என் மலர்
கிறித்தவம்
அரியாங்குப்பத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 332-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கிறிஸ்தவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து ஆரோக்கிய அன்னையை பிரார்த்தித்தனர்.
அரியாங்குப்பத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 332-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முன்னதாக நேற்று காலை சிறப்பு திருப்பலியும், 6.45 மணிக்கு பங்கு தந்தை அந்தோணிரோச் தலைமையில் ஆலயத்தின் வளாகத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கியது. இதையொட்டி அங்கு வந்து இருந்த கிறிஸ்தவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து ஆரோக்கிய அன்னையை பிரார்த்தித்தனர்.
கொடியேற்றப்படுவதற்கு முன் ஆலயத்தை சுற்றி கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. விழாவையொட்டி தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் உத்தரவின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வருகிற 8-ந் தேதி ஆரோக்கிய அன்னை பிறந்த நாளையொட்டியும், செப்டம்பர் 13-ந்தேதி தேதி ஆலயத்தின் ஆண்டு விழா நாளையொட்டியும் சிறப்பு திருப்பலிகள் நடத்தப்பட உள்ளன. இதனை கிறிஸ்தவர்கள் வீட்டில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொடியேற்றப்படுவதற்கு முன் ஆலயத்தை சுற்றி கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. விழாவையொட்டி தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் உத்தரவின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வருகிற 8-ந் தேதி ஆரோக்கிய அன்னை பிறந்த நாளையொட்டியும், செப்டம்பர் 13-ந்தேதி தேதி ஆலயத்தின் ஆண்டு விழா நாளையொட்டியும் சிறப்பு திருப்பலிகள் நடத்தப்பட உள்ளன. இதனை கிறிஸ்தவர்கள் வீட்டில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் திருக்குற்றால மலைச்சாரலில் சித்திரா நதிக்கரையில் உள்ள தென்காசியில் உலகம்மன் சமேத காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
காசி மாநகர் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இந்துக்கள் ஒரு முறையாவது காசி யாத்திரை சென்று வரவேண்டும் என்று விரும்புவார்கள். காசி திருத்தலம், சிவபெருமான் விஸ்வநாதராக எழுந்தருளியிருக்கும் ஒரு கோயிலாகவே போற்றப்படுகிறது. காசியில் இறந்தால் முக்தியென்றும் அங்கு இறப்பவர்களின் காதுகளில் ராம நாமத்தை சிவபெருமான் ஓதுவதாகவும் ஐதீகமும் உள்ளது. காசிக்குச் செல்பவர்கள் குறிப்பாக மன்னர்களும் பெரியவர்களும் அங்கு கங்கையாற்றில் சுயம்புவாகக் கிடைக்கும் பாணலிங்கங்களை எடுத்து வந்து, தம் ஊர்களில் பிரதிஷ்டை செய்து காசி விஸ்வநாதராக வழிபடுவது வழக்கம். அப்படிப்பட்ட சிவத்தலங்களில் ஒன்றுதான் தென்காசி.
திருநெல்வேலி மாவட்டம் திருக்குற்றால மலைச்சாரலில் சித்திரா நதிக்கரையில் உள்ள தென்காசியில் உலகம்மன் சமேத காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அரிகேசரி பராக்கிரம பாண்டிய மன்னன் 1467ம் ஆண்டு இந்த ஆலயத்தை அமைத்ததாக இங்குள்ள கல்வெட்டொன்று கூறுகிறது. தலபுராணம், இந்த தென்காசி திருத்தலம் சச்சிதானந்தபுரம், முத்துத் தாண்டவநல்லூர், ஆனந்தகூத்தனூர், தென்புலியூர் செண்பக் பொழிலூர் என்ற திருப்பெயர்களை கொண்டதாகக் கூறுகிறது.
தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியன் நாள்தோறும் காசிக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு வர விரும்பினான். இவன் எப்பொழுதும் வணங்கி வழிபடும் முருகப் பெருமான் ஒருநாள் அவனது கனவில் தோன்றி ‘ககன குளிகையை’ அவன் கையில் கொடுக்க அதை அவன் வாயிலிட்டுக்கொண்டு, பிறர் கண்களிலிருந்து மறைந்து தினமும் வான் வழியாக பறந்து சென்று காசி விஸ்வநாதரை வழிபட்டு விட்டு சூரியன் உதிக்கும் முன்னர் திரும்பிவிடுவது வழக்கம். ஒருநாள் மனைவியும் அவனும் சேர்ந்து சென்று காசியிலிருந்து லிங்கத்தை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து காசி விஸ்வநாதர் என்று பெயரிட்டு திருக்கோயில் அமைத்து, அந்த ஊருக்கு தென்காசி என்று பெயரிட்டதாகவும் தலபுராணம் கூறுகிறது.
வடகாசியைவிட இந்த தென்காசி புனிதமானது என்று சொல்லும் புராணம், ‘காசியில் இறந்தால்தான் முக்தி. ஆனால் தென்காசியிலோ பிறந்தால் இருந்தால் இறந்தால் முக்தி’ என்றும் சொல்கிறது. இந்த சிவாலயம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் சகாப்தம் 1369க்குப் பின்னர் ஆனி மாதம் 13ம் நாள் சனிக்கிழமை இரவு மீன லக்னத்தில் கருவறையில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்லியல் துறையினர் இந்த நாளை 10.6.1467 என்று கணித்து கூறியுள்ளனர்.
இரண்டு பெரிய யானைகள் பெரிய தேர் ஒன்றை இழுத்துச் செல்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது, ஆலயம். நந்திமண்டபம், முகமண்டபம், மகாமண்டபம் ஆகியவை, கலைக்கூடங்கள் என்று சொல்லுமளவுக்கு கடவுளர் திருவுருவங்கள், விலங்குகள், பறவைகள் என கவின்மிகு சிற்பங்களால் நிரம்பி வழிகின்றன. சைவமும் வைணவமும் ஒன்றே என்பதை வலியுறுத்தும் விதமாக இங்குள்ள தூண்களில் திருமாலின் அவதார சிற்பங்கள், அனுமன் திருவுருவங்களைக் காணலாம். வடக்கு பிராகாரத்தில் பராக்கிரம பாண்டியன் அமைத்த காசி கிணறு வற்றாமல், இன்றும் சுரந்து கொண்டேயிருக்கிறது. கங்கையை நினைவு கூறும் வகையில் அவன் இந்த கிணற்றை அமைத்ததாக கூறுவதுண்டு.
கருவறைக்குள் காசி விஸ்வநாத லிங்கம் போன்றே காட்சியளிக்கும் தென்காசி லிங்கப் பெருமானை மன்னன் தன் கோட்டையிலிருந்து பார்த்து வழிபடும்படி கோட்டையில் சில ஏற்பாடுகளை அவன் அமைத்திருந்தான். தற்போது இது மேட்டுத் தெரு எனப்படுகிறது. இன்றும் நாம் காசி விஸ்வநாதரை இங்கிருந்து தரிசிக்க முடியும். அம்மன் சந்நதியில் இறைவி உலகம்மை, அருள் பொலியும் திருமுகத்துடன் வலக்கையில் தாமரை மலர், கிளி ஏந்தி இடக்கையை தொங்கவிட்டு பத்ம பீடத்தில் ஆடை அணிகலன்களுடன் நின்ற நிலையில், எழில் ததும்ப பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
காசி விஸ்வநாதருக்கும் உலகம்மைக்கும் இத்தனை புகழ் மிக்க பெருங்கோயிலை எடுத்த பராக்கிரம பாண்டியன், ‘இக்கோயில் இறைவன் அருளால் என்றும் நிலைத்து நிற்கும். ஆயினும் இது ஒருவேளை பழுதுபட்டால் அந்த சிதைவுகளை அகற்றி செப்பனிடுபவர்களின் திருவடியில் விழுந்து வணங்குவேன் என்றும் உலகத்தார் முன்னிலையில் இவ்வாறு விழுந்து வணங்குவதுடன் மேலும் மேலும் விருத்தி செய்வோரின் திருவடியிலும் என் திருமுடியை தாழ்த்தி இறைஞ்சுவேன்’ என்றும் உருகி கல்வெட்டிலும் பொறித்து வைத்துள்ளான்.
