம்பாலுக்கு நேற்று இரவு சென்றடைந்தார்.

    இன்று அமித் ஷா, மாநில முதல்-மந்திரி பிரேன்சிங், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சூழலை கேட்டறிந்த அமித் ஷா, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார்.

    மேலும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அமித் ஷா, மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் ஆலோசனையில் ஈடு பட்டனர்.

    வன்முறையை கட்டுப்படுத்த எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து அமித் ஷா நாளை செய்தியாளர் சந்திப்பில் கூற உள்ளார். பின்னர் நாளை மறுநாள் டெல்லி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது.
    • மணிப்பூரில் அமித் ஷா பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். நான்கு நாட்கள் பயணமாக நேற்று மணிப்பூர் சென்ற அமித் ஷா, மாநில முதல்வர் பைரென் சிங் மற்றும் மாநில மந்திரிகள், பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

    மாநில உள்துறை மந்திரி நித்யானந்த் ராய், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பாலா, உளவுத்துறை தலைவர் தபன் டேக்கா மற்றும் சில உயர் அதிகாரிகளை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தையின் போது மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது.

    சில தினங்களுக்கு முன் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் சென்றதும், அமித் ஷா மாநிலத்தின் மூத்த அதிகாரிகள், மந்திரிகளை சந்தித்தார். ஜூன் 1 ஆம் தேதி வரை மணிப்பூரில் இருக்கும் அமித் ஷா பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறார்.

    மணிப்பூர் கலவரத்தில் காவல் அதிகாரி உள்பட ஐந்து பேர் கொல்லப்பட்டது, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வீடு தாக்கப்பட்டது மற்றும் காவல் துறை ஆயுத கிடங்கில் இருந்து பயங்கரவாதிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்களை திருடி சென்றது என மாநிலம் முழுக்க கலவர சூழல் நிலவுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மைதேயி சமூகத்தினருக்கும் பழங்குடியினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி பயங்கர மோதல்-கலவரம் ஏற்பட்டது.
    • அண்மைக்கால வன்முறைகள், இரு சமூகங்களுக்கு இடையிலான மோதல் அல்ல. பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலானதே.

    இம்பால்:

    பா.ஜ.க. ஆட்சி நடை பெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். அவர்களது கோரிக்கைக்கு, குகி, நாகா பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    மைதேயி சமூகத்தினருக்கும் பழங்குடியினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி பயங்கர மோதல்-கலவரம் ஏற்பட்டது. இதில் 74 பேர் உயிரிழந்தனர் 200 பேர் படுகாயம் அடைந்தனர்.

    நூற்றுக்கணக்கான வீடுகளும், வழிபாட்டுத் தலங்களும் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து, ராணுவம் வரவழைக்கப்பட்டது. ராணுவத்தினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    என்றாலும் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. பழங்குடியினருக்கு ஆதரவாக, அந்த சமூகம் சார்ந்த தீவிரவாதக் குழுக்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், முதல்-மந்திரி பிரேன் சிங் மாநில தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.

    அப்போது, 'மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் தொடங்கியதில் இருந்து இதுவரை 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். இவர்கள், பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு, வீடுகளுக்கு தீவைப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள்.

    அண்மைக்கால வன்முறைகள், இரு சமூகங்களுக்கு இடையிலான மோதல் அல்ல. பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலானதே. மாநிலத்தில் அமைதியை நிலை நாட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

    கக்சிங், கிழக்கு இம்பால், மேற்கு இம்பால், விஷ்ணுபூர் ஆகிய மாவட்டங்களில் மைதேயி சமூகத்தினர் வசிக்கும் கிராமங்கள் மீது ஆயுதம் தாங்கிய குகி பழங்குடியின தீவிரவாதிகள் சனிக்கிழமை இரவுமுதல் தாக்குதல் நடத்தினர். மேற்கு இம்பாலின் பயெங் கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

    கக்சிங் மாவட்டம், சுக்னு கிராமத்தில் 80 வீடுகளுக்கு தீவிரவாதிகள் தீவைத்ததால், நள்ளிரவில் வீடுகளை விட்டு, மக்கள் தப்பியோடும் நிலை ஏற்பட்டது. அங்கு, தீவிரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நிகழ்ந்தது.

