என் மலர்
இஸ்லாம்
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள புனித ஆக்னெஸ் அன்னை ஆலயத்தில் தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே இருதயபுரம் கிராமத்தில் புனித ஆக்னெஸ் அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்பவனி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து தினந்தோறும் திருப்பலி மற்றும் ஜெபமாலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் பவனி விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி ஆலயத்தில் திருப்பலி நடந்தது.
பின்னர் இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித ஆக்னெஸ் அன்னை சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பங்கு தந்தை ஸ்டீபன் ராஜ் தேர் பவனியை தொடங்கி வைத்தார். தேர்பவனி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள், கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், உள்பட பலர் செய்திருந்தனர்.
அதனை தொடர்ந்து தினந்தோறும் திருப்பலி மற்றும் ஜெபமாலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் பவனி விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி ஆலயத்தில் திருப்பலி நடந்தது.
பின்னர் இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித ஆக்னெஸ் அன்னை சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பங்கு தந்தை ஸ்டீபன் ராஜ் தேர் பவனியை தொடங்கி வைத்தார். தேர்பவனி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள், கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், உள்பட பலர் செய்திருந்தனர்.
தன் குடும்பங்களுக்காக உழைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது ஒவ்வொரின் மீது கடமையென்றும், அதற்காக உழைத்து வாழ்வதை ஊக்குவிக்கின்றது இஸ்லாம்.
தன் குடும்பங்களுக்காக உழைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது ஒவ்வொரின் மீது கடமையென்றும், அதற்காக உழைத்து வாழ்வதை ஊக்குவிக்கின்றது இஸ்லாம். உழைப்பு இல்லாமல் அநியாயமான வழிகளில் வரும் செல்வங்களை இஸ்லாம் வெறுத்து ஒதுக்குகின்றது.
“மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கிடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக அவற்றை (லஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள்” என்று திருக்குர்ஆன் (2:188) எச்சரிக்கை செய்கின்றது.
கையூட்டுப் பெற்று தன் மீதுள்ள பொறுப்புகளைச் செய்வதற்கு இஸ்லாம் வன்மையாகக் கடிந்து கொள்கிறது. லஞ்சம் கொடுப்பதும், லஞ்சம் வாங்குவதும் இறைவனின் சாபத்தைக் கொண்டு வருமென்று மேற்கோள் காட்டுகிறது இஸ்லாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “லஞ்சம் கொடுப்பவன் மீதும், வாங்குபவன் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டுமாக”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: இப்னுமாஜா).
பதவி, பொறுப்புகளை வைத்து பணமாகவோ, பரிசுப்பொருளாகவோ பெற்றாலும் அதுவும் லஞ்சம் என்கிறது இஸ்லாம்.
‘நபி (ஸல்) அவர்கள் ‘அஸ்த்’ என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் ‘இப்னுல் லுத்பிய்யா’ என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸகாத் வசூலித்துக் கொண்டு வந்த போது ‘இது உங்களுக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா இல்லையா? என்று பார்க்கட்டுமே. என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக உங்களில் யாரேனும் அந்த ‘ஸகாத்’ பொருளில் இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும், மாடாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக்கொண்டிருக்கும்’ என்று கூறினார்கள். பிறகு, தம் கைகளை உயர்த்தி ‘இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? என்று மூன்று முறை கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி), நூல்: புகாரி)
நேர்மையான உழைப்பு இல்லையென்றால், இறைவனுக்காகச் செய்யும் பிரார்த்தனைகளும் ஏற்கப்படாது என்பதை பல நபிமொழிகள் சுட்டிக் காட்டுகிறன. இறைவனிடம் பிரார்த்தனைகள் அங்கீகாரம் பெறுவதற்கு உடை, உணவு, இருப்பிடம் நேர்மையான முறையில் சம்பாதித்ததிலிருந்து இருப்பதை விரும்புகிறது இஸ்லாம்.
ஒருவர் தம் கையால் உழைத்து, உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ணமுடியாது. நபி தாவூத் (அலை) அவர்கள் தங்களின் கையால் உழைத்து, உண்பவராக இருந்தார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: மிக்தாம் (ரலி), நூல்: புகாரி)
கொலை, கொள்ளை, திருட்டு, பொய்கள் எப்படி மோசடியோ? அதபோல கடமையை செய்ய லஞ்சம் பெறுவதும் மோசடிதான். ‘மோசடி செய்வதை ஒரு போதும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான். அதற்கான தண்டனைகளை பன்மடங்காக நாளை மறுமையில் கொடுப்பான்’ என்கிறது திருக்குர்ஆன்.
உழைப்பிற்கு ஊதியம் பெற்றும், லஞ்சமாக மற்றொரு ஊதியம் பெறுதல், மற்றவரின் உரிமையைக் கெடுத்தல், மனதைக் கஷ்டப்படுத்தி பணம் சம்பாதித்தல், தகுதி இல்லாதவர் கூட பதவி பெறுதல் போன்ற அனைத்தும் மோசடியாகும். இவைகள் அனைத்திற்கும் முதல் கதவு லஞ்சமாக இருக்கிறது என்பது யதார்த்த உண்மையை உணர்ந்து இஸ்லாம் லஞ்சத்தை வெறுக்கின்றது.
ஏ. எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
“மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கிடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக அவற்றை (லஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள்” என்று திருக்குர்ஆன் (2:188) எச்சரிக்கை செய்கின்றது.
கையூட்டுப் பெற்று தன் மீதுள்ள பொறுப்புகளைச் செய்வதற்கு இஸ்லாம் வன்மையாகக் கடிந்து கொள்கிறது. லஞ்சம் கொடுப்பதும், லஞ்சம் வாங்குவதும் இறைவனின் சாபத்தைக் கொண்டு வருமென்று மேற்கோள் காட்டுகிறது இஸ்லாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “லஞ்சம் கொடுப்பவன் மீதும், வாங்குபவன் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டுமாக”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: இப்னுமாஜா).
பதவி, பொறுப்புகளை வைத்து பணமாகவோ, பரிசுப்பொருளாகவோ பெற்றாலும் அதுவும் லஞ்சம் என்கிறது இஸ்லாம்.
