என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி பீர் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சி
Byமாலை மலர்27 Jan 2021 2:50 AM GMT (Updated: 27 Jan 2021 2:50 AM GMT)
நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி பீர் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. கந்தூரி விழா நிறைவு நாளான கொடி இறக்கும் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
நாகையை அடுத்த நாகூரில் பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 21-ந் தேதி வாணவேடிக்கை நிகழ்ச்சியும், 22-ந் தேதி பீர் அமர வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் கடந்த 23-ந்தேதியும், நேற்று முன்தினம் ஆண்டவர் சமாதியில் சந்தன பூசும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
3 நாட்கள் விரதம் இருந்த பீர் நேற்று மாலை கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு தர்காவில், 3 ஆண்டவர் சமாதி முன்பு, செய்யது பள்ளிவாசல், பீரோடும் தெருவில் உள்ள விளக்கு தூண் முன்பு பாத்திஹா ஓதப்பட்டது.
பின்னர், சில்லடி தர்கா அருகில் சென்று பீர் விரதத்தை முடிந்து கொண்டார். அங்கியிருந்து கடற்கரைக்கு சென்ற பீர், எலுமிச்சை பழத்தை கடலை நோக்கி வீசினார். அதை அங்கு கூடி இருந்த திரளானோர் ஆர்வத்தோடு எடுத்துச் சென்றனர். கந்தூரி விழா நிறைவு நாளான கொடி இறக்கும் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் கடந்த 23-ந்தேதியும், நேற்று முன்தினம் ஆண்டவர் சமாதியில் சந்தன பூசும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
3 நாட்கள் விரதம் இருந்த பீர் நேற்று மாலை கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு தர்காவில், 3 ஆண்டவர் சமாதி முன்பு, செய்யது பள்ளிவாசல், பீரோடும் தெருவில் உள்ள விளக்கு தூண் முன்பு பாத்திஹா ஓதப்பட்டது.
பின்னர், சில்லடி தர்கா அருகில் சென்று பீர் விரதத்தை முடிந்து கொண்டார். அங்கியிருந்து கடற்கரைக்கு சென்ற பீர், எலுமிச்சை பழத்தை கடலை நோக்கி வீசினார். அதை அங்கு கூடி இருந்த திரளானோர் ஆர்வத்தோடு எடுத்துச் சென்றனர். கந்தூரி விழா நிறைவு நாளான கொடி இறக்கும் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X