என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    கீழே குறிப்பிட்டுள்ள குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள் குபேர உறவு வாய்க்கும்.
    கீழே குறிப்பிட்டுள்ள குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள் குபேர உறவு வாய்க்கும். வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும்.

    ஓம் ஹ்ரீம் க்ளீம்சௌம் 
    ஸ்ரீம் கும் குபேராய 
    நரவாகனாயயக்ஷ ராஜாய
    தன தான்யாதிபதியே
    லக்ஷ்மி புத்ராய
    ஸ்ரீம் ஓம் குபேராய நமஹ!

    மனம் தரும் பணம்! போன்ற பொன்மொழிகளை உணர்ந்து முதலில் மனத்தைப் பணக்கார மனமாக மாற்றுங்கள். வெகுசீக்கிரம் வெளியில் பணக்காரன் ஆகிவிடுவீர்கள்.
    அரச மரத்தை வலம் வரும் போது இந்த ஸ்லோகத்தை 108 முறை மனதிற்குள் சொல்லிக்கொண்டு வலம் வர வேண்டும். இந்த மந்திரத்தை சொல்வதால் துன்பங்கள் பறந்தோடும்.
    அமாவாசையும், சந்திர பகவானுக்கு உரிய திங்கள்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லி வலம் வருதல் நலம்.

    மூலதோ பிரம்மரூபாய
    மத்யதோ விஷ்ணு ரூபினே
    அக்ரத: சிவ ரூபாய
    விருக்ஷ ராஜயதே நம

    இந்த ஸ்லோகத்தை 108 முறை மனதிற்குள் சொல்லிக்கொண்டு வலம் வர வேண்டும். கூடவே உங்கள் சக்திக்கு ஏற்ப பழமோ பூஜை சார்ந்த பொருட்களோ மரத்தின் முன்னே சமர்ப்பிக்க வேண்டும்.

    108 முறை பிரகார வலம் முடிந்ததும் அந்த பொருட்களை தானம் அளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். 
    இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு தோல்வி இல்லை என்பது மட்டும் உறுதி. பல பிரச்சனைகள் அன்றாட வாழ்க்கையில் வந்தாலும், அதை எதிர்கொள்ளும் மன தைரியம் உங்களுக்கு வந்து விடும்.
    தோல்வியை எதிர்த்துப் போராட வேண்டும் என்றால் அதற்கு நமக்கு நிச்சயம் இறைவனின் அருள் ஆசி கிடைக்க வேண்டும். குறிப்பாக, சங்கடங்களைப் போக்கி, வெற்றியை நமக்கு தரக்கூடிய சாதாரண கடவுள் விநாயகப் பெருமான். ஏனென்றால் இவர் முழுமுதற் கடவுள் அல்லவா? இவரைப் பற்றிய ஒரு ஸ்லோகத்தைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்த உடனேயே, இந்த மந்திரத்தை உச்சரித்து விடுங்கள் இரண்டிலிருந்து மூன்று முறை படித்தால், தானாகவே மனப்பாடம் ஆகிவிடும்.

    இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு தோல்வி இல்லை என்பது மட்டும் உறுதி. பல பிரச்சனைகள் அன்றாட வாழ்க்கையில் வந்தாலும், அதை எதிர்கொள்ளும் மன தைரியம் உங்களுக்கு வந்து விடும். உங்களை வாழ்க்கையில் உயர்த்தக்கூடிய அந்த அதிஅற்புதமான மந்திரம் உங்களுக்காக இதோ!

    கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
    கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
    உமாஸுதம் சோக வினாச காரணம்
    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

    யானை முகத்தை கொண்டு, பூத கணங்களால் அனுதினமும் வழங்கப்படும், விநாயகப் பெருமானே! உமாதேவியின் புத்திரனானவரே, நாவல் பழம் விளாம் பழத்தின் சாற்றை ருசிப்பவரே, எங்களின் துக்கத்தை தீர்ப்பவரே, உன் பாதத்தை சரணடைகின்றேன் என்பது தான் இதற்கு அர்த்தம். நம்பிக்கை உள்ளவர்கள் விநாயகரது பாதத்தை நம்பிக்கையோடு பற்றிக் கொண்டால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி வெற்றி வெற்றி என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.
    திருப்பதியில் கோயில் கொண்டிருக்கும் வெங்கடாசலபதி ஆன ஸ்ரீனிவாச பெருமாளுக்கு உரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் தொழில் மற்றும் வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். வறுமை நிலை நீங்கும். புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.
    திருப்பதியில் கோயில் கொண்டிருக்கும் வெங்கடாசலபதி ஆன ஸ்ரீனிவாச பெருமாளுக்கு உரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் தொழில் மற்றும் வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். வறுமை நிலை நீங்கும். புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.

    ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
    ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
    ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
    ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே

    பொருள்: திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீனிவாசப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம் என்பதே இந்த ஸ்லோகத்தின் பொதுவான பொருளாகும்.

    திருப்பதியில் கோயில் கொண்டிருக்கும் வெங்கடாசலபதி ஆன ஸ்ரீனிவாச பெருமாளுக்கு உரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 27 முறை துதிப்பது நன்மைகளைத் தரும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு தீபமேற்றி, இனிப்பு நைவேத்தியம் வைத்து, இந்த மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை உரு ஜெபித்து வழிபடுவதால் உங்கள் தொழில் மற்றும் வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். வறுமை நிலை நீங்கும். புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.
    ஒருவருக்கு வேலை கிடைக்க அவரின் தகுதி, திறமை ஆகியவற்றோடு தெய்வ அருளும் அவசியமாகிறது. இம்மந்திரம் கூறி வழிபடுபவர்களுக்கு அந்த தெய்வத்தின் அருளால் அவர்கள் விரும்பிய படியான வேலை கிடைக்கப்பெறுவர்கள்.
    ராஜராஜஸகோத்பூதம் ராஜீவாயத லோசனம்
    ரதீசகோடி ஸௌந்தர்யம் தேஹிமே விபுலாம் ச்ரியம்

    வேலை தேடுபவர்கள் தினமும் துதிக்க வேண்டிய அற்புத மந்திரம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், உங்கள் வீட்டின் பூஜையறையில் இருக்கும் சுப்பிரமணியர் ஸ்வாமி படத்திற்கு முன்பு நின்றவாறு 108 முறை துதித்து சுப்ரமணியரான முருகப்பெருமானை வணங்க வேண்டும். கல்வி முடித்து வேலை தேடுபவர்களுக்கும், வேறு வேலையிலிருந்து புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களும் இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் துதித்து வந்தால் அவர்கள் விரும்பிய வகையான வேலை கிடைக்கப்பெறுவார்கள்.

    தற்காலங்களில் கல்வி கற்ற அனைவருக்குமே அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைப்பது பெரும் போராட்டமாக இருக்கிறது. ஒருவருக்கு வேலை கிடைக்க அவரின் தகுதி, திறமை ஆகியவற்றோடு தெய்வ அருளும் அவசியமாகிறது. இம்மந்திரம் கூறி வழிபடுபவர்களுக்கு அந்த தெய்வத்தின் அருளால் அவர்கள் விரும்பிய படியான வேலை கிடைக்கப்பெறுவர்கள்.
    முருகனுக்கு உகந்த இம்மந்திரத்தை முருகனுக்கு உகந்த சஷ்டி, கிருத்திகை தினத்தில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். மறைமுக நேர்முக எதிரிகளின் பார்வையிலிருந்தும் தப்பிக்கலாம்.
    ஓம் தத் புருசாய வித்மஹே
    மகேஷ்வர புத்ராய தீமஹி
    தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.

    இம்மந்திரத்தை முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமைகள், சஷ்டி, கிருத்திகை தினத்தில் முருகன் ஆலங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் முருகன் படத்தின் முன்போ நெய் விளக்கேற்றி, செந்நிற மலர்களால் முருகனை அர்ச்சித்து 108 அல்லது 1008 தடவை சொல்லி முருகனை வழிபட்டு வந்தால் துஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். மறைமுக நேர்முக எதிரிகளின் பார்வையிலிருந்தும் தப்பிக்கலாம்.
    முருகனின் இந்த மந்திரத்தை கந்த சஷ்டியின் 6 நாட்களும், முருகனுக்கு உகந்த நாட்களிலும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கும்.
    முருகனின் இந்த மந்திரத்தை கந்த சஷ்டியின் 6 நாட்களும், முருகனுக்கு உகந்த நாட்களிலும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கும்.

