என் மலர்tooltip icon

    சமையல்

    • தயிர் வடை கேள்விப்பட்டிருப்பீங்க. அது என்ன தயிர் பக்கோடா?
    • வாங்க இன்னைக்கு இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    தயிர் - 400 கிராம்

    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

    கரம் மசாலா - அரை டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தண்ணீர் - 3 கப்

    பக்கோடா செய்ய :

    கடலை மாவு - 1 கப்

    சீரகம் - 4 டீஸ்பூன்

    மஞ்சள் - 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    உப்பு - 1/2 டீஸ்பூன்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 2

    கொத்தமல்லி - சிறிதளவு

    தாளிக்க :

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    சீரகம் - 1/4 டீஸ்பூன்

    பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 1

    செய்முறை :

    வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் , நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய் ஊற்றி கடலை மாவுக் கலவையை பக்கோடா போல் உதிர்த்து போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தில் தயிர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். இறுதியாக தண்ணீர் ஊற்றி கலந்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், கரம் மசாலா பொடி சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.

    இவை நன்கு வதக்கியபின் கலந்து வைத்துள்ள தயிர் கலவையை அதில் ஊற்றவும்.

    ஒரு முறை கொதித்ததும் வறுத்து வைத்துள்ள பக்கோடாவை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவி இறக்கி பரிமாறவும்.

    அடுப்பில் இருந்து இறக்கி அரை மணி நேரம் கழித்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    இப்போது சூப்பரான தயிர் பக்கோடா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ரவையில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று ரவையில் இனிப்பு பொங்கல் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    ரவை - 1/4 படி

    அச்சு வெல்லம் - 12

    நெய் - 5 தேக்கரண்டி

    முந்திரிப்பருப்பு - 12

    காய்ந்த திராட்சை - 12

    ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி

    ஃபுட் கலர் (மஞ்சள்) - ஒரு சிட்டிகை

    செய்முறை:

    ரவைவை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதி வந்ததும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றிய பின் நன்றாக வறுத்த ரவாவை சிறிது சிறிதாக கலந்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.

    ஃபுட் கலரை சிறிதளவு பாலில் கலந்து இந்த பொங்கலில் கலந்தால் சீராகக் கலந்துவிடும்.

    வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை நன்கு காய்ச்சி வடுகட்டி எடுத்து வைத்தக் கொள்ளவும்.

    இந்த வெல்லப் பாகை, ரவா கலவையுடன் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக சேர்ந்து வரும் வரை கிளறவும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய்யை சுட வைத்து முந்திரி, திராட்சை வறுத்து ரவா பொங்கலில் கலக்கவும்.

    ஏலக்காய் பொடி கலந்துவிட்டால் சுவையான ரவை இனிப்பு பொங்கல் தயார்.

    • குழந்தைகளுக்கு குல்ஃபி என்றால் ரொம்ப பிடிக்கும்.
    • இன்று வீட்டிலேயே குல்ஃபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பால் - 2 கப்

    பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

    சாக்லேட் - 1 கப் (துருவியது)

    சாக்கோ சிப்ஸ் - விருப்பத்திற்கேற்ப

    சர்க்கரை - 1/2 கப்

    பிஸ்தா, பாதாம் - சிறிது (நறுக்கியது)

    செய்முறை :

    * ஒரு பௌலில் பாலை ஊற்றி, அதில் பால் பவுடர் சேர்த்து கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.

    * ஒரு அகன்ற அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

    * அப்படி கொதிக்கும் போது அவ்வப்போது கிளறி விட வேண்டும். இல்லையெனில் அடிபிடித்து விடும். பாலானது சுண்டி சற்று கெட்டியானதும், அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

    * சர்க்கரை கரைந்ததும், அதனை இறக்கி, அதில் பாதாம், பிஸ்தா மற்றும் துருவிய சாக்லேட்டை போட்டு, சாக்லேட் நன்கு கரையும் வரை கிளறி சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்.

    * பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, 1 மணிநேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும்.

    * 1 மணிநேரம் ஆன பின்னர், அதனை வெளியே எடுத்து மிக்சியில் போட்டு ஒருமுறை நன்கு அடித்து, பின் அதனை குல்ஃபி மோல்ட்டில் ஊற்றி சாக்கோ சிப்ஸ் தூவி, அதன் நடுவே குச்சியை வைத்து, ப்ரீசரில் 6 மணிநேரம் வைத்து எடுத்தால், சாக்லேட் குல்ஃபி ரெடி!!!

