என் மலர்
கிறித்தவம்
தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை 5.30 மணிக்கு மதுரை உயர் மறை மாவட்ட முதன்மை குரு ஜெயராஜ் தலைமையில் அன்னையின் கொடியேற்றமும், சிறப்பு திருப்பலியும் நடந்தது. விழாவில் வருகிற 8-ந் தேதி காலை ஆரோக்கிய அன்னையின் பிறப்பு பெருவிழா நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு கூட்டுத் திருப்பலியை சபை மாநில அதிபர் சாந்துராஜா நடத்துகிறார். 9-ந் தேதி காலை 6.30 மணிக்கு பங்குத்தந்தை ஆரோக்கிய தாஸ் தலைமையில் கொடி இறக்கப்பட்டு நன்றி திருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஜோசப் அடிகளார், பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ், உதவி பங்குத்தந்தை குழந்தை யேசுதாஸ் அடிகளார் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.மேலும் கொரோனா ஊரடங்கினால் தேரோட்டம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அரசின் வழிமுறைகளை கடைபிடித்து திருவிழா நடத்தவும், பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்பதையும் வீட்டிலிருந்தே சமூக வலைதளம் மூலம் நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஜோசப் அடிகளார், பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ், உதவி பங்குத்தந்தை குழந்தை யேசுதாஸ் அடிகளார் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.மேலும் கொரோனா ஊரடங்கினால் தேரோட்டம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அரசின் வழிமுறைகளை கடைபிடித்து திருவிழா நடத்தவும், பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்பதையும் வீட்டிலிருந்தே சமூக வலைதளம் மூலம் நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நடந்தது. கொடியேற்றம் நிகழ்ச்சி பேராலய இணையதளம் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கியமாதா பேராலயம், இந்தியாவில் உள்ள கத்தோலிக்க பேராலயங்களில் பிரசித்தி பெற்றதாகும். வங்க கடலோரம் பிரமாண்ட கட்டிட கலை அம்சத்துடன் காட்சி அளிக்கும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வருவார்கள்.
இங்கு ஆண்டுதோறும் ஆரோக்கியமாதாவின் பிறந்த நாளையொட்டி 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி 4.30 மணியளவில் பேராலயத்தை சுற்றி எடுத்து வரப்பட்டது.
அதைத்தொடர்ந்து பேராலயத்தின் வடக்கு புறத்தில் உள்ள கொடிக்கம்பம் முன்பு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியை புனிதம் செய்தார். இதையடுத்து 5 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. அப்போது பேராலய அலங்கார மின் விளக்குகள் ஒளிர விடப்பட்டன. இதையடுத்து ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் தமிழில் திருப்பலி நடந்தது.
கொரோனா காரணமாக வேளாங்கண்ணி பேராலய திருவிழாவுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றியே நடந்தது. வழக்கமாக கொடியேற்றம் என்றாலே வேளாங்கண்ணி நகரம் பக்தர்கள் நடமாட்டத்துடன் உற்சாகமாக காட்சி அளிக்கும். ஆனால் நேற்று வேளாங்கண்ணி கடைத்தெரு, கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
வேளாங்கண்ணி பகுதிக்குள் போலீசார் வெளியூர் நபர்களை அனுமதிக்கவில்லை. கொடியேற்றம் நிகழ்ச்சி பேராலய இணையதளம் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. கொடியேற்று நிகழ்ச்சியில் பேராலய அதிபர் பிரபாகர், பங்குத்தந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்குத்தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆன்டோ ஜேசுராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம், தாசில்தார் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெறும் விழாவில் மராத்தி, கொங்கணி, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
அடுத்த மாதம்(செப்டம்பர்) 7-ந் தேதி(திங்கட்கிழமை) ஆரோக்கியமாதா பெரிய தேர்பவனி நடக்கிறது. மறுநாள் 8-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) ஆரோக்கிய அன்னை பிறந்த நாளை முன்னிட்டு காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் ஆண்டு திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் பேராலயத்தில் மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர், நன்றி அறிவிப்பு நடத்தப்பட்டு, தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் ஆரோக்கியமாதாவின் பிறந்த நாளையொட்டி 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி 4.30 மணியளவில் பேராலயத்தை சுற்றி எடுத்து வரப்பட்டது.
அதைத்தொடர்ந்து பேராலயத்தின் வடக்கு புறத்தில் உள்ள கொடிக்கம்பம் முன்பு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியை புனிதம் செய்தார். இதையடுத்து 5 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. அப்போது பேராலய அலங்கார மின் விளக்குகள் ஒளிர விடப்பட்டன. இதையடுத்து ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் தமிழில் திருப்பலி நடந்தது.
கொரோனா காரணமாக வேளாங்கண்ணி பேராலய திருவிழாவுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றியே நடந்தது. வழக்கமாக கொடியேற்றம் என்றாலே வேளாங்கண்ணி நகரம் பக்தர்கள் நடமாட்டத்துடன் உற்சாகமாக காட்சி அளிக்கும். ஆனால் நேற்று வேளாங்கண்ணி கடைத்தெரு, கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
வேளாங்கண்ணி பகுதிக்குள் போலீசார் வெளியூர் நபர்களை அனுமதிக்கவில்லை. கொடியேற்றம் நிகழ்ச்சி பேராலய இணையதளம் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. கொடியேற்று நிகழ்ச்சியில் பேராலய அதிபர் பிரபாகர், பங்குத்தந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்குத்தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆன்டோ ஜேசுராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம், தாசில்தார் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெறும் விழாவில் மராத்தி, கொங்கணி, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
அடுத்த மாதம்(செப்டம்பர்) 7-ந் தேதி(திங்கட்கிழமை) ஆரோக்கியமாதா பெரிய தேர்பவனி நடக்கிறது. மறுநாள் 8-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) ஆரோக்கிய அன்னை பிறந்த நாளை முன்னிட்டு காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் ஆண்டு திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் பேராலயத்தில் மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர், நன்றி அறிவிப்பு நடத்தப்பட்டு, தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.
வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை வரவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டதால் புதுவை தூய இருதய ஆண்டவர் தேவாலத்தில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் கலந்துகொள்ள சென்னை, காஞ்சீபுரம், திண்டிவனம், மரக்காணம் கோட்டக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் புனித யாத்திரையாக வேளாங்கண்ணிக்கு புதுச்சேரி வழியாக நடந்து செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு புனித பாதயாத்திரையாக பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சில கிறிஸ்தவர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு புறப்பட்டனர். அவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் புதுவை, வில்லியனூர், அரியாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக செல்ல முடியாததால் புதுவை ரெயில் நிலையம் பகுதியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பேராலயத்திற்கு சிறிய சிற்பம் மாதா சிலையை வைத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். இதனை அடுத்து அவர்கள் தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ஒதியஞ்சாலை போலீசார் கொரோனா பரவல் காரணமாக பேராலயத்தில் கூட்டம் கூட வேண்டாம் என்று ஒலிபெருக்கியில் எச்சரித்தனர்.
இதேபோல் அரியாங்குப்பம் சுற்றுப்பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அரியாங்குப்பம் மாதா கோவிலில் நேற்று காலை பிரார்த்தனை செய்தனர். அங்கு கூட்டம் கூடியதால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனர்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு புனித பாதயாத்திரையாக பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சில கிறிஸ்தவர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு புறப்பட்டனர். அவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் புதுவை, வில்லியனூர், அரியாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக செல்ல முடியாததால் புதுவை ரெயில் நிலையம் பகுதியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பேராலயத்திற்கு சிறிய சிற்பம் மாதா சிலையை வைத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். இதனை அடுத்து அவர்கள் தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ஒதியஞ்சாலை போலீசார் கொரோனா பரவல் காரணமாக பேராலயத்தில் கூட்டம் கூட வேண்டாம் என்று ஒலிபெருக்கியில் எச்சரித்தனர்.
இதேபோல் அரியாங்குப்பம் சுற்றுப்பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அரியாங்குப்பம் மாதா கோவிலில் நேற்று காலை பிரார்த்தனை செய்தனர். அங்கு கூட்டம் கூடியதால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனர்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய திருவிழா இன்று(சனிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த பேராலயத்துக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். கீழை நாடுகளின் ‘லூர்து ‘நகர் என்ற பெருமையுடன் விளங்கும் இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் 10 நாட்கள் சிறப்பாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடக்கிறது. 7-ந் தேதி(திங்கட்கிழமை) அன்னையின் பெரிய தேர் பவனி நடக்கிறது. 8-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக தேவாலயத்தில் பக்தர்கள் கூட்டம் கூடி பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று மாலை பக்தர்கள் இல்லாமல் கொடியேற்றம் நடைபெறுகிறது.
இதை நடைமுறைப்படுத்தும் விதமாக மாவட்டத்தில் வேளாங்கண்ணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் 21 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 63 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1,100 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வேளாங் கண்ணி பகுதிக்கு வரக்கூடிய 8 வழிகளில் 6 வழிகள் அடைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு பக்தர்கள் இல்லாமல் அன்னையின் கொடியை தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைக்கிறார். பின்னர் ஆலய வளாகத்தில் கொடி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொடியேற்றம் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகள் பேராலய இணையதளம் வழியாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். விழா நாட்களில் தினமும் மாலை தேர்பவனி ஆலயத்தை சுற்றி நடக்கிறது. 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் ஆண்டு பெருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இரவு 7 மணிக்கு கொடி இறக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடக்கிறது. 7-ந் தேதி(திங்கட்கிழமை) அன்னையின் பெரிய தேர் பவனி நடக்கிறது. 8-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக தேவாலயத்தில் பக்தர்கள் கூட்டம் கூடி பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று மாலை பக்தர்கள் இல்லாமல் கொடியேற்றம் நடைபெறுகிறது.
இதை நடைமுறைப்படுத்தும் விதமாக மாவட்டத்தில் வேளாங்கண்ணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் 21 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 63 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1,100 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வேளாங் கண்ணி பகுதிக்கு வரக்கூடிய 8 வழிகளில் 6 வழிகள் அடைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு பக்தர்கள் இல்லாமல் அன்னையின் கொடியை தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைக்கிறார். பின்னர் ஆலய வளாகத்தில் கொடி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொடியேற்றம் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகள் பேராலய இணையதளம் வழியாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். விழா நாட்களில் தினமும் மாலை தேர்பவனி ஆலயத்தை சுற்றி நடக்கிறது. 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் ஆண்டு பெருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இரவு 7 மணிக்கு கொடி இறக்கப்படுகிறது.
வேளாங்கண்ணி பேராலயத்தில் வருகிற நாளை 29-ந் தேதி(சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு பக்தர்கள் இன்றி திருவிழா கொடியேற்றம் நடக்கிறது என்று பேராலய அதிபர் பிரபாகர் கூறினார்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்து உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாகவும் இந்த பேராலயம் திகழ்கிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கீழை நாடுகளின் ‘லூர்து’ நகர் என்று பெருமையுடன் அழைக்கப்படும் இந்த பேராலயம் அன்னை மரியின் புகழ் பரப்பும் புண்ணிய தலமாக விளங்குகிறது. கிறிஸ்தவ ஆலய கட்டிட கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய ‘பசிலிக்கா’ என்ற பெருமைமிகு பிரமாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ ஆலயங்களில் இந்த பேராலயமும் ஒன்று.
பல்வேறு சிறப்புகளை பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து திருவிழா நடைபெறும். செப்டம்பர் மாதம் 8-ந் தேதி அன்னையின் பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம்.
கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து கொரோனா நோய் தொற்று நாடு முழுவதும் பரவுவதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகின்றது. அதன் அடிப்படையில் மத்திய-மாநில அரசுகள் அறிவுறுத்தலின்படி தேவாலயத்தில் கூட்டம் கூடி பிரார்த்தனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே வேளாங்கண்ணி பேராலயத்தில் கொடியேற்றம் பக்தர்கள் இல்லாமல் நடைபெறுகிறது.
இதுகுறித்து பேராலய அதிபர் பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாளை 29-ந் தேதி(சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு பக்தர்கள் இல்லாமல் அன்னையின் கொடியினை தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைக்கிறார். பின்னர் ஆலய வளாகத்தில் கொடி, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொடியேற்றம் நடைபெறுகிறது.
