என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    கிருஷ்ணனை இவ்வாறு பாடி வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும் என்று தனது திருப்பாவை பாசுரத்தில் கூறியுள்ளார்.
    பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும். அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள், மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.

    கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல், பால் பாயாசம் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபட வேண்டும். அந்த நீலவண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தனது திருப்பாவையில் இவ்வாறு பாடியருளியுள்ளார்.

    ‘மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
    தூய பெருநீர் யமுனைத் துறைவனை
    ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
    தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை
    தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
    வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க
    போய பிழையும் புகு தருவானின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.’

    கிருஷ்ணனை இவ்வாறு பாடி வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும் என்று தனது திருப்பாவை பாசுரத்தில் கூறியுள்ளார்.

    பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும். கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள். வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி மகிழ்வது சிறப்பு.

    இதையும் படிக்கலாம்... பகவான் கிருஷ்ணர் அவதாரம்
    இத்துதியை பூர நட்சத்திர தினங்களில் பாராயணம் செய்து வந்தால் ஆண்டாளுக்கு ரங்கநாதர் மணமகனாகக் கிடைத்தது போல் கன்னியர் மனம் விரும்பும் மணாளனைக் கைபிடிப்பர்.
    ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம்
    ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம்
    ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவான்யாம்
    கோதாம் அனஸ்ய சரண:சரணம் ப்ரபத்யே

    -ஸ்ரீகோதாஸ்துதி

    பொதுப் பொருள்: கற்பகவிருட்சத்தில் பூக்கும் மலர் போல விஷ்ணு சித்தரின் குலத்தில் அவதரித்த ஆண்டாளே நமஸ்காரம். ஹரிசந்தன மரத்தின் கீழ் வாசம் செய்யும் ரங்கராஜனாகிய திருமாலின் மனம் கவர்ந்தவளே நமஸ்காரம். பூமிதேவியின் அம்சத்தைக் கொண்ட தாயே, உன் மனம் போல் மாங்கல்யம் அமைந்தாற்போன்று எனக்கும் அருள் செய்வாயாக. மகாலட்சுமியின் அம்சத்தைக் கொண்ட அன்னையே! என் வாழ்க்கையில் மங்களமும், வளமும் பெருக வரமருள்வாய் அம்மா.

    இத்துதியை பூர நட்சத்திர தினங்களில் பாராயணம் செய்து வந்தால் ஆண்டாளுக்கு ரங்கநாதர் மணமகனாகக் கிடைத்தது போல் கன்னியர் மனம் விரும்பும் மணாளனைக் கைபிடிப்பர். செல்வச் செழிப்பும் ஏற்படும்.

    இத்துதியை திருமணம் ஆக வேண்டிய ஆடவரும், கன்னியரும் தினமும் பாராயணம் செய்து வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும்.
    தேவக்யா ஸுப்ரஜா கிருஷ்ண
    ருக்மிணீ ப்ரியவல்லப
    விவாஹம் தேஹிமே ஸீக்ரம்
    வாஸுதேவ நமோஸ்துதே

    இத்துதியை திருமணம் ஆக வேண்டிய ஆடவரும், கன்னியரும் தினமும் பாராயணம் செய்து வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும்.

    இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, சுதர்சன பெருமாளை வழிபாடு செய்து வந்தால் பயம் நீங்கி ஞானம் பிறக்கும். கல்விச் செல்வமும், பொருட்செல்வமும் கிடைக்கும்.
    ‘ஓம் சுதர்ஹநாய வித்மஹே
    மஹாஸ்வாலாய தீமஹி
    தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்’

    திருமாலின் கரங்களை அலங்கரிக்கும் சுதர்சனரை அறிந்து கொள்வோம். மகா ஜூவாலையாகத் திகழும் சுதர்சனர் மீது தியானம் செய்வோம். தீமையை அழிக்கும் அவர் நம்மை காத்து அருள்புரிவார் என்பது இதன் பொருள்.

    இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, சுதர்சன பெருமாளை வழிபாடு செய்து வந்தால் பயம் நீங்கி ஞானம் பிறக்கும். கல்விச் செல்வமும், பொருட்செல்வமும் கிடைக்கும். திருமாலின் அருளையும் பெறலாம். ஆயுள், ஆரோக்கியம் நீடிக்கும்.
    கீழே குறிப்பிட்டுள்ள குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள் குபேர உறவு வாய்க்கும்.
    கீழே குறிப்பிட்டுள்ள குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள் குபேர உறவு வாய்க்கும்.

    வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும்.

    ஓம் ........ஹ்ரீம்.......க்ளீம்சௌம்........ஸ்ரீம்......கும் குபேராய........... நரவாகனாயயக்ஷ ராஜாய...... தன தான்யாதிபதியே............ லக்ஷ்மி புத்ராய......ஸ்ரீம்........ ஓம்.......

    குபேராய நமஹ.........!

    மனம் தரும் பணம்! போன்ற பொன்மொழிகளை உணர்ந்து முதலில் மனத்தைப் பணக்கார மனமாக மாற்றுங்கள். வெகுசீக்கிரம் வெளியில் பணக்காரன்

    ஆகிவிடுவீர்கள்.

    காலை அல்லது மாலை நேரத்தில் திருமணமாக வேண்டிய இளைஞர்களும், கன்னிகைகளும் இத்துதியை பாராயணம் செய்தால், வராஹ மூர்த்தியின் திருவருளால் அவரவர்களுக்கு திருமணம் கை கூடும். மங்களங்கள் பெருகும்.
    ய: ஸ்வாமீ ஸரஸஸ்தடே விஹரதோ
    ஸ்ரீஸ்வாமி நாம்ன: ஸதா
    ஸௌவர்ணாலய மண்டிதோ
    விதிமுகைர்பர்ஹிர்முகை: ஸேவித:
    ய: சத்ரூன் ஹனயன்னிஜானவதி
    ச ஸ்ரீபூவராஹாத்மக:
    ஸ்ரீமத் வேங்கட பூதேந்த்ரரமண:
    குர்யாத்தரிர் மங்களம்.

     - மங்கள ஸ்லோகம்

    பொதுப்பொருள்: திருப்பதி-திருமலையில் உள்ள ஸ்வாமி புஷ்கரணி என்னும் குளத்தின் கரையில் வீற்றிருக்கிறார் வராஹமூர்த்தி. மஹாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் இவர். தங்கமயமான கோயிலை அலங்கரித்துக் கொண்டிருப்பவரும், பிரம்மா முதலிய தேவர்களால் வணங்கப்படுகிறவரும், பகைவர்களிடமிருந்து கைதூக்கி விடுபவரும், யக்ஞவராஹமூர்த்தியாய் விளங்குபவருமான, வெங்கடாஜலபதிக்கு இடமளித்த திருமாலான வராஹர் எனக்கு எல்லா மங்களங்களையும் அருளுமாறு வேண்டிக்கொள்கிறேன். காலை அல்லது மாலை நேரத்தில் திருமணமாக வேண்டிய இளைஞர்களும், கன்னிகைகளும் இத்துதியை பாராயணம் செய்தால், வராஹ மூர்த்தியின் திருவருளால் அவரவர்களுக்கு திருமணம் கை கூடும். மங்களங்கள் பெருகும்.

    மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் பூஜிப்பது. தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள்தரும்.
    ஓம் திருவே போற்றி
    ஓம் திருவளர் தாயே    போற்றி
    ஓம் திருமாலின் தேவி போற்றி
    ஓம் திருவெலாம் தருவாய் போற்றி
    ஓம் திருத்தொண்டர் மணியே போற்றி
    ஓம் திருப்புக ழுடையாய் போற்றி
    ஓம் திருஞான வல்லி போற்றி
    ஓம் திருவருட் செல்வி போற்றி
    ஓம் திருமால் மகிழ்வாய் போற்றி
    ஓம் திருமார்பி லமர்ந்தாய் போற்றி
    ஓம் தினமெமைக் காப்பாய் போற்றி
    ஓம் தீபசோதியே போற்றி
    ஓம் தீதெலாம் தீர்ப்பாய் போற்றி
    ஓம் தூப ஜோதியே போற்றி
    ஓம் தூயரந்தீர்த் தருள்வாய் போற்றி
    ஓம் திருப்பாற் கடலாய் போற்றி
    ஓம் திருவமு தருள்வாய் போற்றி
    ஓம் அன்னையே அருளே போற்றி
    ஓம் அழகெலாம் உடையாய் போற்றி
    ஓம் அயன்பெறு தாயே போற்றி
    ஓம் ஆறுமுகன் மாமி போற்றி
    ஓம் அமரர் குல விளக்கே போற்றி
    ஓம் அமரேசன் தொழுவாய் போற்றி
    ஓம் அன்பருக் கினியாய் போற்றி
    ஓம் அண்டங்கள் காப்பாய் போற்றி
    ஓம் ஆனந்த் வல்லியே போற்றி
    ஓம் ஆருயிர்க் குயிரே போற்றி
    ஓம் ஆவிநல் வடிவே போற்றி
    ஓம் ஆக்கம தருள்வாய் போற்றி
    ஓம் இச்சை கிரியை போற்றி
    ஓம் இருள்தனைக் கடிவாய் போற்றி
    ஓம் இன்பப் பெருக்கே போற்றி
    ஓம் இகபர சுகமே போற்றி
    ஓம் ஈகையின் பொலிவே போற்றி
    ஓம் ஈறிலா அன்னை போற்றி
    ஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி
    ஓம் எண்குண வல்லி போற்றி
    ஓம் ஓங்கார சத்தி போற்றி
    ஓம் ஒளிமிகு தேவி    போற்றி
    ஓம் கற்பக வல்லி போற்றி
    ஓம் காமரு தேவி போற்றி
    ஓம் கனக வல்லியே போற்றி
    ஓம் கருணாம் பிகையே போற்றி
    ஓம் குத்து விளக்கே போற்றி
    ஓம் குலமகள் தொழுவாய் போற்றி
    ஓம் மங்கல விளக்கே போற்றி
    ஓம் மங்கையர் தொழுவாய் போற்றி
    ஓம் தூங்காத விளக்கே போற்றி
    ஓம் தூயவர் தொழுவாய் போற்றி
    ஓம் பங்கச வல்லி போற்றி
    ஓம் பாவலர் பணிவாய் போற்றி
    ஓம் பொன்னி அம்மையே போற்றி
    ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி
    ஓம் நாரணன் நங்கையே போற்றி
    ஓம் நாவலர் துதிப்பாய் போற்றி
    ஓம் நவரத்தின மணியே போற்றி
    ஓம் நவநிதி நீயே போற்றி
    ஓம் அஷ்ட லக்குமியே போற்றி
    ஓம் அறம்பொருள் தருவாய் போற்றி
    ஓம் ஆதிலட்சுமியே போற்றி
    ஓம் ஆணவம் அறுப்பாய் போற்றி
    ஓம் கஜலட்சுமியே போற்றி
    ஓம் கள்ளமும் கரைப்பாய் போற்றி
    ஓம் தைரியலட்சுமியே போற்றி
    ஓம் தயக்கமும் தவிர்ப்பாய் போற்றி
    ஓம் தனலட்சுமியே போற்றி
    ஓம் தனதானியம் தருவாய் போற்றி
    ஓம் விஜயலட்சுமியே போற்றி
    ஓம் வெற்றியைத் தருவாய் போற்றி
    ஓம் வரலட்சுமியே போற்றி
    ஓம் வரமெலாம் தருவாய் போற்றி
    ஓம் முத்துலட்சுமியே போற்றி
    ஓம் முத்தியை அருள்வாய் போற்றி
    ஓம் பூவேந்தர் தொழுவாய் போற்றி
    ஓம் முத்தமிழ் தருவாய் போற்றி
    ஓம் கண்ணே எம் கருத்தே போற்றி
