என் மலர்tooltip icon

    சமையல்

    • காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி சூப் செய்து கொடுக்கலாம்.
    • தினமும் ஏதாவது ஒரு சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

    தேவையான பொருட்கள் :

    பீன்ஸ் / அவரைக்காய் - தலா 50 கிராம்

    கேரட் - 50 கிராம்

    பெரிய வெங்காயம் - ஒன்று

    சின்ன வெங்காயம் - 100 கிராம்

    தக்காளி - 3

    புதினா இலைகள் - ஒரு கைப்பிடி

    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

    இஞ்சி - ஒரு அங்குல நீளமுள்ள துண்டு

    பூண்டு - 7பல்

    நசுக்கிய மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்

    நசுக்கிய சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்

    நசுக்கிய சோம்பு - அரை டேபிள்ஸ்பூன்

    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

    உப்பு - தேவையான அளவு

    வெண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    இஞ்சி மற்றும் பூண்டுப் பல்லை தோல் நீக்கி வைத்துக்கொள்ளவும்.

    அடுப்பில், குக்கரை வைத்து சூடானதும் வெண்ணெய் போட்டு உருகியதும் வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் காய்கறிகள், இஞ்சி மற்றும் பூண்டு, கொத்தமல்லித்தழை, புதினா, நசுக்கிய மிளகு, சீரகம், சோம்பு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்.

    அதில் காய்கறிகளை விட மூன்று அங்குலம் அதிகமாகத் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி அடுப்புத் தீயைக் குறைத்து, 20 நிமிடங்கள் குறைந்த தீயிலேயே வேக விடவும்.

    அடுப்பை அணைத்து, பிரஷர் அடங்கியதும் மூடியைத் திறக்கவும்.

    காய்கறிகளில் உள்ள தண்ணீரை வடிகட்டி பரிமாறும்போது உப்பு மற்றும் கூடுதலாக மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான மிக்ஸ்டு வெஜிடபிள் சூப் ரெடி.

    சூப்பில் கடிப்பதற்கு காய்கறிகள் வேண்டும் என்று நினைப்பவர்கள், காய்கறிகளை வடிகட்டாமல், அப்படியே சூப்பில் சேர்த்துக் குடிக்கலாம். நறுக்கும்போது பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஃபலூடா என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • இதை கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    ஐஸ்கிரீம் செய்ய

    பால் - 1 கப்

    ஓரம் நீக்கப்பட்ட பிரெட் -3

    சர்க்கரை - 1/2 கப்

    எசன்ஸ் -1 தேக்கரண்டி

    ஃபலூடா செய்வதற்கு:

    வேகவைத்த சேமியா- 1 கப்

    ஜெல்லி - 1 கப்

    நறுக்கிய பழங்கள் (ஆப்பிள், திராட்சை, பப்பாளி, வாழைப்பழம்)

    செர்ரி பழம் - 3

    முந்திரி, காய்ந்த திராட்சை - சிறிதளவு

    செய்முறை:

    முதலில் பாலை நன்கு சுண்ட காய்த்து கொள்ள வேண்டும்.

    காய்ச்சிய பாலில் அதில் பிரெட் துண்டுகளை போட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து விட வேண்டாம். பால் ஆறியதும் அதில் சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அந்த கலவையை ஒரு 4 மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து விட வேண்டும்

    பிறகு அந்த ஐஸ்கிரீம் கலவையில் எசன்ஸ் ஊற்றி மிக்ஸியில் போட்டு அடித்து விட வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் மாற்றி 5 மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து விட வேண்டும்.

    ஒரு நீளமான கண்ணாடி டம்பளரில் முதலில் சேமியா போடவும். பின்பு மேல் குறிப்பிட்ட அனைத்து பழங்களும் ஒன்றன் பின் ஒன்றாக போடவும். அதன் மேல் முந்திரி, காய்ந்த திராட்சை போடவும். கடைசியாக அதில் மேல் ஐஸ்கிரீம், செர்ரிபழம், ஜெல்லி வைத்து ருசி பார்க்கவும்

    ஜில் ஜில் ஃபலூடா ஐஸ்கிரீம் தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ரவையில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று சூப்பரான ரவா கார பொங்கல் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    ரவா - 1 கப்

