என் மலர்
இஸ்லாம்
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை, மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் அவுலியா தர்கா கந்தூாி பெருவிழா கொடியேற்றம் நாளை நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தர்காக்களில் பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை, மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் அவுலியா தர்காவும் ஒன்று. இந்த தர்காவில் வருடாந்திரப்பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான வருடாந்திர கந்தூரி பெருவிழா கடந்த, 2-ந் தேதி தொடங்கியது. தினமும் மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல் மற்றும் பக்தர்களால் நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிறைக்கொடியேற்றும் நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. முன்னதாக திட்டுவிளை உதுமான் லெப்பைசாகிபு சுன்னத் ஜமாத் நிர்வாக தலைவர் மைதீன்பிள்ளை தலைமையில், தர்காவில் நடக்கும் சிறப்பு பிரார்த்தனையில் ஜமாத் இமாம் அசன் அலியார், தர்கா இமாம் அப்துல் லத்தீப், நல்லாசிரியர் முகமது ஜாபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு துவா ஓதுகிறார்கள். பின்னர் தர்காவில் இருந்து பிறைக்கொடி எடுத்து வந்து அதன் முன்பக்கம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் இரவு 8 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் உள்ளுர் மற்றும் வெளியூர் பகுதிகளில் இருந்து வரும் அனைத்து மக்களும் கலந்து கொள்வார்கள். இதற்கு கலீல்ரகுமான், முகமது முஸ்தபா, முகமது ரபீக் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். அதைத் தொடர்ந்து பக்தர்களால் நேர்ச்சை வழங்கப்படுகிறது.
இரவு 8.30 மணிக்கு ஜமாத் தலைவர் மைதீன்பிள்ளை தலைமையில் மார்க்க பேருரை நடக்கிறது. முகமது ஹனிபா அப்துல் ஹலீம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். குளச்சல், செய்யது மிர்காசிம் ஆலிம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். தர்கா நிர்வாக தலைவர் உதுமான் மைதீன் நன்றி கூறுகிறார்.
விழாவில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தப்றுக் என்ற நேர்ச்சை வழங்குதல், மாலை 6.30 மணிக்கு இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
14-ந் தேதி காலை 9 மணிக்கு மூன்றாம் ஜியாரத் நேர்ச்சை வழங்குதல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திட்டுவிளை உதுமான் லெப்பைசாகிபு சுன்னத் ஜமாத் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் தர்கா நிர்வாக பொறுப்பாளர்களான முகமது ரபீக் ஷேக் முகம்மது, பக்கீர் மைதீன் மற்றும் பொறுப்பாளர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான வருடாந்திர கந்தூரி பெருவிழா கடந்த, 2-ந் தேதி தொடங்கியது. தினமும் மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல் மற்றும் பக்தர்களால் நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிறைக்கொடியேற்றும் நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. முன்னதாக திட்டுவிளை உதுமான் லெப்பைசாகிபு சுன்னத் ஜமாத் நிர்வாக தலைவர் மைதீன்பிள்ளை தலைமையில், தர்காவில் நடக்கும் சிறப்பு பிரார்த்தனையில் ஜமாத் இமாம் அசன் அலியார், தர்கா இமாம் அப்துல் லத்தீப், நல்லாசிரியர் முகமது ஜாபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு துவா ஓதுகிறார்கள். பின்னர் தர்காவில் இருந்து பிறைக்கொடி எடுத்து வந்து அதன் முன்பக்கம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் இரவு 8 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் உள்ளுர் மற்றும் வெளியூர் பகுதிகளில் இருந்து வரும் அனைத்து மக்களும் கலந்து கொள்வார்கள். இதற்கு கலீல்ரகுமான், முகமது முஸ்தபா, முகமது ரபீக் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். அதைத் தொடர்ந்து பக்தர்களால் நேர்ச்சை வழங்கப்படுகிறது.
இரவு 8.30 மணிக்கு ஜமாத் தலைவர் மைதீன்பிள்ளை தலைமையில் மார்க்க பேருரை நடக்கிறது. முகமது ஹனிபா அப்துல் ஹலீம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். குளச்சல், செய்யது மிர்காசிம் ஆலிம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். தர்கா நிர்வாக தலைவர் உதுமான் மைதீன் நன்றி கூறுகிறார்.
விழாவில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தப்றுக் என்ற நேர்ச்சை வழங்குதல், மாலை 6.30 மணிக்கு இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
14-ந் தேதி காலை 9 மணிக்கு மூன்றாம் ஜியாரத் நேர்ச்சை வழங்குதல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திட்டுவிளை உதுமான் லெப்பைசாகிபு சுன்னத் ஜமாத் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் தர்கா நிர்வாக பொறுப்பாளர்களான முகமது ரபீக் ஷேக் முகம்மது, பக்கீர் மைதீன் மற்றும் பொறுப்பாளர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
திருச்சி பொன்மலை ரெயில்வே காலனி நார்த் - டி பகுதியில் பழமைவாய்ந்த தர்காவில் சந்தனக்கூடு விழா நடைபெற்றது. பிறகு சந்தனம் பூசுதல் நிகழ்ச்சியும், கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருச்சி பொன்மலை ரெயில்வே காலனி நார்த் - டி பகுதியில் பழமைவாய்ந்த தர்கா உள்ளது. இங்கு சந்தனக்கூடு விழா நடைபெற்றது.
இதையொட்டி நிஷான் கமிட்டியினர் சார்பில் சந்தனக்கூடு கீழ அம்பிகா புரத்தில் இருந்து புறப்பட்டு தங்கேஸ்வரி நகர், மிலிட்டரி காலனி வழியாக, ரெயில்வே காலனி நார்த்-டி பகுதியில் உள்ள தர்காவிற்கு வந்தடைந்து.
பிறகு சந்தனம் பூசுதல் நிகழ்ச்சியும், கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஒவ்வொருவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த இனிப்புகளை அன்பின் நிமித்தமாக பரிமாறிக்கொண்டனர்.
இந்த விழாவில் சாதி மத பேதமின்றி ஏராளமான முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் சமத்துவமாக கலந்து கொண்ட சமபந்தி போஜனம் நடைபெற்றது.
இதையொட்டி நிஷான் கமிட்டியினர் சார்பில் சந்தனக்கூடு கீழ அம்பிகா புரத்தில் இருந்து புறப்பட்டு தங்கேஸ்வரி நகர், மிலிட்டரி காலனி வழியாக, ரெயில்வே காலனி நார்த்-டி பகுதியில் உள்ள தர்காவிற்கு வந்தடைந்து.
பிறகு சந்தனம் பூசுதல் நிகழ்ச்சியும், கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஒவ்வொருவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த இனிப்புகளை அன்பின் நிமித்தமாக பரிமாறிக்கொண்டனர்.
இந்த விழாவில் சாதி மத பேதமின்றி ஏராளமான முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் சமத்துவமாக கலந்து கொண்ட சமபந்தி போஜனம் நடைபெற்றது.
திட்டுவிளை வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி பெருவிழா தொடங்கியது. 11-ந்தேதி கொடியேற்றம் நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தர்காக்களில் பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் அவுலியா தர்காவும் ஒன்று. இந்த தர்காவில் வருடாந்திரப்பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்தூரி பெருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.
