என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளின் மூளை நன்கு வளர்ச்சி பெறவும் தூண்டப்படுவதற்கு ஏற்றதான பயிற்சிகளை விளையாட்டு மூலம் கொடுக்கலாம்.
    குழந்தைகள் தங்களின் ஐந்து வயதை அடைவதற்குள் 90% அளவுக்கு மூளை வளர்ச்சி பெற்றுவிடும் என ஆய்வார்கள் தெரிவிக்கின்றனர். இந்த வயதில் குழந்தைகளுக்கு மூளைக்கான பயிற்சிகளைக் கொடுத்து குழந்தையை ஊக்கப்படுத்த வேண்டும். வெறும் படிப்பு மட்டுமே குழந்தைகளுக்கு போதாது. இன்னும் நிறைய நல்ல விஷயங்களைக் குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டும். 

    பில்டிங் பிளாக்ஸ் விளையாட்டு : ஒரு வயது முடிந்த குழந்தைகளுக்கு தருகின்ற எளிமையான விளையாட்டு இது. வெவ்வேறு தோற்றத்தில், பல நிறங்களில் காணப்படும் இந்த பிளாக்ஸால் உருவத்தைக் கட்டமைக்க வேண்டும். தங்களின் சொந்த கற்பனையால், படைப்பாற்றல் திறமையால் குழந்தைகள் பில்டிங் பிளாக்ஸ் வைத்து ஏதோ ஒரு உருவத்தை செய்வார்கள். இது மூளைக்கு சிறந்த பயிற்சியாகும். மூளை தூண்டப்படும்.

    வார்த்தை விளையாட்டு : ஃப்ளாஷ் கார்டில் உள்ள வார்த்தைகளைப் பார்த்து, அதற்கு ஏற்ற படத்துடன் பொருத்துவது போன்ற விளையாட்டு இது. சிங்கம், புலி, மான், மயில் என விலங்குகளின் பெயரை வைத்துப் படத்தை பொருத்துவது, படத்தை வைத்து பெயரை பொருத்துவது போன்ற விளையாட்டு. எழுத்து திறமை மேலோங்கும். நினைவு திறன் அதிகரிக்கும்

    கண்டுபிடி கண்டுபிடி : ஏதாவது ஒரு பேப்பரில் பந்து என எழுதிவிட்டு அதைக் குழந்தையிடன் காண்பிக்கவும். அந்தப் பந்தை வீட்டில் தேடி கண்டுபிடிக்க சொல்லலாம். இதுபோல வார்த்தை வைத்து பொருளை கண்டுபிடிக்கும் விளையாட்டால் குழந்தைகள் வார்த்தைகளை அதன் சொல் அமைப்பை நன்றாகவே கற்றுக் கொள்வார்கள்.

    போர்ட் கேம்ஸ் : பாம்பு - ஏணி, லூடோ, செஸ் போன்ற போர்டில் விளையாடும் விளையாட்டுகளால் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். பிரச்னையை கையாளும் திறன் மேலோங்கும். பொறுமை, வெற்றி, தோல்வி ஆகியவற்றைப் புரிந்து கொள்வார்கள்.

    ரைம்ஸ் பாடி ஆடுதல் : ரைம்ஸ் பாடல்களை போட்டு பாடிக்கொண்டே நடனமாட சொல்லலாம். குதிப்பது, இடுப்பு ஆட்டுவது, கைகளை அசைப்பது போன்ற உடல் தொடர்பான பயிற்சியாகவும் அமையும். மகிழ்ச்சியான மனநிலை குழந்தைகளுக்கு கிடைக்கும்.

    எண் விளையாட்டு : இசையை ஒலிக்க செய்துவிட்டு, 1 முதல் 100 வரை சொல்ல வேண்டும். பாட்டை நிறுத்திய உடனே எந்த எண்ணில் இருக்கிறார்களோ அந்த எண்ணை எழுதி காண்பிக்கலாம். ஒவ்வொரு முறை பாட்டை நிறுத்தும்போது ஒவ்வொரு குழந்தையும் எண்ணை மாற்றி மாற்றி சொல்லி கொண்டே இருப்பார்கள். இசை நிறுத்தியவுடன் எந்த எண்ணில் விட்டார்களோ அந்த எண்ணை எழுதி காண்பிக்கலாம். குழுவாக விளையாடும் திறன் மேலோங்கும். எண் பற்றிய அறிவு கிடைக்கும்.

    மொழி திறன் :உங்களுக்கு தெரியுமா? குழந்தைகளால் தங்களது 3-5 வயதுக்குள்ளேயே 2-3 மொழிகளைக் கற்கும் திறன் இருக்கும். தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளை வீட்டில் பேசினால், இரண்டையுமே கற்று கொள்ளும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என எந்த மொழியையும் சுலபமாக குழந்தைகளால் கற்க முடியும்.

    உடலுக்குப் பயிற்சி தரும் விளையாட்டு : ஓடுதல், ஸ்கிப்பிங் விளையாடுதல், குதித்தல், ஓடிப் பிடித்து விளையாடுதல், பந்தை பிடித்தல், கொகோ விளையாடுதல் எனப் பல்வேறு விளையாட்டுகளால் பல்வேறு நன்மைகள் குழந்தைகளுக்கு கிடைக்கும். உடற்பயிற்சி, மனபயிற்சி இவை.
    சுவைக்கும் திறனை வீட்டிலிருக்கும் பெரியவர்கள், இளஞ்சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுத்து, அவர்களது திறனை வளர்த்து விடும் முயற்சியில் ஈடுபடுத்த வேண்டும்.
    பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் சிந்தனைகளை சிதற விடாமலும், அறிவுத் திறனை மேம்படுத்தும் வகையிலும் பல பொழுதுபோக்கு நிகழ்வுகளில் அவர்களை ஈடுபடுத்தி அவர்களின் செயல்திறனை அதிகரிக்க வேண்டும்.

    இப்போதைய வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் சிறுவர்களுக்கு கற்பிக்கும் முறை எளிமையாகி விட்டது. நிகழ்நிலை வகுப்புகள் எடுக்கப்படுகின்றன, நிகழ்நிலைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன, மருத்துவ அலோசனைகள், நிகழ்நிலை வழியாக கொடுக்கப்படுகின்றன. அதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பங்கெடுக்க வைத்து, அவர்கள் நேரத்தை இனிமையானதாகவும் உபையோகமுடையதாகவும் மாற்றி அமைக்கலாம். சிறுவர்களுக்கு அதிக நேரம் கணிணியோ கைப்பேசியோ குடுக்காதவாறு வகுப்புகளை சீர்படுத்திக் கொள்ளவேண்டும்.