    • காராமணிக்காயில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • தினமும் ஏதாவது ஒரு காயை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

    தேவையான பொருட்கள்:

    காராமணிக்காய் - 400 கிராம்

    சாம்பார் வெங்காயம் - 200 கிராம்

    கடுகு - 1 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

    சில்லி பிளேக்ஸ் - 2 தேக்கரண்டி

    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

    தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப

    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை:

    காராமணிக்காயை நன்றாக சுத்தம் செய்து சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும், பின்னர் அவற்றை அடி கனமான பாத்திரத்தில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் மிதமான தீயில் 5 நிமிடங்கள் வதக்கவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை, பொடிதாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

    பின்பு அதில் மஞ்சள் தூள், சில்லி பிளேக்ஸ் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும்.

    பிறகு அதில், வதக்கிய காராமணியை மசாலாவுடன் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கிளறவும்.

    இப்பொழுது சுவையான 'காராமணிக்காய் பொரியல்' தயார்.

    இதனை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.

    • தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
    • இன்று வெயிலுக்கு இதமா மாம்பழ குல்ஃபி செய்வது குறித்து பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    பால் - 500 மிலி

    சர்க்கரை - 3/4 கப்

    சோள மாவு - 2 டீஸ்பூன்

    குங்குமப்பூ - 1 சிட்டிகை

    மாம்பழ கூழ் - ஒன்றரை கப்

    மாம்பழ எசன்ஸ் அல்லது ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

    செய்முறை

    * நன்கு கனிந்த மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, அதை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதை மிக்ஸி ஜாரில் போட்டு மென்மையாக கூழ் போன்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு பௌலில் சோள மாவு, சிறிது தண்ணீர் அல்லது பால் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * மற்றொரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். பால் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து குறைவான தீயில் வைத்து 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அந்த பாலில் கரைத்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து கிளறி நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

    * அடுத்தாக அந்த பாலில் குங்குமப்பூவை சேர்த்து கிளறி, பாலை குளிர வைக்க வேண்டும்.

    * பால் குளிர்ந்ததும், அதில் மாம்பழ கூழ், மாம்பழ எசன்ஸ் அல்லது ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

    * கடைசியாக குல்பி மோல்டுகள் அல்லது சிறிய அளவு டம்ளரில் இந்த கலவையை ஊற்றி ப்ரிஜ் ஃப்ரீசரில் வைக்க வேண்டும். இந்த கலவை நன்கு உறைய வேண்டும். குல்பி நன்கு உறைந்ததும், அதில் ஐஸ் குச்சிகளை வைத்து சாப்பிடலாம்.

    * அவ்வளவு தான் சிம்பிள், சுவையான மாம்பழ குல்பி வீட்டிலேயே தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சாம்பார் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
    • இந்த ரெசிபியை 30 நிமிடத்தில் செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    அரிசி - 1 கப்

    துவரம் பருப்பு - கால் கப்

    வெங்காயம் - 1

    தக்காளி - 2

    பச்சை மிளகாய் - 4

    காய்ந்த மிளகாய் - 3

    பூண்டு - 5 பல்

    தேங்காய்த் துருவல் - 3 ஸ்பூன்

    கடுகு- 1 ஸ்பூன்

    சீரகம் - 1 ஸ்பூன்

    மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்

    சாம்பார்த்தூள் - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிது

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அரிசி, பருப்பை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், சாம்பார்த்தூள் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் தக்காளி வதங்கியதும் தண்ணீரை வடித்து விட்டு அரிசி, பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.

    * தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, மூன்று விசில் வைக்கவும்.

    * பிரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து சாதத்தை மெதுவாக கிளறிவிட்டு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான அரிசி பருப்பு சாதம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கறிவேப்பிலையை நன்கு மென்று சாப்பிடுபவர்களுக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் எளிதில் அணுகாது.
    • இதயத்திற்கு நன்மை பயப்பதில் கறிவேப்பிலை மிகுந்த ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.

    தேவையான பொருட்கள் :

    விழுதாக அரைக்க:

    நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

    துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,

    கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்,

    மிளகு - 2 டீஸ்பூன்,

    தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்,

    காய்ந்த மிளகாய் - 4,

    தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,

    நல்ல கொழுந்து கறிவேப்பிலை - ஒரு கிண்ணம்.

