search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வராகர்
    X
    வராகர்

    திருமணம் கைகூட தினமும் சொல்ல வேண்டிய வராகர் ஸ்லோகம்

    காலை அல்லது மாலை நேரத்தில் திருமணமாக வேண்டிய இளைஞர்களும், கன்னிகைகளும் இத்துதியை பாராயணம் செய்தால், வராஹ மூர்த்தியின் திருவருளால் அவரவர்களுக்கு திருமணம் கை கூடும். மங்களங்கள் பெருகும்.
    ய: ஸ்வாமீ ஸரஸஸ்தடே விஹரதோ
    ஸ்ரீஸ்வாமி நாம்ன: ஸதா
    ஸௌவர்ணாலய மண்டிதோ
    விதிமுகைர்பர்ஹிர்முகை: ஸேவித:
    ய: சத்ரூன் ஹனயன்னிஜானவதி
    ச ஸ்ரீபூவராஹாத்மக:
    ஸ்ரீமத் வேங்கட பூதேந்த்ரரமண:
    குர்யாத்தரிர் மங்களம்.

     - மங்கள ஸ்லோகம்

    பொதுப்பொருள்: திருப்பதி-திருமலையில் உள்ள ஸ்வாமி புஷ்கரணி என்னும் குளத்தின் கரையில் வீற்றிருக்கிறார் வராஹமூர்த்தி. மஹாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் இவர். தங்கமயமான கோயிலை அலங்கரித்துக் கொண்டிருப்பவரும், பிரம்மா முதலிய தேவர்களால் வணங்கப்படுகிறவரும், பகைவர்களிடமிருந்து கைதூக்கி விடுபவரும், யக்ஞவராஹமூர்த்தியாய் விளங்குபவருமான, வெங்கடாஜலபதிக்கு இடமளித்த திருமாலான வராஹர் எனக்கு எல்லா மங்களங்களையும் அருளுமாறு வேண்டிக்கொள்கிறேன். காலை அல்லது மாலை நேரத்தில் திருமணமாக வேண்டிய இளைஞர்களும், கன்னிகைகளும் இத்துதியை பாராயணம் செய்தால், வராஹ மூர்த்தியின் திருவருளால் அவரவர்களுக்கு திருமணம் கை கூடும். மங்களங்கள் பெருகும்.

    Next Story
    ×