என் மலர்
மணிப்பூர்
- பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் ஆயுதமேந்திய 12 பேரை ராணுவம் விடுவித்தது
- பொதுமக்களுக்கு சேதம் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் ராணுவம் முடிவு
மணிப்பூரில் ஒரு சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், பழங்குடியின பரிவில் இருப்பவர்கள் இதை எதிர்த்தனர். இதனால் கடந்த மே மாதம் 3-ந்தேதியில் இருந்து மணிப்பூரில் வன்முறை நடைபெற்று வருகிறது.தொடக்கத்தில் வீடுகள், கடைகளை எரித்த கும்பல், தற்போது ஆயுதமேந்தி தாக்குதல் நடத்த தொடங்கிவிட்டன. இதனால் நாளுக்குநாள் மணிப்பூரில் சூழ்நிலை மோசமடைந்து வருகிறது.
ஆயுதமேந்தி தாக்குதல் நடத்துபவர்களை ராணுவ வீரர்கள் கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கிழக்கு இம்பால் இதாம் கிராமத்தில் ஆயுதமேந்திய 12 பேரை ராணுவ வீரர்கள் கைது செய்தனர்.
அப்போது பெண்கள் உள்பட 1500-க்கும் மேற்பட்டோர் சுற்றி வளைத்ததால், தாக்குதல் நடத்த மனமின்றி ராணுவம் அவர்களை விடுவித்து வந்தது.
இதனால் துரிதமாக செயல்பட்டு வன்முறையை சம்பவத்தை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் திணறி வருகிறது. மேலும், பெண்கள் சமூக ஆர்வலர்கள் வழிகளை அடைத்து, ராணுவ தேடுதல் வேட்டைக்கு இடையூறு விளைவிக்கின்றனர் என ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள ராணுவம் ''பெண் ஆர்வலர்கள் மணிப்பூரில் வேண்டுமென்றே வழிகளை தடுத்து வைத்துள்ளனர். பாதுகாப்புப்படையின் நடவடிக்கைக்கு தடங்களை ஏற்படுத்துகின்றனர். இதுபோன்ற தேவையற்ற குறுக்கீடு பாதுகாப்புப்படையால் குறிப்பிட்ட நேரத்தில் அசாம்பாவிதம் நடைபெறும் இடத்திற்கு சென்று உயிர்களையும், சொத்துக்களையும் காப்பாற்ற முடியாத நிலை உருவாகிறது.
அமைதியை நிலைநாட்ட எங்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து தரப்பு மக்களையும் கேட்டுக்கொள்கிறோம். மணிப்பூருக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள்'' எனத் தெரிவித்துள்ளது.
- மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
- கலவரம் எதிரொலியால், மணிப்பூரில் இணைய சேவை தடை வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
மணிப்பூர்:
மணிப்பூரில் கடந்த மாதம் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. கலவரத்தைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு இணைய சேவையை முடக்கி வருகிறது. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் ஒரு மாத காலத்துக்கும் மேலாக இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொது ஒழுங்கு சீர்குலைவதைத் தடுக்கும் வகையில் மணிப்பூரில் இணைய சேவை தடை ஜூன் 30-ம் தேதி மாலை 3 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
- ஆயுதங்களுடன் கிளர்ச்சியாளர்களை பிடித்து வைத்திருந்தது ராணுவம்
- கிராம மக்கள் ஒன்றாக திரண்டதால் உயிர்ச்சேதம் நிகழக்கூடாது என்பதால் ராணுவம் வெளியேற்றம்
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி பிரிவினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே பழங்குடியினர் பட்டியலில் இருக்கும் குகி இனத்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
கடந்த மே மாதம் 3-ந்தேதி 'பழங்குடியினர் ஒற்றுமை பேரணி'யை மைதேயி பிரிவினருக்கு எதிராக மழை மாவட்ட மக்கள் நடத்தினர். அப்போது வன்முறை வெடித்தது. அதில் இருந்து இன்னும் வன்முறை ஓயவில்லை. சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
மைதேயி இனத்தவர்களில் சிலர் ஆயுதம் ஏந்தி சண்டையிட்டு வருகின்றனர். அவர்கள் கிராம மக்களுடன் கலந்து இருப்பதால் அவர்களை கைது செய்வதில் போலீசார், அதிரடிப்படைக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மணிப்பூர் இம்பாலின் கிழக்குப் பகுதியில் உள்ள இதாம் கிராமத்தில் ஆயுதங்களுடன் கிளர்ச்சியாளர்கள் மறைந்து இருந்தனர். அப்போது, ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தி கிளர்ச்சியாளர்களிடம் இருந்து ஆயுதங்களை கைப்பற்றியதுடன் அவர்களையும் கைது செய்தனர்.
