என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    ஒருகாலத்தில், வீட்டிலேயே பிரசவம் பார்த்தோம் என்பது உண்மைதான். ஆனால், தற்போது பலவேறுவிதமான பிரச்சனைகள் பிரசவத்தின்போது ஏற்படுகின்றன.
    மருத்துவமனையில் நடந்தாலும், வீட்டில் நடந்தாலும் பிரசவம் என்பது சவாலான விஷயம்தான். மருத்துவமனையில் பார்க்கும்போது ஏதாவது பாதிப்பென்றால் உடனடியாக மாற்று சிகிச்சை முறைகளைக் கையாண்டு சரிசெய்யமுடியும். வீட்டில், அதுமாதிரியான வசதிகள் இருக்காது. கடைசி நிமிடத்தில் ஏதேனும் விபரீதம் நடந்தால் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

    உதாரணமாக, பிரசவம் முடிந்த பின் ரத்தப்போக்கு அதிகமாக ஏற்படும். ஒருசில நிமிடங்களில் இரண்டு அல்லது மூன்று லிட்டர் ரத்தம்கூட வெளியேறலாம். மருத்துவமனையில் இருந்தால், ரத்தப்போக்கின் காரணத்தைக் கண்டுபிடித்து அதற்கான தடுப்பு மருந்துகளைக் கொடுத்துவிடலாம். அப்படியும் நிற்காவிட்டால், ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை செய்து சரிசெய்ய முடியும். அதற்கும் ரத்தப்போக்கு கட்டுப்படாவிட்டால் கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்வோம். ஒருபுறம் அவர்களுக்குத் தேவையான ரத்தத்தையும் ஏற்றுவோம். வீட்டில் இருந்தால் இதெல்லாம் சாத்தியமில்லை.

    ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தப் பாதிப்புள்ள பெண்களுக்குப் பிரசவ நேரத்தில் பாதிப்பு அதிகமாகும். அதனால் வலிப்புகூட ஏற்படலாம். அதைத் தடுத்து நிறுத்த மருந்துகளோ, கருவிகளோ வீட்டில் இருக்காது. அதுமட்டுமின்றி பிரசவத்தின்போது, கர்ப்பப்பை பாதை , சிறுநீரகப் பாதையில் அடைப்பு அல்லது காயம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. பிறந்த உடனே குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். மருத்துவமனையில் இருந்தால் உடனடியாக வெண்டிலேட்டர், ஆம்புபேக் உதவியுடன் சரிசெய்துவிடலாம் . வீட்டில் அதற்கும் வாய்ப்பில்லை .

    ஒருகாலத்தில், வீட்டிலேயே பிரசவம் பார்த்தோம் என்பது உண்மைதான். ஆனால், தற்போது பலவேறுவிதமான பிரச்சனைகள் பிரசவத்தின்போது ஏற்படுகின்றன. தாயையும் குழந்தையையும் பத்திரமாகப் பாதுகாக்க மருத்துவமனைகளை நாடுவதுதான் சிறந்த வழி.
    பாலியல் சார்ந்த குறைபாடுகளில் 90 சதவீதம் மனம் சார்ந்த தொந்தரவுகளே. மீதமிருக்கும் 10 சதவீதத்தினருக்கு மட்டுமே மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.
    ஆண்மைக் குறைபாடுகள் அத்தனையும் தங்களால் தீர்க்க முடியும் என்று வாக்களித்து இவர்கள் தங்களது பிசினஸை மேம்படுத்திக் கொள்ள அத்தனை வகையான விளம்பரங்களையும் செய்கின்றனர். எனவே, விளம்பரங்களை நம்பி ஏமாந்துவிடக்கூடாது.

    பாலியல் குறைபாடுகளை முதலில் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பாலியல் சார்ந்த குறைபாடுகளில் 90  சதவீதம் மனம் சார்ந்த தொந்தரவுகளே. மீதமிருக்கும் 10 சதவீதத்தினருக்கு மட்டுமே மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. உடல் ரீதியாக அவர்களுக்கு இருக்கும் வேறு பிரச்சனைகள் கூடப் பாலியல் குறைபாட்டுக்குக் காரணம் ஆகலாம்.

    வீரியமின்மை, விந்து விரைவாக வெளியேறுதல், விந்தணுக்களின் தரமும் எண்ணிக்கையும் குறைதல் ஆகியவற்றை முறையான மருத்துவர்களிடம் விவாதிப்பது முக்கியம். பயிற்சி, அனுபவம் மற்றும் தகுதி வாய்ந்த மருத்துவர்களின் ஆலோசனை மூலம் பாலியல் குறைபாடுகளை சரி செய்துவிடலாம்.

    பாலியல் பிரச்சனைக்கு மன ரீதியான காரணங்கள் இல்லாமல் உடல் ரீதியான காரணங்கள் இருக்கும் பட்சத்தில் அதனை ஆய்ந்து அறிவது மருத்துவரின் கடமை. காரணம் தெரியாமல் குத்துமதிப்பாக சில மருந்துகளை சாப்பிடச் சொல்லும் போலி மருத்துவர்களின் செயல் கண்டிக்கத்தக்கது.

    பாலியல் சார்ந்த விஷயங்களை வெளிப்படைத் தன்மையுடன் பேசமுடியாத சூழலே போலிகள் உருவாவதற்கு முக்கியக் காரணமாகவும் உள்ளது.

    காதல், காமம் இரண்டையும் ‘அடச்சீ’ என்று பார்க்கும் மனப்பான்மையை தகர்த்தெரியும் சூழலை உருவாக்க வேண்டும். செக்ஸ் என்ற சொல்லே இங்கு கெட்ட வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது. செக்ஸ் என்பதும் இயல்பான செயல்பாடே என்பதைப் புரிந்து கொள்வதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் என்பது கேள்விக்குறியாகவே தொடர்கிறது.



    குழந்தையின்றித் தவிக்கும் பெண்களை இந்த சமுதாயம் பலவிதமாகவும் வசை பாடுகிறது. இந்தச் சூழ்நிலையை வைத்தே வணிகம் செய்து பணம் சம்பாதிக்கும் ஆசாமிகள் இங்கு அதிகம் உள்ளனர். குழந்தைக்காக ஏங்கும் கணவனின் கடினமான மனநிலையும், மனைவியின் மன அழுத்தத்தையும் பணமாக மாற்றும் வித்தையை போலி மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    பாலியல் குறைபாடுகளுக்கு நிச்சயமாக இயற்கை மருத்துவத்தில் சிறந்த சிகிச்சைகள் உண்டு. ஆனால், சரியான மருத்துவரைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். பதிவு பெற்ற அல்லது பாரம்பரிய முறைப்படி நெடுநாளாக மருத்துவம் பார்த்து வரும் தகுதி வாய்ந்த மருத்துவர்களைத் தேர்வு செய்வது அவசியம்.

    அதிக பணம் செலவழித்து விளம்பரம் தேடும் போலி மருத்துவர்களை எந்தக் காரணம் கொண்டும் நம்ப வேண்டாம், விளம்பரத்துக்காக செலவழித்த பணத்தை உங்களிடம்தான் வசூலிக்கப் போகிறார்கள்.