‘நபி (ஸல்) அவர்கள் ‘அஸ்த்’ என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் ‘இப்னுல் லுத்பிய்யா’ என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸகாத் வசூலித்துக் கொண்டு வந்த போது ‘இது உங்களுக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா இல்லையா? என்று பார்க்கட்டுமே. என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக உங்களில் யாரேனும் அந்த ‘ஸகாத்’ பொருளில் இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும், மாடாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக்கொண்டிருக்கும்’ என்று கூறினார்கள். பிறகு, தம் கைகளை உயர்த்தி ‘இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? என்று மூன்று முறை கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி), நூல்: புகாரி)
நேர்மையான உழைப்பு இல்லையென்றால், இறைவனுக்காகச் செய்யும் பிரார்த்தனைகளும் ஏற்கப்படாது என்பதை பல நபிமொழிகள் சுட்டிக் காட்டுகிறன. இறைவனிடம் பிரார்த்தனைகள் அங்கீகாரம் பெறுவதற்கு உடை, உணவு, இருப்பிடம் நேர்மையான முறையில் சம்பாதித்ததிலிருந்து இருப்பதை விரும்புகிறது இஸ்லாம்.
ஒருவர் தம் கையால் உழைத்து, உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ணமுடியாது. நபி தாவூத் (அலை) அவர்கள் தங்களின் கையால் உழைத்து, உண்பவராக இருந்தார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: மிக்தாம் (ரலி), நூல்: புகாரி)
கொலை, கொள்ளை, திருட்டு, பொய்கள் எப்படி மோசடியோ? அதபோல கடமையை செய்ய லஞ்சம் பெறுவதும் மோசடிதான். ‘மோசடி செய்வதை ஒரு போதும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான். அதற்கான தண்டனைகளை பன்மடங்காக நாளை மறுமையில் கொடுப்பான்’ என்கிறது திருக்குர்ஆன்.
உழைப்பிற்கு ஊதியம் பெற்றும், லஞ்சமாக மற்றொரு ஊதியம் பெறுதல், மற்றவரின் உரிமையைக் கெடுத்தல், மனதைக் கஷ்டப்படுத்தி பணம் சம்பாதித்தல், தகுதி இல்லாதவர் கூட பதவி பெறுதல் போன்ற அனைத்தும் மோசடியாகும். இவைகள் அனைத்திற்கும் முதல் கதவு லஞ்சமாக இருக்கிறது என்பது யதார்த்த உண்மையை உணர்ந்து இஸ்லாம் லஞ்சத்தை வெறுக்கின்றது.
ஏ. எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
ஆடம்பரம், எளிமையற்ற, இரக்கமற்ற வாழ்க்கையாக இல்லாமல் பொதுநலம், எளிமை, அடக்கமென்று அழகிய நபி (ஸல்) அவர்களின் ஆட்சி, பல ஆட்சியாளர்களுக்கு முகவரியாக மாறுகிறது.
தனக்காகவும், தன் வாரிசுகளுக்காகவும், அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை தன் கணக்கில் சேர்க்கும் தலைவர்களை நெடுங்காலமாக உலகம் கண்டு வருகிறது. ஆனால், வறுமைகளை மட்டுமே செழுமையாகக் கண்ட, முகம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வு, நீதமான ஆட்சியின் புதிய அத்தியாயத்திற்கு அடித்தளமாக மாறியதை ஆச்சரியக்கண்களால் பார்த்து வியக்கிறது உலகம்.
ஆடம்பரம், எளிமையற்ற, இரக்கமற்ற வாழ்க்கையாக இல்லாமல் பொதுநலம், எளிமை, அடக்கமென்று அழகிய நபி (ஸல்) அவர்களின் ஆட்சி, பல ஆட்சியாளர்களுக்கு முகவரியாக மாறுகிறது.
நேர்மையான ஆட்சி
நேர்மையாகவும், நேர்த்தியாகவும் ஆட்சி, அதிகாரங்களைக் கொண்டு மக்களுக்கு சேவைகள் செய்வதையே இறைவன் விரும்புகிறான். சேவைகள் செய்வதற்கே உங்களுக்கு ஆட்சிகள் தரப்படுவதாக இஸ்லாம் கோடிட்டுக் காட்டுகிறது. அதிகாரங்களை மக்களுக்கு எதிரான அம்பாக மாற்ற இஸ்லாம் விரும்பவில்லை. இஸ்லாம் கூறக்கூடிய ஆட்சி, அதிகாரம் பூக்களில் நடக்கும் பூனை நடை அல்ல. மாறாக இரு பக்கம் கூர் முனையுள்ள கத்தி மேல் நடக்கும் விஷப் பரிட்சை. இதில் சிறிதேனும் தவறு ஏற்பட்டால், நாளை மறுமையில் விசாரணையின் போது முழு விளக்கம் கொடுக்க நேரிடும் என்பதால் பொறுப்புகளைச் சரியாக நிர்வகிக்க வேண்டிய கட்டாயம் ஆட்சியாளர்களுக்கு ஏற்படுகிறது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவருக்கும் (அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: ஆட்சித்தலைவரும் பொறுப்பாளரே. அவர் (தம் குடிமக்கள் குறித்து) விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத்தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி) விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் (அந்தப் பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் (தனக்குரிய பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவான். அறிந்துகொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி).
‘மக்கள் நலன்களை கவனத்தில் கொண்டால், சுவனம் செல்லும் பாதையை இலகுவாகக் கடந்து விடலாம்’ என்பதை மேலுள்ள நபிமொழி குறிப்பிட்டுக் காட்டுகிறது.
சொல்வதும், அதன் படி நடத்தலும் சமமான பாதையில் செல்வது மிக அரிது. ஆனால் நபி (ஸல்) அவர்களின் கூற்றும், அதன்படி நடத்தலும் ரெயில் பாதையைப் போன்று அவர்களின் வாழ்வு முழுவதும் சமமான நிலையில் பயணித்தது என்பதே உண்மை.
மத, இன, மொழி, நிற, குல, தேச பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் பொதுவான ஆட்சியாக நபியின் ஆட்சி, அதிகாரம் அமைந்திருந்தது.
பணிவான அரசர்
பலவகையான கனிகள் பல நாட்டு உணவு வகைகளென்று, உணவுகளை அடுக்கி வைத்துச் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து, சாப்பிடுவது மன்னர்களின் பெருமைகளைப் பறைசாற்றும் முறைகளாகப் பார்க்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட முறைகளுக்கு நேர் எதிர்த்திசையில், அரசனாக இருந்தாலும், இறைவனின் அடிமை என்பதை உணர்ந்து தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் கொண்டதாக நபி (ஸல்) அவர்களின் உணவு சாப்பிடும் பழக்கம் இருந்தது. நபியவர்களின் எளிமை, கர்வம் என்ற சொல்லிற்குச் சாட்டை அடியாக விழுந்தது.
‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் தட்டில் வைத்து உணவை சாப்பிட்டதில்லை. ரொட்டியைத் துணி விரிப்பின் மீது வைத்துத் தான் சாப்பிடுவார்கள்’ என்று நபியவர்களின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார்.