நவ நாட்களில் ஒவ்வொரு நாளும் தேர்பவனி ஆலயத்தை சுற்றியும் நடைபெறும். செப்டம்பர் 8-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் ஆண்டு பெருவிழா, சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும். பின்னர் மாலை 7 மணிக்கு அன்னையின் கொடி இறக்கப்படும். தொடர்ந்து தமிழில் திருப்பலியுடன் அன்னையின் ஆண்டு விழா நிறைவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கீழை நாடுகளின் ‘லூர்து’ நகர் என்று பெருமையுடன் அழைக்கப்படும் இந்த பேராலயம் அன்னை மரியின் புகழ் பரப்பும் புண்ணிய தலமாக விளங்குகிறது. கிறிஸ்தவ ஆலய கட்டிட கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய ‘பசிலிக்கா’ என்ற பெருமைமிகு பிரமாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ ஆலயங்களில் இந்த பேராலயமும் ஒன்று.
பல்வேறு சிறப்புகளை பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து திருவிழா நடைபெறும். செப்டம்பர் மாதம் 8-ந் தேதி அன்னையின் பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம்.
கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து கொரோனா நோய் தொற்று நாடு முழுவதும் பரவுவதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகின்றது. அதன் அடிப்படையில் மத்திய-மாநில அரசுகள் அறிவுறுத்தலின்படி தேவாலயத்தில் கூட்டம் கூடி பிரார்த்தனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே வேளாங்கண்ணி பேராலயத்தில் கொடியேற்றம் பக்தர்கள் இல்லாமல் நடைபெறுகிறது.
இதுகுறித்து பேராலய அதிபர் பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாளை 29-ந் தேதி(சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு பக்தர்கள் இல்லாமல் அன்னையின் கொடியினை தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைக்கிறார். பின்னர் ஆலய வளாகத்தில் கொடி, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொடியேற்றம் நடைபெறுகிறது.
நவ நாட்களில் ஒவ்வொரு நாளும் தேர்பவனி ஆலயத்தை சுற்றியும் நடைபெறும். செப்டம்பர் 8-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் ஆண்டு பெருவிழா, சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும். பின்னர் மாலை 7 மணிக்கு அன்னையின் கொடி இறக்கப்படும். தொடர்ந்து தமிழில் திருப்பலியுடன் அன்னையின் ஆண்டு விழா நிறைவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடவுளின் மாட்சி பெற்ற அன்னையே! அருள் நிறைந்தவள் என முதன் முதல் அதிதூதர் கபிரியேல் சொன்னபோது கொண்டிருந்த பணிவு வணக்கத்துடன் நானும் இவ்வாழ்த்துல்களைக் கூறுகிறேன். ஏற்றுக் கொள்ளும்.
மகா பரிசுத்த கன்னிகையே, இயேசுவின் தாயாராயிருக்குமாறு நித்தியமாக பரிசுத்த மூவொரு கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட தூய மணியே! குடவுளுடைய திருப்புதல்வன் உமது திரு உதரத்தில் அவதாரமான போதும், ஒன்பது மாதமளவாக அவரை உமது மாசணுகாத கருவில் தாங்கிய போதும், நீர் அடைந்த பேரின்பத்தை உமது ஏழை ஊழியனாகிய அடியேன் உமக்கு நினைவூட்டுகிறேன். எனது அன்பினாலும், செபங்களாலும் நீர் அப்போது அனுபவித்த இன்பத்தை மீண்டும் புதுப்பிக்கவும் கூடுமானால் அதிகரிக்கவும் விரும்புகிறேன்.
துன்பப்படுகிறவர்களுக்கு இரக்கம் மிகுந்த அன்னையே! நீர் அப்போது அனுபவித்த இப்பெருமகிழ்ச்சியைக் கொண்டாடுபவர்களுக்கு நீர் வாக்களித்துள்ள விசே: உதவியையும், பாதுகாப்பையும் எனக்கு இத்துன்ப நேரத்தில் தந்தருளும். உமது தெய்வப் புதல்வனுடைய அளவற்ற வல்லமையில் நம்பிக்கை கொண்டுள்ளேன். கேட்பவருக்கு அளிப்பதாக அவர் தந்த வாக்குறுதியை நினைத்து, உமது பெரும் வல்லமை நிறைந்த மன்றாட்டுக்களில் உறுதி கொண்டுள்ளேன். இந்த நவநாளின் போது நான் செய்யும் விண்ணப்பங்களை கடவுளுடைய திருச்சித்தத்திற்கு ஏற்றவையானால் அவரிடம் பரிந்து பேசி அடைந்து தந்தருளும். நான் கேட்கும் மன்றாட்டுகள் கடவுளுடைய திரு விருப்பத்திற்கு மாறானதாயிருந்தால் எனக்கு எவ்வரம் மிகவும் தேவையோ அதையே அடைந்து தந்தருளும்.
(இங்கு உம்மன்றாட்டு இன்னதெனச் சொல்லவும்)
தேவனின் தாயே! இப்போது உமக்கு வணக்கமாக நான்செய்யும் இந்நவநாளை உம்மில் நான் கொண்டிருக்கும் பெரும் நம்பிக்கையை காட்டுவதற்காகவே செய்கிறேன். இயேசு மனிதனான போது உமது திரு உள்ளம் அடைந்த தெய்வீக மகிழ்ச்சியை நினைத்து அதற்கு வணக்கமாக நான் செய்யும் இந்நவநாளையும் இப்போது நான் சொல்லப் போகும் அருள் நிறை செபத்தையும் அன்புடன் ஏற்றுக் கொள்ளும்.
(இங்கு அருள் நிறை செபத்தை ஒன்பது முறை சொல்லவும்)
கடவுளின் மாட்சி பெற்ற அன்னையே! அருள் நிறைந்தவள் என முதன் முதல் அதிதூதர் கபிரியேல் சொன்னபோது கொண்டிருந்த பணிவு வணக்கத்துடன் நானும் இவ்வாழ்த்துல்களைக் கூறுகிறேன். ஏற்றுக் கொள்ளும்.
நீர் அணிந்திருக்கும் முடியில் என் செபங்கள் அத்தனையும் விண்மீன்களெனத் துலங்குமாறு விரும்புகிறேன். வருந்துவோருக்கு
ஆறுதலே, நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லாப் புனித செயல்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். உமது திரு மகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு நாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும் அது போன்ற உமது அன்பையும் பார்த்து, ஏழையான எனது செபத்தை ஏற்று என்மன்றாட்டை அடைந்து அடைந்து தந்தருளும் தாயே! – ஆமென்.
