என் மலர்
கிறித்தவம்
வேளாங்கண்ணியில் தடையை மீறி கடலில் பக்தர்கள் குளித்து வருகிறார்கள். இதை அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய "பசிலிக்கா" என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் கட்டிடத்தின் அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும். வங்க கடலோரம் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 3-வது அலை பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் மூடப்பட்டு உள்ளது. இதனால் வேளாங்கண்ணிக்கு வந்த பக்தர்கள் பேராலய வாசலில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு செய்தனர். இதனால் பேராலயம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
வேளாங்கண்ணி கடற்கரையில் கூட்டம் கூடுவதை தவிர்க்க பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடற்கரைக்கு செல்லும் வழியில் போலீசார் தடுப்புவேலி வைத்து அடைத்து கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு பலகை வைத்து உள்ளனர். ஆனால் இந்த தடையை மீறி வேளாங்கண்ணி கடலில் பக்தர்கள் கூட்டம், கூட்டமாக குளித்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் இதை கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 3-வது அலை பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் மூடப்பட்டு உள்ளது. இதனால் வேளாங்கண்ணிக்கு வந்த பக்தர்கள் பேராலய வாசலில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு செய்தனர். இதனால் பேராலயம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
வேளாங்கண்ணி கடற்கரையில் கூட்டம் கூடுவதை தவிர்க்க பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடற்கரைக்கு செல்லும் வழியில் போலீசார் தடுப்புவேலி வைத்து அடைத்து கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு பலகை வைத்து உள்ளனர். ஆனால் இந்த தடையை மீறி வேளாங்கண்ணி கடலில் பக்தர்கள் கூட்டம், கூட்டமாக குளித்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் இதை கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் கிறிஸ்தவ ஆலயங்களில் பிரார்த்தனை நடைபெறவில்லை. இதனால் ஆலயங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டதால் அனைத்து மத வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கு வருகிற 23-ந் தேதி வரை தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்தும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தமிழகஅரசு தடை விதித்தது. ஞாயிற்றுக்கிழமைதோறும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெறும்.
ஆனால் வழிபாட்டிற்கு தமிழகஅரசு தடை விதித்த காரணத்தினால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நேற்று நடைபெறவில்லை. இதனால் கிறிஸ்தவர்கள் வராததால் ஆலயங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள திரு இருதய பேராலயம், சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம், தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயம், தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலயம், தஞ்சை குழந்தை ஏசு திருத்தலம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் பிரார்த்தனை நடைபெறவில்லை.
சில ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் மிக குறைந்த அளவு வந்திருந்து வெளியே நின்று பிரார்த்தனை செய்துவிட்டு சென்றனர்.
கொரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்தும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தமிழகஅரசு தடை விதித்தது. ஞாயிற்றுக்கிழமைதோறும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெறும்.
ஆனால் வழிபாட்டிற்கு தமிழகஅரசு தடை விதித்த காரணத்தினால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நேற்று நடைபெறவில்லை. இதனால் கிறிஸ்தவர்கள் வராததால் ஆலயங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள திரு இருதய பேராலயம், சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம், தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயம், தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலயம், தஞ்சை குழந்தை ஏசு திருத்தலம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் பிரார்த்தனை நடைபெறவில்லை.
சில ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் மிக குறைந்த அளவு வந்திருந்து வெளியே நின்று பிரார்த்தனை செய்துவிட்டு சென்றனர்.
காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத்தில் ஆண்டுதோறும் விண்ணேற்பு திருவிழா ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 15-ந்தேதி தேர் பவனி, நற்கருணை பவனி, ஆராதனையுடன் நிறைவுபெறும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத்தில் ஆண்டுதோறும் விண்ணேற்பு திருவிழா ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 15-ந்தேதி தேர் பவனி, நற்கருணை பவனி, ஆராதனையுடன் நிறைவுபெறும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தொடர்ந்து 2-வது ஆண்டாக, ஆலயத்தில் விண்ணேற்பு திருவிழாவில் கொடியேற்றம், தேர் பவனி, நற்கருணை பவனி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஆலயத்தில் விண்ணேற்பு திருவிழா நேற்று தொடங்கியது. விழாவில் கொடியேற்ற நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, ஆலயத்தில் திருப்பலிகள் மட்டும் எளிமையாக நடந்தது. குறைவான உள்ளூர் பக்தர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில், காலை, மதியம், இரவில் திருப்பலிகள் நடைபெற்றது. திருச்சி தூய பவுல் குருத்துவ கல்லூரி பேராசிரியர் எம்.எஸ்.அந்தோணிசாமி, சிதம்பராபுரம் பங்குத்தந்தை அந்தோணிராஜ் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் திருப்பலிகள் நடைபெறுகிறது.
விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியுப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஆலய வளாகம், தெருக்களில் கடைகள் அமைக்கவும், பக்தர்கள் தங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலயத்துக்கு அதிகளவு பக்தர்கள் செல்லாத வகையில், ஆங்காங்கே போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தொடர்ந்து 2-வது ஆண்டாக, ஆலயத்தில் விண்ணேற்பு திருவிழாவில் கொடியேற்றம், தேர் பவனி, நற்கருணை பவனி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஆலயத்தில் விண்ணேற்பு திருவிழா நேற்று தொடங்கியது. விழாவில் கொடியேற்ற நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, ஆலயத்தில் திருப்பலிகள் மட்டும் எளிமையாக நடந்தது. குறைவான உள்ளூர் பக்தர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில், காலை, மதியம், இரவில் திருப்பலிகள் நடைபெற்றது. திருச்சி தூய பவுல் குருத்துவ கல்லூரி பேராசிரியர் எம்.எஸ்.அந்தோணிசாமி, சிதம்பராபுரம் பங்குத்தந்தை அந்தோணிராஜ் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் திருப்பலிகள் நடைபெறுகிறது.
விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியுப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஆலய வளாகம், தெருக்களில் கடைகள் அமைக்கவும், பக்தர்கள் தங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலயத்துக்கு அதிகளவு பக்தர்கள் செல்லாத வகையில், ஆங்காங்கே போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காரைக்காலில் 135 ஆண்டுகள் பழமைவாய்ந்த தூய தேற்றரவு அன்னை ஆலயத்தின் 280-வது ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காரைக்காலில் 135 ஆண்டுகள் பழமைவாய்ந்த தூய தேற்றரவு அன்னை ஆலயம், காரைக்கால் மாதாகோவில் வீதியில் உள்ளது. இந்த ஆலயத்தின் 280-வது ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக ஆலயத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட மாதா கொடியை, பங்குத்தந்தை அந்தோணிராஜ் அடிகளார் தலைமையில், குறைவான பங்கு மக்களால், சமூக இடைவெளியுடன் ஊர்வலமாக சுமந்துவரப்பட்டது. அதுசமயம் பங்கு மக்கள் கொடிக்கு மலர் தூவி தொட்டு வணங்கினர். பின்னர் மாலை 6.30 மணிக்கு மாவட்ட பங்குத்தந்தை அந்தோணிராஜ் கொடியை ஏற்றி வைத்தார்.
விழாவையொட்டி குறைவான பக்தர்களுடன் தினசரி திருப்பலி நடைபெறும். விழாவின் 10-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 15-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. கொரோனா தொற்று காரணமாக, பெரிய தேர்பவனி ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக ஆலயத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட மாதா கொடியை, பங்குத்தந்தை அந்தோணிராஜ் அடிகளார் தலைமையில், குறைவான பங்கு மக்களால், சமூக இடைவெளியுடன் ஊர்வலமாக சுமந்துவரப்பட்டது. அதுசமயம் பங்கு மக்கள் கொடிக்கு மலர் தூவி தொட்டு வணங்கினர். பின்னர் மாலை 6.30 மணிக்கு மாவட்ட பங்குத்தந்தை அந்தோணிராஜ் கொடியை ஏற்றி வைத்தார்.
விழாவையொட்டி குறைவான பக்தர்களுடன் தினசரி திருப்பலி நடைபெறும். விழாவின் 10-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 15-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. கொரோனா தொற்று காரணமாக, பெரிய தேர்பவனி ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுவை நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.பெருவிழானையொட்டி நாள்தோறும் திருப்பலி மற்றும் மறையுரைகள் நடத்தப்படும்.