    கலாச்சாரமும் பேச்சும் ஊருக்கு ஊர் மாறுபட்டிருப்பதைப் போல சமையல் திறனிலும் தனித்துத் தெரிபவர்கள் நம் தமிழர்கள். ”செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” என்பதற்கேற்ப சமையல் கலையின் அறுசுவைகளான காரம், இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகியவற்றை சுவைக்கும் திறனை வீட்டிலிருக்கும் பெரியவர்கள், இளஞ்சிறுவர்களுக்கு இந்த ஊரடங்கு காலத்தில் சொல்லிக் கொடுத்து, அவர்களது திறனை வளர்த்து விடும் முயற்சியில் ஈடுபடுத்த வேண்டும். 

    இதை கற்பிக்கும் வழியாக உணவின் முக்கியத்துவம், உணவை சமைப்பதில் இருக்கும் மகிழ்ச்சி, ஒவ்வொரு உணவிற்கும் உள்ள மருத்துவகுணங்கள், சமைக்கும் போது கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், உணவை வீணடிக்காமல் தேவைக்கேற்ப சமைத்து உண்ணுதல் ஆகியவற்றை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து நல்லொழுக்கத்தை  மேம்படுத்தலாம்.

    பாதாம் பருப்பு கலந்த பாலை குளிர்காலத்தில் அருந்துவதால் குழந்தையின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் குளிரைத் தாங்கக்கூடிய சக்தியைக் குழந்தையின் உடல் பெறுகின்றது.
    நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பாதாம் பருப்பை தருவது எதற்காக என்று அறிந்து கொள்ள வேண்டும். மூளையின் சக்தி பாதாம் பருப்புகளைச் சாப்பிடுவதால் அதிகரிக்கும். பொடியாக அரைத்த பாதாம் பருப்பைப் பாலில் கலந்து தினமும் பருகுவதால் குழந்தையின் உடலில் ஊட்டச்சத்தின் அளவு அதிகமாகச் சேர வாய்ப்புள்ளது. பாதாம் பருப்பு கலந்த பாலை குளிர்காலத்தில் அருந்துவதால் குழந்தையின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் குளிரைத் தாங்கக்கூடிய சக்தியைக் குழந்தையின் உடல் பெறுகின்றது.

    பாதாம் பருப்பில் உள்ள புரதச் சத்தானது மூளையின் இயக்க ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும் நினைவாற்றல் மற்றும் மூளையின் சக்தியைப் பெருகுகின்றது. குழந்தையின் மூளையில் உள்ள செல்களில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்து, அவர்களைப் புத்திசாலியாக மாற்றுகின்றது.

    குளிர் காலத்தில் சளி ,இருமல் போன்ற தொல்லைகள் குழந்தைகளுக்கு ஏற்படுவது இயல்புதான். இந்த மாதிரி நேரத்தில் பாதாம் கலந்த பாலை குழந்தைக்குத் தினமும் பருக தருவதன் மூலம், அவர்களின் உடலின் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்துக் கொள்ள முடியும். இந்த பால் சாப்பிடுவதன் மூலம் குழந்தைகள் எளிதில் குளிர்காலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாக முடியாது.

    பாதாமில் நிறைந்துள்ள விட்டமின் ஏ சத்து கண்களின் வளர்ச்சிக்கு மிக மிக அவசியமானது. இதை சாப்பிடுவதன் மூலம் குழந்தைகளுக்குக் கண் சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படாது. கண் பார்வை கூர்மை அடையும்.

    பாதாம் பருப்பை இரவு நேரத்தில் தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடுங்கள், பின் அதன் தோலை உரித்து, காய விடுங்கள். பிறகு இதனைக் குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுங்கள். ஒரு வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்குத் தரப் பாதாம் பருப்புகளை அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளலாம்.இந்தப் பொடியைக் குழந்தைகளின் உணவுகளில் கலந்து கொடுக்கலாம்.சற்று பெரிய குழந்தை என்றால் சின்ன சின்ன துண்டுகளாகப் பாதாம் பருப்புகளை வெட்டி சாப்பிடக் கொடுக்கலாம்.இருப்பினும் குழந்தையின் தொண்டையில் பாதாம்பருப்பு சிக்க வாய்ப்பு உள்ளது. இதனைத் தவிர்க்கப் பால் அல்லது மற்ற உணவுகளில் சேர்த்துக் கொடுப்பது நல்லது.
    குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் வயிற்றில் பூச்சி இருப்பதாக அர்த்தம். இப்பிரச்சனைகள் இருக்குமெனில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியம்.
    வயிற்றில் புழுக்கள் அதிகம் இருப்பின் நீங்கள் உண்ணும் உணவு செரிமான மண்டலத்துக்குள் செல்லாமல் வயிற்று போக்கை ஏற்படுத்தக்கூடும். அத்துடன் வாயு தொல்லை, குமட்டல், மலச்சிக்கல் மற்றும் வயிற்றில் ஒருவித எரிச்சலும் காணப்படும். நார்ச்சத்து உணவை குழந்தைகளுக்கு தருவதன் மூலம் பிரச்சனையை போக்கலாம். ஒருவேளை நார்ச்சத்து உணவையும் எடுத்துக்கொண்டு இப்பிரச்சனை இருக்குமெனில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியம்.

    மலவாயில் அரிப்பு ஏற்பட இதனால் இரவில் தூக்கம் கெட்டு தேவையில்லாத களைப்புடன் ஒருவர் காலையில் காணப்படவும் கூடும். குழந்தைகளுக்கு இப்பிரச்சனை பெரிதும் காணப்படுவது வழக்கம். அப்படி என்றால் அவர்கள் வயிற்றில் பூச்சுக்கள் இருக்கிறது என அர்த்தமாகும். வயிற்றில் புழுக்கள் இருந்தால் எவ்வளவு தான் நாம் சத்தான உணவை சாப்பிட்டாலும் அதை உறிஞ்சி ஒருவித சோர்வை உங்கள் குழந்தைகளுக்கு தருகிறது. வாரத்திற்கு ஒரு முறை வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிக்க வேண்டியது அவசியமாகும்.

