என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    கீழே கொடுக்கப்பட்டுள்ள இத்துதியை தினமும் 16 முறை பாராயணம் செய்து வந்தால் உணவிற்கு பஞ்சமே இருக்காது.
    அர்காபாமருணாம் பராவ்ருததநூமாநந்த பூர்ணாநநாம்
    முக்தாஹார விபூஷிதாம் குசபராநம்ராம் ஸகாஞ்சீகுணாம்
    தேவீம் திவ்யரஸாந்ந பூர்ணகர காம்போஜ தர்வீகராம்
    த்யாயேச் சங்கர வல்லபாம் த்ரிநயநாமம்பாம் ப்ரவலம்பாலகாம்

    - அன்னபூர்ணா த்யானம்

    பொருள்: அன்னபூரணி அம்பிகை உதய சூரியனைப் பழிக்கும் செந்நிறத்தோடு மந்தஹாஸம் ததும்பும் பூரண சந்திரனைப் போன்ற திருமுகத்தோடு முக்தாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறாள். அன்னையின் கைகளில் அம்ருதம் போன்ற அன்னபாத்திரம் பிரகாசிக்கின்றது. இத்துதியை தினமும் 16 முறை பாராயணம் செய்து வந்தால் உணவிற்கு பஞ்சமே இருக்காது.

    சர்ப்ப தோஷம், திருமணத்தடை நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
    மிக அதீத சக்தி வாய்ந்த, கீழ்கண்ட நவநாக மந்திரத்தை தினசரி குளித்ததும் 9 கூறி மனதார நாகங்களை வழிபட்டு வர சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம், திருமண தடை, மண வாழ்வில் சோதனைகள் போன்றவை விலகி வாழ்வில் நன்மைகள் வந்து சேரும்.

    குறிப்பு : பாம்புகளை அடிப்பது, தோல் பொருட்கள் உபயோகம் செய்வது போன்றவற்றையும் அடியோடு நிறுத்தினால் மட்டுமே மந்திரத்தால் பலன் சேரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    அனந்தம் வாஸுகிம் சேஷம்
    பத்மநாபம் ஸ கம்பளம்
    ஷங்கப்பலம் தர்டராஷ்ட்ரம்
    தக்ஸகம் கலியம் தத :

    மாத சிவராத்திரி நாளில், கீழே கொடுக்கப்பட்டுள்ள வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, சிவபெருமானை வழிபட்டால், சகல யோகங்களும் பெறலாம்.
    மாத சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, சிவபெருமானை வழிபட்டால், சகல யோகங்களும் பெறலாம். ஞானம் பெற்று பூரண வாழ்வை அடையலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரினேத்ரம் ச த்ரியாயுதம்

    த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

    த்ரிசா கைஃ பில்வபத்ரைச்ச அச்சித்ரைஃ கோமலை ஸுபை:

    தவபூஜாம் கரிஷ்யாமி ஏக வில்வம் சிவார்ப்பணம்

    கோடி கன்யா மஹாதானம் திலபர்வத கோடய:

    காம்சனம் க்ஷீலதானேன ஏக வில்வம் சிவார்ப்பணம்

    காசி க்ஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்சனம்

    ப்ரயாகே மாதவம் த்ரூஷ்ட்வா ஏக வில்வம் சிவார்ப்பணம்

    இம்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஷ்வரா

    நிக்தம் ஹௌஷ்யாமி தேவே ஏக வில்வம் சிவார்ப்பணம்

    ராமலிம்க ப்ரதிஷ்டா ச வைவாஹிக க்றுதம் ததா

    தடாகானிச ஸம்தானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

    அகம்ட பில்வபத்ரம் ச ஆயுதம் சிவபூஜனம்

    க்றுதம் னாம ஸஹஸ்ரேண ஏக வில்வம் சிவார்ப்பணம்

    உமயா ஸஹதேவேச நந்தி வாஹனமேவ ச

    பஸ்மலேபன ஸர்வாங்கம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

    ஸாலக்ராமேஷு விப்ராணாம் தடாகம் தசகூபயோ:

