என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
காட்டுமன்னார்கோவில் அருகே புனித ஆக்னெஸ் அன்னை ஆலய தேர்பவனி
Byமாலை மலர்10 Feb 2021 3:31 AM GMT (Updated: 10 Feb 2021 3:31 AM GMT)
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள புனித ஆக்னெஸ் அன்னை ஆலயத்தில் தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே இருதயபுரம் கிராமத்தில் புனித ஆக்னெஸ் அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்பவனி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து தினந்தோறும் திருப்பலி மற்றும் ஜெபமாலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் பவனி விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி ஆலயத்தில் திருப்பலி நடந்தது.
பின்னர் இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித ஆக்னெஸ் அன்னை சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பங்கு தந்தை ஸ்டீபன் ராஜ் தேர் பவனியை தொடங்கி வைத்தார். தேர்பவனி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள், கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், உள்பட பலர் செய்திருந்தனர்.
அதனை தொடர்ந்து தினந்தோறும் திருப்பலி மற்றும் ஜெபமாலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் பவனி விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி ஆலயத்தில் திருப்பலி நடந்தது.
பின்னர் இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித ஆக்னெஸ் அன்னை சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பங்கு தந்தை ஸ்டீபன் ராஜ் தேர் பவனியை தொடங்கி வைத்தார். தேர்பவனி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள், கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், உள்பட பலர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X