    ஐந்து ரூபாய் மதிப்புள்ள மருந்தை ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்கும் வித்தகர்கள் இங்கு அதிகம். பாலியல் சார்ந்த குறைபாடுகள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து நிவர்த்தி செய்யக் கூடிய கொடிய வியாதியல்ல. செலவில்லாமல் செய்யக் கூடிய மனமாற்றம் மட்டுமே. பாலியல் பற்றிய சந்தேகங்களை வெளிப்படையாக விவாதியுங்கள்.

    பள்ளிப் பருவத்திலும், கல்லூரிப் பருவத்திலும் பாலியல் தொடர்பான சந்தேகங்களை பேசிப் புரிந்து கொள்ள சரியான மருத்துவரிடம் ஆலோசனை பெற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம். திருமண வாழ்வில் கணவன் மனைவி இடையில் அன்புப் பரிமாற்றத்தில் மனத்தடைகள் இன்றி இருங்கள்.

    ஒருவரது குறையை மற்றவர் பெரிது படுத்தத்தேவையில்லை. பாலியல் தொடர்பான சிறு பிரச்சனைகளுக்கு உங்கள் குடும்ப மருத்துவரிடம் விவாதிக்கலாம். தேவைப்பட்டால் அதற்கான சிறப்பு மருத்துவரை அணுகலாம். பாரம்பரிய உணவு, உடலுழைப்பு, மனமகிழ்ச்சியும் ஆரோக்கியமான தாம்பத்யத்துக்கு வழிவகுக்கும்.
    கர்ப்பத்தின் போது பெண்கள் சந்திக்கும் ஒரு சில பல் பிரச்சனைகள் பல வித பிரச்சனைகளுக்கு காரணமாகவும் அமைகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தில் ஒரு சில பெண்களுக்கு பல் பிரச்சனை உண்டாவது வழக்கம் தான். அதாவது கர்ப்பத்தின் போது அதிகரிக்கும் ஹார்மோன்களால் கிருமிகள் ஊடுருவ வாய்ப்பிருக்கிறது. கர்ப்பிணிகள் தன் பற்களை தானாகவே பாதிப்புக்குள்ளாக்கி கொள்வதில்லை. கர்ப்பிணிகளின் பற்களை பொறுத்தே குழந்தைகள் பல் அமையும். கர்ப்பத்தின் போது எடுத்துக்கொள்ளும் கால்சியத்தின் அளவு என்பது குறைவாக இருக்குமெனில் குழந்தைக்கு தேவையான கால்சியத்தை அம்மாவின் எலும்பு தருகிறது.

    இருப்பினும், கர்ப்பத்தின் போது பெண்கள் சந்திக்கும் ஒரு சில பல் பிரச்சனைகள் பல வித பிரச்சனைகளுக்கு காரணமாகவும் அமைகிறது.

    ஒரு ஆராய்ச்சியின் கூற்றுப்படி கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பல் பிரச்சனை என்பது குறைப்பிரசவத்துடன் கூடிய குறைவான எடையை தருகிறதாம். இவ்வாறு பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை குறைபாடு மற்றும் காது பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    கர்ப்பிணிகள் செய்ய வேண்டியது?

    1. ப்ளூரைடு டூத் பேஸ்ட் கொண்டு தினமும் இரண்டு முறை பல் துலக்குங்கள்.
    2. ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் இடையே சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
    3. பல் மருத்துவரை சந்தித்து அவரிடம் அடிக்கடி ஆலோசனை பெற முயலுங்கள்.

    பல் பாதுகாப்பு பணியில் கர்ப்பம் என்பது பாதிக்கப்படலாம். ஓர் உதாரணத்திற்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு பல் மருத்துவர் X-கதிர்களை செலுத்திவிடக்கூடும். எனவே மிகவும் கவனமாக நீங்கள் இருந்திட வேண்டும். இந்த பல் பாதுகாப்பு X-கதிர்கள் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மருத்துவரிடம் முன்கூட்டியே கூறுவதன் மூலம் அவர் செலுத்தும் அளவு என்பது மிகவும் கவனத்துடன் கையாளப்படும். அதனால் நீங்கள் கர்ப்பம் என்பதை மருத்துவரிடம் சென்றவுடன் சொல்லிவிட வேண்டியது மிகவும் அவசியம்.



    பல் பிரச்சனை வர என்ன காரணம்?

    1. கிருமி பிரச்சனை.
    2. வாந்தி எடுப்பதால் பல் இடுக்கில் அழுக்கு சேர்வது.
    3. இனிப்பு சாப்பிட்டு வாய் கொப்பளிக்காமல் இருப்பது.

    கர்ப்ப காலத்தில் கால்சியத்தை அதிகரிக்கும் உணவு:

    1. பால்.
    2. பாலாடைக்கட்டி.
    3. இனிப்பு இல்லாத தயிர்.
    4. சோயாப்பால் (கால்சியம் கொண்டது)

    கால்சியம் நிறைந்த வைட்டமின் D:

    வைட்டமின் Dஇல் தேவையான அளவில் கால்சியம் இருக்கிறது.

    1. பாலாடைக்கட்டி
    2. செறிவூட்டிய வெண்ணெய்.
    3. சால்மன் போன்ற மீன்.
    4. முட்டை. 
    பிறவிக்குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளை எவ்வாறு கண்டறிவது? அதற்குரிய சிகிச்சை முறைகள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தினாறு செல்வங்களில் மக்கட்பேறு என்பது பெரும் செல்வம். அத்தகைய மக்கட்பேறு எனும் குழந்தை செல்வம் கிடைக்கப்பெறாதவர்களிடம் கேட்டால் தான் அதன் அருமை தெரியும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். இத்தகைய சிறப்பு பெற்ற குழந்தை பாக்கியம் கிடைத்தும், அவ்வாறு கிடைத்த குழந்தை ஏதோ ஒருவித பிறவிக்குறைபாடுகளுடன் பிறந்தால் அது வாழ்வில் பெரும் சோகத்தை ஏற்படுத்தும்.

    இவ்வாறு பிறவிக்குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளை எவ்வாறு கண்டறிவது? அதற்குரிய சிகிச்சை முறைகள் பற்றி காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு டாக்டர் விக்னேஷ் கூறியதாவது:-

    குழந்தையின் வளர்ச்சி

    குழந்தை பிறந்தநாளில் இருந்து 2 வயதுக்குள் அதன் வளர்ச்சி சரியாக இருக்க வேண்டும். அதாவது குழந்தை பிறந்தநாளில் இருந்து 3 மாதத்தில் தாயின் முகம் பார்த்து சிரிக்கவும், 5 முதல் 6 மாதத்தில் அதன் தலை நிற்கவும் வேண்டும். 7 மாதத்துக்குள் குழந்தை குப்புற விழ வேண்டும். 9-வது மாதத்தில் எதையாவது பிடித்து உட்கார வேண்டும். 1 வயதில் தானாக எழுந்து நிற்க வேண்டும். 1½ வயதில் நடக்க வேண்டும். 2 வயதில் படிக்கட்டுகளில் ஏறி, இறங்க வேண்டும்.

    அதேபோல் குழந்தை பிறந்த 6 மாதத்தில் பேச முயற்சிக்க வேண்டும். அதற்கான அடையாளமாக அது சத்தம் எழுப்ப ஆரம்பிக்கும். 9-வது மாதத்தில் அம்மா, தாத்தா, மாமா என சொல்ல முயற்சிக்கும். 2 வருடத்தில் ஒரு சொல் வார்த்தைகளை பேசும். 3 வருடத்தில் இரண்டு சொல் வார்த்தைகளை பேச வேண்டும்.