துன்பப்படுகிறவர்களுக்கு இரக்கம் மிகுந்த அன்னையே! நீர் அப்போது அனுபவித்த இப்பெருமகிழ்ச்சியைக் கொண்டாடுபவர்களுக்கு நீர் வாக்களித்துள்ள விசே: உதவியையும், பாதுகாப்பையும் எனக்கு இத்துன்ப நேரத்தில் தந்தருளும். உமது தெய்வப் புதல்வனுடைய அளவற்ற வல்லமையில் நம்பிக்கை கொண்டுள்ளேன். கேட்பவருக்கு அளிப்பதாக அவர் தந்த வாக்குறுதியை நினைத்து, உமது பெரும் வல்லமை நிறைந்த மன்றாட்டுக்களில் உறுதி கொண்டுள்ளேன். இந்த நவநாளின் போது நான் செய்யும் விண்ணப்பங்களை கடவுளுடைய திருச்சித்தத்திற்கு ஏற்றவையானால் அவரிடம் பரிந்து பேசி அடைந்து தந்தருளும். நான் கேட்கும் மன்றாட்டுகள் கடவுளுடைய திரு விருப்பத்திற்கு மாறானதாயிருந்தால் எனக்கு எவ்வரம் மிகவும் தேவையோ அதையே அடைந்து தந்தருளும்.
(இங்கு உம்மன்றாட்டு இன்னதெனச் சொல்லவும்)
தேவனின் தாயே! இப்போது உமக்கு வணக்கமாக நான்செய்யும் இந்நவநாளை உம்மில் நான் கொண்டிருக்கும் பெரும் நம்பிக்கையை காட்டுவதற்காகவே செய்கிறேன். இயேசு மனிதனான போது உமது திரு உள்ளம் அடைந்த தெய்வீக மகிழ்ச்சியை நினைத்து அதற்கு வணக்கமாக நான் செய்யும் இந்நவநாளையும் இப்போது நான் சொல்லப் போகும் அருள் நிறை செபத்தையும் அன்புடன் ஏற்றுக் கொள்ளும்.
(இங்கு அருள் நிறை செபத்தை ஒன்பது முறை சொல்லவும்)
கடவுளின் மாட்சி பெற்ற அன்னையே! அருள் நிறைந்தவள் என முதன் முதல் அதிதூதர் கபிரியேல் சொன்னபோது கொண்டிருந்த பணிவு வணக்கத்துடன் நானும் இவ்வாழ்த்துல்களைக் கூறுகிறேன். ஏற்றுக் கொள்ளும்.
நீர் அணிந்திருக்கும் முடியில் என் செபங்கள் அத்தனையும் விண்மீன்களெனத் துலங்குமாறு விரும்புகிறேன். வருந்துவோருக்கு
ஆறுதலே, நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லாப் புனித செயல்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். உமது திரு மகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு நாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும் அது போன்ற உமது அன்பையும் பார்த்து, ஏழையான எனது செபத்தை ஏற்று என்மன்றாட்டை அடைந்து அடைந்து தந்தருளும் தாயே! – ஆமென்.
இயேசுவோ நமக்காக கல்வாரி சிலுவையிலே மரித்தார், பின்பு உயிர்த்தார் என்று நினைவு கூறும் அவருடைய அன்பை பெற்றவர்களாய் நம்மை பகைக்கிறவர்களிடத்தில் பகையை மறந்து அவர்களுக்கு நல்ல காரியங்களை செய்வோம்.
ஒரு கிராமத்தில் சிறுமி ஒருவர் நன்றாக படிப்பதிலும் பைபிள் வாசிப்பதிலும் கவனமாக இருந்து வந்தாள். ஆனால் சிறுமியின் வீட்டின் அருகே இருப்பவர்கள் சிறுமியின் குடும்பத்தை பற்றி எப்போதும் ஒரு குற்றத்தை கண்டுபிடித்து சண்டையிட்டு கொண்டிருந்தனர். இப்படி காலங்கள் சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் பக்கத்து வீட்டில் இருந்தவருக்கு பிறந்த நாள் வந்தது.
அந்த நாள் அந்த சிறுமியோ கையில் ரோஜா மலர்களை எடுத்துக்கொண்டு பக்கத்து வீட்டுக்கு சென்று ஐயா உங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக என்று கூறினார். உடனே அவர் அந்த சிறுமியை இமை கொட்டாமல் பார்த்து நின்றார். பின்னர் அந்த சிறுமியை பார்த்து நீ, எனக்காக பிறந்த நாள் வாழ்த்து சொல்கிறாய், நான் உன் கண் முன்னே உன் பெற்றோரை வாயில் வந்தபடி பேசி திட்டி உள்ளேன். உங்களிடம் எப்போதும் சண்டையிட்டு கொண்டு உன் வீட்டில் உள்ள அனைவரும் எங்களிடம் பேசவே மாட்டார்கள். ஆனால் நீயோ எனக்கு வாழ்த்து சொல்ல வந்துள்ளாயே? என்று திகைத்து போனார்.
உடனே அந்த சிறுமி ஐயா, இயேசு உங்களை நேசிக்கிறார். ஆகவே நானும் உங்களை நேசிக்கிறேன் என்று சொன்னாள். பின்னர், இன்று உங்களுக்கு பிறந்த நாள் என்று கேள்விப்பட்டவுடன், நான் தினமும் வாசிக்கும் பைபிளிள் மத்தேயு 5-ம் அதிகாரம் 44-ம் வசனத்தில், உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது எனக்கு ஞாபகம் வந்தது. உடனே தான் உங்களை சந்திக்க வந்தேன். இனி நாம் பகைவர்களாக இருக்க வேண்டாம். நாம் அனைவரும் தேவ பிள்ளைகளாக வாழ்வோம் என்று கூறி சென்று விட்டாள் அந்த சிறுமி. அவரும் மனம் திரும்பி அவர்களை நேசிக்க ஆரம்பித்து நன்றாக வாழ்ந்து வந்தனர்.
இதே போல தான் நாமும் இந்த உலகத்தில் எத்தனையோ காரியங்கள் இயேசுவுக்கு பிடிக்காத காரியத்தை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இயேசுவோ நமக்காக கல்வாரி சிலுவையிலே மரித்தார், பின்பு உயிர்த்தார் என்று நினைவு கூறும் இந்த தவக்காலத்தில் அவருடைய அன்பை பெற்றவர்களாய் நம்மை பகைக்கிறவர்களிடத்தில் பகையை மறந்து அவர்களுக்கு நல்ல காரியங்களை செய்வோம். தேவன்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
ஜெபசிங், அன்பின் ஊழியம், வீரபாண்டி.
