என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புனித அன்னாள்"
- இன்று தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
- 20-ந்தேதி இரவு 9 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.
நாகர்கோவில் வடக்குகோணம் புனித அன்னாள் ஆலய குடும்பவிழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. அதன்படி விழாவில் நாளை மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, அதைதொடர்ந்து கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் ஹிலாரியுஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைக்கிறார். இரவு 8.30 மணிக்கு கலைநிகழ்ச்சிகள், உணவுத்திருவிழா ஆகியவை நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவில் 20-ந்தேதி காலை 7.30 மணிக்கு பார்வதிபுரம் அருட்பணியாளர் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. ஆசாரிபள்ளம் அருட்பணியாளர் அருள்ஜோசப் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.
21-ந்தேதி காலை 6 மணிக்கு முதல் திருப்பலி, 8 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட பொருளாளர் அலாய்சியஸ் மரிய பென்சிகர் தலைமை தாங்கி திருவிழா திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். மதியம் 2 மணிக்கு தேர்பவனி, இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம் ஆகியவை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் ஜோசப் காலின்ஸ் தலைமையில் அருட்சகோதரிகள், பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவையினர் செய்து வருகிறார்கள்.
நேற்று காலை திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் ஆடம்பர தேரோட்டம் நடைபெற்றது. இதில் புனித அன்னாள் சொரூபம் தாங்கிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். மாலையில் திவ்விய நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மறைவட்ட முதன்மைகுரு ஹென்றிபுஷ்பராஜ், உதவி பங்குதந்தை எடிசன் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்