என் மலர்
கிறித்தவம்
இயற்கையாய் வளர்ந்த கிளைகளையே கடவுள் வெட்டாமல் விடவில்லை என்றால், ஒட்டப்பட்ட கிளையாகிய உங்களைத் தண்டிக்காமல் விடுவாரா? இதில் கடவுளின் பரிவையும் கண்டிப்பையும் எண்ணிப்பாருங்கள்.
இயேசு எருசலேம் கோவிலில் பரி சேயரையும், மறைநூல் அறிஞர்களையும், குருக்களையும், மக்களையும் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது, “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.
மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ‘நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும், கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள் என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள்’ என்று சொல்லி அனுப்பினார்.
அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார். வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள். அப்பொழுது அரசர் சினமுற்று தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.
பின்னர் தம் பணியாளர்களிடம், ‘திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றார். அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில்கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது. அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார். அரசர் அவனைப் பார்த்து, ‘தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?’ என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், ‘அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்றார். இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலரே’’ என்று உவமையை முடித்தார்.
இந்த உவமையை படிக்கும் நாமும் திருமண ஆடை எது என்று அறியாமல் திகைப்படைகிறோம். ஆனால், நம் அனைவருக்கும் திருமண ஆடையை அளிப்பதற்காகவே, இயேசு, விண்ணிலிருந்து உலகுக்கு வந்தார். அது அவருடைய அன்பின் புதிய உடன்படிக்கை.
நம் பழைய வாழ்வுக்குப் பாவ மன்னிப்பும், புது வாழ்வுக்குத் தூய ஆவியும் இயேசுவால் இலவசமாக வழங்கப்படுகின்ற திருமண ஆடையாகும். இயேசு அளித்த திருமண ஆடையை அக்காலத்திலிருந்த குருக்களும், மறைநூல் அறிஞர்களும், பரிசேயரும், யூதர்களும் அறியவோ, அணியவோ விரும்பவில்லை. எனவே அவர்களிடமிருந்து இறையாட்சி நீக்கப்பட்டது. அவர்களைப் போலவே, இப்போது திருச்சபையில் மீட்பு பெற்றவர் என்று எண்ணும் நம்மில் பலரும் அறியாமலும் அணியாமலும் இருக்கிறோம். நாம் அழைப்பு பெற்றவர்களாக இருந்தாலும், தெரிந்துகொள்ளப்பட்ட சிலராக இருக்கிறோமா? என்பதை சிந்தித்து பாருங்கள்.
திருத்தூதர் பவுல் நம்மைக் குறித்து, “இவர்கள் இறைப்பற்று உடையவர்கள் போன்று காணப்படுவார்கள். ஆனால், இறைப்பற்றின் வல்லமையோ அவர்களிடம் இராது. இவர்கள் ஓயாமல் கற்றுக்கொண்டே இருந்தாலும் ஒருபோதும் உண்மையை அறிந்து கொள்ள மாட்டார்கள்”, என்று கூறுகிறார். மேலும், அவர் பரிசேயரையும் நம்மையும் ஒப்பிட்டுக் கூறுவதை நாம் கவனிக்க வேண்டும். “இயற்கையாய் வளர்ந்த கிளைகளையே கடவுள் வெட்டாமல் விடவில்லை என்றால், ஒட்டப்பட்ட கிளையாகிய உங்களைத் தண்டிக்காமல் விடுவாரா? இதில் கடவுளின் பரிவையும் கண்டிப்பையும் எண்ணிப்பாருங்கள். தவறி விழுந்தவர்களின் மேல் கண்டிப்பும் உங்கள்மேல் பரிவும் அவர் காட்டுகிறார். நீங்கள் அவருடைய பரிவைப் பெறுபவர்களாக வாழாவிட்டால் நீங்களும் தறிக்கப்படுவீர்கள்”.
மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ‘நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும், கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள் என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள்’ என்று சொல்லி அனுப்பினார்.
அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார். வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள். அப்பொழுது அரசர் சினமுற்று தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.
பின்னர் தம் பணியாளர்களிடம், ‘திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றார். அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில்கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது. அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார். அரசர் அவனைப் பார்த்து, ‘தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?’ என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், ‘அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்றார். இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலரே’’ என்று உவமையை முடித்தார்.
இந்த உவமையை படிக்கும் நாமும் திருமண ஆடை எது என்று அறியாமல் திகைப்படைகிறோம். ஆனால், நம் அனைவருக்கும் திருமண ஆடையை அளிப்பதற்காகவே, இயேசு, விண்ணிலிருந்து உலகுக்கு வந்தார். அது அவருடைய அன்பின் புதிய உடன்படிக்கை.