தினமும் மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல் மற்றும் நேர்ச்சை வழங்குதல் நடைபெறுகிறது.
வருகிற 11-ந் தேதி இரவு 8 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து இஸ்லாமிய மார்க்க பேருரை நடைபெறுகிறது. இதற்கு ஜமாத் தலைவர் மைதீன்பிள்ளை தலைமை தாங்குகிறார். முகம்மது ஹனீபா மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இதில் குளச்சல் செய்யது மீர் காசிம் ஆலிம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். தர்கா நிர்வாக தலைவர் உதுமான்மைதீன் நன்றி கூறுகிறார்.
12-ந் தேதி காலை 9 மணிக்கு நேர்ச்சை வழங்குதலும், மாலை 6.30 மணிக்கு இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
14-ந் தேதி காலை 9 மணிக்கு மூன்றாம் ஜியாரத் நேர்ச்சை வழங்குதல் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை திட்டுவிளை, உதுமான்லெப்பைசாகிபு, சுன்னத், ஜமாத் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் தர்கா நிர்வாக பொறுப்பாளர்களான முகம்மது ரபீக், ஷேக் முகம்மது, பக்கீர் மைதீன் மற்றும் பொறுப்பாளர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
தினமும் மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல் மற்றும் நேர்ச்சை வழங்குதல் நடைபெறுகிறது.
வருகிற 11-ந் தேதி இரவு 8 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து இஸ்லாமிய மார்க்க பேருரை நடைபெறுகிறது. இதற்கு ஜமாத் தலைவர் மைதீன்பிள்ளை தலைமை தாங்குகிறார். முகம்மது ஹனீபா மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இதில் குளச்சல் செய்யது மீர் காசிம் ஆலிம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். தர்கா நிர்வாக தலைவர் உதுமான்மைதீன் நன்றி கூறுகிறார்.
12-ந் தேதி காலை 9 மணிக்கு நேர்ச்சை வழங்குதலும், மாலை 6.30 மணிக்கு இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
14-ந் தேதி காலை 9 மணிக்கு மூன்றாம் ஜியாரத் நேர்ச்சை வழங்குதல் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை திட்டுவிளை, உதுமான்லெப்பைசாகிபு, சுன்னத், ஜமாத் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் தர்கா நிர்வாக பொறுப்பாளர்களான முகம்மது ரபீக், ஷேக் முகம்மது, பக்கீர் மைதீன் மற்றும் பொறுப்பாளர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
‘சுத்தம் சுகம் தரும்’ என்பது நாம் அறியாத ஒன்றல்ல. இதனால் தான் ‘சுத்தம்- அது ஈமான் எனும் இறை நம்பிக்கையின் ஒரு பகுதி’ என்று எடுத்துரைத்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
மனிதன் கடைபிடிக்க வேண்டிய கட்டாயக் கடமைகளில் தூய்மையும் ஒன்று. ‘சுத்தம் சுகம் தரும்’ என்பது நாம் அறியாத ஒன்றல்ல. நாம் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்ட ஒன்று. நமது உணவு, உடை, உடல், இருப்பிடம் என யாவற்றிலும் நாம் தூய்மையை நன்கு கடைபிடிக்க வேண்டும். இதனால் தான் ‘சுத்தம்- அது ஈமான் எனும் இறை நம்பிக்கையின் ஒரு பகுதி’ என்று எடுத்துரைத்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
இறை நம்பிக்கை என்பது வெறும் மனதளவிலான நம்பிக்கை மட்டுமல்ல; அது செயலளவிலானதும் கூட என்பதையே அந்நபிமொழி நமக்கு நன்கு சுட்டிக்காட்டுகிறது.
இதனால் தான், நாம் சாப்பிடும் முன் கைகளை தேய்த்துக் கழுவ வேண்டும், சாப்பிட்ட பின்பும் கைகளை கழுவி, வாய் கொப்பளிக்கவும் வேண்டும். தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும். தினமும் குளிக்க வேண்டும், மலம், சிறுநீர் கழித்த பின் அவ்வுறுப்புக்களையும், கைகளையும் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். காலணி அணிய வேண்டும், வீடுகளை, வீட்டு வாசலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், உறங்கும் முன் படுக்கையை உதறிக்கொள்ள வேண்டும் என்பது உள்பட மனிதன் தன் அன்றாட வாழ்வில் தினமும் கடைபிடிக்க வேண்டிய அனைத்து தூய்மைமுறைகள் குறித்து இஸ்லாம் வலியுறுத்தி கூறியுள்ளது. இவை அனைத்தும் திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இடம்பெற்றுள்ளன. அவை வருமாறு:
“மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்; ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள்- நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்”. (திருக்குர்ஆன் 2:168)
“நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ் வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்”. (திருக்குர்ஆன் 2:172)
“ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ், அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை”. (திருக்குர்ஆன் 7:31)
“உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக. மேலும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக”. (திருக்குர்ஆன் 74:4,5)
“(நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், நல்ல (மேலான) உணவையும் (ஆகாதவையென்று) தடுப்பவர் யார்?” என்று கேட்டு ‘அது இவ்வுலகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு(ம் ஆகுமானதே! எனினும்) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டுமே) சொந்தமானது’ என்றும் கூறுங்கள். அறியக்கூடிய மக்களுக்கு (நம்முடைய) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்”. (திருக்குர்ஆன் 7:32)
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் (அதற்கு முன்னர்) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் கைகளையும், கணுக்கால்கள் வரையில் உங்கள் இரு பாதங்களையும் கழுவிக்கொள்ளுங்கள். அன்றி, (உங்கள் கையில் நீரைத் தொட்டு) உங்கள் தலையை தடவிக் கொள்ளுங்கள். நீங்கள் முழுக்குளிப்புடையவர்களாக இருந்தால் (கை, கால்களை மட்டும் கழுவினால் போதாது. உடல் முழுவதையும் கழுவி) தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கஷ்டத்தைத் தர அல்லாஹ் விரும்பவில்லை. எனினும், அவன் உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், தன் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கி வைக்கவுமே விரும்புகின்றான். (இதற்காக) நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக!”. (திருக்குர்ஆன் 5:6)
இப்படியாக சுத்தம் பற்றி இஸ்லாம் மிக விரிவாகப் பேசுகிறது. நாம் தான் பலநேரங்களில் தூய்மையை கடைபிடிப்பதில்லை அல்லது கவனக்குறைவாக இருந்து விடுகிறோம். இதன் விளைவு நம்மை மட்டுமல்ல நம்மைச் சுற்றியிருப்பவர்களையும், நம் சந்ததியினரையும் பாதிக்கிறது என்பது மட்டும் உண்மை.
‘சுத்தம் சோறு போடும், கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி’ என்பன போன்ற பழமொழிகள் சுத்தத்தின் அவசியத்தை நமக்கு நன்கு வலியுறுத்துகின்றன. நாம் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தையும், அதற்கான பழக்கத்தையும் குழந்தைப் பருவத்திலிருந்தே ஊட்டி வரவேண்டும். ‘தூய்மை தேசம்’ என்பது எங்கோ ஒரு மூலையிலுள்ள ஒரு திட்டமல்ல. நமது வீட்டு மூலையை சுத்தம் செய்வதிலிருந்து நாம் தொடங்க வேண்டிய நமக்கான திட்டம் தான் அது.