    யஜ்னகோடி ஸஹஸ்ரஸ்ச ஏக வில்வம் சிவார்ப்பணம்

    தம்தி கோடி ஸஹஸ்ரேஷு அஸ்வமேத சதக்ரதௌ

    கோடிகன்யா மஹாதானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

    பில்வாணாம் தர்சனம் புண்யம் ஸ்பர்சனம் பாபனாசனம்

    அகோர பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

    ஸஹஸ்ரவேத பாடேஷு ப்ரஹ்மஸ்தாபன முச்யதே

    அனேகவ்ரத கோடீனாம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

    அன்னதான ஸஹஸ்ரேஷு ஸஹஸ்ரோப நயனம் ததா

    அனேக ஜன்மபாபானி ஏக வில்வம் சிவார்ப்பணம்

    பில்வஸ்தோத்ரமிதம் புண்யம் ய படேத் சிவ ஸன்னிதௌ

    சிவலோகமவாப்னோதி சிவேன சஹ மொததே

    வேதம் நான்கிலும் மெய் பொருளாவது.  நாதன் நாமம் நமசிவாயவே என்று சிவ வழிபாடு செய்வோம். சிக்கலான வாழ்க்கையை சீர்படுத்தி அருளுவான் ஈசன்!
    கண் திருஷ்டி, பிறரால் ஏவப்பட்ட இன்னல்கள், காரியத் தடைகள் போன்றவை விலக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி வழிபடுவது சிறப்பானது.
    தடைகளைப் போக்கி வெற்றி, நன்மைகளைத் தந்தருள்பவர் ஸ்ரீ அகோர மூர்த்தி. மயிலாடுதுறை அருகே உள்ள திருவெண் காட்டில் இப்பெருமானை தரிசிக்கலாம்.  

    கண் திருஷ்டி, பிறரால் ஏவப்பட்ட இன்னல்கள், காரியத் தடைகள் போன்றவை விலக இவரை வழிபடுவது சிறப்பானது. தினமும் அதிகாலையில் 21 முறை வீதம் இத்துதியைச் சொல்லி வந்தால், நல்ல பலன் நிச்சயம்.

    ஸகல கன ஸமாபம்
    பீமதம்ஷ்ட்ரம் த்ரிநேத்ரம்
    புஜகதரம கோரம்
    ரக்த வஸ்த்ராங்க தாரம்
    பரசு டமரு கட்கம்
    கேடகம் பாணச்சாயை
    திரிசிகநர கபாலை
    விப்ரதாம் பாவயாமி
    சீரடி ஸ்ரீ சாய்நாதருக்கு உகந்த ஸ்லோகங்களை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நம் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
    ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
    சச்சிதானந்தாய தீமஹி
    தன்னோ சாய் ப்ரசோதயாத்.

    ஸ்ரீ சாய்நாதர் திருவடி

    சாய் நாதர் திருவடியே
    சம்பத் தளிக்கும் திருவடியே
    நேயம் மிகுந்த திருவடியே
    நினைத்த தளிக்கும் திருவடியே
    தெய்வ பாபா திருவடியே
    தீரம் அளிக்கும் திருவடியே
    உயர்வை அளிக்கும் திருவடியே
    உந்தன் அற்புதத் திருவடியே!

    ஸ்ரீ சீரடி சாய்பாபாவின் தியான ஸ்லோகம்

    பத்ரி க்ராம ஸமத் புதம்
    த்வாரகா மாயீ வாசினம்
    பக்தா பீஷ்டம் இதம் தேவம்
    சாய் நாமத் நமாமி.

    சூரிய, சந்திர கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கி, நற்பலன்கள் வந்து சேர கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகங்களை சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.
    சீலமாய் வாழ சீரருள் புரியும்
    ஞாலம் போற்றும் ஞாயிறே போற்றி
    சூரியா போற்றி சுந்தரா போற்றி
    வீரியா போற்றி வினைகள் களைவாய்.

    - சூரியன் ஸ்லோகம்

    எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
    திங்களே போற்றி திருவருள் தருவாய்
    சந்திரா போற்றி சற்குணா போற்றி
    சங்கடம் தீர்ப்பாய் சதுரா போற்றி.

    - சந்திரன் ஸ்லோகம்

    - ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையில் சூரிய ஸ்லோகத்தையும், திங்கட்கிழமைகளில் மாலை நேரத்தில் சந்திர ஸ்லோகத்தையும் சொல்லிவந்தால், சூரிய, சந்திர கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கி, நற்பலன்கள் வந்து சேரும்.
    ராமருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை பெண்கள் தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் கணவரின் நன்மதிப்பை பெறலாம்.
    ஶ்ரீராம ராம ரகுனந்தன ராம ராம ஶ்ரீராம ராம பரதாக்ரஜ ராம ராம|

    ஶ்ரீராம ராம ரணகர்க ராம ராம ஶ்ரீராம ராம ஸ்ரீரணம்ʼ பவ ராம ராம||

    ஶ்ரீராமசந்த்ர சரணௌ மனஸா ஸ்மராமி

    ஶ்ரீராமசந்த்ர சரணௌ வசஸா க்ருʼணாமி

    ஶ்ரீராமசந்த்ர சரணௌ ஸ்ரீரஸா நமாமி

    ஶ்ரீராமசந்த்ர சரணௌ ஸ்ரீரணம்ʼ ப்ரபத்யே||
    தெய்வங்களில் எல்லாம் முதன்மையானவர் என்பதால், விநாயகரை ‘முழு முதல் கடவுள்’ என்கிறோம். இவரை வணங்கினால் தடைகள் அகலும், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.சிறப்பு வாய்ந்த விநாயகரை தொழுவதற்காக, நிறைய சுலோகங்கள் இருக்கின்றன.
    கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
    கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
    உமாஸுதம் சோக வினாச காரணம்

