என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    சிவபெருமானுக்கு உகந்த இந்த மந்திரத்தை ஆருத்ரா தரிசனமான இன்று சொல்லி நடராஜரை வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் விலகும்.
    சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
    சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
    சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
    சிவ சிவ என்னச் சிவகதி தானே
    என்னும் திருமூலரின் திருமந்திரமே சிவ மூல மந்திரம் ஆகும்.
    இப்பாடலை பக்தர்கள் தினமும் வழிபடும்போது கூறி வந்தால் குருவருள் கிடைக்கப் பெற்று அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கலாம்.
    கல்லாலின்

    புடையமர்ந்து நான்மறை

    யாறங்க முதல் கற்ற

    கேள்வி

    வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த

    பூரணமாய் மறைக்கப்

    பாலாய்

    எல்லாமாயல்லது மாய்

    இருந்ததனை

    இருந்தபடி இருந்து

    காட்டி

    சொல்லாமற் சொன்ன

    வரை நினையாமல்

    நினைந்து பவத்தொடக்கை

    வெல்வோம்.

    (இப்பாடலை பக்தர்கள் தினமும் வழிபடும்போது கூறி வந்தால் குருவருள் கிடைக்கப் பெற்று அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கலாம்)
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை படித்து வந்தாலே நம் பயணத்தில் ஏற்படும் தடைகளும் நாம் மேற்கொள்ளும் காரியத்தில் ஏற்படும் தடைகளும் நிச்சயம் நீங்கிவிடும்.
    அருணகிரிநாத சுவாமிகள் அருளிய கந்தர் அந்தாதி என்ற பாடலை நாம் வீட்டை விட்டு செல்வதற்கு முன்பு படித்து வந்தாலே நம் பயணத்தில் ஏற்படும் தடைகளும் நாம் மேற்கொள்ளும் காரியத்தில் ஏற்படும் தடைகளும் நிச்சயம் நீங்கிவிடும். நாம் எதற்காக பயணத்தை மேற்கொள்கின்றோமோ அதில் வெற்றியை அடைந்து விட்டுதான், மீண்டும் வீட்டிற்கு திரும்புவோம். உங்களுக்கான வெற்றியைத் தேடித்தரும் பாடல் இதோ..

    சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்திற்
    சேயவன் புந்தி கனிசா சராந்தக சேர்ந்த வென்னிற்
    சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்
    சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே

    தூரதேசப் பயணத்திற்கு முன்பும் இந்த மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் நல்லது. நாம் எதற்காக பயணத்தைத் தொடங்குகின்றோமோ, அதற்கான வெற்றியை நிச்சயம் பெற்றுத் தரும் பாடல்தான் இது.
    வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணமும், முயற்சியும் உங்கள் மனதில் உள்ளதா? அதை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்த மந்திரத்தை உச்சரித்தாலே போதும்.
    "ஓம் அங்காரகாய நம''

    பூமிக்கு சொந்தக்காரர் என்றால் அது செவ்வாய் கிரகத்தை குறிக்கிறது. செவ்வாயின் மற்றொரு பெயர் அங்காரகன். செவ்வாய்க் கிழமை தோறும் நவக்கிரகம் உள்ள கோவிலுக்குச் சென்று, நவகிரகங்களில் ஒருவரான செவ்வாயின் முன்பு மேலே குறிப்பிட்டுள்ள மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

    செவ்வாய் பகவானுக்கு உகந்த செவ்வாழைப்பழமும், அரளிப்பூயையும் வைத்து வழிபடுவது மேலும் சிறப்பை தரும். மந்திரத்தை மனதார உச்சரித்து, உங்கள் மனதில் இருக்கும் கோரிக்கையை அந்த செவ்வாய் பகவானிடம் மனதார சொல்லி வேண்டிக் கொள்ள வேண்டும். மனதார இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். வீடு கட்டுவதில் இருந்த தடைகள் நீங்கி நிச்சயம் உங்களுக்கான விடிவுகாலம் பிறக்கும்.
    வைகுண்ட ஏகாதசியான இன்று படிக்க வேண்டிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை சொல்லி பெருமாளை வழிபாடு செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டும்.
    திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இத்துதியை வைகுண்ட ஏகாதசியான இன்று பாராயணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிடைக்கும்.