அந்த நாள் அந்த சிறுமியோ கையில் ரோஜா மலர்களை எடுத்துக்கொண்டு பக்கத்து வீட்டுக்கு சென்று ஐயா உங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக என்று கூறினார். உடனே அவர் அந்த சிறுமியை இமை கொட்டாமல் பார்த்து நின்றார். பின்னர் அந்த சிறுமியை பார்த்து நீ, எனக்காக பிறந்த நாள் வாழ்த்து சொல்கிறாய், நான் உன் கண் முன்னே உன் பெற்றோரை வாயில் வந்தபடி பேசி திட்டி உள்ளேன். உங்களிடம் எப்போதும் சண்டையிட்டு கொண்டு உன் வீட்டில் உள்ள அனைவரும் எங்களிடம் பேசவே மாட்டார்கள். ஆனால் நீயோ எனக்கு வாழ்த்து சொல்ல வந்துள்ளாயே? என்று திகைத்து போனார்.
உடனே அந்த சிறுமி ஐயா, இயேசு உங்களை நேசிக்கிறார். ஆகவே நானும் உங்களை நேசிக்கிறேன் என்று சொன்னாள். பின்னர், இன்று உங்களுக்கு பிறந்த நாள் என்று கேள்விப்பட்டவுடன், நான் தினமும் வாசிக்கும் பைபிளிள் மத்தேயு 5-ம் அதிகாரம் 44-ம் வசனத்தில், உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது எனக்கு ஞாபகம் வந்தது. உடனே தான் உங்களை சந்திக்க வந்தேன். இனி நாம் பகைவர்களாக இருக்க வேண்டாம். நாம் அனைவரும் தேவ பிள்ளைகளாக வாழ்வோம் என்று கூறி சென்று விட்டாள் அந்த சிறுமி. அவரும் மனம் திரும்பி அவர்களை நேசிக்க ஆரம்பித்து நன்றாக வாழ்ந்து வந்தனர்.
இதே போல தான் நாமும் இந்த உலகத்தில் எத்தனையோ காரியங்கள் இயேசுவுக்கு பிடிக்காத காரியத்தை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இயேசுவோ நமக்காக கல்வாரி சிலுவையிலே மரித்தார், பின்பு உயிர்த்தார் என்று நினைவு கூறும் இந்த தவக்காலத்தில் அவருடைய அன்பை பெற்றவர்களாய் நம்மை பகைக்கிறவர்களிடத்தில் பகையை மறந்து அவர்களுக்கு நல்ல காரியங்களை செய்வோம். தேவன்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
ஜெபசிங், அன்பின் ஊழியம், வீரபாண்டி.
விருந்து அளிக்கும்போது, ஏழைகளையும் உடல் ஊனமுற்றவர்களையும், கால் ஊனமுற்றவர்களையும், பார்வையற்றவர்களையுமே அழையுங்கள்; அப்போது சந்தோஷப்படுவீர்கள்.
யூத அதிகார வர்க்கத்தில் முதன்மை பெற்றிருந்த பரிசேயர்களின் தலைவர் ஒருவனுடைய வீட்டிற்கு விருந்து சாப்பிடச் சென்றிருந்தார் இயேசு. விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் அடித்துப்பிடித்து முதன்மையான இடங்களைத் தேர்ந்தெடுப்பதை இயேசு கவனித்தார். அப்போது அவர்களுக்கு ஓர் உவமையைச் சொன்னார்:
“யாராவது உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், முதன்மையான இடத்தில் போய் உட்காராதீர்கள். ஏனென்றால், உங்களைவிட மதிப்புமிக்க நபரும் அழைக்கப்பட்டிருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் உங்களிடம் வந்து, ‘இவருக்கு இந்த இடத்தை விட்டுக் கொடுங்கள்’ என்று கேட்பார். அப்போது, நீங்கள் வெட்கத்தோடு கூனிக் குறுகி கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். எனவே நீங்கள் அழைக்கப்பட்டிருந்தால், கடைசி இடத்தில் போய் உட்காருங்கள்; அப்போது உங்களை அழைத்தவர் வந்து, ‘நண்பரே, முதன்மையான இடத்தில் போய் உட்காருங்கள்’ என்று சொல்வார். அப்போது, மற்ற விருந்தினர்கள் முன் உங்களுக்குக் கவுரவமாக இருக்கும். தன்னைத் தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தான் தாழ்த்துகிற எவனும் உயர்த்தப்படுவான்” (லூக்கா 14:8-11) என்றார்.
பிறகு, தன்னை விருந்துக்கு அழைத்த பரிசேயர் தலைவனைக் கனிவுடன் அருகில் அழைத்த அவர், “நீங்கள் விருந்தை அளிக்கும்போது, உங்கள் நண்பர்களையோ, சகோதரர்களையோ, உறவினர்களையோ, அக்கம் பக்கத்திலுள்ள பணக்காரர்களையோ அழைக்க வேண்டாம். அப்படி அழைத்தால் ஒருவேளை பதிலுக்கு அவர்களும் உங்களை எப்போதாவது அழைக்கலாம்.
அது உங்களுக்குச் செய்யப்படுகிற கைமாறாகிவிடும். அதனால் விருந்து அளிக்கும்போது, ஏழைகளையும் உடல் ஊனமுற்றவர்களையும், கால் ஊனமுற்றவர்களையும், பார்வையற்றவர்களையுமே அழையுங்கள்; அப்போது சந்தோஷப்படுவீர்கள். ஏனென்றால், உங்களுக்குக் கைமாறு செய்ய அவர்களிடம் ஒன்றும் இருக்காது. ஆனால், நீதிமான்களுடைய உயிர்த்தெழுதலின்போது உங்களுக்குக் கைமாறு கிடைக்கும்” (லூக்கா 15:12-14 ) என்றார்.
“உளப்பூர்வமான அழைப்பை நிராகரித்த எவரும் நான் அளிக்கிற விருந்தைச் சாப்பிடப்போவதில்லை என்று நான் உங்கள் எல்லாருக்கும் சொல்கிறேன்” என்றார் இயேசு.
