என் மலர்
கிறித்தவம்
இயேசுநாதருடைய பன்னிரண்டு சீடர்களும் வேத சாட்சிகளாய் பல்வேறு இடங்களில் மரித்திருந்தாலும் அவர்களுடைய கல்லறைகளில் நினைவுச்சின்னங்கள் எழுப்பப்பட்டிருந்தாலும் அவர்களுள் மூன்று சீடர்களின் கல்லறைகள் மீதே ஆலயம் அமைக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பாகும்.
செயின்ட் ஜேம்ஸ் என்பது ஆங்கிலத்தில் சந்தியாகப்பருடைய பெயர். யாகப்பர் என்பது அரபியில் யாகூப் என்று அழைக்கப்படும். இவர் வேதம் போதித்த ஸ்பெயின் தேசம் சென்று மீண்டும் இஸ்ரேல் தேசம் வந்தபோது ஏரோது மன்னனால் தலை வெட்டப்ப்பட்டு வேதசாட்சியாய் மரித்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்பெயின் தேசத்திலிருந்து வந்திருந்த அவருடைய சீடர்கள் அவருடைய கல்லறையைத் தோண்டி அவருடைய எலும்புகளை தங்களுடைய நாட்டிற்கு எடுத்து சென்றனர். அங்கு உலகப்புகழ் பெற்ற ஒரு ஆலயத்தை அவருடைய கல்லறை மேலேயே கட்டினார். அது சாண்டியாகோ டீ கம்போஸ்டலா என்று அழைக்கப்படுகிறது. ஸ்பெயின் மொழியில் செயின்ட் என்பதை சந்த் என்றும் யாக்கோபு என்பதை யாகூ என்றும் அழைத்தனர். அதுவும் பிற்காலத்தில் சந்தியாகூ என்று மாறியது. பிறகு நம் தமிழில் சந்தியாகப்பர் என்று மாறியது.
இயேசுநாதருடைய பன்னிரண்டு சீடர்களும் வேத சாட்சிகளாய் பல்வேறு இடங்களில் மரித்திருந்தாலும் அவர்களுடைய கல்லறைகளில் நினைவுச்சின்னங்கள் எழுப்பப்பட்டிருந்தாலும் அவர்களுள் மூன்று சீடர்களின் கல்லறைகள் மீதே ஆலயம் அமைக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பாகும். அவைகள் ரோமில் வத்திக்கானில் தூய பேதுரு ஆலயமும் நம் இந்தியாவில் நம் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள தூய தோமா ஆலயமும் ஸ்பெயின் தேசத்திலுள்ள தூய சந்தியாகப்பர் ஆலயமும் ஆகும். இயேசு நாதருக்கு தன் பன்னிரெண்டு சீடர்களின் மீதும் பாசம் உண்டு என்றாலும் நம் சந்தியாகப்பர் மீது அதிகப் பாசம் கொண்டிருந்தார்.
இயேசுநாதர் இறந்து, உயிர்த்தெழுந்த பின்பு நம் பன்னிரெண்டு அப்போஸ்தலர்களும் ஒன்று கூடி இயேசுவின் நற்செய்தியை உலகம் அனைத்திற்கும் அறிவிக்க யார் யார் எந்தெந்த நாட்டிற்க்குப் போக வேண்டும் என்று தங்களுக்குள்ளே சீட்டுப் போட்டுக் கொண்டார்கள். நம் சந்தியாகப்பருக்கு இஸ்பானியா(ஸ்பெயின் ) தேசம் என்று வந்தது. இது தனக்கு ஆண்டவன் இட்ட கட்டளை என்று உணர்ந்த சந்தியாகப்பர் ஸ்பெயின் தேசம் புறப்பட்டார். தன்னோடு தன்னுடைய எட்டு சீடர்களை தெரிந்து கொண்டு ஸ்பெயின் தேசம் புறப்பட்டுவிட்டார்.
சந்தியாகப்பர் தேவமாதா தனக்கு கட்டளையிட்டபடி ஸ்பெயின் தேசத்தில் மாதாவுக்கு ஒரு சிற்றாலயம் அமைத்து தன் கடமை முடிந்தது என்று மீண்டும் தன் தாய்நாடான இஸ்ரேலில் உள்ள எருசலேம் வந்தார். அப்போது அங்கு வேத கலாபனை ஆரம்பத்திருந்தது. இயேசு நாதரின் மறைவுக்குப்பின் யூத குருமார்களின் செல்வாக்கும் கௌரவமும் மிகவும் குறைந்து போயிற்று. தங்கள் அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டவும் மோயீசனின் திருச்சட்டத்தை நிலை நாட்டவும் மிகவும் கடுமையான சட்டங்களை பிறப்பித்தார்கள். இயேசுநாதரின் பெயரை கூட பொதுவில் உச்சரிக்கக்கூடாது என்று கடுமையாக உத்தரவிட்டார்கள்.
அப்போது அந்த நாட்டு அரசனாக இருந்தவன் ஏரோது அக்கரிப்பா. அவன் தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள யூத மதத்தலைவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி... என்று தலையாட்டிக் கொண்டிருந்தான். இந்த சூழ்நிலையில் நம் சந்தியாகப்பர் ஜெருசலேம்பட்டணத்தில் சுற்றி அதன் ஆரவாரமிக்க தெருக்களில் வல்லமையாக பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். இவரது தைரியமான மற்றும் வல்லமையான பிரசங்கத்தைக் கேட்ட மக்கள் மலைத்துப் போயினர். அதே நேரத்தில் ஏரோது தன் படைகளோடு வந்து சந்தியாகப்பரை கைது செய்தான்.
ஜெருசலேம் நீதிமன்றத்தில் விசாரணையின் போது சந்தியாகப்பர் இயேசுநாதரைப் பற்றி கூறிய விளக்கங்களும் ஆதாரங்களும் வல்லமையான பதில்களும் அங்கு கூடியிருந்த யூத மத குருமார்களுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியது. இந்த விளக்கங்களை கேட்ட நீதிபதி அப்போதே தன் பதவியை ராஜினாமா செய்து இயேசுநாதரை தன் இரட்சகராக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். இதனால் மிரண்டுபோன அரசன் ஏரோது அக்கரிப்பா உடனே நம் சந்தியாகப்பருக்கும் அந்த நல்ல நீதிபதிக்கும் சிரச்சேதம் செய்ய கட்டளை இட்டான். அந்த இருவருக்கும் உடனே தலை வெட்டப்பட்டது. இதனால் இயேசுநாதருக்காக உயிர்த்தியாகம் செய்த முதல் அப்போஸ்தலர் என்ற பட்டமும் பெற்றார்.
ஸ்பெயின் தேசத்தில் நம் சந்தியாகப்பரால் தோற்றுவிக்கப்பட்ட கிறிஸ்துவம் வேகமாக பரவ ஆரம்பித்தது. பலப்பல கிறிஸ்துவ ராஜ்ஜியங்களும் தோன்றின. துரதிஷ்ட வசமாக அவர்களுக்குள்ளே சமாதானம் இல்லாததால் ஒரு ஒன்றுபட்ட கிறிஸ்துவ ராஜ்ஜியம் ஏற்படவில்லை. இந்த நிலையில் சந்தியாகப்பரின் சீடர்கள் நம் சந்தியாகப்பருக்கு என்ன நேர்ந்தது என்று அறிய ஆவல் கொண்டு ஸ்பெய்னிலிருந்து இஸ்ரேல் தேசத்திற்கு வந்தனர். அவருக்கு ஏற்பட்ட முடிவைக் கண்டு மிகவும் வருந்தினர்.
சரி... அவரது எலும்புகளையாவது எடுத்துச் செல்லலாம் என்று பார்த்தால் அவரது சமாதி இருந்த இடத்தில் நுற்றுக்கணாக்கான சமாதிகள் இருந்தது கண்டு திகைத்துப் போயினர். சந்தியாகப்பரே எங்களுக்கு காண்பிப்பீராக என்று மனம் உருகி வேண்டினர். அப்போது அந்த அதிசயம் நடந்தது. அவர் வல்லமையான இடியின் மைந்தர் என்று இயேசுவாலேயே கூறப்பட்டவர் அல்லவா... இதோ வானினின்று ஒரு இடி டமார் என்று இறங்கியது. அது சந்தியாகப்பரின் சமாதியை குழிபறித்து அடையாளம் காட்டியது. அங்கும் சோதனை மிஞ்சியது.