    ஓம் வாஜுஸூதேவம்
    ஹ்ருஷீகேஸம் வாமனம்
    ஜலஸாயினம் ஜனார்தனம்
    ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம்
    கருடத்வஜம்
    வராஹம் புண்டரீகாக்ஷம்
    ந்ருஸிம்ஹம் நரகாந்தகம்
    அவ்யக்தம் ஸாஸ்வதம்
    விஷ்ணும் அனந்த
    மஜமவ்யயம்
    நாராயணம் கதாத்யக்ஷம்
    கோவிந்தம் கீர்திபாஜனம்
    கோவர்தனோத்தரம் தேவம்
    பூதரம் புவனேஸ்வரம்
    வேத்தாரம் யக்ஞபுருஷம்
    யக்ஞேஸம் யக்ஞவாஹகம்
    சக்ரபாணிம் கதாபாணிம்
    ஸங்கபாணிம் நரோத்தமம்
    வைகுண்டம்
    துஷ்டதமனம் பூகர்பம்
    பீதவாஸஸம் த்ரிவிக்ரமம்
    த்ரிகாலஜ்ஞம் த்ரிமூர்த்திம்
    நந்திகேஸ்வரம்
    ராமம் ராமம் ஹயக்ரீவம் பீமம்
    ரௌத்ரம் பவோத்பவம்ஸ்ரீபதிம்
    ஸ்ரீதரம் ஸ்ரீஸம் மங்கலம்
    மங்கலாயுதம்
    தாமோதரம்
    தமோபேதம் கேஸவம்
    கேஸிஸ¨தனம் வரேண்யம்
    வரதம் விஷ்ணுமானந்தம்
    வஸூதேவஜம்
    ஹிரண்யரேதஸம்
    தீப்தம் புராணம்
    புருஷோத்தமம் ஸகலம்
    நிஷ்கலம் ஸூத்தம் நிர்குணம்
    குணஸாஸ்வதம்
    ஹிரண்யதனுஸங்காஸம்
    ஸூர்யாயுத
    ஸமப்ரபம்மேகஸ்யாமம்
    சதுர்பாஹம் குஸலம்
    கமலேக்ஷணம்
    ஜ்யோதீ ரூமரூபம் சஸ்வரூபம்
    ரூப ஸம்ஸ்திதம்ஸர்வஞ்ஜம்
    ஸர்வரூபஸ்தம் ஸர்வேஸம்
    ஸர்வதோமுகம்
    ஜ்ஞானம் கூடஸ்தமசலம்
    ஜ்ஞானதம் பரமம்
    ப்ரபும்யோகீஸம் யோக
    நிஷ்ணாதம் யோகினம்
    யோகரூபிணம்
    ஈஸ்வரம் ஸர்வபூதானாம்
    வந்தே பூதமயம் ப்ரபும்இதி
    நாமஸதம் திவ்யம்
    வைஷ்ணவம் கலுபாபஹம்
    வ்யாஸேன கதிதம் பூர்வம்
    ஸர்வபாப ப்ரணாஸனம்
    ய: படேத் ப்ராதருத்தாய ஸ
    பவேத் வைஷ்ணவோ நர:
    ஸர்வ பாப விஸூத்தாத்மா:
    விஷ்ணு ஸாயுஜ்யமாப்னுயாத்
    சாந்த்ராயண ஸஹஸ்ராணி
    கன்யாதான ஸதானி ச
    கவாம் லக்ஷஸஹஸ்ராணி
    முக்திபாகீ பவேந்நர:
    அஸ்வமேதாயுதம் புண்யம்
    பலம் ப்ராப்னோதி மானவ:
    விஷ்ணு ஸதநாம
    ஸ்தோத்திரம்.
    யார் ஒருவர் ராம பக்தராகவும், நீதியின் வழியிலும், சாந்த குணம் கொண்டவராகவும் இருக்கிறாரோ, அவர் விபீஷணர் அம்சம் பொருந்தியவர் ஆவார்.
    ராமாயண இதிகாசத்தில் ராவணனின் தம்பியாக வர்ணிக்கப்படுபவர். ராவணனிடம் பல முறை, சீதையை விடுவிக்கும்படியும், அநியாயத்தின் பாதையில் செல்ல வேண்டாம் என்றும் எடுத்துக் கூறியவர். அதனை ஏற்காது ராவணன் தீய வழியில் பயணித்ததால், ராமபிரானிடம் அடைக்கலமானார். ராவண வதத்திற்குப் பின் ராமனால் இலங்கை அரசனாக முடி சூட்டப்பட்டார். தருமர் நடத்தும் ராஜசூய யாகத்திற்கு தென்திசை நோக்கி படையெடுத்து சென்ற சகாதேவன், விபீஷணனுக்கு தூது அனுப்புகிறார். முற்பிறவியில் தமக்கு அருளிய ராமபிரானே, தற்போது கிருஷ்ணராக அவதரித்துள்ளார் என்பதை அறிந்த விபீஷணன், அவர்களுக்கு தக்க மரியாதை அளித்து, யாகம் நடத்த காரணமாக இருந்தார். யார் ஒருவர் ராம பக்தராகவும், நீதியின் வழியிலும், சாந்த குணம் கொண்டவராகவும் இருக்கிறாரோ, அவர் விபீஷணர் அம்சம் பொருந்தியவர் ஆவார்.