    வேக வைத்த பாசிப்பருப்பு - கால் கப்

    பெருங்காயப்பொடி - 1 சிட்டிகை

    மிளகு - 1 தேக்கரண்டி

    சீரகம் - 1 தேக்கரண்டி

    பச்சைமிளகாய் - 1

    கறிவேப்பிலை - சிறிதளவு

    இஞ்சி - சிறிதளவு

    நெய் - 3 தேக்கரண்டி

    முந்திரிப்பருப்பு - 10

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    * இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    * அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி அது நன்கு கொதி வந்தவுடன், அதில் பெருங்காயப்பொடி, தேவையான அளவு உப்பு பொட்டுக் கொள்ளவும்.

    * அடுத்து இதில் நன்கு வறுத்த ரவாவை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறவும். கொதி வந்ததும் இளந்தீயில் வைத்து நன்றாக வேக விடவும்.

    * அடுத்து அதில் வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து கலக்கவும்.

    * இன்னொரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், முந்திரிப்பருப்பு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு வாசம் வரும் வரை தாளித்து பொங்கலில் கலந்து இறக்கினால் ரவா கார பொங்கல் தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பாயாசத்தில் பல்வேறு வகைகள் உள்ளன.
    • பாயாசத்தில் பழங்களை சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருள்கள்:

    அன்னாசிப்பழத் துண்டுகள்- 1 கப்

    காய்ச்சிய பால் - 1 லிட்டர்

    கன்டென்ஸ்டு மில்க் - 1 கப்

    ஜவ்வரிசி - 1/2 கப்

    பைனாப்பிள் எசன்ஸ் - 1 ஸ்பூன்

    நெய் - தேவையான அளவு

    முந்திரி - தேவையான அளவு

    கிஸ்மிஸ் - தேவையான அளவு

    செய்முறை:

    * அன்னாசி பழத்தினை தோல் சீவி ஒரே அளவிலான சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஜவ்வரிசியை அலசி சிறிது தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.

    * அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் பால் ஊற்றி மிதமான தீயில் வைத்து பாலை காய்ச்சிக் கொள்ள வேண்டும்.

    * மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரம் 1.5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் ஊற வைத்த ஜவ்வரிசியை போட்டு 5 நிமிடங்கள் வரை கொதித்த பின் அந்த தண்ணீரை வடிகட்டி ஜவ்வரிசியை தண்ணீரில் குளிர்ந்த நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பால் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் பாதியளவு அன்னாசி பழத்தை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் அலசி வைத்துள்ள ஜவ்வரிசியைச் சேர்த்து 3 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும்.

    * பிறகு அதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். கன்டென்ஸ்டு மில்க் சேர்ப்பதால் அதில் இருக்கும் சர்க்கரை சுவையே போதுமானது. பாயாசம் நன்றாக கெட்டியான பின் அடுப்பினை அணைத்துவிட்டு பாயாசத்தை இறக்கி வைக்கவும்.

    * இப்போது இதில் ஒரு துளி பைனாப்பிள் எசன்ஸ் மற்றும் வெட்டி வைத்துள்ள பைனாப்பிள் துண்டுகளை சேர்க்க வேண்டும்.

    * அடுப்பில் ஒரு சிறிய பான் வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து வறுத்து பாயாசத்தில் ஊற்றி அலங்கரித்தால் தித்திப்பான அன்னாசி பழ பாயாசம் ரெடி!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சோயா பீன்ஸில் அதிகளவு புரதங்கள், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது.
    • முளைக்கட்டிய சோயா பீன்ஸில் தோசையை செய்தால் அதிகளவு வைட்டமின் E கிடைக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சோயா பீன்ஸ் - 2 கப்

    கேரட் - 1

    முள்ளங்கி - 1

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    அரிசி மாவு - 4 ஸ்பூன்

    இஞ்சி - 1 இன்ச்

    பச்சை மிளகாய் - 4

    சீரகம் - ஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    கேரட், முள்ளங்கியை துருவிக்கொள்ளவும்.