    ஓம் சரவணா பாவாய நமஹ
    ஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி
    கல்யாண சுந்தரா
    தேவசேனா மணா ஹ்காண்ட
    கார்திகேய நமோஸ்துதே
    ஓம் சுப்ரமண்யாய நமஹ
    கீழே கொடுக்கப்பட்டுள்ள முருகன் மூல மந்திரத்தை எத்தனை முறை ஜெபித்தால் எந்த வகையான அருள் நமக்கு கிடைக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.
    முருகன் மூல மந்திரம் :

    ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம்
    க்லௌம் ஸௌம் நமஹ

    ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகளால் பாடப்பட்ட கந்த குரு கவசத்தில் இந்த மந்திரம் இடம்பெற்றுள்ளது. ஒரு மனதோடு இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஜெபிப்போருக்கு முக்தி என்பது நிச்சயம் அதோடு எம பயம் என்பது அறவே நீங்கும். அது மட்டும் அல்லாது முருக பெருமான் ஒளிச்சுடராய் நம் மனதில் நிலைகொள்ள இந்த மந்திரம் உதவுகிறது. நாம் எண்ணிய அனைத்தும் இந்த மந்திரம் நமக்கு நிறைவேற்றி தரும்.

    எண்ணிலடங்கா பல அறிய பலன்களை இந்த மந்திரம் மூலம் நாம் பெறலாம். ஆகையால் இந்த மந்திரத்தை தினம்தோறும் 108 , 1008 , 10008 , 100008 அல்லது அதற்கு மேல் என்று உங்களால் எத்தனை முறை ஜபிக்க முடியுமோ அத்தனை முறை முருகனை நினைத்து ஜபித்து முருகனின் அருள் பெறலாம்.
    கந்த சஷ்டி கவசம் என்பது பால தேவராய சுவாமிகள் முருகன் மீது இயற்றிய‌ பாடலாகும். இதனைப் பாடி வழிபட, நம் உடல் நலம் மற்றும் மன நலம் சிறப்பாக இருக்கும்.
    காப்பு

    துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
    பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்தோங்கும்
    நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
    சஷ்டி கவசம் தனை.

    அமர ரிடர்தீர அமரம் புரிந்த
    குமரனடி நெஞ்சே குறி.

     

    நூல்

    சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
    சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
    பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
    கீதம் பாடக் கிண்கிணி யாட

    மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
    கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
    வரவர வேலா யுதனார் வருக
    வருக வருக மயிலோன் வருக

    இந்திரன் முதலா எண்டிசை போற்ற
    மந்திர வடிவேல் வருக வருக!
    வாசவன் மருகா வருக வருக
    நேசக் குறமகள் நினைவோன் வருக

    ஆறுமுகம் படைத்த ஐயா வருக
    நீறிடும் வேலவன் நித்தம் வருக
    சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
    சரவண பவனார் சடுதியில் வருக

    ரவண பவச ர ர ர ர ர ர ர
    ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
    விநபவ சரவண வீரா நமோநம
    நிபவ சரவண நிறநிற நிறென

    வசுர வணப வருக வருக
    அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
    என்னை ஆளும் இளையோன் கையில்
    பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

    பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
    விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
    ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
    உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்

    கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
    நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
    சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
    குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!

    ஆறு முகமும் அணிமுடி ஆறும்
    நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
    பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
    நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

    ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
    ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
    பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
    நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

    முப்புரி நூலும் முத்தணி மார்பும்
    செப்பழ குடைய திருவயி றுந்தியும்
    துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
    நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

    இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
    திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
    செககண செககண செககண செகண
    மொகமொக மொகமொக மொகமொக மொகென

    நகநக நகநக நகநக நகென
    டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
    ரரரர ரரரர ரரரர ரரர
    ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

    டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
    டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
    விந்து விந்து மயிலோன் விந்து
    முந்து முந்து முருகவேள் முந்து

    என்றனை யாளும் ஏரகச் செல்வ
    மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
    லாலா லாலா லாலா வேசமும்
    லீலா லீலா லீலா வினோ தனென்று

    உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
    எந்தலை வைத்துன் இணையடி காக்க
    என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
    பன்னிரு விழியால் பாலனைக் காக்க