    இவருக்கான காயத்ரி மந்திரம்..

    “ஓம் ராம பக்தாய வித்மஹே
    சர்வாஸ்ரயாய தீமஹி
    தந்நோ விபீஷண ப்ரசோதயாத்”
    மகாலட்சுமிக்கு உகந்த கீழ்க்கண்ட போற்றியை 108, 1008 பூக்களை மட்டும் வைத்துக் கொண்டு உள்ளன்போடு போற்றினாலே போதும் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
    எப்படி அழைத்தாலும் வரக்காத்திருக்கும் வரலட்சுமி விரத நாளில் நமது வீட்டில் உள்ள பூஜைப் பொருட்களை பயன்படுத்தி எளிமையாகவும், பூஜை செய்யலாம். துதிப்பாடல்கள் மூல மந்திரங்கள், காயத்ரி மந்திரங்கள் தெரியவில்லையே என யாரும் பூஜை செய்யாமல் இருந்து விட வேண்டாம். முதலில் விநாயகர் பாடல் எல்லோருக்கும் தெரியும். அதை சொல்லியே பின் கீழ்க்கண்ட போற்றியை 108, 1008 பூக்களை மட்டும் வைத்துக் கொண்டு உள்ளன்போடு போற்றினாலே போதும்.

    1. சகல சித்தியளிக்கும் ஆதிலட்சுமியே போற்றி!
    2. பிள்ளைப்பேறு அளிக்கும் சந்தான லட்சுமியே போற்றி!
    3. ராஜமரியாதை தரும்-கஜலட்சுமியே போற்றி!
    4. செல்வச் செழிப்பைத் தரும்-தனலட்சுமியே போற்றி!
    5. தான்ய விருத்தியளிக்கும்- தான்ய லட்சுமியே போற்றி!
    6. எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியைத் தரும்- விஜயலட்சுமியே போற்றி!
    7. சவுபாக்கியங்கள் தரும்- மகாலட்சுமியே போற்றி!
    8. மனதிலும், உடலிலும் சோர்வை அகற்றி தைரியத்தையும், தெம்பையும், வீரத்தையும் அருளும்- வீரலட்சுமியே போற்றி!
    9. அனைத்து நன்மைகளையும் வரமாகத் தரும் வரலட்சுமியே போற்றி! போற்றி!!.

    ஜமதக்கினி முனிவருக்கும் - ரேணுகா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் பரசுராமர். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை அறிந்து கொள்ளலாம்.
    ஜமதக்கினி முனிவருக்கும் - ரேணுகா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாக கூறப்படும் இவர், பரசு என்ற கோடரியை சிவனிடமிருந்து பெற்றார். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகிற்கு உணர்த்த, தன் தாயையே கொன்றவர். பின் தந்தையிடம் வரம் பெற்று தாயின் உயிரை மீட்டார்.

    ராமாயணம் மற்றும் மகாபாரதம் இவ்விரண்டு இதிகாசங்களில் வரும் கதை மாந்தர்களில் பரசுராமரும் ஒருவராவர். கர்ணன் தன்னிடம் பொய்யுரைத்து சீடனாகச் சேர்ந்தான் என்பதற்காக, அவனுக்கு சாபம் அளித்தார்.

    இவருக்கான காயத்ரி மந்திரம்..

    “ஓம் சிவானுக்ரஹாய வித்மஹே
    க்ஷத்ரிய நிஷீதனாய தீமஹி
    தந்தோ பரசுராம பரசோதயாத்”
    வாழ்வில் சகல சந்தோஷங்களும் கிடைக்க நாம் தினமும் வழிபாடு செய்யும் போது சிவபெருமானை நினைத்து சொல்ல வேண்டிய ஸ்லோகம் இதுவாகும்.
    நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய
    பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய
    நித்யாய சுத்தாய திகம்பராய

    தஸ்மை நகாராய நம:சிவாய
    மந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய
    நந்தீச்வர ப்ரமத நாத மகேஸ்வராய
    மந்தார முக்ய பஹுபுஷ்ப ஸுபூஜிதாய
    தஸ்மை மகாராய நம:சிவாய