“யாராவது உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், முதன்மையான இடத்தில் போய் உட்காராதீர்கள். ஏனென்றால், உங்களைவிட மதிப்புமிக்க நபரும் அழைக்கப்பட்டிருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் உங்களிடம் வந்து, ‘இவருக்கு இந்த இடத்தை விட்டுக் கொடுங்கள்’ என்று கேட்பார். அப்போது, நீங்கள் வெட்கத்தோடு கூனிக் குறுகி கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். எனவே நீங்கள் அழைக்கப்பட்டிருந்தால், கடைசி இடத்தில் போய் உட்காருங்கள்; அப்போது உங்களை அழைத்தவர் வந்து, ‘நண்பரே, முதன்மையான இடத்தில் போய் உட்காருங்கள்’ என்று சொல்வார். அப்போது, மற்ற விருந்தினர்கள் முன் உங்களுக்குக் கவுரவமாக இருக்கும். தன்னைத் தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தான் தாழ்த்துகிற எவனும் உயர்த்தப்படுவான்” (லூக்கா 14:8-11) என்றார்.
பிறகு, தன்னை விருந்துக்கு அழைத்த பரிசேயர் தலைவனைக் கனிவுடன் அருகில் அழைத்த அவர், “நீங்கள் விருந்தை அளிக்கும்போது, உங்கள் நண்பர்களையோ, சகோதரர்களையோ, உறவினர்களையோ, அக்கம் பக்கத்திலுள்ள பணக்காரர்களையோ அழைக்க வேண்டாம். அப்படி அழைத்தால் ஒருவேளை பதிலுக்கு அவர்களும் உங்களை எப்போதாவது அழைக்கலாம்.
அது உங்களுக்குச் செய்யப்படுகிற கைமாறாகிவிடும். அதனால் விருந்து அளிக்கும்போது, ஏழைகளையும் உடல் ஊனமுற்றவர்களையும், கால் ஊனமுற்றவர்களையும், பார்வையற்றவர்களையுமே அழையுங்கள்; அப்போது சந்தோஷப்படுவீர்கள். ஏனென்றால், உங்களுக்குக் கைமாறு செய்ய அவர்களிடம் ஒன்றும் இருக்காது. ஆனால், நீதிமான்களுடைய உயிர்த்தெழுதலின்போது உங்களுக்குக் கைமாறு கிடைக்கும்” (லூக்கா 15:12-14 ) என்றார்.
“உளப்பூர்வமான அழைப்பை நிராகரித்த எவரும் நான் அளிக்கிற விருந்தைச் சாப்பிடப்போவதில்லை என்று நான் உங்கள் எல்லாருக்கும் சொல்கிறேன்” என்றார் இயேசு.
எங்கள் திரு மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் திரு இதயமே! நாங்கள் நீசப் பாவிகளாய் இருந்தாலும், உம்முடைய தயையை நம்பிக்கொண்டு, உம் திருமுன் பயபக்தியுள்ள வணக்கத்துடனே நெடுஞ்சாண்கடையாய் விழுந்து, நீர் எங்கள் மீது இரக்கமாயிருக்க மன்றாடுகிறோம்.
எங்கள் திரு மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் திரு இதயமே! நாங்கள் நீசப் பாவிகளாய் இருந்தாலும், உம்முடைய தயையை நம்பிக்கொண்டு, உம் திருமுன் பயபக்தியுள்ள வணக்கத்துடனே நெடுஞ்சாண்கடையாய் விழுந்து, நீர் எங்கள் மீது இரக்கமாயிருக்க மன்றாடுகிறோம். எங்கள் பாவங்களையும் நன்றி கெட்டத்தனத்தையும் நினைத்து வருந்துகிறோம். அவைகளை அருவருத்துஎன்றென்றைக்கும் விலக்கிவிடவும், எங்களாலே ஆன மட்டும் அவைகளுக்காக கழுவாய் செய்யும் துணிகிறோம்.
ஆண்டவரே! எளியோர் உமக்குச் செய்த குற்ற துரோகங்களுக்காகவும், பொல்லாத மக்கள் உமக்குச் செய்கிற நிந்தை அவமானங்களுக்காகவும் மிகுந்த மனத்துயர் கொண்டு, அவற்றை நீர் பொறுக்கவும், அனைவரையும் நல்வழியிலே திருப்பி மீட்கவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம் திரு இதயத்துக்குச செய்யப்பட்ட எல்லா நிந்தை அவமான துரோகங்களுக்கும் கழுவாயாக எளியோரின் தொழுகை வணக்கத் துதிகளுடன் விண்ணுலகத் தூதர்களும் புனிதர்களும் செலுத்தும் தொழுகைப் புகழ்ச்சிகளையும், மண்ணுலகில் புண்ணியவாளர் செலுத்தும் துதிகளையும் மிகுந்த தாழ்ச்சி, பணிவுடனே உமக்கு காணிக்கையாக்குகிறோம்.
எங்கள் திவ்விய இயேசுவே, எங்கள் ஒரே நம்பிக்கையே, எளியோர் எங்களை முழுவதும் இன்றும் என்றும் உமது திரு இதயத்துக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இறைவா! எங்கள் இயதங்களை கைவசப்படுத்தி, தூய்மையாக்கி, புனிதமையச் செய்தருளும், எங்கள் வாழ்வின் இறுதிவரை எங்களை எல்லா எதிரிகளின் சூழ்ச்சிகளினின்றும் காப்பாற்றும். மாந்தர் அனைவருக்காவும் சிலுவை மரத்தில் நீர் சிந்தின திரு இரத்தத்தைப் பார்த்து இந்த மன்றாட்டுகளை நிறைவேற்றியருளும் – ஆமென்.
ஆண்டவரே! எளியோர் உமக்குச் செய்த குற்ற துரோகங்களுக்காகவும், பொல்லாத மக்கள் உமக்குச் செய்கிற நிந்தை அவமானங்களுக்காகவும் மிகுந்த மனத்துயர் கொண்டு, அவற்றை நீர் பொறுக்கவும், அனைவரையும் நல்வழியிலே திருப்பி மீட்கவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம் திரு இதயத்துக்குச செய்யப்பட்ட எல்லா நிந்தை அவமான துரோகங்களுக்கும் கழுவாயாக எளியோரின் தொழுகை வணக்கத் துதிகளுடன் விண்ணுலகத் தூதர்களும் புனிதர்களும் செலுத்தும் தொழுகைப் புகழ்ச்சிகளையும், மண்ணுலகில் புண்ணியவாளர் செலுத்தும் துதிகளையும் மிகுந்த தாழ்ச்சி, பணிவுடனே உமக்கு காணிக்கையாக்குகிறோம்.
