என் மலர்tooltip icon

    சமையல்

    • இந்த வெங்காய பஜ்ஜி தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
    • இன்று இந்த பஜ்ஜி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    வெங்காயம் - 2

    கடலை மாவு - 1/2 கப்

    அரிசி மாவு - 1/4 கப்

    காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    ஓமம் - 1/4 டீஸ்பூன்

    பேக்கிங் சோடா - 1 சிட்டிகை

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    தண்ணீர் - தேவையான அளவு

    உப்பு - சுவைக்கேற்ப

    செய்முறை:

    * வெங்காயத்தை தோல் நீக்கி வட்டமாக வெட்டிகொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு போட்டு அதனுடன் ஓமம், மிளகாய் தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, நீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காய துண்டுகளை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், அருமையான வெங்காய பஜ்ஜி தயார்.

    • தோசையில் பல வகைகள் உள்ளன.
    • இன்று அதில் ஒரு வகையான கார தோசையை செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பழுத்த தக்காளி - மூன்று,

    பெரிய வெங்காயம் - ஒன்று,

    பூண்டு பல் - 5, வர

    மிளகாய் - 10,

    கொத்தமல்லி - சிறிதளவு,

    உப்பு - தேவையான அளவிற்கு,

    நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,

    தோசை மாவு - தேவையான அளவு.

    செய்முறை:

    தோசை சுட்டு அதன் மீது இந்த சட்னியை தடவி வேக வைத்து எடுத்தால் காரசாரமான கார தோசை ரெடி ஆகிவிடும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லிவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்சியில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, பூண்டு, வர மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் ஒரு வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் இந்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்க வேண்டும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வெந்ததும் அதன் மீது அரைத்த சட்னியை எல்லா இடங்களிலும் படும்படி தடவி 2 நிமிடம் மூடி வைத்தால் போதும்.

    மொறுமொறு காரசாரமான மதுரை ஸ்பெஷல் கார தோசை தயார் ஆகிவிடும்.

    இதற்கு சட்னி எதுவுமே தேவையில்லை, இருப்பினும் நீங்கள் விருப்பப்பட்டால் தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

    • இந்த வடையை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
    • டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வடை.

    தேவையான பொருட்கள் :

    பிரெட் துண்டுகள் - 6,

    உளுத்தம் பருப்பு - 100 கிராம்,

    வெங்காயம் - 2,

    இஞ்சி - சிறு துண்டு,

    பச்சை மிளகாய் - 1,

    கறிவேப்பிலை - சிறிதளவு,

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பிரெட்டை பொடித்துக் கொள்ளவும்.

    உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும்.

    அரைத்த மாவுடன் பிரெட் தூள், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு பிசையவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான பிரெட் வடை ரெடி.

    • உப்புமா என்றாலே சிலருக்கு முகம் சுருங்கிவிடும்.
    • இட்லி உப்புமாவை செய்து கொடுங்க மிச்சமின்றி கடாய் காலியாகும்.

    தேவையான பொருட்கள் :

    இட்லி - 7

    நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்

    கடுகு - அரை டீஸ்பூன்

    உளுந்து - 1 டீஸ்பூன்

    கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன்

    ப.மிளகாய் - 3

    வேர்க்கடலை - சிறிதளவு

    முந்திரி - 10

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

    சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்

    மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    இட்லியை நன்கு உதிரி உதிரியாக உதிர்த்து வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி தழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் வேர்க்கடலை, முந்திரி சேர்த்து பொன்னிறமாக மாறியதும் நறுக்கிய சின்ன வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு சாம்பார் பொடி மற்றும் மிளகுப்பொடி சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.

    அடுத்து அதில் உதிர்த்து வைத்திருக்கும் இட்லியை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து உதிரி உதிரியாக வரும் வரை கிளறவும்.

    உதிரியாக வந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

    அவ்வளவுதான் இட்லி உப்புமா ரெடி... சுட சுட பரிமாறுங்கள்.

