search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
    X
    வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை 5.30 மணிக்கு மதுரை உயர் மறை மாவட்ட முதன்மை குரு ஜெயராஜ் தலைமையில் அன்னையின் கொடியேற்றமும், சிறப்பு திருப்பலியும் நடந்தது. விழாவில் வருகிற 8-ந் தேதி காலை ஆரோக்கிய அன்னையின் பிறப்பு பெருவிழா நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு கூட்டுத் திருப்பலியை சபை மாநில அதிபர் சாந்துராஜா நடத்துகிறார். 9-ந் தேதி காலை 6.30 மணிக்கு பங்குத்தந்தை ஆரோக்கிய தாஸ் தலைமையில் கொடி இறக்கப்பட்டு நன்றி திருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஜோசப் அடிகளார், பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ், உதவி பங்குத்தந்தை குழந்தை யேசுதாஸ் அடிகளார் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.மேலும் கொரோனா ஊரடங்கினால் தேரோட்டம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அரசின் வழிமுறைகளை கடைபிடித்து திருவிழா நடத்தவும், பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்பதையும் வீட்டிலிருந்தே சமூக வலைதளம் மூலம் நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×