    ஓம் கவலையை ஒழிப்பாய் போற்றி
    ஓம் விண்ணே எம் விதியே போற்றி
    ஓம் விவேகம தருள்வாய் போற்றி
    ஓம் பொன்னேநன் மணியே போற்றி
    ஓம் போகம தருள்வாய் போற்றி
    ஓம் பூதேவி தாயே போற்றி
    ஓம் புகழெலாம் தருவாய் போற்றி
    ஓம் சீதேவி தாயே போற்றி
    ஓம் சிறப்பெலாம் அருள்வாய் போற்றி
    ஓம் மதிவதன வல்லி போற்றி
    ஓம் மாண்பெலாம் தருவாய் போற்றி
    ஓம் நித்திய கல்யாணி போற்றி
    ஓம் நீதிநெறி அருள்வாய் போற்றி
    ஓம் கமலக்கன்னி போற்றி
    ஓம் கருத்தினி லமர்வாய் போற்றி
    ஓம் தாமரைத் தாளாய் போற்றி
    ஓம் தவநிலை அருள்வாய் போற்றி
    ஓம் கலைஞானச் செல்வி போற்றி
    ஓம் கலைஞருக் கருள்வாய் போற்றி
    ஓம் அருள்ஞானச் செல்வி போற்றி
    ஓம் அறிஞருக் கருள்வாய் போற்றி
    ஓம் எளியவர்க் கருள்வாய் போற்றி
    ஓம் ஏழ்மையைப் போக்குவாய் போற்றி
    ஓம் வறியவர்க் கருள்வாய் போற்றி
    ஓம் வறுமையை ஒழிப்பாய் போற்றி
    ஓம் வேத வல்லியே போற்றி
    ஓம் வேட்கையைத் தணிப்பாய் போற்றி
    ஓம் பிறர்பொருள் கவர எண்ணாப்
    பெரியர்க் கருள்வாய் போற்றி
    ஓம் நடுநிலை நீங்கிடாத நல்லவர்க்
    கருள்வாய் போற்றி
    ஓம் அறநெறி வழுவிலாத அடியவர்க்
    கருள்வாய் போற்றி
    ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி
    ஓம் அருள்மிகு இலக்குமிதாயே
    போற்றி போற்றி போற்றி
    நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.
    ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் அத்ரூஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் அன்னலட்சுமியே போற்றி
    ஓம் அபயலட்சுமியே போற்றி
    ஓம் அலங்காரலட்சுமியே போற்றி
    ஓம் அஸ்வாரூடலட்சுமியே போற்றி
    ஓம் அஷ்டபுஜலட்சுமியே போற்றி
    ஓம் அஷ்டாதசபுஜலட்சுமியே போற்றி
    ஓம் அம்ருதலட்சுமியே போற்றி
    ஓம் அனந்தலட்சுமியே போற்றி
    ஓம் ஆதிலட்சுமியே போற்றி
    ஓம் ஆனந்தலட்சுமியே போற்றி
    ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் இந்திரலட்சுமியே போற்றி
    ஓம் ஐஸ்வர்யலட்சுமியே போற்றி
    ஓம் ஓங்கார ரூபியே போற்றி
    ஓம் கஜலட்சுமியே போற்றி
    ஓம் கனகலட்சுமியே போற்றி
    ஓம் கற்பகலட்சுமியே போற்றி
    ஓம் கனகாபிஷேகலட்சுமியே (20) போற்றி
    ஓம் கன்யாலட்சுமியே போற்றி
    ஓம் கமலாலட்சுமியே போற்றி
    ஓம் கிருபாலட்சுமியே போற்றி
    ஓம் கீர்த்திலட்சுமியே போற்றி
    ஓம் கோலட்சுமியே போற்றி
    ஓம் கோலாபுரிலட்சுமியே போற்றி
    ஓம் சத்யலட்சுமியே போற்றி
    ஓம் சர்வலட்சுமியே போற்றி
    ஓம் சம்பத்ஸ்வரூபியே போற்றி
    ஓம் சந்தானலட்சுமியே (30) போற்றி
    ஓம் சாந்தலட்சுமியே போற்றி
    ஓம் சாகரோத்பவலட்சுமியே போற்றி
    ஓம் சித்தலட்சுமியே போற்றி
    ஓம் சிவானந்தலட்சுமியே போற்றி
    ஓம் சுபலட்சுமியே போற்றி
    ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
    ஓம் சுவர்ணலட்சுமியே போற்றி
    ஓம் சுஸ்மிதலட்சுமியே போற்றி
    ஓம் சுகாசனலட்சுமியே போற்றி
    ஓம் சௌபாக்யலட்சுமியே (40) போற்றி
