என் மலர்
கிறித்தவம்
இயேசு கூறிய உவமைகளில், தொலைந்த வெள்ளிக்காசும், தொலைந்த ஆடு உவமையும் மிக முக்கியமானவை. அதுபற்றி இயேசு கூறியதை பார்ப்போம்.
இயேசு கூறிய உவமைகளில், தொலைந்த வெள்ளிக்காசும், தொலைந்த ஆடு உவமையும் மிக முக்கியமானவை. அதுபற்றி இயேசு கூறியதை பார்ப்போம்.
“இல்லத் தலைவி ஒருவரிடம் பத்துத் திராக்மா வெள்ளி நாணயங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று காணாமல் போய்விட்டது. அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி, வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும் வரை கவனமாகத் தேடினார். அதைக் கண்டுபிடித்ததும், அவர் தன் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழ்ந்து கொண்டாடுங்கள். ஏனெனில் காணாமல் போன எனது திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்று கூறு வார். அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன். மானிட மகன் பாவிகளை மீட்கவே வந்தார்” என்றார். இதற்கு தொடர்ந்து இயேசு இரண்டாம் உவமையைக் கூறினார்.
“உங்களில் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமல்போனால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுவிட்டு, காணாமல்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும் வரை அதைத் தேடி அலையமாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அக்கம் பக்கத்து வீட்டினரையும் அழைத்து, ‘என்னோடு மகிழ்ந்து கொண்டாடுங்கள். ஏனெனில் காணாமல்போன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார்.
அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து வானுலகில் பெரு மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். அவ்வாறே இவர்களில் ஒருவர்கூட நெறி தவறிப் போகக் கூடாது என்பதே நம் விண்ணகத் தந்தையின் திருவுளம்.”
இரண்டு உவமைகளில் வெள்ளி நாணயம், ஆடு ஆகியவை காணாமல் போய்விடுகின்றன. ஆட்டைத் தொலைத்த மேய்ப்பன், “எனது 100 ஆடுகளில் ஒன்றுதானே காணாமல்போனது, இன்னும் எனக்கு 99 ஆடுகள் இருக்கின்றனவே, காணாமல்போன ஒன்று இல்லாவிட்டால் எனக்கு எந்தப் பெரிய இழப்பில்லை” என்று கூறவில்லை. அதேபோல் அந்த இல்லத் தலைவி, “என்னிடம்தான் இன்னும் 9 வெள்ளிக்காசுகள் இருக்கின்றனவே காணாமல்போன ஒரேயொரு திராக்மா பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?” என்று கேட்கவில்லை. மாறாக மேய்ப்பன் தன்னிடம் ஒரேவொரு ஆடு மட்டுமே இருப்பதாக எண்ணி, காணாமல்போன அந்த ஆட்டுக்காகக் கல்லிலும் முள்ளிலும் தேடி அலைந் தான்.
இல்லத்தலைவியும் தன்னிடம் வேறு திராக்மாக்களே இல்லை என்பதுபோல் காணாமல்போன அந்த ஒரு காசுக்காக வருத்தப்பட்டு கையில் விளக்கை ஏற்றிக்கொண்டு பொறுப்புடன் அதைத் தேடி எடுத்தாள்.
இந்த இரண்டு உவமைகளுக்குப் பின்னும் இயேசு சொன்ன உறுதியான வார்த்தைகள் “மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து வானுலகில் பெரு மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” ஆகவே, மேய்ப்பனின் அக்கறையும், அந்த இல்லத் தலைவியின் அக்கறையும் கடவுளாகிய பரலோகத் தந்தையின் அக்கறையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. கடவுள், மனிதர்கள் மீதான தன் அக்கறையையும், அன்பையும் தன் மகன் இயேசுவின் வழியாக வெளிப்படுத்தியதை இந்த இரு உவமைகளும் நமக்குச் சுட்டுகின்றன.
“இல்லத் தலைவி ஒருவரிடம் பத்துத் திராக்மா வெள்ளி நாணயங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று காணாமல் போய்விட்டது. அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி, வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும் வரை கவனமாகத் தேடினார். அதைக் கண்டுபிடித்ததும், அவர் தன் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழ்ந்து கொண்டாடுங்கள். ஏனெனில் காணாமல் போன எனது திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்று கூறு வார். அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன். மானிட மகன் பாவிகளை மீட்கவே வந்தார்” என்றார். இதற்கு தொடர்ந்து இயேசு இரண்டாம் உவமையைக் கூறினார்.
“உங்களில் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமல்போனால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுவிட்டு, காணாமல்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும் வரை அதைத் தேடி அலையமாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அக்கம் பக்கத்து வீட்டினரையும் அழைத்து, ‘என்னோடு மகிழ்ந்து கொண்டாடுங்கள். ஏனெனில் காணாமல்போன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார்.
அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து வானுலகில் பெரு மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். அவ்வாறே இவர்களில் ஒருவர்கூட நெறி தவறிப் போகக் கூடாது என்பதே நம் விண்ணகத் தந்தையின் திருவுளம்.”
இரண்டு உவமைகளில் வெள்ளி நாணயம், ஆடு ஆகியவை காணாமல் போய்விடுகின்றன. ஆட்டைத் தொலைத்த மேய்ப்பன், “எனது 100 ஆடுகளில் ஒன்றுதானே காணாமல்போனது, இன்னும் எனக்கு 99 ஆடுகள் இருக்கின்றனவே, காணாமல்போன ஒன்று இல்லாவிட்டால் எனக்கு எந்தப் பெரிய இழப்பில்லை” என்று கூறவில்லை. அதேபோல் அந்த இல்லத் தலைவி, “என்னிடம்தான் இன்னும் 9 வெள்ளிக்காசுகள் இருக்கின்றனவே காணாமல்போன ஒரேயொரு திராக்மா பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?” என்று கேட்கவில்லை. மாறாக மேய்ப்பன் தன்னிடம் ஒரேவொரு ஆடு மட்டுமே இருப்பதாக எண்ணி, காணாமல்போன அந்த ஆட்டுக்காகக் கல்லிலும் முள்ளிலும் தேடி அலைந் தான்.
இல்லத்தலைவியும் தன்னிடம் வேறு திராக்மாக்களே இல்லை என்பதுபோல் காணாமல்போன அந்த ஒரு காசுக்காக வருத்தப்பட்டு கையில் விளக்கை ஏற்றிக்கொண்டு பொறுப்புடன் அதைத் தேடி எடுத்தாள்.
இந்த இரண்டு உவமைகளுக்குப் பின்னும் இயேசு சொன்ன உறுதியான வார்த்தைகள் “மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து வானுலகில் பெரு மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” ஆகவே, மேய்ப்பனின் அக்கறையும், அந்த இல்லத் தலைவியின் அக்கறையும் கடவுளாகிய பரலோகத் தந்தையின் அக்கறையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. கடவுள், மனிதர்கள் மீதான தன் அக்கறையையும், அன்பையும் தன் மகன் இயேசுவின் வழியாக வெளிப்படுத்தியதை இந்த இரு உவமைகளும் நமக்குச் சுட்டுகின்றன.
தூய அலங்கார அன்னை பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு அலங்கார அன்னையின் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி நடைபெற்றது. இந்த தேர் ஆலயத்தை சுற்றி வந்தது.
கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள தூய அலங்கார அன்னை பேராலய ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முதன்மை குரு அமிர்தசாமி கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்தார். தேர்பவனியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
திருப்பலியை தொடர்ந்து இரவு 8 மணிக்கு அலங்கார அன்னையின் அலங்கரிக்கப்பட்ட தேர் ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டது. கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி பிரார்த்தனை செய்து தேர்பவனியை தொடங்கி வைத்தார். இந்த தேர் ஆலயத்தை சுற்றி வந்தது. இதற்கான ஏற்பாடுகளை அருட்தந்தையர்கள் மற்றும் அருட் சகோதரிகள் செய்திருந்தனர்.
திருப்பலியை தொடர்ந்து இரவு 8 மணிக்கு அலங்கார அன்னையின் அலங்கரிக்கப்பட்ட தேர் ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டது. கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி பிரார்த்தனை செய்து தேர்பவனியை தொடங்கி வைத்தார். இந்த தேர் ஆலயத்தை சுற்றி வந்தது. இதற்கான ஏற்பாடுகளை அருட்தந்தையர்கள் மற்றும் அருட் சகோதரிகள் செய்திருந்தனர்.