அந்த நேரத்தில் ராணுவ நடவடிக்கைக்கு எதிராக கிராம மக்கள் திரண்டனர். அவர்கள் ராணுவத்தை சுற்றி வளைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் தலைமையிலான குழுக்களும் ராணுவத்தை எதிர்த்து நின்றன. ராணுவ நடவடிக்கை எடுத்தால் கடும் உயிர்ச்சேதம் நிகழும் என்பதால், ராணுவம் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றது. பின்னர், மனிதாபிமான அடிப்படையில் கிளர்ச்சியாளர்களை விடுவித்து கைப்பற்றிய ஆயுதங்களுடன் ராணுவம் வெளியேறியது.
2015-ம் ஆண்டு டோக்ரா யுனிட் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் இந்த குழுவில் இடம்பிடித்திருந்ததாக ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது.
மக்கள் உயிருக்கு எதிராக கடினமான முடிவு எடுக்க விரும்பவில்லை, முதிர்ச்சியாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றில் இருந்து தொடர்ந்து மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், ராணுவம் இறுதியில் வெளியேறியது.
- மணிப்பூர் கலவரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
- பெண்களின் முற்றுகை போராட்டத்தால் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்க முடியாமல் ஏமாற்றத்துடன் அந்த பகுதியைவிட்டு சென்றனர்.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி இன பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை கடந்த 45 தினங்களுக்கும் மேலாக நீடிக்கிறது.
20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருந்தும் அங்கு அமைதி நிலவவில்லை. கலவரம் நீடித்து வருகிறது. 120-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் மணிப்பூ ரில் மந்திரியின் வீடு மற்றும் பா.ஜனதா அலுவலகத்துக்கு மர்ம கும்பல் தீ வைத்தது.
மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பொது சுகாதார பொறியியல் துறை, நுகர்வோர் மற்றும் உணவு விவகாரத் துறை மந்திரியாக இருப்பவர் சுசிந்த்ரோ. மைதேயி சமூகத்தை சேர்ந்த இவரது வீடு இம்பால் கிழக்கு பகுதியில் உள்ளது.
இவருக்கு சொந்தமான குடோனை நேற்று இரவு மர்ம கும்பல் தீ வைத்து கொளுத்தியது. அதோடு அவரது வீட்டுக்குள் ஒரு கும்பல் நுழைந்து கட்டிடத்துக்கும் தீ வைத்தது. பாதுகாப்பு படையினர் அங்கு வந்த மர்மகும்பலை கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைத்தது. லேசாக எரிந்த தீயை அணைத்தனர். ஏற்கனவே பெண் மந்திரி வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டிருந்தது.
இதே போல அங்குள்ள பா.ஜனதா அலுவலகத்துக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர். சம்பவ இடத்துக்கு பாதுகாப்பு படையினர் உடனே வந்து தீயை அணைத்து நிலைமையை கட்டுக்கு கொண்டு வந்தனர்.
மணிப்பூர் கலவரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், கொள்ளை போன வழக்கு தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ. குழு மணிப்பூர் போலீஸ் பயிற்சி கல்லூரிக்கு செல்ல முயன்றது.
ஆனால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு திரண்டு நின்று அவர்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். பெண்களின் முற்றுகை போராட்டத்தால் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்க முடியாமல் ஏமாற்றத்துடன் அந்த பகுதியைவிட்டு சென்றனர்.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். மாலை 3 மணியளவில் இந்த கூட்டம் நடக்கிறது.
- மணிப்பூரில், பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
- 100-க்கும் மேற்பட்டோர் பலியான பிறகும் கலவரம் நீடித்து வருகிறது.
