என் மலர்tooltip icon

    சமையல்

    • குழந்தைகளுக்கு சத்தான ரெசிபிகளை செய்து கொடுப்பது உடலுக்கு நல்லது.
    • பாசிப்பயறில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாசிப்பயறு - அரை கப்

    கருப்பட்டி - 300 கிராம்

    சுக்குத்தூள் - அரை டீஸ்பூன்

    ஏலக்காய் - 3

    உப்பு - கால் டீஸ்பூன்

    செய்முறை:

    பாசிப்பயறை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.

    வெந்ததில் பாதியை எடுத்து தண்ணீர் வடித்து மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.

    கருப்பட்டியைத் தூளாக்கி கனமான அடிப்பகுதியுள்ள வாணலியில் சேர்த்து 300 மில்லி தண்ணீர் விட்டுக் காய்ச்சவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.

    வடிக்கட்டிய கருப்பட்டி சிரப்பை மீண்டும் அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். இத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கவும்.

    இதில் வேகவைத்து அரைத்த பயறுக் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். தேவையெனில், சிறிது தண்ணீர் ஊற்றி, கஞ்சி பதத்துக்குக் கொண்டு வரவும்.

    4 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து உப்பு சேர்த்துக் கஞ்சியைக் கொதிக்க விடவும்.

    அடுத்து அதில் வெந்த பயறைச் சேர்த்துக் கலந்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கினால், சுவையான கருப்பட்டிக் கஞ்சி தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இது நாண், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
    • மஷ்ரூம் சுக்காவின் சுவை மட்டன் சுவைக்கு நிகராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    மஷ்ரூம் - 200 கிராம்

    வெங்காயம் - 1

    சோம்பு - 1 ஸ்பூன்

    மிளகு - 1 ஸ்பூன்

    சீரகம் - 1 ஸ்பூன்

    தனியா - 1 ஸ்பூன்

    வர மிளகாய் - 3

    பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

    கறிவேப்பில்லை - 2 கொத்து

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை:

    மஷ்ரூமை அலசி விட்டு ஒரே மாதிரியான அளவில் பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு கடாயில் மஷ்ரூமைகளை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வரும் வரை வேக வைத்து அடுப்பில் இருந்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து மஷ்ரூம்களில் இருக்கும் அதிக தண்ணீரை பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து கடாய் சூடானவுடன் ( வெறும் கடாயில்) மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, தனியா, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்துக் கொண்டு அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு மிக்சிஜாரில் வறுத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து அதில் சிறிது வெங்காயமும் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பின் மீதமுள்ள வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரை வதக்கி விட்டு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து அதன் காரத் தன்மை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.

    மசாலாக்களின் பச்சை வாசனை சென்ற பிறகு, வேக வைத்த மஷ்ரூம்களை சேர்த்து வதக்கி விட்டு, உப்பு தூவி நன்றாக பிரட்டி எடுக்க வேண்டும்.

    கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து , கலவை சுண்டி வரும் வரை வதக்கி விட்டு பின் அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி தூவு பரிமாறவும்.

    இப்போது சூப்பரான மணக்க மணக்க மஷ்ரூம் சுக்கா ரெடி!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    பெண்கள் தினமும் எள் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    எள்ளு - 1/4 கப்

    துருவிய தேங்காய் - 1/2 கப்

    பூண்டு - 4 பற்கள்

    இஞ்சி - 1 துண்டு

    வரமிளகாய் - 7

    புளி - 1 எலுமிச்சை அளவு

    கடுகு-1 /2 ஸ்பூன்

    உளுந்தம் பருப்பு-1 ஸ்பூன்

    கறிவேப்பிலை-1 கொத்து

    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

    நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    இஞ்சி மற்றும் பூண்டு பற்களை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் எள்ளு விதைகளை சேர்த்து தீயினை சிம்மில் வைத்து வதக்கி விட வேண்டும்.

    எள் வதங்கி நன்றாக வாசனை வந்த பிறகு, அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். இஞ்சி பூண்டின் பச்சை வாசனை சென்ற பிறகு,புளி சேர்த்து வதக்கி விட வேண்டும்.

    இப்போது இதில் வரமிளகாய் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கவும். பின்னர் வதக்கிய பொருட்களை நன்றாக ஆறியதும் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொஞ்சம் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறினால் ருசியான எள்ளு தேங்காய் சட்னி ரெடி!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு லஸ்ஸி என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று பழங்கள் சேர்த்து லஸ்ஸி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    ஆரஞ்சு, வாழைப்பழம், ஆப்பிள்- தலா 1

    ஸ்ட்ராபெர்ரி - 4

    உலர் திராட்சை - 10

    சர்க்கரை - 1 கப்

    புளிக்காத தயிர் - 2 கப்

    முந்திரி, பாதாம், பிஸ்தா - தேவையான அளவு

    செய்முறை :

    வாழைப்பழம், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரியை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    முந்திரி, பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    ஆரஞ்சை விதை நீக்கி வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் எல்லா பழங்களையும் போட்டு அதனுடன் உலர் திராட்சையையும் கலந்து வைக்கவும்.