புதுவை நெல்லித்தோப்பில் பிரசித்திபெற்ற புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 170-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
புதுவை-கடலூர் உயர் மறைமாவட்ட பரிபாலகர் அருளானந்தம் தலைமையில் திருப்பலி மற்றும் கொடியேற்றம் நடந்தது. பெருவிழானையொட்டி நாள்தோறும் திருப்பலி மற்றும் மறையுரைகள் நடத்தப்படும்.
முக்கிய நிகழ்ச்சியான பெருவிழா வருகிற 15-ந்தேதி மாலை நடக்கிறது. அன்றைய தினம் புதுவை-கடலூர் மறைமாவட்ட பேராயர் பீட்டர் அபீர் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடக்கிறது.
மறுநாள் கொடியிறக்கத்துடன் பெருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள் செய்து வருகின்றனர்.
புதுவை-கடலூர் உயர் மறைமாவட்ட பரிபாலகர் அருளானந்தம் தலைமையில் திருப்பலி மற்றும் கொடியேற்றம் நடந்தது. பெருவிழானையொட்டி நாள்தோறும் திருப்பலி மற்றும் மறையுரைகள் நடத்தப்படும்.
முக்கிய நிகழ்ச்சியான பெருவிழா வருகிற 15-ந்தேதி மாலை நடக்கிறது. அன்றைய தினம் புதுவை-கடலூர் மறைமாவட்ட பேராயர் பீட்டர் அபீர் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடக்கிறது.
மறுநாள் கொடியிறக்கத்துடன் பெருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள் செய்து வருகின்றனர்.
ஆலய திருவிழாவையொட்டி, பக்தர்கள் அதிகளவில் வரக்கூடும் என்பதால், பேராலயத்துக்கு பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில், அனைத்து சாலைகளிலும் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற தூய பனிமய மாதா பேராலய 439-வது பெருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா ஊரடங்கு காரணமாக, தொடர்ந்து 2-வது ஆண்டாகவும் பக்தர்கள் பங்கேற்பின்றி விழா எளிமையாக நடைபெற்றது.
விழாவின் சிகர நாளான நேற்று பனிமயமாதா அன்னையின் பெருவிழா கொண்டாடப்பட்டது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியுப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அவற்றை பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்தே கண்டு வழிபட்டனர்.
வழக்கமாக 10-ம் திருவிழா இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்திலும், 11-ம் திருவிழா அன்று இரவு 7 மணிக்கு நகர வீதிகளிலும் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடைபெறும். ஆனால், 2-வது ஆண்டாக, இந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கு காரணமாக சப்பர பவனி ரத்து செய்யப்பட்டது. அன்னையின் சப்பரம் அலங்கரிக்கப்பட்டு பேராலயத்தின் உள்ளேயே வைக்கப்பட்டு இருந்தது.
ஆலய திருவிழாவையொட்டி, பக்தர்கள் அதிகளவில் வரக்கூடும் என்பதால், பேராலயத்துக்கு பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில், அனைத்து சாலைகளிலும் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில், சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவின் சிகர நாளான நேற்று பனிமயமாதா அன்னையின் பெருவிழா கொண்டாடப்பட்டது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியுப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அவற்றை பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்தே கண்டு வழிபட்டனர்.
வழக்கமாக 10-ம் திருவிழா இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்திலும், 11-ம் திருவிழா அன்று இரவு 7 மணிக்கு நகர வீதிகளிலும் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடைபெறும். ஆனால், 2-வது ஆண்டாக, இந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கு காரணமாக சப்பர பவனி ரத்து செய்யப்பட்டது. அன்னையின் சப்பரம் அலங்கரிக்கப்பட்டு பேராலயத்தின் உள்ளேயே வைக்கப்பட்டு இருந்தது.
ஆலய திருவிழாவையொட்டி, பக்தர்கள் அதிகளவில் வரக்கூடும் என்பதால், பேராலயத்துக்கு பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில், அனைத்து சாலைகளிலும் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில், சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தினமும் பேராலயத்தில் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், மறையுரை போன்ற வழக்கமான வழிபாடுகள் பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற்றது.
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலய 439-வது பெருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொரோனா ஊரடங்கு காரணமாக 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் பக்தர்கள் பங்கேற்பின்றி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி விழா நடைபெற்று வருகிறது.