    • ரவையில் உப்புமா, கிச்சடி செய்து இருப்பீங்க.
    • இன்று ரவையில் சூப்பரான வடை செய்யலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    ரவை - 1 கப்

    அரிசி மாவு - 1/4 கப்

    கொத்தமல்லி - 1/2 கப்

    கறிவேப்பிலை - 1/2 கப்

    பச்சை மிளகாய் - 6

    வெங்காயம் - 2

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு பௌலில் ரவை மற்றும் அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் உப்பு சேர்த்து கலந்து, பின் 1 டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெய் ஊற்றி, கரண்டி கொண்டு நன்கு கிளறி விட வேண்டும்.

    பிறகு அதில் பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, மெதுவாக தண்ணீர் ஊற்றி, வடை பதத்திற்கு கலந்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். ஏனெனில் ரவை ஊறும் போது இன்றும் திக்கான பதத்தில் வரும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

    பின் பிசைந்து வைத்துள்ள கலவையை எடுத்து, வடை போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சூப்பரான ரவா வடை ரெடி!

    • முளைகட்டிய கடலை பருப்பை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பின் அளவு குறையும்.
    • கடலை பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச்சத்து அதிகமுள்ளது.

    தேவையான பொருட்கள் :

    கடலைப்பருப்பு - 150 கிராம்,

    பெரிய வெங்காயம் - 2 ,

    பெரிய தக்காளி - ஒன்று,

    கரம் மசாலாத் தூள் - ஒரு டீஸ்பூன்,

    இஞ்சி – பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 5,

    லவங்கம், பட்டை, ஏலக்காய் – தலா 2,

    பிரிஞ்சி இலை - ஒன்று,

    சோம்பு - ஒரு டீஸ்பூன்,

    கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு,

    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,

    மிளகாய்த் தூள் - விருப்பத்திற்கேற்ப,

    பொட்டுக் கடலை மாவு - 3 டீஸ்பூன்,

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலைப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

    இட்லித் தட்டில் எண்ணெய் தடவி இந்தக் கலவையை வைத்து இட்லி போல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து, சிறிது நேரம் வதக்கியவுடன், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.

    பிறகு அரைத்த தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

    பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கொதி வந்தவுடன், வேக வைத்த கடலைப் பருப்பை ஒன்றிரண்டாக உதிர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி சிறிது நேரம் கொதிக்க விடவும்.

    கடைசியில் பொட்டுக் கடலை மாவை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.

    இதை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, ஆப்பத்துடன் பரிமாறலாம்.

    • மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ஸ்நாக்ஸ்.
    • கோதுமை மாவில் இன்று வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - ஒரு கப்,

    ரவை - அரை கப்,

    பச்சரிசி மாவு - 3 ஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு,

    தயிர் - அரை கப்,

    தண்ணீர் - ஒன்றரை கப்,

    பச்சை மிளகாய் - 2,

    பெரிய வெங்காயம் - ஒன்று,

    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,

    மிளகு பொடித்தது - ஒரு டீஸ்பூன்,

    நறுக்கிய கொத்த மல்லித்தழை,

    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,

    சீரகம் - அரை டீஸ்பூன்,

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,

    சமையல் சோடா - கால் டீஸ்பூன்.

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் ரவை, தயிர், பச்சரிசி மாவு, தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் விட்டு கெட்டியாக கட்டிகள் இல்லாமல் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

    இந்த கலவையுடன் பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி துருவல், மிளகைத் தூளாக இல்லாமல் இடித்து சேருங்கள்.

    அதனுடன் சீரகத்தை தாளித்து சேருங்கள்.

    இவற்றுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், பேக்கிங் சோடா எனப்படும் சமையல் சோடாவை சேர்த்து கொள்ள வேண்டும்.

    விருப்பம் இல்லை என்றால் இவற்றை தவிர்த்து விடுங்கள். இந்த எல்லா பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு கெட்டியாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    தண்ணீர் இதற்கு மேல் அதிகம் எதுவும் சேர்க்க கூடாது. பின்னர் ஒரு மூடி போட்டு 10 நிமிடம் நன்கு ஊற விட்டு விடுங்கள். அப்போது தான் ரவை ஊறி இன்னும் மாவு கெட்டியாகும்,

    அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் வடை சுடும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொதித்ததும் மீடியம் ஃபிளேமில் வைத்துக் கொண்டு ஒரு கரண்டி மாவை எடுத்து மெதுவாக எண்ணெயில் ஊற்றுங்கள்.