ஒன்பது நிலையுடன் கூடிய பெரிய ராஜகோபுரம். தொல்லியலாரின் ஆய்வுப்படி 3.11.1457ல் கால் கோளிடப்பட்டு பின்னர் வந்த மன்னர் பொன்னின் பெருமாள் அழகன் குலசேகரன் என்பவரால் 1518ல் கோபுரப்பணி நிறைவு செய்ததாக கூறப்படுகிறது. அவனது காலத்திற்குப் பின் அப்பகுதி சேர மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டு, சேர மன்னன் உதய மார்த்தாண்ட வர்மன் தென்காசி கோயில் மற்றும் கோபுரத் திருப்பணிகள் செய்து 1524ல் குடமுழுக்கு செய்துள்ளான்.
அதன்பிறகு 1792-1824க்குள் பாளையக்காரர்கள் வெள்ளையர்களின் ஆவணங்களை அழிப்பதற்காக வைத்த நெருப்பு, கோபுரத்தை அழித்துவிட்டதாக கூறப்படுகிறது. பெருமழை பொழிந்தபோது பேரிடி விழுந்து கோபுரம் அழிந்ததாகவும் கூறுவதுண்டு.
அதன்பின் 150 ஆண்டுகளுக்குப் பின் திருப்பணி குழு ஒன்று அமைக்கப்பட்டு, தற்போதைய வானளாவிய ராஜகோபுரம், சுவாமி, அம்மன் பரிவார தேவதைகளுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. தற்போதைய ராஜகோபுரத்தில் 800 அழகிய சுதைச் சிற்பங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆறுகால வழிபாடுகள் கொண்ட இந்த தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மாசி மாதம் பிரம்மோத்சவம், ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, ஆவணி மூலம், தெப்பத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. மாசி மாத பிரம்மோத்சவத்தை ஆரம்பித்து வைத்தவன் பராக்கிரம பாண்டியன் என்பதால் இன்றும் முதல் மரியாதை அவனுக்கே!
திருநெல்வேலி மாவட்டம் திருக்குற்றால மலைச்சாரலில் சித்திரா நதிக்கரையில் உள்ள தென்காசியில் உலகம்மன் சமேத காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அரிகேசரி பராக்கிரம பாண்டிய மன்னன் 1467ம் ஆண்டு இந்த ஆலயத்தை அமைத்ததாக இங்குள்ள கல்வெட்டொன்று கூறுகிறது. தலபுராணம், இந்த தென்காசி திருத்தலம் சச்சிதானந்தபுரம், முத்துத் தாண்டவநல்லூர், ஆனந்தகூத்தனூர், தென்புலியூர் செண்பக் பொழிலூர் என்ற திருப்பெயர்களை கொண்டதாகக் கூறுகிறது.
தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியன் நாள்தோறும் காசிக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு வர விரும்பினான். இவன் எப்பொழுதும் வணங்கி வழிபடும் முருகப் பெருமான் ஒருநாள் அவனது கனவில் தோன்றி ‘ககன குளிகையை’ அவன் கையில் கொடுக்க அதை அவன் வாயிலிட்டுக்கொண்டு, பிறர் கண்களிலிருந்து மறைந்து தினமும் வான் வழியாக பறந்து சென்று காசி விஸ்வநாதரை வழிபட்டு விட்டு சூரியன் உதிக்கும் முன்னர் திரும்பிவிடுவது வழக்கம். ஒருநாள் மனைவியும் அவனும் சேர்ந்து சென்று காசியிலிருந்து லிங்கத்தை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து காசி விஸ்வநாதர் என்று பெயரிட்டு திருக்கோயில் அமைத்து, அந்த ஊருக்கு தென்காசி என்று பெயரிட்டதாகவும் தலபுராணம் கூறுகிறது.
வடகாசியைவிட இந்த தென்காசி புனிதமானது என்று சொல்லும் புராணம், ‘காசியில் இறந்தால்தான் முக்தி. ஆனால் தென்காசியிலோ பிறந்தால் இருந்தால் இறந்தால் முக்தி’ என்றும் சொல்கிறது. இந்த சிவாலயம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் சகாப்தம் 1369க்குப் பின்னர் ஆனி மாதம் 13ம் நாள் சனிக்கிழமை இரவு மீன லக்னத்தில் கருவறையில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்லியல் துறையினர் இந்த நாளை 10.6.1467 என்று கணித்து கூறியுள்ளனர்.
இரண்டு பெரிய யானைகள் பெரிய தேர் ஒன்றை இழுத்துச் செல்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது, ஆலயம். நந்திமண்டபம், முகமண்டபம், மகாமண்டபம் ஆகியவை, கலைக்கூடங்கள் என்று சொல்லுமளவுக்கு கடவுளர் திருவுருவங்கள், விலங்குகள், பறவைகள் என கவின்மிகு சிற்பங்களால் நிரம்பி வழிகின்றன. சைவமும் வைணவமும் ஒன்றே என்பதை வலியுறுத்தும் விதமாக இங்குள்ள தூண்களில் திருமாலின் அவதார சிற்பங்கள், அனுமன் திருவுருவங்களைக் காணலாம். வடக்கு பிராகாரத்தில் பராக்கிரம பாண்டியன் அமைத்த காசி கிணறு வற்றாமல், இன்றும் சுரந்து கொண்டேயிருக்கிறது. கங்கையை நினைவு கூறும் வகையில் அவன் இந்த கிணற்றை அமைத்ததாக கூறுவதுண்டு.
கருவறைக்குள் காசி விஸ்வநாத லிங்கம் போன்றே காட்சியளிக்கும் தென்காசி லிங்கப் பெருமானை மன்னன் தன் கோட்டையிலிருந்து பார்த்து வழிபடும்படி கோட்டையில் சில ஏற்பாடுகளை அவன் அமைத்திருந்தான். தற்போது இது மேட்டுத் தெரு எனப்படுகிறது. இன்றும் நாம் காசி விஸ்வநாதரை இங்கிருந்து தரிசிக்க முடியும். அம்மன் சந்நதியில் இறைவி உலகம்மை, அருள் பொலியும் திருமுகத்துடன் வலக்கையில் தாமரை மலர், கிளி ஏந்தி இடக்கையை தொங்கவிட்டு பத்ம பீடத்தில் ஆடை அணிகலன்களுடன் நின்ற நிலையில், எழில் ததும்ப பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
காசி விஸ்வநாதருக்கும் உலகம்மைக்கும் இத்தனை புகழ் மிக்க பெருங்கோயிலை எடுத்த பராக்கிரம பாண்டியன், ‘இக்கோயில் இறைவன் அருளால் என்றும் நிலைத்து நிற்கும். ஆயினும் இது ஒருவேளை பழுதுபட்டால் அந்த சிதைவுகளை அகற்றி செப்பனிடுபவர்களின் திருவடியில் விழுந்து வணங்குவேன் என்றும் உலகத்தார் முன்னிலையில் இவ்வாறு விழுந்து வணங்குவதுடன் மேலும் மேலும் விருத்தி செய்வோரின் திருவடியிலும் என் திருமுடியை தாழ்த்தி இறைஞ்சுவேன்’ என்றும் உருகி கல்வெட்டிலும் பொறித்து வைத்துள்ளான்.