    இதுதான் குழந்தையின் சராசரி வளர்ச்சி ஆகும். மேற்குறிப்பிட்ட கால அளவுகளில் ஒன்றிரண்டு மாதங்கள் வித்தியாசப்படலாம். ஆனால் அதன் வளர்ச்சியில் இவை அனைத்தும் நடந்திருக்க வேண்டும். இதுவே குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என்பதற்கான அடையாளம் ஆகும்.

    இருதய வளர்ச்சி

    பொதுவாக குழந்தை வயிற்றில் உருவாகும் போதே, அதன் பிறவிக்குறைபாடுகளும் உருவாகி விடுகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இருதயம் 4 பகுதிகளாக வளர்ந்து அதன்பிறகு ஒன்றாக சேரும். அதன்பிறகுதான் முழு இருதயம் தோன்றும். அவ்வாறு தோன்றும் இருதயத்தில், அது உருவாகும் போதே அதில் ஓட்டை விழ வாய்ப்பு உண்டு.

    அவ்வாறு தானாக விழும் ஓட்டையில் 2 வகை உள்ளது. முதல் வகை ஓட்டை குழந்தை பிறந்த 24 மணி நேரம் முதல் 72 மணி நேரத்துக்குள் தானாகவே அடைத்துவிடும். 2-வது வகை ஓட்டை என்பது, குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தோன்றுவது. இது எவ்வளவு நாள் குறைவாக பிறந்ததோ அவ்வளவு நாட்களோ அல்லது அதற்கு மேலும் சில நாட்களோ இருதயம் வளர்வதற்கு எடுத்துக்கொள்ளும்.

    பிறவிக்குறைபாடு

    பிறவிக்குறைபாட்டால், இருதயத்தில் ஓட்டை விழுதல், உதடுபிளவு ஏற்படுதல், வாய்க்குள் மூக்கின் அடியில் ஓட்டை தோன்றுதல், (அவ்வாறு மூக்கிற்குள் ஓட்டை விழுந்த குழந்தை பால் குடித்தால், பால் மூக்கின் வழியாக வெளியே வந்து விடும்.) காது கேளாமை, கண்புரை, இடுப்பு மூட்டு விலகுதல், கால் நேராக இல்லாமல் வளைந்து இருத்தல், முதுகு தண்டில் ஓட்டை விழுதல் அல்லது முதுகு தண்டில் பிளவு ஏற்படுதல், கட்டி தோன்றுதல் போன்றவை பிறவிக்குறைபாடுகள் ஆகும்.

    இதில் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளும் உண்டு. மேற்கூறிய பல பிரச்சினைகளில் பெரும்பாலானவை சரி செய்யக்கூடியது.

    சிகிச்சைகள்


    கண் சம்பந்தமான பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் 100 சதவீதம் அதனை சரி செய்து பார்வையை பெறலாம். காது கேளாமை பிரச்சினையை 3 மாதத்திலேயே கண்டறிய முடியும். அவ்வாறு கண்டறிந்தால் அதனையும் சரி செய்யலாம். இடுப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையை ஒரு வருடம் தொடர்ந்து கட்டு போடுவதன் மூலம் சரி செய்யலாம்.



    அதேபோல் முதுகுதண்டு பிரச்சினை மற்றும் முதுகுதண்டில் கட்டி போன்றவற்றை அறுவை சிகிச்சை செய்து சரி செய்யலாம். இதுபோன்ற முதுகுதண்டுவட பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு சிறுநீரை அடக்கும் சக்தி இருக்காது. சொட்டு, சொட்டாக சிறுநீர் விழுந்து கொண்டே இருக்கும். இதுதவிர கால் செயல் இழக்கவும் வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த முதல் 3 மாதத்துக்குள் இந்த பிரச்சினையை கண்டறிந்து விட்டால் முற்றிலும் இதனை சரி செய்யலாம்.

    பேச்சு, மூச்சின்றி...

    சில குழந்தைகள் பிறக்கும்போது அழாமல் இருக்கும். அதற்கு பேச்சு, மூச்சு இருக்காது. அதுபோன்று இருந்தால் அந்த குழந்தைக்கு ஒரு வாரத்தில் மஞ்சள் காமாலை நோய் தாக்க வாய்ப்புண்டு. சில குழந்தைகளுக்கு பிறக்கும் போதே வலிப்பு வந்து விடும். எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு.

    அதனால் குழந்தை எடை குறை யாமல் இருக்க வேண்டும். பிறக்கும் போதே குழந்தை 2½ கிலோவுக்கு மேல் 3 கிலோ 900 கிராமுக்கும் குறைவாக இருக்க வேண்டும். 4 கிலோவும் அதற்கு மேலும் குழந்தையின் எடை இருப்பது நல்லதல்ல.

    அதிக எடை உள்ள குழந்தை

    அவ்வாறு 4 கிலோவுக்கும் அதிக எடை உள்ள குழந்தைகளை எல்.ஜி.ஏ. குழந்தை என்று மருத்துவம் கூறுகிறது. தாய்க்கு கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் இருந்தாலும் இதுபோன்ற உடல் பருமனுள்ள குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு. இவ்வாறு அதிக எடை கொண்ட குழந்தைகளுக்கு இருதய கோளாறு, முதுகுதண்டில் பிரச்சினைகள் இருக்க வாய்ப்புண்டு.

    அதேபோல் கர்ப்ப காலத்தில் தாய்க்கு தைராய்டு பிரச்சினை இருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் தைராய்டு கோளாறு வர வாய்ப்புண்டு. அதனால் இதுபோன்ற தைராய்டு பிரச்சினை குழந்தைக்கு உள்ளதா? என கண்டறிந்து அதனை சரி செய்ய வேண்டும்.

    பெற்றோர்களுக்கு...

    பொதுவாக பிறவிக்குறைபாடுகளை கண்டறிய பெற்றோர்களுக்கு அதற்குரிய பக்குவம் அவசியம் வேண்டும். பெற்றோர்களில் பலர் குழந்தையின் வளர்ச்சிநிலை குறைகளை கண்டறியும் பக்குவம் இன்றி உள்ளனர். குழந்தை பிறந்த 3 மாதங்களில் தாயின் முகம் பார்த்து சிரிக்கவில்லையென்றால் அந்த குழந்தைக்கு ஏதோ பிரச்சினை உள்ளது என்று அர்த்தம்.

    அதனால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். மேலும் மேற்கூறிய 2 வருடத்துக்குள் குழந்தையின் வளர்ச்சி நிலையில் ஏதேனும் மாறுபாடு தோன்றினாலும் உடனே டாக்டரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும்.

    எதற்கெடுத்தாலும் சிலர் எங்களது பரம்பரையில் பிறந்த குழந்தைகள், தாமதமாகத்தான் குப்புற விழும், எழுந்து நிற்கும், நடக்கும், பேசும் என்று பெருமையாக கூறுவார்கள். அது முற்றிலும் தவறு. குழந்தையின் வளர்ச்சி நிலையில் அந்தந்த மாதத்தில் அது சிறப்பான வளர்ச்சியை பெற வேண்டும்.