    குழம்புக்கு:

    நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,

    கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்,

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,

    சின்ன வெங்காயம் - 5,

    பூண்டுப் பல் - 4,

    புளி - எலுமிச்சம்பழ அளவு,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    சின்ன வெங்காயம், பூண்டை தோல் உரித்து வைக்கவும்.

    புளியை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்துகொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைக்க வேண்டியதை எல்லாம் ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து ஆற வைக்கவும்.

    ஆறிய பிறகு, சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும். அம்மியில் அரைத்தால், ஊரே மணக்கும்.

    இருப்புச் சட்டியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயம் பொரித்து போட்டு தாளித்த பின்னர் உரித்த வெங்காயம், பூண்டுப் பல் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

    அடுத்து இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்கவிட்டு, கெட்டியானதும் இறக்கவும்.

    இப்போது சுவையான கறிவேப்பிலை சின்ன வெங்காயம் குழம்பு ரெடி.

    சுடச்சுட சாதத்தில் கெட்டிக் கறிவேப்பிலைக் குழம்பு விட்டு சாப்பிட, சுவை சுண்டியிழுக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வாய்க்கசப்பு, பித்தம் குறைய உதவும் இந்த சட்னி.
    • இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    தனியா - கால் கப்,

    காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப),

    பூண்டு - 2 பல்,

    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,

    புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,

    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,

    தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் தனியாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    பின்னர் சிறிதளவு எண்ணெய் ஊற்றி... காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வறுத்து ஆறவைக்கவும்.

    எல்லா பொருட்களும் நன்றாக ஆறியபின் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.

    மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த சட்னியில் சேர்க்கவும்.

    இப்போது சூப்பரான தனியா சட்னி ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இருட்டுக்கடை அல்வா ருசிக்கு பெயர் போனது.
    • இந்த அல்வாவின் அசாத்திய ருசிக்கு தாமிரபரணி தண்ணீரும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 2 கப்

    நெய் - 200 மி.லி

    சர்க்கரை - 4 ½ கப்

    வறுத்த முந்திரி – 20

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளவும்.

    மாவை சாஃப்டாக பிசைந்த பின்பு அதில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி இந்த கலவையை 6 மணி நேரம் ஊற வைக்கவும். கலவை நன்கு ஊறிய பின்பு மாவை கையால் எடுத்து நன்கு அழுத்தி நீரில் அப்படியே கரைத்து விடவும்.

    ஊற வைத்துள்ள தண்ணீரில் மாவு முழுவதும் கரைந்த பின்பு அதை வடிக்கட்டி பாலை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்துக் கொள்ளவும். இப்போது இந்த பாலை புளிக்க செய்யவும். அதற்கு பாலை பாத்திரத்தில் ஊற்றி இரவு முழுவதும் மூடி வைக்கவும்.

    மறுநாள் காலையில் பாத்திரத்தைத் திறந்து பார்க்கும்போது பால் நன்கு புளித்து மேலே ஏடு மிதக்கும். அதை மட்டும் கரண்டியால் நீக்கிவிட்டு பாலை வடிக்கட்டவும். இப்போது அல்வா செய்வதற்கான திக்கான பால் தயார்.

    அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து அதில் வடித்து வைத்திருக்கும் பாலை ஊற்றவும்.

    சரியாக 15 நிமிடத்திற்கு அடுப்பை மிதமான சூட்டில் வைத்துவிட்டு பாலை கைவிடாமல் கிண்டவும். கரண்டியால் தொடர்ந்து கிளறினால் தான் கெட்டி தட்டாமல் சரியான பதத்தில் அல்வா வரும்.

    அடுத்து 3 கப் சர்க்கரையை இதில் சேர்த்து நன்கு கரையும் வரை கிளறவும்.

    இரண்டும் நன்கு கலந்து அல்வா பதத்திற்கு வந்தபின்பு கடாயை இறக்கி வைக்கவும்.

    சர்க்கரை பாகு

    திருநெல்வேலி அல்வா செய்முறையில் சர்க்கரை பாகு தயார் செய்வது மிக மிக முக்கியம். அல்வாவுக்கு நிறத்தைக் கொடுப்பதே சர்க்கரை பாகு தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

    செய்முறை

    முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 5 ஸ்பூன் சர்க்கரையை சேர்க்கவும். மிதமான தீயில் சமைக்கவும். சூட்டில் சர்க்கரை கரைந்து பாகு போல் உருகி வரும். கெட்டி பதம் தட்டாமல் இருக விடாமல் கிளறவும். தண்ணீர் சேர்க்காமல் தயாரிக்கப்படும் இந்த சர்க்கரை பாகு நிறம் மாறிக் கொதிக்க தொடங்கியதும் இறக்கி விடவும்.