    சிவாய கௌரீ வதனாப்ஜ வ்ருந்த
    ஸூர்யாய தக்ஷாத்வர நாசகாய
    ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய
    தஸ்மை சிகாராய நம:சிவாய

    வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
    முனீந்த்ர தேவார்ச்சித சேகராய
    சந்த்ரார்க்க வைச்வாநர லோச்சனாய
    தஸ்மை வகாராய நம:சிவாய

    யக்ஷ ஸ்வரூபாய ஜடாதராய
    பினாக ஹஸ்தாய சனாதனாய
    திவ்யாய தேவாய திகம்பராய
    தஸ்மை யகாராய நம:சிவாய

    பஞ்சாஷரமிதம் புண்யம்ய: படேச் சிவசன்னிதௌ
    சிவலோக மவாப்னோதி சிவனே ஸஹமோமதே

    பொதுப்பொருள்: ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமசிவாய எனும் நாமங்களில் உள்ள எழுத்துக்களில் தொடங்கும் இத்துதியால், பிரதோஷ காலத்தில்  பரமேஸ்வரனை துதித்தால் எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.
    இம்மந்திரத்தை சனிக்கிழமைகளில் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன், தெற்கு திசை நோக்கி நின்று எமதர்மராஜனை மனதில் நினைத்து 9 முறை கூறவும்.
    எமன் காயத்ரி மந்திரம் :

    “ஓம் சூரிய புத்ராய வித்மஹே
    மகா காலாய தீமஹி
    தந்நோ யம ப்ரசோதயாத்”

    பொதுவான பொருள் : “சூரிய பகவானின் புத்திரரும், காலத்தின் அம்சமான எம தர்மரின் அருள் எனக்கு கிடைக்க, அவர் பாதம் பணிகிறேன்” என்பது இம்மந்திரத்தின் பொதுவான பொருளாகும்.

    இம்மந்திரத்தை சனிக்கிழமைகளில் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன், தெற்கு திசை நோக்கி நின்று யமதர்மராஜனை மனதில் நினைத்து 9 முறை கூறவும். மேலும் அதே சனிக்கிழமையில் சிவன் கோவிலுக்கு சென்று, நவகிரக சந்நிதியில் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, சனிபகவானின் சகோதரனான யமதர்மனுக்குரிய இம்மந்திரத்தை கூறி வழிபட, இந்த இரு தேவர்களின் அருளால் உங்களுக்கு ஆயுள் விருத்தியாகும். மரணத்தை குறித்த தேவையற்ற பயங்கள் நீங்கும்.
    கீழே தரப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் படிப்பதனால் வாழ்வில் சகல சௌபாக்கியத்தையும் பெறலாம் என்பது ஐதீகம்.
    அனைவரது வாழ்விலும் எந்த வகையிலாவது ஒரு துன்பம் அல்லது கவலையை அணைத்து மனிதர்களும் அனுபவித்து தான் வருகின்றனர். அதனை சரி செய்ய அவரவர் அவர்களுக்கு தெரிந்த ஆன்மீக வழியை பின்பற்றி தான் வருகின்றனர். ஆனால் துன்பங்கள் தீர்ந்ததா என்பது கேள்வியாக தான் உள்ளது. ஆனால் கீழே தரப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் படிப்பதனால் வாழ்வில் சகல சௌபாக்கியத்தையும் பெறலாம் என்பது ஐதீகம்.

    ஸ்ரீசுதர்சனர் மாலா மந்திரம்

    ஒம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய
    கோபீஜன வல்லபாய பராய பரம்புருஷாய
    பரமாத்மனே பரகர்ம மந்த்ர யந்த்ர தந்த்ர,
    ஒளஷத அஸ்த்ர சாஸ்த்ராணி ஸம்ஹர
    ம்ருத்யோர் மோசய மோசய ஒம் நமோ பகவதே
    மஹா ஸுதர்சனாய தீப்த்ரே ஜ்வாலா
    பரீதாய ஸர்வதிக் ஷோபன கராய ஹும்
    பட் ப்ரம்மனே பரம் ஜோதிஷே ஸ்வாஹா!!
    லட்சுமி தேவிக்கு உகந்த இந்த உபதேசத்தை நாமும் நமது வீட்டில் பூஜை அறையில் அமர்ந்து சொன்னால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
    மனிதனுக்கு முக்கிய தேவை பணம். ஆனால் ஒரு சிலரிடமே பணம் தங்குகிறது. பணத்தையும், பதவியையும் இழந்து மனிதர்கள் மட்டுமல்ல, தேவர்கள் கூட சிரமப்பட்டிருக்கிறார்கள். இந்திரன் தனது தகாத செயலால் பதவியை இழந்து அலைந்திருக்கிறார். மீண்டும் பதவியை பெற பால்கடலில் பூஜை நடத்தினார். அப்போது விஷ்ணு சில உபதேசங்களை சொன்னார். இந்த உபதேசத்தை நாமும் நமது வீட்டில் பூஜை அறையில் அமர்ந்து சொன்னால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

