என் மலர்tooltip icon

    இந்தியா

    இதயம் நொறுங்கிவிட்டது.. மணிப்பூர் மக்களை சந்தித்த ராகுல் காந்தி வேதனையுடன் டுவீட்
    X

    இதயம் நொறுங்கிவிட்டது.. மணிப்பூர் மக்களை சந்தித்த ராகுல் காந்தி வேதனையுடன் டுவீட்

    • இன்று காலை 9.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் இம்பாலில் இருந்து மொய்ரங் சென்றடைந்தார்.
    • பாதிக்கப்பட்ட ஏராளமான மக்களை சந்தித்து, அவர்களின் துயரம் குறித்து கேட்டறிந்தார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக நேற்று மணிப்பூர் சென்றார். அப்போது அவரை மணிப்பூர் போலீசார் நிவாரண முகாம் செல்ல அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர்.

    தன்னை தடுத்து நிறுத்தியது துரதிர்ஷ்டவசமானது என ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார். காரில் சென்றால் நாட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தடுத்தி நிறுத்தினோம் என போலீஸ் அதிகாரி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் மணிப்பூர் பிஷ்னுபுர் மாவட்டம் மொய்ரங் என்ற பகுதியில் உள்ள இரண்டு நிவாரண முகாமிற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இன்று காலை 9.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் இம்பாலில் இருந்து மொய்ரங் சென்றடைந்தார்.

    அங்கு பாதிக்கப்பட்ட ஏராளமான மக்களை சந்தித்து, அவர்களின் துயரம் குறித்து கேட்டறிந்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனையுடன் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

    மணிப்பூரில் வன்முறையால் அன்புக்குரியவர்கள் மற்றும் வீடுகளை இழந்தவர்களின் நிலையைப் பார்ப்பது மற்றும் அவர்களின் அழுக்குரல் கேட்பது மனவேதனை அளிக்கிறது. இதயம் நொறுங்கிவிட்டது. நான் சந்தித்த ஒவ்வொரு சகோதரர், சகோதரி மற்றும் குழந்தைகளின் முகத்திலும் உதவிக்கான கூக்குரல் உள்ளது.

    நமது மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மணிப்பூருக்கு இப்போது மிக முக்கியமாக அமைதி தேவை . நம் முயற்சிகள் அனைத்தும் அந்த இலக்கை நோக்கி ஒன்றுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×