ஆரோக்கியம் மலர வேண்டுமென்றால் அது கட்டாயம் சுத்தத்திலிருந்து தான் தொடங்கப்பட வேண்டும். நீர் மாசு, நில மாசு, காற்று மண்டல மாசு, வளி மண்டல மாசு என எல்லாமுமே மாசுபட்டுக் கிடக்கிற போது அவற்றின் மாசுகளை நாம் எப்படி நீக்கப் போகிறோம் என்பது தான் இன்றைக்கு நம் முன்னுள்ள பெரும் சவால்.
வாருங்கள்... அசுத்தங்களை அகற்றிடுவோம்... சுத்தங்களை போற்றிடுவோம்...!!
மவுலவி எஸ் என் ஆர் ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
இறை நம்பிக்கை என்பது வெறும் மனதளவிலான நம்பிக்கை மட்டுமல்ல; அது செயலளவிலானதும் கூட என்பதையே அந்நபிமொழி நமக்கு நன்கு சுட்டிக்காட்டுகிறது.
இதனால் தான், நாம் சாப்பிடும் முன் கைகளை தேய்த்துக் கழுவ வேண்டும், சாப்பிட்ட பின்பும் கைகளை கழுவி, வாய் கொப்பளிக்கவும் வேண்டும். தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும். தினமும் குளிக்க வேண்டும், மலம், சிறுநீர் கழித்த பின் அவ்வுறுப்புக்களையும், கைகளையும் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். காலணி அணிய வேண்டும், வீடுகளை, வீட்டு வாசலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், உறங்கும் முன் படுக்கையை உதறிக்கொள்ள வேண்டும் என்பது உள்பட மனிதன் தன் அன்றாட வாழ்வில் தினமும் கடைபிடிக்க வேண்டிய அனைத்து தூய்மைமுறைகள் குறித்து இஸ்லாம் வலியுறுத்தி கூறியுள்ளது. இவை அனைத்தும் திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இடம்பெற்றுள்ளன. அவை வருமாறு:
“மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்; ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள்- நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்”. (திருக்குர்ஆன் 2:168)
“நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ் வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்”. (திருக்குர்ஆன் 2:172)
“ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ், அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை”. (திருக்குர்ஆன் 7:31)
“உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக. மேலும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக”. (திருக்குர்ஆன் 74:4,5)
“(நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், நல்ல (மேலான) உணவையும் (ஆகாதவையென்று) தடுப்பவர் யார்?” என்று கேட்டு ‘அது இவ்வுலகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு(ம் ஆகுமானதே! எனினும்) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டுமே) சொந்தமானது’ என்றும் கூறுங்கள். அறியக்கூடிய மக்களுக்கு (நம்முடைய) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்”. (திருக்குர்ஆன் 7:32)
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் (அதற்கு முன்னர்) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் கைகளையும், கணுக்கால்கள் வரையில் உங்கள் இரு பாதங்களையும் கழுவிக்கொள்ளுங்கள். அன்றி, (உங்கள் கையில் நீரைத் தொட்டு) உங்கள் தலையை தடவிக் கொள்ளுங்கள். நீங்கள் முழுக்குளிப்புடையவர்களாக இருந்தால் (கை, கால்களை மட்டும் கழுவினால் போதாது. உடல் முழுவதையும் கழுவி) தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கஷ்டத்தைத் தர அல்லாஹ் விரும்பவில்லை. எனினும், அவன் உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், தன் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கி வைக்கவுமே விரும்புகின்றான். (இதற்காக) நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக!”. (திருக்குர்ஆன் 5:6)
இப்படியாக சுத்தம் பற்றி இஸ்லாம் மிக விரிவாகப் பேசுகிறது. நாம் தான் பலநேரங்களில் தூய்மையை கடைபிடிப்பதில்லை அல்லது கவனக்குறைவாக இருந்து விடுகிறோம். இதன் விளைவு நம்மை மட்டுமல்ல நம்மைச் சுற்றியிருப்பவர்களையும், நம் சந்ததியினரையும் பாதிக்கிறது என்பது மட்டும் உண்மை.
‘சுத்தம் சோறு போடும், கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி’ என்பன போன்ற பழமொழிகள் சுத்தத்தின் அவசியத்தை நமக்கு நன்கு வலியுறுத்துகின்றன. நாம் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தையும், அதற்கான பழக்கத்தையும் குழந்தைப் பருவத்திலிருந்தே ஊட்டி வரவேண்டும். ‘தூய்மை தேசம்’ என்பது எங்கோ ஒரு மூலையிலுள்ள ஒரு திட்டமல்ல. நமது வீட்டு மூலையை சுத்தம் செய்வதிலிருந்து நாம் தொடங்க வேண்டிய நமக்கான திட்டம் தான் அது.
ஆரோக்கியம் மலர வேண்டுமென்றால் அது கட்டாயம் சுத்தத்திலிருந்து தான் தொடங்கப்பட வேண்டும். நீர் மாசு, நில மாசு, காற்று மண்டல மாசு, வளி மண்டல மாசு என எல்லாமுமே மாசுபட்டுக் கிடக்கிற போது அவற்றின் மாசுகளை நாம் எப்படி நீக்கப் போகிறோம் என்பது தான் இன்றைக்கு நம் முன்னுள்ள பெரும் சவால்.
வாருங்கள்... அசுத்தங்களை அகற்றிடுவோம்... சுத்தங்களை போற்றிடுவோம்...!!
மவுலவி எஸ் என் ஆர் ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா ஆண்டு விழாவையொட்டி ஞானப்புகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சி விடிய, விடிய நடந்தது.
தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா 18 ஆயிரம் ஞானப்புகழ்ச்சி பாடல்களை எழுதியுள்ளார். இவரது ஆண்டு விழா தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகமதியா முஸ்லிம் அசோசியேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மார்க்க பேரூரை நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பீர்முகமது ஒலியுல்லா எழுதிய ஞானப்புகழ்ச்சி பாடுதல் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தொடங்கி, விடிய, விடிய நடந்தது. ஜமாத் மக்கள் ஒன்றிணைந்து ஞானப்புகழ்ச்சியில் உள்ள பாடல்களை இசை வடிவில் கூட்டாக பாடினர். இதில் தூத்துக்குடி, நெல்லை மற்றும் கேரளாவில் இருந்து திரளானவர்கள் வந்து கலந்து கொண்டனர். நேற்று மாலை நேர்ச்சை வழங்கப்பட்டது. மார்ச் 3-ந்தேதி சியாரத் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மார்க்க பேரூரை நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பீர்முகமது ஒலியுல்லா எழுதிய ஞானப்புகழ்ச்சி பாடுதல் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தொடங்கி, விடிய, விடிய நடந்தது. ஜமாத் மக்கள் ஒன்றிணைந்து ஞானப்புகழ்ச்சியில் உள்ள பாடல்களை இசை வடிவில் கூட்டாக பாடினர். இதில் தூத்துக்குடி, நெல்லை மற்றும் கேரளாவில் இருந்து திரளானவர்கள் வந்து கலந்து கொண்டனர். நேற்று மாலை நேர்ச்சை வழங்கப்பட்டது. மார்ச் 3-ந்தேதி சியாரத் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நெல்லை மேலப்பாளையம் பெரிய தெரு செய்யது அப்துல் ரகுமான் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் தர்கா 159-வது கந்தூரி விழா நடைபெற்றது.