விழா நாட்களில் தினமும் பேராலயத்தில் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், மறையுரை போன்ற வழக்கமான வழிபாடுகள் பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நாளான இன்று சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும், 6.30 மணிக்கு 3-ம் திருப்பலியும் நடை பெற்றது.
காலை 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பெருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. தொடர்ந்து 9 மணிக்கு மண்ணின் மைந்தர்களின் 5-ம் திருப்பலி நடைபெற்றது. 10 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட பிஷப் நசரேன் தலைமையில் 6-ம் திருப்பலியும், காலை 11.30 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் அந்தோணி சாமி தலைமையில் 7-ம் திருப்பலியும் நடைபெற்றது.
வழக்கமாக நடைபெறும் அன்னையின் திருவுருவ சப்பர பவனி இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
பெருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தர்கள் பார்க்கும் வண்ணம் உள்ளூர் தொலைக் காட்சிகளிலும், யூ-டியூப் சேனல்கள் மூலமும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனை பொது மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து பார்த்தனர்.
பேராலயத்துக்கு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வராமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் பக்தர்கள் பங்கேற்பின்றி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி விழா நடைபெற்று வருகிறது.
விழா நாட்களில் தினமும் பேராலயத்தில் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், மறையுரை போன்ற வழக்கமான வழிபாடுகள் பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நாளான இன்று சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும், 6.30 மணிக்கு 3-ம் திருப்பலியும் நடை பெற்றது.
காலை 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பெருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. தொடர்ந்து 9 மணிக்கு மண்ணின் மைந்தர்களின் 5-ம் திருப்பலி நடைபெற்றது. 10 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட பிஷப் நசரேன் தலைமையில் 6-ம் திருப்பலியும், காலை 11.30 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் அந்தோணி சாமி தலைமையில் 7-ம் திருப்பலியும் நடைபெற்றது.
வழக்கமாக நடைபெறும் அன்னையின் திருவுருவ சப்பர பவனி இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
பெருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தர்கள் பார்க்கும் வண்ணம் உள்ளூர் தொலைக் காட்சிகளிலும், யூ-டியூப் சேனல்கள் மூலமும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனை பொது மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து பார்த்தனர்.
பேராலயத்துக்கு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வராமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
பனிமயமாதா கோவிலில் சப்பர பவனிகள் ஏதும் நடத்தப்பட மாட்டாது. கோவிலின் உள்ளாக நடத்தப்படும் ஆராதனை நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் பங்கேற்பின்றி நடைபெறும்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற தூய பனிமய மாதா பேராலய 439-வது பெருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா ஊரடங்கு காரணமாக 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் பக்தர்கள் பங்கேற்பின்றி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பக்தர்களின்றி கொடியேற்று விழா எளிமையாக நடைபெற்றது.
தொடர்ந்து விழா நாட்களில் தினமும் பேராலயத்தில் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், மறையுரை போன்ற வழக்கமான வழிபாடுகள் பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு பனிமயமாதா பேராலய வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. பேராலயத்துக்கு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வராமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய திருவிழா நிறைவு நாள் விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது. இது செலவாணி முறிவுச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பனிமய மாதா கோவிலில் சப்பர பவனிகள் ஏதும் நடத்தப்பட மாட்டாது. கோவிலின் உள்ளாக நடத்தப்படும் ஆராதனை நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் பங்கேற்பின்றி நடைபெறும்.
மேற்படி நாளில் பனிமய மாதா திருக்கோவிலில் நடைபெறும் அனைத்துவித ஆராதனை நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் கலந்து கொள்ள தடை இருக்கின்ற காரணத்தால், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும், யூ-டியுப் சேனல்கள் மூலமும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய மாதா கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆகவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து நிகழ்ச்சிகளை கண்டு கொள்ளலாம். இந்த விடுமுறைக்கு பதிலாக 07.08.2021 அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து விழா நாட்களில் தினமும் பேராலயத்தில் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், மறையுரை போன்ற வழக்கமான வழிபாடுகள் பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு பனிமயமாதா பேராலய வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. பேராலயத்துக்கு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வராமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய திருவிழா நிறைவு நாள் விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது. இது செலவாணி முறிவுச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பனிமய மாதா கோவிலில் சப்பர பவனிகள் ஏதும் நடத்தப்பட மாட்டாது. கோவிலின் உள்ளாக நடத்தப்படும் ஆராதனை நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் பங்கேற்பின்றி நடைபெறும்.