    பசி எடுக்காமல் இருப்பதோடு, உங்கள் எடையும் குறைய ஆரம்பித்தால் வயிற்றில் புழுக்கள் இருப்பதாக அர்த்தம். அதாவது புழுக்கள் நம் வயிற்றில் அதிகளவில் பெருகி இருக்க அப்போது சாப்பிடும் சாப்பாடு என்பது செரிமான மண்டலத்தை எட்டாது. இதனால் பசி என்பது அற்று உங்கள் குழந்தையின் உடல் காணக்கூடும். புழுக்கள் உடலில் இருந்தால் பற்களை கொறிப்போம். இதற்கு காரணம் உடலில் தேங்கிய வழியும் புழுக்களால் தேவையற்ற மன அழுத்தம் கொண்டு நாம் பற்களை என்ன செய்வதென அறியாது செய்வோம். 

    உங்கள் குழந்தைகள் இரவில் படுக்க செல்லும்போது பற்களை கொறித்தால் வயிற்றில் புழுக்கள் இருப்பதாக அர்த்தம். அதேபோல் உடலில் ஏற்படும் இரத்த சோகை போன்றவை ஏற்பட காரணம், உருளை புழுக்கள் உங்கள் குழந்தைகள் சாப்பிடும் இரும்பு சத்து, வைட்டமின் அடங்கிய உணவை உறிஞ்சுவதாலே ஆகும். உடலில் ஒட்டுண்ணிகள் இருந்தால் சரும அரிப்பு மற்றும் எரிச்சல் கூட சில சமயத்தில் ஏற்படும். இந்த அறிகுறிகளெல்லாம் உங்களுக்கு காணப்படுமாயின் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது மிகவும் அவசியமாகும்.
    குழந்தை பருவத்தில் இருந்தே பழங்கள் மற்றும் பழச்சாறுகளை உட்கொள்வது பிற்காலத்தில் நல்ல உணவு பழக்கத்தை பின்பற்ற வைக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
    குழந்தை பருவத்தில் இருந்தே பழங்கள் மற்றும் பழச்சாறுகளை உட்கொள்வது பிற்காலத்தில் நல்ல உணவு பழக்கத்தை பின்பற்ற வைக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 

    இதுகுறித்த ஆய்வை மேற்கொண்ட பாஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் லின் எல்.மூரே கூறுகையில், ‘‘பாலர் பருவத்தில் தினமும் ஒன்றரை கப் பழச்சாறு அல்லது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழ ஜூஸ்களை வீட்டிலேயே தயாரித்து உட்கொண்டவர்கள், அரை கப்புக்கும் குறைவாக பருகிய குழந்தைகளுடன் ஒப்பிடும்போது இளமைப்பருவத்தில் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை பின்பற்றுகிறார்கள். 

    அத்துடன் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தை பருவத்தில் இருந்தே தினமும் பழச்சாறு பருகிய குழந்தைகள் உடல் பருமன் பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை. அவர்களை எடை அதிகரிப்பு பிரச்சினையுடன் தொடர்புபடுத்தி பார்க்க முடிவதில்லை. எந்தவிதமான பக்கவிளைவையும் அவர்கள் எதிர்கொள்ளவில்லை. 

    பழங்கள் சாப்பிடுவது, ஆயுட்காலம் முழுவதும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆரம்ப காலங்களில் பழச்சாற்றைத் தவிர்ப்பது உணவு பழக்கவழக்கங்களில் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்’’ என்கிறார். 
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த குறிப்புகள் நிச்சயம் உங்கள் குழந்தைக்கு நன்கு பசி எடுத்துச் சரியான நேரத்திற்கு முழுமையான உணவைச் சாப்பிடச் செய்ய உதவும் என்று நம்புகின்றோம்.
    உங்கள் குழந்தையை எப்படி நன்கு சாப்பிட வைப்பது என்பதைப் பற்றி இங்கே உங்களுக்கு சில எளிய குறிப்புகள் நிச்சயம் கிடைக்கும். தற்போது, எப்படி உங்கள் குழந்தையைச் சாப்பிட வைப்பது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

    * ஒரே சமயத்தில் அனைத்து உணவையும் கொடுத்து தட்டை நிரப்பிச் சாப்பிட அவனைக் கட்டாயப் படுத்தாமல், சிறிது சிறிதாகத் தந்து அவனைச் சாப்பிட ஊக்கப் படுத்துங்கள். மேலும், ஒரே சமயத்தில் நிறைய உணவைச் சாப்பிடச் சொல்வதை விட, அவ்வப்பாது சிறிது சிறிதாகச் சாப்பிட ஊக்கவிக்கலாம். இதனால் அவனுக்குப் பசியின்மை போய், சரியாகச் சாப்பிடத் தொடங்கி விடுவான்.

    * எப்போதும் ஒரே வகையான உணவைச் செய்து தராமல், அவனுக்குச் சுவாரசியத்தை ஏற்படுத்தும் வகையில், வகை வகையாக உணவைத் தினமும் சமைத்துக் கொடுங்கள். இந்த விசயம் அவனை விரும்பி சாப்பிட ஊக்கப்படுத்தும்.

    * ஒரு குறிப்பிட்ட உணவுப் பட்டியலை மட்டும் பின்பற்றி தினமும் சமைக்காமல், உங்கள் குழந்தைக்காக, அவ்வப்போது புதிதாக ஏதாவது ஒன்றை முயற்சி செய்து சமைத்து தாருங்கள். இது அவனை நன்கு சாப்பிட ஊக்கவிக்கும். மேலும் அவனே உங்களிடம் ஏதாவது ஒன்றை புதிதாகச் செய்து தரச் சொல்லி சாப்பிடுவான்.

    * உங்கள் குழந்தைக்கு பிடிக்கின்றதோ அல்லது பிடிக்கவில்லையோ, அவனை சாப்பிட்டே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள். இது அவனுக்கு உணவின் மீது வெறுப்பை உண்டாக்கலாம். ஒருவித அன்பான அணுகுமுறையைக் கடைப்பிடியுங்கள்.

    * உங்கள் குழந்தைக்குப் புரியும்படி, அவன் சாப்பிடும் உணவு எவ்வளவு சத்துக்கள் நிறைந்தவை, ஆரோக்கியமாக வாழ எவ்வளவு முக்கியமானவை என்று விளக்கிச் சொல்லுங்கள். உணவின் முக்கியத்துவத்தை அவனுக்கு எடுத்துக் கூறுங்கள். இதனால் அவனுக்கு உணவின் மீது மரியாதை வரும். அதனால் அவன் சரியாகச் சாப்பிடுவான்.

    * எவை எல்லாம் உங்கள் குழந்தை சாப்பிடும் போது அவனது கவனத்தை ஈர்க்கின்றதோ, அவற்றை எல்லாம் அகற்றி விடுங்கள். அவன் சாப்பிடும் போது, உணவில் மட்டும் கவனம் வைக்கும்படி செய்யுங்கள். இது அவன் சரியாக சாப்பிட உதவும்.