    ஓம் ஸ்திதலட்சுமியே போற்றி
    ஓம் சௌந்தர்யலட்சுமியே போற்றி
    ஓம் சுவர்க்கலட்சுமியே போற்றி
    ஓம் ஸைன்யலட்சுமியே போற்றி
    ஓம் ஜயலட்சுமியே போற்றி
    ஓம் ஜகல்லட்சுமியே போற்றி
    ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
    ஓம் ஜேஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் ஷ்ட்புஜலட்சுமியே போற்றி
    ஓம் ஷோடசலட்சுமியே (50) போற்றி
    ஓம் தனலட்சுமியே போற்றி
    ஓம் தனதலட்சுமியே போற்றி
    ஓம் தயாலட்சுமியே போற்றி
    ஓம் தான்யலட்சுமியே போற்றி
    ஓம் த்ரிகுணலட்சுமியே போற்றி
    ஓம் த்வாரலட்சுமியே போற்றி
    ஓம் த்விபுஜலட்சுமியே போற்றி
    ஓம் த்விபுஜவீரலட்சுமியே போற்றி
    ஓம் திவ்யலட்சுமியே போற்றி
    ஓம் தீபலட்சுமியே (60) போற்றி
    ஓம் தைர்யலட்சுமியே போற்றி
    ஓம் துளசிலட்சுமியே போற்றி
    ஓம் துக்கநிவாரணியே போற்றி
    ஓம் நாகலட்சுமியே போற்றி
    ஓம் நித்தியலட்சுமியே போற்றி
    ஓம் பாலலட்சுமியே போற்றி
    ஓம் பங்கஜலட்சுமியே போற்றி
    ஓம் பிரம்மசோதரியே (70) போற்றி
    ஓம் பிரசன்னலட்சுமியே போற்றி
    ஓம் பிரகாசலட்சுமியே போற்றி
    ஓம் பில்வலட்சுமியே போற்றி
    ஓம் பூலட்சுமியே போற்றி
    ஓம் புவனலட்சுமியே போற்றி
    ஓம் பூஜ்யலட்சுமியே போற்றி
    ஓம் பூர்ணலட்சுமியே போற்றி
    ஓம் போகலட்சுமியே போற்றி
    ஓம் மகாலட்சுமியே போற்றி
    ஓம் மாயாலட்சுமியே (80) போற்றி
    ஓம் மோஷலட்சுமியே போற்றி
    ஓம் மோஹனலட்சுமியே போற்றி
    ஓம் யக்ஞலட்சுமியே போற்றி
    ஓம் யந்திரலட்சுமியே போற்றி
    ஓம் யோகலட்சுமியே போற்றி
    ஓம் யௌவனலட்சுமியே போற்றி
    ஓம் ராஜலட்சுமியே போற்றி
    ஓம் ராஜ்யலட்சுமியே போற்றி
    ஓம் ரம்யலட்சுமியே போற்றி
    ஓம் ரூபலட்சுமியே (90) போற்றி
    ஓம் லட்சுமியே போற்றி
    ஓம் லங்காதகனியே போற்றி
    ஓம் வரலட்சுமியே போற்றி
    ஓம் வரதலட்சுமியே போற்றி
    ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
    ஓம் விஜயலட்சுமியே போற்றி
    ஓம் விஸ்வலட்சுமியே போற்றி
    ஓம் வித்யாலட்சுமியே போற்றி
    ஓம் வீரலட்சுமியே போற்றி
    ஓம் வீர்யலட்சுமியே போற்றி
    ஓம் ஞானலட்சுமியே போற்றி
    ஓம் ஹம்சவாகினியே போற்றி
    ஓம் ஹருதயலட்சுமியே போற்றி
    ஓம் ஹிரண்யலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீசக்ரலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீசூக்தலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீப்ரதனாலட்சுமியே போற்றி
    நவக்கிரகங்களின் ஆசியைப் பெற நவக்கிரக காயத்ரி மந்திரங்கள் பேருதவி புரிவதாக அமையும். நவக்கிரகங்களுக்கான காயத்ரி மந்திரங்களை இங்கே பார்ப்போம்.
    மனிதர்களின் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவது ‘நவக்கிரகங்கள்’ என்று அழைக்கப்படும் ஒன்பது தெய்வங்கள். அந்த நவக்கிரகங்களின் ஆசியைப் பெற நவக்கிரக காயத்ரி மந்திரங்கள் பேருதவி புரிவதாக அமையும். நவக்கிரகங்களுக்கான காயத்ரி மந்திரங்களை இங்கே பார்ப்போம்.