நெல்லை மேலப்பாளையம் பெரிய தெரு செய்யது அப்துல் ரகுமான் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் தர்கா 159-வது கந்தூரி விழா நடைபெற்றது.
இதையொட்டி மாலையில் யானை மீது கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தர்காவில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து திக்ரு மஜ்லீஸ் மற்றும் ராத்திபு சரிப் ஆகியவை நடைபெற்றது. இறுதியில் பெரிய துஆ ஓதப்பட்டு தப்ரூக் நேர்ச்சையும் நடைபெற்றது. இதில் தர்கா அக்தார் கலீபா அப்துல் ரகுமான் மற்றும் முஹ்ப்பீன்கன், ஜமாத்தார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி மாலையில் யானை மீது கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தர்காவில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து திக்ரு மஜ்லீஸ் மற்றும் ராத்திபு சரிப் ஆகியவை நடைபெற்றது. இறுதியில் பெரிய துஆ ஓதப்பட்டு தப்ரூக் நேர்ச்சையும் நடைபெற்றது. இதில் தர்கா அக்தார் கலீபா அப்துல் ரகுமான் மற்றும் முஹ்ப்பீன்கன், ஜமாத்தார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலப்பாளையம் செய்யது அப்துர் ரகுமான் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் தர்காவில் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
மேலப்பாளையம் செய்யது அப்துர் ரகுமான் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் தர்கா கந்தூரி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
அன்று மாலை 5 மணிக்கு தர்காவில் இருந்து கொடி எடுத்து ஞானியாரப்பா பெரிய தெரு, சின்னத்தெருவை சுற்றி வந்து இரவு 8 மணிக்கு தர்காவில் கொடியேற்றப்படுகிறது. இரவு 9.30 மணியில் இருந்து 11.30 மணிவரை திக்ரு மஜ்லீஸ் (தியானம்), ராத்தீபு சரீபு (இறைவேதம் படித்தல்) ஆகியவை நடைபெற உள்ளது.
அன்று மாலை 5 மணிக்கு தர்காவில் இருந்து கொடி எடுத்து ஞானியாரப்பா பெரிய தெரு, சின்னத்தெருவை சுற்றி வந்து இரவு 8 மணிக்கு தர்காவில் கொடியேற்றப்படுகிறது. இரவு 9.30 மணியில் இருந்து 11.30 மணிவரை திக்ரு மஜ்லீஸ் (தியானம்), ராத்தீபு சரீபு (இறைவேதம் படித்தல்) ஆகியவை நடைபெற உள்ளது.
வலிமையான குடும்பம் உருவாகும்போது அது வலுவான சமூகத்தை உருவாக்கும். வலுவான சமூகமே வலிமையான தேசம் உருவாக காரணமாக அமையும்.
நபிகள் நாயகம் அவர்கள் நல்ல நட்புக்கு உதாரணம் கூறும்போது கஸ்தூரி (வாசனைப் பொருள்) விற்பவருக்கு ஒப்பாகக் கூறியுள்ளார்கள். ‘அவன் உனக்கு வாசனைப் பொருளைத் தராவிட்டாலும் அவரிடமிருந்து நல்ல வாசனையையாவது பெற்றுக்கொண்டே இருப்பாய்’.
தீய நட்புக்கு உதாரணம் கூறும்போது, உலை ஊதும் கொல்லனுக்கு உதாரணமாகக் கூறுகிறார்கள். ‘அவன் உலை ஊதும்போது நெருப்புப்பொறி உன் மீது படாவிட்டாலும் அங்கு ஏற்படும் புகையின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாது’.
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் போது நல்லவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஒரு பெண் நான்கு விஷயங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறாள் அழகு, குலப்பெருமை, செல்வம், மார்க்கப்பற்று.
மார்க்கப்பற்றுள்ள பெண்ணுக்கு முன்னுரிமை அளிப்பாயாக. மற்றவை அழிந்துவிடும் அல்லது அவளது செருக்குக்கு காரணமாக அமைந்து விடும். ஆனால் மார்க்கப்பற்று, மிகச் சிறந்த வாழ்க்கை துணையாக அமைவதற்கு உதவும்.
அதேபோல மார்க்கப்பற்றுள்ள நல்லொழுக்கமுள்ள மணமகன் பெண் கேட்டு வந்தால் அவருக்கு முன்னுரிமை அளிக்கும்படி கூறியுள்ளார்கள். எளிமையான திருமணமே மிகச்சிறந்த திருமணம். ஆடம்பரம், வீண்விரயம் தவிர்க்கப்பட வேண்டும்.
கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுத்து தியாக மனப்பான்மையுடன் வாழ்வது நிலையான மண வாழ்விற்கு வழிவகுக்கும்.
இன்றைய சூழ்நிலையில் அத்தகைய புரிந்துணர்வும் ஒற்றுமையும் இல்லாமையால் குடும்பங்களில் குழப்பம், வன்முறை எனத்தொடங்கி பெருகிவரும் தற்கொலைகளும், விவாகரத்துகளும் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றும் போது வீட்டில் உள்ள பெரியவர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறி, ஆற்றுப்படுத்தி அத்தகைய கருத்து வேறுபாடுகளைக் களைய முயற்சி செய்ய வேண்டும். அவர்களின் தலையீடு, பிணக்கை தீர்ப்பதாக அமைய வேண்டுமேயல்லாது, மேலும் பிரச்சினை அதிகமாகக் காரணமாக அமைந்து விடக்கூடாது.
வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்த பிறகு ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொள்ளக் கூடாது. இருவரின் வாழ்வும் திறந்த புத்தகமாக, ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் கூடிய அன்போடு நடந்து கொள்ள வேண்டும். சந்தேகம் ஏற்பட்டால் வாழ்க்கை வீணாகிவிடும். சந்தேகம் என்பது கொடிய நோயாகும்.
நபிகள் நாயகம் அவர்கள் ஒருமுறை முன்னிரவு நேரத்தில் தனது மனைவியுடன் பேசிக்கொண்டு நின்றார்கள் . அவ்வழியே இரண்டு தோழர்கள் கடந்து சென்றார்கள். நபிகள் நாயகம் அவர்கள் சற்று உரத்த குரலில், ‘நான் எனது மனைவியுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறினார்கள்.
உடனே அந்தத் தோழர்கள், ‘நபியவர்களே, உங்கள் மீது சந்தேகப்படுவோமா?’ என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் அவர்கள், ‘சைத்தான் மனிதனின் உள்ளத்தில் தவறான எண்ணங்களை விதைக்கக் கூடியவன்’ என்றார்கள்.
சந்தேகப்படக் கூடிய எந்த ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தக் கூடாது. அவ்வாறு ஏற்பட்டால் கணவன், மனைவி எவராக இருந்தாலும் அந்த விஷயத்தில் உண்மை நிலையைத் தெளிவு படுத்தி விட வேண்டும். அதன் மூலம் சந்தேகம் என்ற நோயை அறவே ஒழிக்க முடியும்.
தெளிந்து தெரிந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுத்தவர் மீது சந்தேகம் கொள்வது தீராத துன்பத்தை தரும் என்கிறார் வள்ளுவர்.
நபிகள் நாயகம் அவர்களின் காலத்தில் ஒரு தம்பதியர் வந்தனர். எனக்கு பிறந்த பிள்ளை என் சாயலில் இல்லையே என்ற ஒரு குற்றச்சாட்டை வைத்தார் அந்தக் கணவர்.
உங்களுடைய தாய் தந்தை, அவர்களின் தாய் தந்தை அல்லது அவர்களுக்கு முந்தைய தலைமுறையினரின் ஏதாவது ஒரு வகையில் உமது குழந்தையின் சாயல் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூற அவர் சமாதானம் அடைந்தார்.
சந்தேகம் ஏற்பட்டால் அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். சரியாக வராத சூழலில் வேறு வழியே இல்லை என்றால் பிரிந்து விடுவதே நல்லது. சந்தேகத்தால் கொலை செய்து அவ்வாறு சந்தேகப்பட்டதில் உண்மை இல்லை என்பது தெரியவந்தால் உயிரை திரும்பத் தர முடியுமா? தக்க காரணமின்றி ஒரு உயிரைக் கொலை செய்வது மனித இனத்தையே கொன்றதற்கு சமம். ஒரு உயிரை வாழ வைப்பது மனித இனத்தையே வாழ வைப்பதற்கு சமம்.
சிறுவர்கள் மீது அன்பும், பெரியவர்கள் மீது கண்ணியமும் கொண்ட குடும்ப சூழல் உருவாக வேண்டும்.
இவ்வாறாக வலிமையான குடும்பம் உருவாகும்போது அது வலுவான சமூகத்தை உருவாக்கும். வலுவான சமூகமே வலிமையான தேசம் உருவாக காரணமாக அமையும்.
பி.சையது இப்ராஹிம், சென்னை.
தீய நட்புக்கு உதாரணம் கூறும்போது, உலை ஊதும் கொல்லனுக்கு உதாரணமாகக் கூறுகிறார்கள். ‘அவன் உலை ஊதும்போது நெருப்புப்பொறி உன் மீது படாவிட்டாலும் அங்கு ஏற்படும் புகையின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாது’.
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் போது நல்லவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஒரு பெண் நான்கு விஷயங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறாள் அழகு, குலப்பெருமை, செல்வம், மார்க்கப்பற்று.
மார்க்கப்பற்றுள்ள பெண்ணுக்கு முன்னுரிமை அளிப்பாயாக. மற்றவை அழிந்துவிடும் அல்லது அவளது செருக்குக்கு காரணமாக அமைந்து விடும். ஆனால் மார்க்கப்பற்று, மிகச் சிறந்த வாழ்க்கை துணையாக அமைவதற்கு உதவும்.
அதேபோல மார்க்கப்பற்றுள்ள நல்லொழுக்கமுள்ள மணமகன் பெண் கேட்டு வந்தால் அவருக்கு முன்னுரிமை அளிக்கும்படி கூறியுள்ளார்கள். எளிமையான திருமணமே மிகச்சிறந்த திருமணம். ஆடம்பரம், வீண்விரயம் தவிர்க்கப்பட வேண்டும்.
கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுத்து தியாக மனப்பான்மையுடன் வாழ்வது நிலையான மண வாழ்விற்கு வழிவகுக்கும்.
இன்றைய சூழ்நிலையில் அத்தகைய புரிந்துணர்வும் ஒற்றுமையும் இல்லாமையால் குடும்பங்களில் குழப்பம், வன்முறை எனத்தொடங்கி பெருகிவரும் தற்கொலைகளும், விவாகரத்துகளும் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றும் போது வீட்டில் உள்ள பெரியவர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறி, ஆற்றுப்படுத்தி அத்தகைய கருத்து வேறுபாடுகளைக் களைய முயற்சி செய்ய வேண்டும். அவர்களின் தலையீடு, பிணக்கை தீர்ப்பதாக அமைய வேண்டுமேயல்லாது, மேலும் பிரச்சினை அதிகமாகக் காரணமாக அமைந்து விடக்கூடாது.
வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்த பிறகு ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொள்ளக் கூடாது. இருவரின் வாழ்வும் திறந்த புத்தகமாக, ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் கூடிய அன்போடு நடந்து கொள்ள வேண்டும். சந்தேகம் ஏற்பட்டால் வாழ்க்கை வீணாகிவிடும். சந்தேகம் என்பது கொடிய நோயாகும்.
நபிகள் நாயகம் அவர்கள் ஒருமுறை முன்னிரவு நேரத்தில் தனது மனைவியுடன் பேசிக்கொண்டு நின்றார்கள் . அவ்வழியே இரண்டு தோழர்கள் கடந்து சென்றார்கள். நபிகள் நாயகம் அவர்கள் சற்று உரத்த குரலில், ‘நான் எனது மனைவியுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறினார்கள்.
உடனே அந்தத் தோழர்கள், ‘நபியவர்களே, உங்கள் மீது சந்தேகப்படுவோமா?’ என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் அவர்கள், ‘சைத்தான் மனிதனின் உள்ளத்தில் தவறான எண்ணங்களை விதைக்கக் கூடியவன்’ என்றார்கள்.
சந்தேகப்படக் கூடிய எந்த ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தக் கூடாது. அவ்வாறு ஏற்பட்டால் கணவன், மனைவி எவராக இருந்தாலும் அந்த விஷயத்தில் உண்மை நிலையைத் தெளிவு படுத்தி விட வேண்டும். அதன் மூலம் சந்தேகம் என்ற நோயை அறவே ஒழிக்க முடியும்.
தெளிந்து தெரிந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுத்தவர் மீது சந்தேகம் கொள்வது தீராத துன்பத்தை தரும் என்கிறார் வள்ளுவர்.
நபிகள் நாயகம் அவர்களின் காலத்தில் ஒரு தம்பதியர் வந்தனர். எனக்கு பிறந்த பிள்ளை என் சாயலில் இல்லையே என்ற ஒரு குற்றச்சாட்டை வைத்தார் அந்தக் கணவர்.
உங்களுடைய தாய் தந்தை, அவர்களின் தாய் தந்தை அல்லது அவர்களுக்கு முந்தைய தலைமுறையினரின் ஏதாவது ஒரு வகையில் உமது குழந்தையின் சாயல் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூற அவர் சமாதானம் அடைந்தார்.
சந்தேகம் ஏற்பட்டால் அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். சரியாக வராத சூழலில் வேறு வழியே இல்லை என்றால் பிரிந்து விடுவதே நல்லது. சந்தேகத்தால் கொலை செய்து அவ்வாறு சந்தேகப்பட்டதில் உண்மை இல்லை என்பது தெரியவந்தால் உயிரை திரும்பத் தர முடியுமா? தக்க காரணமின்றி ஒரு உயிரைக் கொலை செய்வது மனித இனத்தையே கொன்றதற்கு சமம். ஒரு உயிரை வாழ வைப்பது மனித இனத்தையே வாழ வைப்பதற்கு சமம்.
சிறுவர்கள் மீது அன்பும், பெரியவர்கள் மீது கண்ணியமும் கொண்ட குடும்ப சூழல் உருவாக வேண்டும்.
இவ்வாறாக வலிமையான குடும்பம் உருவாகும்போது அது வலுவான சமூகத்தை உருவாக்கும். வலுவான சமூகமே வலிமையான தேசம் உருவாக காரணமாக அமையும்.
பி.சையது இப்ராஹிம், சென்னை.
குடும்ப அமைப்பு வலிமையாக அமையும்போது சமூக அமைப்பும் வலிமையாக அமையும். குடும்ப அமைப்பு வலுவிழக்கும்போது சமூக அமைப்பும் வலுவிழந்துவிடும். ஆகவேதான் குடும்ப அமைப்புக்கு இஸ்லாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
குடும்பம் எனும் செங்கற்கள் மூலமாகவே சமூகம் எனும் கட்டிடம் கட்டப்படுகிறது. அந்தக் கட்டிடத்தின் அஸ்திவாரமாகவும் குடும்பமே அமைகிறது. குடும்ப அமைப்பு வலிமையாக அமையும்போது சமூக அமைப்பும் வலிமையாக அமையும். குடும்ப அமைப்பு வலுவிழக்கும்போது சமூக அமைப்பும் வலுவிழந்துவிடும். ஆகவேதான் குடும்ப அமைப்புக்கு இஸ்லாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
இஸ்லாமிய வாழ்வின் அடித்தளமே குடும்பம்தான். குடும்பத் தலைவனும் தலைவியும் மார்க்கம் காட்டும் பாதையில் நடக்கும்போது அது இஸ்லாம் விரும்பும் லட்சியக் குடும்பமாக அமையும். சிறந்த குடும்பங்கள் உருவாகாத நிலையில் சிறந்த சமூகத்தை உருவாக்க முடியாது.
இலக்கை நோக்கிய குடும்பம்
இறைவன் உருவாக்கிய குடும்பம் எனும் அமைப்பு அவனது வழிகாட்டலுக்கும் திருப்திக்கும் ஏற்றவாறு இவ்வுலகில் செயல்பட வேண்டும் என்று அவன் விரும்புகிறான்.
மக்காவில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சிறுபான்மையினராக வாழ்ந்துகொண்டிருந்த இறைநம்பிக்கையாளர்களின் ஆன்மிக வாழ்வு எவ்வாறு அமைந்து இருந்தது என்பதை திருக்குர்ஆனின் பின்வரும் வசனம் பிரதிபலிக்கிறது:
“மேலும், அவர்கள் இறைஞ்சிய வண்ணம் இருப்பார்கள். எங்கள் இறைவனே! எங்கள் மனைவிமார்களையும், எங்கள் குழந்தைகளையும், எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக”. (திருக்குர்ஆன் 25:74)
அன்றைய மக்கத்து முஸ்லிம்களின் லட்சியம் நீண்டதாகவும், விசாலமானதாகவும் இருந்துள்ளது. தமது வாழ்நாளில் குடும்பத்தினர் மூலம் அடையும் கண்குளிர்ச்சியில் மட்டும் அவர்கள் திருப்தி அடையவில்லை. மாறாக தங்களது மறைவுக்குப் பிறகு வரவிருக்கும் முஸ்லிம் சந்ததிகளுக்குப் பொறுப்பேற்கும் தலைமைத்துவத்தையும் கேட்கிறார்கள்.
நபிமார்கள் தங்களது குடும்ப விஷயத்தில் எவ்வளவு தூரம் கவனம் செலுத்தியிருந்தனர் என்பதை ஆரம்ப கால அத்தியாயங்களில் அல்லாஹ் விவரிக்கின்றான்:
“இப்ராஹீம் (அலை) அவர்கள், என் இறைவா! தொழுகையை நிலைநிறுத்துபவனாய் என்னை ஆக்குவாயாக! என் வழித்தோன்றல்களிலிருந்தும் (தொழுகையை நிலைநாட்டுபவர்களை) தோற்றுவிப்பாயாக!” (திருக்குர்ஆன் 14:40) என்று பிராத்தனை செய்பவராக இப்ராஹீம் (அலை) அவர்கள் இருந்துள்ளார்.
அவரது புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களைக் குறித்து குறிப்பிடும்போது, “மேலும், அவர் தொழுகை மற்றும் ஜகாத்தை நிறைவேற்றுமாறு தம்முடைய குடும்பத்தாரைப் பணிப்பவராக இருந்தார்” (19:55) என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.
அதே பரம்பரையில் வந்த நமது நாயகம் (ஸல்) அவர்களிடம் அல்லாஹ் விடுக்கும் வேண்டுகோளைப் பாருங்கள்: “மேலும், தொழுகையைப் பேணி வருமாறு உம்முடைய குடும்பத்தார்க்கு நீர் கட்டளையிடுவீராக! நீரும் அதனை முறையாகக் கடைப்பிடிப்பீராக!”. (திருக்குர்ஆன் 20:132)
பெண்களை விட்டுவிட்டு ஆண்களைத் தீண்டும் ஒழுக்கச் சீர்கேட்டில் வீழ்ந்திருந்த ஒரு சமூகத்திற்கு இறைத்தூதராக அனுப்பப்பட்டவர் லூத் (அலை) அவர்கள். இரண்டு பெண் பிள்ளைகள் அவருக்கு. அல்லாஹ்விடம் அவர் தொடர்ந்து இவ்வாறு பிரார்த்தனை செய்கின்றார்: “என் இறைவனே! என்னையும் என்னுடைய குடும்பத்தாரையும் இவர்களின் தீவினைகளிலிருந்து காப்பாற்றுவாயாக!” (திருக்குர்ஆன் 26:169)
தமது குடும்பத்தினரை அந்த கேடுகெட்ட இழி செயலில் இருந்து காப்பாறுமாறு அல்லாஹ்விடம் அவர் பிரார்த்தனை புரிகின்றார் எனில் தமது குடும்பம் குறித்து அவர் எந்த அளவு கவலை கொண்டிருக்க வேண்டும் என்பது புரிகிறது.
இஸ்லாத்தின் எழுச்சிக்காக உழைக்கும் குடும்பம்
மூஸா (அலை) அவர்களுக்கு தூதுத்துவம் வழங்கப்பட்டபோது, அல்லாஹ்விடம் அவர் விடுத்த முதல் வேண்டுகோள் என்ன தெரியுமா?
அதனை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “மேலும், என் குடும்பத்தாரிலிருந்து ஒருவரை என்னுடைய சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக நியமிப்பாயாக; அவரைக் கொண்டு என் கையை வலுப்படுத்துவாயாக! மேலும், என் பணியில் அவரை துணைவராக்குவாயாக!” (20:29-32)
மூஸா (அலை) அவர்கள் குழந்தையாக இருந்தபோது அவரைப் பாதுகாப்பதற்கும், தயார்படுத்துவதற்கும் அவரது தாயாரும் சகோதரியும் அளித்த பங்களிப்புகள் குறித்து திருக்குர்ஆனின் 28 வது அத்தியாயம் (வசனங்கள் 10-13) விரிவாக விளக்குகிறது.
ஆனால் இன்றைய குடும்பங்களில் உள்ள கணவன், மனைவி, பிள்ளைகள் அனைவருமே மேற்குலகின் சிந்தனைத் தாக்கத்தால் பதிக்கப்படுகின்றனர். சர்வசாதாரணமாக மண விலக்கு, மாற்று மதத்தவர்களைத் திருமணம் செய்தல், பெற்றோர் பிள்ளை உறவில் விரிசல், ரத்த உறவுகள் பேணப்படாமை, உலக லாபங்களை மட்டுமே இலக்காகக் கொண்ட துணைகளைத் தெரிவு செய்தல், பிள்ளை வளர்ப்பில் கோளாறு முதலான பல அம்சங்கள் இன்றைய குடும்ப வாழ்வை சிதைத்து வருகின்றன.
இப்பிரச்சினைகளை மிகச்சரியாக இனம்கண்டு அவற்றுக்கான தீர்வுகள் குறித்து, சமூகத் தலைமைகள் சிந்திப்பது காலத்தின் கட்டாயமும் மார்க்கத்தின் கடமையும் ஆகும்.
வலிமையான குடும்பத்தின் லட்சியம்
பிள்ளைகளுக்கு நல்லொழுக்கப் பயிற்சி கொடுப்பது குடும்பத்தின் மற்றுமொரு முக்கிய நோக்கமாக உள்ளது. பிள்ளைகள், அல்லாஹ் நம்மிடம் ஒப்படைத்திருக்கும் அமானிதம். அவர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி கொடுப்பது நமது தலையாய கடமை. இல்லையேல் இவ்வுலகிலும் மறுமையிலும் பெரும் நஷ்டம் ஏற்படும்.
அல்லாஹ் கூறுகின்றான்: “இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும் கற்களும் எரிபொருள்களாகக்கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்”. (திருக்குர்ஆன் 66:6)
பிள்ளைகளிடம் ஏழு வயதில் தொழச் சொல்லுமாறு ஏன் இஸ்லாம் வலியுறுத்துகிறது? ஏனெனில் அந்த பருவத்தில் இருந்தே அவர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்பதால்.
நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
இஸ்லாமிய வாழ்வின் அடித்தளமே குடும்பம்தான். குடும்பத் தலைவனும் தலைவியும் மார்க்கம் காட்டும் பாதையில் நடக்கும்போது அது இஸ்லாம் விரும்பும் லட்சியக் குடும்பமாக அமையும். சிறந்த குடும்பங்கள் உருவாகாத நிலையில் சிறந்த சமூகத்தை உருவாக்க முடியாது.
இலக்கை நோக்கிய குடும்பம்
இறைவன் உருவாக்கிய குடும்பம் எனும் அமைப்பு அவனது வழிகாட்டலுக்கும் திருப்திக்கும் ஏற்றவாறு இவ்வுலகில் செயல்பட வேண்டும் என்று அவன் விரும்புகிறான்.
மக்காவில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சிறுபான்மையினராக வாழ்ந்துகொண்டிருந்த இறைநம்பிக்கையாளர்களின் ஆன்மிக வாழ்வு எவ்வாறு அமைந்து இருந்தது என்பதை திருக்குர்ஆனின் பின்வரும் வசனம் பிரதிபலிக்கிறது:
“மேலும், அவர்கள் இறைஞ்சிய வண்ணம் இருப்பார்கள். எங்கள் இறைவனே! எங்கள் மனைவிமார்களையும், எங்கள் குழந்தைகளையும், எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக”. (திருக்குர்ஆன் 25:74)
அன்றைய மக்கத்து முஸ்லிம்களின் லட்சியம் நீண்டதாகவும், விசாலமானதாகவும் இருந்துள்ளது. தமது வாழ்நாளில் குடும்பத்தினர் மூலம் அடையும் கண்குளிர்ச்சியில் மட்டும் அவர்கள் திருப்தி அடையவில்லை. மாறாக தங்களது மறைவுக்குப் பிறகு வரவிருக்கும் முஸ்லிம் சந்ததிகளுக்குப் பொறுப்பேற்கும் தலைமைத்துவத்தையும் கேட்கிறார்கள்.
நபிமார்கள் தங்களது குடும்ப விஷயத்தில் எவ்வளவு தூரம் கவனம் செலுத்தியிருந்தனர் என்பதை ஆரம்ப கால அத்தியாயங்களில் அல்லாஹ் விவரிக்கின்றான்:
“இப்ராஹீம் (அலை) அவர்கள், என் இறைவா! தொழுகையை நிலைநிறுத்துபவனாய் என்னை ஆக்குவாயாக! என் வழித்தோன்றல்களிலிருந்தும் (தொழுகையை நிலைநாட்டுபவர்களை) தோற்றுவிப்பாயாக!” (திருக்குர்ஆன் 14:40) என்று பிராத்தனை செய்பவராக இப்ராஹீம் (அலை) அவர்கள் இருந்துள்ளார்.
அவரது புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களைக் குறித்து குறிப்பிடும்போது, “மேலும், அவர் தொழுகை மற்றும் ஜகாத்தை நிறைவேற்றுமாறு தம்முடைய குடும்பத்தாரைப் பணிப்பவராக இருந்தார்” (19:55) என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.
அதே பரம்பரையில் வந்த நமது நாயகம் (ஸல்) அவர்களிடம் அல்லாஹ் விடுக்கும் வேண்டுகோளைப் பாருங்கள்: “மேலும், தொழுகையைப் பேணி வருமாறு உம்முடைய குடும்பத்தார்க்கு நீர் கட்டளையிடுவீராக! நீரும் அதனை முறையாகக் கடைப்பிடிப்பீராக!”. (திருக்குர்ஆன் 20:132)
பெண்களை விட்டுவிட்டு ஆண்களைத் தீண்டும் ஒழுக்கச் சீர்கேட்டில் வீழ்ந்திருந்த ஒரு சமூகத்திற்கு இறைத்தூதராக அனுப்பப்பட்டவர் லூத் (அலை) அவர்கள். இரண்டு பெண் பிள்ளைகள் அவருக்கு. அல்லாஹ்விடம் அவர் தொடர்ந்து இவ்வாறு பிரார்த்தனை செய்கின்றார்: “என் இறைவனே! என்னையும் என்னுடைய குடும்பத்தாரையும் இவர்களின் தீவினைகளிலிருந்து காப்பாற்றுவாயாக!” (திருக்குர்ஆன் 26:169)
தமது குடும்பத்தினரை அந்த கேடுகெட்ட இழி செயலில் இருந்து காப்பாறுமாறு அல்லாஹ்விடம் அவர் பிரார்த்தனை புரிகின்றார் எனில் தமது குடும்பம் குறித்து அவர் எந்த அளவு கவலை கொண்டிருக்க வேண்டும் என்பது புரிகிறது.
இஸ்லாத்தின் எழுச்சிக்காக உழைக்கும் குடும்பம்
மூஸா (அலை) அவர்களுக்கு தூதுத்துவம் வழங்கப்பட்டபோது, அல்லாஹ்விடம் அவர் விடுத்த முதல் வேண்டுகோள் என்ன தெரியுமா?
அதனை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “மேலும், என் குடும்பத்தாரிலிருந்து ஒருவரை என்னுடைய சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக நியமிப்பாயாக; அவரைக் கொண்டு என் கையை வலுப்படுத்துவாயாக! மேலும், என் பணியில் அவரை துணைவராக்குவாயாக!” (20:29-32)
மூஸா (அலை) அவர்கள் குழந்தையாக இருந்தபோது அவரைப் பாதுகாப்பதற்கும், தயார்படுத்துவதற்கும் அவரது தாயாரும் சகோதரியும் அளித்த பங்களிப்புகள் குறித்து திருக்குர்ஆனின் 28 வது அத்தியாயம் (வசனங்கள் 10-13) விரிவாக விளக்குகிறது.
ஆனால் இன்றைய குடும்பங்களில் உள்ள கணவன், மனைவி, பிள்ளைகள் அனைவருமே மேற்குலகின் சிந்தனைத் தாக்கத்தால் பதிக்கப்படுகின்றனர். சர்வசாதாரணமாக மண விலக்கு, மாற்று மதத்தவர்களைத் திருமணம் செய்தல், பெற்றோர் பிள்ளை உறவில் விரிசல், ரத்த உறவுகள் பேணப்படாமை, உலக லாபங்களை மட்டுமே இலக்காகக் கொண்ட துணைகளைத் தெரிவு செய்தல், பிள்ளை வளர்ப்பில் கோளாறு முதலான பல அம்சங்கள் இன்றைய குடும்ப வாழ்வை சிதைத்து வருகின்றன.
இப்பிரச்சினைகளை மிகச்சரியாக இனம்கண்டு அவற்றுக்கான தீர்வுகள் குறித்து, சமூகத் தலைமைகள் சிந்திப்பது காலத்தின் கட்டாயமும் மார்க்கத்தின் கடமையும் ஆகும்.
வலிமையான குடும்பத்தின் லட்சியம்
பிள்ளைகளுக்கு நல்லொழுக்கப் பயிற்சி கொடுப்பது குடும்பத்தின் மற்றுமொரு முக்கிய நோக்கமாக உள்ளது. பிள்ளைகள், அல்லாஹ் நம்மிடம் ஒப்படைத்திருக்கும் அமானிதம். அவர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி கொடுப்பது நமது தலையாய கடமை. இல்லையேல் இவ்வுலகிலும் மறுமையிலும் பெரும் நஷ்டம் ஏற்படும்.
அல்லாஹ் கூறுகின்றான்: “இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும் கற்களும் எரிபொருள்களாகக்கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்”. (திருக்குர்ஆன் 66:6)
பிள்ளைகளிடம் ஏழு வயதில் தொழச் சொல்லுமாறு ஏன் இஸ்லாம் வலியுறுத்துகிறது? ஏனெனில் அந்த பருவத்தில் இருந்தே அவர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்பதால்.
நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
நாகர்கோவில் கோட்டார் பாவா காசிம் வலியுல்லா பள்ளிவாசலில் கோமான் ஹஸ்ரத் பாவா காசிம் வலியுல்லா ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகர்கோவில் கோட்டார் பாவா காசிம் வலியுல்லா பள்ளிவாசலில் கோமான் ஹஸ்ரத் பாவா காசிம் வலியுல்லா ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி நகர வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதன்பிறகு கோட்டாறு இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்ட் தலைவர் ஹாஜி பாவலர் சித்திக் பிறை கொடியை ஏற்றி வைத்தார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழா 25-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் மத குருமார்கள் மவுலூது ஓதுவார்கள். 24-ந்தேதி பிறைக்கொடியுடன் யானை ஊர்வலம் நடைபெறுகிறது. 25-ந்தேதி காலை 8 மணிக்கு வீடுகள் தோறும் நேர்ச்சை வழங்கப்பட உள்ளது.
இந்த விழா 25-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் மத குருமார்கள் மவுலூது ஓதுவார்கள். 24-ந்தேதி பிறைக்கொடியுடன் யானை ஊர்வலம் நடைபெறுகிறது. 25-ந்தேதி காலை 8 மணிக்கு வீடுகள் தோறும் நேர்ச்சை வழங்கப்பட உள்ளது.
திண்டுக்கல் நாகல்நகரில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிவாசலில் நபிகள் நாயகம் பெயரில் கந்தூரி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் 25 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
திண்டுக்கல் நாகல்நகரில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிவாசலில் நேற்று நபிகள் நாயகம் பெயரில் கந்தூரி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் அனைத்து மதத்தினருக்கும் பிரியாணி விருந்து வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று பள்ளிவாசல் வளாகத்தில் 2½ டன் அரிசி மற்றும் இறைச்சி ஆகியவை மூலம் பிரியாணி சமைக்கப்பட்டது. பின்னர் அந்த பிரியாணியை திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கு பள்ளிவாசல் நிர்வாகிகள் வழங்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை நாகல்நகர் பள்ளிவாசல் தலைவர் அஹமது புகாரி, செயலாளர் அலாவுதீன், பொருளாளர் சவுக்கத் அலி உள்பட பலர் செய்திருந்தனர்.
அதன்படி நேற்று பள்ளிவாசல் வளாகத்தில் 2½ டன் அரிசி மற்றும் இறைச்சி ஆகியவை மூலம் பிரியாணி சமைக்கப்பட்டது. பின்னர் அந்த பிரியாணியை திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கு பள்ளிவாசல் நிர்வாகிகள் வழங்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை நாகல்நகர் பள்ளிவாசல் தலைவர் அஹமது புகாரி, செயலாளர் அலாவுதீன், பொருளாளர் சவுக்கத் அலி உள்பட பலர் செய்திருந்தனர்.
தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா ஆண்டு விழா இன்று (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா 18 ஆயிரம் ஞானபுகழ்ச்சி பாடல்களை எழுதியுள்ளார். இவரது ஆண்டு விழா தக்கலை அஞ்சுவன்னம் பீர் முகமதியா முஸ்லிம் அசோசியேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா இன்று (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
18-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை மார்க்கப் பேருரை நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து அறிஞர்கள் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்கள். 22-ந்தேதி பீரப்பா பாடிய ரோசுமீசாக்கு மாலை நூலின் வெளியீடு நடைபெறுகிறது.
இதில் பலர் கலந்து கொண்டு மார்க்க பேருரையாற்ற உள்ளனர். வருகிற 26-ந்தேதி ஞானப்புகழ்ச்சி பாடல் பாடும் நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நடைபெறுகிறது. 27-ந்்தேதி மாலை 4.30 மணிக்கு நேர்ச்சை வழங்கப்படுகிறது. மார்ச் 3-ந் தேதி சியாரத் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை நிர்வாக குழு தலைவர் அப்துல்ஜப்பார் தலைமையில் துணைத்தலைவர் முகமது சலீம், செயலாளர் ஹமீம் முஸ்தபா, பொருளாளர் முகமது ரபீக் மற்றும் ஷாகிர்அலி தலைமையிலான விழாக்குழுவினரும் செய்து வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா இன்று (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
18-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை மார்க்கப் பேருரை நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து அறிஞர்கள் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்கள். 22-ந்தேதி பீரப்பா பாடிய ரோசுமீசாக்கு மாலை நூலின் வெளியீடு நடைபெறுகிறது.
இதில் பலர் கலந்து கொண்டு மார்க்க பேருரையாற்ற உள்ளனர். வருகிற 26-ந்தேதி ஞானப்புகழ்ச்சி பாடல் பாடும் நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நடைபெறுகிறது. 27-ந்்தேதி மாலை 4.30 மணிக்கு நேர்ச்சை வழங்கப்படுகிறது. மார்ச் 3-ந் தேதி சியாரத் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை நிர்வாக குழு தலைவர் அப்துல்ஜப்பார் தலைமையில் துணைத்தலைவர் முகமது சலீம், செயலாளர் ஹமீம் முஸ்தபா, பொருளாளர் முகமது ரபீக் மற்றும் ஷாகிர்அலி தலைமையிலான விழாக்குழுவினரும் செய்து வருகின்றனர்.