    * உங்கள் குழந்தை தினமும் சாப்பிடும் நேரத்திற்குச் சரியாகத் தானாக வந்து அமரும் படி அவனைச் சிறு வயதிலிருந்தே பழக்கப் படுத்துங்கள். இப்படிச் செய்வதால்,அவனுக்கு அந்த நேரம் வந்து விட்டாலே தானாகப் பசி எடுக்கத் தொடங்கி விடும்.அதனால் நன்கு சாப்பிடுவான்.

    * உங்கள் குழந்தை பள்ளிக்குச் செல்கிறான் என்றால், பொதுவாகக் காலை நேரங்களில் சரியாகச் சாப்பிட மாட்டான். இதற்கு நேரமின்மை, அவசரம் என்று பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், எந்த ஒரு சூழலிலும் காலை உணவைத் தவிர்க்காமல் அவனை முழுமையாகச் சாப்பிட வைத்துப் பழக்குங்கள். இது மிக முக்கியமான ஒன்று.
    டிஜிட்டல் சாதனங்கள் வழியாக பல ஆசிரியர்கள் மாணவர்களின் இல்லத்திற்குள் நுழைந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறார்கள்.
    கொரோனா ஏற்படுத்தி இருக்கும் அச்சுறுத்தலால் கல்வி முறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. டிஜிட்டல் சாதனங்கள் வழியாக பல ஆசிரியர்கள் மாணவர்களின் இல்லத்திற்குள் நுழைந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறார்கள். வீடியோக்கள் வழியாக வகுப்பில் பாடம் நடத்தும் சூழலையும் மாணவர்களிடத்தில் ஏற்படுத்துவதற்கு மெனக்கெடுகிறார்கள்.

    ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை வீடியோவாக பதிவு செய்வதற்கு உபயோகப்படுத்தும் செல்போன் அல்லது கேமராவை நிறுவி வைப்பதற்கு முக்கோண வடிவ ஸ்டாண்டு தேவைப்படும். இது பெரும்பாலும் தொழில் ரீதியான வீடியோ பயன்பாட்டுக்குத்தான் அதிகமாக உபயோகப்படுத்தப்படும். அது இல்லாத சூழலில் ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் முறையை வீடியோவாக பதிவு செய்யும் செல்போனை நிறுவி வைப்பதற்கு, பலவிதமான மாற்று வழிமுறைகளை கையாள்கிறார்கள். அவை பலருடைய கவனங்களை ஈர்த்திருப்பதோடு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு பலருடைய பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டிருக்கின்றன.

    அத்தகைய புதுமையான வழிமுறையில் ஆன்லைன் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களில் ஒருவர், மவுமிதா. புனேவை சேர்ந்த இவர் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் செல்போனை நிறுவி வைப்பதற்கு துணிகளை உலர வைப்பதற்கு பயன்படுத்தப்படும் ‘ஹேங்கரை’ ஸ்டாண்டாக மாற்றி இருக்கிறார். அதன் நடுப்பகுதியில் துணியை கொண்டு செல்போனை கட்டிவைத்திருக்கிறார். ஹேங்கரின் இருமுனைகளிலும் நாடா போல் துணியை கட்டி தொட்டில்போல் தொங்கவிட்டிருக்கிறார். ஹேங் கரின் கீழ் பகுதியில் நாற்காலி ஒன்றை வைத்து அதிலும் நாடா துணியை இழுத்துப்பிடித்து செல்போன் கீழே விழாத அளவுக்கு இறுக்கமாக கட்டிவைத்திருக்கிறார்.

    மவுமிதா நடத்தும் பாடத்தை செல்போன் அந்தரத்தில் தொங்கியபடி வீடியோவாக பதிவு செய்கிறது. அந்த வீடியோ வழியாக வீட்டில் இருந்தபடி மாணவர்கள் மவுமிதா நடத்தும் பாடத்தை ஆன்லைனில் கற்கிறார்கள். “என்னிடம் இதற்கான நவீன முக்காலி இல்லாததால் எனது வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்பு எடுப்பதற்கு இந்த யுக்தியை கையாண்டிருக்கிறேன். எனது ஒரே நோக்கம் மாணவர்களுக்கு வகுப்பறை சூழலை உருவாக்கிக்கொடுக்கவேண்டும் என்பதுதான். பள்ளிக்கூடத்தில் எப்படி பாடம் நடத்துவேனோ அதுபோலத்தான் இப்போதும் ஆன்லைன் வழியாக பாடங்களை கற்கிறார்கள். இந்த வழிமுறை மாணவர்களுக்கு பலனளிப்பதாக அமைந்திருக்கிறது” என்கிறார்.

    மவுமிதா தனது வீட்டில் செல்போனை ஹேங்கரில் கட்டி தொங்கவிட்டு பாடம் எடுத்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அவரது முயற்சியை பலரும் பாராட்டியதோடு அதுபோல் மாற்றுவழி முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களின் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். சிலர் மவுமிதாவுக்கு உதவி செய்வதற்கும் முன்வந்திருக்கிறார்கள்.

    “உங்களுக்கு இதற்காக தேவைப்படும் நவீன முக்காலி வழங்குவதற்கு விரும்புகிறேன். நீங்கள் அதை ஏற்றுக்கொண்டால் மகிழ்ச்சி அடைவேன். உங்களுடைய சக ஆசிரியர்களுக்கு தேவைப்பட்டால் அவர்களுக்கும் அனுப்பிவைக்கிறேன். உங்கள் பணியை மேலும் சிறப்பாக தொடருங்கள்” என்று ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

