என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திட்டுவிளை வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி பெருவிழா தொடங்கியது
Byமாலை மலர்4 March 2021 4:56 AM GMT (Updated: 4 March 2021 4:56 AM GMT)
திட்டுவிளை வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி பெருவிழா தொடங்கியது. 11-ந்தேதி கொடியேற்றம் நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தர்காக்களில் பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் அவுலியா தர்காவும் ஒன்று. இந்த தர்காவில் வருடாந்திரப்பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்தூரி பெருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.
தினமும் மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல் மற்றும் நேர்ச்சை வழங்குதல் நடைபெறுகிறது.
வருகிற 11-ந் தேதி இரவு 8 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து இஸ்லாமிய மார்க்க பேருரை நடைபெறுகிறது. இதற்கு ஜமாத் தலைவர் மைதீன்பிள்ளை தலைமை தாங்குகிறார். முகம்மது ஹனீபா மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இதில் குளச்சல் செய்யது மீர் காசிம் ஆலிம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். தர்கா நிர்வாக தலைவர் உதுமான்மைதீன் நன்றி கூறுகிறார்.
12-ந் தேதி காலை 9 மணிக்கு நேர்ச்சை வழங்குதலும், மாலை 6.30 மணிக்கு இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
14-ந் தேதி காலை 9 மணிக்கு மூன்றாம் ஜியாரத் நேர்ச்சை வழங்குதல் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை திட்டுவிளை, உதுமான்லெப்பைசாகிபு, சுன்னத், ஜமாத் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் தர்கா நிர்வாக பொறுப்பாளர்களான முகம்மது ரபீக், ஷேக் முகம்மது, பக்கீர் மைதீன் மற்றும் பொறுப்பாளர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
தினமும் மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல் மற்றும் நேர்ச்சை வழங்குதல் நடைபெறுகிறது.
வருகிற 11-ந் தேதி இரவு 8 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து இஸ்லாமிய மார்க்க பேருரை நடைபெறுகிறது. இதற்கு ஜமாத் தலைவர் மைதீன்பிள்ளை தலைமை தாங்குகிறார். முகம்மது ஹனீபா மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இதில் குளச்சல் செய்யது மீர் காசிம் ஆலிம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். தர்கா நிர்வாக தலைவர் உதுமான்மைதீன் நன்றி கூறுகிறார்.
12-ந் தேதி காலை 9 மணிக்கு நேர்ச்சை வழங்குதலும், மாலை 6.30 மணிக்கு இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
14-ந் தேதி காலை 9 மணிக்கு மூன்றாம் ஜியாரத் நேர்ச்சை வழங்குதல் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை திட்டுவிளை, உதுமான்லெப்பைசாகிபு, சுன்னத், ஜமாத் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் தர்கா நிர்வாக பொறுப்பாளர்களான முகம்மது ரபீக், ஷேக் முகம்மது, பக்கீர் மைதீன் மற்றும் பொறுப்பாளர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X