அந்தக் குழிக்குள் பல எலும்புக்கூடுகள் இருந்தன. யார் யாரோ எவ்விதமானவர்களோ... என்று கலக்கமுற்ற சந்தியாகப்பரின் சீடர்கள் மீண்டும் வேண்டுதல் வைத்து அவரது எலும்புக்கூட்டை அடையாளம் காட்ட வேண்டினர். அப்போது மீண்டும் அந்த அதிசயம் நடந்தது. மீண்டும் ஒரு இடியை இறக்கினார் சந்தியாகப்பர். அந்த இடியின் வல்லமையால் இரண்டு எலும்புகூடுகள் மின்னின. அவைகள் மட்டும் தனியே பிரிக்கப்பட்டன. சந்தியாகப்பரே இதில் உம்முடைய எலும்புக்கூடு எது என்று மீண்டும் வேண்டுதல் வைத்தனர்.
மீண்டும் அதிசயமாக ஒரு எலும்புக்கூடு மின்னியது. மற்றது அணைந்தது. மின்னிய எலும்புக்கூடு சந்தியாகப்பருடையது. சந்தியாகப்பர் தலை வெட்டப்பட்ட அதே இடத்திலேயே அவருக்கென்று ஒரு ஆலயம் எழுப்பி அவரது தலையை மட்டும் அங்கே புதைத்துள்ளனர். இன்றளவும் ஜெருசலேமில் அர்மீனியர்களின் ஆதிக்கத்தில் இந்த ஆலயம் மிகவும் பிரம்மாண்டமான ஆலயமாக உள்ளது. பிற்பாடு சந்தியாகப்பரின் சீடர்கள் சந்தியாகப்பரின் மற்றைய எலும்புகளை ஸ்பெயின் தேசத்துக்கு கொண்டு போய் புதைத்தனர். நாளடைவில் சந்தியாகப்பரின் சமாதி எங்கு உள்ளது என்று கூட தெரியாமல் போய்விட்டது. இப்படியாக எட்டு நூற்றாண்டுகள் ஓடி மறைந்தன.
கி.பி. 844 இந்த ஆண்டில் ஸ்பெயின் தேசத்தில் வடமேற்கு காட்டுப்பகுதி வழியே தன்னந்தனியே பயணித்தார் ஒரு துறவி. அப்போது அந்த இரவில் ஒரு மண்மேட்டிலிருந்து ஒரு ஒளி வெள்ளம் தோன்றுவதைக் கண்டு அதிசயித்தார். அருகில் சென்று பார்த்தபொழுது விண்ணகத்திலிருந்து ஒரு வினோதமான ஓர் ஒளி வெள்ளம் தோன்றி அந்த மண் மேட்டில் இறங்கியது கண்டு அதிசயித்தார். மேலும் வானோர் பாடலும் மிகத் தெளிவாக கேட்டதால் இந்த இடத்தில் ஏதோ அதிசயம் நடக்கப்போகிறது அல்லது மறைந்துள்ளது என்று கண்டு கொண்டார் . அந்த இடத்தை அடையாளம் வைத்துக்கொண்டு அந்த மண்மேட்டை தோண்டிப்பார்த்த பொழுது அங்கே நம் சந்தியாகப்பரின் எலும்புக்கூடு ஒரு பெட்டியில் ஒளிர்ந்தது. மேலும் அந்த பெட்டியில் இருந்து சில பொருட்களை முன்னிட்டு அவை சந்தியாகப்பரின் எலும்புக்கூடுதான் என்று நிச்சயித்தார்கள்.
அன்றிலிருந்து ஆரம்பமானது நம் சந்தியாகப்பரின் அதிசயங்களும் அற்புதங்களும். இதைப்பற்றி கேள்விப்பட்ட அரசன் 2-ஆம் அல்போன்சா ஓடோடி வந்தான். சந்தியாகப்பரை தெண்டனிட்டு வணங்கினான். நம் சந்தியாகப்பரை ஸ்பெயின் தேசத்தின் பாதுகாவலர் என்று அறிவித்தான். அவர் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் பெயர் கம்போஸ்த்தலா என்பதாகும். எனவே அதே இடத்தில் அவர் சமாதி மீது ஒரு மிகப்பிரம்மாண்டமான கோவில் ஒன்றை கட்டினான். அவரது காலத்தில் அதற்கு இணையான ஆலயம் உலகில் எங்குமே இல்லை என்னும் அளவிற்கு அது இருந்தது. அந்த கோவிலின் முகப்பும் சரி உள்கட்டமைப்பும் சரி பிரம்மாண்டம் தான் போங்கள். அந்தக் காலத்திலேயே இந்த ஆலயம் இயேசுவின் திருவிழாவுக்கு ஒப்பானது என்று யாத்திரிகர்கள் அறிய வந்தார்கள். இப்போதும் இந்த கோவில் SANTIAGO DE COMPOSTALA (சாண்டியாகோ டீ கம்போஸ்டலா) என்று அழைக்கப்படுகிறது.
ஸ்பெயின் நாட்டில் வடக்கிலிருந்து கிழக்கிலிருந்தும் தூய சந்தியாகப்பரை தரிசிக்க மக்கள் வெள்ளம் படையெடுத்து வந்தது. இதனால் வியாபாரம், தங்குமிடம், போக்குவரத்து என பல வழிகளிலும் நாட்டிற்கு வருமானம் பெருகியது. சிறு சிறு குட்டி சமஸ்தானங்கள். குட்டி ராஜாக்கள் தங்களின் நிலைகளை உயர்திக் கொள்ளவும், பாதுகாப்பை முன்னிட்டும் ஒன்று சேர்ந்தனர். இது பல வல்லரசு நாடுகளான சார்சானியர்களுக்கும், துருக்கி முஸ்லீம்களுக்கும் ஆப்ரிக்க இஸ்லாமிய நாட்டினர்களுக்கும் பிடிக்கவில்லை.
எனவே ஸ்பெயின் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் அடிக்கடி சண்டை வெடித்தது. அப்போது ஸ்பெயின் நாட்டில் அரசராக இருந்தவர் 1-ஆம் ரோமிரோ. இவர் அப்போது அஸ்துரியாஸ் என்னுமிடத்தில் தன் குறைந்த படையினரோடு இந்த மிகப்பெரும் சார்சானிய படைகளுடன் மோதுவதற்கு தயாராக இருந்தார். என்னதான் அவருக்கு கடவுள் நம்பிக்கையும் தன் படை மீது நம்பிக்கையும் இருந்தாலும் ஏனோ மனம் கலக்கமுற்றார். தன் படையினரை க்ளாவிஜோ என்னுமிடத்தில் நிறுத்தினார். அந்த இடத்தில் அன்றைய இரவில் புனித சந்தியாகப்பர் அரசன் ரோமிரோவின் கனவில் தோன்றி ரோமிரோ... நீ மனம் கலங்க வேண்டாம். நாளைய போரில் இந்த சார்சானியர்களை எதிர்த்து உன் சார்பாக நான் போராடுவேன்.
வெற்றி உனதே... நான் ஒரு வெள்ளைக் குதிரையில் வெள்ளை ஆடையில் சிலுவை அடையாளமிட்ட வெள்ளைக் கொடியோடு இந்த பெரிய சார்சானியர் படையோடு போராடுவேன். இதை நீயும் உன் வீரர்களும் மற்றும் சார்சானிய வீரர்களும் காண்பீர்கள் என்று கூறி மறைந்து போனார். அரசன் ரோமிரோ அடைந்த சந்தோஷமும் தைரியமும் சொல்ல வார்த்தை இல்லை. அப்போதே இந்த கனவைப் பற்றி தன் படைத்தளபதிக்கும் வீரர்களுக்கும் அறிவித்து அந்த இரவிலேயே அந்த ஊர் வந்திருந்த ஆயரிடம் சென்று தன் கனவைத் தெரிவித்து வெற்றிக்கான ஆசீரும் அவரிடம் பெற்றான்.