    அது அப்படியே பொங்கி மேலே எழும்பி வந்து மிதக்கும். பிறகு இருபுறமும் சிவக்க எல்லா வடைகளையும் இதே போல சுட்டு எடுத்து டீயுடன் அல்லது சாப்பாட்டுடன் கூட வைத்துக் கொண்டு சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும்.

    சூப்பரான கோதுமை வடை ரெடி.

    • நீரிழிவு நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிகுந்த உணவாக கோதுமை இருக்கிறது.
    • கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1/2 கப்

    கோதுமை மாவு - 1/4 கப்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 1

    கறிவேப்பிலை - சிறிது

    சீரகம் - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தண்ணீர் அல்லது மோர் - தேவையான அளவு

    செய்முறை :

    * ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் அல்லது மோர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான கேழ்வரகு கோதுமை தோசை ரெடி!!

    • 'கிரேப்' என்பது பல மெல்லிய பான் கேக்குகளை ஒன்றாக அடுக்கி செய்யப்படும் கேக் வகையாகும்.
    • இனிப்பு சுவைக் கொண்ட 'வாழைப்பழ கிரேப் கேக்' எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.

    தேவையான பொருட்கள்:

    வாழைப்பழம் - 4

    முட்டை - 2

    எண்ணெய் - 4 தேக்கரண்டி

    உப்பு - ¼ தேக்கரண்டி

    மைதா மாவு - 250 கிராம்

    பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி

    கோகோ பவுடர் - 5 கிராம்

    கெட்டியாக காய்ச்சிய பால் - 250 மில்லி

    பிரெஷ் கிரீம் - 250 மில்லி

    சர்க்கரை - 25 கிராம்

    சாக்லேட் துண்டுகள் - தேவையான அளவு

    செய்முறை

    * நன்றாகப் பழுத்த 2 வாழைப்பழத்தை மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். மீதம் இருக்கும் வாழைப்பழத்தை சிறு சிறு வில்லைகளாக வெட்டிக்கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் முட்டை, எண்ணெய், அரைத்த வாழைப்பழம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் கோகோ பவுடர், மைதா மாவு, பேக்கிங் பவுடர் மூன்றையும் கொட்டி சலித்துக்கொள்ளவும்.

    * முட்டைக் கலவையில் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும். பின்பு அந்தக் கலவையில் காய்ச்சிய பாலை சிறிது சிறிதாக ஊற்றி தோசை மாவு பதத்துக்கு வரும் வரை நன்றாகக் கலக்கவும்.

    * அதனை மூடி, குளிர்சாதனப் பெட்டியில் 2 மணி நேரம் வைக்கவும்.

    * பிறகு நான்-ஸ்டிக் தவாவில், சிறு சிறு அடைகளாக மிதமான தீயில் சுட்டெடுக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் பிரெஷ் கிரீம், சர்க்கரை சேர்த்து, எக் பீட்டர் கொண்டு கிரீம் பதத்திற்கு வரும் வரை 'பீட்' செய்யவும்.

    * வாழைப்பழ அடையின் மேல், தயார் செய்த பிரெஷ் கிரீமைத் தடவி அதன் மேல் வெட்டப்பட்ட வாழைப்பழத்தை வைக்கவும்.

    * பின்னர் மீண்டும் அதன் மேல் பிரெஷ் கிரீமைத் தடவவும்.

    * இதே போன்று, ஒன்றன் மீது ஒன்றாக வாழைப்பழ அடைகளை அடுக்கவும்.

    * பின்பு அந்த அடுக்கின் மீது உருக்கிய சாக்லேட் ஊற்றி அலங்கரிக்கவும்.

    * இப்பொழுது சுவையான 'பனானா கிரேப் கேக்' தயார்.