    இல்லையெனில் வளர்ச்சி நிலையில் ஏதேனும் பிறவிக்குறைபாடு கூட இருக்கலாம். அதனால் டாக்டரிடம் சென்று குழந்தையை பரிசோதனைக்கு உட்படுத்துவது நல்லது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    பெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் விரைவில் மருத்துவரை பார்ப்பது மிகவும் நல்லது.
    நமது வீட்டில் தந்தை, குழந்தைகள், பெரியவர்கள் என யாரிடம் சின்ன உடல்நல சார்ந்த எதிர்மறை அறிகுறி தென்பட்டாலும் உடனே பதறி அடித்துக்கொண்டு மருத்துவம் செய்பவர்கள் பெண்கள் தான்.

    ஆனால் அவர்களுக்கு ஏதாவது நோயின் அறிகுறி தென்பட்டாலும் அதை பற்றி கவலைப்பட மாட்டார்கள். வீட்டில் உள்ள அனைவரை பற்றியும் கவலைப்படும் பெண்கள் தங்கள் உடல் நலன் பற்றி எந்த கவலையும் கொள்வதில்லை.

    பெண்கள் இப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் அறிகுறிகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் சில பின்னாட்களில் அபாயமான நோய்களை உண்டாக காரணியாக இருக்கலாம் என்பதை அவர்கள் அறிவதில்லை. அதை பற்றி இப்போது பார்க்கலாம்.

    * சில சமயங்களில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதிகமாக இரத்தப்போக்கு வெளிப்படும். அதே போல மாதவிடாய் நிற்கும் காலத்திலும் இவ்வாறு நடக்கலாம். இது போல இன்றி, அவ்வப்போது அதிகளவில் இரத்தப்போக்கு வெளிப்பட்டால் அது கட்டி, 35 வயதுக்கு மேல் புற்றுநோயாக கூட மாறலாம். உடலுறவுக்கு பிறகு இரத்தப்போக்கு ஏற்படுவது ஏதேனும் இன்பெக்ஷன் காரணமாக கூட இருக்கலாம்.

    * மிக வெண்மையாக அல்லது வெள்ளை நிறத்தில் பால் வடிதல் குழந்தை பெற்ற பிறகு இயல்பு. ஆனால், ஒரு மார்பில் மட்டும் பிரவுன் அல்லது இரத்த நிறத்தில் வடிதல் உண்டாவது மிகவும் அபாயமான அறிகுறி. இந்த நிலையை ஆங்கிலத்தில் "Intraductal Papillomas" என்று கூறுகின்றனர். இதை அறுவை சிகிச்சை மூலமாக தான் சரி செய்ய வேண்டும்.



    * மலம் கழிக்கும் போது இரத்தம் வெளிவருவதை கண்டால் சாதாரணமாக இருக்க வேண்டாம். இது இரைப்பை குடலில் இரத்தம் கசிதலின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதே நேரத்தில் மூச்சு திணறல், உடல் சோர்வு போன்றவற்றை உணர்ந்தால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

    * எல்லா மார்பு வலியும் மாரடைப்பு அல்ல. சில சமயங்களில் குமட்டல், அதிக வியர்வை, மூச்சு விட சிரமப்படுவது, கழுத்து வலி உண்டாவது போன்றவற்றுடன் சேர்ந்து மார்பு வலி உண்டானால் அது மாரடைப்பு உண்டாவதன் அறிகுறியாக இருக்கலாம்.

    * மச்சம் திடீரென பெரிதாவது, நிறம் மாறுப்படுவது, அரிப்பது போன்று இருந்தால் சரும மருத்துவ நிபுணரிடம் உடனே பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். இது சருமத்தில் ஏதேனும் அபாயத்தை உண்டாக்கலாம்.

    * மாதவிடாய் நாட்களில் இதுபோன்ற வலி மிகவும் சாதாரணம். ஆனால், கருப்பையில் கட்டி உண்டாகியிருந்தால் கூட இந்த வலி அதிகரிக்கும். உடலின் உள்ளேயே இரத்தம் கசிதல் உண்டாகும். இதனால் காய்ச்சல், உடல்சோர்வு போன்றவை அறிகுறிகளாக வெளிப்படலாம்.

    * சிலருக்கு பெண்ணுறுப்பு பகுதியில் அவ்வப்போது வெள்ளைப் படிதல் உண்டாகும், அது துர்நாற்றத்தை வெளிப்படுத்தும். இது சாதாரணமாக பெண்கள் மத்தியில் வெளிப்படும் ஒன்று தான். ஒருவேளை இது மஞ்சள் - பச்சை நிறத்தில், பெண்ணுறுப்பு பகுதியில் எரிச்சல் / வலியுடன் வெளிப்படுகிறது எனில் அது இன்பெக்ஷன் அல்லது பால்வினை நோய். கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.
    நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுகள் கருப்பையைச் சுத்தமாகவும், இடுப்பு எலும்புகள் வலுப்பெறவும், சினை முட்டை உருவாகவும், சினைப்பை, கருப்பைக் கழலைகள் உண்டாகாமல் தடுக்கவும் செய்தன.
    கர்ப்பப்பை கோளாறுகளின் அறிகுறிகள் :

    கருப்பை கோளாறுகள் பெண்கள் பூப்பு எய்திய நாள் முதல் தோன்ற ஆரம்பித்தாலும் பொதுவாக இந்நோய்கள் தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது கணைச்சூடு என்ற விதமாய்த் தொடங்குகின்றன. பழங்கால பாட்டிகள் கணைச்சூட்டுக்கு கற்றாழைச் சாறு கலந்த எண்ணெயை வாரம் இருமுறை சாப்பிடக் கொடுப்பார்கள். இந்த முறையில் தற்போது சித்த மருத்துவத்தில் குமரி எண்ணெய் என்ற மருந்தை தயார் செய்துகொடுக்கப்படுகிறது.

    இந்த கணைச் சூடு பூப்பு எய்திய காலத்தில் கர்ப்பச்சூடாக மாறும். இதனால் ரத்தசோகை ஏற்படும். இதன் காரணமாக மாதவிலக்கு மாறுபாடு ஏற்படும். இதனால் கருப்பை சூடு ஏற்பட்டு வெள்ளை ஏற்படுகிறது. நம் சமூகத்தில் இருந்த நல்ல பழக்கங்களை நாம் கடைப்பிடிக்க மறந்து ஒவ்வொரு மருத்துவமனையாக ஒவ்வொரு நோயிற்காக தேடி அலைந்து கொண்டு இருக்கிறோம்.

    நம் சமுதாயத்தில் பெண் பூப்பு எய்தவுடன் நாள் தோறும் ஒரு முட்டையை உடைத்து வாயில் ஊற்றி பின்னர் முட்டை ஓட்டில் உள்ள அளவுக்கு நல்லெண்ணெய் ஊற்றி குடிக்க வைப்பார்கள். இன்னும் சில பேர் உளுத்தமாவில் செய்த உணவுப் பண்டங்களை நாள்தோறும் சாப்பிடச் செய்வார்கள். உளுத்தம் கஞ்சி, புழுங்கல் அரிசி கஞ்சி, கேழ்வரகு அடை, முருங்கைக் கீரை பிசைந்த சாதம் போன்றவற்றைச் சாப்பிட்ட நமது முன்னோர்களின் பேரக் குழந்தைகள், இப்போதைய நாகரீக வாழ்க்கையில் “பாஸ்ட் புட்” கலாசார உணவுகளைச் சாப்பிட்டு உடலாகிய கோயிலை அழித்துக் கொண்டு வருகிறோம்.



    நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுகள் கருப்பையைச் சுத்தமாகவும், இடுப்பு எலும்புகள் வலுப்பெறவும், சினை முட்டை உருவாகவும், சினைப்பை, கருப்பைக் கழலைகள் உண்டாகாமல் தடுக்கவும் செய்தன; இதுபோன்ற உணவு முறைகளை பூப்பெய்த காலத்தில் பயன்படுத்தி வந்தால் குழந்தை பேற்றை ஒரு இயல்பான காரியமாகச் செய்ய முடியும்.

    முளை கட்டிய பயறு வகை, கொண்டைக் கடலை சாப்பிட்டு வந்தால் ஆண் பெண் மலட்டுத்தன்மை நீங்கும். கால் கிலோ உளுந்தை நெய்யில் வறுத்து மாவாக்கி பனங்கற்கண்டு, ஏலக்காய் நெய்சேர்த்து உருண்டை பிடித்து நாள்தோறும் ஒரு உருண்டை வீதம் மாதத்தில் 10 நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை பூரண வளர்ச்சி பெறும். தேனும் தினை மாவும் சேர்த்து உருண்டை செய்து சாப்பிட கருப்பை பலம் உண்டாகும்.

    நாள்தோறும் ஒரு முட்டை சேர்த்துக் கொண்டால் இடுப்பு எலும்பு, சினைப்பைகள் வலுப்பெறும். நல்ல நாள், விருந்து விழாக்கள் போன்றவற்றுக்கு மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்குச் சாப்பிடும் மருந்துகள் சினைப்பைக்கட்டி, கருப்பைக்கட்டி போன்றவைகள் உருவாகி மாத விடாயின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்படும். இதனால் கரு உண்டாவதில் சிக்கல் ஏற்படுகிறது.
    பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் மிகவும் கவனமாக இருக்குமாறு சொல்வார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். அந்த பிரச்சனைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு, ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தால், அது அவர்களுக்கு ஒரு மறு ஜென்மம்.

    மேலும் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் மிகவும் கவனமாக இருக்குமாறு சொல்வார்கள். இதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் எப்படி ஒரு கட்டிடத்திற்கு அடித்தளம் நன்றாக இருந்தால் தான் அக்கட்டிடம் வலிமையாக நீண்ட நாட்கள் இருக்குமோ, அதேப்போல் குழந்தைக்கு உருவாகும் உறுப்புக்கள் அடிப்படையிலேயே ஆரோக்கியமாக இருந்தால் தான், குழந்தையின் வளர்ச்சி நன்கு இருக்கும்.

    அதிலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் தான் குழந்தைக்கு சில முக்கிய உறுப்புக்களும், வடிவமும் கிடைக்கும். ஆகவே இக்காலத்தில் சற்று கவனமாக இருந்தால், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம். இங்கு கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் எந்தெந்த உறுப்புக்கள் வளரும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

    கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்தால், குழந்தையின் இதயத்துடிப்பை நன்கு கேட்கலாம். இதயம் இக்காலத்தில் தான் உருவாகும் என்பதால், சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், குழந்தை இதய பிரச்சனையுடன் பிறக்கக்கூடும்.

    மனித உடலில் மூளை மிகவும் முக்கியமான உறுப்பு. இந்த மூளையும் முதல் மூன்று காலத்தில் தான் உருவாகும். மேலும் ஒவ்வொரு மூன்று மாத காலத்திலும் இம்மூளையானது வளர்ச்சியடையும். இருப்பினும், கர்ப்பிணிகள் ஆரம்பத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

    முதல் மூன்று மாத காலத்தில் உருவாகும் மற்றொரு முக்கியமான ஒன்று தான் சிறு மூட்டுகள் உருவாவது. இக்காலத்தில் மூட்டுகள் உருவாகி, அதைத் தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் மூன்று மாத காலத்தில் மூட்டுகளைச் சுற்றி தசைகள் உருவாகும்.

    மூட்டுகள் உருவாவதைத் தொடர்ந்து கைகள், கால்கள் மற்றும் விரல்களுடன் நகங்களும் உருவாக ஆரம்பமாகும். எனவே இக்காலத்தில் கர்ப்பிணிகள் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வந்தால், இவற்றின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

    சில கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாத காலத்தில் மலச்சிக்கல் ஏற்படக்கூடும். எனவே மருத்துவரை அணுகி, அதற்கான மருந்துகளை தவறாமல் பிரசவம் நடைபெறும் வரை எடுத்து வருவது நல்லது. ஏனெனில் மலச்சிக்கல் இருந்தால், அதனாலேயே பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதுமட்டுமின்றி சில பெண்கள் முதல் மூன்று காலத்தில் வாந்தி, மயக்கம், கடுமையான சோர்வை உணர்வார்கள். ஆகவே அதற்கேற்ற உணவை தவறாமல் எடுத்து வருவது, சற்று ஆறுதலாக இருக்கும்.

    முதல் மூன்று மாத காலத்தில் கர்ப்பிணிகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு மாற்றங்களையும், பிரச்சனைகளையும் சந்திப்பார்கள். இதற்கு ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகள் தான் காரணம். அதுமட்டுமின்றி, இக்காலத்தில் மார்பகங்களின் அளவு அதிகரிப்பதோடு, மென்மையாகவும் இருக்கும்.
    ஆண்களுக்கு பித்த நோய் வந்தாலும் பெண்களுக்கு இந்த நோய் அதிக அளவில் வருகிறது. இந்த பிரச்சனைக்கு வீட்டில் கிடைக்கும் பொருளை கொண்டு தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
    ஆண்களுக்கு பித்த நோய் வந்தாலும் பெண்களுக்கு இந்த நோய் அதிக அளவில் வருகிறது. அதிகம் காபி, டீ போன்றவை அருந்துவதாலும் பித்த நோய் வரும்.

    பித்த நோய் பெண்களை மிகவும் சிரமப்படுத்திவிடும். காலையில் வெறும் வயிற்றில் வாந்தி, உடலில் என்ன செய்கிறதென்றே சொல்ல முடியாத நிலையை ஏற்படுத்தும். பசிக்காது, சரியாக தூக்கம் வராது. தலைசுற்றல் வாந்திவருவது போன்ற நிலை இருந்து கொண்டே இருக்கும்.

    இதற்கு சிறந்த மருந்தாக கருதப்படுவது கீழே காணும் மருந்துதான் இதை மிஞ்சிய வைத்தியம் பித்தத்திற்கு எதுவுமில்லை.

    சீர் + அகம் = சீரகம். அகத்தை அதாவது நமது இரைப்பையை சீராக இயங்க வைக்கும் ஓர் முக்கியமான உணவு பொருள் சீரகம். காரச் சுவையுடைய சீரகம், ஜீரணத்தை தூண்டும் இயல்புடையது. மேலும் பல மருத்துவ குணங்கள் சீரகத்தில் நிறைந்துள்ளது.

    சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். பித்த நோய்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், அதிக உடல் சூடு, பசியின்மை இப்படி பல நோய்களுக்கு சீரகம் சிறந்த மருந்தாகிறது.

    மேலும் அரைக் கீரைச் சாறில் இஞ்சியை அரைத்துக் குடித்தால் பித்த நோய் குறையும்.
    தாம்பத்தியத்தில் தடுமாற்றம், உடல் நலக் குறைவு, உள்ளத்தில் மகிழ்ச்சியின்மை, மழுங்கிய உணர்வுகள் போன்றவை தென்பட்டால் உடனடியாக உணவு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
    தாம்பத்தியத்தில் தடுமாற்றம், உடல் நலக் குறைவு, உள்ளத்தில் மகிழ்ச்சியின்மை, மழுங்கிய உணர்வுகள் போன்றவை தென்பட்டால் உடனடியாக உணவு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    உடலின் சீரான ஹார்மோன் சுரப்புக்கும் திடமான தேகத்துக்கும் சத்தான உணவு அவசியம். திருமணத்துக்குத் தயாராகும் ஆண், பெண் இருவருக்கும் சிறப்பு உணவு வகைகளைச் சில மாதங்களுக்கு முன்பிருந்தே வழங்கும் வழக்கம் முன்பு பரவலாக உண்டு. பெண்ணின் மாதாந்திரச் சுழற்சி சீராக அமையவும் கர்ப்பப்பை வலுவூட்டலுக்கும் சிறப்பு உணவைக் கொடுப்பது இன்றும் பல இடங்களில் வழக்கத்தில் இருக்கிறது. ஆணோ பெண்ணோ ரத்தசோகை இருந்தால், அவர்களது ஆரோக்கியம் சரிவதுடன் இச்சைக்கான உணர்வுகள் மட்டுப்படவும் செய்யும். அதேபோல ஆணுக்கான டெஸ்ட்டோஸ்டீரோன், பெண்ணுக்கான ஈஸ்ட்ரோஜன் போன்ற தனித்துவ ஹார்மோன்கள் சுரப்புக்கும் உணவுத் தேர்வில் கவனம் அவசியம்.

    தினசரி ஒரு கீரை சாப்பிடுவது நல்லது. கால்சியம், வைட்டமின் டி சத்து அடங்கிய முருங்கைக் கீரையில் பொரியல் அல்லது சூப் வைத்துச் சாப்பிடலாம். மணத்தக்காளி, வயிற்றின் உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தும். வலுவான வயிறு உடலின் ஒட்டுமொத்த வலுவைச் சொல்லும். சுண்டைக்காய், வேர்க்கடலை, முளைகட்டிய பயறு வகைகள், முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடலாம்.

    இவற்றில் முக்கியமானது சாரைப் பருப்பு. இதை ஒரு டீஸ்பூன் தண்ணீரில் ஊறவைத்து, பொங்கலில் மிளகு சேர்ப்பது போல அரிசியில் கலந்து சமைத்துச் சாப்பிடலாம். உயிரணுக்களைப் பெருக்கும் இதை அரபு நாடுகளில் கஞ்சியாக்கிப் பரிமாறுகிறார்கள். பிரியாணியில்கூட அவர்கள் பாதாம், பிஸ்தா சேர்ப்பார்கள். பாதாம் பருப்பில் சட்னி, துவையல் செய்து சாப்பிடலாம். உலர் பருப்புகளில் அக்ரூட் பருப்பு முக்கியமானது. பாதாம் பிசினை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் ஜவ்வரிசிக்குப் பதில் பாயசத்தில் சேர்க்கலாம்.

    முருங்கைப்பூவுடன் முந்திரி, தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்ந்து சட்னியாக அரைத்துச் சாப்பிடலாம். சாலாமிசிரி வேர், உடலுக்கு வலுச்சேர்ப்பதுடன் நலிந்த தேகத்துக்கு பொலிவை மீட்டுக் கொடுக்கும். இதை அரைத்து அரிசியுடன் சேர்த்துச் சாப்பிடுவார்கள். காய்ச்சலில் நீண்ட நாள் விழுந்தவர்கள் விரைவாக உடல் நலம் பெற இதைக் கொடுப்பார்கள். கோதுமைப் பாலில் இனிப்புகள் செய்யலாம். சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கிச் சாப்பிடுவதுகூட ஆண்களின் ஹார்மோன் சுரப்புகளைத் தூண்டும்.



    கிழங்கு ரகங்கள் அனைத்தும் உடலுக்கு வலுச்சேர்ப்பவை. இலங்கையில் திருமணத்துக்குத் தயாராகும் ஆணுக்குப் பனங்கிழங்கை ‘ஒடியல் கூழ்’ என்ற பெயரில் சமைத்துத் தருவார்கள். காராமணி, மொச்சை, பிஞ்சுக் கத்தரி, முருங்கைக் கீரை, வெங்காயம் ஆகியவற்றுடன் பனங்கிழங்கு மாவைக் கலந்து கிரேவியாகச் செய்வார்கள். ஆணுக்கு வீரியம் தரும் இந்த உணவைத் திருமணத்துக்கு ஒரு மாதம் முன்பாகவாவது பரிமாறுவார்கள். அசைவம் உண்பவர்கள் நாட்டுக்கோழி, காடை, கவுதாரி, கடல் உணவு ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். நண்டு இரு பாலினத்தவருக்கும் நரம்புகளை மீட்டி, உணர்வைப் பெருக்கித் துடிப்போடு வைத்திருக்கும்.

    பெண்கள் பருவமடைந்த நாள் தொடங்கி சிறப்பு உணவூட்டத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இம்பூரல் மூலிகையில் பச்சரிசி மாவு கலந்து அடை செய்து சாப்பிட்டுவர, மாதவிடாய் சுழற்சி சீராவதுடன் கர்ப்பப்பை பிரச்சினைகள் மட்டுப்படும். இந்த மூலிகையைத் தமிழக அரசு மாத்திரையாகவும் தயாரித்து வழங்குவதில் இருந்து இதன் முக்கியத்துவத்தை அறியலாம். அந்தக் காலத்தில், கல்யாண முருங்கை உள்ள வீட்டைத் தேடி பெண் எடுப்பார்கள். இந்த இலை, பல் பூண்டு, மிளகு ஆகியவற்றில் தலா மூன்றைச் சேர்த்தரைத்து பருவமடைந்த பெண்ணுக்கு மூன்று நாட்கள் தருவார்கள். கருமுட்டையைத் தகுதிப்படுத்தும் இந்த மருத்துவத்துக்கு இன்றும் ஈடில்லை. கல்யாண முருங்கையில் அடை செய்தும் சாப்பிடலாம்.

    சோற்றுக் கற்றாழையின் உள்ளே உள்ள சோற்றுப் பகுதியை ஜெல்லை எடுத்து ஏழு முறை நன்றாகக் கழுவி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் உதிரப்போக்கில் ஒழுங்கு பிறக்கும். மாதவிடாய் நேரத்து வயிற்று வலி மறையும். மாம்பழ சீசனில் அதன் கொட்டையை உடைத்து, பருப்பை மட்டும் ஒரு புட்டியில் சேகரித்து வைக்கலாம்.

    அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படும் நாட்களில் இந்தப் பருப்பைச் சுட்டு மோரில் கரைத்து ஒரு வேளை குடித்தாலே குணம்பெறலாம். உதிரப்போக்கு அதிகமாக இருப்பதும் நீண்ட ஒழுங்குக் குலைவும் கர்ப்ப பையை இறக்கம் காணச் செய்யும். மாதுளம்பழத்தை அடிக்கடி சாப்பிடுவதுடன், அதன் தோலைக் காயவைத்துப் பொடி செய்து சாப்பிடுவதும் மேற்கண்ட பிரச்சினைகளை இயற்கை வழியில் சரிசெய்யும். சோயா, இரட்டை பீன்ஸ், புரக்கோலி, காலிஃபிளவர், தேங்காய், சோம்பு, மல்லித்தழை போன்றவை பெண்களின் உணர்வுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.

    கணவன், மனைவி இடையே இயல்பான தாம்பத்திய ஓட்டம் துவண்டால், அவர்களது ஆர்வமின்மையின் பின்னணியில் பிரதான உடல்நலப் பாதிப்புகள் ஒளிந்திருக்கலாம். உடல் உபாதைகளாலும் கணவன் அல்லது மனைவி உறவைத் தள்ளிவைப்பார்கள். எனவே, தாம்பத்தியத்தில் ஆர்வமின்மை என்பது சாதாரணமாக ஒதுக்கக்கூடியதோ, சங்கடத்துக்கான சங்கதியோ அல்ல.
    கணவன் மனைவி தாம்பத்தியத்தில் சில நேரங்களில் நடக்கும் விஷயங்கள் பெண்களை வெறுப்படைய செய்யும். அந்த விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.
    முன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. முன்விளையாட்டுகள் பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு, செக்ஸூக்கு பெண் உறுப்பை தயார் செய்யும்.

    பெண்களுக்கு தாம்பத்தியத்தின் போது உச்சத்தை எட்டும்போது அவர்களுக்கு பிடித்தமான விஷயத்தை செய்வது அவர்களை முழுமையாக திருப்தியடையச் செய்யும்.

    அழுக்கான கைகள், வெட்டப்படாத நகங்கள், உடன் துர்நாற்றம் உள்ளிட்டவை தாம்பத்தியத்தின் போது பெண்களை வெறுப்படைச்செய்யும். அதனால் செக்ஸில் ஈடுபடும் முன் அடிப்படை சுகாதாரத்துடன் இருப்பது அவசியம்.

    தாம்பத்தியத்தின் ஈடுபடும் போது, முன்னாள் காதலியுடன் செக்ஸ் உறவு பற்றி பேசினால், பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. உண்மையாக இருக்கிறேன் என பலர் இந்த சிக்கலில் சிக்கி தவிக்கின்றனர்.

    ஆக்ரோஷமாக தாம்பத்தியத்தின் ஈடுபடுவது பெண்களுக்கு பிடிக்காது. அதனால் ஒவ்வொரு அசைவும் அவர்களுக்கு பிடிக்கும் படி பார்த்துக்கொள்வது அவசியம்.

    செக்ஸ் என்பது இருவழிச்சாலை, இருவரும் தங்களின் துணைக்கு பிடித்தபடி நடக்க வேண்டும். பெண்களை மட்டும் எல்லா விஷயங்களை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது.

    பெண்களின் உடலில் முடி இருக்கக்கூடாது என ஆண்கள் நினைப்பது போலவே ஆண்களின் உடலில் முடி இருப்பது பெண்களுக்கு பிடிக்காது. அதனால் சுத்தமாக இருப்பது அவசியம்.
    மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு உடல் எடையில் திடீர் ஏற்றம் இருப்பது உண்மைதான். அதற்கான காரணங்கள், தீர்வுகளை அறிந்து கொள்ளலாம்.
    மெனோபாஸ் பருவத்தில் பெண்களின் உடலில் மிக முக்கியமான ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் சுரப்பு கிடுகிடுவெனக் குறையும். ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்களைப் பல விதங்களிலும் பாதுகாக்கும் அரண். ஈஸ்ட்ரேஜென் குறைவதன் முதல் அறிகுறியாக அவர்களது உடலின் வளர்சிதை மாற்றம் மாறும். அதனால் உடல் எடையில் தாறுமாறான மாற்றங்கள் தெரியும்.

    வயதாவதன் காரணத்தால் தசைகளின் அடர்த்தி குறைந்து கொழுப்பு அதிகரிக்கும். இதனால் உடல் கலோரிகளை எரிக்கும் ஆற்றலில் மந்தத்தன்மை ஏற்படும். மெனோபாஸ் பருவத்தில் உள்ளவர்கள், வழக்கமான உணவுகளை உண்டுகொண்டு, உடற்பயிற்சிகளின் அளவை அதிகரிக்காமலிருந்தால் எடை அதிகரிப்பைத் தவிர்க்க முடியாது. வழக்கமாக உடற்பயிற்சிகள் செய்கிறவர்கள்கூட மெனோபாஸை நெருங்கும்போது அதை நிறுத்திவிடுகிறார்கள். அது தவறு.

    மெனோபாஸுக்குப் பிறகான எடை அதிகரிப்பு ஏன் கவனத்துக்குரியது?

    உயரத்துக்கேற்ற எடை இல்லாமல் அளவுக்கதிகமாக கூடும்போது அது எந்த வயதிலுமே ஆபத்தானதுதான். குறிப்பாக மெனோபாசுக்குப் பிறகு அப்படி எடை அதிகரிப்பதன் விளைவாக இதய நோய்கள், சர்க்கரை நோய், சுவாசப்பிரச்னைகள், புற்றுநோய் போன்றவற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
    தடுக்க என்ன செய்யலாம்?

    முடிந்த அளவுக்கு உடலுக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்வது மிகுந்த பலனளிக்கும். எடை தூக்கும் பயிற்சிகள் உடலை உறுதியாக்கி, கொழுப்பு சேர்வதைத் தடுக்கும். நடைப்பயிற்சி மிக நல்லது. வாரத்துக்கு 150 நிமிடங்கள் நடக்கலாம். 75 நிமிடங்கள் ஜாகிங் செய்யலாம்.

    30 வயதில் நீங்கள் சாப்பிட்ட மாதிரியே 50 வயதிலும் சாப்பிட்டு, எடை ஏறாமலிருக்க வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. மெனோபாஸை நெருங்கும்போது உணவுத்திட்டத்தில் மாற்றம் வேண்டும். பழங்கள், காய்கறிகள், முழுதானியங்களின் அளவைக்கூட்டி, கார்போஹைட்ரேட்டின் அளவைக் குறைக்க வேண்டும்.



    காபி, டீ உட்பட எதிலும் சேர்த்துக்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்க வேண்டும். மறைமுகமாக சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறுகள், கேக், பிஸ்கட், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் போலவே எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம்.

    சிலருக்கு நள்ளிரவில் பசிக்கும். அந்த நேரத்தில் என்ன சாப்பிடுவது எனத் தெரியாமல் சிப்ஸ், பிஸ்கட், நொறுக்குத்தீனிகள் எனக் கண்டதையும் சாப்பிடுவார்கள். அது தவறு. இரவு உணவு முடித்து 2 மணி நேரம் கழித்து ஒரு டம்ளர் பால் மற்றும் ஏதேனும் பழம் சாப்பிடுவது சிறந்தது.

    மெனோபாசின் முக்கிய தொந்தரவுகளில் ஒன்று தூக்கமின்மை. தூக்கம் பாதிக்கப்படும்போது பலரும் எதையாவது கொறிக்கத் தொடங்குகிறார்கள் என்கிறது ஆய்வொன்று. பகல் தூக்கம் தவிர்ப்பதன் மூலம் இரவில் முழுமையான தூக்கம் பெறலாம். தூங்கும் அறையும் சூழலும் இதமாக இருக்க வேண்டியதும் அவசியம்.

