search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பீர்க்கு நோன்பு திறப்பதற்கு பிரசாதம் வழங்கிய போது எடுத்த படம்
    X
    பீர்க்கு நோன்பு திறப்பதற்கு பிரசாதம் வழங்கிய போது எடுத்த படம்

    நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி பீர் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சி

    நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி பீர் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. கந்தூரி விழா நிறைவு நாளான கொடி இறக்கும் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
    நாகையை அடுத்த நாகூரில் பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 21-ந் தேதி வாணவேடிக்கை நிகழ்ச்சியும், 22-ந் தேதி பீர் அமர வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் கடந்த 23-ந்தேதியும், நேற்று முன்தினம் ஆண்டவர் சமாதியில் சந்தன பூசும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    3 நாட்கள் விரதம் இருந்த பீர் நேற்று மாலை கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு தர்காவில், 3 ஆண்டவர் சமாதி முன்பு, செய்யது பள்ளிவாசல், பீரோடும் தெருவில் உள்ள விளக்கு தூண் முன்பு பாத்திஹா ஓதப்பட்டது.

    பின்னர், சில்லடி தர்கா அருகில் சென்று பீர் விரதத்தை முடிந்து கொண்டார். அங்கியிருந்து கடற்கரைக்கு சென்ற பீர், எலுமிச்சை பழத்தை கடலை நோக்கி வீசினார். அதை அங்கு கூடி இருந்த திரளானோர் ஆர்வத்தோடு எடுத்துச் சென்றனர். கந்தூரி விழா நிறைவு நாளான கொடி இறக்கும் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
    Next Story
    ×