ஒன்பது நிலையுடன் கூடிய பெரிய ராஜகோபுரம். தொல்லியலாரின் ஆய்வுப்படி 3.11.1457ல் கால் கோளிடப்பட்டு பின்னர் வந்த மன்னர் பொன்னின் பெருமாள் அழகன் குலசேகரன் என்பவரால் 1518ல் கோபுரப்பணி நிறைவு செய்ததாக கூறப்படுகிறது. அவனது காலத்திற்குப் பின் அப்பகுதி சேர மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டு, சேர மன்னன் உதய மார்த்தாண்ட வர்மன் தென்காசி கோயில் மற்றும் கோபுரத் திருப்பணிகள் செய்து 1524ல் குடமுழுக்கு செய்துள்ளான்.
அதன்பிறகு 1792-1824க்குள் பாளையக்காரர்கள் வெள்ளையர்களின் ஆவணங்களை அழிப்பதற்காக வைத்த நெருப்பு, கோபுரத்தை அழித்துவிட்டதாக கூறப்படுகிறது. பெருமழை பொழிந்தபோது பேரிடி விழுந்து கோபுரம் அழிந்ததாகவும் கூறுவதுண்டு.
அதன்பின் 150 ஆண்டுகளுக்குப் பின் திருப்பணி குழு ஒன்று அமைக்கப்பட்டு, தற்போதைய வானளாவிய ராஜகோபுரம், சுவாமி, அம்மன் பரிவார தேவதைகளுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. தற்போதைய ராஜகோபுரத்தில் 800 அழகிய சுதைச் சிற்பங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆறுகால வழிபாடுகள் கொண்ட இந்த தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மாசி மாதம் பிரம்மோத்சவம், ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, ஆவணி மூலம், தெப்பத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. மாசி மாத பிரம்மோத்சவத்தை ஆரம்பித்து வைத்தவன் பராக்கிரம பாண்டியன் என்பதால் இன்றும் முதல் மரியாதை அவனுக்கே!
தனக்கு கீழ்ப்படிந்து நடந்த நோவாவுடனும் அவனது வாரிசுகள் மற்றும் மீட்கப்பட்ட உயிர்களோடும் கடவுள் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொண்டார்.
ஆதாமின் வழித்தோன்றலான லாமேக்கிற்கு 182 வயதானபோது அவனுக்குப் பிறந்த மகனே நோவா. நோவாவுக்குப் பெயர் சூட்டியபோது “நாம் விவசாயிகளாகப் பாடுபடுகிறோம். ஏனென்றால் தேவன் பூமியை சபித்திருக்கிறார். ஆனால் நோவா, நமக்கு இளைப்பாறுதலை அளிப்பான்” என்று லாமேக் கூறினார். அது உண்மையாயிற்று. நோவா தன் தந்தையைப்போலவே நேர்மையான மனிதனாக இருந்தார். எனவே நோவாவைக் கடவுள் தேர்ந்துகொண்டார்.
நோவாவுக்கு 500 வயதானபின் அவருக்கு சேம், காம், யாப்பேத் ஆகிய மகன்கள் பிறந்தனர். நோவாவின் குடும்பம் கடவுளுக்கு உகந்த குடும்பமாக வாழ்ந்து வந்தது. நோவா குடும்பத்தைத் தவிர மொத்த மனித இனமும் சாத்தான் காட்டிய தீய வழியில் வாழ்ந்துகொண்டிருந்தது. எங்கும் வன்முறை பரவியிருந்தது. மக்கள் கொடூரமானவர்களாக மாறியிருந்தனர். இதனால் மனிதர்களைப் பூமியில் படைத்ததற்காகக் கடவுள் மிகவும் வருத்தப்பட்டார். தீய மனிதக் கூட்டத்தையும், மிருகங்கள், ஊர்வன, பறப்பன ஆகியவற்றையும் அழிக்க முடிவு செய்தார்.
எனவே பரலோகத் தந்தை நோவாவை அழைத்தார்.
“கொப்பேர் மரத்தைப் பயன்படுத்தி மூன்று தளங்கள் கொண்ட ஒரு பெரிய கப்பலைச் செய். கப்பல் 450 அடி நீளமும், 75 அடி அகலமும், 45 அடி உயரமும் கொண்டதாக இருக்கட்டும். அதில் பல அறைகளை ஏற்படுத்து. உள்ளும் புறம்புமாகத் தார் பூசி செம்மைப்படுத்து. தேவையான உணவைக் கப்பலில் சேமித்து வை. கவனமாகக் கேள். நான் பூமியில் ஒரு பெரிய வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி வானத்துக்குக் கீழேயுள்ள அனைத்து உயிர்களையும் அழிப்பேன். எனவே நீயும் உன் மனைவியும் உன் மகன்களும், மகன்களின் மனைவிமார்களும் கப்பலுக்குள் போய்விடுங்கள். பூமியிலுள்ள அனைத்து உயிர்களிலும் ஆண், பெண் என இணையாகத் தேர்ந்தெடுத்துக்கொள். கப்பலில் அவை உயிரோடு இருக்கட்டும்” என்றார்.
கடவுள் சொன்னபடியே நோவா எல்லாவற்றையும் சரியாகச் செய்து முடித்தான். கடவுள் சொன்னபடியே விலங்குகள், பறவைகள் அனைத்தையும் கப்பலில் ஏற்றித் தன் குடும்பத்துடன் கப்பலில் ஏறி அமர்ந்துகொண்டான்.
கடவுள் பெருமழையை வரவழைத்தார். 40 இரவுகளும், 40 பகல் பொழுதுகளுமாகத் தொடர்ந்து மழை கொட்டித்தீர்த்தது. மழையைத் தொடர்ந்து வெள்ளம் பெருகியது. அவ்வெள்ளம் கப்பலைத் தரையிலிருந்து மேல் நோக்கிக் கிளப்பியது. தீய மனிதர்கள் உட்பட உலகில் உள்ள அனைத்து உயிர்களும் மடிந்தன. நோவாவும் அவனது குடும்பத்தினரும் உயிர் பிழைத்தனர். வெள்ளமானது தொடர்ந்து 150 நாட்கள் பூமியில் பரவியிருந்தது. பிறகு கடவுள் தண்ணீரை வற்றச் செய்து, நோவாவின் கப்பலை அரராத் என்ற உயரமான மலையின் மீது தரை தட்டச் செய்தார். நோவா கப்பலின் ஜன்னலைத் திறந்து, ஒரு புறாவை வெளியே அனுப்பினார். ஆனால் தண்ணீர் இன்னும் பூமியில் பரவியிருந்தது. எனவே புறா மீண்டும் கப்பலுக்கே திரும்பி வந்தது.
மேலும் பல நாட்களுக்குப் பிறகு நோவா மீண்டும் புறாவை அனுப்பினார். அன்று மாலையில் திரும்பி வந்த அப்புறா தனது வாயில் ஒலிவ மரத்தின் துளிர்த்த சிறு கிளை ஒன்றை கவ்விப்பிடித்தபடி வந்தது. இதன் மூலம் பூமியில் தண்ணீர் வற்றிவிட்டது என்பதை அறிந்துக்கொண்டார். மேலும் பல நாட்கள் கழித்து புறாவை வெளியே அனுப்பியபோது, அது திரும்ப வரவே இல்லை. எனவே அதன் ஜோடிப் புறாவையும் மற்ற விலங்குகள் பறவைகளையும் பூமியில் இறங்க நோவா அனுமதித்தார். அதுவே புதுப்பிக்கப்பட்ட பூமியில் முதல் ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளாக ஆயிற்று.
