search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "st anne"

    • 25-ந்தேதி பரலோக அன்னையின் அலங்கார தேர் பவனி நடக்கிறது.
    • 24-ந்தேதி புது நன்மை திருவருட்சாதன திருப்பலி நடைபெறுகிறது.

    அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் ரஜகிருஷ்ணாபுரத்தில் புனித அன்னம்மாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நாளை (திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கு அருட்பணியாளர் லியோன் தலைமை தாங்குகிறார்.

    திருவிழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலி, மாலையில் மறையுரையும், நற்கருணை ஆசீரும், இரவு அன்பியங்களின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 21-ந்தேதி இரவு புனித அன்னாள் தொடக்கப்பள்ளி, புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 22-ந்தேதி இரவு டோன் போஸ்கோ இளைஞர் இயக்கம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    23-ந் தேதி காலை 6 மணிக்கு உறுதி பூசுதல் திருவருட்சாதன திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்குகிறார். மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். .

    24-ந் தேதி காலை 6 மணிக்கு புது நன்மை திருவருட்சாதன திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது.

    25-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருவிழா மாலை ஆராதனை நடைபெறுகிறது. இரவு பரலோக அன்னையின் அலங்கார தேர் பவனி நடக்கிறது.

    26-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. பகல் 2 மணிக்கு பரலோக அன்னையின் தேர்பவனி நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஏ.ஜே.கிறிஸ்டியன், பங்கு பேரவை துணைத் தலைவர் டி.வி.சி.விட்மன், செயலாளர் ஜோசப்கிராசியஸ், துணைச் செயலாளர் டெய்சி மெரிட், பொருளாளர் பாத்திமா மைக்கிள் ராஜன், பங்கு மேய்ப்பு பணிக்குழுவினர், புனித அன்னாள் அருட்சகோதரிகள் மற்றும் பங்கு இறை மக்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
    • இரவு 7.30 மணிக்கு நற்கருணை ஆசீர் நடக்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான கூடங்குளம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலி, மறையுரை, மாலையில் திருயாத்திரை திருப்பலி, நற்கருணை ஆசீர், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    9-ம் திருநாளான நேற்று காலையில் கூத்தன்குழி தியான இல்ல அதிபர் வியான்னி தலைமையில் திருப்பலி நடந்தது. மாலையில் சி.சவேரியார்புரம் பங்குத்தந்தை ரெமிஜியுஸ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. சோமநாதபேரி பங்குத்தந்தை ஜெகதீஷ் மறையுரையாற்றினார்.

    இரவில் புனித அன்னம்மாளின் தேர் பவனி நடந்தது. ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேரானது முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. வழிநெடுகிலும் திரளான கிறிஸ்தவர்கள் புனித அன்னம்மாளை வழிபட்டனர்.

    10-ம் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு கோட்டார் அசிசி அச்சக மேலாளர் ஜார்ஜ் தலைமையில் முதல் திருப்பலி நடக்கிறது. காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. பாஸ்டர் லென்சன் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் ஆல்பர்ட் ஜான்சன் மறையுரையாற்றுகிறார்.

    மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 7.30 மணிக்கு நற்கருணை ஆசீர் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கூடங்குளம் பங்குத்தந்தை அந்தோணி ஜெபஸ்டின் ரூபன் தலைமையில், பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    • விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.
    • விழா நாட்களில் தினமும் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கிறது.

    கூடங்குளம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழானை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை, ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து மாலையில் கொடியேற்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பிரார்த்தனைகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. சிறப்பு அழைப்பாளராக பங்கு தந்தைகள் தேவராஜன், ஜெகதீஷ், அன்பு செல்வன், மணி, வசந்தன், ராபின், கிளட்ச்சின், சூசை மணி மற்றும் புனித அன்னம்மாள் ஆலயத்தினர், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கூடங்குளம் பங்குத்தந்தை அந்தோணி ஜெபஸ்டின் ரூபன் செய்திருந்தார்.

    • புனித அன்னம்மாள் சந்தனமாதா என்று உலகெங்கும் மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.
    • இந்த ஆலயம் தூய அன்னம்மாள் ஆலயம் என அழைக்கப்பட்டது.

    குருசடி பங்கின் புனித அந்தோணியார் ஆலயம் 1911-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அப்பொழுது இந்த பங்கின் ஒரு பகுதியாக வடக்குகோணம் குருசடி இருந்து வந்தது. அன்று இந்த பகுதியில் 35 குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். இந்த கிராமத்தில் வாழ்ந்த பெரியவர்கள் தங்களுக்கும் ஓர் ஆலயம் வேண்டும் என்று பெரிதும் விரும்பினர். அவர்களது பெரும் முயற்சியால் 1956-ம் ஆண்டு ஓலைகளால் ஆலயம் அமைத்தனர். இந்த ஆலயம் தூய அன்னம்மாள் ஆலயம் என அழைக்கப்பட்டது.

    காலம் செல்ல செல்ல ஓலைகளால் ஆன ஆலயம் மக்கள் வந்து வழிபடுவதற்கு போதுமானதாக இல்லை. பக்தி ஆர்வமிக்க கிறிஸ்தவ குடும்பங்கள் இங்கு அதிகம் வாழ்ந்ததால் அவர்கள் கல்லினால் ஓர் ஆலயம் கட்டி முடித்தார்கள். குருசடியில் அன்றைய பங்குதந்தையாக இருந்த ஆர்.அந்தோணிமுத்துவின் கடுமையான முயற்சியால் கோட்டார் ஆயர் டி.ஆர். ஆஞ்சிசாமி 6-1-1964 அன்று இந்த ஆலயத்தை அர்ச்சித்தார்.

    ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இறைமக்களின் பெரும் முயற்சியால் ஆலயத்தின் பக்கத்தில் நிலங்கள் வாங்கப்பட்டது. 29-9-1989 அன்று கோட்டார் ஆயர் லியோன் ஏ.தர்மராஜ் தற்போதுள்ள ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ஊர்மக்களின் விடா முயற்சியாலும், மிகுந்த ஒற்றுமையினாலும் உடல் உழைப்பாலும் மிக குறுகிய காலத்தில் மிக அழகிய தோற்றத்துடன் ஆலயப்பணி முடிக்கப்பட்டது. அருட்பணியாளர் ஜோசப்ராஜ் குருசடி பங்குதந்தையாக இருந்த போது 10-8-1990 அன்று ஆயர் லியோன் ஏ.தர்மராஜ் புதிய ஆலயத்தை அர்ச்சித்தார்.

    புதிய ஆலயத்தில் பழைய கோபுரம் என்ற நிலையை மாற்ற மக்கள் பல முயற்சிகள் எடுத்தார்கள். மக்களின் தாராளமான நன்கொடையாலும், பங்குபேரவையின் அயராத உழைப்பாலும் இறைமக்களின் உழைப்பாலும் புதிய கோபுரம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. புதுப்பொலிவோடு மிக குறுகிய காலத்தில் கோபுரம் கட்டி எழுப்பப்பட்டது.

    23-4-2000 உயிர்ப்பு பெருவிழா அன்று மறைமாவட்ட குருகுல முதல்வர் குரூஸ் எரோனிமூஸ் திருப்பலி நிறைவேற்றி புதிதாக கட்டப்பட்டுள்ள கோபுரத்தை அர்ச்சித்தார். தொடர்ந்து பல ஆண்டுகள் கிளை பங்காக இருந்த வடக்குகோணத்தை தனிபங்காக மாற்றுவதற்கு உள்ள ஏற்பாடுகளை மக்கள் செய்ய தொடங்கினர்.

    பங்குதந்தை வரும்போது அவர் தங்குவதற்கு நல்லதொரு இல்லம் வேண்டும் என்று மிகவும் வசதியான இல்லத்தை கட்டத்தொடங்கினர். 9-8-2002 அன்று அருட்பணியாளர் ஜான்குழந்தை பங்குதந்தை இல்லத்தை அசீர்வதித்து திறந்து வைத்தார். தொலைநோக்கு பார்வையுடன் பெதுமக்கள் பயன்படுத்துவதற்கு சமூக நலக்கூடம் ஒன்று தேவையென்று உணர்ந்த அன்றைய பங்குபேரவையினர் 9-8-2002 அன்று சமூக நலக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டினர். அன்றைய குருகுலமுதல்வர் ஜான் குழந்தை அடிக்கல் நாட்டினார்.

    கோணம் கிளைபங்கு, பங்காக உயர்த்தப்பட வேண்டுமென்று அனைவரும் சேர்ந்து உழைத்தனர். மக்களின் முயற்சி வெற்றி பெற்றது. 31-5-2004 அன்று தனி பங்காக உயர்த்தப்பட்டு ஆயர் லியோன் ஏ.தர்மராஜ் திருப்பலி நிறைவேற்றினார். மேலும், அருட்பணியாளர் ஆன்டனி அல்காந்தர் முதல் பங்குதந்தையாக நியமிக்கப்பட்டார்.

    23-3-2008 அன்று ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் மூலம் பங்குமக்களின் பெரும் முயற்சியால் கட்டப்பட்ட சமூகநலக்கூடம் திறந்து வைக்கப்பட்டது.

    கொரோனா தொற்று உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்த காலத்தில் இந்த பங்கில் செயல்பட்டு வரும் புனித அன்னம்மாள் நிதிநிறுவனத்தின் வழியாக பங்கு அருட்பணி பேரவை மக்களுக்கு சிறிய அளவில் பொருளாதார நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக உதவி புரிந்தது. தொடர்ந்து ஆலயத்தின் பீடம் மற்றும் பீடத்தையொட்டி உள்ள ஆலய முகப்பு புதுப்பிக்கப்பட்டு, ஆலயத்தை விரிவுபடுத்தி, ஆலய சுவர்களையும், கதவு நிலைகளையும் அழகுபடுத்தப்பட்டு ஆயர் நசரேன் சூசை 20-9-2021 அன்று அர்ச்சித்து வைத்தார்.