    குஜராத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் நாற்காலியில் அமர்ந்தபடி மற்றொரு நாற்காலியில் நோட்டை வைத்து எழுதுகிறார். அந்த நாற்காலியின் கைப்பிடிப்பகுதிகள் மீது நீளமான ஒரு பொருளை சொருகிவைத்து அதன் மீது செல்போனை வைத்திருக்கிறார். அந்த செல்போன் அந்த ஆசிரியர் எழுதுவதை வீடியோவாக பதிவு செய்கிறது. அது ஆன்லைன் வழியாக மாணவர்களை சென்றடைகிறது. மற்றொரு மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் நீளமான குச்சியில் செல்போனை கட்டிவைத்து ஆன்லைன் வகுப்பு நடத்துகிறார். சில ஆசிரியர்கள் செல்பி எடுப்பதற்கு பயன்படுத்தும் ஸ்டிக்கை ஸ்டாண்டாக மாற்றி இருக்கிறார்கள். 
    குழந்தைகளுக்கு பிடித்தமான தகவல்களை பகிர்ந்து, வீடியோ உருவாக்கியும் பிரபலமாகி, இன்று யூ-டியூப் குழந்தை பிரபலமாக ஜொலிக்கிறார்கள். அவர்களை பற்றிய சிறு தொகுப்பு இது.
    ‘யூ-டியூப்’, குழந்தைகளுக்கு பரீட்சயமான தளம். பள்ளிப்படிப்பில் தொடங்கி பொழுதுபோக்கு வரை குழந்தைகளுக்கு தேவையான எல்லா தகவல்களும் இதில் கிடைக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கான வீடியோக்களை, குழந்தைகளே உருவாக்குவதால் மழலைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி பார்க்கிறார்கள். இத்தகைய யூ-டியூப் தளத்தில் சில குழந்தை நட்சத்திரங்களும் மின்னுகிறார்கள். குழந்தைகளுக்கு பிடித்தமான தகவல்களை பகிர்ந்து, வீடியோ உருவாக்கியும் பிரபலமாகி, இன்று யூ-டியூப் குழந்தை பிரபலமாக ஜொலிக்கிறார்கள். அவர்களை பற்றிய சிறு தொகுப்பு இது. யார் இவர்கள்?, எப்படி பிரபலமானார்கள், யூ-டியூப்பில் என்ன செய்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்வோம்.

    ஹெய்லி-ஹெய்லி மேஜிக்கல் பிளே ஹவுஸ் 1.2 மில்லியன் சந்தாதாரர்கள்
    குழந்தைகளுக்கான புத்தம் புது ஆடைகளை யூ-டியூப்பில் விமர்சிப்பது ஹெய்லியின் வேலை. மிக்கி மவுஸ், டோரா, புரோசன், கேப்டன் அமெரிக்கா, அயன்மேன், ஸ்பைடர்மேன்... என சந்தைகளில் இறக்குமதியாகும் புதுப்புது உடைகளை வாங்கி அணிந்து, அதன் தரம், விலை பற்றி ரொம்ப கூலாக பேசுகிறார். 

    போரம்-போரம் டியூப் விலாக் 14 மில்லியன் சந்தாதாரர்கள்

    7 வயது மட்டுமே நிரம்ப பெற்றிருக்கும் போரம், சூப்பர் மார்க்கெட்டுகளை விமர்சிப்பதில் கில்லாடி. உலக பிரபல சூப்பர் மார்க்கெட் பற்றியும், அங்கு கிடைக்கும் உணவுகள் பற்றியும் விமர்சிக்கிறார். குறிப்பாக நூடுல்ஸ், பாக்கெட் தின்பண்டங்கள், இனிப்புகள் போன்றவற்றை வாங்கி, அதை பிரித்து காண்பித்து, சிலவற்றை சமைத்து காண்பித்தும் ரகளை செய்வார். அதனால்தான், இந்த குட்டி சுட்டியின் யூ-டியூப் சேனலை 14 மில்லியன் மக்கள் பின் தொடர்கிறார்கள். இவர் யூ-டியூப்பில் கிடைத்த பணத்தில், தனி அலுவலகமும் உருவாக்கி இருப்பதோடு, சூப்பர் மார்க்கெட் அமைக்கும் பணியிலும் ஆர்வம் காட்டுகிறார். 

    ஜில்லியன் மற்றும் அடிலைட்- பேபிடீத்4 1.8 மில்லியன் சந்தாதாரர்கள்

    சகோதரிகளான ஜில்லியன் மற்றும் அடிலைட் இருவரும் பென்சில்வேனியாவை சேர்ந்தவர்கள். பெற்றோர் வாங்கிக்கொடுத்த இனிப்பு மிட்டாய்கள், தின்பண்டங்களை விமர்சிக்க தொடங்கி பிரபலமானவர்கள். குழந்தைகளை குறிவைத்து சந்தைகளில் புதிதாக களமிறக்கப்படும் இனிப்பு மிட்டாய்களையும், தின்பண்டங்களையும் இருவருமாக சுவைபார்த்துவிட்டு, அதுபற்றிய விமர்சனங்களை தைரியமாக முன்வைக்கிறார்கள். 

    ஈதன்- ஈதன் கேமர்1.9 மில்லியன் சந்தாதாரர்கள்

    12 வயது சுட்டியான ஈதன் இங்கிலாந்தை சேர்ந்தவர். குழந்தைகள் விளையாடக்கூடிய வீடியோ கேம்களை ஆராய்வது, விளையாடி காண்பிப்பது, விளையாட்டுகளுக்கு தரவரிசை கொடுப்பது என ரொம்ப விளையாட்டாக பொழுதை கழிக்கிறார். சில சமயங்களில் ஆன்லைனில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான குழந்தைகள் விளையாடக்கூடிய ஆன்லைன் கேமிங் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து, அந்த வீடியோக்களையும் யூ-டியூப்பில் பதிவேற்றுவார்.

    அலிசா டெசிக்-லாகு உன்டக் கமு3.5 மில்லியன் சந்தாதாரர்கள்

    குழந்தைகளுக்கு பாட்டு பாட சொல்லிக்கொடுப்பதும், கிட்டார் வாசிக்க சொல்லிக்கொடுப்பதும் அலிசா டெசிக்கின் வேலை. சில நேரங்களில் தோழிகளுடன் சேர்ந்து நடனமாடி, அதையும் யூ-டியூப் தளத்தில் பதிவிடுவார். மழலை மொழியில் இவர் பாடுவதை ரசிக்கவும், இசை வாத்திய பயிற்சி பெறவும் இவரை அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இதன் காரணமாக சொகுசு கார் வாங்கும் அளவிற்கான பணம் யூ-டியூப் மூலமாக கிடைத்தது.
    பாரம்பரிய விளையாட்டுகளால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அப்படி ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் தரும் விளையாட்டுகளைப் பற்றி பார்க்கலாம்.
    உடலைக் காக்கும் விளையாட்டுகள் நம் பாரம்பரிய விளையாட்டுகள் எனப் பெருமையாக சொல்லலாம். ஒவ்வொரு விளையாட்டுகளிலும் பல நன்மைகள் இருக்கின்றன. பாரம்பரிய விளையாட்டுகளால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். மூளைத்திறன், கவனத்திறன், பார்வைத்திறன், வர்ம புள்ளிகள் தூண்டப்படுவது, அக்கு புள்ளிகள் இயக்கம் பெறுவது என ஒவ்வொரு விளையாட்டும் பல்வேறு மருத்துவ பலன்களைத் தருகின்றன. அப்படி ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் தரும் விளையாட்டுகளைப் பற்றி பார்க்கலாம்.