    சோயா பீன்ஸை வெது வெதுப்பான தண்ணீரில் சுமார் 2 மணி நேரங்கள் ஊற வைக்கவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    மிக்சி ஜாரில் ஊறிய சோயா பீன்ஸை போட்டு அதனுடன் தோல் நீக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் அரிசி மாவு, துருவிய கேரட், முள்ளங்கி, சீரகம், வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

    அடுப்பில் தோசைக் கல்லை வைத்து கல் சூடானதும் சிறிது எண்ணெய் தடவி, மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சுவையான ஆரோக்கியமான தோசை ரெடி!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மட்டன் தால்சா சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
    • இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    மட்டன் - 1/2 கிலோ

    பச்சை மிளகாய் - 2

    தக்காளி - 2

    சின்ன வெங்காயம் - 12

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

    கத்திரிக்காய் - 1

    மாங்காய் - 1/2

    கொத்தமல்லி - சிறிது

    பிரியாணி இலை - 1

    பட்டை - 1

    கிராம்பு - 2

    ஏலக்காய் - 2

    துவரம் பருப்பு - 1/2 கப்

    கடலை பருப்பு - 1/4 கப்

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    மல்லி தூள் - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    புளிச்சாறு - 1/4 கப்

    உப்பு - சுவைக்கேற்ப

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு..

    வெங்காயம் - 1/2 கப்

    கடுகு - 1/4 டீஸ்பூன்

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    மிளகு - 1/2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    நெய் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    * தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய், மாங்காய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ப.மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.

    * கடலை பருப்பு, துவரம் பருப்பை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    * மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    * முதலில் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு சேர்த்து தாளித்த பின்னர் சின்ன பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அடுத்து அதில் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்க வேண்டும்.

    * பின்பு அதில் மட்டனை கழுவிப் போட்டு நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும். அதன் பின் கடலை பருப்பு, துவரம் பருப்பு மற்றும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    * பிறகு அதில் போதுமான நீரை, அதாவது வழக்கமாக பருப்பு வேக வைக்க ஊற்றும் அளவை விட அதிகமாக நீரை ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.

    * விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும். மட்டனும், பருப்புக்களும் நன்கு வெந்ததும், கத்திரிக்காய், மாங்காய் சேர்த்து புளிச்சாற்றினையும் சிறிது ஊற்றி மூடி வைத்து, 10 நிமிடம் காய்கறிகள் வேகும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

    * பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய், மிளகு மற்றும் சிறிது வெங்காயத்தை சேர்த்து வதக்கி, குக்கரில் உள்ள மட்டன் தால்சாவில் ஊற்றி கிளறி, மேலே சிறிது கொத்தமல்லியை தூவினால், மட்டன் தால்சா தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இதில் கரையும் நார்ச்சத்துக்கள், அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து இருக்கிறது.
    • கருப்பு கொண்டக்கடலையில் வெள்ளை கொண்டக்கடலையை விட அதிகளவு சத்துக்கள் உள்ளன

    தேவையான பொருட்கள்

    கொண்டக்கடலை - 250 மி.லி

    பச்சரிசி - 1/2 கப்

    வெந்தயம் - 1 தேக்கரண்டி

    இஞ்சி - 1 துண்டு நறுக்கியது

    பச்சை மிளகாய் - 2 நறுக்கியது

    உப்பு - 1 தேக்கரண்டி

    சீரகம் - 1 /2 தேக்கரண்டி

    நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    * கொண்டைக்கடலையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊறவிடவும்.

    * மற்றொரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊறவிடவும்.

    * மிக்ஸி ஜாரில் ஊறவைத்த கொண்டைக்கடலை, பச்சரிசி+வெந்தயம், நறுக்கிய இஞ்சி, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்து 12 மணிநேரம் புளிக்கவிடவும்.

    * பின்பு சீரகம் சேர்த்து கலந்துவிடவும்.

    * தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடு செய்து மாவை சிறிதளவு எடுத்து தோசையாக ஊற்றி சுற்றிலும் நெய் ஊற்றி பின்பு திருப்பி விட்டு வேகவிடவும்.