    திருநெல்வேலி அல்வா

    இப்போது மாவு இருக்கும் கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து அதில் கொஞ்சம் கொஞ்சமாகச் சர்க்கரை பாகு சேர்த்து கிளறவும். வெள்ளையாக இருக்கும் மாவு நிறம் மாறி அல்வா நிறத்திற்கு வரும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்.

    இப்போது நெய்யை ஊற்றவும். கரண்டியால் அல்வாவை கிளறி கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக நெய்யை சேர்க்கவும். இறுதியாக வறுத்த முந்திரியை சேர்த்து இறக்கினால் போதும். சுவையான திருநெல்வேலி அல்வா தயார்.

    அல்வா தயாரானதும் அதை கையால் தொட்டு பார்க்கவும். கையில் ஒட்டாமல் வந்தால் சரியான பதம் என அர்த்தம்.

    இப்போது சூப்பரான திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சிறுதானியங்களை அடிக்கடி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    • இந்த கஞ்சியை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அருந்தலாம்.

    தேவையான பொருட்கள்:

    சாமை, திணை, வரகு, சிவப்பரிசி, பாசிப்பருப்பு தலா - 50 கிராம்,

    மோர் - 3 கப்,

    தண்ணீர் - 4 கப்,

    சின்ன வெங்காயம் - 8,

    சீரகம் - 1 டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - தேவையான அளவு,

    பச்சைமிளகாய் - 3,

    கடுகு - 1 டீஸ்பூன்,

    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    * சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கொத்தமல்லிதழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சாமை, தினை, வரகு, சிவப்பரிசி, பச்சைப்பருப்பு இவற்றைத் தனித்தனியாக கடாயில் வறுத்து சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு குருணையாகப் பொடிக்க வேண்டும்.

    * இதில் 4 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரில் 3 விசில் வந்ததும் இறக்கவும்.

    * கடாயில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்து சின்ன வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி, கஞ்சியில் கொட்டவும்.

    * பிறகு அதில் மோர், கொத்தமல்லிதழை சேர்த்து நன்றாக கலந்து பருகவும்.

    * உடலுக்கு ஆரோக்கியம் இந்த கஞ்சியை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அருந்தலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வெயிலுக்கு குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவது நல்லது.
    • இன்று ஜவ்வரிசியில் மோர்க்களி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    மாவு ஜவ்வரிசி, தயிர் - தலா 200 கிராம்,

    கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்,

    உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,

    மோர் மிளகாய் - 4,

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஜவ்வரிசியை தயிரில் 3 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்க்கவும்.

    அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், மோர் மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் ஊற வைத்த ஜவ்வரிசி கலவையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். கைவிடாமல் கிளற வேண்டும். அடிபிடிக்கக்கூடாது. அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.

    கடாயில் ஒட்டாமல் களி மாதிரி வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    இப்போது சூப்பராக ஜவ்வரிசி மோர்க்களி ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்துகொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    முளைக்கீரை - ஒரு கட்டு,

    பாசுமதி அரிசி - 200 கிராம்,

    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு,

    பூண்டு - 2 பல்,

    துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 2,

    காய்ந்த மிளகாய் - 2,

    நெய் - 50 கிராம்,

    தனியா - 2 டீஸ்பூன்,

    கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கீரையை நன்றாக அலசி பொடியாக நறுக்கவும்.

    துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

    கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து… பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து மேலும் வறுக்கவும்.

    சிறிது நெய்யில் பூண்டு சேர்த்து வதக்கி, வறுத்த பொருட்களை சேர்த்து அரைக்கவும்.

    மீதமுள்ள நெய்யை குக்கரில் விட்டு, கீரையை சேர்த்து லேசாக வதக்கவும்.

    அரைத்த கலவை, ஊறிய அரிசி, வெந்த பருப்பு, உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அதில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    ஒரு பங்கு அரிசிக்கு ஒரு பங்கு தண்ணீர் என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

    இப்போது சூப்பரான சத்தான கீரை சாதம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×