    இதில், போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். பொதுமக்கள் தரப்பிலும் உயிரிழப்புகள் நேரிட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    கிழக்கு இம்பாலில் இரு வீடுகளுக்கு தீவைத்ததுடன், கிராமமக்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கிராமத்தினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

    மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு சூழலை ஆய்வு செய்வதற்காக, ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே 2 நாள் பயணமாக சென்றுள்ளார்.

    இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) மேலும் 2 பேர் கொல்லப்பட்டதால் மணிப்பூரில் பதட்டம் அதிகரித்துள்ளது.

    மணிப்பூரில் 7 ஆயுத கிட்டங்கிகள் உள்ளன. போலீசாருக்கான துப்பாக்கிகள் மற்றும் கருவிகள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. போராட்டக்காரர்கள் 3 கிட்டங்கிகளில் புகுந்து ஆயுதங்களை சூறையாடினார்கள்.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்களை அள்ளி சென்றனர். இதனால் மணிப்பூரில் பதட்டமான சூழ்நிலை அதிகரித்துள்ளது. குகி இன போராட்டக்காரர்கள் தீவிரவாதிகள் துணையுடன் தாக்குதல்களை அதிகரித்துள்ளனர்.

    பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டு அவர்கள் தாக்குதல் நடத்துவதாக தெரியவந்துள்ளது.

    கடந்த 2 தினங்களாக போராட்டம் மற்றும் தாக்குதலால் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. 3 கிராம மக்கள் முற்றிலுமாக வீடுகளை இழந்துள்ளனர். குகி இன போராட்டக்காரர்கள் எம்.16 மற்றும் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

    நிலைமை கட்டுமீறி போவதால் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மணிப்பூர் விரைகிறார். அவர் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    போராட்டக்காரர்கள் ஆயுதங்களை கீழே போடும் வரை அவர்களை வேட்டையாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மணிப்பூரில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.

    • மணிப்பூரில் ஊடுருவிய பயங்கரவாதிகள் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    • ஹெலிகாப்டர் உதவியுடன் வான்வழி கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

    இம்பால்:

    மணிப்பூர் முதல் மந்திரி பிரேன் சிங், இம்பால் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வன்முறை சம்பவங்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்திய நபர்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில், ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    கடந்த 3-ம் தேதி மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, இந்திய ராணுவம் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இதில், பாதுகாப்புப் படையினருக்கும், ஆயுதமேந்திய பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. மக்கள் சமூகத்தினர் இடையே இல்லை. அதனால், மக்கள் அமைதி காக்க வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதற்காக ஹெலிகாப்டர் உதவியுடன் வான்வழி கண்காணிப்பு பணியும் நடந்து வருகிறது என தெரிவித்தார்.

    • வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே இம்மாதம் தொடக்கத்தில் மோதல் ஏற்பட்டது.
    • மீண்டும் அங்கு வன்முறை வெடித்து உள்ளதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது.

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே இம்மாதம் தொடக்கத்தில் மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறியது. வாகனங்கள் ,வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த கலவரத்தில் பலர் இறந்தனர். கலவரத்தை அடக்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். அதன்பிறகு அங்கு நிலைமை கட்டுக்குள் வந்தது.

    இந்த நிலையில் மீண்டும் அங்கு வன்முறை வெடித்து உள்ளதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதையடுத்து ராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். ராணுவ தளபதி மனோஜ்பாண்டே இன்று மணிப்பூர் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். வன்முறை சம்பவங்கள் மேலும் பரவாமல் தடுக்க மேலும் 5 நாட்களுக்கு மணிப்பூர் மாநிலத்தில் இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ×