search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தர்கா
    X
    தர்கா

    மேலப்பாளையம் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் தர்கா கந்தூரி விழா நாளை மறுநாள் நடக்கிறது

    மேலப்பாளையம் செய்யது அப்துர் ரகுமான் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் தர்காவில் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
    மேலப்பாளையம் செய்யது அப்துர் ரகுமான் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் தர்கா கந்தூரி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    அன்று மாலை 5 மணிக்கு தர்காவில் இருந்து கொடி எடுத்து ஞானியாரப்பா பெரிய தெரு, சின்னத்தெருவை சுற்றி வந்து இரவு 8 மணிக்கு தர்காவில் கொடியேற்றப்படுகிறது. இரவு 9.30 மணியில் இருந்து 11.30 மணிவரை திக்ரு மஜ்லீஸ் (தியானம்), ராத்தீபு சரீபு (இறைவேதம் படித்தல்) ஆகியவை நடைபெற உள்ளது.
    Next Story
    ×