search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகூர் தர்கா
    X
    நாகூர் தர்கா

    நாகூர் தர்காவில் கந்தூரி விழா கொடி இறக்கும் நிகழ்ச்சி

    நாகூர் தர்கா கந்தூரி விழா முடிவடைந்ததையொட்டி கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஒதிய பிறகு ஒரே நேரத்தில் தர்கா 5 மினாரக்களிலும் கொடி இறக்கப்பட்டது.
    நாகையை அடுத்த நாகூரில் பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது இந்த தர்கா கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 21-ந் தேதி வாணவேடிக்கை நிகழ்ச்சியும், 22-ந் தேதி பீர் அமர வைத்தல் நிகழ்ச்சியும், 23-ந் சந்தன கூடு ஊர்வலமும். 25-ந்தேதி பீர் கடற்கரை செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    கந்தூரியின் நிறைவு நாளான கொடி இறக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு நடைபெற்றது. இதில் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஒதிய பிறகு ஒரே நேரத்தில் தர்கா 5 மினாரக்களிலும் கொடி இறக்கப்பட்டது.
    Next Story
    ×