    * சுவையான கொண்டைக்கடலை தோசை தயார்

    • கேரளாவில் பாசிப்பருப்பு பாயாசம் மிகவும் பிரபலம்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பாசிப்பருப்பு - 1 கப்

    வெல்லம் - 1 கப் (துருவியது)

    நெய் - 2 டேபிள் ஸ்பூன்

    கெட்டியான தேங்காய் பால் - 1 கப்

    நீர் போன்ற தேங்காய் பால் - 2 1/2 கப்

    முந்திரி - 3 டேபிள் ஸ்பூன்

    உலர் திராட்சை - 3 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் - 4

    செய்முறை:

    * ஒரு வாணலியை அடுப்பில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அதில் முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்பு அதில் பாசிப்பருப்பை சேர்த்து 2 நிமிடம் நல்ல மணம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

    * பிறகு அதில் நீர் போன்ற தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

    * அதன் பின் அதில் ஏலக்காய் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் அல்லது பருப்பு வேகும் வரை மூடி வைக்க வேண்டும்.

    * பருப்பு நன்கு வெந்த பின், வெல்லத்தை சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி இறக்க வேண்டும்.

    * இறுதியில் அதில் கெட்டியான தேங்காய் பாலை சேர்த்து கிளறி விட்டு, அத்துடன் எஞ்சிய 1 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து கிளறினால், சுவையான கேரளா ஸ்டைல் பாசிப்பருப்பு பாயாசம் ரெடி!

    • மாங்காய் சீசன் ஆரம்பித்து விட்டது.
    • மாங்காயில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    மாங்காய் - 2

    கடுகு - 2 தேக்கரண்டி

    உளுந்து - 1 தேக்கரண்டி

    பெருங்காயம் - ½ தேக்கரண்டி

    காய்ந்த மிளகாய் - 3

    பச்சை மிளகாய் - 1

    மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

    வெல்லம் - 150 கிராம்

    கறிவேப்பிலை - சிறிதளவு

    நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி

    தண்ணீர் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    * மாங்காய், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்

    * ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு கரையும் வரை சூடுபடுத்தவும். பின்பு, அதை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

    * அடிகனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் போட்டு வதக்கவும்.

    * பின்னர் வெட்டிய மாங்காய் துண்டுகள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் கலந்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

    * பின்பு அதில் வெல்ல தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

    * கலவை கெட்டியாகும் வரை நன்றாக கிளறவும்.

    * இப்பொழுது சுவையான 'மாங்காய் பச்சடி' தயார்.

    • கேரளாவில் எந்த விசேஷம் என்றாலும் பாலடை பிரதமன் கண்டிப்பாக இருக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி - ஒரு கப்

    பால் - ஒன்றரை லிட்டர்

    சர்க்கரை - ஒரு கப் (இனிப்பு விரும்புபவர்கள் தேவைக்கு ஏற்ப அதிகம் சேர்க்கலாம்)

    தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

    வாழையிலை - 4

    செய்முறை

    பச்சரிசியை நன்றாக கழுவி ஒன்றரை மணி நேரம் ஊற வைத்து, பின் ஒரு துணியில் பரப்பி உலற வைக்கவும். அரிசியில் ஈரம் இல்லாமல் இருக்கும் போது எடுத்து மிக்ஸியில் நைசாக பொடிக்கவும். பொடித்த அரிசியை நன்கு சலித்து எடுத்துக் கொள்ளவும்....

    சலித்த மாவில் சிறிது தண்ணீரும், தேங்காய் எண்ணெயும் கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும். கலந்த மாவை வாழையிலையில் பரவலாக கரண்டியால் ஊற்றவும். வாழையிலையை சுருட்டி நூலால் கட்டவும். கொதிக்கும் தண்ணீரில் அமிழ்த்தி 30 நிமிடம் வைத்து வேக விடவும்.

    அவை வேகும் சமயத்தில் ஒரு அகண்ட பாத்திரத்தில் பாலை காய்க்கவும். பால் பாதியாக சுண்டியதும் முக்கால் கப் சர்க்கரை சேர்த்து கிளறவும். பால் லேசாக நிறம் மாறி இருக்கும்.

    அந்த சமயத்தில் வாழையிலைகளை வெளியில் எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு வாழையிலைகளைப் பிரிக்கவும். கிடைக்கும் அடைகளை நன்றாக நீரில் அலசி பொடிபொடியாக கொத்தி வைத்து கொள்ளவும்.

    கொத்திய அடைகளை சுண்டிய பாலில் சேர்த்து கிளறவும். 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். இறக்கும் போது சற்று தளர்வாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஆறியதும் சரியான பக்குவத்தில் இருக்கும்.

    இப்போது தித்திக்கும் பாலடை பிரதமன் ரெடி....