நம் புனித சந்தியாகப்பர் கொடுத்த தைரியத்தினாலும் அவருடைய வாக்குறுதியினாலும் உத்வேகம் பெற்ற அரசனும் படையினரும் போர்க்களத்தில் பயங்கரமாகப் போரிட்டனர். என்ன ஆயிற்று இந்த கிறிஸ்தவர்களுக்கு என்று ஆத்திரப்பட்டான். அந்த முஸ்லீம் படைத்தளபதி. இந்த சின்ன படையை வைத்துக் கொண்டு நம்மை எதிர்க்க இந்த கிறிஸ்தவர்களுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம். நம் படைக்கு முன் இந்த கிறிஸ்தவர்களின் படை ஐந்து நிமிடங்களுக்கு கூட தாங்காது. மார்ரே என்று ஆணையிட்டான், பயங்கரப்போர் ஆரம்பமாயிற்று.
முஸ்லீம் படையான சார்சானியர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. அவர்களுக்குள் பலர் தலை இழந்தனர். பல கிறிஸ்த்தவ படையினரும் பல முஸ்லீம் வீரர்களும் புனித சந்தியாகப்பரை வெள்ளைக் குதிரையில் வெள்ளை உடையில் உருவிய கத்தியோடும் வெள்ளை கொடியுடனும் போர்க்களத்தில் சுற்றி சுற்றி வருவதைக் கண்டார்கள். புனித சந்தியாகப்பர் வாழ்க... என்று சந்தியாகப்பருக்கு ஜெயகோஷம் போட்டனர். அவ்வளவுதான் பெரும் படைகொண்ட சார்சானியப் படை பெரும் தோல்வி கண்டது. சந்தியாகப்பரை எதிர்க்க முடியாது. வாருங்கள் ஓடிப்போவோம் என்று குரல் கேட்டது. அவ்வளவுதான் சார்சானியப் பெரும் படை புறமுதுகு காட்டி ஓடியது. அன்றைய போரில் தலை இழந்தும் வெட்டப்பட்டு இறந்தவர்களும் குறைந்தது எழுபது ஆயிரம் பேர். இப்படியாக புனித சந்தியாகப்பர் போராளி அப்போஸ்த்தலர் என்றும் படைமிரட்டி அப்போஸ்த்தலர் என்றும் பேர் பெற்றார்.
இயேசுநாதருடைய பன்னிரண்டு சீடர்களும் வேத சாட்சிகளாய் பல்வேறு இடங்களில் மரித்திருந்தாலும் அவர்களுடைய கல்லறைகளில் நினைவுச்சின்னங்கள் எழுப்பப்பட்டிருந்தாலும் அவர்களுள் மூன்று சீடர்களின் கல்லறைகள் மீதே ஆலயம் அமைக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பாகும். அவைகள் ரோமில் வத்திக்கானில் தூய பேதுரு ஆலயமும் நம் இந்தியாவில் நம் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள தூய தோமா ஆலயமும் ஸ்பெயின் தேசத்திலுள்ள தூய சந்தியாகப்பர் ஆலயமும் ஆகும். இயேசு நாதருக்கு தன் பன்னிரெண்டு சீடர்களின் மீதும் பாசம் உண்டு என்றாலும் நம் சந்தியாகப்பர் மீது அதிகப் பாசம் கொண்டிருந்தார்.
இயேசுநாதர் இறந்து, உயிர்த்தெழுந்த பின்பு நம் பன்னிரெண்டு அப்போஸ்தலர்களும் ஒன்று கூடி இயேசுவின் நற்செய்தியை உலகம் அனைத்திற்கும் அறிவிக்க யார் யார் எந்தெந்த நாட்டிற்க்குப் போக வேண்டும் என்று தங்களுக்குள்ளே சீட்டுப் போட்டுக் கொண்டார்கள். நம் சந்தியாகப்பருக்கு இஸ்பானியா(ஸ்பெயின் ) தேசம் என்று வந்தது. இது தனக்கு ஆண்டவன் இட்ட கட்டளை என்று உணர்ந்த சந்தியாகப்பர் ஸ்பெயின் தேசம் புறப்பட்டார். தன்னோடு தன்னுடைய எட்டு சீடர்களை தெரிந்து கொண்டு ஸ்பெயின் தேசம் புறப்பட்டுவிட்டார்.
சந்தியாகப்பர் தேவமாதா தனக்கு கட்டளையிட்டபடி ஸ்பெயின் தேசத்தில் மாதாவுக்கு ஒரு சிற்றாலயம் அமைத்து தன் கடமை முடிந்தது என்று மீண்டும் தன் தாய்நாடான இஸ்ரேலில் உள்ள எருசலேம் வந்தார். அப்போது அங்கு வேத கலாபனை ஆரம்பத்திருந்தது. இயேசு நாதரின் மறைவுக்குப்பின் யூத குருமார்களின் செல்வாக்கும் கௌரவமும் மிகவும் குறைந்து போயிற்று. தங்கள் அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டவும் மோயீசனின் திருச்சட்டத்தை நிலை நாட்டவும் மிகவும் கடுமையான சட்டங்களை பிறப்பித்தார்கள். இயேசுநாதரின் பெயரை கூட பொதுவில் உச்சரிக்கக்கூடாது என்று கடுமையாக உத்தரவிட்டார்கள்.
அப்போது அந்த நாட்டு அரசனாக இருந்தவன் ஏரோது அக்கரிப்பா. அவன் தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள யூத மதத்தலைவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி... என்று தலையாட்டிக் கொண்டிருந்தான். இந்த சூழ்நிலையில் நம் சந்தியாகப்பர் ஜெருசலேம்பட்டணத்தில் சுற்றி அதன் ஆரவாரமிக்க தெருக்களில் வல்லமையாக பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். இவரது தைரியமான மற்றும் வல்லமையான பிரசங்கத்தைக் கேட்ட மக்கள் மலைத்துப் போயினர். அதே நேரத்தில் ஏரோது தன் படைகளோடு வந்து சந்தியாகப்பரை கைது செய்தான்.
ஜெருசலேம் நீதிமன்றத்தில் விசாரணையின் போது சந்தியாகப்பர் இயேசுநாதரைப் பற்றி கூறிய விளக்கங்களும் ஆதாரங்களும் வல்லமையான பதில்களும் அங்கு கூடியிருந்த யூத மத குருமார்களுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியது. இந்த விளக்கங்களை கேட்ட நீதிபதி அப்போதே தன் பதவியை ராஜினாமா செய்து இயேசுநாதரை தன் இரட்சகராக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். இதனால் மிரண்டுபோன அரசன் ஏரோது அக்கரிப்பா உடனே நம் சந்தியாகப்பருக்கும் அந்த நல்ல நீதிபதிக்கும் சிரச்சேதம் செய்ய கட்டளை இட்டான். அந்த இருவருக்கும் உடனே தலை வெட்டப்பட்டது. இதனால் இயேசுநாதருக்காக உயிர்த்தியாகம் செய்த முதல் அப்போஸ்தலர் என்ற பட்டமும் பெற்றார்.
ஸ்பெயின் தேசத்தில் நம் சந்தியாகப்பரால் தோற்றுவிக்கப்பட்ட கிறிஸ்துவம் வேகமாக பரவ ஆரம்பித்தது. பலப்பல கிறிஸ்துவ ராஜ்ஜியங்களும் தோன்றின. துரதிஷ்ட வசமாக அவர்களுக்குள்ளே சமாதானம் இல்லாததால் ஒரு ஒன்றுபட்ட கிறிஸ்துவ ராஜ்ஜியம் ஏற்படவில்லை. இந்த நிலையில் சந்தியாகப்பரின் சீடர்கள் நம் சந்தியாகப்பருக்கு என்ன நேர்ந்தது என்று அறிய ஆவல் கொண்டு ஸ்பெய்னிலிருந்து இஸ்ரேல் தேசத்திற்கு வந்தனர். அவருக்கு ஏற்பட்ட முடிவைக் கண்டு மிகவும் வருந்தினர்.