மேற்படி நாளில் பனிமய மாதா திருக்கோவிலில் நடைபெறும் அனைத்துவித ஆராதனை நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் கலந்து கொள்ள தடை இருக்கின்ற காரணத்தால், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும், யூ-டியுப் சேனல்கள் மூலமும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய மாதா கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆகவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து நிகழ்ச்சிகளை கண்டு கொள்ளலாம். இந்த விடுமுறைக்கு பதிலாக 07.08.2021 அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்பட உள்ளது. வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாத யாத்திரையாக வருவதை தவிர்க்க வேண்டும்.
வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான வணிகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் வேளாங்கண்ணியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். இதில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகர், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, கீழ்வேளூர் தாசில்தார் மாரிமுத்து, வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த்குமார், வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, தீயணைப்புத்துறை அலுவலர் அம்பிகாபதி, தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர், உணவக உரிமையாளர் சங்கத்தினர், வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள், ஆட்டோ உரிமையாளர் சங்கத்தினர், கார் உரிமையாளர் சங்கத்தினர், மருந்து கடை உரிமையாளர் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் அருண்தம்புராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேளாங்கண்ணியில் உள்ள வணிகர் சங்கத்தினரை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. நாகை, வேளாங்கண்ணி, நாகூர் உள்ளிட்ட ஆன்மிக தலங்களில் கூட்டம் கூடுவதை தடுக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என மதத்தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கொரோனா 3-வது அலையை தடுக்க தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.
வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக வருகிற 6-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மதத்தலைவர்கள், அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதன்பிறகு எந்த மாதிரியான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து அறிவிக்கப்படும். வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாத யாத்திரையாக வருவதை தவிர்க்க வேண்டும் ..வணிக நிறுவனங்கள் தொடர்ந்து விதிமுறைகளை மீறினால் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கலெக்டர் அருண்தம்புராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேளாங்கண்ணியில் உள்ள வணிகர் சங்கத்தினரை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. நாகை, வேளாங்கண்ணி, நாகூர் உள்ளிட்ட ஆன்மிக தலங்களில் கூட்டம் கூடுவதை தடுக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என மதத்தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கொரோனா 3-வது அலையை தடுக்க தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.
வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக வருகிற 6-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மதத்தலைவர்கள், அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதன்பிறகு எந்த மாதிரியான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து அறிவிக்கப்படும். வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாத யாத்திரையாக வருவதை தவிர்க்க வேண்டும் ..வணிக நிறுவனங்கள் தொடர்ந்து விதிமுறைகளை மீறினால் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கும்பகோணம் அருகே நால்ரோடு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக கொடியிறக்கப்பட்டது. இதில் பங்குத்தந்தைகள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் அருகே நால்ரோடு புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் ஆண்டு திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி உதவி பங்குத்தந்தை மனோஜ் திருப்பலி மற்றும் மறையுரை வழங்கினார். குடந்தை மறைமாவட்ட ஆயர் திருப்பலியை நிறைவேற்றினார்.
அதனை தொடர்ந்து தேர்பவனி நடைபெற்றது. இதில் பங்குத்தந்தைகள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் நேற்று கொடியிறக்கப்பட்டது. அப்போது பூண்டி மாதா தியான மைய இயக்குனர் சாம்சன், திருவண்ணாமலை பங்குத்தந்தை பீட்டர் ஜூலியன் ஆகியோர் கூட்டு திருப்பலி நிறைவேற்றினர்.
