search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Holy Mother"

    • புனித சலேத் அன்னை 157-ம் ஆண்டு புனிதப் பெருவிழா கடந்த மாதம் 30 - ஆம் தேதி கொடியேற்ற த்துடன் தொடங்கியது.
    • இரவு முழுவதும் பவனி வந்த தேர் பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் வரலாற்றுச்சிறப்பு மிக்க புனித சலேத் அன்னை 157-ம் ஆண்டு புனிதப் பெருவிழா கடந்த மாதம் 30 - ஆம் தேதி கொடியேற்ற த்துடன் தொடங்கியது. கடந்த 10 - நாட்களுக்கு மேலாக ஒவ்வொரு நாளும் சலேத் அன்னைக்கு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.

    பாரிஸ் நகரில் லா சலேத் எனும் சிற்றூரில் காட்சி கொடுத்து 1886 -ஆம் ஆண்டு கொடைக்கானலில் சிருஷ்டிக்கப்பட்ட புனித சலேத் அன்னை திருத்தலத்தில் ஒவ்வொரு வருடம் ஆகஸ்டு மாதத்தில் 15 நாட்களுக்கு இங்கு சிறப்பு திருப்பலிகளுடன் நடைபெறும். பெருவிழா ஆகஸ்ட் 14, 15 ஆகிய தேதியில் நிறைவுறும். அதன்படி உயர்மறை மாவட்ட அருட்தந்தையர்கள் மற்றும் பங்குத் தந்தைகள், பேராயர்கள் கலந்து கொண்டு திருப்பலிகளை நிறைவேற்றினர்.

    அதன் பின்னர் புனித சலேத் அன்னை ,காவல் தெய்வம், திருஇருதய ஆண்டவர்,புனித சூசையப்பர் ஆகிய திருஉருவங்களின் மின் அலங்கார தேர்பவனி செயின்ட் மேரீஸ் சாலையில் தொடங்கி பஸ் நிலையம், அண்ணா சாலை வழியாக மூஞ்சிக்கல் புனித இருதய ஆண்டவர் திருத்தலத்தை சென்றடைந்தது.இரவு முழுவதும் பவனி வந்த தேர் பவனி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டு புனித சலேத் அன்னையின் ஆசி பெற்று சென்றனர்.

    • இன்று தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • 20-ந்தேதி இரவு 9 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.

    நாகர்கோவில் வடக்குகோணம் புனித அன்னாள் ஆலய குடும்பவிழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. அதன்படி விழாவில் நாளை மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, அதைதொடர்ந்து கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் ஹிலாரியுஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைக்கிறார். இரவு 8.30 மணிக்கு கலைநிகழ்ச்சிகள், உணவுத்திருவிழா ஆகியவை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவில் 20-ந்தேதி காலை 7.30 மணிக்கு பார்வதிபுரம் அருட்பணியாளர் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. ஆசாரிபள்ளம் அருட்பணியாளர் அருள்ஜோசப் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.

    21-ந்தேதி காலை 6 மணிக்கு முதல் திருப்பலி, 8 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட பொருளாளர் அலாய்சியஸ் மரிய பென்சிகர் தலைமை தாங்கி திருவிழா திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். மதியம் 2 மணிக்கு தேர்பவனி, இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம் ஆகியவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் ஜோசப் காலின்ஸ் தலைமையில் அருட்சகோதரிகள், பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவையினர் செய்து வருகிறார்கள்.

    ×