    அடியேன் வதனம் அழகுவேல் காக்க
    பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
    கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
    விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

    நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
    பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
    முப்பத் திருபல் முனைவேல் காக்க
    செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

    கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
    என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
    மார்பை ரத்ன வடிவேல் காக்க
    சேரிள முலைமார் திருவேல் காக்க

    வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
    பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
    அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
    பழுபதி னாறும் பருவேல் காக்க

    வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
    சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
    நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
    ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
    பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
    பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

    கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
    வட்டக் குதத்தை வல்வேல் காக்க
    ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
    கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

    முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
    பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
    நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
    நாபிக் கமலம் நல்வேல் காக்க
    முப்பால் நாடியை முனைவேல் காக்க

    எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
    அடியேன் வதனம் அசைவுள நேரம்
    கடுகவே வந்து கனகவேல் காக்க
    வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
    அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

    ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
    தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
    காக்க காக்க கனகவேல் காக்க
    நோக்க நோக்க நொடியில் நோக்க
    தாக்க தாக்க தடையறக் தாக்க

    பார்க்க பார்க்க பாவம் பொடிபட
    பில்லி சூனியம் பெரும்பகை அகல
    வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
    அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
    பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

    கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
    பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
    அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
    இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
    எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

    கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
    விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
    தண்டியக் காரரும் சண்டாளர் களும்
    என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

    ஆனை யடியினில் அரும்பா வைகளும்
    பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
    நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
    பாவைக ளுடனே பலகல சத்துடன்

    மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
    ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
    காசும் பணமும் காவுடன் சோறும்
    ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

    அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
    மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
    காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
    அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

    வாய்விட் டலறி மதிகெட் டோட
    படியினில் முட்ட பாசக் கயிற்றால்
    கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
    கட்டி உருட்டு கைகால் முறிய

    கட்டு கட்டு கதறிடக் கட்டு
    முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
    செக்கு செக்கு செதில் செதிலாக
    சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

    குத்து குத்து கூர்வடி வேலால்
    பற்று பற்று பகலவன் தணலெரி
    தணலெரி தணலெரி தணலது வாக
    விடு விடு வேலை வெகுண்டது வோடப்

    புலியும் நரியும் புன்னரி நாயும்
    எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
    தேளும் பாம்பும் செய்யான் பூரான்
    கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

    ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
    ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
    வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
    குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

    குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
    பக்கப் பிளவை படர்தொடை வாழை
    கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
    பற்குத் தரணை பருஅரை யாப்பும்

    எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
    நில்லா தோட நீஎனக் கருள்வாய்
    ஈரேழு உலகமும் எனக் குறவாக
    ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

    மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
    உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
    சரவண பவனே சைலொளி பவனே
    திரிபுர பவனே திகழொளி பவனே

    பரிபுர பவனே பவமொளி பவனே
    அரிதிரு மருகா அமரா வதியைக்
    காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
    கந்தா குகனே கதிர்வே லவனே

    கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
    இடும்பனை யழித்த இனியவேல் முருகா
    தனிகா சலனே சங்கரன் புதல்வா
    கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
    பழநிப் பதிவாழ் பாலகு மாரா
    ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
    செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
    சமரா புரிவாழ் சண்முகத் தரசே

    காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
    என்நா இருக்க யானுனைப் பாட
    எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
    பாடினேன் ஆடினேன் பரவச மாக

    ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
    நேச முடன்யான் நெற்றியில் அணிய
    பாச வினைகள் பற்றது நீங்கி
    உன்பதம் பெறவே உன்னரு ளாக

    அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்
    மெத்தமெத் தாக வேலா யுதனார்
    சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
    வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

    வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
    வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
    வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
    வாழ்க வாழ்க வாரணத் துவசம்

    வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
    எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
    எத்தனை அடியேன் எத்தனை செயினும்
    பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

    பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
    பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
    மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
    தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

    கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
    பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
    காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
    ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

    நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
    கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
    சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
    ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
    ஓதியே செபித்து உகந்துநீ றணிய
    அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
    திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
    மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

    நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
    நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
    எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
    கந்தர்கை வேலாம் கவசத் தடியை

    வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
    விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
    பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
    நல்லோர் நினைவில் நடனம் புரியும்

    சர்வ சத்ரு சங்கா ரத்தடி
    அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
    வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
    சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
    இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

    குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
    சின்னக் குழந்தை சேவடி போற்றி!
    எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
    மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

    தேவர்கள் சேனா பதியே போற்றி!
    குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
    திறமிகு திவ்விய தேகா போற்றி!
    இடும்பா யுதனே இடும்பா போற்றி!