சரி... அவரது எலும்புகளையாவது எடுத்துச் செல்லலாம் என்று பார்த்தால் அவரது சமாதி இருந்த இடத்தில் நுற்றுக்கணாக்கான சமாதிகள் இருந்தது கண்டு திகைத்துப் போயினர். சந்தியாகப்பரே எங்களுக்கு காண்பிப்பீராக என்று மனம் உருகி வேண்டினர். அப்போது அந்த அதிசயம் நடந்தது. அவர் வல்லமையான இடியின் மைந்தர் என்று இயேசுவாலேயே கூறப்பட்டவர் அல்லவா... இதோ வானினின்று ஒரு இடி டமார் என்று இறங்கியது. அது சந்தியாகப்பரின் சமாதியை குழிபறித்து அடையாளம் காட்டியது. அங்கும் சோதனை மிஞ்சியது.
அந்தக் குழிக்குள் பல எலும்புக்கூடுகள் இருந்தன. யார் யாரோ எவ்விதமானவர்களோ... என்று கலக்கமுற்ற சந்தியாகப்பரின் சீடர்கள் மீண்டும் வேண்டுதல் வைத்து அவரது எலும்புக்கூட்டை அடையாளம் காட்ட வேண்டினர். அப்போது மீண்டும் அந்த அதிசயம் நடந்தது. மீண்டும் ஒரு இடியை இறக்கினார் சந்தியாகப்பர். அந்த இடியின் வல்லமையால் இரண்டு எலும்புகூடுகள் மின்னின. அவைகள் மட்டும் தனியே பிரிக்கப்பட்டன. சந்தியாகப்பரே இதில் உம்முடைய எலும்புக்கூடு எது என்று மீண்டும் வேண்டுதல் வைத்தனர்.
மீண்டும் அதிசயமாக ஒரு எலும்புக்கூடு மின்னியது. மற்றது அணைந்தது. மின்னிய எலும்புக்கூடு சந்தியாகப்பருடையது. சந்தியாகப்பர் தலை வெட்டப்பட்ட அதே இடத்திலேயே அவருக்கென்று ஒரு ஆலயம் எழுப்பி அவரது தலையை மட்டும் அங்கே புதைத்துள்ளனர். இன்றளவும் ஜெருசலேமில் அர்மீனியர்களின் ஆதிக்கத்தில் இந்த ஆலயம் மிகவும் பிரம்மாண்டமான ஆலயமாக உள்ளது. பிற்பாடு சந்தியாகப்பரின் சீடர்கள் சந்தியாகப்பரின் மற்றைய எலும்புகளை ஸ்பெயின் தேசத்துக்கு கொண்டு போய் புதைத்தனர். நாளடைவில் சந்தியாகப்பரின் சமாதி எங்கு உள்ளது என்று கூட தெரியாமல் போய்விட்டது. இப்படியாக எட்டு நூற்றாண்டுகள் ஓடி மறைந்தன.
கி.பி. 844 இந்த ஆண்டில் ஸ்பெயின் தேசத்தில் வடமேற்கு காட்டுப்பகுதி வழியே தன்னந்தனியே பயணித்தார் ஒரு துறவி. அப்போது அந்த இரவில் ஒரு மண்மேட்டிலிருந்து ஒரு ஒளி வெள்ளம் தோன்றுவதைக் கண்டு அதிசயித்தார். அருகில் சென்று பார்த்தபொழுது விண்ணகத்திலிருந்து ஒரு வினோதமான ஓர் ஒளி வெள்ளம் தோன்றி அந்த மண் மேட்டில் இறங்கியது கண்டு அதிசயித்தார். மேலும் வானோர் பாடலும் மிகத் தெளிவாக கேட்டதால் இந்த இடத்தில் ஏதோ அதிசயம் நடக்கப்போகிறது அல்லது மறைந்துள்ளது என்று கண்டு கொண்டார் . அந்த இடத்தை அடையாளம் வைத்துக்கொண்டு அந்த மண்மேட்டை தோண்டிப்பார்த்த பொழுது அங்கே நம் சந்தியாகப்பரின் எலும்புக்கூடு ஒரு பெட்டியில் ஒளிர்ந்தது. மேலும் அந்த பெட்டியில் இருந்து சில பொருட்களை முன்னிட்டு அவை சந்தியாகப்பரின் எலும்புக்கூடுதான் என்று நிச்சயித்தார்கள்.
அன்றிலிருந்து ஆரம்பமானது நம் சந்தியாகப்பரின் அதிசயங்களும் அற்புதங்களும். இதைப்பற்றி கேள்விப்பட்ட அரசன் 2-ஆம் அல்போன்சா ஓடோடி வந்தான். சந்தியாகப்பரை தெண்டனிட்டு வணங்கினான். நம் சந்தியாகப்பரை ஸ்பெயின் தேசத்தின் பாதுகாவலர் என்று அறிவித்தான். அவர் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் பெயர் கம்போஸ்த்தலா என்பதாகும். எனவே அதே இடத்தில் அவர் சமாதி மீது ஒரு மிகப்பிரம்மாண்டமான கோவில் ஒன்றை கட்டினான். அவரது காலத்தில் அதற்கு இணையான ஆலயம் உலகில் எங்குமே இல்லை என்னும் அளவிற்கு அது இருந்தது. அந்த கோவிலின் முகப்பும் சரி உள்கட்டமைப்பும் சரி பிரம்மாண்டம் தான் போங்கள். அந்தக் காலத்திலேயே இந்த ஆலயம் இயேசுவின் திருவிழாவுக்கு ஒப்பானது என்று யாத்திரிகர்கள் அறிய வந்தார்கள். இப்போதும் இந்த கோவில் SANTIAGO DE COMPOSTALA (சாண்டியாகோ டீ கம்போஸ்டலா) என்று அழைக்கப்படுகிறது.
ஸ்பெயின் நாட்டில் வடக்கிலிருந்து கிழக்கிலிருந்தும் தூய சந்தியாகப்பரை தரிசிக்க மக்கள் வெள்ளம் படையெடுத்து வந்தது. இதனால் வியாபாரம், தங்குமிடம், போக்குவரத்து என பல வழிகளிலும் நாட்டிற்கு வருமானம் பெருகியது. சிறு சிறு குட்டி சமஸ்தானங்கள். குட்டி ராஜாக்கள் தங்களின் நிலைகளை உயர்திக் கொள்ளவும், பாதுகாப்பை முன்னிட்டும் ஒன்று சேர்ந்தனர். இது பல வல்லரசு நாடுகளான சார்சானியர்களுக்கும், துருக்கி முஸ்லீம்களுக்கும் ஆப்ரிக்க இஸ்லாமிய நாட்டினர்களுக்கும் பிடிக்கவில்லை.
எனவே ஸ்பெயின் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் அடிக்கடி சண்டை வெடித்தது. அப்போது ஸ்பெயின் நாட்டில் அரசராக இருந்தவர் 1-ஆம் ரோமிரோ. இவர் அப்போது அஸ்துரியாஸ் என்னுமிடத்தில் தன் குறைந்த படையினரோடு இந்த மிகப்பெரும் சார்சானிய படைகளுடன் மோதுவதற்கு தயாராக இருந்தார். என்னதான் அவருக்கு கடவுள் நம்பிக்கையும் தன் படை மீது நம்பிக்கையும் இருந்தாலும் ஏனோ மனம் கலக்கமுற்றார். தன் படையினரை க்ளாவிஜோ என்னுமிடத்தில் நிறுத்தினார். அந்த இடத்தில் அன்றைய இரவில் புனித சந்தியாகப்பர் அரசன் ரோமிரோவின் கனவில் தோன்றி ரோமிரோ... நீ மனம் கலங்க வேண்டாம். நாளைய போரில் இந்த சார்சானியர்களை எதிர்த்து உன் சார்பாக நான் போராடுவேன்.
வெற்றி உனதே... நான் ஒரு வெள்ளைக் குதிரையில் வெள்ளை ஆடையில் சிலுவை அடையாளமிட்ட வெள்ளைக் கொடியோடு இந்த பெரிய சார்சானியர் படையோடு போராடுவேன். இதை நீயும் உன் வீரர்களும் மற்றும் சார்சானிய வீரர்களும் காண்பீர்கள் என்று கூறி மறைந்து போனார். அரசன் ரோமிரோ அடைந்த சந்தோஷமும் தைரியமும் சொல்ல வார்த்தை இல்லை. அப்போதே இந்த கனவைப் பற்றி தன் படைத்தளபதிக்கும் வீரர்களுக்கும் அறிவித்து அந்த இரவிலேயே அந்த ஊர் வந்திருந்த ஆயரிடம் சென்று தன் கனவைத் தெரிவித்து வெற்றிக்கான ஆசீரும் அவரிடம் பெற்றான்.