ஒரு தாயின் அன்புக்கு ஒரு குழந்தை எப்படி ஓடிவந்து அம்மாவை தழுவிக்கொண்டதோ, அதைப்போல நம்முடைய தேவனும் நம்மை அன்பின் கிருபையினால் அழைக்கிறார்.
இந்த தவக்காலத்தில் தேவன் நம் மீது வைத்துள்ள கிருபையின் அழைப்பு குறித்து சற்று தியானித்து பார்ப்போம். ஒரு சமயம் சில தொழிலாளர்கள் பாறை ஒன்றை வெடி வைத்து தகர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்காக பாறையை குடைந்து துவாரமிட்டனர். பின்னர் வெடிமருந்தை அதன் உள்ளே வைத்து, நீள திரியின் மூலம் நெருப்பை பற்ற வைத்தனர். பாறை எப்போது வெடித்து சிதறும் என்று அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக ஒரு குழந்தை அந்த பாறையை நோக்கி ஓடியது. இதை பார்த்ததும் அனைவரும் அந்த பாறையில் வெடி வைக்கப்பட்டுள்ளதே இந்த குழந்தை அங்கு ஓடுகிறதே என்று திகைத்து நின்றனர். ஏனென்றால் பாறையில் வைத்துள்ள வெடி எந்த வினாடி வேண்டுமானாலும் வெடித்து பாறை கற்கள் வந்து விழலாம். எனவே குழந்தையை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. ஆனால் அந்த குழந்தையின் தாயோ ஒரே வினாடியில் குழந்தையின் நிலைமையை புரிந்துகொண்டாள். உடனே அந்த தாய் தான் குழந்தையை நோக்கி ஓடினாள். பிள்ளை இன்னும் குறும்பாக அதிக தூரம் ஓடிவிடும் என்பதை உணர்ந்து, உடனே முழங்கால்படியிட்டாள். குழந்தையை நோக்கி சிரித்தவாறே இருகரம் நீட்டினாள். பாப்பா இங்கே அம்மாவிடம் ஓடிவா பார்க்கலாம் என்று அன்போடு அழைத்தார். உடனே அந்த குழந்தை தன் அம்மாவிடம் ஓடி வந்து அம்மாவை தழுவிக்கொண்டது. அடுத்த வினாடி அந்த பாறை வெடித்து சிதறியது.
என்ன ஆச்சரியம் பாருங்கள்.
ஆம், ஒரு தாயின் அன்புக்கு ஒரு குழந்தை எப்படி ஓடிவந்து அம்மாவை தழுவிக்கொண்டதோ, அதைப்போல நம்முடைய தேவனும் நம்மை அன்பின் கிருபையினால் அழைக்கிறார். அந்த கல்வாரி சிலுவையில் தொங்கியபோதும் கூட தன் இருகரம் விரித்து நம்மை பார்த்து அன்போடு, வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று அழைக்கிறார். இதைத்தான் வேதாகமத்தில் எபேசியர் 2-ம் அதிகாரம் 8-ம் வசனத்திலே, கிருபையினாலே ரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு என்று சொல்லப்பட்டுள்ளது.
ஆம் தேவனுடைய பிள்ளைகளே அவரது அன்பின் கரத்திற்குள் ஓடி அடைக்கலம் பெறுவோம். இந்த தவக்காலத்தில் அவருடைய கிருபையின் அழைப்பை ஏற்று வழி நடப்போம்.
ரபிபிரபு, நற்செய்தி ஊழியங்கள், காங்கேயம்.
அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக ஒரு குழந்தை அந்த பாறையை நோக்கி ஓடியது. இதை பார்த்ததும் அனைவரும் அந்த பாறையில் வெடி வைக்கப்பட்டுள்ளதே இந்த குழந்தை அங்கு ஓடுகிறதே என்று திகைத்து நின்றனர். ஏனென்றால் பாறையில் வைத்துள்ள வெடி எந்த வினாடி வேண்டுமானாலும் வெடித்து பாறை கற்கள் வந்து விழலாம். எனவே குழந்தையை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. ஆனால் அந்த குழந்தையின் தாயோ ஒரே வினாடியில் குழந்தையின் நிலைமையை புரிந்துகொண்டாள். உடனே அந்த தாய் தான் குழந்தையை நோக்கி ஓடினாள். பிள்ளை இன்னும் குறும்பாக அதிக தூரம் ஓடிவிடும் என்பதை உணர்ந்து, உடனே முழங்கால்படியிட்டாள். குழந்தையை நோக்கி சிரித்தவாறே இருகரம் நீட்டினாள். பாப்பா இங்கே அம்மாவிடம் ஓடிவா பார்க்கலாம் என்று அன்போடு அழைத்தார். உடனே அந்த குழந்தை தன் அம்மாவிடம் ஓடி வந்து அம்மாவை தழுவிக்கொண்டது. அடுத்த வினாடி அந்த பாறை வெடித்து சிதறியது.
என்ன ஆச்சரியம் பாருங்கள்.
ஆம், ஒரு தாயின் அன்புக்கு ஒரு குழந்தை எப்படி ஓடிவந்து அம்மாவை தழுவிக்கொண்டதோ, அதைப்போல நம்முடைய தேவனும் நம்மை அன்பின் கிருபையினால் அழைக்கிறார். அந்த கல்வாரி சிலுவையில் தொங்கியபோதும் கூட தன் இருகரம் விரித்து நம்மை பார்த்து அன்போடு, வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று அழைக்கிறார். இதைத்தான் வேதாகமத்தில் எபேசியர் 2-ம் அதிகாரம் 8-ம் வசனத்திலே, கிருபையினாலே ரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு என்று சொல்லப்பட்டுள்ளது.
ஆம் தேவனுடைய பிள்ளைகளே அவரது அன்பின் கரத்திற்குள் ஓடி அடைக்கலம் பெறுவோம். இந்த தவக்காலத்தில் அவருடைய கிருபையின் அழைப்பை ஏற்று வழி நடப்போம்.
ரபிபிரபு, நற்செய்தி ஊழியங்கள், காங்கேயம்.
வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை அடுத்த வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கியமாதா பேராலயம் அமைந்துள்ளது. கிறிஸ்தவர்களால் `கீழை நாடுகளின் லூர்து நகரம்' என அழைக்கப்படும் சிறப்புகள் வாய்ந்த இந்த பேராலயத்தில் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் செப்.7ந்தேதி பெரிய தேர் விழாவும், செப்.8ந்தேதி கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கம் காரணமாக நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாகை அடுத்த வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கியமாதா பேராலயம் அமைந்துள்ளது. கிறிஸ்தவர்களால் `கீழை நாடுகளின் லூர்து நகரம்' என அழைக்கப்படும் சிறப்புகள் வாய்ந்த இந்த பேராலயத்தில் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் செப்.7ந்தேதி பெரிய தேர் விழாவும், செப்.8ந்தேதி கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கம் காரணமாக நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு தேவரீர் செய்துவரும் சகல உபகாரங்களையும், சொல்லமுடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கிறோம்.
இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு தேவரீர் செய்துவரும் சகல உபகாரங்களையும், சொல்லமுடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கிறோம்.
நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து இப்போதும் எப்போதும் உம்முடைய திருஇருதய நிழலில் இளைப்பாறச் செய்தருளும்.
தவறி எங்களில் எவரேனும் உமது இருதயத்தை நோகச்செய்திருந்தால் அவர் குற்றத்திற்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திருஇருதயத்தை பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும்.
இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், விருந்தாப்பியர்களுக்கு ஊன்றுகோலும், விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்கு, தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள் அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டிலும் தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக.
இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமே! சிறுபிள்ளைகளை எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே. இந்த விசாரணையிலுள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும். அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும், தெய்வ பயத்தையும் வளரச்செய்யும். ஜீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்க மன்றாடுகிறோம். திவ்விய இயேசுவே! முறை முறையாய் உமது திருச்சிநேகத்தில் ஜீவித்து, மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாறக் கிருபை புரிந்தருளும். – ஆமென்
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து இப்போதும் எப்போதும் உம்முடைய திருஇருதய நிழலில் இளைப்பாறச் செய்தருளும்.
தவறி எங்களில் எவரேனும் உமது இருதயத்தை நோகச்செய்திருந்தால் அவர் குற்றத்திற்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திருஇருதயத்தை பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும்.
இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், விருந்தாப்பியர்களுக்கு ஊன்றுகோலும், விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்கு, தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள் அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டிலும் தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக.
இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமே! சிறுபிள்ளைகளை எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே. இந்த விசாரணையிலுள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும். அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும், தெய்வ பயத்தையும் வளரச்செய்யும். ஜீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்க மன்றாடுகிறோம். திவ்விய இயேசுவே! முறை முறையாய் உமது திருச்சிநேகத்தில் ஜீவித்து, மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாறக் கிருபை புரிந்தருளும். – ஆமென்
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
சிலுவையின் மரண ஆக்கினையின் நேரத்திலும் தம்மை சிலுவையில் அறைந்தவர்களையும், தண்டனையை நிறைவேற்றின அதிகாரிகளையும், சிலுவையில் அறையும்படி அதிகாரிகளை நிர்பந்தம் பண்ணின ஜனங்களையும் மன்னிக்கும்படி வேண்டுதல் செய்கிறவராக காணப்பட்டார்.
தவக்காலம் என்று உலகம் முழுவதும் இருக்கிற கிறிஸ்தவர்களால் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கிற இந்த தவசு நாட்களில் அவர்தாமே தன்னுடைய வாழ்வில் போதித்த, கடைப்பிடித்த சத்தியங்களை நாம் தியானிப்பது நல்லது. மன்னிப்பு என்ற மிகப்பெரும் சத்தியத்தை மிக ஆணித்தரமாக தம் போதனையில் காண்பித்தவர் இயேசு கிறிஸ்து. மனித உரிமைகளைப்பற்றி பேசுகிற இன்றைய நாட்களுக்கும், கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று மனிதன் தன் எதிராளியிடம் கோபத்தை வெளிப்படுத்திய அந்த நாட்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.
மிகக் கடுமையான அந்நாட்களிலேயே மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்(மத்:6:44). உன் சகோதரன் உனக்கு விரோதமாய் குற்றஞ்செய்தால், அவனை கடிந்துகொண்டு அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக’ என்றும் தம்மைப் பின்பற்றினவர்களுக்கு இயேசு போதித்தார்.
அனேகம்பேர் கூறும் நல்ல போதனைகளை நாம் அவர்களது பேச்சிலே கேட்கலாமே தவிர அவர்களது வாழ்வில் காண இயலாது. ஆனால் சிலுவையின் மரணபரியந்தம் தம் உபதேசங்களை நடைமுறையில் காண்பித்தவர் இயேசு கிறிஸ்து. கொல்கதா மலையில் சிலுவையில் அறையப்பட்டவராக் தொங்கிக்கொண்டிருந்தபோது தம்மை சிலுவையில் அறைந்த ஜனங்களுக்காக ‘பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்’ என்று அவர் வேண்டுதல் செய்தார்.
சிலுவையின் மரண ஆக்கினையின் நேரத்திலும் தம்மை சிலுவையில் அறைந்தவர்களையும், தண்டனையை நிறைவேற்றின அதிகாரிகளையும், சிலுவையில் அறையும்படி அதிகாரிகளை நிர்பந்தம் பண்ணின ஜனங்களையும் மன்னிக்கும்படி வேண்டுதல் செய்கிறவராக காணப்பட்டார். உறவினர்கள், நண்பர்கள், சொந்த குடும்பத்தினர் என்று யாராக இருந்தாலும் சரி, அவர்கள் செய்த குற்றங்களை மன்னியுங்கள். அந்த மன்னிப்பு உங்கள் உள்ளத்தில் எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காத சமாதானத்தை உங்களுக்குப் பெற்றுத்தரும். உங்களுக்கு விரோதமாய் தவறு செய்தவர்கள் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் மன்னிக்கத் தயங்காதிருங்கள். பிறர் குற்றம் மன்னித்தோம், ஆதலால் எங்கள் குறைகளை எங்களுக்கு மன்னியும் என்று நாம் தேவனிடத்தில் இரக்கம் கேட்கும் நேரங்களில் தேவனும் நமக்கு இரங்குவார். சிலுவையில் கிறிஸ்து அடைந்த பாடுகளையும், வேதனைகளையும் போல நம்மை ஒருவரும் வேதனைப்படுத்த இயலாது.ஆனால் அவ்வளவு உபத்திரவத்தைக் கொடுத்தவர்களைக் கூட இயேசுவானவர் மன்னித்தாரே. இந்த தவசு நாட்களில் நாமும் பிறர் குற்றங்களை மன்னிப்போம். மனமகிழ்வோடு வாழ்வோம்...
போதகர்.மேரி அமல்ராஜ், பெத்தேல் ஏ.ஜி.திருச்சபை,திருப்பூர்
மிகக் கடுமையான அந்நாட்களிலேயே மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்(மத்:6:44). உன் சகோதரன் உனக்கு விரோதமாய் குற்றஞ்செய்தால், அவனை கடிந்துகொண்டு அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக’ என்றும் தம்மைப் பின்பற்றினவர்களுக்கு இயேசு போதித்தார்.
அனேகம்பேர் கூறும் நல்ல போதனைகளை நாம் அவர்களது பேச்சிலே கேட்கலாமே தவிர அவர்களது வாழ்வில் காண இயலாது. ஆனால் சிலுவையின் மரணபரியந்தம் தம் உபதேசங்களை நடைமுறையில் காண்பித்தவர் இயேசு கிறிஸ்து. கொல்கதா மலையில் சிலுவையில் அறையப்பட்டவராக் தொங்கிக்கொண்டிருந்தபோது தம்மை சிலுவையில் அறைந்த ஜனங்களுக்காக ‘பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்’ என்று அவர் வேண்டுதல் செய்தார்.
சிலுவையின் மரண ஆக்கினையின் நேரத்திலும் தம்மை சிலுவையில் அறைந்தவர்களையும், தண்டனையை நிறைவேற்றின அதிகாரிகளையும், சிலுவையில் அறையும்படி அதிகாரிகளை நிர்பந்தம் பண்ணின ஜனங்களையும் மன்னிக்கும்படி வேண்டுதல் செய்கிறவராக காணப்பட்டார். உறவினர்கள், நண்பர்கள், சொந்த குடும்பத்தினர் என்று யாராக இருந்தாலும் சரி, அவர்கள் செய்த குற்றங்களை மன்னியுங்கள். அந்த மன்னிப்பு உங்கள் உள்ளத்தில் எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காத சமாதானத்தை உங்களுக்குப் பெற்றுத்தரும். உங்களுக்கு விரோதமாய் தவறு செய்தவர்கள் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் மன்னிக்கத் தயங்காதிருங்கள். பிறர் குற்றம் மன்னித்தோம், ஆதலால் எங்கள் குறைகளை எங்களுக்கு மன்னியும் என்று நாம் தேவனிடத்தில் இரக்கம் கேட்கும் நேரங்களில் தேவனும் நமக்கு இரங்குவார். சிலுவையில் கிறிஸ்து அடைந்த பாடுகளையும், வேதனைகளையும் போல நம்மை ஒருவரும் வேதனைப்படுத்த இயலாது.ஆனால் அவ்வளவு உபத்திரவத்தைக் கொடுத்தவர்களைக் கூட இயேசுவானவர் மன்னித்தாரே. இந்த தவசு நாட்களில் நாமும் பிறர் குற்றங்களை மன்னிப்போம். மனமகிழ்வோடு வாழ்வோம்...
போதகர்.மேரி அமல்ராஜ், பெத்தேல் ஏ.ஜி.திருச்சபை,திருப்பூர்
அக்கிரமமான ஆசைப்பற்றுதலையெல்லாம் என் இருதயத்தினின்று நீக்கி அதை சுத்திகரித்தருளும். என் பாவங்களுக்காக நான் மெய்யான மனஸ்தாபப்படவும், ஆண்டவரையும் புறத்தியாரையும் உருக்கமாய் நேசித்து வரவும் எனக்கு வேண்டிய வரத்தை அளித்தருளும்.
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
தூய மரியாயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பக்தி சுவாலகருக்கு ஒத்தவராகிய புனித பிரான்சிஸ்குவே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பரமண்டலததிருவின் திருப்பெட்டியான புனித அந்தோனியாரே -எங்க….
மூப்பின் கீழமைச்சலுக்குக் கண்ணாடியான புனித அந்தோனியாரே
தர்மைத்தை மிகவும் பின் தொடர்ந்தவரான புனித அந்தோனியாரே
தர்ம நெறியில் மாறாத மனதை அபேட்சித்தவரான புனித அந்தோனியாரே
தூய்மையில் லீலிமலரான புனித அந்தோனியாரே
சர்வேசுரனுடைய திருவசனத்தின் தொனிச்சத்தமான புனித அந்தோனியாரே
இஸ்பானிய நாட்டுக்கு நட்சத்திரமான புனித அந்தோனியாரே
சுவிசேஷத்தை ஊக்கத்துடனே பிரசங்கித்து நடத்தினவரான புனித அந்தோனியாரே
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரனுடைய படிப்பினைகளை விரும்பினவரான புனித அந்தோனியாரே
அவிசுவாசிகளுக்கு பயங்கரமாக உபதேசித்தவரான புனித அந்தோனியாரே
புண்ளியவான்களுக்குக் குறையற்ற படிப்பினையாகிய புனித அந்தோனியாரே
மீனாரென்கிற சந்நாசிகளுக்குப் படிப்பனையாகிய புனித அந்தோனியாரே
அப்போஸ்தலருடைய கொழுந்தான புனித அந்தோனியாரே
பாவிகளுக்கு வெளிச்சம் கொடுக்கிரவரான புனித அந்தோனியாரே
வழிதப்பிப் போகிறவர்களுக்குத் துணையான புனித அந்தோனியாரே
ஆச்சரியங்களைச் செய்கிறவரான புனித அந்தோனியாரே
குற்றமில்லாத ஜனங்களுக்கு ஆறுதலும் பாதுகாவலுமான புனித அந்தோனியாரே
ஊமைகளைப் போதிக்கிற உபதேசியாரான புனித அந்தோனியாரே
பிசாசுகளை மிரட்டி ஓட்டுகிறவரான புனித அந்தோனியாரே
அடிமைப்பட்டவர்களை மீட்கிறவரான புனித அந்தோனியாரே
வியாதிக்காரர்களை குணமாக்குகிறவரான புனித அந்தோனியாரே
மரணமடைந்தவர்களை சர்வேசுரனுடைய உதவியினாலே உயிர்பித்தவரான புனித அந்தோனியாரே
பிறவிக் குருடனுக்கு கண் கொடுத்தவரான புனித அந்தோனியாரே
காணமற்போனவைகளைக் காட்டிக் கொடுக்கிறவரான புனித அந்தோனியாரே
இழந்துபோன வஸ்துக்களை கண்டெடுக்கச் செய்கிறவரான புனித அந்தோனியாரே
வழக்காளிகளுடைய உண்மையைப் பாதுகாக்கறவரான புனித அந்தோனியாரே
பரமண்டலத்திற்குச் சுதந்திரவாளியான புனித அந்தோனியாரே
தரித்திரருக்கு இரத்தினமான புனித அந்தோனியாரே
சமுத்திரத்தின் மச்சங்களுக்கு உபதேசித்தவரான புனித அந்தோனியாரே
அப்போஸ்தலருடைய குறையற்ற சுத்திகரத்தை நேசித்தவரான புனித அந்தோனியாரே
புண்ணிய மென்கிற ஞானவெள்ளான்மையை பல நாடுகளில் விளைவித்தவரான புனித அந்தோனியாரே
உலகம் என்கிற அப்பத்தைப புறக்கணித்தவரான புனித அந்தோனியாரே
சமுத்திரத்தில் உபத்திரப்படுகிறவர்களை இரட்சித்தவரான புனித அந்தோனியாரே
சிற்றின்ப ஆசையை ஜெயித்தவரான புனித அந்தோனியாரே
எண்ணிறந்த ஆத்துமக்களைப் பரலோகத்தில் சேர்பித்தவரான புனித அந்தோனியாரே
நஞ்சிருக்கக்கண்டும் போசனம் அருந்தினவரான புனித அந்தோனியாரே
நன்நாக்கழியாத நற்தவத்தினரான புனித அந்தோனியாரே
புதுமைகளினால் பிரபல்யியமான புனித அந்தோனியாரே
திருச்சபையின் தெளிவான தீபமான புனித அந்தோனியாரே
ஐம்புலன் வென்றோர்களுடைய சபைக்கு அரணான புனித அந்தோனியாரே
சிறு குழந்தை ரூயஅp;பத்தைக் கொண்டிருந்த கர்த்தரைக் கையில் ஏந்தின புனித அந்தோனியாரே
உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்களை; மன்றாட்டை தயவாய் கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
புனித அந்தோனியாரே! சூரத்தனமுள்ள மேய்பரே, கஷ்டப்டுகிறவர்களுக்குச் சந்தோஷம் வருவிதருகிறவருமாய் பாவ அக்கினவுடைய காந்தியைச் சீக்கிரத்திலே அமர்த்துகிறவரும் உன்னதப் பரம மண்டலங்களில் இருக்கிறவருமான பதாவானவர். இம்மையினுடைய அவதிக்கு பிற்பாடு எளியவர்களாயிருக்கிற எங்களுக்கு மோட்ச விருந்து தந்தருளவேண்டுகிறோம்.
இயேசு கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக,
பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக:
சர்வேசுரா சுவாமி ! உமது ஸ்துதியரும் முத்தப்பேறு பெற்றவருமான தூய அந்தோனியாரை ஸ்துதிக்கிற உமது புனித பத்தினியான திருச்சபையின் பிள்ளைகளளெல்லோரும் அவருடைய மன்றாட்டினால் சகல அவசரங்களிலும் உமது உபகார சகாயங்களை அடையும்படியாகவும், நித்திய பேரின்பத்திற்கு பாத்திரமாயிருக்கத் தக்கதாகவும் கிருபை கூர்ந்தருளும். -ஆமென்.
அனுகூலமடைய செபம்:
ஓ ! பரிசுத்தத்தின் வெண்மையான லீலி புஷ்பமே ! உன்னதத் தரித்திரத்தின் முன் மாதிரிகையே ! மெய்யான தாழ்ச்சியன் கண்ணாடியே! பரிசத்தத்தின் ஒளிவிடும் நட்சத்திரமே! ஓ ! மகிமையிலங்கும் புனித அந்தோனியாரே ! உமது திருக்கரங்களில் பாலனாக இயேசு எழுந்தருளி வரம் விNஷித்த சுதந்திரம் பெற்று அகமகிழ்தீரல்லோ ! அதுபோல் வல்லமையு;ள் உமமுடைய ஆதரவில் என்னையும் வைத்து காப்பாற்ற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். ஆண்டவரால் நீர் பெற்றுக்கொண்ட வரங்களில் புதுமை செய்யும் வரமே உம்மிடத்தில் முக்கியமாய் பிரகாசிக்கிறதல்லோ ! தேவரீர் என்பேரில் இரங்கி எனக்கு அவசியமான இந்த காரியத்தில் உதவி செய்ய வாரும்…..
(தேவையானதை உறுதியோடு கேட்கவும்)
அக்கிரமமான ஆசைப்பற்றுதலையெல்லாம் என் இருதயத்தினின்று நீக்கி அதை சுத்திகரித்தருளும். என் பாவங்களுக்காக நான் மெய்யான மனஸ்தாபப்படவும், ஆண்டவரையும் புறத்தியாரையும் உருக்கமாய் நேசித்து வரவும் எனக்கு வேண்டிய வரத்தை அளித்தருளும். இவ்விதமாய் நான் இம்மையில் ஆண்டவரைப் பிரமாணிக்கமாய் சேவித்து, மறுமையில் உம்மோடு அவரை நித்தியமாய்த தரிசித்துப் போற்றிப் புகழ்ந்து வாழ்த்தக்கடவேனாக. -ஆமென்.
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
தூய மரியாயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பக்தி சுவாலகருக்கு ஒத்தவராகிய புனித பிரான்சிஸ்குவே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
பரமண்டலததிருவின் திருப்பெட்டியான புனித அந்தோனியாரே -எங்க….
