என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    வாழ்வில் வெற்றியைப் பெற்று, தோஷங்களை விரட்டிச் சந்தோஷம் மட்டுமே நிலை பெற கோமாதாவிற்கு உகந்த இந்த மாத்ரு பஞ்சகத்தை சொல்லி வழிபடலாம்.
    தாயை வணங்குவோர் தரணியில் உயர்ந்து நிற்பர். அந்தத் தாய் பூமியாக பாரத மாதாவாக, ஆலயக் கருவறையில் தனி உருவாக நிற்கும் பராசக்தியாய், தாயுமானவ சிவனாய், மாரியாக, காளியாக, பெற்ற தாயாக எல்லா சக்தியும் கொண்ட கோமாதா... பசுவாக நேரில் காண்கிறோம். வாழ்வில் வெற்றியைப் பெற்று, தோஷங்களை விரட்டிச் சந்தோஷம் மட்டுமே நிலை பெற...! வாரத்தில் வெள்ளி அல்லது மாதம் ஒருமுறை வரும் பவுணர்மி அன்று பசுவுக்கு வெல்லம் பச்சரிசி கலந்து கொடுத்து அகத்தி கீரையும் தந்து 3 முறை வலம் வர வேண்டும்.

    கருத்தரித்த நாள் முதலாய் உள்ளிருந்து
    கணந்தோறும் காத்தருள் சுரந்து சுரந்து
    உருவெடுக்கும் என்னுயிரால் ருசியிழந்து
    உணவு குன்றி மசக்கை எழ மெலிந்து மெலிந்து
    வருந்துகிற கவலை எழும் வேளை தனில்
    வளர்கின்ற பிள்ளைச்சுமை சுமந்து சுமந்து
    பெருத்த வலி சூழ்ந்துள்ள காலைதனில்
    பிரசவத்தின் சூல்வலிக்கு இறங்கி இறங்கி
    திருத்தமொடு பூமிதனில் தவழ விட்டு
    சிம்மாசன மடியேற்றி மகிழ்ந்து மகிழ்ந்து
    பொறுத்தனை மலமூத்திரம் கழிந்த காலை
    புன்னகையே பூத்து முகம் மலர்ந்து மலர்ந்து
    கருத்தொரு நலங்கோடி தந்தனையம்மா!
    கடன் சுமை என்னிடத்தே மிகுந்து மிகுந்து
    உறுத்துகின்ற பான்மைதீரப் பதிலெதுவோ
    ஒன்றினுக்கு ஒன்றேனும் உவந்து உவந்து.
    ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள், அந்த வகையில் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.
    பொதுவாகவே ராசி, நட்சத்திரம் எல்லாம் நாம் பிறக்கும்போதே கணிக்கப்படுகிறது, இதுபோன்ற மந்திரங்களை நாம் உச்சரிக்கும் பொழுது கெட்ட நிலைகளில் உள்ள கிரகங்களின் பார்வை குறைந்து தெய்வ பார்வை நம் மீது விழும் பொழுது நமக்கு விளையும் தீமைகளானது குறையும் என்பது பெரியோர்களால் நமக்கு சொல்லப்பட்டது. உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

    அஸ்வினி

    ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
    சுதாகராயை தீமஹி
    தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

    பரணி

    ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
    தண்டதராயை தீமஹி
    தன்னோ பரணி ப்ரசோதயாத்

    கிருத்திகை

    ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
    மஹாதபாயை தீமஹி
    தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

    ரோஹிணி

    ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
    விச்வரூபாயை தீமஹி
    தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

    மிருகசீரிடம்

    ஓம் சசிசேகராய வித்மஹே
    மஹாராஜாய தீமஹி
    தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

    திருவாதிரை

    ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
    பசும்தநாய தீமஹி
    தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

    புனர்பூசம்

    ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
    அதிதிபுத்ராய த தீமஹி
    தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

    பூசம்

    ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
    மஹா திஷ்யாய தீமஹி
    தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

    ஆயில்யம்

    ஓம் ஸர்பராஜாய வித்மஹே
    மஹா ரோசனாய தீமஹி
    தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

    மகம்

    ஓம் மஹா அனகாய வித்மஹே
    பித்ரியா தேவாய தீமஹி
    தன்னோ மகஃப்ரசோதயாத்

    பூரம்

    ஓம் அரியம்நாய வித்மஹே
    பசுதேஹாய தீமஹி
    தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