நம் புனித சந்தியாகப்பர் கொடுத்த தைரியத்தினாலும் அவருடைய வாக்குறுதியினாலும் உத்வேகம் பெற்ற அரசனும் படையினரும் போர்க்களத்தில் பயங்கரமாகப் போரிட்டனர். என்ன ஆயிற்று இந்த கிறிஸ்தவர்களுக்கு என்று ஆத்திரப்பட்டான். அந்த முஸ்லீம் படைத்தளபதி. இந்த சின்ன படையை வைத்துக் கொண்டு நம்மை எதிர்க்க இந்த கிறிஸ்தவர்களுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம். நம் படைக்கு முன் இந்த கிறிஸ்தவர்களின் படை ஐந்து நிமிடங்களுக்கு கூட தாங்காது. மார்ரே என்று ஆணையிட்டான், பயங்கரப்போர் ஆரம்பமாயிற்று.
முஸ்லீம் படையான சார்சானியர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. அவர்களுக்குள் பலர் தலை இழந்தனர். பல கிறிஸ்த்தவ படையினரும் பல முஸ்லீம் வீரர்களும் புனித சந்தியாகப்பரை வெள்ளைக் குதிரையில் வெள்ளை உடையில் உருவிய கத்தியோடும் வெள்ளை கொடியுடனும் போர்க்களத்தில் சுற்றி சுற்றி வருவதைக் கண்டார்கள். புனித சந்தியாகப்பர் வாழ்க... என்று சந்தியாகப்பருக்கு ஜெயகோஷம் போட்டனர். அவ்வளவுதான் பெரும் படைகொண்ட சார்சானியப் படை பெரும் தோல்வி கண்டது. சந்தியாகப்பரை எதிர்க்க முடியாது. வாருங்கள் ஓடிப்போவோம் என்று குரல் கேட்டது. அவ்வளவுதான் சார்சானியப் பெரும் படை புறமுதுகு காட்டி ஓடியது. அன்றைய போரில் தலை இழந்தும் வெட்டப்பட்டு இறந்தவர்களும் குறைந்தது எழுபது ஆயிரம் பேர். இப்படியாக புனித சந்தியாகப்பர் போராளி அப்போஸ்த்தலர் என்றும் படைமிரட்டி அப்போஸ்த்தலர் என்றும் பேர் பெற்றார்.
வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு விழா ஆகஸ்டு மாதம் 29 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தளமாகவும் இந்த பேராலயம் திகழ்கிறது.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டு விழா ஆகஸ்டு மாதம் 29 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இதில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு (2020) விழா நடைபெறவில்லை..
இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு வழிகாட்டுதலின் படி வேளாங்கண்ணி பேராலய பெருவிழா ஆகஸ்டு 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குமா? என்பது தெரியவில்லை. ஆனால் பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பக்தர்கள் திருவிழா நடைபெறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டு விழா ஆகஸ்டு மாதம் 29 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இதில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு (2020) விழா நடைபெறவில்லை..
இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு வழிகாட்டுதலின் படி வேளாங்கண்ணி பேராலய பெருவிழா ஆகஸ்டு 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குமா? என்பது தெரியவில்லை. ஆனால் பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பக்தர்கள் திருவிழா நடைபெறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் எவரும் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெறமாட்டார். அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார்.
ஒரு நாள் பேய்பிடித்த ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்தனர். அவர் பார்வையற்றவரும், பேச்சற்றவருமாக இருந்தார். இயேசு அவரிடமிருந்த பேயை ஓட்டி, அவரைக் குணமாக்கினார். பேச்சற்ற அவர் பேசவும், பார்வையற்ற அவர் பார்க்கவும் முடிந்தது. கூட்டத்தினர் வியந்து நின்றனர். திரண்டிருந்த மக்கள் யாவரும் மலைத்துப் போய், “தாவீதின் மகன் இவரோ?” என்று பேசிக்கொண்டனர்.
ஆனால் இதைக் கேட்ட பரிசேயரும், எருசலேமில்இருந்து வந்திருந்த மறைநூல் அறிஞரும், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது” என்றும், “பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.
இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது, “சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த நகரமும், வீடும் நிலைத்து நிற்காது. சாத்தான் சாத்தானையே ஓட்டினால் அவன் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போவான். அப்படியானால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? அதுவே அவனது அழிவு.
நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே, நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள். நான் கடவுளின் ஆவியைக் கொண்டே பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா?
வலியவர் ஆயுதம் தாங்கி தம் அரண்மனையைக் காக்கிறபோது, அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது. அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரைக் கட்டிவைத்த பிறகுதான் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக் கலங்களையும் பறித்துக் கொண்டு, அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.
என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார். என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார். எனவே நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் தூய ஆவியைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் எவரும் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெறமாட்டார். அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார்.’’
“இவனை தீய ஆவி பிடித்திருக்கிறது” என்று தம்மைப் பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.
ஆனால் இதைக் கேட்ட பரிசேயரும், எருசலேமில்இருந்து வந்திருந்த மறைநூல் அறிஞரும், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது” என்றும், “பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.
இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது, “சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த நகரமும், வீடும் நிலைத்து நிற்காது. சாத்தான் சாத்தானையே ஓட்டினால் அவன் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போவான். அப்படியானால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? அதுவே அவனது அழிவு.
நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே, நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள். நான் கடவுளின் ஆவியைக் கொண்டே பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா?
வலியவர் ஆயுதம் தாங்கி தம் அரண்மனையைக் காக்கிறபோது, அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது. அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரைக் கட்டிவைத்த பிறகுதான் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக் கலங்களையும் பறித்துக் கொண்டு, அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.
என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார். என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார். எனவே நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் தூய ஆவியைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் எவரும் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெறமாட்டார். அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார்.’’
“இவனை தீய ஆவி பிடித்திருக்கிறது” என்று தம்மைப் பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.
தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயத்தில் தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலி, மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆசீா் நடக்கிறது.
தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைமுன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், தொடர்ந்து திருயாத்திரை திருப்பலியும் நடந்தது. மாலையில் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனாக தத்து கொடியை ஆலயத்தை சுற்றி வந்து காணிக்கையாக செலுத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
பின்பு நற்கருணை ஆசீருடன் கொடியை பங்குதந்தை ஜெரால்ட் ரவி அர்ச்சித்து தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் ஏற்றி வைத்தார். தொடர்ந்து அருட்தந்தை ரினோ மறையுரை வழங்கினார். இதில் கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலி, மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆசீா் நடக்கிறது. 8-ம் திருவிழாவான வருகிற 3-ந் தேதி காலையில் வடக்கன்குளம் மறை மாவட்ட முதன்மை குரு ஜான்பிரிட்டோ தலைமையில் திருயாத்திரை திருப்பலி, மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.
9-ந் திருவிழாவான 4-ந் தேதி காலையில் திருப்பலியும் திருயாத்திரையும் நடக்கிறது. மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையில் ஜெபமாலையும், மன்றாட்டு மாலையும் நடக்கின்றது. தொடர்ந்து மலையாள திருப்பலியும் நடக்கிறது. 12 மணிக்கு பரிசுத்த அதிசய பனிமாதா தேரில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது.
10-ம் திருவிழாவான 5-ந் தேதி பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஜெரால்ட் ரவி, உதவி பங்கு தந்தை ஜார்ஜ் அந்தோணி, தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாககுழு உறுப்பினர்கள், இறை மக்கள் செய்துவருகின்றனர்.
பின்பு நற்கருணை ஆசீருடன் கொடியை பங்குதந்தை ஜெரால்ட் ரவி அர்ச்சித்து தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் ஏற்றி வைத்தார். தொடர்ந்து அருட்தந்தை ரினோ மறையுரை வழங்கினார். இதில் கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலி, மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆசீா் நடக்கிறது. 8-ம் திருவிழாவான வருகிற 3-ந் தேதி காலையில் வடக்கன்குளம் மறை மாவட்ட முதன்மை குரு ஜான்பிரிட்டோ தலைமையில் திருயாத்திரை திருப்பலி, மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.