மூப்பின் கீழமைச்சலுக்குக் கண்ணாடியான புனித அந்தோனியாரே
தர்மைத்தை மிகவும் பின் தொடர்ந்தவரான புனித அந்தோனியாரே
தர்ம நெறியில் மாறாத மனதை அபேட்சித்தவரான புனித அந்தோனியாரே
தூய்மையில் லீலிமலரான புனித அந்தோனியாரே
சர்வேசுரனுடைய திருவசனத்தின் தொனிச்சத்தமான புனித அந்தோனியாரே
இஸ்பானிய நாட்டுக்கு நட்சத்திரமான புனித அந்தோனியாரே
சுவிசேஷத்தை ஊக்கத்துடனே பிரசங்கித்து நடத்தினவரான புனித அந்தோனியாரே
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரனுடைய படிப்பினைகளை விரும்பினவரான புனித அந்தோனியாரே
அவிசுவாசிகளுக்கு பயங்கரமாக உபதேசித்தவரான புனித அந்தோனியாரே
புண்ளியவான்களுக்குக் குறையற்ற படிப்பினையாகிய புனித அந்தோனியாரே
மீனாரென்கிற சந்நாசிகளுக்குப் படிப்பனையாகிய புனித அந்தோனியாரே
அப்போஸ்தலருடைய கொழுந்தான புனித அந்தோனியாரே
பாவிகளுக்கு வெளிச்சம் கொடுக்கிரவரான புனித அந்தோனியாரே
வழிதப்பிப் போகிறவர்களுக்குத் துணையான புனித அந்தோனியாரே
ஆச்சரியங்களைச் செய்கிறவரான புனித அந்தோனியாரே
குற்றமில்லாத ஜனங்களுக்கு ஆறுதலும் பாதுகாவலுமான புனித அந்தோனியாரே
ஊமைகளைப் போதிக்கிற உபதேசியாரான புனித அந்தோனியாரே
பிசாசுகளை மிரட்டி ஓட்டுகிறவரான புனித அந்தோனியாரே
அடிமைப்பட்டவர்களை மீட்கிறவரான புனித அந்தோனியாரே
வியாதிக்காரர்களை குணமாக்குகிறவரான புனித அந்தோனியாரே
மரணமடைந்தவர்களை சர்வேசுரனுடைய உதவியினாலே உயிர்பித்தவரான புனித அந்தோனியாரே
பிறவிக் குருடனுக்கு கண் கொடுத்தவரான புனித அந்தோனியாரே
காணமற்போனவைகளைக் காட்டிக் கொடுக்கிறவரான புனித அந்தோனியாரே
இழந்துபோன வஸ்துக்களை கண்டெடுக்கச் செய்கிறவரான புனித அந்தோனியாரே
வழக்காளிகளுடைய உண்மையைப் பாதுகாக்கறவரான புனித அந்தோனியாரே
பரமண்டலத்திற்குச் சுதந்திரவாளியான புனித அந்தோனியாரே
தரித்திரருக்கு இரத்தினமான புனித அந்தோனியாரே
சமுத்திரத்தின் மச்சங்களுக்கு உபதேசித்தவரான புனித அந்தோனியாரே
அப்போஸ்தலருடைய குறையற்ற சுத்திகரத்தை நேசித்தவரான புனித அந்தோனியாரே
புண்ணிய மென்கிற ஞானவெள்ளான்மையை பல நாடுகளில் விளைவித்தவரான புனித அந்தோனியாரே
உலகம் என்கிற அப்பத்தைப புறக்கணித்தவரான புனித அந்தோனியாரே
சமுத்திரத்தில் உபத்திரப்படுகிறவர்களை இரட்சித்தவரான புனித அந்தோனியாரே
சிற்றின்ப ஆசையை ஜெயித்தவரான புனித அந்தோனியாரே
எண்ணிறந்த ஆத்துமக்களைப் பரலோகத்தில் சேர்பித்தவரான புனித அந்தோனியாரே
நஞ்சிருக்கக்கண்டும் போசனம் அருந்தினவரான புனித அந்தோனியாரே
நன்நாக்கழியாத நற்தவத்தினரான புனித அந்தோனியாரே
புதுமைகளினால் பிரபல்யியமான புனித அந்தோனியாரே
திருச்சபையின் தெளிவான தீபமான புனித அந்தோனியாரே
ஐம்புலன் வென்றோர்களுடைய சபைக்கு அரணான புனித அந்தோனியாரே
சிறு குழந்தை ரூயஅp;பத்தைக் கொண்டிருந்த கர்த்தரைக் கையில் ஏந்தின புனித அந்தோனியாரே
உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்களை; மன்றாட்டை தயவாய் கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
புனித அந்தோனியாரே! சூரத்தனமுள்ள மேய்பரே, கஷ்டப்டுகிறவர்களுக்குச் சந்தோஷம் வருவிதருகிறவருமாய் பாவ அக்கினவுடைய காந்தியைச் சீக்கிரத்திலே அமர்த்துகிறவரும் உன்னதப் பரம மண்டலங்களில் இருக்கிறவருமான பதாவானவர். இம்மையினுடைய அவதிக்கு பிற்பாடு எளியவர்களாயிருக்கிற எங்களுக்கு மோட்ச விருந்து தந்தருளவேண்டுகிறோம்.
இயேசு கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக,
பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக:
சர்வேசுரா சுவாமி ! உமது ஸ்துதியரும் முத்தப்பேறு பெற்றவருமான தூய அந்தோனியாரை ஸ்துதிக்கிற உமது புனித பத்தினியான திருச்சபையின் பிள்ளைகளளெல்லோரும் அவருடைய மன்றாட்டினால் சகல அவசரங்களிலும் உமது உபகார சகாயங்களை அடையும்படியாகவும், நித்திய பேரின்பத்திற்கு பாத்திரமாயிருக்கத் தக்கதாகவும் கிருபை கூர்ந்தருளும். -ஆமென்.
அனுகூலமடைய செபம்:
ஓ ! பரிசுத்தத்தின் வெண்மையான லீலி புஷ்பமே ! உன்னதத் தரித்திரத்தின் முன் மாதிரிகையே ! மெய்யான தாழ்ச்சியன் கண்ணாடியே! பரிசத்தத்தின் ஒளிவிடும் நட்சத்திரமே! ஓ ! மகிமையிலங்கும் புனித அந்தோனியாரே ! உமது திருக்கரங்களில் பாலனாக இயேசு எழுந்தருளி வரம் விNஷித்த சுதந்திரம் பெற்று அகமகிழ்தீரல்லோ ! அதுபோல் வல்லமையு;ள் உமமுடைய ஆதரவில் என்னையும் வைத்து காப்பாற்ற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். ஆண்டவரால் நீர் பெற்றுக்கொண்ட வரங்களில் புதுமை செய்யும் வரமே உம்மிடத்தில் முக்கியமாய் பிரகாசிக்கிறதல்லோ ! தேவரீர் என்பேரில் இரங்கி எனக்கு அவசியமான இந்த காரியத்தில் உதவி செய்ய வாரும்…..
(தேவையானதை உறுதியோடு கேட்கவும்)
அக்கிரமமான ஆசைப்பற்றுதலையெல்லாம் என் இருதயத்தினின்று நீக்கி அதை சுத்திகரித்தருளும். என் பாவங்களுக்காக நான் மெய்யான மனஸ்தாபப்படவும், ஆண்டவரையும் புறத்தியாரையும் உருக்கமாய் நேசித்து வரவும் எனக்கு வேண்டிய வரத்தை அளித்தருளும். இவ்விதமாய் நான் இம்மையில் ஆண்டவரைப் பிரமாணிக்கமாய் சேவித்து, மறுமையில் உம்மோடு அவரை நித்தியமாய்த தரிசித்துப் போற்றிப் புகழ்ந்து வாழ்த்தக்கடவேனாக. -ஆமென்.
‘ எப்போதும் கடவுள் என்னோடு இருக்கிறார்; எத்தனை துன்பத்திலும் அவர் என்னைக் காப்பார்’ என்ற நம்பிக்கையே நம்மைக் காக்கும்.
இயேசுவின் போதனைகளில் ‘மலைப்பொழிவு’ போதனை மிகவும் முக்கியமானதாகவும் புகழ்பெற்றதாகவும் இருக்கிறது. திரளான மக்கள் கூட்டத்தின் முன்பு இந்தப் போதனையை நிகழ்த்த ஒரு மலைக்குன்றின் மீது ஏறி அமர்ந்தார் இயேசு. ‘செர்மோன் ஆப் மவுண்ட்’ என்று அழைக்கப்படும் இந்த மலைக்குன்று, கலிலேயக் கடற்கரை அருகில்தான் இருக்கிறது. இயேசு பலமுறை கலிலேயக் கடலுக்கு வந்துள்ளார். ஒருமுறை கலிலேயக் கடற்கரையில் காலை முதலே போதனை செய்துகொண்டிருந்தார். மாலைவேளை நெருங்கியதும் மானுட மகனுக்கு களைப்பு ஏற்பட்டது. அதுவரையிலும் கூட தன்னை விட்டு நீங்கி தத்தம் வீடுகளுக்குச் செல்லாமல் திரளான மக்கள் சூழ்ந்திருப்பதைக் கண்டு, கலிலேயக் கடலின் மறுகரைக்குச் செல்ல சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.
அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, “போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார். இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்கு குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.
இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, “ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்து விட்டு வர அனுமதியும். அவர் இறந்துவிட்டார்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்” என்றார்.
பின்பு இயேசு படகில் ஏறவே, அவருடைய சீடர்களும் அவரோடு ஏறினார்கள். திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். சீடர்கள் பயந்து அலறி அவரிடம் வந்து, “ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.
கண்விழித்த இயேசு அவர்களை நோக்கி, “நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டபடி எழுந்து நின்றவர், காற்றையும் கடலையும் அதட்டிக் கடிந்துகொண்டார். உடனே கடலில் மிகுந்த அமைதி உண்டாயிற்று. சீடர்கள் அனைவரும், “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றவே! இவர் எத்தகையவரோ?” (மத்தேயு 8:23-27) என்று வியந்தனர்.
இயற்கை நம் மீது தாக்குதல் தொடுக்கும்போதெல்லாம் நாம் வாடிவிடுகிறோம். நம் அருகில் கடவுள் இருக்கிறார் என்று தெரிந்தும், நாம் மரணத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுகிறோம். ஆபத்தான பேரிடர் நேரத்தில் நமக்கு ஆறுதலாக இருக்கிறவரும், அமைதியைத் தருகிறவரும் நம் ஆண்டவர் என்கிற செய்தி, இந்த விவிலியப் பதிவு வாயிலாக நமக்கு வெளிப்படுகிறது.
இயேசுவின் சீடர்களுக்கு அவர்கள் மீன்பிடித்து வாழ்ந்த கலிலேயக் கடலைப்பற்றி நன்றாகத் தெரியும். கலிலேயக் கடல், விசித்திரங்களுக்குப் பெயர் பெற்றது. திடீர், திடீர் என்று புயலாலும், சூறைக்காற்றாலும், மழையாலும் பயமுறுத்தக்கூடியது இந்தக் கடல். அது அமைந்திருக்கின்ற புவியியல் அமைப்புதான் இத்தகைய உடனடி பருவநிலை மாற்றத்துக்குக் காரணம். இதை மீறியே இக்கடலில் வளிதொழில் ஆள்கிறார்கள் மீனவர்கள். திடீர் புயலின் வேகத்தைக் கண்டதும் தாங்கள் சாகப்போகிறோம் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. எல்லாமே கைமீறிப் போய்விட்டது. இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்கிற நிலை வந்தபிறகே உறங்கிக்கொண்டிருந்த இயேசுவை அவர்கள் சரணடைகிறார்கள்.
அதுவரை, தாங்களே அதனை எதிர்கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள். இயேசுவை மறந்து விடுகிறார்கள். நமது வாழ்விலும் இதுதான் நடக்கிறது. நம்மால் முடியாமல் நிலைமை கைமீறுகிற போதுதான், நாம் கடவுளைத் தேடுகிறோம். அது தூய இறை நம்பிக்கையாக இருக்க முடியாது.‘ எப்போதும் கடவுள் என்னோடு இருக்கிறார்; எத்தனை துன்பத்திலும் அவர் என்னைக் காப்பார்’ என்ற நம்பிக்கையே நம்மைக் காக்கும்.
அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, “போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார். இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்கு குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.
இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, “ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்து விட்டு வர அனுமதியும். அவர் இறந்துவிட்டார்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்” என்றார்.
பின்பு இயேசு படகில் ஏறவே, அவருடைய சீடர்களும் அவரோடு ஏறினார்கள். திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். சீடர்கள் பயந்து அலறி அவரிடம் வந்து, “ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.
கண்விழித்த இயேசு அவர்களை நோக்கி, “நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டபடி எழுந்து நின்றவர், காற்றையும் கடலையும் அதட்டிக் கடிந்துகொண்டார். உடனே கடலில் மிகுந்த அமைதி உண்டாயிற்று. சீடர்கள் அனைவரும், “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றவே! இவர் எத்தகையவரோ?” (மத்தேயு 8:23-27) என்று வியந்தனர்.
இயற்கை நம் மீது தாக்குதல் தொடுக்கும்போதெல்லாம் நாம் வாடிவிடுகிறோம். நம் அருகில் கடவுள் இருக்கிறார் என்று தெரிந்தும், நாம் மரணத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுகிறோம். ஆபத்தான பேரிடர் நேரத்தில் நமக்கு ஆறுதலாக இருக்கிறவரும், அமைதியைத் தருகிறவரும் நம் ஆண்டவர் என்கிற செய்தி, இந்த விவிலியப் பதிவு வாயிலாக நமக்கு வெளிப்படுகிறது.
இயேசுவின் சீடர்களுக்கு அவர்கள் மீன்பிடித்து வாழ்ந்த கலிலேயக் கடலைப்பற்றி நன்றாகத் தெரியும். கலிலேயக் கடல், விசித்திரங்களுக்குப் பெயர் பெற்றது. திடீர், திடீர் என்று புயலாலும், சூறைக்காற்றாலும், மழையாலும் பயமுறுத்தக்கூடியது இந்தக் கடல். அது அமைந்திருக்கின்ற புவியியல் அமைப்புதான் இத்தகைய உடனடி பருவநிலை மாற்றத்துக்குக் காரணம். இதை மீறியே இக்கடலில் வளிதொழில் ஆள்கிறார்கள் மீனவர்கள். திடீர் புயலின் வேகத்தைக் கண்டதும் தாங்கள் சாகப்போகிறோம் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. எல்லாமே கைமீறிப் போய்விட்டது. இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்கிற நிலை வந்தபிறகே உறங்கிக்கொண்டிருந்த இயேசுவை அவர்கள் சரணடைகிறார்கள்.
அதுவரை, தாங்களே அதனை எதிர்கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள். இயேசுவை மறந்து விடுகிறார்கள். நமது வாழ்விலும் இதுதான் நடக்கிறது. நம்மால் முடியாமல் நிலைமை கைமீறுகிற போதுதான், நாம் கடவுளைத் தேடுகிறோம். அது தூய இறை நம்பிக்கையாக இருக்க முடியாது.‘ எப்போதும் கடவுள் என்னோடு இருக்கிறார்; எத்தனை துன்பத்திலும் அவர் என்னைக் காப்பார்’ என்ற நம்பிக்கையே நம்மைக் காக்கும்.
நாகர்கேவில் மறவன்குடியிருப்பில் அமைந்துள்ளது புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம். புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் பங்குமக்கள் இணைந்து சிறப்பாக கொண்டாடி வருகின்றோம்.
நாகர்கேவில் மறவன்குடியிருப்பில் அமைந்துள்ளது புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம். புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் பங்குமக்கள் இணைந்து சிறப்பாக கொண்டாடி வருகின்றோம்.
ஐந்தாம் நூற்றாண்டில் பத்ரீசியன் குலத்தை சேர்ந்தவரும், பக்தி உள்ளவருமான ஜாண் என்பவர் குழந்தை இன்றி வெகு நாட்களாக இருந்தார். தன்னிடம் இருந்த ஏராளமான பொருட்களை ஒரு நல்ல காரியத்திற்கு செலவிட விரும்பினார். அந்த கருத்துக்காக அவரும் அவரது மனைவியும் சேர்ந்து தேவதாயாரிடம் உருக்கமாக வேண்டினர். இவர்களுக்கு தேவதாயார் கனவில் காட்சியளித்து அருகில் இருந்த மலையில் பனி உறைந்துள்ள ஓர் இடத்தில் தனது பெயரால் ஓர் ஆலயம் கட்டும்படி கேட்டுக்கொண்டார். மறுநாள் காலையில் அவ்விருவரும் திருத்தந்தையிடம் சென்று இந்த செய்தியை அறிவித்தனர்.