    கடம்பா போற்றி கந்தா போற்றி!
    வெட்சி புனையும் வேளே போற்றி!
    உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
    மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!

    சரணம் சரணம் சரவண பவஓம்
    சரணம் சரணம் சண்முகா சரணம்!

    (கந்த சஷ்டி கவசம் நிறைவுற்றது)
    வீடு நிலம் அல்லது என்ன சொத்து வாங்க வேண்டும் என்ற ஆசை உங்கள் மனதில் இருந்தாலும் சரி, தேய்பிறை சஷ்டியில் இருந்து 15 நாட்கள் தொடர்ந்து இந்த ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.
    வீடு நிலம் அல்லது காடு கழனி தோட்டம் வாகனம் இப்படியாக என்ன சொத்து வாங்க வேண்டும் என்ற ஆசை உங்கள் மனதில் இருந்தாலும் சரி, தேய்பிறை சஷ்டியில் இருந்து 15 நாட்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். எப்போதுமே வாழ்க்கையில் வளரக் கூடிய சூழ்நிலை வேண்டுமென்றால், வளர்பிறையில்தான் பரிகாரத்தை செய்ய வேண்டும்.

    முதலில் சுத்தமான அருகம்புல்லை எடுத்து கழுவி, சிவப்பு நிற நூலில் தொடுத்து மாலையாக வைத்துக் கொள்ள வேண்டும். வழக்கம்போல பூஜை என்றால் உங்கள் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு, முருகனுக்கு நெய் தீபம் ஏற்றுவது சிறப்பு. முடியாதவர்கள் நல்லெண்ணெயில் தீபமேற்றி கொள்ளலாம். தவறொன்றும் கிடையாது.

    தயாராக இருக்கும் இந்த அருகம்புல் மாலையை உங்கள் வீட்டில் இருக்கும் முருகனின் திரு உருவ படத்திற்கு அணிவித்து விட்டு, அதன்பின்பு ஒரு மனப் பலகையின் மீது, அமர்ந்து, பின் வரும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை உச்சரித்து பூஜை செய்யும்போது, முருகனுக்கு கட்டாயம் நிவேதனமாக ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும். இரண்டு பேரீச்சம்பழங்களை ஆவது நைவேத்தியமாக வையுங்கள். அது தான் சரியான முறை. உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றியைத் தரக்கூடிய அந்த மந்திரம் இதோ!

    ஓம் மங்கள கார்த்திகேயா
    சரவணபவா ஹ்ரீம் காரிய
    சித்திதராயே நமோ நம!

    இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிப்பது மிகவும் சிறந்தது. 27 க்கும் மேல் எத்தனை முறை வேண்டுமென்றாலும் உச்சரித்து கொள்ளலாம். அதில், எந்த ஒரு தவறும் கிடையாது. பொதுவாகவே அருகம்புல் என்றால், விநாயகருக்கு தான் சமர்ப்பணம் செய்வோம். ஆனால் இந்த வழிபாட்டு முறையில் சிவப்பு நிற நூலில் தொடுத்த அறுகம்புல்லை முருகப்பெருமானுக்கு அணிவித்து வழிபாடு செய்தோமேயானால், நிச்சயம் கை மேல் பலன் உண்டு.
    ராஜயோகம் தந்திடுவாள் கஜலக்ஷ்மி. கெளரவப் பதவி தேடி வரும். உத்தியோகத்திலும் தொழிலும் உயர்வுகளைத் தந்திடுவாள். சகல ஐஸ்வரியங்களும் தனம் தானியமும் அளித்துக் காத்திடுவாள் தேவி!
    இல்லத்தில், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ஸ்ரீகஜலக்ஷ்மியை அவளுக்கு உரிய ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்து, மனதார வேண்டிக்கொள்ளலாம்.