    பரமபதம் : ஏணி, பாம்பு என இரண்டு படங்கள் வைத்து, 100 எண்ணிக்கை கொண்ட கட்டங்கள் இருக்கும். தாயக் கட்டையில் விழும் எண்களை வைத்து, காயை நகர்த்த வேண்டும். இந்த விளையாட்டால், கணிப்பு திறன், கணித திறன் கிடைக்கும். வெற்றி, தோல்வி, ஏற்றம், இறக்கம் பற்றிய அறிவு கிடைக்கும்.

    பல்லாங்குழி : 12 குழிகளில் புளியங்கொட்டை போட்டு, வரிசையாக எடுத்து விளையாடும் விளையாட்டு. எண்களை சொல்லிக் கொண்டே விளையாட வாய்ப்பாகும். சிந்தனைத்திறன் மேலோங்கும். கைவிரல்களுக்கு நிறைய வேலைக் கிடைக்கும். குழந்தைகளின் மோட்டார் ஸ்கில்ஸ் நன்கு செயல்பட உதவும்.

    மியூசிக் சேர் : பாடலை ஒலிக்க விட்டு, சுற்றி வைத்திருக்கும் சேர்களை சுற்றி ஓடும் விளையாட்டு. குழந்தைகளுக்கு உடலுழைப்பு கிடைக்கும். ஓடுவது, உட்காருவது, கவனிப்பது போன்றவை இந்த விளையாட்டில் அதிகம். குண்டு குழந்தைகள் இளைக்க வாய்ப்பு உண்டு. கால் தசைகளுக்கு வலு கிடைக்கும்.

    கபடி அல்லது சடு குடு : 2 குழு இருப்பார்கள். இவர்களுக்கு இடையே ஒரு பெரிய கோடு இருக்கும். ஒரு நபர் எதிர் டீமில் உள்ள ஒரு நபரை தொட வேண்டும். கபடி கபடி எனச் சொல்லி கொண்டே இருக்க வேண்டும். உடலுழைப்பு தரும் விளையாட்டு இது. மூச்சுப்பயிற்சிக்கு இணையான பலன்கள் கிடைக்கும். பேச்சுத்திறன் மேலோங்கும். நுரையீரல் நன்கு செயல்படும்.

    பச்சக்குதிரை : ஒரு நபரை கீழே குனிய வைத்து, மற்றொருவர் தனது இரு கைகளையும் குனிந்தவரின் முதுகில் வைத்து தாண்டி ஆடும் ஆட்டம். கை, கால்களுக்கு மிகுந்த பலம் கிடைக்கும். கை, கால்கள் நன்கு ஸ்ட்ரெச் ஆகும். வளைவுத்தன்மை கிடைக்கிறது. பலமுடன் மற்றொருவரை தாங்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பலம் தரும் விளையாட்டு.

    பாண்டி ஆட்டம் : செவ்வகம் வரைந்து, அதில் கட்டங்கள் வரைந்து ஒரு காலை மடக்கி, இன்னொரு காலால் நொண்டி அடிப்பது போல் நடந்து கொண்டு விளையாடும் ஆட்டம். கால்களின் தசை நரம்புகளுக்கு சீரான இயக்கம் கிடைக்கிறது. கால்களுக்கு மிகுந்த பலம் கிடைக்கிறது. உடல் சமநிலை சீராகிறது.

    கில்லியாட்டம் : ஒரு சின்ன கட்டையை தரையில் வைத்து, அந்த கட்டையை பெரிதான கட்டையைக் கொண்டு அடித்து, எறிந்து, விளையாடுவது கில்லி விளையாட்டாகும். உடல் இயக்கங்கள் சீராக நடைப்பெறும்.

    கும்மி ஆட்டம் : முளைவிட்ட தானியங்களை, ஒரு மண் பாண்டத்தில் போட்டு, நன்கு வளர்ந்து இருக்கும். அதனை முலைப்பாரி என்று கூறுவர். இதை நடுவில் வைத்து, பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் தட்டி, கும்மிப்பாட்டு பாடுவர். இதனால் கைகளுக்கு ரத்த ஓட்டம் சீராக கிடைக்கிறது.

    பம்பரம் : ஒரு வட்டத்தில் 3 பம்பரங்கள் வைக்கப்படும். வட்டத்துக்குள் உள்ள 3 பம்பரத்தை, தன் பம்பரத்தால் சுற்றி, விளையாடி பம்பரத்தை வெளியே வர செய்ய வேண்டும். பார்வைத்திறன், கவனத்திறன் மேலோங்கும்.

    கோலிக்குண்டு : கோலியை ஒரு முனையில் ஒருவர் வைத்துக்கொள்ள, மற்றொருவர் தன்னுடைய கோலி குண்டை தனது ஆட்காட்டி விரலைக் கொண்டு குறிப்பார்த்து அடிக்க வேண்டும். குழந்தைகளின் பார்வை திறன் மேலோங்கும். கவனிப்பு திறன் அதிகரிக்கும். கைகளில் உள்ள வர்மப்புள்ளிகள் தூண்டப்படும். 
    குழந்தைகளுக்கு எண்ணெயுடன் மசாஜ் செய்வது அவர்களின் எடை அதிகரிப்பை மேம்படுத்தும். இது உறுப்புகளை ஒழுங்குபடுத்துவதில் நரம்பு மண்டலத்திற்கு உதவுகிறது மற்றும் குழந்தையின் இதயத் துடிப்பை சீரான வேகத்தில் வைத்திருக்க உதவுகிறது.
    குழந்தைகளுக்கு எண்ணெயுடன் மசாஜ் செய்வது அவர்களின் எடை அதிகரிப்பை மேம்படுத்தும். வயிற்று உட்பட உடலின் பிற முக்கிய உறுப்புகளுடன் மூளையை இணைக்கும் ஒரு முக்கிய நரம்பு – வேகஸ் நரம்பு தூண்டுகிறது என்பதால் இது எடை குறைந்த, முன்கூட்டிய குழந்தைகளுக்கு அதிசயங்களைச் செய்கிறது. இது புதிதாகப் பிறந்தவர்களில் செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது, எடை அதிகரிக்க உதவுகிறது.

    ஒரு நல்ல மசாஜ் தொடர்ந்து ஒரு நல்ல சூடான மழை உங்கள் குழந்தைக்கு நல்ல தூக்கத்தைப் பெற வேண்டும். இது உறுப்புகளை ஒழுங்குபடுத்துவதில் நரம்பு மண்டலத்திற்கு உதவுகிறது மற்றும் முன்கூட்டிய குழந்தையின் இதயத் துடிப்பை சீரான வேகத்தில் வைத்திருக்க உதவுகிறது.