தனக்கு கீழ்ப்படிந்து நடந்த நோவாவுடனும் அவனது வாரிசுகள் மற்றும் மீட்கப்பட்ட உயிர்களோடும் கடவுள் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொண்டார்.
“பூமியை இனியொரு முறை நான் வெள்ளப் பெருக்கால் அழிக்க மாட்டேன். இதற்கு அடையாளச் சின்னமாக மேகங்களுக்கு இடையே வானவில்லை உருவாக்கியிருக்கிறேன். எனக்கும் பூமிக்குமான உடன்படிக்கைக்கு இதுவே அத்தாட்சி” என்றார். அப்போது பூமியில் முதல் வானவில் தோன்றியது.
நோவாவுக்கு 500 வயதானபின் அவருக்கு சேம், காம், யாப்பேத் ஆகிய மகன்கள் பிறந்தனர். நோவாவின் குடும்பம் கடவுளுக்கு உகந்த குடும்பமாக வாழ்ந்து வந்தது. நோவா குடும்பத்தைத் தவிர மொத்த மனித இனமும் சாத்தான் காட்டிய தீய வழியில் வாழ்ந்துகொண்டிருந்தது. எங்கும் வன்முறை பரவியிருந்தது. மக்கள் கொடூரமானவர்களாக மாறியிருந்தனர். இதனால் மனிதர்களைப் பூமியில் படைத்ததற்காகக் கடவுள் மிகவும் வருத்தப்பட்டார். தீய மனிதக் கூட்டத்தையும், மிருகங்கள், ஊர்வன, பறப்பன ஆகியவற்றையும் அழிக்க முடிவு செய்தார்.
எனவே பரலோகத் தந்தை நோவாவை அழைத்தார்.
“கொப்பேர் மரத்தைப் பயன்படுத்தி மூன்று தளங்கள் கொண்ட ஒரு பெரிய கப்பலைச் செய். கப்பல் 450 அடி நீளமும், 75 அடி அகலமும், 45 அடி உயரமும் கொண்டதாக இருக்கட்டும். அதில் பல அறைகளை ஏற்படுத்து. உள்ளும் புறம்புமாகத் தார் பூசி செம்மைப்படுத்து. தேவையான உணவைக் கப்பலில் சேமித்து வை. கவனமாகக் கேள். நான் பூமியில் ஒரு பெரிய வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி வானத்துக்குக் கீழேயுள்ள அனைத்து உயிர்களையும் அழிப்பேன். எனவே நீயும் உன் மனைவியும் உன் மகன்களும், மகன்களின் மனைவிமார்களும் கப்பலுக்குள் போய்விடுங்கள். பூமியிலுள்ள அனைத்து உயிர்களிலும் ஆண், பெண் என இணையாகத் தேர்ந்தெடுத்துக்கொள். கப்பலில் அவை உயிரோடு இருக்கட்டும்” என்றார்.
கடவுள் சொன்னபடியே நோவா எல்லாவற்றையும் சரியாகச் செய்து முடித்தான். கடவுள் சொன்னபடியே விலங்குகள், பறவைகள் அனைத்தையும் கப்பலில் ஏற்றித் தன் குடும்பத்துடன் கப்பலில் ஏறி அமர்ந்துகொண்டான்.
கடவுள் பெருமழையை வரவழைத்தார். 40 இரவுகளும், 40 பகல் பொழுதுகளுமாகத் தொடர்ந்து மழை கொட்டித்தீர்த்தது. மழையைத் தொடர்ந்து வெள்ளம் பெருகியது. அவ்வெள்ளம் கப்பலைத் தரையிலிருந்து மேல் நோக்கிக் கிளப்பியது. தீய மனிதர்கள் உட்பட உலகில் உள்ள அனைத்து உயிர்களும் மடிந்தன. நோவாவும் அவனது குடும்பத்தினரும் உயிர் பிழைத்தனர். வெள்ளமானது தொடர்ந்து 150 நாட்கள் பூமியில் பரவியிருந்தது. பிறகு கடவுள் தண்ணீரை வற்றச் செய்து, நோவாவின் கப்பலை அரராத் என்ற உயரமான மலையின் மீது தரை தட்டச் செய்தார். நோவா கப்பலின் ஜன்னலைத் திறந்து, ஒரு புறாவை வெளியே அனுப்பினார். ஆனால் தண்ணீர் இன்னும் பூமியில் பரவியிருந்தது. எனவே புறா மீண்டும் கப்பலுக்கே திரும்பி வந்தது.
மேலும் பல நாட்களுக்குப் பிறகு நோவா மீண்டும் புறாவை அனுப்பினார். அன்று மாலையில் திரும்பி வந்த அப்புறா தனது வாயில் ஒலிவ மரத்தின் துளிர்த்த சிறு கிளை ஒன்றை கவ்விப்பிடித்தபடி வந்தது. இதன் மூலம் பூமியில் தண்ணீர் வற்றிவிட்டது என்பதை அறிந்துக்கொண்டார். மேலும் பல நாட்கள் கழித்து புறாவை வெளியே அனுப்பியபோது, அது திரும்ப வரவே இல்லை. எனவே அதன் ஜோடிப் புறாவையும் மற்ற விலங்குகள் பறவைகளையும் பூமியில் இறங்க நோவா அனுமதித்தார். அதுவே புதுப்பிக்கப்பட்ட பூமியில் முதல் ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளாக ஆயிற்று.
தனக்கு கீழ்ப்படிந்து நடந்த நோவாவுடனும் அவனது வாரிசுகள் மற்றும் மீட்கப்பட்ட உயிர்களோடும் கடவுள் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொண்டார்.
“பூமியை இனியொரு முறை நான் வெள்ளப் பெருக்கால் அழிக்க மாட்டேன். இதற்கு அடையாளச் சின்னமாக மேகங்களுக்கு இடையே வானவில்லை உருவாக்கியிருக்கிறேன். எனக்கும் பூமிக்குமான உடன்படிக்கைக்கு இதுவே அத்தாட்சி” என்றார். அப்போது பூமியில் முதல் வானவில் தோன்றியது.
5 மாதங்களுக்கு பிறகு வேளாங்கண்ணி பேராலயம் திறக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி உள்ளூர் பக்தர்கள் பேராலயத்திற்குள் சென்று வழிபாடு செய்தனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்து உள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளையொட்டி 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். இந்த திருவிழா ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை நடைபெறும்.
இதில் பல்வேறு நாடுகள், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி திருவிழாவுக்கு வருவர். திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணியில் பக்தர்களின் கூட்டம் அலை மோதும்.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் வேளாங்கண்ணி பேராலயம் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது.
இந்த நிலையில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையொட்டி பக்தர்கள் வழிபடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் வேளாங் கண்ணி பேராலயத்தில் மேற்கொள்ளப்பட்டது. சமூக இடைவெளி, முககவசம், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு வழி முறைகளை பின்பற்றுவதற்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கோவில் முன் பகுதியில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு வசதியாக தடுப்புகளும் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த பணிகள் அனைத்தும் வேளாங் கண்ணி பேராலய நிர்வாகம் சார்பில் நடந்தது.