    பிறகு தயிர் சேர்த்து கலந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

    கண்ணாடி கிளாஸில் ஊற்றி அதன் மேலே முந்திரி, பாதாம், பிஸ்தா தூவி பரிமாறவும்.

    வேண்டுமானால் ஐஸ் கட்டி சேர்த்துப் பருகலாம்.

    இது உடல் சூட்டையும், நீர்க்கடுப்பையும் உடனே தணிக்கும்.

    இப்போது சூப்பரான ஃப்ரூட் லஸ்ஸி ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • சீஸ் பூரியை வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் செய்து கொடுத்து அசத்தலாம்

    தேவையான பொருட்கள்:

    பூரி மாவிற்கு...

    கோதுமை மாவு - 1 கப்

    ரவை - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    தண்ணீர் - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    உள்ளே வைப்பதற்கு...

    துருவிய சீஸ் - 1 கப்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 1

    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை:

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பௌலில் கோதுமை மாவு, ரவை, உப்பு, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து ஈரத் துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்பு உள்ளே வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் ஒரு பௌலில் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    * சிறிது மாவை எடுத்து உருட்டி, அதை சப்பாத்தி போன்று தேய்த்து, அதன் நடுவே சிறிது சீஸ் கலவையை வைத்து மூடி அதை மீண்டும் தட்டையாக பூரி அளவிற்கு தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சீஸ் மசாலா பூரி தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
    • தோசை, சப்பாத்தி, இட்லியுடனும் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1 கிலோ

    சின்ன வெங்காயம் - 30

    தக்காளி - 4-

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

    உருளைக்கிழங்கு - 1

    உப்பு - சுவைக்கேற்ப

    கறிவேப்பிலை - சிறிது

    தேங்காய் எண்ணெய் - 1/4 கப்

    தாளிப்பதற்கு...

    சோம்பு - 2 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பிரியாணி இலை - 1

    ஏலக்காய் - 5

    கிராம்பு - 5

    பட்டை - 1 துண்டு

    வறுத்து அரைப்பதற்கு...

    வரமிளகாய் - 10-12

    மல்லி விதைகள் - 4 டேபிள் ஸ்பூன்

    சீரகம் - 2 டீஸ்பூன்

    மிளகு - 2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - 1 கையளவு

    அரைப்பதற்கு...

    துருவிய தேங்காய் - 1 கப்

    பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

    சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 'வறுத்து அரைப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, மிக்சர் ஜாரில் போட்டு, நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்னர் அதே மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு, பொட்டுக்கடலை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாவ வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

    * பிறகு அதில் தக்காளி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    * பின் அதில் சிக்கனை கழுவிப் போட்டு, 5-6 நிமிடம் நன்கு சிக்கனை வதக்க வேண்டும்.

    * பின்னர் அதில் வறுத்து அரைத்த மசாலா மற்றும் நீரை ஊற்றி கிளறி, அதை குக்கரில் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

    * விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் உருளைக்கிழங்குகளை போட்டு, பின் அரைத்த தேங்காய் மசாலா சேர்த்து அடுப்பில் வைத்து, 10-15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு தயார்.

    • இந்த ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.
    • சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட இந்த ரசம் சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    சிக்கன்(எலும்புடன்) - 1/2 கிலோ

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    தக்காளி - 1

    இஞ்சி - 1 துண்டு

    பூண்டு - 5 பல்

    பச்சை மிளகாய் - 1

    சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

    மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

    பட்டை, லவங்கம் - தலா 1

    மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

    தனியாத்தூள் - 1 தேக்கரண்டி

    மஞ்சள்தூள் - 1 /2 தேக்கரண்டி

    கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கிய பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.

    வதக்கிய கலவையை குக்கரில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, சிக்கன் சேர்த்து நன்கு கலக்கி, 6 விசில் வரும் வரை வேக விடவும்.

    பின்பு சூப்பில் கொத்தமல்லி தழை தூவி, எலுமிச்சைசாறு பிழிந்து பரிமாறவும்.

    • ராஜ்மாவில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
    • இது சப்பாத்தி, ரொட்டி, நாண், பூரியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    ராஜ்மா - 1 கப்

    வெங்காயம் - 2

    தக்காளி - 3

    பச்சை மிளகாய் - 1

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிதளவு

    மில்க் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    சீரகத் தூள் - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    கருப்பு ஏலக்காய் - 3

    கிராம்பு - 3

    உப்பு - சுவைக்கேற்ப

    வெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * தக்காளியை அரைத்துகொள்ளவும்.

    * ராஜ்மாவை நீரில் 9 மணிநேரம் ஊற வைத்த பின் வேக வைத்து கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும் சீரகம், ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

    * பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒருமுறை கிளறி, அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

    * அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் சேர்த்து கிளறிய பின்னர் தேவையான அளவு நீரை ஊற்றி சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.