புதுடெல்லி :
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பெரும்பான்மையினரான 'மெய்தி' இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த மாதம் கலவரம் வெடித்தது. 100-க்கும் மேற்பட்டோர் பலியான பிறகும் கலவரம் நீடித்து வருகிறது.
பா.ஜனதா தலைவர்களின் வீடு மற்றும் சொத்துகளை குறிவைத்து தாக்குதல் நடந்து வருகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக மத்திய, மாநில அரசுகள் மீது காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ஒரு வீடியோ உரையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அனைத்து இனங்கள், மதங்கள் கொண்ட மக்களை அரவணைத்துக் கொள்ளும் திறனுக்கு மணிப்பூர் வரலாறு சாட்சியாக அமைந்துள்ளது.
சகோதரத்துவ உணர்வை வளர்க்க அளப்பரிய நம்பிக்கையை உருவாக்க வேண்டி உள்ளது. ஆனால், வெறுப்பையும், பிரிவினையையும் தூண்டிவிட ஒரே ஒரு தவறான செயல் போதும்.
மணிப்பூரில், ஒருவருக்கொருவர் அமைதியாக இணைந்து வாழ்ந்த சகோதர, சகோதரிகள், ஒருவரை ஒருவர் எதிராக நிற்பதை பார்ப்பது இதயத்தை நொறுக்குவதாக அமைந்துள்ளது.
தாங்கள் வாழ்ந்த வீட்டையும், பல ஆண்டுகளாக சேகரித்து வைத்த பொருட்களையும் அவர்கள் விட்டுச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்எப்போதும் கண்டிராத வன்முறை, மக்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளது. நாட்டின் மனசாட்சியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எனவே, மணிப்பூர் மக்களை, குறிப்பாக துணிச்சலான சகோதரிகளை கேட்டுக்கொள்கிறேன். இந்த அழகிய மண்ணில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வாருங்கள். ஒரு தாயாக, அவர்களது வேதனை எனக்கு புரிகிறது.
இருப்பினும், அமைதி பாதையை தேர்ந்தெடுத்தால்தான், நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் சிறப்பாக அமையும். இனிவரும் வாரங்களிலும், மாதங்களிலும் நம்பிக்கையை கட்டமைப்பதற்கான நீண்ட பயணத்தை மேற்கொள்வோம்.
மணிப்பூர் மக்கள் மீது எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. இந்த சோதனையான காலகட்டத்தை நாம் ஒன்றுசேர்ந்து கடப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஆளும் பாஜகவைச் சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
- குகி எம்.எல்.ஏக்கள் மற்றும் மைதேயி சமூக எம்.எல்.ஏக்கள் சந்திப்பு நடத்த கோரிக்கை
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையிலான இனமோதல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மைதேயி சமூகத்தினர் தங்களை பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி.) பிரிவில் சேர்க்க வலியுறுத்தி வரும் நிலையில், அவர்களின் இந்த கோரிக்கைக்கு எதிராக கடந்த மே 3ம் தேதி மலை மாவட்டங்களில் 'பழங்குடியினர் ஒற்றுமை பேரணி' நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறை தொடர்ந்து நீடிக்கிறது. 45 தினங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தாலும் அமைதி திரும்பவில்லை. பா.ஜனதா தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. அலுவலகம் சூறையாடப்பட்டது. துப்பாக்கி சூடு, தீவைப்பு சம்பவங்கள் தொடர்கின்றன.
இந்நிலையில், ஆளும் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளனர். இந்த கடிதத்தில், கரம் ஷியாம் சிங், தோக்சோம் ராதேஷ்யாம் சிங், நிஷிகாந்த் சிங் சபம், குவைரக்பம் ரகுமணி சிங், ப்ரோஜென் சிங், ராபிந்த்ரோ சிங், ராஜன் சிங், கெபி தேவி மற்றும் ராதேஷ்யாம் ஆகிய 9 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் எழுதிய கடிதத்தில், பிரேன் சிங் தலைமையிலான அரசாங்கம் மீதும் நிர்வாகத்தின்மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக கூறி உள்ளனர்.