    நம்மால் முடிந்த அளவிற்கு லட்சுமிக்கு நிவேதனங்கள் படைத்து இதை சொல்ல வேண்டும். அந்த உபதேச பிரார்த்தனை வருமாறு:

    ஆயிரம் இதழ்களை கொண்ட தாமரைப்பூவில் வசிப்பவளே! ஆயிரம் நிலாக்களின் பிரகாசத்தைப் போன்ற முகத்தைப் பெற்றவளே! இனிமை தருபவர் உள்ளத்திற்கு உற்சாகத்தை அளிப்பவளே! தங்கத்தைபோல் மின்னுபவளே! ஒளி பொருந்திய ஆடையை அணிந்திருப்பவளே!

    பலவகை ஆபரணங்களால் ஒளி வீசும் தெய்வீக தன்மை கொண்ட தாயே! மலர்முகம் கொண்டவளே! மந்தகாச புன்னகையை உடையவளே! என்றும் குறையாத இளமையைக் கொண்டவளே!

    உன்னை வணங்குவோருக்கு சகல செல்வங்களையும் அள்ளித் தருபவளே! மகாலட்சுமி உன்னை வணங்குகிறேன்.

    சகல உலகங்களிலும் உள்ளவர்களால் போற்றப்படும் தாயே! உலக உயிர்களுக்கு மகிழ்ச்சியை தருபவளே! ரத்தினங்களாலும், தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டு விஸ்வகர்மாவால் செய்யப்பட்ட அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவளே! தாமரையில் வசிப்பவளே! உனக்கு தூய்மையான கங்கை நீரை அர்ப்பணம் செய்கிறேன்.

    மிகவும் புனிதமானதும், பாவங்களை அழிக்கக் கூடியதுமான அக்னியைப் போன்றது இந்த கங்கை நீர், இந்த நீரை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். உனக்கு பூக்கள், சந்தனம் ஆகியவற்றுடன் கூடிய கங்கையின் புனித நீரை சங்கால் அபிஷேகம் செய்கிறேன். இதை நீ ஏற்றுக் கொள்வாயாக.

    அன்பிற்குரிய ஹரிக்கு மனைவியானவயே... உனது தேகத்தின் அழகைக் கூட்ட நறுமண தைலத்தையும், நறுமண திரவியங்களையும் கொண்ட இந்த கங்கை நீரை அர்ப்பணிக் கிறேன். பரந்தாமனின் அன்பிற்குரிய செல்வமே! உனக்கு நறுமண திரவியங்கள் சேர்க்கப்பட்ட இந்த சாம்பிராணியைத் தருகிறேன். ஏற்றுக் கொள்.

    பொதிகை மலையில் விளையும் சந்தனத்தை உனக்கு அர்ப்பணம் செய்கிறேன். ஏற்றுக் கொள்வாயாக. அழகிய வடிவம் கொண்டதும், ஒளிபரப்புவதும் சகல உயிர்களுக்கும் கண் போன்றதுமான இந்த தீபத்தை உனக்கு அர்ப்பணிக்கிறேன். ஏற்றுக் கொள்வாயாக.

    அறுசுவை நிரம்பியதும் உடலுக்கு நல்லதுமான இந்த நைவேத்தியத்தையும் அளிக்கிறேன். இதையும் ஏற்றுக் கொள்.

    இவ்வாறு கூறி லட்சுமியை வணங்க வேண்டும்.

    ஒவ்வொரு பிரார்த்தனையை சொல்லும்போதும் அந்தந்த பொருட்களை அம்பாளிடம் ஒப்படைக்க வேண்டும். வசதி இல்லாதவர்கள் தீபம் ஏற்றி வழிபாட்டாலே போதுமானது. அதே நேரம், மானசீகமாக இந்த பொருட்களை எல்லாம் அம்பாளுக்கு அர்ப்பணிப்பதாக கருதி வழிபடுதல் மிகவும் அவசியமாகும். இந்த உபதேசத்தை சொன்னால் நீங்கள் பணம் குவிக்கும் வகையில் லட்சுமி தேவி செல்வத்தை அள்ளித் தருவாள்.
    ×