    உத்திரம்

    ஓம் மஹாபகாயை வித்மஹே
    மஹாச்ரேஷ்டாயை தீமஹி
    தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

    அஸ்தம்

    ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
    ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
    தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

    சித்திரை

    ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
    ப்ரஜாரூபாயை தீமஹி
    தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

    சுவாதி

    ஓம் காமசாராயை வித்மஹே
    மகாநிஷ்டாயை தீமஹி
    தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

    விசாகம்

    ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
    மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
    தன்னோ விசாகா ப்ரசோதயாத்

    அனுஷம்

    ஓம் மித்ரதேயாயை வித்மஹே
    மஹா மித்ராய தீமஹி
    தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

    கேட்டை

    ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
    மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
    தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

    மூலம்

    ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
    மஹப்ராஜையை தீமஹி
    தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

    பூராடம்

    ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
    மஹாபிஜிதாயை தீமஹி
    தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

    உத்திராடம்

    ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
    மஹா ஷாடாய தீமஹி
    தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

    திருவோணம்

    ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
    புண்யஸ்லோகாய தீமஹி
    தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

    அவிட்டம்

    ஓம் அக்ர நாதாய வித்மஹே
    வசூபரீதாய தீமஹி
    தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

    சதயம்

    ஓம் பேஷஜயா வித்மஹே
    வருண தேஹா தீமஹி
    தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

    பூரட்டாதி

    ஓம் தேஜஸ்கராய வித்மஹே
    அஜஏகபாதாய தீமஹி
    தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

    உத்திரட்டாதி

    ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
    ப்ரதிஷ்டாபநாய தீமஹி
    தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

    ரேவதி

    ஓம் விச்வரூபாய வித்மஹே
    பூஷ்ண தேஹாய தீமஹி
    தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்
    கீழே குறிப்பிட்டுள்ள சனி பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரம் குறைந்தது 36 அல்லது 54 முறை சொல்வது உத்தமம். தினமும் அல்லது சனிக்கிழமைகளில் சொல்லி வரலாம்.
    நம்மில் பலரும் நவகிரகங்களிலேயே மிகவும் பயப்படும் கிரகமாக சனி பகவானை பார்ப்பது உண்டு. அவர் உக்கிரமானவர், அவர் நம் ராசிக்கு வந்தால் வாழ்வில் சிக்கல் ஏற்படும் போன்ற பய உணர்வுகள் தோன்றுவது உண்டு. சனி பகவான் அப்படிப்பட்டவர் கிடையாது. அவரைப் போன்ற நீதி அரசரைப் பார்த்திருக்கவும் முடியாது. அவரைப் போன்ற வல்லலையும் நாம் காண முடியாது எனலாம்.

    அப்படி நீதிக்கு அரசராக திகழும் சனி பகவான், நாம் செய்த பாவத்திற்கு ஏற்ப நம் ராசிக்கு வரும் போது தண்டனைகள் வழங்குவது வழக்கம். சனி திசை அல்லது சனி புத்தி நடைப்பெறும் போது நாம் சனி பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரம் சொல்லி ஜெபித்தால், அவரால் ஏற்படக்கூடிய தீய வினைகள் நீங்கி நன்மை உண்டாகும்.

    கீழே குறிப்பிட்டுள்ள சனி பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரம் குறைந்தது 36 அல்லது 54 முறை சொல்வது உத்தமம். சனி பகவானான அதிபதி மகா விஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வரவும்.

    இந்த மந்திரத்தை பிரதோஷம் மற்றும் சனி பிரதோஷம் நாளில் சனி பகவானை தரிசித்து வழிபடுவது நல்லது. சனி ஷேத்திரமான திருநள்ளாறு கோயில் மற்றூம் திருப்பதி சென்று வழிபட்டு வந்தால், சிறந்த பரிகாரமாக அமையும்.