குகி சமூக எம்.எல்.ஏக்கள் மற்றும் மைதேயி சமூக எம்.எல்.ஏக்களுக்கு இடையே ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யும்படி கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், மணிப்பூரின் அனைத்துப் பகுதிகளிலும் மத்திய பாதுகாப்பு படைகளை ஒரே சீராக நிறுத்தி நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- பா.ஜனதா தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
- மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை இன்னும் முடிந்தபாடில்லை. 45 தினங்களுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது.
மணிப்பூர் கலவரத்தில் 120-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தாலும் அமைதி நிலவவில்லை.
பா.ஜனதா தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. அலுவலகம் சூறையாடப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம கும்பல் 9 பேரை சுட்டுக் கொன்றது. 2 நாட்களுக்கு முன்பு துப்பாக்கி தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் காயம் அடைந்தார்.
இந்த நிலையில் மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று இரவு 2 இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
மணிப்பூர் கிழக்கில் உள்ள தாங்ஜிங்கில் நேற்று இரவு 11.45 மணியளவில் ஒரு கும்பல் 15 முதல் 20 ரவுண்டுகள் வரை துப்பாக்கி யால் சுட்டது.
செல்ஜன் மற்றும் சிங்டா பகுதியில் இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை துப்பாக்கிசூடு நிகழ்ந்தது. அசாம் ரைபிள் வீரர்கள் இந்த இரண்டு இடங்களுக்கும் சென்று காயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
- இணையச் சேவைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 10ம் தேதி தடையை நீட்டித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.
- மணிப்பூர் கலவரம் மற்றும் அதன் பிறகான வன்முறையில் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் 3ம் தேதி முதல் இணையச் சேவைக்கு தடை நீடித்து வருகிறது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினருக்கு இடையே கடந்த மாதம் தொடக்கத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. மணிப்பூர் கலவரம் மற்றும் அதன் பிறகான வன்முறையில் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இதனால், இணையச் சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10ம் தேதி தடையை நீட்டித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.
வெறுப்புணர்வைத் தூண்டக் கூடிய புகைப்படங்கள், வீடியோக்கள், பேச்சுகளை பரப்ப சில சமூக விரோத சக்திகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால் இணையச் சேவை தடை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே, இம்பாலில் கடந்த வாரம் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மணிப்பூரில் இணையத்தள சேவைக்கான தடை வரும் 25ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நீடிப்பதால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பல அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
- ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி தொடங்கிய வன்முறை மோதல் இன்னும் முடிந்த பாடில்லை. 45 நாட்களுக்கு மேலாக அங்கு கலவரம் நீடித்து வருகிறது.
மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 310 பேர் காயம் அடைந்துள்ளனர். ஏராளமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இம்பால் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த சம்பவத்தில் மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ வீரர் காயம் அடைந்தார். இதை தொடர்ந்து முதல்-மந்திரி பிரேன்சிங் கடுமையாக எச்சரித்து உள்ளார். வன்முறையை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் கூறியுள்ளார்.
மாநிலத்தில் இயல்பு நிலை திரும்ப மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நீடிப்பதால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பல அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் முதல்-மந்திரி பதவியில் இருந்து பிரேன்சிங் நீக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு இன்று மறுத்துவிட்டது.
குகி பழங்குடியினருக்கு ராணுவ பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், கலவரத்தை கட்டுப்படுத்த அதிக அளவில் ராணுவத்தை குவிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இதை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. இந்த வழக்கு ஜூலை 3-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.
- கலவரத்தால் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
- 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.
இம்பால் :
மணிப்பூரில் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த முகாம்களை மாநில முதல்-மந்திரி பைரேன் சிங் நேற்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கலவரத்தால் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். நிவாரண முகாம்களில் தங்கியிருப்பவர்களை தங்கள் சொந்த இடங்களில் தங்க வைப்பதற்கு அரசு ஏற்பாடுகளை செய்யும்வரை அவர்களுக்கு ரெடிமேட் வீடுகளை வழங்க உள்ளது. இதற்காக 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். அதற்கான தளவாடங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளன' என்றார்.