    * அடுத்து வேக வைத்துள்ள ராஜ்மாவை சேர்த்து, கரண்டியால் நன்கு மசித்து விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

    * கிரேவி கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மில்க் க்ரீம், சிறிது வெண்ணெய், கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான ராஜ்மா தால் மக்னி தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பச்சை பயற்றில் இரும்புச்சத்து அதிகளவு உள்ளது.
    • கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பச்சை பயறு உதவுகிறது.

    தேவையான பொருட்கள்

    முளைகட்டிய பச்சை பயறு - 1/2 கப்

    தக்காளி - 1

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    பூண்டு - 3 பல்

    புளி - 1 எலுமிச்சை அளவு

    சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

    கறிவேப்பிலை - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    முளைகட்டிய பச்சை பயறை குக்கரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, 3 விசில் விட்டு இறக்கி மசித்து கொள்ளவும்.

    புளியை 2 கப் நீரில் ஊற வைத்து கரைத்து கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்க வேண்டும்.

    பின்பு அதில் புளித் தண்ணீர், சாம்பார் பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு கிளறி, கொதிக்க வைக்க வேண்டும்.

    குழம்பானது நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள பச்சை பயறை லேசாக மசித்துப் போட்டு, மீண்டும் 3-5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

    இப்போது சுவையான பச்சை பயறு குழம்பு ரெடி!!!

    இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    புளி சேர்க்காமலும் இந்த குழப்பை செய்யலாம். சூப்பராக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
    • தோசை, சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    கத்திரிக்காய் - 4

    துவரம் பருப்பு - 1/4 கப்

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

    புளி நீர் - 1 கப்

    வெல்லம் - 1 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    வறுத்து அரைப்பதற்கு...

    கடலை பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்

    தனியா - 1 டேபிள் ஸ்பூன்

    வரமிளகாய் - 1

    மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

    துருவிய தேங்காய் - 1/2 கப்

    தாளிப்பதற்கு...

    நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    கடுகு - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    செய்முறை:

    * கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கவும்.

    * துவரம் பருப்பை நன்றாக குழைய வேக வைத்து கொள்ளவும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு, மல்லி, வரமிளகாய், மிளகு ஆகியவற்றைப் போட்டு நன்கு வறுத்ததும், துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    * பின்பு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, நீர் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் கத்திரிக்காயை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும். வாணலியை மூடி வைத்து நன்கு மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.

    * கத்திரிக்காய் நன்கு வெந்ததும், அதில் புளி நீர், மஞ்சள் தூள், வெல்லம், வேக வைத்த பருப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுது மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் புளியின் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கத்திரிக்காய் ரசவாங்கி தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த துவையல் தோசை, சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன்.
    • சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    சின்ன வெங்காயம் - 200 கிராம்,

    காய்ந்த மிளகாய் - 3,

    உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன்,

    புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு,

    எண்ணெய் - 4 டீஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியா போட்டு வறுக்கவும்

    அடுத்து வெங்காயத்தை சேர்த்து வதக்கி ஆறவைக்கவும்.

    பிறகு, எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

    இப்போது ருசியான வெங்காய துவையல் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று இந்த ஜாம் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    மாதுளை முத்துகள் - 2 கப்

    எலுமிச்சைப்பழம் - 2

    சர்க்கரை - 2 கப்

    செய்முறை:

    மாதுளையை உதிர்த்து அதற்கு சமமாக சர்க்கரையை அளந்து எடுத்துக் கொள்ளவும்.

    மாதுளை முத்துகளை மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுத்து வைக்கவும். விதை அரைபடாமல் இருக்க வேண்டும். எனவே, மாதுளை முத்துகளை லேசாக அரைத்தால் போதும்.

    அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து அரைத்த மாதுளை முத்துகளைச் சேர்த்து மிதமான தீயில் வைத்து, 2 நிமிடங்களுக்குக் கிளறவும்.

    பிறகு, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை நன்கு கரைந்து மாதுளை முத்துகளோடு சேர்ந்து வரும் போது, எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து நன்கு கிளறவும்.

    கலவையில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி, பிசுபிசுப்பு பதம் வரும்வரை கிளறவும். இதற்கு சுமார் 7 நிமிடங்கள் ஆகலாம்.

    இப்போது அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான மாதுளை ஜாம் தயார்.

    கலவை ஆறிய பின்னர் சுத்தமான கண்ணாடி பாட்டிலில் நிரப்பி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்யவும். பல வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.

    குறிப்பு:

    மிகவும் சுவையான இந்த ஜாம் செய்யும்போது அதிகமாக வேக வைத்துவிட வேண்டாம். பிறகு ரப்பர் போலாகிவிடும். பிசுபிசுப்பு பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். உடலுக்கு சத்து தருவதோடு ரத்தவிருத்திக்கும் ஏற்றது மாதுளை. மாதுளையின் விதைகள் வேண்டாம் என்று நினைத்தால், மாதுளை முத்துகளை நன்கு அரைத்து வடிகட்டி சாறெடுத்து பிறகு ஜாம் செய்யலாம்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    ×