பொதுப்பணத்தை பாதுகாத்தல்
நபி (ஸல்) அவர்களின் ஆட்சியில் மக்களின் வரிப்பணம் கவனமாய் பாதுகாக்கப்பட்டு, மக்களின் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. தனக்காகவோ அல்லது தனது குடும்பத்தார்களுக்கோ எப்போதும் நபி (ஸல்) அவர்கள் மக்கள் வரிப்பணத்தைப் பயன்படுத்தியது கிடையாதென்பதை பல நிகழ்வுகள், நம்மைத் தீர்க்கமான முடிவுகளின் பக்கம் இழுக்கின்றன.
மக்கள் பணத்தில் வீடு கட்டி குடியேறும் சில ஆட்சியாளர்களைப் பல நாடுகள் கொண்டுள்ளது. ஆனால், மக்களின் வரிப்பணம் தவறி நபி (ஸல்) அவர்களின் வீட்டில் இருப்பதைக் கூட நபியவர்களின் மனம் ஏற்க மறுத்ததென்ற வரலாறு, பொதுப் பணத்தில் நம் கவனம் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு வழிகாட்டலாக இருக்கின்றது.
ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தி விட்டு வேகமாக வெளியேறினார்கள். சற்று நேரத்தில் பள்ளிவாசலுக்குத் திரும்பி வந்தார்கள். ஒரு நாளும் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேகமாகப் புறப்பட்டுச் சென்றதையும், உடனே திரும்பி வந்ததையும் நபித்தோழர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
‘நான் ஏன் அவசரமாக சென்றேன் தெரியுமா?, அரசுக் கருவூலத்துக்குச் சொந்தமான வெள்ளிக் கட்டி என் வீட்டிலிருந்தது. அதை ஏழைகளுக்கு விநியோகம் செய்யுமாறு குடும்பத்தாரிடம் தெரிவித்து விட்டு வந்தேன்’ என்றார்கள். (நூல்: புகாரி).
நூலிழையில் கூட ஆட்சி, அதிகாரத்தில் தவறுகள் ஏற்பட்டு விடாமல் உன்னிப்பாகக் கவனித்தலில் அழகிய தலைமைக்கு நங்கூரம் பாய்ச்சியது நபியின் நல்லாட்சி. ஆட்சியாளர் என்ற மமதையில் மக்கள் முன் தோன்றாமல் அல்லாஹ்வின் அடிமை, மக்களின் சேவகன் என்ற ரீதியில் மக்கள் முன் செல்வதற்கு இஸ்லாம் ஆணையிடுகிறது.
வெளிப்படையான, நேர்மையான ஆட்சி அல்லாஹ்வின் நிழலில் நிற்க இடம் பிடித்துக் கொடுக்கும். அல்லாஹ்வின் நிழலைப் பெறுவதற்கு நபி (ஸல்) அவர்களின் ஆட்சியில் இருந்த பொறுப்புணர்வும், பொதுநலமும் நம் வாழ்விலும் தொடர அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.
ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
ஆடம்பரம், எளிமையற்ற, இரக்கமற்ற வாழ்க்கையாக இல்லாமல் பொதுநலம், எளிமை, அடக்கமென்று அழகிய நபி (ஸல்) அவர்களின் ஆட்சி, பல ஆட்சியாளர்களுக்கு முகவரியாக மாறுகிறது.
நேர்மையான ஆட்சி
நேர்மையாகவும், நேர்த்தியாகவும் ஆட்சி, அதிகாரங்களைக் கொண்டு மக்களுக்கு சேவைகள் செய்வதையே இறைவன் விரும்புகிறான். சேவைகள் செய்வதற்கே உங்களுக்கு ஆட்சிகள் தரப்படுவதாக இஸ்லாம் கோடிட்டுக் காட்டுகிறது. அதிகாரங்களை மக்களுக்கு எதிரான அம்பாக மாற்ற இஸ்லாம் விரும்பவில்லை. இஸ்லாம் கூறக்கூடிய ஆட்சி, அதிகாரம் பூக்களில் நடக்கும் பூனை நடை அல்ல. மாறாக இரு பக்கம் கூர் முனையுள்ள கத்தி மேல் நடக்கும் விஷப் பரிட்சை. இதில் சிறிதேனும் தவறு ஏற்பட்டால், நாளை மறுமையில் விசாரணையின் போது முழு விளக்கம் கொடுக்க நேரிடும் என்பதால் பொறுப்புகளைச் சரியாக நிர்வகிக்க வேண்டிய கட்டாயம் ஆட்சியாளர்களுக்கு ஏற்படுகிறது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவருக்கும் (அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: ஆட்சித்தலைவரும் பொறுப்பாளரே. அவர் (தம் குடிமக்கள் குறித்து) விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத்தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி) விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் (அந்தப் பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் (தனக்குரிய பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவான். அறிந்துகொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி).
‘மக்கள் நலன்களை கவனத்தில் கொண்டால், சுவனம் செல்லும் பாதையை இலகுவாகக் கடந்து விடலாம்’ என்பதை மேலுள்ள நபிமொழி குறிப்பிட்டுக் காட்டுகிறது.
சொல்வதும், அதன் படி நடத்தலும் சமமான பாதையில் செல்வது மிக அரிது. ஆனால் நபி (ஸல்) அவர்களின் கூற்றும், அதன்படி நடத்தலும் ரெயில் பாதையைப் போன்று அவர்களின் வாழ்வு முழுவதும் சமமான நிலையில் பயணித்தது என்பதே உண்மை.
மத, இன, மொழி, நிற, குல, தேச பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் பொதுவான ஆட்சியாக நபியின் ஆட்சி, அதிகாரம் அமைந்திருந்தது.
பணிவான அரசர்
பலவகையான கனிகள் பல நாட்டு உணவு வகைகளென்று, உணவுகளை அடுக்கி வைத்துச் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து, சாப்பிடுவது மன்னர்களின் பெருமைகளைப் பறைசாற்றும் முறைகளாகப் பார்க்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட முறைகளுக்கு நேர் எதிர்த்திசையில், அரசனாக இருந்தாலும், இறைவனின் அடிமை என்பதை உணர்ந்து தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் கொண்டதாக நபி (ஸல்) அவர்களின் உணவு சாப்பிடும் பழக்கம் இருந்தது. நபியவர்களின் எளிமை, கர்வம் என்ற சொல்லிற்குச் சாட்டை அடியாக விழுந்தது.
‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் தட்டில் வைத்து உணவை சாப்பிட்டதில்லை. ரொட்டியைத் துணி விரிப்பின் மீது வைத்துத் தான் சாப்பிடுவார்கள்’ என்று நபியவர்களின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார்.