இந்த தளவாடங்கள் 2 வாரங்களுக்குள் இம்பால் வந்து சேரும் எனக்கூறிய அவர், இந்த வீடுகளை அமைப்பதற்கான இடத்தை அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இம்பால் மேற்கு மாவட்டத்தில் துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தது குறித்து பைரேன் சிங் கூறுகையில், 'வன்முறையை நிறுத்துங்கள். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். மக்களையும் கேட்டுக்கொள்கிறேன், ஆயுதங்களுடன் இருக்கும் மெய்தி இனத்தினரையும் கேட்டுக்கொள்கிறேன், தாக்குதல்களை விட்டுவிட்டு அமைதியின் பாதைக்கு திரும்புங்கள். அப்போதுதான் மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டு வர முடியும்' என்றும் கேட்டுக்கொண்டார்.
- கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கிய வன்முறை இன்னும் முடிந்தபாடில்லை வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது.
- காண்டோ சபல் கிராமத்துக்குள் நுழைந்த ஒரு கும்பல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது.
கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கிய வன்முறை இன்னும் முடிந்தபாடில்லை வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது. கலவரத்துக்கு இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 300- க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பா.ஜனதா மந்திரிகளின் அலுவலகங்களுக்கு தீவைக்கப்பட்டன. புதிய வன்முறை காரணமாக ராணுவ வீரர்கள் கடந்த 2 தினங்களாக கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று இரவு காண்டோ சபல் கிராமத்துக்குள் நுழைந்த ஒரு கும்பல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது. இதில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார். அவர் லீமோகாங் ராணுவ மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.கிராம மக்களை குறி வைத்துதான் அந்த கும்பல் தாக்க வந்தது. ராணூவ வீரர்களை பார்த்ததும் அவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு ஓடிவிட்டனர்.
- ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடியதால் பாதுகாப்பு போலீசாரால் தடுக்க முடியவில்லை
- பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்
மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினர் இடையிலான மோதல் வன்முறையாக வெடித்து இன்னும் ஓயாமல் நீடிக்கிறது. கடந்த மாதம் 3-ந்தேதி நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டது. அதில் இருந்து தற்போது வன்முறை ஓயவில்லை.
ஆயுதமேந்திய குழுக்கள் மீது கடும் நடவடிக்கை, 144 தடை உத்தரவு பிறப்பித்தும் அவ்வப்போது வன்முறை நடைபெறுகிறது. இம்பாலில் தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நேரத்திலும், நேற்று பெண் மந்திரி வீட்டுக்கு ஒரு கும்பல் தீவைத்தது.
இந்த நிலையில் நேற்றிரவு மத்திய மந்திரி ஆர்.கே. ரஞ்சன் சிங் வீட்டை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு தீவைத்து கொளுத்தினர். சம்பவம் நடைபெற்றபோது மத்திய மந்திரி ரஞ்சன் அங்கு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் நடைபெற்றபோது மந்திரியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் 9 பேர், ஐந்து பாதுகாப்பு வீரர்கள், 8 கூடுதல் பாதுகாப்பு வீரர்கள் பணியில் இருந்துள்ளனர். அவர்களால் வன்முறையாளர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
அனைத்து திசைகளிலும் இருந்து பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசினர் என வீரர்கள் தெரிவித்துள்ளனர். கும்பல் அதிகமாக இருந்ததால் எங்களால் தடுக்க முடியவில்லை. சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை எனவும் பாதுகாப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மந்திய மந்திரி ரஞ்சன் கூறுகையில் ''நேற்று இரவு நடைபெற்ற சம்பவங்களை பார்க்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது. 50-க்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் எனது வீட்டை எரித்துள்ளனர். தரைத்தளம் மற்றும் முதல் தளம் பாதிக்கப்பட்டுள்ளது. நான் எனது குடும்பத்தை சேர்ந்த எவரும் அந்த நேரத்தில் அங்கு இல்லை.
வன்முறை எதற்கும் தீர்வாகாது. இந்தச் செயலில் ஈடுபடுட்டவர்கள் மனிதகுலத்திற்கு எதிரிகள்'' என்றார்.
கடந்த மே மாதம் இதுபோன்று அவரது வீட்டை தாக்க கும்பல் முயன்றது. அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்தனர்.
மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுவே இரு சமூகத்தினரின் மோதலுக்கு பிரதான காரணமாகும்.