    ஸ்ரீ கஜலட்சுமி ஸ்தோத்திரம் :

    சதுர்ப் புஜாம் த்விநேத்ராஞ்ச
    வராபய கராந் விதாம்
    அப்ஜத்வய கராம்போஜாம்
    அம்புஜா சநஸமஸ்த்திதாம்
    ஸஸிவர்ண கடேபாப் யாம்
    ப்லாவ்யமானாம் மஹாச்ரியம்
    சர்வாபரண சோபாட்யாம்
    சுப்ரவஸ்த் ரோத்தரீயகாம்
    சாமரக்ரஹ நாரீபி :
    ஸேவிதாம் பார்ச்வயோர்த்வயோ :
    ஆபாதலம்பி வசநாம்
    கரண்ட மகுடாம் பஜே.

    இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் குளித்து முடித்து, விளக்கேற்றி சொல்லி வாருங்கள். முடிந்தால், வெண்மை நிற மலர்கள், தாமரை மலர் கொண்டு கஜலக்ஷ்மியை அலங்கரியுங்கள். பால் பாயசம் நைவேத்தியம் படைப்பது இன்னும் வளம் சேர்க்கும்.

    ராஜயோகம் தந்திடுவாள் கஜலக்ஷ்மி. கெளரவப் பதவி தேடி வரும். உத்தியோகத்திலும் தொழிலும் உயர்வுகளைத் தந்திடுவாள். சகல ஐஸ்வரியங்களும் தனம் தானியமும் அளித்துக் காத்திடுவாள் தேவி!
    ஆறுமுகனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் சொல்லி வழிபாடு செய்த பின்னர் உங்கள் அன்றாட வேலையை தொடங்குவது வெற்றியை தரும்.
    ஓம் சண்முக பதயே நமோ நம!
    ஓம் ஷண்மத பதயே நமோ நம!
    ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம!
    ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம!
    ஓம் ஷட்கோண பதயே நமோ நம!
    ஓம் ஷட்கோச பதயே நமோ நம!
    ஓம் நவநிதி பதயே நமோ நம!
    ஓம் சுபநிதி பதயே நமோ நம!
    ஓம் நரபதி பதயே நமோ நம!
    ஓம் சுரபதி பதயே நமோ நம!
    ஓம் நடச்சிவ பதயே நமோ நம!
    ஓம் ஷடஷர பதயே நமோ நம!
    ஓம் கவிராஜ பதயே நமோ நம!
    ஓம் தபராஜ பதயே நமோ நம!
    ஓம் இகபர பதயே நமோ நம!
    ஓம் புகழ்முநி பதயே நமோ நம!
    ஓம் ஜயஜய பதயே நமோ நம!
    ஓம் நயநய பதயே நமோ நம!
    ஓம் மஞ்சுள பதயே நமோ நம!
    ஓம் குஞ்சரி பதயே நமோ நம!
    ஓம் வல்லீ பதயே நமோ நம!
    ஓம் மல்ல பதயே நமோ நம!
    ஓம் அஸ்த்ர பதயே நமோ நம!
    ஓம் சஸ்த்ர பதயே நமோ நம!
    ஓம் ஷஷ்டி பதயே நமோ நம!
    ஓம் இஷ்டி பதயே நமோ நம!
    ஓம் அபேத பதயே நமோ நம!
    ஓம் கபோத பதயே நமோ நம!
    ஓம் வியூஹ பதயே நமோ நம!
    ஓம் மயூர பதயே நமோ நம!
    ஓம் பூத பதயே நமோ நம!
    ஓம் வேத பதயே நமோ நம!
    ஓம் புராண பதயே நமோ நம!
    ஓம் ப்ராண பதயே நமோ நம!
    ஓம் பக்த பதயே நமோ நம!
    ஓம் முக்த பதயே நமோ நம!
    ஓம் அகார பதயே நமோ நம!
    ஓம் உகார பதயே நமோ நம!
    ஓம் மகார பதயே நமோ நம!
    ஓம் விகாச பதயே நமோ நம!
    ஓம் ஆதி பதயே நமோ நம!
    ஓம் பூதி பதயே நமோ நம!
    ஓம் அமார பதயே நமோ நம!
    ஓம் குமார பதயே நமோ நம!
    ×