    குரு

    ஓம் விருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குருப் ப்ரசோதயாத்

    சூரியன்

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

    சுக்ரன்

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி தந்நோ சுக்ர ப்ரசோதயாத்

    சந்திரன்

    ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி தந்நோ சந்திர ப்ரசோதயாத்

    சனி

    ஓம் காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ சனிப் ப்ரசோதயாத்

    செவ்வாய்

    ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி தந்நோ அங்காரக ப்ரசோதயாத்

    ராகு

    ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி தந்நோ ராகு ப்ரசோதயாத்

    புதன்

    ஓம் கஜத் வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி தந்நோ புதப் ப்ரசோதயாத்

    கேது

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தந்நோ கேதுப் ப்ரசோதயாத்
    இந்த ஸ்லோகத்தை தினசரி கூறிவந்தால் அனைத்துத்தொல்லைகளிருந்தும் விலகி தோஷங்கள் நிவர்த்தியாகி அஷ்ட ஐஸ்வர்யங்களும் தீர்க்கமான உடல் நலமும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
    சர்வாத்மிகா என்ற திருநாமம் கொண்ட இத்தேவி பொருட்களை இயக்கும் சக்தியாய்த் திகழ்கிறாள். டாகினி போன்ற தேவதைகளின் அதிதேவதையாய்த் திகழும் அம்பிகையான இவள், உதயத்து சூரிய நிறம் கொண்டு பிரகாசிப்பவள். மந்தகாசமான திருமுகத்தையுடையவள். பிரகாசமான மகுடம் தரித்து தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், புத்தகம், ஜபமாலை, புஷ்ப பாணம், கரும்புவில், வாள், கேடயம், கபாலம், சூலம் ஏந்தி அபயவரதம் தரித்தவள்.

    ஸ்லோகம்:

    ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே
    நித்யா நித்யாயை தீமஹி
    தன்னோ யோகிநி ப்ரசோதயாத்.

    வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச தசமி, கிருஷ்ண பட்ச சஷ்டி. இந்த ஸ்லோகத்தை தினசரி கூறிவந்தால் அனைத்துத்தொல்லைகளிருந்தும் விலகி தோஷங்கள் நிவர்த்தியாகி அஷ்ட ஐஸ்வர்யங்களும் தீர்க்கமான உடல் நலமும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
    பெருமாளுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது பெருமாளுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் முன்னேற்றம் கிடைக்கும்.
    ஸ்ரீ நரநாராயணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நரசிங்க பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அத்புத நாராயணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வைகுண்ட நாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ த்ரிவிக்ரமன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ லோகநாத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீனிவாசன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருவண் புருஷோத்தமன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ குடமாடு  கூத்தன்  திருவடிகளே சரணம்

    ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அஷ்ட புஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ யோக நரசிம்மசுவாமி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பால சயனக் கோலம் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தேவாதி ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நீலமேக பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தல சயன பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திரு சாரநாத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ உப்பிலியப்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வையம் காத்த பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஜெகன்னாத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கஜேந்திர வரத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வல்வில் ராமன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சாரங்கபாணி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கோலவில்லி ராமர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நித்திய கல்யாண பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அப்பக்குடத்தான் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அன்பில் சுந்தரராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ புண்டரீகாட்சன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ புருஷோத்தமன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ரங்கநாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பக்த வத்சல பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வீர ராகவ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ விஜய ராகவ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நீர் வண்ண பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ விளக்கொளி பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அழகிய சிங்க பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆதி வராக பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நிலா துண்ட பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பவள வண்ண பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பரமபத நாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கருணாகர பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பார்த்தசாரதி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பேரருளாளன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ  கோபாலகிருஷ்ணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அழகிய மணவாளர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருநறையூர் நம்பி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நாவாய் முகுந்தன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ உய்யவந்த பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நீலமேக  பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சவுந்தர ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நாண்மதியப் பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திரிவிக்ரம நாராயணர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தாமரைக் கண்ணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ செங்கண் மால் ரங்கநாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தாமரையாள் கேள்வன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தேவநாத பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ காட்கரையப்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ லெட்சுமண பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருவாழ் மார்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ இமையவரப்பர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ மாயப்பிரான் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருக்குறளப்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பாம்பணையப்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அனந்த பத்மநாபர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அழகிய நம்பியார் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தோத்தாத்ரி நாதன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வைகுண்ட நாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ விஜயாசனர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பூமி பாலகர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆதி நாதன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ மகர நெடுங்குழைக்காதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வேங்கட வாணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஸ்ரீனிவாஸன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ தெய்வ நாயகர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ அரவிந்த லோசனர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வடபத்ரசாயி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கூடலழகர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கள்ளழகர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ காளமேக பெருமாள் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சவுமிய நாராயணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆதி ஜெகந்நாதர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ சத்திய மூர்த்தி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ரகுநாயகன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கோவர்த்தநேசன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ பிரகலாதவரதன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ வெங்கடாஜலபதி திருவடிகளே சரணம்

    ஸ்ரீ முக்திநாத் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நைமிசாரண்யம் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நவமோகன கிருஷ்ணா திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ரகுநாத் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ திருவல்லவாழ் திருவாழ்மார்பன் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ நாராயணா திருவடிகளே சரணம்

    ஸ்ரீ மகாவிஷ்ணு திருவடிகளே சரணம்
    ஆண்டாள் அவதரித்த நட்சத்திர தினமான பூர நட்சத்திரத்தன்று இத்துதியை ஜபம் செய்தால் கண்ணனைப் போன்ற தோற்றப்பொலிவு, புத்திசாலித்தனம் பொருந்திய கணவர் அமைவார்.
    காத்யாயனி! மஹாமாயே!
    மஹாயோகின்யதீஸ்வரி!
    நந்தகோபஸுதம் தேவி
    பதிம்மே குருதே நமஹ:

    - ஆண்டாள் சொன்ன தேவி துதி.

    பொதுப் பொருள்: அனைவரையும் காத்தருளும் கருணைமிக்க காத்யாயனி தேவியே உனக்கு நமஸ்காரம். எல்லாவகை மாயைகளையும் பொருளுணர்த்தி விளங்க வைப்பவளே உனக்கு நமஸ்காரம். மகத்தான யோக சித்திகளை அடைந்தவளே உனக்கு நமஸ்காரம். நந்தகோபருடைய புத்திரரான கண்ணனே எனக்குக் கணவனாக அமைய வேண்டும். அந்த பாக்கியத்தை தேவி நீ எனக்கு அருள்வாயாக.கண்ணனை ஆண்டாள் கணவராக அடைய உதவிய இந்த மகத்தான ஸ்லோகத்தை, திருமணத்திற்காகக் காத்திருக்கும் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் சொல்லலாம். தம் மனதில் தாம் கணவனாக வரித்திருக்கும் ஆண்மகனையே தன் வாழ்க்கைத் துணையாகப் பெறுவதும் சாத்தியமாகும். முக்கியமாக ஆண்டாள் அவதரித்த நட்சத்திர தினமான பூர நட்சத்திரத்தன்று இத்துதியை ஜபம் செய்தால் கண்ணனைப் போன்ற தோற்றப்பொலிவு, புத்திசாலித்தனம் பொருந்திய கணவர் அமைவார்.

    ×