9-ந் திருவிழாவான 4-ந் தேதி காலையில் திருப்பலியும் திருயாத்திரையும் நடக்கிறது. மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையில் ஜெபமாலையும், மன்றாட்டு மாலையும் நடக்கின்றது. தொடர்ந்து மலையாள திருப்பலியும் நடக்கிறது. 12 மணிக்கு பரிசுத்த அதிசய பனிமாதா தேரில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது.
10-ம் திருவிழாவான 5-ந் தேதி பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஜெரால்ட் ரவி, உதவி பங்கு தந்தை ஜார்ஜ் அந்தோணி, தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாககுழு உறுப்பினர்கள், இறை மக்கள் செய்துவருகின்றனர்.
நாகர்கோவில் ராமன்புதூர், கார்மல்நகர் செயின்ட் மேரீஸ் தெருவில் உள்ள புனித சந்தியாகப்பர் குருசடி ஆலய திருவிழா அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைப்படி எளிமையாக நடந்தது.
நாகர்கோவில் ராமன்புதூர், கார்மல்நகர் செயின்ட் மேரீஸ் தெருவில் புனித சந்தியாகப்பர் குருசடி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் புனித சந்தியாகப்பர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு விழா அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைப்படி எளிமையாக நடந்தது. கார்மல்நகர் பங்குதந்தை சகாயபிரபு தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பங்குதந்தை சகாயபிரபு, பங்கு நிர்வாக குழு தலைவர் ஜோசப் ஆன்டனி, செயலாளர் ஆன்டனி தனிஸ், பொருளாளர் லியோன் ஜேசு ரெத்னம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கார்மல்நகர் நண்பர்கள் சங்க நிர்வாகிகள் ஜெரோம் ஜெயக்குமார், பென்னட் ஜெயசிங், லூயிஸ் பிரபு, ஜெயக்குமார் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
அதன்படி இந்த ஆண்டு விழா அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைப்படி எளிமையாக நடந்தது. கார்மல்நகர் பங்குதந்தை சகாயபிரபு தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பங்குதந்தை சகாயபிரபு, பங்கு நிர்வாக குழு தலைவர் ஜோசப் ஆன்டனி, செயலாளர் ஆன்டனி தனிஸ், பொருளாளர் லியோன் ஜேசு ரெத்னம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கார்மல்நகர் நண்பர்கள் சங்க நிர்வாகிகள் ஜெரோம் ஜெயக்குமார், பென்னட் ஜெயசிங், லூயிஸ் பிரபு, ஜெயக்குமார் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
பேராவூரணி ஆதனூர் பாதுகாவலர் புனித அன்னாள் ஆலய தேர்பவனி கொரோனா ஊரடங்கு காரணமாக ஆலய வளாகத்திற்குள் எளிமையான முறையில் நடைபெற்றது.
பேராவூரணி அருகே ஆதனூர் பாதுகாவலர் புனித அன்னாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 17-ந்தேதி ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் தினமும் திருப்பலி நடைபெற்றது. ஆதனூர் பங்குத்தந்தை லூர்துசாமி அடிகளார் திருப்பலியை நிறைவேற்றினார். அதனை தொடர்ந்து கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்பவனி ஆலய வளாகத்திற்குள் எளிமையான முறையில் நடைபெற்றது.
இதில் திரளான கிறிஸ்தவர்கள், புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நேற்று திருப்பலியும், கொடியிறக்கமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவிழா நிறைவு பெற்றது.
விழாவில் தினமும் திருப்பலி நடைபெற்றது. ஆதனூர் பங்குத்தந்தை லூர்துசாமி அடிகளார் திருப்பலியை நிறைவேற்றினார். அதனை தொடர்ந்து கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்பவனி ஆலய வளாகத்திற்குள் எளிமையான முறையில் நடைபெற்றது.
இதில் திரளான கிறிஸ்தவர்கள், புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நேற்று திருப்பலியும், கொடியிறக்கமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவிழா நிறைவு பெற்றது.
நாகர்கோவிலில் புனித அல்போன்சா திருநாள் நிகழ்வுகள் 4 நாட்கள் நடக்கிறது. இதை பொதுமக்கள் இணையதளம் மற்றும் தொலைக்காட்சியில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் புனிதையான அல்போன்சாவின் பெயரை தாங்கி நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் புனித அல்போன்சா திருத்தலம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28-ந் தேதியை மையமாக கொண்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கினால் 4 நாட்கள் மட்டுமே திருப்பலி மற்றும் நவநாள் ஜெபம் நடக்கிறது.
அதன்படி திருப்பலி மற்றும் நவநாள் ஜெபம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது.
இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு தக்கலை மறை மாவட்ட ஆவணக்காப்பாளர் தாமஸ் சத்தியநேசன் நவநாள் ஜெபம் ஜெபிக்கிறார். தொடர்ந்து தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் தாமஸ் பவுவத்துப்பறம்பில் தலைமையில் நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் சதிஷ் குமார் ஜாய் மறையுரையாற்றுகிறார். 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் ரோபின்ஸ் குழிகோடில் நவநாள் ஜெபம் ஜெபிக்க, அருட்பணியாளர் ஜிம்மி தெக்கே கடுமத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் அஜின் ஜோஸ் மறையுரையாற்றுகிறார்.
புனித அல்போன்சா விண்ணகம் சென்ற 28-ந் தேதி நிறைவுநாள் நிகழ்ச்சியில் மாலை 6 மணிக்கு நவநாள் ஜெபத்தினை தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் அருட்பணியாளர் தாமஸ் பவுவத்துப்பறம்பில் ஜெபிப்பார். தொடர்ந்து தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் திருப்பலி நிறைவேற்றுவார்.
ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வரஅனுமதி இல்லாத காரணத்தால் இந்த திருவிழா நிகழ்வுகள் அனைத்தும் தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வாயிலாக ஒளிபரப்பப்படும்.
குறிப்பாக www.alphonsachurch.org, www.catholictamiltv.in, http://www.youtube.com/ St.AlphonsaShrineChurchNagercoil, www.youtube.com/arulthoothu TV, www.youtube.com/catholictodaytamil my TV போன்ற இணையதளங்களிலும் உள்ளூர் தொலை காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெப உதவிக்கு 9487084901 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஜாண் பந்திச்சிறைக்கல் மற்றும் துணைப் பங்குத்தந்தை டோஜி செபாஸ்டின் ஆகியோர் செய்துள்ளனர்.
அதன்படி திருப்பலி மற்றும் நவநாள் ஜெபம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது.
இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு தக்கலை மறை மாவட்ட ஆவணக்காப்பாளர் தாமஸ் சத்தியநேசன் நவநாள் ஜெபம் ஜெபிக்கிறார். தொடர்ந்து தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் தாமஸ் பவுவத்துப்பறம்பில் தலைமையில் நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் சதிஷ் குமார் ஜாய் மறையுரையாற்றுகிறார். 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் ரோபின்ஸ் குழிகோடில் நவநாள் ஜெபம் ஜெபிக்க, அருட்பணியாளர் ஜிம்மி தெக்கே கடுமத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் அஜின் ஜோஸ் மறையுரையாற்றுகிறார்.
புனித அல்போன்சா விண்ணகம் சென்ற 28-ந் தேதி நிறைவுநாள் நிகழ்ச்சியில் மாலை 6 மணிக்கு நவநாள் ஜெபத்தினை தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் அருட்பணியாளர் தாமஸ் பவுவத்துப்பறம்பில் ஜெபிப்பார். தொடர்ந்து தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் திருப்பலி நிறைவேற்றுவார்.
ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வரஅனுமதி இல்லாத காரணத்தால் இந்த திருவிழா நிகழ்வுகள் அனைத்தும் தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வாயிலாக ஒளிபரப்பப்படும்.
குறிப்பாக www.alphonsachurch.org, www.catholictamiltv.in, http://www.youtube.com/ St.AlphonsaShrineChurchNagercoil, www.youtube.com/arulthoothu TV, www.youtube.com/catholictodaytamil my TV போன்ற இணையதளங்களிலும் உள்ளூர் தொலை காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெப உதவிக்கு 9487084901 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஜாண் பந்திச்சிறைக்கல் மற்றும் துணைப் பங்குத்தந்தை டோஜி செபாஸ்டின் ஆகியோர் செய்துள்ளனர்.