எங்கள் திவ்விய இயேசுவே, எங்கள் ஒரே நம்பிக்கையே, எளியோர் எங்களை முழுவதும் இன்றும் என்றும் உமது திரு இதயத்துக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இறைவா! எங்கள் இயதங்களை கைவசப்படுத்தி, தூய்மையாக்கி, புனிதமையச் செய்தருளும், எங்கள் வாழ்வின் இறுதிவரை எங்களை எல்லா எதிரிகளின் சூழ்ச்சிகளினின்றும் காப்பாற்றும். மாந்தர் அனைவருக்காவும் சிலுவை மரத்தில் நீர் சிந்தின திரு இரத்தத்தைப் பார்த்து இந்த மன்றாட்டுகளை நிறைவேற்றியருளும் – ஆமென்.
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு தேவன் உண்மையும், நீதியும் உள்ளவராய் இருக்கிறார் என்று 1 யோவான் முதலாம் அதிகாரம் 9-ம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.
புது வாழ்வின் ரகசியம் என்ன? என்பதை சற்று தியானித்து பார்ப்போம்.
புதிதாக வந்த அதிகாரி ஒருவர் கப்பல் துறைமுகத்தை பார்வையிட சென்றிருந்தார். அங்கே குற்றவாளிகளால் இயக்கப்படும் கப்பல் ஒன்றைக்கண்டார். அதில் ஏறி அதிகாரி அங்கிருந்த குற்றவாளிகளைக் கண்டு அவர்களை விசாரிக்க ஆரம்பித்தார். என்ன காரணங்களினால் இங்கு வந்தீர்கள்? என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைக்கூறி தாங்கள் தவறும் ஏதும் செய்யவில்லை என்றும் நாங்கள் குற்றவாளிகள் இல்லை என்றும் கூறினார்கள். கடைசியாக ஒருவன் மட்டும் ஐயா! நான் பணப்பையை திருடி போலீசிடம் பிடிபட்டேன். எனவே இங்கே குற்றவாளியாக தண்டனையை அனுபவிக்கிறேன் என்றான். உடனே அந்த அதிகாரி அவனை பார்த்து குற்றம் செய்தவர்கள் அனைவரும் அவர்கள் குற்றங்களை மறைத்துவிட்டனர். ஆனால் நீயோ செய்த குற்றத்தை ஏற்றுக்கொண்டபடியினால் உன்னை நான் விடுதலை செய்கிறேன் என்று கூறி அவனை விடுதலை செய்து விட்டார்.
ஆம் பிரியமானவர்களே, பொதுவாக தவறுகளை மறைப்பது மனித இயல்பு, நாம் செய்யும் தவறை மறைக்கும் செயல்களில் ஈடுபடும் போது தவறுக்கு மேல் தவறு செய்யும்படியான சூழல்கள் ஏற்பட்டு விடுகிறது. வேத வசனத்தில்,‘பாவம் இல்லை என்போமேயானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாய் இருப்போம். சத்தியம் நமக்குள் இராது அதை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்’ என்று சொல்லப்பட்டுள்ளது.
எனவே தேவ பிள்ளைகளே மேற்கண்ட சம்பவத்தில் தவறை ஒப்புக்கொண்டதினால் விடுதலை பெற்ற மனிதனைப்போல நாமும் நம்முடைய வாழ்வில் தேவனுக்கு பிரியமில்லாததை செய்தோம் என்றால் அவற்றை ஒப்புக்கொள்வோம். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு தேவன் உண்மையும், நீதியும் உள்ளவராய் இருக்கிறார் என்று 1 யோவான் முதலாம் அதிகாரம் 9-ம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.
எனவே இந்த தவக்காலத்தில் நம்முடைய தவறுகளை தேவனிடத்தில் அறிக்கையிட்டு புது வாழ்வு வாழ ஆயத்தமாவோம் எனபதே புதுவாழ்வின் ரகசியமாகும்.
சாம்ராஜ், சுவிஷேச ஊழியம், பல்லடம்.
புதிதாக வந்த அதிகாரி ஒருவர் கப்பல் துறைமுகத்தை பார்வையிட சென்றிருந்தார். அங்கே குற்றவாளிகளால் இயக்கப்படும் கப்பல் ஒன்றைக்கண்டார். அதில் ஏறி அதிகாரி அங்கிருந்த குற்றவாளிகளைக் கண்டு அவர்களை விசாரிக்க ஆரம்பித்தார். என்ன காரணங்களினால் இங்கு வந்தீர்கள்? என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைக்கூறி தாங்கள் தவறும் ஏதும் செய்யவில்லை என்றும் நாங்கள் குற்றவாளிகள் இல்லை என்றும் கூறினார்கள். கடைசியாக ஒருவன் மட்டும் ஐயா! நான் பணப்பையை திருடி போலீசிடம் பிடிபட்டேன். எனவே இங்கே குற்றவாளியாக தண்டனையை அனுபவிக்கிறேன் என்றான். உடனே அந்த அதிகாரி அவனை பார்த்து குற்றம் செய்தவர்கள் அனைவரும் அவர்கள் குற்றங்களை மறைத்துவிட்டனர். ஆனால் நீயோ செய்த குற்றத்தை ஏற்றுக்கொண்டபடியினால் உன்னை நான் விடுதலை செய்கிறேன் என்று கூறி அவனை விடுதலை செய்து விட்டார்.
ஆம் பிரியமானவர்களே, பொதுவாக தவறுகளை மறைப்பது மனித இயல்பு, நாம் செய்யும் தவறை மறைக்கும் செயல்களில் ஈடுபடும் போது தவறுக்கு மேல் தவறு செய்யும்படியான சூழல்கள் ஏற்பட்டு விடுகிறது. வேத வசனத்தில்,‘பாவம் இல்லை என்போமேயானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாய் இருப்போம். சத்தியம் நமக்குள் இராது அதை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்’ என்று சொல்லப்பட்டுள்ளது.
எனவே தேவ பிள்ளைகளே மேற்கண்ட சம்பவத்தில் தவறை ஒப்புக்கொண்டதினால் விடுதலை பெற்ற மனிதனைப்போல நாமும் நம்முடைய வாழ்வில் தேவனுக்கு பிரியமில்லாததை செய்தோம் என்றால் அவற்றை ஒப்புக்கொள்வோம். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு தேவன் உண்மையும், நீதியும் உள்ளவராய் இருக்கிறார் என்று 1 யோவான் முதலாம் அதிகாரம் 9-ம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.