ஆனால் வேளாங்கண்ணி பேராலயம் நேற்று முன்தினம் திறக்கப்படவில்லை. பேராலய ஆண்டு திருவிழாவில் வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும், வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் மாவட்ட கலெக்டர் அறிவித்தார். இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு வேளாங்கண்ணி பேராலயம் நேற்று திறக்கப்பட்டது. அன்னையை தரிசனம் செய்வதற்கு வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த உள்ளூர் பக்தர்கள் மட்டும் காலை 8 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரையில் பேராலயத்தின் உள்ளே சென்று தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நேற்று காலை 8 மணிக்கு முக கவசம் அணிந்தும், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், உடல் வெப்பநிலையை பரிசோதித்த பின்னரே பேராலயத்திற்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு வேளாங்கண்ணி பேராலயம் மீண்டும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சமூக இடைவெளியை பின்பற்றி ஆரோக்கிய மாதாவை வழிபட்டனர்.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
இதில் பல்வேறு நாடுகள், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி திருவிழாவுக்கு வருவர். திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணியில் பக்தர்களின் கூட்டம் அலை மோதும்.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் வேளாங்கண்ணி பேராலயம் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது.
இந்த நிலையில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையொட்டி பக்தர்கள் வழிபடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் வேளாங் கண்ணி பேராலயத்தில் மேற்கொள்ளப்பட்டது. சமூக இடைவெளி, முககவசம், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு வழி முறைகளை பின்பற்றுவதற்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கோவில் முன் பகுதியில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு வசதியாக தடுப்புகளும் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த பணிகள் அனைத்தும் வேளாங் கண்ணி பேராலய நிர்வாகம் சார்பில் நடந்தது.
ஆனால் வேளாங்கண்ணி பேராலயம் நேற்று முன்தினம் திறக்கப்படவில்லை. பேராலய ஆண்டு திருவிழாவில் வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும், வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் மாவட்ட கலெக்டர் அறிவித்தார். இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு வேளாங்கண்ணி பேராலயம் நேற்று திறக்கப்பட்டது. அன்னையை தரிசனம் செய்வதற்கு வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த உள்ளூர் பக்தர்கள் மட்டும் காலை 8 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரையில் பேராலயத்தின் உள்ளே சென்று தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நேற்று காலை 8 மணிக்கு முக கவசம் அணிந்தும், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், உடல் வெப்பநிலையை பரிசோதித்த பின்னரே பேராலயத்திற்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு வேளாங்கண்ணி பேராலயம் மீண்டும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சமூக இடைவெளியை பின்பற்றி ஆரோக்கிய மாதாவை வழிபட்டனர்.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
தஞ்சை மாவட்டத்தில் 5 மாதங்களுக்கு பிறகு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. திருப்பலியில் கிறிஸ்தவர்கள் பலர், முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர்.
கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை மூட மார்ச் மாதத்தில் மத்திய, மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்தன. தற்போது பல்வேறு நிபந்தனைகளுடன் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழகஅரசு நேற்றுமுன்தினம் அனுமதி அளித்தது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோவில்கள் எல்லாம் திறக்கப்பட்டன.
அதேபோல் தஞ்சை மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலயங்கள் திறக்கப்பட்டு நேற்றுமுதல் வழிபாடு நடைபெற்றது. தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள திரு இருதய பேராலயத்தில் நேற்று காலை திருப்பலி நடந்தது. மாலையில் கூட்டுத்திருப்பலி உதவி பங்குத்தந்தை மார்டின் தலைமையில் நடந்தது.
திருப்பலியில் கிறிஸ்தவர்கள் பலர், முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர். கொரோனா தொற்றில் இருந்து அனைவரும் விடுபட்டு நாடு இயல்பு நிலைக்கு திரும்பவும், கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு அலுவலர்கள், போலீஸ்துறை ஆகியோருக்காகவும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆலயத்தின் நுழைவுவாயிலில் கைகளை கழுவுவதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் எல்லாம் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களும் திறக்கப்பட்டு, தொழுகை நடத்த இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்பட்டனர். வழக்கம்போல் பள்ளிவாசல்களில் 5 முறை தொழுகை அரசின் வழிகாட்டுலின்படி நடந்தது. இதில் இஸ்லாமியர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து தொழுகை நடத்தினர்.
அதேபோல் தஞ்சை மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலயங்கள் திறக்கப்பட்டு நேற்றுமுதல் வழிபாடு நடைபெற்றது. தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள திரு இருதய பேராலயத்தில் நேற்று காலை திருப்பலி நடந்தது. மாலையில் கூட்டுத்திருப்பலி உதவி பங்குத்தந்தை மார்டின் தலைமையில் நடந்தது.
திருப்பலியில் கிறிஸ்தவர்கள் பலர், முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர். கொரோனா தொற்றில் இருந்து அனைவரும் விடுபட்டு நாடு இயல்பு நிலைக்கு திரும்பவும், கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு அலுவலர்கள், போலீஸ்துறை ஆகியோருக்காகவும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆலயத்தின் நுழைவுவாயிலில் கைகளை கழுவுவதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் எல்லாம் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களும் திறக்கப்பட்டு, தொழுகை நடத்த இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்பட்டனர். வழக்கம்போல் பள்ளிவாசல்களில் 5 முறை தொழுகை அரசின் வழிகாட்டுலின்படி நடந்தது. இதில் இஸ்லாமியர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து தொழுகை நடத்தினர்.
தஞ்சை மாவட்டம் பூண்டியில் பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலய திருப்பலியில் குறைந்த அளவிலான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் பூண்டியில் பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலயம் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்த பேராலயம் மூடப்பட்டது. கடந்த மே மாதம் நடைபெற வேண்டிய பூண்டி மாதா பேராலய திருவிழாவும் நடைபெறவில்லை.
ஆண்டு தோறும் நடைபெறும் புனித கன்னி மரியாள் பிறப்பு பெருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இல்லாமல் கடந்த 30-ந் தேதி நடைபெற்றது. தற்போது ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நேற்று பேராலயம் திறக்கப்பட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக பேராலய வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பேராலயத்துக்குள் வருபவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. திருப்பலியை பேராலய அதிபர் பாக்கியசாமி நடத்தி வைத்தார். இதில் குறைந்த அளவிலான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.
ஆண்டு தோறும் நடைபெறும் புனித கன்னி மரியாள் பிறப்பு பெருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இல்லாமல் கடந்த 30-ந் தேதி நடைபெற்றது. தற்போது ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நேற்று பேராலயம் திறக்கப்பட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக பேராலய வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பேராலயத்துக்குள் வருபவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. திருப்பலியை பேராலய அதிபர் பாக்கியசாமி நடத்தி வைத்தார். இதில் குறைந்த அளவிலான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.