    கோணம் பங்கின் பாதுகாவலர் புனித அன்னம்மாள் சந்தனமாதா என்று உலகெங்கும் மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். பிள்ளைகளை நல்ல முறையில் வளர்ப்பதற்கு சிறந்த இலக்கணமாக திகழ்கின்ற புனித அன்னம்மாள் வழியாக குழந்தைப்பேறு அடையவும், கேட்டவரங்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்ளவும் பக்தர்கள் சாரை சாரையாக வருகிறார்கள். குறிப்பாக புதன்கிழமைதோறும் மாலையில் நடைபெறும் நவநாள் திருப்பலியில் பங்கெடுத்து இறைவேண்டல் செய்து இறையாசீர் பெற்று மகிழ்வுடன் இல்லம் திரும்புகிறார்கள்.

    புனித அன்னம்மாள் தாயாரோ! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

    -அருட்பணியாளர் எம்.ஜோசப்காலின்ஸ், பங்குப்பணியாளர்.

    • இந்த விழா வருகிற 26-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • 26-ந்தேதி மதியம் 2 மணிக்கு பரலோக அன்னையின் தேர்ப்பவனி நடக்கிறது.

    அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் ரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. விழா வருகிற 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு கொடி ஏற்றுதல், தொடர்ந்து மறையுரை, நற்கருணை ஆசீர், இரவு நகைச்சுவை இன்னிசை பாட்டுமன்றம் போன்றவை நடைபெறும்.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் தினசரி காலையில் திருப்பலி, மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீர் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். வருகிற 24-ந் தேதி காலை 6.30 மணிக்கு முதல் திருவிருந்து வழங்கும் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனியும் நடக்கிறது.

    25-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருவிழா மாலை ஆராதனை நடைபெறும். தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்குகிறார். இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 26-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலியும், மதியம் 2 மணிக்கு பரலோக அன்னையின் தேர்ப்பவனியும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப் கிறிஸ்டியன், பங்கு பேரவை துணைத் தலைவர் டி.வி.சி. விட்மன், செயலாளர் ஞானசேகர், துணைச் செயலாளர் ஜாஸ்மின், பொருளாளர் பார்த்திமா மைக்கேல் ராஜன், பங்கு பேரவையினர், புனித அன்னாள் அருட்சகோதரிகள், பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    புள்ளம்பாடி புனித அன்னாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி நடைபெற்றது.
    புள்ளம்பாடி புனித அன்னாள் ஆலய திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி நவநாள் திருப்பலி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி நடைபெற்றது.

    நேற்று காலை திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் ஆடம்பர தேரோட்டம் நடைபெற்றது. இதில் புனித அன்னாள் சொரூபம் தாங்கிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். மாலையில் திவ்விய நற்கருணை ஆசீர் நடைபெற்றது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மறைவட்ட முதன்மைகுரு ஹென்றிபுஷ்பராஜ், உதவி பங்குதந்தை எடிசன் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர். 
    அஞ்சுகிராமம் அருகே உள்ள ரஜகிருஷ்ணாபுரம், புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, வருகிற 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    அஞ்சுகிராமம் அருகே உள்ள ரஜகிருஷ்ணாபுரம், புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, வருகிற 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    நாளை அதிகாலை 5.15 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம், மறையுரை, நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் ஜான் பிரிட்டோ தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஜோசப் கென்னடி மறையுரையாற்றுகிறார். இரவு ‘புனித அருளானந்தர் நாடகம்’ நடைபெறுகிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் காலையில் திருப்பலி, மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருவிழா சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 22-ந் தேதி காலையில் திருப்பலியை தொடர்ந்து, குடும்ப வளர்வாழ்வு பயிற்சி நடக்கிறது.

    வருகிற 25-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு அருட்பணியாளர் பென்சிகர் தலைமையில் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு திருவிழா மாலை ஆராதனையும் நடைபெறுகிறது. இரவு தேர் பவனி நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 26-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. இதில் ரீத்தாபுரம் பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் தலைமை தாங்குகிறார். திருமூலநகர் பங்குத்தந்தை ஜோசப் ஸ்டார்லின் மறையுரையாற்றுகிறார். மதியம் 2 மணிக்கு தேர் பவனியும், இரவு 9 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை அமல்ராஜ், பங்கு பேரவை துணைத்தலைவர் எட்வர்ட் டொமினிக் ராஜன், செயலாளர் ஞானசேகர், துணை செயலாளர் லீலா, பொருளாளர் லலிதா, பங்கு பேரவை உறுப்பினர்கள், அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்துள்ளனர். 
    ×