    • கம்பில் அரிசியை விட எட்டு மடங்கு இரும்புச்சத்து உள்ளது.
    • கம்பு சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஏற்றது.

    தேவையான பொருட்கள்

    கம்பு - 1 கப்

    பால் -1 ½ கப்

    தயிர் ½ கப்

    கடுகு - சிறிதளவு

    உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்

    பச்சை மிளகாய் - 1

    காய்ந்த மிளகாய் - 2

    இஞ்சி - 1 துண்டு

    பெருங்காயம் - 1 ஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - 1 கொத்து

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    * பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    * கம்பை புடைத்து சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு, ரவைப் பதத்தில் உடைத்து கொள்ளவும்.

    * உடைத்த கம்புடன் ஐந்து கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் மிதமான தீயில் வேக வைக்கவும். 4 விசில் வந்ததும் இறக்கி, பால் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், சேர்த்து தாளித்த பின் அதனுடன் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கி, கம்பு சாதத்தில் சேர்க்கவும்.

    * கடைசியாக, உப்பு, தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான கம்பு தயிர் சாதம் ரெடி.

    • தூதுவளை கீரையை நெயில் வதக்கித் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சு சளி நீங்கும்.
    • ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் கட்டாயம் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    தேவையான பொருட்கள் :

    தூதுவளை இலைகள் - 10.

    பூண்டு - 5 பல்,

    தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,

    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா - தலா கைப்பிடியளவு

    உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு,

    துளசி இலைகள் - சிறிதளவு,

    எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,

    தோலுரித்த சின்ன வெங்காயம் - 10.

    செய்முறை:

    சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் தூதுவளை இலைகள், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா, வெங்காயம், துளசி இலைகள், தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    பிறகு இறக்கி வடிகட்டி மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து சூடாக பருகவும்.

    • 'ஷாய் துக்கடா' முகலாய மன்னர்களின் விருப்பமான இனிப்பு வகையாகும்.
    • ஐதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த இனிப்பு பிரபலம்.
    • இந்த இனிப்பு ரம்ஜான், ஹோலி, தீபாவளி நாட்களில் சுவைக்கப்படுகிறது.

    தேவையான பொருட்கள்:

    பால் - 1 லிட்டர்

    சர்க்கரை - 150 கிராம்

    ஏலக்காய் பொடி - 2 ஸ்பூன்

    ரொட்டித் துண்டுகள் - 6

    நெய் - தேவைக்கேற்ப

    பொடித்த பாதாம், முந்திரி, பிஸ்தா, திராட்சை தண்ணீர் - தேவையான அளவு

    குங்குமப்பூ - 2 சிட்டிகை

    செய்முறை:

    ரொட்டித் துண்டுகளின் ஓரங்களை நீக்கி முக்கோண வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

    அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, மிதமான தீயில் நன்றாக சூடுபடுத்தவும்.

    சிறிய கிண்ணத்தில் சிறிது பாலை ஊற்றி, அதில் குங்குமப்பூவைப் போட்டு ஊற வைக்கவும்.

    அடுப்பில் இருக்கும் பால் பாதி அளவாக சுண்டியதும், அதில் குங்குமப்பூ கலந்த பாலை ஊற்றிக் கலக்கவும்.

    பின்பு அதில் நெய்யில் வறுத்த பாதாம் பிஸ்தா, முந்திரி மற்றும் திராட்சை சேர்த்துக் கிளறவும்.

    மற்றொரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.

    வெட்டப்பட்ட ரொட்டித் துண்டுகளை நெய்யில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

    பின்பு அவற்றை கொதிக்க வைத்த சர்க்கரை நீரில் நன்றாக தோய்த்து எடுக்கவும்.

    ஒரு தட்டில் பால் கலவையை ஊற்றி, அதன் மீது ரொட்டித் துண்டுகளை வைத்து, அவற்றின் மீது மீண்டும் பால் கலவையை ஊற்றவும்.

    அதன் மேல் நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் திராட்சை தூவி பரிமாறவும்.

    ஷாய் துக்கடாவை சூடாகவும், குளிர்ச்சிபடுத்தியும் சாப்பிடலாம்.

    ×