வேளாங்கண்ணி திருவிழாவில் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க தடைவிதித்து மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல விழா முடியும்வரை தங்கும் விடுதிகளை திறக்கக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
வேளாங்கண்ணி திருவிழாவில் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க தடைவிதித்து மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல விழா முடியும்வரை தங்கும் விடுதிகளை திறக்கக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கியமாதா கோவில் திருவிழாவில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் 8-ந் தேதி திருவிழா முடியும் வரை அனுமதிக்கப்பட மாட்டார்கள். வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட உள்ளூர் பக்தர்கள் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியுடன் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
வருகிற 7-ந் தேதி(திங்கட்கிழமை) அன்று நடைபெறும் தேர் பவனி மற்றும் மறுநாள் 8-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறும் கொடி இறக்கம்் ஆகிய நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஆலய நிர்வாகத்தினர் மற்றும் போதகர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்படும். திருவிழா முடியும் வரை தங்கும் விடுதிகளை திறக்கவும் அனுமதி இல்லை. மேலும் கடற்கரைக்கு செல்லவும் அனுமதி கிடையாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வு காரணமாக நேற்று முதல் வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் திருவிழாவாக கொண்டாடப்படும் வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பங்கேற்கலாம் என எதிர்பார்த்து காத்திருந்த வெளியூர், வெளி மாவட்ட, வெளி மாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கியமாதா கோவில் திருவிழாவில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் 8-ந் தேதி திருவிழா முடியும் வரை அனுமதிக்கப்பட மாட்டார்கள். வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட உள்ளூர் பக்தர்கள் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியுடன் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
வருகிற 7-ந் தேதி(திங்கட்கிழமை) அன்று நடைபெறும் தேர் பவனி மற்றும் மறுநாள் 8-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறும் கொடி இறக்கம்் ஆகிய நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஆலய நிர்வாகத்தினர் மற்றும் போதகர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்படும். திருவிழா முடியும் வரை தங்கும் விடுதிகளை திறக்கவும் அனுமதி இல்லை. மேலும் கடற்கரைக்கு செல்லவும் அனுமதி கிடையாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வு காரணமாக நேற்று முதல் வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் திருவிழாவாக கொண்டாடப்படும் வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பங்கேற்கலாம் என எதிர்பார்த்து காத்திருந்த வெளியூர், வெளி மாவட்ட, வெளி மாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கிறிஸ்தவ ஆலயங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது குறித்து தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அறிவித்துள்ளார்.
தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பங்குதந்தையர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு தமிழகஅரசு வழிபாட்டு தலங்களை ஒரு சில நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி அளித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கியுள்ளது.
அந்த வழிகாட்டு நெறிமுறைகளை தஞ்சை மறைமாவட்டத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, பிற பகுதிகளில் கடைபிடிக்க வேண்டும். மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் ஞாயிறு மற்றும் வார நாட்களில் திருப்பலி மற்றும் அனைத்து திருவருட்சாதன கொண்டாட்டங்களையும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கொண்டாட வேண்டும்.
ஆலயத்தின் பரப்பளவிற்கு ஏற்ப, இறை மக்களை ஆலயத்தின் உள்ளே அனுமதிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் பங்கு ஆலயத்தின் பரப்பளவு திருப்பலியில் கலந்து கொள்ளும் மக்களுக்கு போதுமான அளவில் இல்லையெனில், திருப்பலிகளின் எண்ணிக்கையை வசதிக்கு ஏற்றார்போல் பங்கு பேரவையின் ஆலோசனையோடு அதிகரித்து கொள்ளலாம்.
மலர்மாலை, அரிசி மற்றும் காய்கறிகள் போன்ற பொருட்களை காணிக்கையாக பெறுவதை தவிர்க்க வேண்டும். சுரூபங்களை தொட்டு வணக்கம் செலுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். காணிக்கை செலுத்த விரும்புவோர் சமூக இடைவெளியை கடைபிடித்து காணிக்கை பெட்டியில் காணிக்கையை செலுத்த வேண்டும்.
திருப்பலி மற்றும் திருவருட்சாதன கொண்டாட்டங்களில் தீர்த்தம் தெளிப்பதை தவிர்க்க வேண்டும். திருமணம், இறப்பு மற்றும் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றும்போது 50 பேருக்கு மிகாமல் மக்களை கலந்து கொள்ள செய்வது சால சிறந்தது.
சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் கிருமிநாசினியை பயன்படுத்துதல் போன்றவற்றை மக்கள் கடைபிடிக்க வேண்டும். ஆலய முகப்பில் கிருமிநாசினியை வைத்து மக்கள் அதை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் ஆலயத்தின் உள்ளே வழிபாட்டு நேரங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்.
ஆலயங்கள் இரவு 8 மணிக்குள் மூடப்பட வேண்டும். காய்ச்சல், சளி, இருமல், மூச்சு திணறல் போன்ற நோய் தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் வழிபாட்டுகளில் கலந்து கொள்ள வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு தமிழகஅரசு வழிபாட்டு தலங்களை ஒரு சில நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி அளித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கியுள்ளது.
அந்த வழிகாட்டு நெறிமுறைகளை தஞ்சை மறைமாவட்டத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, பிற பகுதிகளில் கடைபிடிக்க வேண்டும். மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் ஞாயிறு மற்றும் வார நாட்களில் திருப்பலி மற்றும் அனைத்து திருவருட்சாதன கொண்டாட்டங்களையும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கொண்டாட வேண்டும்.
ஆலயத்தின் பரப்பளவிற்கு ஏற்ப, இறை மக்களை ஆலயத்தின் உள்ளே அனுமதிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் பங்கு ஆலயத்தின் பரப்பளவு திருப்பலியில் கலந்து கொள்ளும் மக்களுக்கு போதுமான அளவில் இல்லையெனில், திருப்பலிகளின் எண்ணிக்கையை வசதிக்கு ஏற்றார்போல் பங்கு பேரவையின் ஆலோசனையோடு அதிகரித்து கொள்ளலாம்.
மலர்மாலை, அரிசி மற்றும் காய்கறிகள் போன்ற பொருட்களை காணிக்கையாக பெறுவதை தவிர்க்க வேண்டும். சுரூபங்களை தொட்டு வணக்கம் செலுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். காணிக்கை செலுத்த விரும்புவோர் சமூக இடைவெளியை கடைபிடித்து காணிக்கை பெட்டியில் காணிக்கையை செலுத்த வேண்டும்.
திருப்பலி மற்றும் திருவருட்சாதன கொண்டாட்டங்களில் தீர்த்தம் தெளிப்பதை தவிர்க்க வேண்டும். திருமணம், இறப்பு மற்றும் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றும்போது 50 பேருக்கு மிகாமல் மக்களை கலந்து கொள்ள செய்வது சால சிறந்தது.
சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் கிருமிநாசினியை பயன்படுத்துதல் போன்றவற்றை மக்கள் கடைபிடிக்க வேண்டும். ஆலய முகப்பில் கிருமிநாசினியை வைத்து மக்கள் அதை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் ஆலயத்தின் உள்ளே வழிபாட்டு நேரங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்.
ஆலயங்கள் இரவு 8 மணிக்குள் மூடப்பட வேண்டும். காய்ச்சல், சளி, இருமல், மூச்சு திணறல் போன்ற நோய் தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் வழிபாட்டுகளில் கலந்து கொள்ள வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று காலையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து வழிபாடு செய்தனர்.
உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வழிபாட்டு தலங்களில் மக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
கடந்த 160 நாட்களாக ஆலயங்கள் மூடப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளிலேயே பிரார்த்தனை செய்தனர். ஆலயங்கள் சார்பில் செய்யப்பட்ட பிரார்த் தனைகள் இணையதளம் வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு இன்று முதல் தளர்த்தி உள்ளது. இதனால் அனைத்து வழிபாட்டு தலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மக்கள் வழிபாடு நடத்த திறக்கப் பட்டுள்ளது.
அனைத்து மத கோவில்களும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை நரிமேட்டில் உள்ள சி.எஸ்.ஐ. பேராலயத்தில் இன்று காலை 6 மணிக்கு மாதத்தின் முதல்நாள் சிறப்பு பிரார்த்தனை நடை பெற்றது.
முன்னதாக பேராலயத்தில் அமைக்கப்பட்டு இருந்த இருக்கைகள் அனைத்தும் சமூக இடைவெளியுடன் போடப்பட்டு இருந்தது. பிரார்த்தனையில் பங்கேற்ற மக்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொருவரின் உடல் வெப்பநிலையும் பரிசோதிக் கப்பட்டது. பிரார்த்தனையில் பங்கேற்ற அனைவரும் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு பிரார்த் தனையில் மதுரை-ராமநாத புரம் திருமண்டல பேரா யர் ஜோசப் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார். மேலும் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு நடைபெறும் முதல் பிரார்த் தனை என்பதால் ஏராள மான மக்கள் கலந்து கொண் டனர்.