எனவே இந்த தவக்காலத்தில் நம்முடைய தவறுகளை தேவனிடத்தில் அறிக்கையிட்டு புது வாழ்வு வாழ ஆயத்தமாவோம் எனபதே புதுவாழ்வின் ரகசியமாகும்.
சாம்ராஜ், சுவிஷேச ஊழியம், பல்லடம்.
வேளாங்கண்ணி பேராலயத்தில் வருகிற 29-ந் தேதி(சனிக்கிழமை) பக்தர்கள் இன்றி திருவிழா கொடியேற்றம் நடக்கிறது என்று பேராலய அதிபர் பிரபாகர் கூறினார்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்து உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாகவும் இந்த பேராலயம் திகழ்கிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கீழை நாடுகளின் ‘லூர்து’ நகர் என்று பெருமையுடன் அழைக்கப்படும் இந்த பேராலயம் அன்னை மரியின் புகழ் பரப்பும் புண்ணிய தலமாக விளங்குகிறது. கிறிஸ்தவ ஆலய கட்டிட கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய ‘பசிலிக்கா’ என்ற பெருமைமிகு பிரமாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ ஆலயங்களில் இந்த பேராலயமும் ஒன்று.
பல்வேறு சிறப்புகளை பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து திருவிழா நடைபெறும். செப்டம்பர் மாதம் 8-ந் தேதி அன்னையின் பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம்.
கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து கொரோனா நோய் தொற்று நாடு முழுவதும் பரவுவதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகின்றது. அதன் அடிப்படையில் மத்திய-மாநில அரசுகள் அறிவுறுத்தலின்படி தேவாலயத்தில் கூட்டம் கூடி பிரார்த்தனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே வேளாங்கண்ணி பேராலயத்தில் கொடியேற்றம் பக்தர்கள் இல்லாமல் நடைபெறுகிறது.
இதுகுறித்து பேராலய அதிபர் பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற 29-ந் தேதி(சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு பக்தர்கள் இல்லாமல் அன்னையின் கொடியினை தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைக்கிறார். பின்னர் ஆலய வளாகத்தில் கொடி, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொடியேற்றம் நடைபெறுகிறது.
நவ நாட்களில் ஒவ்வொரு நாளும் தேர்பவனி ஆலயத்தை சுற்றியும் நடைபெறும். செப்டம்பர் 8-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் ஆண்டு பெருவிழா, சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும். பின்னர் மாலை 7 மணிக்கு அன்னையின் கொடி இறக்கப்படும். தொடர்ந்து தமிழில் திருப்பலியுடன் அன்னையின் ஆண்டு விழா நிறைவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கீழை நாடுகளின் ‘லூர்து’ நகர் என்று பெருமையுடன் அழைக்கப்படும் இந்த பேராலயம் அன்னை மரியின் புகழ் பரப்பும் புண்ணிய தலமாக விளங்குகிறது. கிறிஸ்தவ ஆலய கட்டிட கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய ‘பசிலிக்கா’ என்ற பெருமைமிகு பிரமாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ ஆலயங்களில் இந்த பேராலயமும் ஒன்று.
பல்வேறு சிறப்புகளை பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து திருவிழா நடைபெறும். செப்டம்பர் மாதம் 8-ந் தேதி அன்னையின் பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம்.
கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து கொரோனா நோய் தொற்று நாடு முழுவதும் பரவுவதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகின்றது. அதன் அடிப்படையில் மத்திய-மாநில அரசுகள் அறிவுறுத்தலின்படி தேவாலயத்தில் கூட்டம் கூடி பிரார்த்தனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே வேளாங்கண்ணி பேராலயத்தில் கொடியேற்றம் பக்தர்கள் இல்லாமல் நடைபெறுகிறது.
இதுகுறித்து பேராலய அதிபர் பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற 29-ந் தேதி(சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு பக்தர்கள் இல்லாமல் அன்னையின் கொடியினை தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைக்கிறார். பின்னர் ஆலய வளாகத்தில் கொடி, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொடியேற்றம் நடைபெறுகிறது.
நவ நாட்களில் ஒவ்வொரு நாளும் தேர்பவனி ஆலயத்தை சுற்றியும் நடைபெறும். செப்டம்பர் 8-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் ஆண்டு பெருவிழா, சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும். பின்னர் மாலை 7 மணிக்கு அன்னையின் கொடி இறக்கப்படும். தொடர்ந்து தமிழில் திருப்பலியுடன் அன்னையின் ஆண்டு விழா நிறைவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் வேகமாக பரவும் இந்த சூழலில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மாதாவின் பிறந்த நாள் செப்டம்பர் 8-ந் தேதி ஆகும். இதையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவின் பிறந்த நாள் 10 நாட்கள் திருவிழாவாக வெகு விமரிசையாய் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நாட்களில் வேளாங்கண்ணி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். இதில் கலந்து கொள்வதற்காக வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நாகை மாவட்டத்துக்கு வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவும் இந்த சூழலில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா வருகிற 29-ந் தேதி(சனிக்கிழமை) அன்று தொடங்க உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த தருவாயில் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் திருவிழாவுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வருகை புரிய தடை செய்யப்படுகிறது.
மேலும் வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித ஆரோக்கிய அன்னையின் ஆண்டு பெருவிழாவினை பொதுமக்கள் கண்டு களித்திடும் வகையில் மாற்று ஏற்பாடாக ஆலய ஆராதனையை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்திட வேளாங்கண்ணி பேரலாயத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதாலும், கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுத்திடவும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவும் இந்த சூழலில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா வருகிற 29-ந் தேதி(சனிக்கிழமை) அன்று தொடங்க உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த தருவாயில் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் திருவிழாவுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வருகை புரிய தடை செய்யப்படுகிறது.
மேலும் வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித ஆரோக்கிய அன்னையின் ஆண்டு பெருவிழாவினை பொதுமக்கள் கண்டு களித்திடும் வகையில் மாற்று ஏற்பாடாக ஆலய ஆராதனையை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்திட வேளாங்கண்ணி பேரலாயத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதாலும், கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுத்திடவும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