    சனி காயத்ரி

    ஓம் காகத்வஜாய வித்மஹே
    கட்க அஸ்தாய தீமஹி
    தன்னோ மந்த ப்ரசோதயாத்

    ஓம் ரவிசுதாய வித்மஹே
    மந்தக்ரஹாய தீமஹி
    தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

    ஓம் காகத்வஜாய வித்மஹே
    கட்கஹஸ்தாய தீமஹி
    தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

    ஓம் வைவஸ்வதாய வித்மஹே
    பங்கு பாதாய தீமஹி
    தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

    ஓம் சனீஸ்வராய வித்மஹே
    சாயாபுத்ராய தீமஹி
    தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

    ஓம் சதுர்புஜாய வித்மஹே
    தண்டஹஸ்தாய தீமஹி
    தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

    இந்த சனி கிரகத்திற்குரிய காயத்ரி மந்திரம் சொல்லி சனி பகவானின் அருளைப் பெறுங்கள். 
    சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை, தினமும் 108 முறை பாராயணம் செய்தால், தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும்.
    ஓம் பைரவாய வித்மஹே
    ஹரிஹர ப்ரம்ஹாத்மகாய தீமஹி:
    தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்”

    என்ற சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரத்தை, தினமும் 108 முறை பாராயணம் செய்தால், தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

    இந்த மந்திரத்தை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் 9 முறை அல்லது 27 முறை துதித்து வந்தால் கிரக தோஷங்கள் உட்பட அனைத்து தோஷங்களும் நீங்கும்.
    ருத்ர மந்திரம் நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய
    த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய
    காலாக்னீ ருத்ராயநீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய
    ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம

    தீயவற்றை அழிக்க ரௌத்திரம் கொண்ட ருத்ரமூர்த்தியாகிய சிவ பெருமானை போற்றும் ருத்ர மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் 9 முறை அல்லது 27 முறை துதித்து வரலாம். திங்கட்கிழமைகள், பிரதோஷம், சிவராத்திரி போன்ற சிவ வழிபாட்டிற்குரிய தினங்களில், சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் செய்யும் போது இம்மந்திரத்தை 27 முறை துதித்து ஜெபிப்பதால் கிரக தோஷங்கள் உட்பட அனைத்து தோஷங்களும் நீங்கும். கடுமையான நோய்கள் சிறிது சிறிதாக குணமாகும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவு பெறும்.
    தினமும் இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும். வரவிருக்கும் ஆபத்துகளையும் தடுக்கும் வல்லமை காயத்ரி மந்திரத்துக்கு உண்டு.
    ஓம்
    பூர்: புவ: ஸுவ:
    தத் ஸவிதுர் வரேண்யம்
    பர்கோ தேவஸ்ய தீமஹி
    தியோ: யோந: ப்ரசோதயாத்

    24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். தினமும் இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும். மனதுக்குள் சக்திகள் பெருகவும், வைராக்கியம் அதிகரிக்கவும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் உரிய பலன் கிடைக்கும். ஆபத்து காலங்களிலும் வரவிருக்கும் ஆபத்துகளையும் தடுக்கும் வல்லமை காயத்ரி மந்திரத்துக்கு உண்டு.
    சுக்கிர பகவானுக்கு உகந்த இந்த மந்திரத்தை தினம்தோறும் கூறுவதன் பயனாக சுக்கிரனால் ஏற்படும் தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம்.
    நவகிரகங்களில் ஒருவரான சுக்கிரனின் அருள் பெறுவதன் மூலம் நமக்கு சுபயோக வாழ்க்கை கிடைக்கும். சுக்கிரனின் அருள்பெற உதவும் அற்புத காயத்ரி மந்திரம் இதோ.

    ஓம் அச்வத்வஜாய வித்மஹே
    தனூர் அஸ்தாய தீமஹி
    தன்னோ சுக்ர ப்ரசோதயத்

    இந்த மந்திரத்தை தினம்தோறும் கூறுவதன் பயனாக சுக்கிரனால் ஏற்படும் தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம். வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரனுக்கு தீபமேற்றி இம்மந்திரத்தை துதித்து வழிபடுவதால் நிச்சயமான பலன்கள் உண்டாகும்.
    வாழ்வில் சகல சந்தோஷங்களும் கிடைக்க நாம் தினமும் வழிபாடு செய்யும் போது சிவபெருமானை நினைத்து சொல்ல வேண்டிய ஸ்லோகம் இதுவாகும்.
    நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய
    பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய
    நித்யாய சுத்தாய திகம்பராய

    தஸ்மை நகாராய நம:சிவாய

    மந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய
    நந்தீச்வர ப்ரமத நாத மகேஸ்வராய
    மந்தார முக்ய பஹுபுஷ்ப ஸுபூஜிதாய
    தஸ்மை மகாராய நம:சிவாய

    சிவாய கௌரீ வதனாப்ஜ வ்ருந்த
    ஸூர்யாய தக்ஷாத்வர நாசகாய
    ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய
    தஸ்மை சிகாராய நம:சிவாய

    வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
    முனீந்த்ர தேவார்ச்சித சேகராய
    சந்த்ரார்க்க வைச்வாநர லோச்சனாய
    தஸ்மை வகாராய நம:சிவாய

    யக்ஷ ஸ்வரூபாய ஜடாதராய
    பினாக ஹஸ்தாய சனாதனாய
    திவ்யாய தேவாய திகம்பராய
    தஸ்மை யகாராய நம:சிவாய

    பஞ்சாஷரமிதம் புண்யம்ய: படேச் சிவசன்னிதௌ
    சிவலோக மவாப்னோதி சிவனே ஸஹமோமதே

    பொதுப்பொருள்: ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமசிவாய எனும் நாமங்களில் உள்ள எழுத்துக்களில் தொடங்கும் இத்துதியால், பிரதோஷ காலத்தில் பரமேஸ்வரனை துதித்தால் எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.
    ஸ்ரீவிநாயகருக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது விநாயகருக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள் விலகும்.
    ஓம் விநாயகனே போற்றி
    ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி
    ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி
    ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
    ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி
    ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
    ஓம் ஆனை முகத்தோனே போற்றி
    ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி
    ஓம் ஆதி மூலமே போற்றி
    ஓம் ஆனந்த உருவே போற்றி
    ஓம் இமவான் சந்ததியே போற்றி
    ஓம் இடரைக் களைவோனே போற்றி
    ஓம் ஈசன் மகனே போற்றி
    ஓம் ஈகை உருவே போற்றி
    ஓம் உண்மை வடிவே போற்றி
    ஓம் உலக நாயகனே போற்றி
    ஓம் ஊறும் களிப்பே போற்றி
    ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
    ஓம் எளியவனே போற்றி
    ஓம் எந்தையே போற்றி
    ஓம் எங்குமிருப்பவனே போற்றி
    ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி
    ஓம் ஏழை பங்காளனே போற்றி
    ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
    ஓம் ஐயனே போற்றி
    ஓம் ஐங்கரனே போற்றி
    ஓம் ஒப்பிலாதவனே போற்றி
    ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி
    ஓம் ஒளிமய உருவே போற்றி
    ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
    ஓம் கருணாகரனே போற்றி
    ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி
    ஓம் கணேசனே போற்றி
    ஓம் கணநாயகனே போற்றி
    ஓம் கண்ணிற்படுபவனே போற்றி
    ஓம் கலியுக நாதனே போற்றி
    ஓம் கற்பகத்தருவே போற்றி
    ஓம் கந்தனுக்கு தவியவனே போற்றி
    ஓம் கிருபாநிதியே போற்றி
    ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி
    ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி
    ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி
    ஓம் குணநிதியே போற்றி
    ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி
    ஓம் கூவிட வருவோய் போற்றி
    ஓம் கூத்தன் மகனே போற்றி
    ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
    ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி
    ஓம் கோனே போற்றி
    ஓம் கோவிந்தன் மருமகனே போற்றி
    ஓம் சடுதியில் வருபவனே போற்றி
    ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
    ஓம் சங்கடஹரனே போற்றி
    ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
    ஓம் சிறிய கண்ணோனே போற்றி
    ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி
    ஓம் சுருதிப் பொருளே போற்றி
    ஓம் சுந்தரவடிவே போற்றி
    ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
    ஓம் ஞான முதல்வனே போற்றி
    ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி
    ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி
    ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி
    ஓம் துயர் துடைப்பவனே போற்றி
    ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி
    ஓம் தேவாதி தேவனே போற்றி
    ஓம் தொந்தி விநாயகனே போற்றி
    ஓம் தொழுவோ நாயகனே போற்றி
    ஓம் தோணியே போற்றி
    ஓம் தோன்றலே போற்றி
    ஓம் நம்பியே போற்றி
    ஓம் நாதனே போற்றி
    ஓம் நீறணிந்தவனே போற்றி
    ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி
    ஓம் பழத்தை வென்றவனே போற்றி
    ஓம் பாரதம் எழுதியவனே போற்றி
    ஓம் பரம்பொருளே போற்றி
    ஓம் பரிபூரணனே போற்றி
    ஓம் பிரணவமே போற்றி
    ஓம் பிரம்மசாரியே போற்றி
    ஓம் பிள்ளையாரே போற்றி
    ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி
    ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி
    ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி
    ஓம் புதுமை வடிவே போற்றி
    ஓம் புண்ணியனே போற்றி
    ஓம் பெரியவனே போற்றி
    ஓம் பெரிய உடலோனே போற்றி
    ஓம் பேரருளாளனே போற்றி
    ஓம் பேதம் அறுப்போனே போற்றி
    ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி
    ஓம் மகிமையளிப்பவனே போற்றி
    ஓம் மகாகணபதியே போற்றி
    ஓம் மகேசுவரனே போற்றி
    ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி
    ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி
    ஓம் முறக்காதோனே போற்றி
    ஓம் முழுமுதற்கடவுளே போற்றி
    ஓம் முக்கணன் மகனே போற்றி
    ஓம் முக்காலம் அறிந்தானே போற்றி
    ஓம் மூத்தோனே போற்றி
    ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி
    ஓம் வல்லப கணபதியே போற்றி
    ஓம் வரம்தரு நாயகனே போற்றி
    ஓம் விக்னேஸ்வரனே போற்றி
    ஓம் வியாஸன் சேவகனே போற்றி
    ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி
    ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
    விஷ்ணு பகவானுக்கு உகந்த சஹஸ்ரநாமத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
    ஸித்தார்த்த: ஸித்தஸங்கல்ப:
    ஸித்தித: ஸித்தி ஸாதந:

    வஸுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூர மர்தனம்
    தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
           அருக்கன் அணிநிறமுங் கண்டேன் செருக்கிளரும்
    பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
           என்னாழி வண்ணன்பால் இன்று.

    சாந்தாகாரம் புஜக சயனம் பத்மநாபம் ஸுரேசம்
           விச்வாதாரம் ககன ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
    லக்ஷ்மீ காந்தம் கமலநயனம் யோகிஹ்ருத்யானகம்யம்
           வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வ லோகைகநாதம்.

    ஸ்ரீ நிவாஸா கோவிந்தா ஸ்ரீ  வேங்கடேசா கோவிந்தா
    திருப்பதிவாசா கோவிந்தா திருமலைவாசா கோவிந்தா
    பாண்டுரங்கா கோவிந்தா பண்டரீநாதா கோவிந்தா
    வேங்கடரமணா கோவிந்தா சங்கடஹரணா கோவிந்தா
    புராணபுருஷா கோவிந்தா புண்டரீகாக்ஷ கோவிந்தா
    கீழே உள்ள குரு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் குரு தோஷம் விலகும்.தினமும் துதிக்க இயலாதவர்கள் வியாழக்கிழமைகளில் மட்டும் துதிப்பதாலும் முழுமையான பலன்களை பெறலாம்.
    குரு காயத்ரி மந்திரம்:

    ஓம் விரு‌ஷபத் வஜாய வித்மஹே
    க்ருணி ஹஸ்தாய தீமஹி
    தந்நோ குருஹ் ப்ரசோதயாத்

    பொது பொருள்:

    இடப்பக்கத்தில் கொடியை வைத்திருக்கும் குரு பகவானே, எப்போதும் உங்கள் அருட்கரங்களால் அருள்மழை பொழியும் ப்ரகஸ்பதியே, என் வாழ்வில் உள்ள தீமைகளை அகற்றி நன்மைகளை அளித்திட வேண்டுகிறேன்.

    மேலே உள்ள மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் குரு தோஷம் விலகும், தீமைகள் விலகும், அரசு பணிக்கு முயற்சி செய்வோருக்கு பணி கிடைக்கும். அதோடு குருவால் சகல நன்மைகளும் ஏற்படும். தினமும் துதிக்க இயலாதவர்கள் வியாழக்கிழமைகளில் மட்டும் துதிப்பதாலும் முழுமையான பலன்களை பெறலாம்.
    வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை என்பார்கள். மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் நீங்க, முருகப்பெருமான் கை வேலை வணங்கி வரலாம்.
    ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்
    ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்திஹந்த்ரீம்
    நமோ நமஸ்தே குஹஹஸ்தபூஷே
    பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னிதத்ஸ்வ

    பொருள் :

    ஓம் சக்தியான வேலே, இவ்வுலகத்திற்கு தாயானவளே,அனைத்து சுகத்தையும் கொடுப்பவளே,உன்னை வணங்குபவரின் மனோவியாதியை போக்குபவளே உன்னை ஆராதிக்கிறேன்.
    ×