    மன அமைதியும் உதவும் எப்போதும் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு எடை அதிகரிக்கும். மன அழுத்தத்தின்போது கார்டிசால் ஹார்மோன் அதிகரிக்கும். வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேர அது காரணமாகிவிடும். லேசான மன அழுத்தம் எட்டிப் பார்க்கும்போதே புத்தகம் வாசிப்பது, தோட்ட வேலை, வீட்டை சுத்தம் செய்வது போன்றவற்றில் கவனத்தைத் திருப்பினால் அது அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.

    மெனோபாஸ் பாதிப்புகளுடன் எடை அதிகரிப்பும் கட்டுக்கடங்காமல் போவதாக நினைத்தால் உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். ஹெச்.ஆர்.டி எனப்படுகிற ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி தேவையா என்பதை மருத்துவர் முடிவு செய்து உங்களுக்குப் பரிந்துரைப்பார்.
    உங்கள் ஆரோக்கியம் மருத்துவமனையால் அல்ல, உங்கள் சமையல் அறையால்தான் பாதுகாக்கவும், தீர்மானிக்கவும்படுகிறது. அதனால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றால், உங்கள் சமையல் அறை சுத்தமாக இருக்கவேண்டும்.
    உங்கள் ஆரோக்கியம் மருத்துவமனையால் அல்ல, உங்கள் சமையல் அறையால்தான் பாதுகாக்கவும், தீர்மானிக்கவும்படுகிறது. அதனால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றால், உங்கள் சமையல் அறை சுத்தமாக இருக்கவேண்டும். அதிலும் நீங்கள் அடிக்கடி வயிற்றுப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறவராக இருந்தால், அதற்கு நிச்சயமாக உங்கள் சமையல் அறை சுகாதாரக்குறைவும் ஒரு காரணமாக இருக்கும். உணவு விஷத்தன்மையால் உருவாகும் புட் பாய்சன், அலர்ஜி, வயிற்றுக்கோளாறு, நோய்த் தொற்று, எலிக்காய்ச்சல் போன்ற பல்வேறு பாதிப்புகள் சமையல் அறை சுத்தமின்மையால்தான் ஏற்படுகின்றன.

    சமையல் அறையையும், சமையல் அறை பொருட்களையும் சுத்தமாக வைக்கவேண்டிய விதம் பற்றி பார்ப்போம்!

    பழங்கள் மற்றும் காய்கறிகளை பெரும்பாலும் கழுவித்தான் எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டும் போதாது. அவற்றை நறுக்க பயன்படுத்தும் கத்தியும் தூய்மையாக இருக்க வேண்டும். நறுக்கிய பழங்களை பரிமாறும் பாத்திரங்களையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டியது அவசியம். பச்சை காய்கறிகளை நறுக்கும்போது அதில் இருக்கும் நுண்கிருமிகள் கத்தியிலும், அரிவாள் மனையிலும் படிந்துவிடும். அதை கழுவாமல் அப்படியே வைத்திருந்தால் அவை பெருகிக்கொண்டே இருக்கும். அதே கத்தியை கழுவாமல் பயன்படுத்தும்போது அந்த நுண்கிருமிகள் புதிதாக வெட்டும் பொருளில் பதிந்து விடும். அவைகளை சாப்பிடும்போது, வயிற்றுக்குள் சென்று பல்வேறு விதமான நோய்களை உருவாக்கும்.

    சமையலறை ‘சிலாப்பை’ அடிக்கடி தூய்மைப்படுத்த வேண்டியது அவசியம். சுத்தமான துணியால் துடைத்து அழுக்கை போக்க வேண்டும். ‘ஸ்டவ்’ அடுப்பை சுற்றியுள்ள பகுதியை அவ்வப்போது சுத்தம் செய்வதும் அவசியம். சிலாப் போன்ற சுகாதாரமற்ற பகுதியில்வைத்து எந்த பொருளையும் நறுக்கக்கூடாது. அவ்வாறு நறுக்கி உட்கொள்ளப்படும் உணவுப் பொருட்களால் நோய்த்தன்மை உருவாகக்கூடும்.

    பாத்திரங்களை துலக்கும் சோப்புகள், பாத்திரங்களில் ஒட்டியிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சோப்பு சிறிதளவேணும் ஓரங்களில் ஒட்டியிருந்தால் நாம் சமைக்கும் உணவோடு கலந்து விடும். அதனால் பலவிதமான ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு, வயிற்றிற்குள் சென்று ‘புட் பாய்சன்’ ஆகிவிடும்.



    பாத்திரங்களை கொட்டிவைத்து கழுவும் ‘சிங்க்’கை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். அதை சுத்தமாக்கிய பின்பே அதில் பாத்திரங்களை வைத்து கழுவ வேண்டும். பிசுபிசுப்பு படிந்த பாத்திரங்களை அதிக நேரம் வைத்திருக்காமல் உடனே கழுவி துடைத்திடவேண்டும். உணவுப் பொருட்களை பாத்திரங்களில் பல மணி நேரம் வைத்திருந்தால் அதில் சிலவகை பாக்டீரியாக்கள் உருவாகும். அது நேரம் அதிகமாகும்போது பன்படங்கு பெருகும். இதனால் பல வித வயிற்று உபாதைகள் உருவாகும்.

    பெரும்பாலான வீடுகளில் எல்லா நேரமும் ‘சிங்க்’கில் தண்ணீர் தேங்கிக்கிடக்கும். அவ்வாறு தண்ணீர் தேங்கக்கூடாது. அவ்வப்போது சிங்க்கை கழுவி, உலரச் செய்யவேண்டும். அதனை கழுவுவதற்கென்று ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் கடைகளில் உள்ளன. அவற்றை வாங்கி பயன்படுத்துங்கள். துலக்கிய பாத்திரங்களில் இருக்கும் நீரை வடித்து, சில மணி நேரம் வெயிலில் காயவைத்த பின்பே பயன்படுத்த வேண்டும். வெயில் நல்ல கிருமி நாசினி. சமையலறைகளில் ஜன்னல்களை திறந்து வைத்து சூரியன் உள்ளே படும்படி இருக்க வேண்டும். அப்போதுதான் நோய்க்கிருமிகள் அழியும்.

    கெட்டுப் போன காய்கறிகள், பழங்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அவற்றை குப்பையில் போட்டு விடவேண்டும். ரொட்டி, வெல்லம், பழ வகைகளின் மேற்புறத்தில் வெள்ளை படிந்த பூசனம் பரவி இருந்தால் அந்த பகுதியை மட்டும் வெட்டி நீக்கிவிட்டு மீதமுள்ளதை சாப்பிடுவது நல்ல பழக்கம் இல்லை. இந்த பூசனம் என்பது ஒரு பொருள் மீது படர்ந்து விட்டால் அந்த பொருளின் உட்பகுதியிலும் பரவியிருக்கும் என்பதை உணருங்கள்.

    பழைய மாவு, ரவை போன்றவற்றில் வண்டு, கிருமிகள் தோன்றி விட்டால் அதை சலித்து காயவைத்து மறுபடியும் பயன்படுத்தாதீர்கள். ஒரு கிருமி வெளியேறும் போது பல முட்டைகளை வைத்து விட்டுத்தான் போகும். அவை கண்ணுக்குத் தெரியாத கிருமிகள். சலித்தாலும் நீங்காது. ஆரோக்கிய வாழ்வின் ரகசியமே சுத்தமான கிச்சனில் இருந்து தான் தொடங்குகிறது. இதை தெரிந்து கொண்டால் நோய்களை நிரந்தரமாக உங்களிடம் இருந்து அகற்றலாம்.

    ×