    மசாஜ் செய்வது சற்று நிதானத்தை அளிக்கிறது மற்றும் குழந்தையை அமைதிப்படுத்தும். குழந்தைகளின் முழங்கால்களைப் பிடித்து, வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் நான்கு தடவைகள் வயிற்றுக்குள் மெதுவாகத் தள்ளுவது குழந்தைக்கு அமைதியான நிலையை கொடுக்கும் பல தொந்தரவுக்கு இது சிறந்தது.

    குழந்தைக்கு மசாஜ் செய்யும் போது குடும்பத்தில் உள்ள தாய்மார்கள் அல்லது பெரியவர்கள் தங்கள் சிறப்பு நேரத்தைப் பெறுகிறார்கள், மேலும் இது ஒரு அழகான பிணைப்பை உறுதிப்படுத்த வழிவகுக்கிறது. தொடர்புகள், கண்ணுக்குத் தொடர்பு, மசாஜ் செய்யும் போது முனுமுனுப்பது குழந்தையின் உடல் மற்றும் மூளை செயல்பாட்டின் வளர்ச்சியை வளர்க்க உதவுகிறது.

    மசாஜ் செய்வது எப்படி?

    ஒரு வசதியான நிலையில் உட்கார்ந்து உங்கள் குழந்தையை கால்களில் அல்லது மென்மையான பாயில் படுக்க வைக்கவும்.

    மசாஜ் செய்ய எண்ணெய்கள் அல்லது குழந்தை மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்துங்கள்.

    இந்தியாவில், எள் எண்ணெய் குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்கான முதல் தேர்வாகும், ஏனெனில் இது தசைகள் மற்றும் எலும்புகளுக்கு போதுமான பலத்தை அளிக்கிறது.

    ஆலிவ் எண்ணெய் மற்றொரு சிறந்த தேர்வாகும். உங்கள் குழந்தைக்கு எது பொருத்தமானது என்பதை அறிய குழந்தை மருத்துவரிடம் பேசுங்கள்.

    படுக்கைக்கு நேரத்திற்கு முன் பிசுபிசுப்பு அல்லாத மாய்ஸ்சுரைசரை கொண்டு மசாஜ் செய்வது உங்கள் குழந்தை நன்றாக தூங்க உதவும். 
    உங்கள் திருமண வாழ்க்கை தோல்வியடையும்போது, அதற்காக உங்கள் குழந்தையைப் பாதிப்படைய விடாதீர்கள். அமைதியாக விளக்குங்கள். உங்கள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து ஏற்றுக் கொள்ளுங்கள்
    ஒரு விவாகரத்தில், மிகவும் அதிகமாக பாதிக்கப்படுவது பெரும்பாலும் குழந்தைகள்தான், ஏனெனில் ஒரு தவறும் செய்யாமலே, இரண்டு பெற்றோரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்திற்கு ஆளாவது அவர்கள்தான். ஒன்று அல்லது இரண்டு பெற்றோரிடம் இருந்தும் உணர்வு ரீதியாக விலகி இருப்பதால், அவர்கள் ஏராளமான, ஆழமான சோகத்திற்கு ஆளாகின்றனர். 

    குழந்தைகளுடன் போதுமான அளவு நேரத்தை முறையாக நீங்கள் ஒதுக்க வேண்டும், அவர்களுடைய தினசரி வழக்கங்கள் செயல்பாடுகளில் நீங்கள் அதிக ஆர்வமும் அக்கறையும் செலுத்த வேண்டும். அவர்களுடன் விளையாட நேரம் ஒதுக்குங்கள், தாய்-குழந்தைக்குமான பிரத்யேக உறவை உருவாக்க போதுமான விசேஷ நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பெரும்பாலான சிறு குழந்தைகளுக்கு, தங்கள் பெற்றோர்கள் ஏன் பிரிந்து போகின்றனர் என்று புரிவதில்லை, வளர்ந்த குழந்தைகள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக நினைக்கிறார்கள். நேரம் எடுத்து, பொறுமையாக அவர்களுக்கு விளக்கிக் கூற வேண்டியது உங்களுடைய பொறுப்பு.

    உங்கள் குழந்தைகள் உங்களை நம்புவதற்கு அடிப்படையாக இருப்பது, இரண்டு பெற்றோரும் ஒன்றாக இருக்கும்போது பாதுகாப்பாக உணர்வதே. உங்களுக்கு இடையே எந்த வேறுபாடுகள் பிரச்சனைகள் இருந்தாலும், புதிய கண்ணோட்டத்துடன் இருந்திடுங்கள். உங்கள் குழந்தையின் மேல் அக்கறை காட்டுவதே உங்களுக்கான புதிய இலக்காக இருக்க வேண்டும்.அவர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள், வேடிக்கை காட்டுங்கள். உங்கள் முன்னாள் கணவருடன் இணக்கமான உறவு இருந்தால், சில வாரங்களுக்கு ஒருமுறை இருவரும் சேர்ந்து குழந்தைகளுடன் வெளியே செல்ல திட்டமிடுங்கள். வெளியே செல்லும்போது, குழந்தையின் மனதில் பெற்றோர் நம்மை கஷ்டப்படுத்திவிட்டனர் என்று நினைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    குழந்தைகளின் வாழ்க்கையில் புதிய நபர்கள் அறிமுகமாகும்போது, அதாவது உங்களுக்கோ, உங்கள் துணைவருக்கோ புதிய வாழ்க்கைத் துணை வரும்போது, அவர்களை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்துங்கள். உங்கள் குழந்தைகள் அவர்களைப் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அன்பாகவும் அரவணைப்பாகவும் உணர்த்திடுங்கள்.
    குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்கள் அனைத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை பெற்றோர் விதிக்கக்கூடாது. இப்படிப்பட்ட நிபந்தனைகளோடு குழந்தைகளை வளர்ப்பவர்கள் அடக்குமுறை எண்ணம் கொண்ட பெற்றோராவர்.
    1. அதிக கட்டுப்பாடு

    தினமும் துல்லியமாக குறிப்பிட்ட நேரத்தில் தூங்கவைப்பது- அன்றாடம் குறிப்பிட்ட நேரத்தில் விழித்தாகவேண்டும் என்பது- டி.வி. நிகழ்ச்சிகள் பார்க்க நேரம் ஒதுக்குவது- குறிப்பிட்ட நேரத்தில் படித்துதான் ஆகவேண்டும் என்பது, போன்று குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்கள் அனைத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை பெற்றோர் விதிக்கக்கூடாது. அதை குழந்தைகள் மீறும்போது தண்டனை வழங்கும் வழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. இப்படிப்பட்ட நிபந்தனைகளோடு குழந்தைகளை வளர்ப்பவர்கள் அடக்குமுறை எண்ணம் கொண்ட பெற்றோராவர்.