கும்பகோணம் புனித பெரியநாயகி அன்னையின் அலங்கார தேர் பவனி பங்குத்தந்தை பெர்னாண்டஸ் தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் பெருமாண்டி மாதா கோவில் தெருவில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 101-வது ஆண்டு திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் ஜெபமாலை திருவிழா, கூட்டு திருப்பலி ஆகியவை நடந்தது. கூட்டு திருப்பலியை உதவி பங்குத்தந்தை பால்தினகரன் தொடங்கி வைத்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு அன்னையின் அலங்கார தேர்பவனி பங்குத்தந்தை பெர்னாண்டஸ் தலைமையில் நடந்தது.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஜெபமாலை திருவிழா, கூட்டு திருப்பலி ஆகியவை நடந்தது. கூட்டு திருப்பலியை உதவி பங்குத்தந்தை பால்தினகரன் தொடங்கி வைத்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு அன்னையின் அலங்கார தேர்பவனி பங்குத்தந்தை பெர்னாண்டஸ் தலைமையில் நடந்தது.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா விதிகளை பின்பற்றி திருவிழா நடைபெற வேண்டும் என்பதால் பொதுமக்கள் தனித்தனியாக சென்று வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி :
உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி வரை நடக்கும்.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிலையில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. இந்த ஆண்டும் கொரோனா 2-வது அலை காரணமாக பொதுமக்கள் பங்கேற்பின்றி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இன்று காலை 4 மணிக்கு ஜெபமாலை நடந்தது. தொடர்ந்து 4.30 மணிக்கு திருப்பலியும், 7 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கினார். பின்னர் கொடி பிரதிஷ்டை செய்யப்பட்டு கொடிமரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பிரார்த்தனைக்கு பிறகு ஆயர் கொடியேற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் அனைத்து நிகழ்ச்சிகளும் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காலை 9 மணிக்கு 3-ம் திருப்பலி நடைபெற்றது.
பகல் 12 மணிக்கு பனிமயமாதாவுக்கு பொன் மகுடத்தை அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து மதியம் 3 மணி மற்றும் இரவு 7 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. ஆகஸ்ட் மாதம்ட 4-ந்தேதி இரவு பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. மறுநாள் மாலை 5 மணிக்கு பாளை மறை மாவட்ட பிஷப் அந்தோணி சாமி தலைமையில் 8-ம் திருப்பலி நடக்கிறது.
கொரோனா விதிகளை பின்பற்றி திருவிழா நடைபெற வேண்டும் என்பதால் பொதுமக்கள் தனித்தனியாக சென்று வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கொடி பவனி, நற்கருணை பவனி, சப்பர பவனி ரத்து செய்யப்பட்டு உள்ளது. விழா நாட்களில் வழக்கமாக பேராலயத்தின் அனுமதியோடு நடத்தப்படும் கடைகளும், பொருட்காட்சி நடத்தவும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பேராலய திருத்தல பணியாளர்கள், பங்குதந்தை குமார் ராஜா, உதவி பங்கு தந்தை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் சுமார் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி வரை நடக்கும்.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிலையில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. இந்த ஆண்டும் கொரோனா 2-வது அலை காரணமாக பொதுமக்கள் பங்கேற்பின்றி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இன்று காலை 4 மணிக்கு ஜெபமாலை நடந்தது. தொடர்ந்து 4.30 மணிக்கு திருப்பலியும், 7 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கினார். பின்னர் கொடி பிரதிஷ்டை செய்யப்பட்டு கொடிமரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பிரார்த்தனைக்கு பிறகு ஆயர் கொடியேற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் அனைத்து நிகழ்ச்சிகளும் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காலை 9 மணிக்கு 3-ம் திருப்பலி நடைபெற்றது.
பகல் 12 மணிக்கு பனிமயமாதாவுக்கு பொன் மகுடத்தை அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து மதியம் 3 மணி மற்றும் இரவு 7 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. ஆகஸ்ட் மாதம்ட 4-ந்தேதி இரவு பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. மறுநாள் மாலை 5 மணிக்கு பாளை மறை மாவட்ட பிஷப் அந்தோணி சாமி தலைமையில் 8-ம் திருப்பலி நடக்கிறது.
கொரோனா விதிகளை பின்பற்றி திருவிழா நடைபெற வேண்டும் என்பதால் பொதுமக்கள் தனித்தனியாக சென்று வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கொடி பவனி, நற்கருணை பவனி, சப்பர பவனி ரத்து செய்யப்பட்டு உள்ளது. விழா நாட்களில் வழக்கமாக பேராலயத்தின் அனுமதியோடு நடத்தப்படும் கடைகளும், பொருட்காட்சி நடத்தவும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பேராலய திருத்தல பணியாளர்கள், பங்குதந்தை குமார் ராஜா, உதவி பங்கு தந்தை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் சுமார் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்திருவிழா வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்திருவிழா வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி திருவிழா கொண்டாடப்படும் என கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புண்ணிய ஸ்தலங்களில் சிறப்பு பெற்ற திருத்தலம் தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலயமாகும். இந்த ஆலயத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 4-ந்தேதி நிறைவு பெறுவது வழக்கம்.
கொரோனாநோய் தொற்றை அடுத்து அரசு பொது முடக்கம் அறிவித்திருப்பதை அடுத்து திருவிழா கொண்டாட்டங்கள் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து வருகிற 27-ந்தேதி காலை 5.15 மணிக்கு அருட்தந்தை ஒய்.தேவராஜன் அடிகளார் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு புனித கொடியேற்றம் நடைபெறுகிறது.
மாதா சொரூபம் பொறிக்கப்பட்ட புனித கொடியை அருட் தந்தையர்கள் ஜெபம் செய்து அர்ச்சித்த பின்னர் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் கொடியேற்றுகிறார்.
அதனைத் தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை திரியாத்திரை திருப்பலியும், மாலை மறையுரையும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது.
ஆகஸ்டு 2-ந்தேதி 7-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை பரிசுத்த அதிசய பனிமாதா காட்சி கொடுத்த மலையில் அருட் தந்தை விஜயன் தலைமையில் திரியாத்திரை திருப்பலி நடைபெறுகிறது.
மாலை 6.30 மணிக்கு பாளை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது. 3-ந்தேதி 8-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 7.30 மணிக்கு வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குருவானவர் பிரிட்டோ அடிகளார் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது.
இத்திருப்பலியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புது நன்மை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நற்கருணைப் பவனியும் அதனைத் தொடர்ந்து நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.
ஆகஸ்டு 4-ந்தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5.15 மணிக்கு அருட்தந்தை ஜார்ஜ் அந்தோணி தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சாத்தான்குளம் மறைவட்ட முதன்மை குருவானவர் ரவிபாலன் தலைமையில் மாலை ஆராதனை நடைபெறுகிறது.
இரவு 10.30 மணிக்கு மலையாளத்திருப்பலியும் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு அதிசய பனிமாதா அன்னையின் அலங்காரத் தேர்ப்பவனியும் நடைபெறுகிறது.
ஆகஸ்டு 5-ந்தேதி 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5.15 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குருவானவர் பன்னீர் செல்வம் தலைமையில் கூட்டுத்திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
7-ந்தேதி முதல் சனி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பங்கு தந்தை ஜெரால்டு ரவி, உதவி பங்கு தந்தை ஜார்ஜ் அந்தோணி மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி திருவிழா கொண்டாடப்படும் என கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புண்ணிய ஸ்தலங்களில் சிறப்பு பெற்ற திருத்தலம் தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலயமாகும். இந்த ஆலயத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 4-ந்தேதி நிறைவு பெறுவது வழக்கம்.
கொரோனாநோய் தொற்றை அடுத்து அரசு பொது முடக்கம் அறிவித்திருப்பதை அடுத்து திருவிழா கொண்டாட்டங்கள் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து வருகிற 27-ந்தேதி காலை 5.15 மணிக்கு அருட்தந்தை ஒய்.தேவராஜன் அடிகளார் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு புனித கொடியேற்றம் நடைபெறுகிறது.
