search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் ஸ்லோகம்"

    இரண்டு கரங்களால் நாம்பட்ட கடனை நான்கு கரங்களுடன் ஓடி வந்து காப்பாற்ற வடிவம் கொண்டவர் ருண ஹரண கணபதி. இவரது மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்தால் கடன்கள் படிப்படியாக குறையும்.
    நமது நாட்டில் 90 சதவீதம் பேர் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க பலரும் படும்பாடு மிகவும் வேதனையானது.

    இரண்டு கரங்களால் நாம்பட்ட கடனை நான்கு கரங்களுடன் ஓடி வந்து காப்பாற்ற வடிவம் கொண்டவர் ருண ஹரண கணபதி. வெண்பளிங்கு நிறம் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் இவரிடம்,

    “ஓம் கணேசாய ருணம்
    சிந்தி வரேண்யம்
    ஹூம் நம்; பட்ஸ்வாஹா”

    என்று கடன் நிவர்த்தி அடைய தினமும் ஒன்பது முறை கூறி வழிபட வேண்டும்.

    “ஓம் க்லௌம் க்ரோம்
    கணேசாய ருணம் சிந்தி
    வரேண்யம் ஹூம் நம், பட் ஸ்வாஹா”

    என எல்லா கடன்களுக்கும் ருண நாசன கணபதியை வணங்கிட வேண்டும். சனிக்கிழமைகளில் சதுர்த்தி வரும் நாளில் முதலில் கடன் கொடுக்க வேண்டிய தொகையில் இருந்து சிறிதளவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். கடன் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் முழுவதும் விரைவில் தீர்ந்து விடும். மூல நட்சத்திரம் வரும் நாளில் அருகம்புல் மாலை அணிவித்து வில்வத்தால் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டால் கடனை திருப்பி கொடுத்தல் தடையின்றி நிறைவேறும்.

    அஸ்த நட்சத்திர நாளில் அரிசி மாவு கொண்டு அரச மரத்தடி விநாயகரை அபிஷேகம் செய்து கடனை திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தால் கடன் அடைய வாய்ப்புகள் அதிகம் உருவாகும்.
    பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. விநாயகர் சதுர்த்தி அன்று வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய விநாயகர் துதியை பார்க்கலாம்.
    ஓம் சுமுகாய நம
    ஓம் ஏகதந்தாய நம
    ஓம் கபிலாய நம
    ஓம் கஜகர்ணகாய நம
    ஓம் லம்போதராய நம
    ஓம் விநாயகாய நம
    ஓம் விக்னராஜாய நம
    ஓம் கணாத்பதியே நம
    ஓம் தூமகேதுவே நம
    ஓம் கணாத்ய க்ஷசாய நம
    ஓம் பாலசந்திராய நம
    ஓம் கஜானனாய நம
    ஓம் வக்ரதுண்டாய நம
    ஓம் சூர்ப்ப கன்னாய நம
    ஓம் ஏரம்பாய நம
    ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம 
    விநாயகப்பெருமானுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் விருப்பங்கள் நிறைவேறும். தடைகள் அகலும்.
    சிந்தித் தவர்க்கருள்
    கணபதி ஜெய ஜெய!
    சீரிய வானைக்
    கன்றே ஜெய ஜெய!

    அன்புடை யமரரைக்
    காப்பாய் ஜெய ஜெய!
    ஆவித் துணையே
    கணபதி ஜெய ஜெய!

    இண்டைச் சடைமுடி
    யிறைவா ஜெய ஜெய!
    ஈசன் தந்தருள்
    மகனே ஜெய ஜெய!

    உன்னிய கருமம்
    முடிப்பாய் ஜெய ஜெய!
    ஊர்நவ சக்தி
    யுகந்தாய் ஜெய ஜெய!

    எம்பெரு மானே
    யிறைவா ஜெய ஜெய!
    ஏழுல குந்தொழ
    நின்றாய் ஜெய ஜெய!

    ஐயா கணபதி
    நம்பியே ஜெய ஜெய!
    ஒற்றை மருப்புடை
    வித்தகா ஜெய ஜெய!

    ஓங்கிய வானைக்
    கன்றே ஜெய ஜெய!
    ஔவிய மில்லா
    அருளே ஜெய ஜெய!

    அஃகர வஸ்து
    வானவா ஜெய ஜெய!
    கணபதி யென் வினை
    களைவாய் ஜெய ஜெய!

    ஙப்போர் மழுவொன்
    றேந்தியே ஜெய ஜெய!
    சங்கரன் மகனே
    சதுரா ஜெய ஜெய!

    ஞயநம் பினர்பா
    லாடிய ஜெய ஜெய!
    இடம்படு விக்கின
    விநாயகா ஜெய ஜெய!

    இணங்கிய பிள்ளைகள்
    தலைவா ஜெய ஜெய!
    தத்துவ மறைதெரி
    வித்தகா ஜெய ஜெய!

    நன்னெறி விக்கின
    விநாயகா ஜெய ஜெய!
    பள்ளியி லுறைதரும்
    பிள்ளாய் ஜெய ஜெய!

    மன்று ளாடும்
    மணியே ஜெய ஜெய!
    இயங்கிய ஞானக்
    குன்றே ஜெய ஜெய!

    அரவக் கிண்கிணி
    யார்ப்பாய் ஜெய ஜெய!
    இலகக் கொம்பொன்
    றேந்தியே ஜெய ஜெய!

    வஞ்சனை பலவுந்
    தீர்ப்பாய் ஜெய ஜெய!
    அழகிய வானைக்
    கன்றே ஜெய ஜெய!

    இளமத யானை
    முகத்தாய் ஜெய ஜெய!
    இரகுபதி விக்கின
    விநாயகா ஜெய ஜெய!
    அனந்தலோ டாதியி
    லடிதொழ வருளே!!!
    எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது எவ்விதத் தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிப்பது நமது வழக்கம்.
    எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது எவ்விதத் தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிப்பது நமது வழக்கம்.

    சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
    ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

    என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ளது.

    எல்லாவிதத் தடைகளும் இடையூறுகளும் நீங்கவும், மறைந்து போகவும் வெள்ளை நிற உடையணிந்து கொண்டிருப்பவரும் நான்கு கரங்களை உடையவரும் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளும், நிலவைப் போன்ற தன்மையுடையவரும், எப்பொழுதும் ஆனந்தமயமாக அருட்காட்சியளிக்கும் விநாயகரைத் தியானிப்போம் என்பது இதன் பொருளாகும்.

    காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

    கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
    கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
    உமாஸுதம் சோக வினாச காரணம்
    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

    பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.
    எந்த ஒரு வேலையை செய்வதற்கு முன்பும் அல்லது தினமும் கணபதிக்கு உகந்த இந்த மூல மந்திரத்தை சொல்லி வந்தால் நல்லதே நடக்கும்.
    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
    வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா

    இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வரவும். நல்லதே நடக்கும்
    இந்த மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.

    ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம்
    ஹ்ரீம் க்லீம் க்லௌம்
    கம் கணபதயே
    வர வரத ஐம் ப்ளூம்
    சர்வ வித்யாம்
    தேஹி ஸ்வாஹா
    ×