search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dasnavis Matha"

    • திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    • இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.

    நாகர்கோவில் மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டுக்கான 10 நாள் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி மாலையில் ஜெபமாலை நடந்தது. அதைத்தொடர்ந்து திருவிழா கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடைபெற்றது. திருப்பலிக்கு கோட்டாறு மறை மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்கினார். செட்டிச்சார்விளை பங்குத்தந்தை டேவிட் மைக்கேல் மறையுரையாற்றினார். கார்மல் நகர் பங்குதந்தை சகாய பிரபு, புனித ஜெரோம் கல்லூரி அருட்பணியாளர் பாஸ்டின் சஜு கலந்து கொண்டனர்.

    நேற்றைய நிகழ்ச்சிகளை பங்கு அருட்பணிப்பேரவை, அன்பிய ஒருங்கிணையம், திருத்தூதுக்கழக ஒருங்கிணையம் ஆகியவை சிறப்பித்தன.

    இதில் பங்குத்தந்தை ஜோசப் அருள் ஸ்டாலின், ஊர் தலைவர் ஆன்றனி எட்வின், செயலாளர் பால் வின்ஸ்டன், துணை செயலாளர் கிறிஸ்ல்டா, பொருளாளர் ஆரோக்கிய வினோத் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    • விழா நாட்களில் தினமும் திருப்பலி, ஜெபமாலை நடக்கிறது.
    • 6-ந்தேதி அன்னையின் தேர்பவனி திருவிழா கொடியிறக்கம் நடக்கிறது.

    மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவையொட்டி நேற்று(வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு கல்லறை மந்திரிப்பு, 6.30 மணிக்கு ஆலய பங்குதந்தை ஜோசப் அருள் ஸ்டாலின் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றினார்.

    விழாவின் முதல்நாளான இன்று காலை திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, இரவு 7 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். செட்டிச்சார்விளை அருட்பணியாளர் டேவிட் மைக்கேல் மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி காலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி ஜெபமாலை, முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு மறைமாவட்ட செயலாளர் கிளாட்ஸ்டன் ஜெபமாலை, சிறப்பு புகழ்மாலையை நிறைவேற்றுகிறார். வட்டம் அருட்பணியாளர் சகாயதாசு மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு அன்னையின் தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 6-ந்தேதி காலை 7 மணிக்கு குருகுல முதல்வர் அருட்பணியாளர் ஜாண் ரூபஸ் தலைமை தாங்கி திருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார். கோட்டார் மறைமாவட்ட முதல்வர் ஆன்றணி சகாய ஆனந்த் மறையுரையாற்றுகிறார். மதியம் 2 மணிக்கு அன்னையின் தேர்பவனி, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், திருவிழா கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு இறைஞர் மன்ற ஆண்டு விழா, இன்னிசை விருந்து ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை மறவன்குடியிருப்பு ஊர் தலைவர் ஆன்றணி எட்வின், செயலாளர் பால் வின்ஸ்டன், துணை செயலாளர் கிறிஸ்ல்டா, பொருளாளர் ஆரோக்கிய வினோத், பங்குதந்தை, பங்கு அருட்பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

    • இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய 10 நாள் திருவிழா நேற்று இரவு 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் நடந்த திருப்பலிக்கு சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி தாளாளர் அருட்பணியாளர் மரிய வில்லியம் தலைமை தாங்கினார். அருட்பணியாளர் காட்வின் சவுந்தர்ராஜ் மறையுரையாற்றினார். இதில் விழா நிகழ்வை பங்கு அருட்பணி பேரவையினர், அன்பிய ஒருங்கிணையத்தினர், திருத்தூதுக்கழக ஒருங்கிணையத்தினர் சிறப்பித்தனர்.

    இதில் ஊர் தலைவர் ஆன்றனி எட்வின், செயலாளர் பால் வின்ஸ்டன், பொருளாளார் ஆரோக்கிய வினோத், துணை செயலாளர் கிறிசில்டா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மறவன்குடியிருப்பு பங்குதந்தை ஜோசப் அருள் ஸ்டாலின் தலைமையில் பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு மக்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • இந்த திருவிழா நாளை தொடங்கி ஆகஸ்டு 7-ந்தேதி வரையும் 10 நாட்கள் நடக்கிறது.
    • 6-ந்தேதி இரவு 9 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடக்கிறது.

    நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயத்தில் பங்கு குடும்ப திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7-ந்தேதி வரையும் 10 நாட்கள் நடக்கிறது.

    இதையொட்டி இன்று (வியாழக்கிழமை) முன்னோர் தோட்டம் பரலோக மாதா சிற்றாலயத்தில் நம்பிக்கை ஊட்டிய முன்னோர்களுக்கு நன்றி விழா நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு கல்லறை மந்திரிப்பு, 6.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. இதற்கு பங்குத்தந்தை ஜோசப் அருள் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

    நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு செபமாலை, 6.30 மணிக்கு பங்குத்தந்தை ஜோசப் அருள் ஸ்டாலினுக்கு ஊர்மக்கள் வரவேற்பு அளிக்கிறார்கள். இரவு 7 மணிக்கு கொடியேற்றமும், திருப்பலியும் நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் மரிய வில்லியம் தலைமை தாங்க, அருட்பணியாளர் காட்வின் சவுந்தர்ராஜ் மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் திருப்பலி, செபமாலை நடைபெறுகிறது. 31-ந்தேதி காலை 9 மணிக்கு பகல் நேர நற்கருணை ஆராதனை, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீரும், இரவு 7 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழாவும் நடக்கிறது.

    5-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, திருமுழுக்கு அருளடையாளம், மாலை 6 மணிக்கு செபமாலை, திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு கோட்டாறு மறை வட்ட முதல்வர் ஆன்டனி சகாய ஆனந்த் தலைமை தாங்க, அருட்பணியாளர் பெஞ்சமின் மறையுரையாற்றுகிறார்.

    6-ந்தேதி காலை 6.30 மணிக்கு செபமாலை, 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் ஆன்டனி பெர்க்மான்ஸ் தலைமை தாங்கி, அருளுரை வழங்குகிறார். மாலை 6 மணிக்கு செபமாலை, சிறப்பு மாலைப்புகழ் நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமை தாங்க, அருட்பணியாளர் வின்சென்ட் எட்வின் மறையுரையாற்றுகிறார்.

    இரவு 9 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடக்கிறது. 7-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலி, காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. இதற்கு குருகுல முதல்வர் பேரருட்பணியாளர் கிலேரியுஸ் தலைமை தாங்கி, அருளுரையாற்றுகிறார். பிற்பகல் 2 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், திருக்கொடி இறக்கம், இரவு 7 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப் அருள் ஸ்டாலின், ஊர்தலைவர் ஆன்டனி எட்வின், செயலாளர் பால் வின்ஸ்டன், துணை செயலாளர் கிறிஸ்ல்டா, பொருளாளர் ஆரோக்கிய வினோத் மற்றும் பங்கு அருட்பணி பேரவை, பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

    ×