அதனை தொடர்ந்து தேர்பவனி நடைபெற்றது. இதில் பங்குத்தந்தைகள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் நேற்று கொடியிறக்கப்பட்டது. அப்போது பூண்டி மாதா தியான மைய இயக்குனர் சாம்சன், திருவண்ணாமலை பங்குத்தந்தை பீட்டர் ஜூலியன் ஆகியோர் கூட்டு திருப்பலி நிறைவேற்றினர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு பெருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பெருவிழா அரசு கட்டுப்பாடுகளுடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடைக்கானல் நகரில் புனித சலேத் அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்டு 14, 15-ந்தேதிகளில் பெருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் தமிழகம், கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு பெருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பெருவிழா அரசு கட்டுப்பாடுகளுடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வழக்கமாக ஆகஸ்டு 1-ந்தேதி கொடி ஊர்வலம் மூஞ்சிக்கல்லில் உள்ள திரு இருதய ஆலயத்தில் இருந்து தொடங்கி நடைபெறுவது வழக்கம். ஆனால் ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு கொடியேற்றம் அரசு கட்டுப்பாடுகளுடன் எளிமையாக நடைபெற்றது. இதற்காக புனித சலேத் அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி வட்டார அதிபர் எட்வின் சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் பெருமாள்மலை பங்குத்தந்தை பிரிட்டோ சுரேஷ் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆலய வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
வழக்கமாக ஆகஸ்டு 1-ந்தேதி கொடி ஊர்வலம் மூஞ்சிக்கல்லில் உள்ள திரு இருதய ஆலயத்தில் இருந்து தொடங்கி நடைபெறுவது வழக்கம். ஆனால் ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு கொடியேற்றம் அரசு கட்டுப்பாடுகளுடன் எளிமையாக நடைபெற்றது. இதற்காக புனித சலேத் அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி வட்டார அதிபர் எட்வின் சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் பெருமாள்மலை பங்குத்தந்தை பிரிட்டோ சுரேஷ் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆலய வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியுடன் ஆடம்பரமின்றி எளிய முறையில் விண்ணேற்பு திருவிழா நடைபெறும்.
கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலத்தில் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா நடைபெறவில்லை. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் இந்தாண்டும் தொடர்வதால் கொரோனா கட்டுப்பாடுகளுடன் விண்ணேற்பு பெருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காமநாயக்கன்பட்டியில் பாளை. மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி கூறியதாவது:-
கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியுடன் ஆடம்பரமின்றி எளிய முறையில் விண்ணேற்பு திருவிழா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சிகளான 6-ந் தேதி கொடியேற்றம், 15-ந் தேதி தேர்பவனி மற்றும் நற்கருணைப்பவனி ரத்து செய்யப்படுகிறது. ஆகஸ்டு 6-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை காலை 6 மணி, மதியம் 12 மணி, இரவு 7 மணிக்கு ஆலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி மட்டும் நடைபெறும்.
15-ந் தேதி அன்னையின் விண்ணேற்பு திருவிழா திருப்பலி நடைபெறும். ஏனைய திருப்பலிகள் ஜெபமாலை தோட்டத்தில் காலை 8, 10, 12 மற்றும் இரவு 7 மணிக்கு நடைபெறும். திருப்பலி நிகழ்ச்சிகளை மக்கள் எளிதில் காணும் வகையில் இணையதளம் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புனித பரலோக மாதா ஆலய பங்குத்தந்தை அந்தோணி குரூஸ், உதவி பங்குத்தந்தை ஜெரால்ட் அமல் ரீகன், வண்டானம் பங்குத்தந்தை மாசில்லா மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியுடன் ஆடம்பரமின்றி எளிய முறையில் விண்ணேற்பு திருவிழா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சிகளான 6-ந் தேதி கொடியேற்றம், 15-ந் தேதி தேர்பவனி மற்றும் நற்கருணைப்பவனி ரத்து செய்யப்படுகிறது. ஆகஸ்டு 6-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை காலை 6 மணி, மதியம் 12 மணி, இரவு 7 மணிக்கு ஆலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி மட்டும் நடைபெறும்.
15-ந் தேதி அன்னையின் விண்ணேற்பு திருவிழா திருப்பலி நடைபெறும். ஏனைய திருப்பலிகள் ஜெபமாலை தோட்டத்தில் காலை 8, 10, 12 மற்றும் இரவு 7 மணிக்கு நடைபெறும். திருப்பலி நிகழ்ச்சிகளை மக்கள் எளிதில் காணும் வகையில் இணையதளம் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புனித பரலோக மாதா ஆலய பங்குத்தந்தை அந்தோணி குரூஸ், உதவி பங்குத்தந்தை ஜெரால்ட் அமல் ரீகன், வண்டானம் பங்குத்தந்தை மாசில்லா மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