மாதா சொரூபம் பொறிக்கப்பட்ட புனித கொடியை அருட் தந்தையர்கள் ஜெபம் செய்து அர்ச்சித்த பின்னர் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் கொடியேற்றுகிறார்.
அதனைத் தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை திரியாத்திரை திருப்பலியும், மாலை மறையுரையும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது.
ஆகஸ்டு 2-ந்தேதி 7-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை பரிசுத்த அதிசய பனிமாதா காட்சி கொடுத்த மலையில் அருட் தந்தை விஜயன் தலைமையில் திரியாத்திரை திருப்பலி நடைபெறுகிறது.
மாலை 6.30 மணிக்கு பாளை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது. 3-ந்தேதி 8-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 7.30 மணிக்கு வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குருவானவர் பிரிட்டோ அடிகளார் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது.
இத்திருப்பலியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புது நன்மை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நற்கருணைப் பவனியும் அதனைத் தொடர்ந்து நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.
ஆகஸ்டு 4-ந்தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5.15 மணிக்கு அருட்தந்தை ஜார்ஜ் அந்தோணி தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சாத்தான்குளம் மறைவட்ட முதன்மை குருவானவர் ரவிபாலன் தலைமையில் மாலை ஆராதனை நடைபெறுகிறது.
இரவு 10.30 மணிக்கு மலையாளத்திருப்பலியும் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு அதிசய பனிமாதா அன்னையின் அலங்காரத் தேர்ப்பவனியும் நடைபெறுகிறது.
ஆகஸ்டு 5-ந்தேதி 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5.15 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குருவானவர் பன்னீர் செல்வம் தலைமையில் கூட்டுத்திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
7-ந்தேதி முதல் சனி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பங்கு தந்தை ஜெரால்டு ரவி, உதவி பங்கு தந்தை ஜார்ஜ் அந்தோணி மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கோகூர் புனித அந்தோணியார் ஆலய திருவழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கீழ்வேளூர் கோகூரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் 10 நாட்கள் ஆண்டு விழா நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்வார்கள்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக வழிபாட்டு தளங்களில் விழா நடத்த அரசு தடை விதித்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கோகூர் புனித அந்தோணியார் ஆலய திருவழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பங்கு தந்தை ஜான் பீட்டர் கொடியேற்றினார்.
கொரோனா பரவல் காரணமாக குறைவான பக்தர்களே இதில் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10-ம் நாள் பெரிய தேர்பவனி நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக பெரிய தேர் பவனி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், கொடி இறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெரும் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக வழிபாட்டு தளங்களில் விழா நடத்த அரசு தடை விதித்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கோகூர் புனித அந்தோணியார் ஆலய திருவழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பங்கு தந்தை ஜான் பீட்டர் கொடியேற்றினார்.
கொரோனா பரவல் காரணமாக குறைவான பக்தர்களே இதில் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10-ம் நாள் பெரிய தேர்பவனி நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக பெரிய தேர் பவனி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், கொடி இறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெரும் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
உலக வாழ்வில் இரக்கமில்லாமல் வாழ்ந்த செல்வர், மரணத்திற்குப்பின் தம் குற்றத்தை உணர்ந்தாலும், அவர் மன்னிக்கப்படவில்லை.
செல்வம் சேர்ப்பதையே நோக்கமாக வைத்திருந்தவர்களுக்கு, இயேசு ஒரு உவமை வழியே போதித்தார். அதுவே செல்வரும், லாசரும் உவமை. அதன் கருத்துக்களை உள்வாங்கி கொள்வோம். மக்கள் கூட்டத்தின் முன்பு இயேசு கூறியதாவது...
செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். லாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.
அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
செல்வர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலைவில் ஆபிரகாமையும், அவரது மடியில் லாசரையும் கண்டார். அவர், “தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும். லாசர் தமது விரல் நுனியை நீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்” என்று உரக்கக் கூறினார்.
அதற்கு ஆபிரகாம், “மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய். அதே வேளையில் லாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார், நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது” என்றார்.
அவர், “அப்படியானால் தந்தையே, லாசரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே” என்றார். அதற்கு ஆபிரகாம், “மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்” என்றார்.
அவர், “அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்” என்றார். ஆபிரகாம், “அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்” என்றார்.
பணத்தை சேர்ப்பதோடு, கொஞ்சம் புண்ணியத்தை சேர்க்க வலியுறுத்துகிறது, ‘செல்வரும் லாசரும்’ உவமை. செல்வரிடம் பொருள் இருந்தது, ஆனால் அருள் இல்லை. லாசரிடம் பொருள் இல்லை. பொறுமை இருந்தது. இதைதான் இயேசு ‘‘செல்வர் ஒருவர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது’’ என்றார்.
உலகில் வாழும் மனிதர் அனைவரும் சரிநிகர் சமமாகப் பிறப்பதில்லை. நாம் இறைவனிடமிருந்து பெற்ற செல்வங்களை, இல்லாதவர்களுடன் பகிர்ந்தளித்து உதவுவதே வாழ்வின் நோக்கம் என்பதை ஆபிரகாம் வாயிலாக இயேசு அறிவிக்கிறார். தம்மிடம் தேவைக்கு மிஞ்சிய உணவு இருந்தபோதும், கண்ணெதிரில் கிடந்த ஏழை லாசருக்குச் செல்வர் இரங்கவில்லை. மரணத்திற்குப்பின் இப்போது அதை அவர் உணர்ந்தார். எனவே, மேற்கொண்டு அவர் ஆபிரகாமிடம் வாக்குவாதம் செய்யவில்லை. உலக வாழ்வில் இரக்கமில்லாமல் வாழ்ந்த செல்வர், மரணத்திற்குப்பின் தம் குற்றத்தை உணர்ந்தாலும், அவர் மன்னிக்கப்படவில்லை. எனவே அது செல்வரின் உள்ளத்தில் நிலைத்திருந்து, என்றும் அவரை வதைத்துக்கொண்டே இருக்கிறது.
செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். லாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.
அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
செல்வர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலைவில் ஆபிரகாமையும், அவரது மடியில் லாசரையும் கண்டார். அவர், “தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும். லாசர் தமது விரல் நுனியை நீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்” என்று உரக்கக் கூறினார்.
அதற்கு ஆபிரகாம், “மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய். அதே வேளையில் லாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார், நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது” என்றார்.
அவர், “அப்படியானால் தந்தையே, லாசரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே” என்றார். அதற்கு ஆபிரகாம், “மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்” என்றார்.
அவர், “அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்” என்றார். ஆபிரகாம், “அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்” என்றார்.
பணத்தை சேர்ப்பதோடு, கொஞ்சம் புண்ணியத்தை சேர்க்க வலியுறுத்துகிறது, ‘செல்வரும் லாசரும்’ உவமை. செல்வரிடம் பொருள் இருந்தது, ஆனால் அருள் இல்லை. லாசரிடம் பொருள் இல்லை. பொறுமை இருந்தது. இதைதான் இயேசு ‘‘செல்வர் ஒருவர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது’’ என்றார்.
உலகில் வாழும் மனிதர் அனைவரும் சரிநிகர் சமமாகப் பிறப்பதில்லை. நாம் இறைவனிடமிருந்து பெற்ற செல்வங்களை, இல்லாதவர்களுடன் பகிர்ந்தளித்து உதவுவதே வாழ்வின் நோக்கம் என்பதை ஆபிரகாம் வாயிலாக இயேசு அறிவிக்கிறார். தம்மிடம் தேவைக்கு மிஞ்சிய உணவு இருந்தபோதும், கண்ணெதிரில் கிடந்த ஏழை லாசருக்குச் செல்வர் இரங்கவில்லை. மரணத்திற்குப்பின் இப்போது அதை அவர் உணர்ந்தார். எனவே, மேற்கொண்டு அவர் ஆபிரகாமிடம் வாக்குவாதம் செய்யவில்லை. உலக வாழ்வில் இரக்கமில்லாமல் வாழ்ந்த செல்வர், மரணத்திற்குப்பின் தம் குற்றத்தை உணர்ந்தாலும், அவர் மன்னிக்கப்படவில்லை. எனவே அது செல்வரின் உள்ளத்தில் நிலைத்திருந்து, என்றும் அவரை வதைத்துக்கொண்டே இருக்கிறது.