மதுரையில் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. மதுரையில் உள்ள பள்ளிவாசல் மற்றும் தர்காக்களிலும் முஸ்லிம்கள் இன்று தொழுகை நடத்தினர். கை குலுக்குதல், தழுவுதல் போன்ற நலவிசாரிப்புகள் அனுமதிக்கப்படவில்லை.
ஒவ்வொருவரும் தனித்தனியாக தொழுகையில் பங்கேற்றனர். தொழுகை முடிந்ததும் கைகூப்பி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். தொழுகையில் பங்கேற்ற அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.
வழிபாட்டு தளங்களில் இன்று மக்கள் அனுமதிக்கப்பட்டாலும் ஒவ்வொருவரும் குறைந்த நேரமே கோவிலுக்குள் அமர அனுமதிக்கப்பட்டனர். பிரார்த்தனைகள் முடிந்ததும் உட னடியாக அனைவரும் வெளியேறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
கடந்த 160 நாட்களாக ஆலயங்கள் மூடப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளிலேயே பிரார்த்தனை செய்தனர். ஆலயங்கள் சார்பில் செய்யப்பட்ட பிரார்த் தனைகள் இணையதளம் வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு இன்று முதல் தளர்த்தி உள்ளது. இதனால் அனைத்து வழிபாட்டு தலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மக்கள் வழிபாடு நடத்த திறக்கப் பட்டுள்ளது.
அனைத்து மத கோவில்களும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை நரிமேட்டில் உள்ள சி.எஸ்.ஐ. பேராலயத்தில் இன்று காலை 6 மணிக்கு மாதத்தின் முதல்நாள் சிறப்பு பிரார்த்தனை நடை பெற்றது.
முன்னதாக பேராலயத்தில் அமைக்கப்பட்டு இருந்த இருக்கைகள் அனைத்தும் சமூக இடைவெளியுடன் போடப்பட்டு இருந்தது. பிரார்த்தனையில் பங்கேற்ற மக்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொருவரின் உடல் வெப்பநிலையும் பரிசோதிக் கப்பட்டது. பிரார்த்தனையில் பங்கேற்ற அனைவரும் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு பிரார்த் தனையில் மதுரை-ராமநாத புரம் திருமண்டல பேரா யர் ஜோசப் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார். மேலும் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு நடைபெறும் முதல் பிரார்த் தனை என்பதால் ஏராள மான மக்கள் கலந்து கொண் டனர்.
மதுரையில் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. மதுரையில் உள்ள பள்ளிவாசல் மற்றும் தர்காக்களிலும் முஸ்லிம்கள் இன்று தொழுகை நடத்தினர். கை குலுக்குதல், தழுவுதல் போன்ற நலவிசாரிப்புகள் அனுமதிக்கப்படவில்லை.
ஒவ்வொருவரும் தனித்தனியாக தொழுகையில் பங்கேற்றனர். தொழுகை முடிந்ததும் கைகூப்பி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். தொழுகையில் பங்கேற்ற அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.
வழிபாட்டு தளங்களில் இன்று மக்கள் அனுமதிக்கப்பட்டாலும் ஒவ்வொருவரும் குறைந்த நேரமே கோவிலுக்குள் அமர அனுமதிக்கப்பட்டனர். பிரார்த்தனைகள் முடிந்ததும் உட னடியாக அனைவரும் வெளியேறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக வேளாங்கண்ணியில் பக்தர்கள் வழிபட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்பாடுகளை மாவட்ட வருவாய் அதிகாரி இந்துமதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. உலக பிரசித்திப்பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆரோக்கியமாதாவின் பிறந்தநாளையொட்டி 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். இந்த திருவிழா ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை விமரிசையாக நடைபெறும்.
பல்வேறு நாடுகள், வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி திருவிழாவுக்கு வருவார்கள். திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
கொரோனா பரவல் காரணமாக வேளாங்கண்ணி பேராலயத்துக்குள் பக்தர்கள் செல்வதற்கு கடந்த மார்ச் மாதம் தடை விதிக்கப்பட்டது. வேளாங்கண்ணி பேராலய திருவிழாவிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது. திருவிழாவை காண பக்தர்கள் வருவதை தடுப்பதற்காக வேளாங்கண்ணிக்கு செல்லக்கூடிய 8 வழிகளும் அடைக்கப்பட்டது. கடந்த 29-ந் தேதி வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றம் பக்தர்களின்றி நடந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகளை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இதன் எதிரொலியாக வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் வழிபடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகள் வேளாங்கண்ணி பேராலய நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது. சமூக இடைவெளி, முக கவசம், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை பக்தர்கள் பின்பற்றுவதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கோவில் முன் பகுதியில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி வருகிற 7-ந் தேதி(திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் வேளாங்கண்ணியில் பக்தர்களை எவ்வாறு பாதுகாப்புடன் பேராலயத்துக்குள் அனுமதிப்பது? என்பது குறித்து நேற்று மாலை மாவட்ட வருவாய் அதிகாரி இந்துமதி ஆய்வு செய்தார். அப்போது நாகை உதவி கலெக்டர் பழனிகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், பேராலய அதிபர் பிரபாகர், பங்குத்தந்தை சூசை மாணிக்கம், வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அதிகாரி குணசேகரன், கீழ்வேளூர் தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். கடற்கரை சாலை, பேராலய வளாகம், கலையரங்கம், சிலுவை பாதை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பேராலயத்தில் தரிசனம் செய்வதற்காக பக்தர்களை எவ்வாறு ஒழுங்குபடுத்தி அனுப்புவது என்பது குறித்து பேராலய நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து இன்று(செவ்வாய்க்கிழமை) முறையாக அறிவிப்பு வெளியிடப்படும் என மாவட்ட வருவாய் அதிகாரி, உதவி கலெக்டர் ஆகியோர் தெரிவித்தனர்.