பொதுப்பணத்தை பாதுகாத்தல்
நபி (ஸல்) அவர்களின் ஆட்சியில் மக்களின் வரிப்பணம் கவனமாய் பாதுகாக்கப்பட்டு, மக்களின் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. தனக்காகவோ அல்லது தனது குடும்பத்தார்களுக்கோ எப்போதும் நபி (ஸல்) அவர்கள் மக்கள் வரிப்பணத்தைப் பயன்படுத்தியது கிடையாதென்பதை பல நிகழ்வுகள், நம்மைத் தீர்க்கமான முடிவுகளின் பக்கம் இழுக்கின்றன.
மக்கள் பணத்தில் வீடு கட்டி குடியேறும் சில ஆட்சியாளர்களைப் பல நாடுகள் கொண்டுள்ளது. ஆனால், மக்களின் வரிப்பணம் தவறி நபி (ஸல்) அவர்களின் வீட்டில் இருப்பதைக் கூட நபியவர்களின் மனம் ஏற்க மறுத்ததென்ற வரலாறு, பொதுப் பணத்தில் நம் கவனம் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு வழிகாட்டலாக இருக்கின்றது.
ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தி விட்டு வேகமாக வெளியேறினார்கள். சற்று நேரத்தில் பள்ளிவாசலுக்குத் திரும்பி வந்தார்கள். ஒரு நாளும் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேகமாகப் புறப்பட்டுச் சென்றதையும், உடனே திரும்பி வந்ததையும் நபித்தோழர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
‘நான் ஏன் அவசரமாக சென்றேன் தெரியுமா?, அரசுக் கருவூலத்துக்குச் சொந்தமான வெள்ளிக் கட்டி என் வீட்டிலிருந்தது. அதை ஏழைகளுக்கு விநியோகம் செய்யுமாறு குடும்பத்தாரிடம் தெரிவித்து விட்டு வந்தேன்’ என்றார்கள். (நூல்: புகாரி).
நூலிழையில் கூட ஆட்சி, அதிகாரத்தில் தவறுகள் ஏற்பட்டு விடாமல் உன்னிப்பாகக் கவனித்தலில் அழகிய தலைமைக்கு நங்கூரம் பாய்ச்சியது நபியின் நல்லாட்சி. ஆட்சியாளர் என்ற மமதையில் மக்கள் முன் தோன்றாமல் அல்லாஹ்வின் அடிமை, மக்களின் சேவகன் என்ற ரீதியில் மக்கள் முன் செல்வதற்கு இஸ்லாம் ஆணையிடுகிறது.
வெளிப்படையான, நேர்மையான ஆட்சி அல்லாஹ்வின் நிழலில் நிற்க இடம் பிடித்துக் கொடுக்கும். அல்லாஹ்வின் நிழலைப் பெறுவதற்கு நபி (ஸல்) அவர்களின் ஆட்சியில் இருந்த பொறுப்புணர்வும், பொதுநலமும் நம் வாழ்விலும் தொடர அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.
ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
நாகூர் தர்கா கந்தூரி விழா முடிவடைந்ததையொட்டி கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஒதிய பிறகு ஒரே நேரத்தில் தர்கா 5 மினாரக்களிலும் கொடி இறக்கப்பட்டது.
நாகையை அடுத்த நாகூரில் பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது இந்த தர்கா கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 21-ந் தேதி வாணவேடிக்கை நிகழ்ச்சியும், 22-ந் தேதி பீர் அமர வைத்தல் நிகழ்ச்சியும், 23-ந் சந்தன கூடு ஊர்வலமும். 25-ந்தேதி பீர் கடற்கரை செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கந்தூரியின் நிறைவு நாளான கொடி இறக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு நடைபெற்றது. இதில் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஒதிய பிறகு ஒரே நேரத்தில் தர்கா 5 மினாரக்களிலும் கொடி இறக்கப்பட்டது.
கந்தூரியின் நிறைவு நாளான கொடி இறக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு நடைபெற்றது. இதில் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஒதிய பிறகு ஒரே நேரத்தில் தர்கா 5 மினாரக்களிலும் கொடி இறக்கப்பட்டது.
நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி பீர் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. கந்தூரி விழா நிறைவு நாளான கொடி இறக்கும் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
நாகையை அடுத்த நாகூரில் பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 21-ந் தேதி வாணவேடிக்கை நிகழ்ச்சியும், 22-ந் தேதி பீர் அமர வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் கடந்த 23-ந்தேதியும், நேற்று முன்தினம் ஆண்டவர் சமாதியில் சந்தன பூசும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
3 நாட்கள் விரதம் இருந்த பீர் நேற்று மாலை கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு தர்காவில், 3 ஆண்டவர் சமாதி முன்பு, செய்யது பள்ளிவாசல், பீரோடும் தெருவில் உள்ள விளக்கு தூண் முன்பு பாத்திஹா ஓதப்பட்டது.
பின்னர், சில்லடி தர்கா அருகில் சென்று பீர் விரதத்தை முடிந்து கொண்டார். அங்கியிருந்து கடற்கரைக்கு சென்ற பீர், எலுமிச்சை பழத்தை கடலை நோக்கி வீசினார். அதை அங்கு கூடி இருந்த திரளானோர் ஆர்வத்தோடு எடுத்துச் சென்றனர். கந்தூரி விழா நிறைவு நாளான கொடி இறக்கும் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் கடந்த 23-ந்தேதியும், நேற்று முன்தினம் ஆண்டவர் சமாதியில் சந்தன பூசும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
3 நாட்கள் விரதம் இருந்த பீர் நேற்று மாலை கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு தர்காவில், 3 ஆண்டவர் சமாதி முன்பு, செய்யது பள்ளிவாசல், பீரோடும் தெருவில் உள்ள விளக்கு தூண் முன்பு பாத்திஹா ஓதப்பட்டது.
பின்னர், சில்லடி தர்கா அருகில் சென்று பீர் விரதத்தை முடிந்து கொண்டார். அங்கியிருந்து கடற்கரைக்கு சென்ற பீர், எலுமிச்சை பழத்தை கடலை நோக்கி வீசினார். அதை அங்கு கூடி இருந்த திரளானோர் ஆர்வத்தோடு எடுத்துச் சென்றனர். கந்தூரி விழா நிறைவு நாளான கொடி இறக்கும் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (சனிக்கிழமை) மாலை நடக்கிறது. இந்த சந்தனம் கூடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தர்காவை வந்தடையும்.
நாகையை அடுத்த நாகூரில் உலக பிரசித்திபெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் நாகூர் ஆண்டவர் என போற்றி அழைக்கப்படும் சாகுல்ஹமீது காதிர் நாயகம் மறைந்த நினைவு நாளையொட்டி கந்தூரி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 464-வது கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் இரவு வாணவேடிக்கை நடைபெற்றது.
