search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    சத்தான சுவையான ஜவ்வரிசி மோர்க்களி
    X

    சத்தான சுவையான ஜவ்வரிசி மோர்க்களி

    • வெயிலுக்கு குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவது நல்லது.
    • இன்று ஜவ்வரிசியில் மோர்க்களி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    மாவு ஜவ்வரிசி, தயிர் - தலா 200 கிராம்,

    கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்,

    உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,

    மோர் மிளகாய் - 4,

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஜவ்வரிசியை தயிரில் 3 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்க்கவும்.

    அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், மோர் மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் ஊற வைத்த ஜவ்வரிசி கலவையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். கைவிடாமல் கிளற வேண்டும். அடிபிடிக்கக்கூடாது. அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.

    கடாயில் ஒட்டாமல் களி மாதிரி வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    இப்போது சூப்பராக ஜவ்வரிசி மோர்க்களி ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×