    இத்தகைய பெற்றோரிடம் அடக்குமுறை உணர்வுதான் மேலோங்கியிருக்கும். அன்பு இருக்காது. குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல், அவர்களை பொம்மைபோன்று நினைத்துக்கொண்டு அவர்களை தங்கள் இஷ்டத்துக்கு வளைக்க முயற்சிப்பார்கள். தங்கள் விருப்பப்படியே குழந்தைகள் வளரவேண்டும் என்றும் இத்தகைய பெற்றோர்கள் எதிர்பார்ப்பார்கள்.

    எதிர்விளைவுகள்

    இப்படி அடக்குமுறைக்கு உள்ளாகி வளரும் குழந்தைகள் டீன்ஏஜ் பருவத்தில் பெற்றோரின் அடக்குமுறை சுபாவத்திற்கு பதிலடி கொடுக்கத்தொடங்கும். இது குடும்பத்திற்குள் கடுமையான பிரச்சினைகளை உருவாக்கும். அவர்களில் சிலர் மோசமான நண்பர்களால் ஈர்க்கப்பட்டு போதைப் பொருள் பழக்கத்திற்கும் உள்ளாகிவிடக்கூடும். அதுவரை கடுமையான கட்டுப்பாடுகளோடு வளர்ந்து வருகிறவர்களுக்கு டீன்ஏஜில் சுதந்திரம் கொடுக்கும்போது, அவர்கள் அளவற்ற சுதந்திரத்தை அனுபவிக்க முயற்சிப்பார்கள். எல்லையற்ற சுதந்திரத்தை திடீரென்று அனுபவிக்கும் இவர்களிடம் நள்ளிரவில் ஊர் சுற்றுதல், வன்முறை செயல்பாடுகளில் ஈடுபடுதல், அதிக வேகத்தில் கார் ஓட்டுதல் போன்ற முரண்பாடான பழக்கவழக்கங்கள் தோன்றக்கூடும். இது அவர்களது எதிர்காலத்தை பாதிக்கும் நிலை ஏற்படலாம்.

    2. கவனிப்பின்மை

    பெற்றோர் இருவரும் வேலைபார்ப்பவர்களாக இருக்கும்போது, அவர்கள் கவனம் பெரும்பாலும் வேலையை சுற்றியே இருக்கும். அதனால் குழந்தைகளை அடுத்தவர்கள் பொறுப்பில்விட்டுவிடுவார்கள். தாத்தா-பாட்டி, உறவினர் அல்லது வேலைக்காரர் பொறுப்பில் அந்த குழந்தைகள் வளர்வார்கள். அவ்வப்போது குழந்தைகளை வந்து பார்த்துவிட்டு பரிசு பொருட்கள், பணம் போன்றவற்றை கொடுத்துவிட்டு செல்வார்கள். இப்படிப்பட்ட சூழலில் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர் தங்களை கவனிக்கவில்லை என்ற மனக்குறை இருந்துகொண்டிருக்கும். பெற்றோர் புறக்கணிப்பதாக கருதிவிடுவார்கள்.

    எதிர்விளைவுகள்

    பெற்றோரின் அன்பு கிடைக்காத இந்த குழந்தைகளிடம் கட்டுப்பாடான வாழ்க்கைமுறை இருக்காது. தாத்தா-பாட்டிகள், அவர்களால் வளர்க்கப்படும் குழந்தைகளின் விருப்பத்திற்கெல்லாம் வளைந்துகொடுப்பார்கள். அதனால் இத்தகைய குழந்தைகளிடம் அடம்பிடிக்கும் தன்மை அதிகமாக இருந்துகொண்டிருக்கும். தாங்கள் விரும்பியதை சாதிக்க ‘எமோஷனல் பிளாக்மெயில்’ செய்வார்கள். குழந்தைகள் பெற்றோரால் வளர்க்கப்படும்போது அவர்களிடமிருந்து பெரும்பாலான வாழ்க்கைப்பாடங்களை பார்த்து, தெரிந்து கற்றுக்கொள்வார்கள். அந்த வாழ்வியல் அறிவு குழந்தைகளுக்கு மிக அவசியம். வேலைக்காரர்களிடமோ, மற்றவர்களிடமோ வளரும் குழந்தைகளுக்கு அத்தகைய வாழ்க்கைப் பாடங்கள் அரைகுறையாகத்தான் கிடைக்கும்.

    பெற்றோரின் முழு கவனிப்பு கிடைக்காத குழந்தைகள், நண்பர்களால் அதிகம் ஈர்க்கப்படுவார்கள். நண்பர்களின் பழக்கவழக்கங்கள் அவர்களிடம் உருவாகும். நல்ல நண்பர்கள் கிடைத்தால் அது அதிர்ஷ்டம். தவறான நண்பர்கள் கிடைத்தால் முரண்பாடான பாதைக்கு அவர்களை இழுத்துச்சென்றுவிடுவார்கள்.

    3. பொறுப்பின்மை

    குழந்தைகளின் அனைத்து செயல்களுக்கும் விலை நிர்ணயிக்கக்கூடாது. அதாவது படிப்பதற்கு சாக்லேட் கொடுப்பது, பரீட்சை நன்றாக எழுதுவதற்கு புதிய ஷூ வாங்கிக்கொடுப்பது போன்ற பழக்கங்களை உருவாக்குவது பொறுப்பற்ற செயலாகும். இந்த நிலை நீடித்தால் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு தக்கபடியான பொருட்களை கேட்கத்தொடங்கிவிடும். அது தவறான முன்னுதாரணமாகிவிடும்.

    எதிர்விளைவுகள்

    குழந்தைகளிடம் ‘படிப்பதும், பரீட்சை எழுதுவதும் அவர்கள் எதிர்காலம் சிறந்து விளங்குவதற்காக செய்யப்படும் செயல்’ என்பதை உணர்த்தவேண்டும். அப்படியானால்தான் அவர்களிடம் பொறுப்பு உருவாகும். கிடைக்கும் சாக்லேட்டுக்காகவும், ஷூவுக்காகவும் குழந்தைகள் வேலைபார்க்கத் தொடங்கிவிட்டால், அது அவர்களது எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும். 
    ×