நேற்று இரவு 10 மணிக்கு தர்காவில் பீர் அமர வைத்தல்(பீர் ஜமாத்தார்) நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (சனிக்கிழமை) மாலை நடக்கிறது. சந்தனக்கூடு நாகையில் உள்ள அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படுகிறது. அப்போது சாம்பிராணி சட்டி ரதம், நகராமேடை மற்றும் பல்வேறு மின் அலங்கார தட்டிகள் சந்தன கூட்டின் முன்னும், பின்னும் அணிவகுத்து செல்லும். சந்தனக்கூடு ஊர்வலம் நாகை புதுப்பள்ளி தெரு வழியாக யாஹசைன் தெரு, நூல்கடை தெரு, வெங்காயகடை தெரு, பெரிய கடை தெரு, சர்அகமதுதெரு உள்ளிட்ட தெருக்களில் பவனியாக செல்லும்.
பின்னர் அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக நாகூர் எல்லையை சந்தனக்கூடு சென்றடையும். தொடர்ந்து அங்குள்ள கூட்டுப்பாத்திகா மண்டபத்தில் பாத்திகா ஓதி பின்னர் வாணக்காரத்தெரு, தெற்கு தெரு, அலங்காரவாசல் வழியாக வந்து அங்குள்ள பாரம்பரிய முறைக்காரர் வீட்டில் சந்தனக்குடத்தை வாங்கி கூட்டில் வைக்கப்படும். பின்னர் செய்யது பள்ளி தெரு வழியாக சந்தனம் கூடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தர்காவை வந்தடையும். இதையடுத்து கால்மாட்டு வாசல் வழியாக சந்தனக்குடம் தர்காவின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு, அதிகாலை 4.30 மணியளவில் சந்தனகுடங்கள் தர்காவில் உள்ள ஆண்டவரின் சமாதி அறைக்கு கொண்டு செல்லப்படும். இதைத்தொடர்ந்து, ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசப்படும். விழாவையொட்டி நாகூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சந்தனக்கூடு ஊர்வலத்தையொட்டி போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தலைமையில் 12 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
நேற்று இரவு 10 மணிக்கு தர்காவில் பீர் அமர வைத்தல்(பீர் ஜமாத்தார்) நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (சனிக்கிழமை) மாலை நடக்கிறது. சந்தனக்கூடு நாகையில் உள்ள அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படுகிறது. அப்போது சாம்பிராணி சட்டி ரதம், நகராமேடை மற்றும் பல்வேறு மின் அலங்கார தட்டிகள் சந்தன கூட்டின் முன்னும், பின்னும் அணிவகுத்து செல்லும். சந்தனக்கூடு ஊர்வலம் நாகை புதுப்பள்ளி தெரு வழியாக யாஹசைன் தெரு, நூல்கடை தெரு, வெங்காயகடை தெரு, பெரிய கடை தெரு, சர்அகமதுதெரு உள்ளிட்ட தெருக்களில் பவனியாக செல்லும்.
பின்னர் அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக நாகூர் எல்லையை சந்தனக்கூடு சென்றடையும். தொடர்ந்து அங்குள்ள கூட்டுப்பாத்திகா மண்டபத்தில் பாத்திகா ஓதி பின்னர் வாணக்காரத்தெரு, தெற்கு தெரு, அலங்காரவாசல் வழியாக வந்து அங்குள்ள பாரம்பரிய முறைக்காரர் வீட்டில் சந்தனக்குடத்தை வாங்கி கூட்டில் வைக்கப்படும். பின்னர் செய்யது பள்ளி தெரு வழியாக சந்தனம் கூடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தர்காவை வந்தடையும். இதையடுத்து கால்மாட்டு வாசல் வழியாக சந்தனக்குடம் தர்காவின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு, அதிகாலை 4.30 மணியளவில் சந்தனகுடங்கள் தர்காவில் உள்ள ஆண்டவரின் சமாதி அறைக்கு கொண்டு செல்லப்படும். இதைத்தொடர்ந்து, ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசப்படும். விழாவையொட்டி நாகூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சந்தனக்கூடு ஊர்வலத்தையொட்டி போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தலைமையில் 12 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
‘படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பம். அவனது குடும்பத்தின் மீது அன்பு காட்டுபவனே அவனது படைப்பில் அவனுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவன்' என்று இஸ்லாம் சொல்கிறது.
உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளில் முதன்மையானது ‘சுற்றுச்சூழல் சீர்கேடு’ ஆகும். இதுபற்றியும், பூமி வெப்பமாவது குறித்தும்தான் அனைவரும் இன்று அதிகமாக விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். தொழிற்சாலை கழிவுகள், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு, கதிரியக்க கசிவுகள், மலைகள் - காடுகள் அழிப்பு, நீர்நிலைகளை பாழ்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாடு, வாகனங்களின் புகை போன்ற பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் இன்று சீர்கெட்டு போயுள்ளது.
புவியை காப்பதில், சூழல் சீர்கேடுகளை தடுப்பதில் நாம் தீவிரம் காட்ட வேண்டும். குறிப்பாக இஸ்லாமியர்கள் இது குறித்து அதிகம் அக்கறை கொள்ள வேண்டும். ஏனென்றால் பூமியையும், சூழலையும் பற்றி அதிகமாக பேசும் மார்க்கமாக இஸ்லாம் இருக்கிறது. ‘படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பம். அவனது குடும்பத்தின் மீது அன்பு காட்டுபவனே அவனது படைப்பில் அவனுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவன்' என்று இஸ்லாம் சொல்கிறது.
படைப்புகள் என்றால் மனிதன் மட்டுமல்ல மரங்கள், காடுகள், மலைகள், நீர்நிலைகள், ஜீவராசிகள் என அனைத்துமே இறைவனின் படைப்புதான். இதன்மீது அன்பு காட்டுபவனையே இறைவன் விரும்புகிறான் என்பது இஸ்லாத்தின் வலியுறுத்தலாகும்.
மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் வாழ ஏற்ற இடம்தான் இந்த பூமியாகும். இது சீராக இயங்குவதற்கு நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவை அவசியமானதாக இருக்கிறது. இவைகளை மனிதன் தனது சுயநலத்திற்காக அழிக்க முற்படும்போதுதான் சூழல் பிரச்சினைகள் மேலெழும்புகின்றன.
உலகில் மனித வாழ்வு நிலைத்திருக்க, சூழல் பாதுகாப்பு மிக அவசியமானதாக இருக்கின்றது. சுற்றுச்சூழல் பாதிக்கப் படுவதற்கு முதன்மையானகாரணமாக இருப்பது வளர்ச்சி என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களேயாகும். இதற்காக காடுகள் அழிக்கப்படுகின்றன, மரங்கள் வெட்டப்படுகின்றன, நீர்நிலைகள் தூர்ந்துப்போகச் செய்யப் படுகின்றன.