பல்வேறு நாடுகள், வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி திருவிழாவுக்கு வருவார்கள். திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
கொரோனா பரவல் காரணமாக வேளாங்கண்ணி பேராலயத்துக்குள் பக்தர்கள் செல்வதற்கு கடந்த மார்ச் மாதம் தடை விதிக்கப்பட்டது. வேளாங்கண்ணி பேராலய திருவிழாவிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது. திருவிழாவை காண பக்தர்கள் வருவதை தடுப்பதற்காக வேளாங்கண்ணிக்கு செல்லக்கூடிய 8 வழிகளும் அடைக்கப்பட்டது. கடந்த 29-ந் தேதி வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றம் பக்தர்களின்றி நடந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகளை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இதன் எதிரொலியாக வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் வழிபடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகள் வேளாங்கண்ணி பேராலய நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது. சமூக இடைவெளி, முக கவசம், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை பக்தர்கள் பின்பற்றுவதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கோவில் முன் பகுதியில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி வருகிற 7-ந் தேதி(திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் வேளாங்கண்ணியில் பக்தர்களை எவ்வாறு பாதுகாப்புடன் பேராலயத்துக்குள் அனுமதிப்பது? என்பது குறித்து நேற்று மாலை மாவட்ட வருவாய் அதிகாரி இந்துமதி ஆய்வு செய்தார். அப்போது நாகை உதவி கலெக்டர் பழனிகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், பேராலய அதிபர் பிரபாகர், பங்குத்தந்தை சூசை மாணிக்கம், வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அதிகாரி குணசேகரன், கீழ்வேளூர் தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். கடற்கரை சாலை, பேராலய வளாகம், கலையரங்கம், சிலுவை பாதை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பேராலயத்தில் தரிசனம் செய்வதற்காக பக்தர்களை எவ்வாறு ஒழுங்குபடுத்தி அனுப்புவது என்பது குறித்து பேராலய நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து இன்று(செவ்வாய்க்கிழமை) முறையாக அறிவிப்பு வெளியிடப்படும் என மாவட்ட வருவாய் அதிகாரி, உதவி கலெக்டர் ஆகியோர் தெரிவித்தனர்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கிறிஸ்தவ ஆலயங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் திறக்கப்படும் என்று கத்தோலிக்க திருச்சபை மற்றும் தென்னிந்திய திருச்சபை ஆயர்கள் அறிவித்துள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு, பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதித்து அரசு உத்தரவிட்டது. ஊரடங்கு தளர்வு வழங்கப்பட்டபோது ரூ.10 ஆயிரத்துக்கு குறைவாக வருவாய் உள்ள வழிபாட்டு தலங்கள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் தமிழக அரசு மேலும் பல தளர்வுகளை வழங்கியது. இதன்காரணமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி திறக்க அனுமதி வழங்கியது. அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அனைத்து பெரிய கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிவாசல்கள், மசூதிகள் திறக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கூறியதாவது:-
அனைத்து வழிபாட்டு தலங்களையும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி இன்று முதல் கோட்டார் மறைமாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களும் திறக்கப்படுகின்றன. இதற்கான சுற்றறிக்கை அனைத்து ஆலய பங்குத்தந்தையர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சானிடைசர் அல்லது சோப்பு கொண்டு கை, கால்களை சுத்தம் செய்த பிறகு ஆலயத்துக்குள் நுழைய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஒரே நேரத்தில் 50 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. முதியோர், குழந்தைகள், கர்ப்பிணிகள், நோயாளிகள் ஆலயங்களில் நடைபெறும் ஆராதனைகளில் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆலயத்துக்கு வருகிறவர்கள் தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை சரியாக கடைபிடிக்கிறார்களா? என்பதை பங்கு அருட்பணி பேரவை, பக்த சபைகளை சேர்ந்தவர்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பங்குத்தந்தையர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இரவு 8 மணிக்கு மேல் கிறிஸ்தவ ஆலயங்களில் ஆராதனைகள் எதுவும் நடைபெறாது. இதுபோன்ற அரசின் அனைத்து வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினர்.
தென்னிந்திய திருச்சபை குமரி பேராயர் ஏ.ஆர்.செல்லையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் நோய் தடுப்பு நடவடிக்கையில் இதுவரை ஒத்துழைப்பு அளித்தோம். 5 மாதங்கள் ஆலய ஆராதனைகள் முறைப்படி நடத்த இயலவில்லை. எனினும் தற்போது இன்று (1-ந் தேதி) முதல் ஆராதனை நடத்த அரசு வழிகாட்டு நெறிமுறைகளை தந்துள்ளது. அரசு எடுத்து வரும் அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு தர கேட்டுக் கொள்கிறேன். இதனால் நோய் பரவலை மேலும் பரவுவதை கட்டுப்படுத்த இயலும்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தென்னிந்திய திருச்சபை குமரி பேராய மக்களாக நாம் மிக பணிவோடும், பொறுப்போடும் ஆலயங்களில் கடைபிடிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் மற்ற மறைமாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களும் இன்று முதல் திறக்கப்படுகின்றன. இதற்காக நேற்று ஆலயங்களை சுத்தம் செய்யும் பணி நடந்தது.
இந்தநிலையில் தமிழக அரசு மேலும் பல தளர்வுகளை வழங்கியது. இதன்காரணமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி திறக்க அனுமதி வழங்கியது. அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அனைத்து பெரிய கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிவாசல்கள், மசூதிகள் திறக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கூறியதாவது:-
அனைத்து வழிபாட்டு தலங்களையும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி இன்று முதல் கோட்டார் மறைமாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களும் திறக்கப்படுகின்றன. இதற்கான சுற்றறிக்கை அனைத்து ஆலய பங்குத்தந்தையர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சானிடைசர் அல்லது சோப்பு கொண்டு கை, கால்களை சுத்தம் செய்த பிறகு ஆலயத்துக்குள் நுழைய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஒரே நேரத்தில் 50 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. முதியோர், குழந்தைகள், கர்ப்பிணிகள், நோயாளிகள் ஆலயங்களில் நடைபெறும் ஆராதனைகளில் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆலயத்துக்கு வருகிறவர்கள் தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை சரியாக கடைபிடிக்கிறார்களா? என்பதை பங்கு அருட்பணி பேரவை, பக்த சபைகளை சேர்ந்தவர்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பங்குத்தந்தையர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இரவு 8 மணிக்கு மேல் கிறிஸ்தவ ஆலயங்களில் ஆராதனைகள் எதுவும் நடைபெறாது. இதுபோன்ற அரசின் அனைத்து வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினர்.
தென்னிந்திய திருச்சபை குமரி பேராயர் ஏ.ஆர்.செல்லையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் நோய் தடுப்பு நடவடிக்கையில் இதுவரை ஒத்துழைப்பு அளித்தோம். 5 மாதங்கள் ஆலய ஆராதனைகள் முறைப்படி நடத்த இயலவில்லை. எனினும் தற்போது இன்று (1-ந் தேதி) முதல் ஆராதனை நடத்த அரசு வழிகாட்டு நெறிமுறைகளை தந்துள்ளது. அரசு எடுத்து வரும் அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு தர கேட்டுக் கொள்கிறேன். இதனால் நோய் பரவலை மேலும் பரவுவதை கட்டுப்படுத்த இயலும்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தென்னிந்திய திருச்சபை குமரி பேராய மக்களாக நாம் மிக பணிவோடும், பொறுப்போடும் ஆலயங்களில் கடைபிடிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் மற்ற மறைமாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களும் இன்று முதல் திறக்கப்படுகின்றன. இதற்காக நேற்று ஆலயங்களை சுத்தம் செய்யும் பணி நடந்தது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சிறிய தேர் பவனி நடைபெற்றது. இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கியமாதா பேராலயம், இந்தியாவில் உள்ள கத்தோலிக்க பேராலயங்களில் பிரசித்தி பெற்றதாகும். வங்க கடலோரம் பிரமாண்ட கட்டிட கலை அம்சத்துடன் காட்சி அளிக்கும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வருவார்கள்.
இங்கு ஆண்டுதோறும் ஆரோக்கியமாதாவின் பிறந்த நாளையொட்டி 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் தமிழில் திருப்பலி நடந்தது.கொரோனா காரணமாக வேளாங்கண்ணி பேராலய திருவிழாவுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றியே நடந்தது.
விழா நாட்களில் அன்னையின் சிறிய தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதனை முன்னிட்டு நேற்று இரவு பேராலயத்தை சுற்றி சிறிய தேர்பவனி நடைபெற்றது. இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
இங்கு ஆண்டுதோறும் ஆரோக்கியமாதாவின் பிறந்த நாளையொட்டி 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் தமிழில் திருப்பலி நடந்தது.கொரோனா காரணமாக வேளாங்கண்ணி பேராலய திருவிழாவுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றியே நடந்தது.
விழா நாட்களில் அன்னையின் சிறிய தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதனை முன்னிட்டு நேற்று இரவு பேராலயத்தை சுற்றி சிறிய தேர்பவனி நடைபெற்றது. இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.