    • சித்திரை விஷு பண்டிகை அன்று பல்வேறு சுவையான ரெசிபிக்கள் சமைக்கப்படும்.
    • ஓலன் வெள்ளை சாதத்துடன் மட்டுமின்றி, கலவை சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    நீர் பூசணி/வெள்ளை பூசணி - 1 1/2 கப்

    தட்டைப்பயறு - 1 கப்

    பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)

    மிகவும் நீர் போன்ற தேங்காய் பால் - 1 கப்

    கெட்டியான தேங்காய் பால் - 1 கப்

    கறிவேப்பிலை - சிறிது

    தேங்காய் எண்ணெய் - 1 டீபூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை:

    * நீர் பூசணிக்காயின் தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    * தட்டை பயறை 8 மணிநேரம் ஊற வைத்துக் கொண்டு, பின் அதை குக்கரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

    * ஒரு பாத்திரத்தில் அரை கப் நீர் ஊற்றி, அத்துடன் ஒரு கப் நீர் போன்றுள்ள தேங்காய் பால் ஊற்றி, அதோடு நீர் பூசணிக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அடுப்பில் வைத்து, காயை நன்கு வேக வைக்க வேண்டும்.

    * நீர் பூசணி நன்கு வெந்ததும், அத்துடன் வேக வைத்துள்ள தட்டை பயறை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, பின் கெட்டி தேங்காய் பாலை ஊற்றி, கொதிக்க ஆரம்பிக்கும் முன்பே அடுப்பை அணைத்து விட வேண்டும்.

    * பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் ஊற்றினால், ஓணம் சத்யா ஸ்பெஷல் ஓலன் தயார்.

    குறிப்பு:

    * நீர் பூசணிக்காய் மற்றும் தட்டைப் பயறு நன்கு மென்மையாக வெந்திருந்தால் தான், அது தேங்காய் பாலை நன்கு உறிஞ்சியிருக்கும்.

    * கெட்டியான தேங்காய் பால் சேர்த்த பின் நீண்ட நேரம் அடுப்பில் வைத்திருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது திரிய ஆரம்பித்துவிடும்.

    * சமைத்து முடித்த பின் குறைந்தது அரை மணிநேரம் கழித்து சாப்பிட பரிமாறினால் தான், தேங்காய் பாலுடன் காய்கறிகள் நன்கு ஊறி இருக்கும்.

    * ஓலன் ரெசிபிக்கு நீர் பூசணியுடன், மஞ்சள் பூசணியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    • கேரளாவில் சித்திரை விஷு பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும்.
    • கேரள நாட்டு பாரம்பரிய உணவுகளில் ஒன்றான அவியல் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    சௌசௌ - 150 கிராம்

    உருளைக்கிழங்கு - 150 கிராம்

    கேரட் - 150 கிராம்

    பூசணிக்காய் - 150 கிராம்

    வாழைக்காய் - 150 கிராம்

    வெங்காயம் - 150 கிராம்

    தேங்காய் - 1/2 கப்

    பச்சை மிளகாய் - 4

    தயிர் - 1/2 கப்

    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிது

    தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    * காய்கறிகள், வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்

    * மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து, அனைத்து காய்கறிகளையும் போட்டு, காய்கறிகள் வேகும் அளவு தண்ணீர் விட்டு, 20 நிமிடம் மூடி வேக வைத்து இறக்கிக் கொள்ளவும்.

    * குக்கர் மூடியை திறந்து அடுப்பில் வைத்து, காய்கறிகளில் உள்ள தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விடவும். அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் சிறிது உப்பை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடவும்.

    * பின் அதில் தயிரை ஊற்றி 2 நிமிடம் கிளறி இறக்கி விடவும்.

    * மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்த, பின் வெங்காயம் சேர்த்து, அதனை பொன்னிறமாக வதக்கி, அத்துடன் அந்த காய்கறி கலவையை ஊற்றி, ஒரு கொதி விட்டு, கொத்தமல்லி இலையை தூவி இறக்கி விடவும்.

    * இப்போது சுவையான அவியல் ரெடி!!!

    * அவியல் தொக்கு போல் வேண்டும் என்பவர்கள் காய்கறி தண்ணீரை வற்ற விடாமல் தேங்காய் சேர்த்து செய்ய வேண்டும்.

    ×