திருத்தந்தை லியேரியுஸ் இதை கேட்டு வியந்தார். ஏனெனில் அவருக்கும் அதே இரவில் தேவதாயார் காட்சியளித்து அதே மலையில் ஓர் ஆலயம் எழுப்ப சொல்லியிருந்தார். உடனே ஏராளமான விசுவாசிகளை அழைத்து கொண்டு தேவதாயார் குறித்த இடத்திற்கு சென்றனர். குறிப்பிட்ட ஓர் இடத்தில் உறைபனி விழுந்திருப்பதையும் ஒரு பெரிய கோவிலின் அளவுக்கு பனியால் குறிக்கப்பட்டிருப்பதையும் அங்கு சென்ற அனைவரும் கண்டு வியப்பு அடைநதனர். திருதந்தையின் உத்தரவோடு ஜாண் தனது சொந்த செலவில் ஓர் ஆலயத்தை கட்டி முடித்தார். இன்று வரை அங்கே பல புதுமைகள் நடந்து வருகின்றன. இதுவே புனித தஸ்நேவிஸ் அன்னையின் வரலாறாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக மறவன்குடியிருப்பு புனித தஸநேவிஸ் மாதா ஆலய திருவிழாவானது அரசு மற்றும் மறைமாவட்ட விதிமுறை மற்றும் விழகாட்டுதலின் படி 3 நாள் திருவிழாவாக சிறப்பிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி ஆகஸ்டு 7-ந் தேதி ஆகஸ்டு 8 மற்றும் 9-ம் தேதிகளில் திருவிழா நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
நேற்று காலை 6 மணிக்கு ஜெபமாலையும் அதனை தொடர்ந்து திருவிழா திருப்பலியும் நடைபெற்றது. இறைமக்கள் வீடுகளில் அமர்ந்து வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் விதமாக நிகழ்ச்சிகள் நேரலையாக - maravankudieruppu.com இணையதளத்திலும் Zoom appயிலும் உள்ளூர் தொலைக்காட்சி AJ channel (TCCL 140) யிலும் ஒளிபரப்பப்பட்டது.
விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை அருட்பணியாளர், அருட்பணி பேரவை, ஆலய திருப்பணி குழு, பங்கு மக்கள் இணைந்து செய்தனர்.
விழா நிகழ்ச்சியை கண்டு கழித்து புனித தஸ்நேவிஸ் மாதாவின் அருள் ஆசியை பெற அன்புடன் வேண்டுகிறோம்.
ஐந்தாம் நூற்றாண்டில் பத்ரீசியன் குலத்தை சேர்ந்தவரும், பக்தி உள்ளவருமான ஜாண் என்பவர் குழந்தை இன்றி வெகு நாட்களாக இருந்தார். தன்னிடம் இருந்த ஏராளமான பொருட்களை ஒரு நல்ல காரியத்திற்கு செலவிட விரும்பினார். அந்த கருத்துக்காக அவரும் அவரது மனைவியும் சேர்ந்து தேவதாயாரிடம் உருக்கமாக வேண்டினர். இவர்களுக்கு தேவதாயார் கனவில் காட்சியளித்து அருகில் இருந்த மலையில் பனி உறைந்துள்ள ஓர் இடத்தில் தனது பெயரால் ஓர் ஆலயம் கட்டும்படி கேட்டுக்கொண்டார். மறுநாள் காலையில் அவ்விருவரும் திருத்தந்தையிடம் சென்று இந்த செய்தியை அறிவித்தனர்.
திருத்தந்தை லியேரியுஸ் இதை கேட்டு வியந்தார். ஏனெனில் அவருக்கும் அதே இரவில் தேவதாயார் காட்சியளித்து அதே மலையில் ஓர் ஆலயம் எழுப்ப சொல்லியிருந்தார். உடனே ஏராளமான விசுவாசிகளை அழைத்து கொண்டு தேவதாயார் குறித்த இடத்திற்கு சென்றனர். குறிப்பிட்ட ஓர் இடத்தில் உறைபனி விழுந்திருப்பதையும் ஒரு பெரிய கோவிலின் அளவுக்கு பனியால் குறிக்கப்பட்டிருப்பதையும் அங்கு சென்ற அனைவரும் கண்டு வியப்பு அடைநதனர். திருதந்தையின் உத்தரவோடு ஜாண் தனது சொந்த செலவில் ஓர் ஆலயத்தை கட்டி முடித்தார். இன்று வரை அங்கே பல புதுமைகள் நடந்து வருகின்றன. இதுவே புனித தஸ்நேவிஸ் அன்னையின் வரலாறாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக மறவன்குடியிருப்பு புனித தஸநேவிஸ் மாதா ஆலய திருவிழாவானது அரசு மற்றும் மறைமாவட்ட விதிமுறை மற்றும் விழகாட்டுதலின் படி 3 நாள் திருவிழாவாக சிறப்பிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி ஆகஸ்டு 7-ந் தேதி ஆகஸ்டு 8 மற்றும் 9-ம் தேதிகளில் திருவிழா நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
நேற்று காலை 6 மணிக்கு ஜெபமாலையும் அதனை தொடர்ந்து திருவிழா திருப்பலியும் நடைபெற்றது. இறைமக்கள் வீடுகளில் அமர்ந்து வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் விதமாக நிகழ்ச்சிகள் நேரலையாக - maravankudieruppu.com இணையதளத்திலும் Zoom appயிலும் உள்ளூர் தொலைக்காட்சி AJ channel (TCCL 140) யிலும் ஒளிபரப்பப்பட்டது.
விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை அருட்பணியாளர், அருட்பணி பேரவை, ஆலய திருப்பணி குழு, பங்கு மக்கள் இணைந்து செய்தனர்.
விழா நிகழ்ச்சியை கண்டு கழித்து புனித தஸ்நேவிஸ் மாதாவின் அருள் ஆசியை பெற அன்புடன் வேண்டுகிறோம்.
காரைக்காலில் உள்ள 134 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய தேற்றரவு அன்னை ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காரைக்கால் மாதா கோவில் வீதியில் 134 ஆண்டுகள் பழமைவாய்ந்த தூய தேற்றரவு அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி நேற்று மாலை ஆண்டு திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக, ஆலயத்தில் இருந்து மந்திரித்து எடுத்துவரப்பட்ட மாதா கொடியை மாவட்ட முதன்மை பங்குத்தந்தை அந்தோணிராஜ் ஏற்றி வைத்தார். விழாவில் தினமும் காலை, மாலை திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு சிறிய தேர்பவனியும் நடக்கிறது. 10-ம் நாள் நிகழ்ச்சியாக, ஆகஸ்டு 15-ந் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், அதனை தொடர்ந்து சிறப்பு மின் அலங்கார தேர்பவனியும் ஆலயம் வெளிபிரகாரத்தில் நடக்கிறது.
முன்னதாக, ஆலயத்தில் இருந்து மந்திரித்து எடுத்துவரப்பட்ட மாதா கொடியை மாவட்ட முதன்மை பங்குத்தந்தை அந்தோணிராஜ் ஏற்றி வைத்தார். விழாவில் தினமும் காலை, மாலை திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு சிறிய தேர்பவனியும் நடக்கிறது. 10-ம் நாள் நிகழ்ச்சியாக, ஆகஸ்டு 15-ந் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், அதனை தொடர்ந்து சிறப்பு மின் அலங்கார தேர்பவனியும் ஆலயம் வெளிபிரகாரத்தில் நடக்கிறது.
வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை திருத்தல பெருவிழா, கொடியேற்றத்துடன் எளிமையாக தொடங்கியது.
வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை திருத்தல பெருவிழா, கொடியேற்றத்துடன் எளிமையாக தொடங்கியது. தொடர்ந்து முதல் திருப்பலி, திருயாத்திரை திருப்பலி, ஜெபமாலை நடந்தது. பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ, கொடியேற்றினார். காவல்கிணறு பங்குத்தந்தை ஆரோக்கியராஜ், வடக்கன்குளம் உதவி பங்குத்தந்தை மார்ட்டின் உள்பட குறைந்த எண்ணிக்கையிலான பங்கு மக்கள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக ஞானதிரவியம் எம்.பி. கலந்துகொண்டார்.
வருகிற 14-ந் தேதி காலை 9 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடம் சூட்டும் நிகழ்ச்சியும், மாலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஆண்டகை தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை உதவி பங்குத்தந்தை பிணித்து ராஜா மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
வருகிற 14-ந் தேதி காலை 9 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடம் சூட்டும் நிகழ்ச்சியும், மாலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஆண்டகை தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை உதவி பங்குத்தந்தை பிணித்து ராஜா மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் வேளாங்கண்ணிக்கு அடுத்தப்படியாக பிரசித்திபெற்ற கிறிஸ்தவ தேவாலயம் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம். இந்த தேவாலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
முத்துநகருக்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் முக்கியமானது இங்குள்ள தூய பனிமய மாதா பேராலயம். வங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ள இந்தப் பேராலயம் தமிழகத்தில் வேளாங்கண்ணிக்கு அடுத்தப்படியாக பிரசித்திபெற்ற கிறிஸ்தவ தேவாலயம்.