அதனால்தான் இஸ்லாம் மரம் நடுவதையும், இயற்கை வளங்களை காப்பதிலும் அதிக அக்கறையை காட்டிட சொல்கிறது. ‘ஒருவர் ஒரு மரத்தினை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்கு கிடைக்கும்' என்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள் (நூல்: புகாரி).
‘அடுத்த நொடியில் உலகம் அழியும் என்றிருந்தாலும் ஒரு ஈத்த மரக்கன்று என் கரத்தில் இருந்தால் நான் அதை நட்டு விடுவேன்' என்று நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அதேபோல் ‘வழிப்போக்கர்களுக்கும், பிராணிகளுக்கும், நிழல் தரக்கூடிய வகையில் வெட்டவெளியில் நிற்கக்கூடிய மரம் ஒன்றை யார் அநியாயமாக வெட்டுகிறாரோ அவரது தலையைப் பிடித்து இறைவன் நரகில் தள்ளுவான்' என்று இஸ்லாம் எச்சரிக்கை செய்கிறது.
மரங்கள் நடுவது என்று மட்டுமல்ல குளங்கள், குட்டைகள், ஆறுகள், ஓடைகள், கிணறுகள் என அனைத்து இயற்கை வளங்கள் பாதுகாப்பு பற்றியும் இஸ்லாம் முக்கியத்துவம் கொடுத்து பேசுகிறது. ‘பூமியில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதில் நாசம் செய்யாதீர்கள்' என்றும், ‘அவன்தான் உங்களை பூமியிலிருந்து படைத்தான்; அதனை வளப்படுத்துமாறு கேட்டுக்கொண்டான்' என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.
பூமியை வளப்படுத்த வேண்டும் என்றால், பாதுகாக்க வேண்டும் என்றால் பூமியை தாங்கி நிற்கும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் விஷயங்களில் இருந்து விலகி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக மரங்கள் நடுவதிலும், காடுகள் அழிப்பை தடுப்பதிலும், காற்று மாசு உள்ளிட்ட பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதிலும் அதிக அக்கறையை காட்டிட வேண்டும்.
- வி. களத்தூர் பாரூக்.
நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் வருகிற 23-ந்தேதி சந்தன கூடு ஊர்வலம் நடைபெறுகிறது.
நாகையை அடுத்த நாகூரில் உலக பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான 464-வது கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தற்போது கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊர்வலம் அதிக அளவில் நடத்த வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நாகை ஜமாத்தில் இருந்து தர்காவில் உள்ள 5 மினராக்களில் ஏற்றப்படும் கொடிகளை அலங்கரிக்கப்பட்ட 5 கப்பல்களிலும், ஒரு செட்டி பல்லக்கு, சாம்பிராணி பல்லக்கு ஆகிய 7 பல்லக்கு மட்டும் கொண்டு வர நாகை மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
இதையடுத்து மாலை நாகையில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து நாகூரை சென்றடையும். ஊரடங்கு சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாகூரில் முக்கிய வீதிகளுக்கு ஊர்வலம் நகரின் பல பகுதிகளுக்கு செல்லாமல் அலங்கார வாசலோடு ஊர்வலம் நிறைவுபெறுகிறது. கப்பலில் இருந்து கொடிகள் இறக்கப்பட்டு தர்காவில் உள்ள 5 மினராக்களிலும் தர்கா கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஓதிய பிறகு 5 மினராக்களில் ஒரே நேரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு வருகிற 22-ந்தேதி இரவு பீர் அமர வைத்தல் நிகழ்ச்சியும், 23-ந்தேதி சந்தன கூடு ஊர்வலமும், 24-ந்தேதி சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெறும். 25-ந்தேதி பீர் கடற்கரை செல்லும் நிகழ்ச்சி, 27- ந்தேதி கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் தர்கா 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
நாகையை அடுத்த நாகூரில் உலக பிரசித்திப் பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு வெளி மாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனகூடு ஊர்வலம் வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு நாகூர் தர்காவில் உள்ள 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது. தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பின்னர் சாகிபு மினராவில் பாய்மரம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து தஞ்சையை ஆட்சி செய்த மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிக்கொடுத்த பெரிய மினரா, தலைமாட்டுமினரா, ஓட்டுமினரா, முதுபக் மினரா ஆகிய 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாகூர் தர்கா பரம்பரை போர்டு ஆப் டிரஸ்டிகள் மற்றும் தற்காலிக நிர்வாக குழுவினர் செய்து இருந்தனர்.
நாம் நமது சம்பாத்தியங்களை நல்ல வழியில் அமைத்துகொள்வோம். அதை இறைவன் காட்டிய வழியில் செலவு செய்து இறைவனின் அருளைப்பெறுவோம்.
‘வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கவேண்டும்’ என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவதுண்டு. இதன் அடிப்படையில், நம்மில் பலர் வரவுக்கு ஏற்ப செலவு, எதிர்கால தேவைக்கு ஏற்ற சேமிப்பு, ஏழை-எளியவர்களுக்கு தம்மால் இயன்ற அளவு கொடுத்து உதவுதல் என்ற அடிப்படையில் வாழ்ந்து வருகிறார்கள்.
அதேநேரத்தில் சிலர் தங்கள் மனம் போல இஷ்டத்துக்கு செலவு செய்கிறார்கள். ‘வாழ்க்கை என்பது நன்றாக அனுபவிக்கத்தானே உள்ளது’ என்று இதற்கு விளக்கமும் கூறுவதுண்டு. மனிதர்களில் இன்னொரு பிரிவினர் உள்ளனர். இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. வருமானம் எவ்வளவு வந்தாலும் அதையும் செலவு செய்துவிட்டு, அதற்கு மேலும் கடன் வாங்கி செலவு செய்ய தயங்குவதில்லை. பிறருக்கு கொடுத்து உதவும் மனமும் இவர்களிடம் இருப்பதில்லை.
இப்படிப்பட்டவர்களை இஸ்லாம் கண்டிக்கின்றது. இறைவன் நமக்கு கொடுத்த அருட்கொடைகளில் இருந்து செலவு செய்ய வேண்டும். அந்த செலவு தனக்கும், தன் குடும்பத்தினருக்கும், தன் உற்றார் உறவினர்களுக்கும், பிறருக்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் குறிப்பிட்டுள்ளது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் எப்படி செலவு செய்ய வேண்டும் என்று இவ்வாறு திருக்குர்ஆன் நமக்கு கற்றுக்கொடுக்கின்றது:
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்; அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்; ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்”. (திருக்குர்ஆன் 2:267).