    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
    மூஷிக வாகன மோதக ஹஸ்த
    சாமர கர்ண விளம்பித சூத்ர
    வாமன ரூப மஹேஸ்வர புத்ர
    விக்ன விநாயக பாத நமஸ்தே

    விநாயகர் துதி

    ஐந்து கரத்தனை யானை
    முகத்தனை
    இந்தின் இளம்பிறை போலும்
    எயிற்றனை
    நந்தி மகன்தனை ஞானக்
    கொழுத்தினைப்
    புந்தியில் வைத்து அடி
    போற்றுகின்றேனே.

    விநாயகர் காயத்ரி

    ‘ஓம் தத்புருஷாய வித்மஹே
    வக்ரதுண்டாய தீமஹி
    தன்னோ தந்தி ப்ரசோதயாத்’
    ‘வக்ரதுண்டாய ஹீம்
    ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
    மம சர்வ சங்கடம்
    நிவாரயே ஸ்வாஹா
    ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய
    நமஹ’
    ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் அல்லது மூலமந்திரத்தை ஜபிப்பதன் மூலமாக பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.
    செல்வம் வேண்டி பூஜை செய்யும் போது மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும். இது எதுவுமே செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும். இதை தினமும் கூற அருள்செல்வம் முதலில் வரும், பின்பு பொருள்செல்வம் தானாக தேடி வரும்.
     
    ஓம் அகத்தீசாய நம!
    ஓம் கரூவூர்தேவாய நம!
    ஓம் போகதேவாய நம!
    ஓம் கோரக்கதேவாய நம!
     
    அஷ்ட லக்ஷ்மிகளும் நமக்கு செல்வ வளத்தைத் தந்துகொண்டே இருப்பதால், இவர்களின் சக்தி குறையும் என்று கூறுவர். இந்த சக்திக்குறைபாட்டை சரிசெய்ய இந்த அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர்.

    இதே தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலுக்குச் சென்று, ராகு காலம் முழுவதும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் அல்லது மூலமந்திரத்தை ஜபிப்பதன் மூலமாக பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
     
    ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம்:
     
    ஓம் பைரவாய வித்மஹே
    ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:
    தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!

    ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மூலமந்திரம்:
     
    ஓம், ஏம், ஐம், க்லாம்; க்லீம், க்லூம்; ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம்
    சகவம்ஸ ஆபதுத் தோரணாய, அஜாமிள பந்தநாய, லோகேஸ்வராய,
    ஸ்வர்ணாகர்ஷண பைரவாய, மமதாரித்ரிய வித்வேஷணாய,
    ஓம், ஸ்ரீம், மஹா பைரவாய நமஹ
    தெய்வங்களில் எல்லாம் முதன்மையான விநாயகரை அவருக்கு உகந்த சகஸ்ரநாமத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து விதமான தடைகளும் அகலும்.
    தெய்வங்களில் எல்லாம் முதன்மையானவர் என்பதால், விநாயகரை ‘முழு முதல் கடவுள்’ என்கிறோம். இவரை வணங்கினால் தடைகள் அகலும், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த விநாயகரை தொழுவதற்காக, நிறைய சுலோகங்கள் இருக்கின்றன. இவற்றை தினமும் படித்து விநாயகரை வணங்குவதோ?, அல்லது அவருக்கு அருகம்புல் மாலை சூட்டி வழிபட்டால், அந்த ஆனைமுகனின் அருளைப் பெறலாம்.

    சுக்லாம் பரதரம் விஷ்ணும்
    சசிவர்ணம் சதுர்ப்புஜம்
    ப்ரசன்ன வதனம் த்யாயேத்
    சர்வ விக்நோப சாந்தயே
    சங்கடஹர சதுர்த்தியான இன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள விநாயகருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்வது நல்ல பலனைத்தரும்.
    திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
    பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
    ஆதலால் வானோரு மானை முகத்தோனைக்
    காதலாற் கூப்புவர்தங் கை.

    ஒற்றை யணிமருப்பும் ஓரிரண்டு கைத்தலமும்
    வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு
    தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தில் எப்பொமுதும்
    கொண்டக்கால் வாராது கூற்று.

    கஷ்டங்கள் விலக, எதிரிகள் தொல்லை விலக, கவலைகள் மறைய கீழே கொடுக்கப்பட்டுள்ள தாந்த்ரீக காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    கஷ்டங்கள் விலக, எதிரிகள் தொல்லை விலக, கவலைகள் மறைய கீழே கொடுக்கப்பட்டுள்ள தாந்த்ரீக காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    ஓம் பூர்புவஸுவஹ ஓம் ஐம் ஹ்ரீம்
    க்லீம் தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ
    தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்:
    ×