1542களில் தூய பிரான்சிஸ் சவேரியார் முத்துக்குளித்துறைப் பகுதிகளில் வருகை தந்த வேளையில் பனிமய அன்னை ஆலயம் இருக்கவில்லை. ஆனால் அவரே இந்த ஆலயத்தின் நாயகியாம் பனிமய அன்னையின் திரு ரூபத்தை இவ்வாலயத்திற்கு அளித்திட முயற்சி எடுத்தவர். சிறு கோவிலாக இவ்வாலயத்தை எழுப்பியவரும் இவரே.
இந்த அன்னையின் ஆலயத்திற்கு வருகை தந்த மாமனிதர்களில் ஒரு சிலர்: தமிழ் அறிஞர் வீரமாமுனிவர், தூயவராம் ஜோசப் வாஸ் அடிகள், அன்னை தெரசா, பாளியோன் மரித் தாயார். இது போன்று எண்ணற்ற மாமனிதர்கள், மாமேதைகள் ஆவலுடன் வருகை தந்த தனிப்பெரும் பேற்றினை பெற்றுள்ள தூய பனிமயத் தாயின் ஆலயத்தில் தற்போது தங்கத் தேர்த் திருவிழா நடைபெறுகிறது.
மீனவர்களின் பாதுகாவலராகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கும் பனிமய மாதாவின் தேர்ச் சிறப்பு சொல்லிலடங்காது. சிலுவைக்குப் பதிலாக நட்சத்திரத்தைக் கொண்டிருக்கும் இத்தேரிலுள்ள தங்கக் கிரீடம், கடவுளின் தந்தை சிலை, புறா வடிவில் தூய ஆத்மா, குழந்தை வடிவில் இயேசுநாதர், தூய அன்னை, மீனவ சமுதாயத்தினரின் கதை சொல்லும் அடித்தள வடிவமைப்பு என்று ஒவ்வொரு அம்சமும் அர்த்தமுள்ளது.
கி.பி. 1582-ம் ஆண்டு இயேசு சபை குருக்கள் கூடி சிறிய ஆலயமாகக் கட்டினர். 1713-ம் ஆண்டு தற்போதுள்ள புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. 427 ஆண்டு வரலாற்றைக் கொண்டது இந்த தேவாலயம். சிற்றாலயமாக இருந்த இத் தேவாலயம் 1982-ம் ஆண்டு பேராலயமாகத் தரம் உயர்த்தப்பட்டது.
இப்பேராலயத்தில் வீற்றிருக்கும் தூய பனிமய மாதா சொரூபம் 1555-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி "சாந்தலேனா' என்ற கப்பல் மூலம் தூத்துக்குடி வந்தது சிறப்பு அம்சம். இப் பேராலயத்தில் இயேசுபிரான் தொங்கி மரித்த மரச்சிலுவையின் ஒரு துண்டு விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட பொன்மயமான பாத்திரத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அன்னையின் விழாக் காலங்களில் நடக்கும் பகல் ஆராதனையின்போது இதை வைத்தே ஆசி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இப் பேராலயத்துக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இங்கு தினமும் காலை, மாலையில் திருப்பலி நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலியும், மாலையில் நற்கருணை ஆசீரும் நடைபெறும். இங்கு ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை திருவிழா நடைபெறும். இதில், நாட்டின் பல பகுதிகளில் இருந்து மட்டுமன்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்பர். தூத்துக்குடி நகரின் தெற்கு கடற்கரை சாலையில் கம்பீரமாக வீற்றிருக்கும் இத் தேவாலயம் ஆன்மிகத் தலமாக மட்டுமன்றி சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ. தொலைவிலும், மதுரையில் இருந்து 140 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. தூத்துக்குடிக்கு தமிழகத்தின் அனைத்து முன்னணி நகரங்களில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. மேலும், சென்னை, மைசூரில் இருந்து ரயில் வசதியும், செனையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான சேவையும் உள்ளது. தூத்துக்குடியில் தங்குவதற்கு நட்சத்திர விடுதிகள் முதல் சாதாரண விடுதிகள் வரை பல உள்ளன.
1542களில் தூய பிரான்சிஸ் சவேரியார் முத்துக்குளித்துறைப் பகுதிகளில் வருகை தந்த வேளையில் பனிமய அன்னை ஆலயம் இருக்கவில்லை. ஆனால் அவரே இந்த ஆலயத்தின் நாயகியாம் பனிமய அன்னையின் திரு ரூபத்தை இவ்வாலயத்திற்கு அளித்திட முயற்சி எடுத்தவர். சிறு கோவிலாக இவ்வாலயத்தை எழுப்பியவரும் இவரே.
இந்த அன்னையின் ஆலயத்திற்கு வருகை தந்த மாமனிதர்களில் ஒரு சிலர்: தமிழ் அறிஞர் வீரமாமுனிவர், தூயவராம் ஜோசப் வாஸ் அடிகள், அன்னை தெரசா, பாளியோன் மரித் தாயார். இது போன்று எண்ணற்ற மாமனிதர்கள், மாமேதைகள் ஆவலுடன் வருகை தந்த தனிப்பெரும் பேற்றினை பெற்றுள்ள தூய பனிமயத் தாயின் ஆலயத்தில் தற்போது தங்கத் தேர்த் திருவிழா நடைபெறுகிறது.
மீனவர்களின் பாதுகாவலராகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கும் பனிமய மாதாவின் தேர்ச் சிறப்பு சொல்லிலடங்காது. சிலுவைக்குப் பதிலாக நட்சத்திரத்தைக் கொண்டிருக்கும் இத்தேரிலுள்ள தங்கக் கிரீடம், கடவுளின் தந்தை சிலை, புறா வடிவில் தூய ஆத்மா, குழந்தை வடிவில் இயேசுநாதர், தூய அன்னை, மீனவ சமுதாயத்தினரின் கதை சொல்லும் அடித்தள வடிவமைப்பு என்று ஒவ்வொரு அம்சமும் அர்த்தமுள்ளது.
கி.பி. 1582-ம் ஆண்டு இயேசு சபை குருக்கள் கூடி சிறிய ஆலயமாகக் கட்டினர். 1713-ம் ஆண்டு தற்போதுள்ள புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. 427 ஆண்டு வரலாற்றைக் கொண்டது இந்த தேவாலயம். சிற்றாலயமாக இருந்த இத் தேவாலயம் 1982-ம் ஆண்டு பேராலயமாகத் தரம் உயர்த்தப்பட்டது.
இப்பேராலயத்தில் வீற்றிருக்கும் தூய பனிமய மாதா சொரூபம் 1555-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி "சாந்தலேனா' என்ற கப்பல் மூலம் தூத்துக்குடி வந்தது சிறப்பு அம்சம். இப் பேராலயத்தில் இயேசுபிரான் தொங்கி மரித்த மரச்சிலுவையின் ஒரு துண்டு விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட பொன்மயமான பாத்திரத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அன்னையின் விழாக் காலங்களில் நடக்கும் பகல் ஆராதனையின்போது இதை வைத்தே ஆசி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இப் பேராலயத்துக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இங்கு தினமும் காலை, மாலையில் திருப்பலி நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலியும், மாலையில் நற்கருணை ஆசீரும் நடைபெறும். இங்கு ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை திருவிழா நடைபெறும். இதில், நாட்டின் பல பகுதிகளில் இருந்து மட்டுமன்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்பர். தூத்துக்குடி நகரின் தெற்கு கடற்கரை சாலையில் கம்பீரமாக வீற்றிருக்கும் இத் தேவாலயம் ஆன்மிகத் தலமாக மட்டுமன்றி சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ. தொலைவிலும், மதுரையில் இருந்து 140 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. தூத்துக்குடிக்கு தமிழகத்தின் அனைத்து முன்னணி நகரங்களில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. மேலும், சென்னை, மைசூரில் இருந்து ரயில் வசதியும், செனையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான சேவையும் உள்ளது. தூத்துக்குடியில் தங்குவதற்கு நட்சத்திர விடுதிகள் முதல் சாதாரண விடுதிகள் வரை பல உள்ளன.