நமது வருமானம் நல்ல வழியில் இருக்க வேண்டும் அதை தான தர்மம் மூலம் செலவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த வசனம், கெட்ட வழியில் சம்பாதிப்பதையும், அதை தான தர்மம் செய்வதையும் கண்டிக்கிறது. எனவே நமது வருமானமும் நல்ல வழியில், இறைவன் வகுத்த வழியில் இருக்க வேண்டும். அதையும் தாராள மனதுடன் செலவு செய்ய வேண்டும் என்பதையே இந்த திருக்குர்ஆன் வசனம் வலியுறுத்துகிறது.
நம்மில் பலர் இன்று பகட்டுக்காகவும், ஆடம்பரத்திற்காகவும், வீண் பெருமைக்காவும் செலவு செய்ய தயங்குவது இல்லை. ஆடம்பரமான உடை, கவர்ச்சிகரமான செல்போன்கள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவது போன்றவற்றில் செலவு செய்ய பலர் தயங்குவது கிடையாது. இது தவறாகும். நமது செலவு அவசியமானதாக, நல்ல வழியில் இருக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் இவ்வாறு வற்புறுத்திக்கூறுகின்றது:
“(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்”. (திருக்குர்ஆன் 2:3).
நாம் அல்லாஹ் காட்டிய வழியில் நடப்பவர்களாக இருந்தால், அந்த ஏக இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ள வேண்டும். இறைவன் குறிப்பிட்டுள்ளபடி தொழுகையில் தவறாமல் ஈடுபட வேண்டும். மேலும் இறைவன் நமக்கு அளித்த அருட்கொடைகளில் இருந்து நல்ல வழியிலும் செலவு செய்ய வேண்டும். அப்படிப்பட்டவர்கள் தான் இறைவனின் நல்லடியார்களாக இருக்க முடியும் என்பதை இந்த திருக்குர்ஆன் வசனம் சுட்டிக்காட்டுகிறது.
இறைவழியில் வருமானத்தைத்ததேடி, அதை இறைவழியில் செலவு செய்பவர்களையே இறைவன் மிகவும் நேசிக்கின்றான். இதை பின்வரும் திருக்குர்ஆன் வசனம் மூலம் அறியலாம்:
“அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை (நன்மை செய்வோரை) நேசிக்கின்றான்”. (திருக்குர்ஆன் 2:195).
இறைவன் கொடுத்தவற்றை எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற கேள்வி நமக்கு எழுவதுண்டு. இதற்கும் திருக்குர்ஆன் விடை சொல்கிறது. இதுகுறித்து நபிகள் நாயகம் முகமது (ஸல்) அவர்களிடம் இறைவன் கூறியதாவது:
“(நபியே) அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்”. (திருக்குர்ஆன் 2:215).
நாம் செலவு செய்வது முதலில் நமது பெற்றோருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் இருக்க வேண்டும். அடுத்து அநாதைகள், ஏழைகள் போன்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று இந்த திருக்குர்ஆன் வசனம் சுட்டிக்காட்டுகிறது. அதே நேரத்தில் நன்மையான எதைச்செய்தாலும் அதை அல்லாஹ் ஏற்றுக்கொண்ட நமக்கு நற்கூலி தருவான் என்றும் இந்த வசனம் நற்செய்தி கூறுகின்றது.
எனவே, நாம் நமது சம்பாத்தியங்களை நல்ல வழியில் அமைத்துகொள்வோம். அதை இறைவன் காட்டிய வழியில் செலவு செய்து இறைவனின் அருளைப்பெறுவோம்.
பேராசிரியர். அ. முகமது அப்துல் காதர், சென்னை.
அல்லாஹ்வை நினைவு கூருங்கள், அவன்சொன்ன நல்லறங்களை, நபிகளார் வாழ்ந்து காட்டிய சிறந்த வாழ்வியலை தேர்ந்தெடுத்து வாழ முயலுங்கள். பிரச்சினைகள் இல்லாத நிம்மதியான நல் வாழ்வு மலரும்.
கால மாற்றத்திற்கு ஏற்ப மனிதனின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. வாழ்வு முறைகளும் மாற்றம் கண்டு, நவீன மயமாக மாறி இருக்கிறது. இயற்கையை சார்ந்து இருந்த வாழ்வு முறை மாறி, இப்போது இயந்திரங்களை சார்ந்து மனித வாழ்க்கை சுழல்கிறது. விஞ்ஞான கண்டுபிடிப்புகள் கைகளில் அடங்கிக் கிடக்கின்றன. ‘எல்லாம் என்னால் முடியும்’ என்ற இறுமாப்பும் சில மனித மனங்களில் மண்டிக் கிடக்கின்றன.
இவை எல்லாம் இருந்தும் மனிதனுக்கு நிம்மதி கிடைத் ததா? என்றால், ‘இல்லை’ என்று தான் பதில் வரும்.
எந்திரத்தனமான வாழ்க்கையில் உருவான பரபரப்பு, மன அழுத்தங்களால் ஆரோக்கியம் பாழ்பட்டுவிட்டது. வருமானத்தை தேடுவதில் வாழ்க்கையை தொலைத்து நிற்கிறான் மனிதன்.
பணம், பண்பை சீரழித்து விட்டது. மனிதன் கலாசார சீர்கேடுகளில் ஆழ்ந்து, கடமை உணர்வை மறந்து, வன்மத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறான். நட்பு, உறவு, பாசம் போன்றவை பணத்தால் விலை பேசப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் உதவும் விஞ்ஞானத்தால் அவனுக்கு நிம்மதியைப் பெற்றுத்தர முடியவில்லை.
ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அருள்மறையில் ‘நிம்மதியான வாழ்க்கையை பெறுவது எப்படி?’ என்று மிகத்தெளிவாகக் கூறுகின்றான். அல்லாஹ்வின் நினைவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் தன்மை ஆகியவற்றின் மூலம் ஒரு மனிதன் நிச்சயமாக நிம்மதியை பெற்றுக்கொள்ள முடியும்.
இதையே திருக்குர்ஆன் இப்படி கூறுகிறது:
“மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தாம்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாக நிம்மதி அடையும் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள்”. (திருக்குர்ஆன் 13:28)
அண்ட சராசரங்களை, பிரம்மாண்டங்களை எல்லாம் தன் அருளினால் மனித ஆளுமையின் கீழ் கொண்டு தந்த அந்த அல்லாஹ்வை நினைத்துப் பாருங்கள். அவன் செய்த நற்செயலுக்கு நன்றி செலுத்துங்கள், நிம்மதி தானாக உங்களைத் தேடிவரும்.
திருக்குர்ஆன் சொல்கிறது, “அல்லாஹ்வை நினைவு கூர்வதால் நெஞ்சங்களில் நிம்மதி நிறைகிறது” என்று. ‘நினைவு கூர்வது’ என்றால், ‘அவனைப் போற்றிப் புகழ்வது, அவனை திக்ரு செய்வது, அவன் செய்த அருட்கிருபைகளுக்கு நன்றி செலுத்துவது’ என்பது மட்டும் அல்ல. அவன் சொல்லித்தந்த நல்லறங்களை, மனிதன் தன் வாழ்வில் தலையாய கடமையாக கருதி நிறைவேற்றி வரும்போது அந்த நிம்மதி கிடைக்கும்.
பெற்றோரை பற்றி அவன் மிக உயர்வாக திருமறையிலே பல இடங்களில் சொல்லி, அவர்களை பேணி பாதுகாக்க வேண்டும் என்று சொல்கின்றான். அதனால் மனிதன் மேன்மை அடைய முடியும் என்கின்றான். அவர்களுக்கு கீழ்ப்படியுங்கள், குறைந்தபட்சம் அவர்களை கருணையோடு நோக்குங்கள், அதுவே அவர்களின் திருப்தியை பெற்றுத் தருமானால் அவர்களின் பிரார்த்தனை உங்களுக்கு நிம்மதியைப் பெற்றுத்தரும்.
உறவுகளையும் பேணச் சொல்கிறான் இறைவன். என்றோ நடந்து விட்ட பாதகமான செயல்களின் தொடர்ச்சியாக பரம்பரை பரம்பரையாக பகை நிலைத்திருப்பதை பல குடும்பங்களில் காண முடியும். அவற்றை ஒரே நொடியில் போக்கிக் கொள்ள முடியும். அவர்களை நேரில் சந்தித்து தன்னிலை விளக்கம் சொன்னால் போதும், அதன் மூலம் நல்ல விளைவு ஏற்படும். அல்லாஹ் சொன்ன நிம்மதியும் நம்மிடம் வந்து சேர்ந்துவிடும்.
பக்கத்து வீட்டாரை பற்றியும் மிக அதிகமாக புகழ்ந்து பேசுகிறான் இறைவன். பக்கத்து வீட்டாரின் நன்மை தீமைகளில் பங்கு கொள்ளுங்கள், அவர்களோடு உறவை பலப்படுத்துங்கள். குறைந்தபட்சம் அவர்களைக் காணும்போது ஒரு புன்னகையை உதிருங்கள், அது பெரும் மாற்றங்களை உள்ளங்களில் ஏற்படுத்தும். உள்ளங்கள் விழித்துக் கொண்டால் நிம்மதி பெற்ற வாழ்வு மலரும்.
மாற்றுமத சகோதரர்களுடன் மத மாச்சரியங்களைத் தாண்டி அன்போடும், பண்போடும் பாசத்தோடும் பழகிப் பாருங்கள். பகை உணர்ச்சி அங்கே தவிடு பொடியாகி, மனதிலே நிம்மதி பிறப்பதை நிதர்சனமாக உணர முடியும்.
ஏழைகளை இரக்கத்தோடு ஏறிட்டு பாருங்கள். இதயங்களில் நிம்மதி பிறப்பதை நிச்சயமாக உணர முடியும்.
இப்படிபட்ட வாழ்வியலைத் தான் அல்லாஹ் சொல்கிறான். நன்னெறிகளை கடைப்பிடித்து வாழும்போது, நாம் நிம்மதியை வெளியே தேட வேண்டிய அவசியமில்லை. நம்முள்ளே அதைப் பெற்றுக்கொள்ள முடியும். அல்லாஹ்வை நினைவு கூருங்கள், அவன்சொன்ன நல்லறங்களை, நபிகளார் வாழ்ந்து காட்டிய சிறந்த வாழ்வியலை தேர்ந்தெடுத்து வாழ முயலுங்கள். பிரச்சினைகள் இல்லாத நிம்மதியான நல் வாழ்வு மலரும்.
அஸ்லம் ஷஹீல், சென்னை.
சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஜும் ஆ தொழுகை பள்ளிவாசல் முஸ்லிம் ஜமாத் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு ஜமாத் தலைவர் அப்பாஸ் தலைமை தாங்கினார்.
சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஜும் ஆ தொழுகை பள்ளிவாசல் முஸ்லிம் ஜமாத் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு ஜமாத் தலைவர் அப்பாஸ் தலைமை தாங்கினார். காஜி யூசுப் நாட்டாண்மை நாகூர்பிச்சை, செயலாளர் நாகூர் அனிபா, இப்ராகிம் அலி யூசிக்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் காதர் மைதீன் வரவேற்றார்.
ஜனாப் சலீம், ஜனாப் அப்பாஸ் கனி, துணைச் செயலாளர் ஜாகிர்உசேன், பொருளாளர் சலீம்சேட் ஆகியோர் இப்பகுதி பள்ளிவாசலில் தொடர்ந்து பணியாற்றிய ஜெய்னுல் ஆப்தீன் மஹ்லரி, சையது இப்ராகிம், நிக்மத்துல்லாஹ் ரஹீம் ஆகியோருக்கு விருதுகள் வழங்கினர். மதராஸ் மாணவ-மாணவிகள் சமூக சிந்தனை, தேசப்பற்று, தொழுகை குறித்து பேசினர். சிறப்பு அழைப்பாளராக வங்கி முன்னாள் முதுநிலை மேலாளர் வீரராகவன், கிராம தலைவர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி தலைவர் சுகுமாறன், மேட்டுப்பாளையம் சதக்கத்துல்லாஹ் மக்தூமி ஆகியோர் மதநல்லிணக்கம் குறித்து பேசினர். ஜனாப் சலீம்சேட் நன்றி கூறினார்.
ஜனாப் சலீம், ஜனாப் அப்பாஸ் கனி, துணைச் செயலாளர் ஜாகிர்உசேன், பொருளாளர் சலீம்சேட் ஆகியோர் இப்பகுதி பள்ளிவாசலில் தொடர்ந்து பணியாற்றிய ஜெய்னுல் ஆப்தீன் மஹ்லரி, சையது இப்ராகிம், நிக்மத்துல்லாஹ் ரஹீம் ஆகியோருக்கு விருதுகள் வழங்கினர். மதராஸ் மாணவ-மாணவிகள் சமூக சிந்தனை, தேசப்பற்று, தொழுகை குறித்து பேசினர். சிறப்பு அழைப்பாளராக வங்கி முன்னாள் முதுநிலை மேலாளர் வீரராகவன், கிராம தலைவர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி தலைவர் சுகுமாறன், மேட்டுப்பாளையம் சதக்கத்துல்லாஹ் மக்தூமி ஆகியோர் மதநல்லிணக்கம் குறித்து பேசினர். ஜனாப் சலீம்சேட் நன்றி கூறினார்.