நம் பழைய வாழ்வுக்குப் பாவ மன்னிப்பும், புது வாழ்வுக்குத் தூய ஆவியும் இயேசுவால் இலவசமாக வழங்கப்படுகின்ற திருமண ஆடையாகும். இயேசு அளித்த திருமண ஆடையை அக்காலத்திலிருந்த குருக்களும், மறைநூல் அறிஞர்களும், பரிசேயரும், யூதர்களும் அறியவோ, அணியவோ விரும்பவில்லை. எனவே அவர்களிடமிருந்து இறையாட்சி நீக்கப்பட்டது. அவர்களைப் போலவே, இப்போது திருச்சபையில் மீட்பு பெற்றவர் என்று எண்ணும் நம்மில் பலரும் அறியாமலும் அணியாமலும் இருக்கிறோம். நாம் அழைப்பு பெற்றவர்களாக இருந்தாலும், தெரிந்துகொள்ளப்பட்ட சிலராக இருக்கிறோமா? என்பதை சிந்தித்து பாருங்கள்.
திருத்தூதர் பவுல் நம்மைக் குறித்து, “இவர்கள் இறைப்பற்று உடையவர்கள் போன்று காணப்படுவார்கள். ஆனால், இறைப்பற்றின் வல்லமையோ அவர்களிடம் இராது. இவர்கள் ஓயாமல் கற்றுக்கொண்டே இருந்தாலும் ஒருபோதும் உண்மையை அறிந்து கொள்ள மாட்டார்கள்”, என்று கூறுகிறார். மேலும், அவர் பரிசேயரையும் நம்மையும் ஒப்பிட்டுக் கூறுவதை நாம் கவனிக்க வேண்டும். “இயற்கையாய் வளர்ந்த கிளைகளையே கடவுள் வெட்டாமல் விடவில்லை என்றால், ஒட்டப்பட்ட கிளையாகிய உங்களைத் தண்டிக்காமல் விடுவாரா? இதில் கடவுளின் பரிவையும் கண்டிப்பையும் எண்ணிப்பாருங்கள். தவறி விழுந்தவர்களின் மேல் கண்டிப்பும் உங்கள்மேல் பரிவும் அவர் காட்டுகிறார். நீங்கள் அவருடைய பரிவைப் பெறுபவர்களாக வாழாவிட்டால் நீங்களும் தறிக்கப்படுவீர்கள்”.
இந்த நிகழ்வு மட்டுமல்ல, தானியேல் சிங்கக் குகையில் தூக்கி போடப்பட்ட போது, அவர் உள்ளே விழுந்த பிறகு அல்ல, அதற்கு முன்பே சிங்கத்தின் வாய்கள் தேவனால் கட்டப்பட்டிருந்தன.
“நம்முடைய தேவன், நம் மீது அன்பும் அருளும் மிக்கவராய் இருக்கிறார். எப்போதும் நம் மீது அவர் நோக்கமாய் இருக்கிறார். நாம் கடந்து செல்லும் சூழ்நிலைகள் அனைத்தையும் பற்றி அவர் எப்போதும் சிந்திப்பவராய் இருக்கிறார். எப்போதும் அவருடைய பார்வையை நம்மீது வைத்தபடியே இருக்கிறார்” என்று சங்கீதம் 139 கூறுகிறது.
ஆம், நாம் எந்த ஒரு ஆபத்தையோ அல்லது பிரச்சினையையோ கடந்து செல்லும் போது, இயேசு நமக்கு உதவி செய்வதுடன் அதில் இருந்து தப்பிக்கவும் வைக்கிறார். பல சமயங்களில் ஆபத்து நேரத்தில் அல்லாமல், அதற்கு முன்பே அவர் நம்மைக் காக்க விரைந்து வருகிறார். துன்பம் வரும்போது காக்கவும் செய்கிறார்.
விவிலியத்தில் தானியேல் 3-ம் அதிகாரத்தில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. தான் செய்து வைத்த சிலையை வணங்க மறுத்ததால், சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத் நெகோ ஆகிய மூன்று பேரையும் நெபுகத்னேசர் அரசன் தீச்சூளையில் போடும்படி கட்டளையிட்டான். அந்த தீச்சூளையையும் வழக்கத்தை விட ஏழு மடங்கு சூடாக்கும்படி ஆணை பிறப்பித்திருந்தான்.
படைவீரர்களில் பலசாலியான சிலர், அரசரின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக சாத்ராக்கு, மோசாக்கு, ஆபேத் நெகோ மூன்று பேரையும் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளோடு அவர்களை கட்டி, தீச்சூளையில் போட தூக்கிக்கொண்டு சென்றனர். ஆனால் சூளை ஏழு மடங்கு அதிகமாய் சூடாக்கப்பட்டிருந்த படியால் மூன்று பேரையும் தூக்கிச்சென்றவர்களை அந்த தீப்பிழம்புகள் சுட்டெரித்துக் கொன்றது.
தேவனுடைய கரம் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகிய மூன்று பேருடன் இருந்தபடியால், தூக்கிச் சென்றவர்களை கொன்ற தீச்சூளையின் நெருப்பு பிழம்புகள் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரை ஒன்றும் செய்யவில்லை. அவர்கள், மூன்று பேரும் எந்தவித பாதிப்பும் இன்றி தீச்சூளையின் நடுவில் போய் விழுந்தார்கள்.
கட்டப்பட்டவர்களாய் விழுந்த அவர்களின் கட்டுகளை விடுவித்த தேவன், அந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் அவர்களோடு நெருப்பின் நடுவில் உலாவி அவர்களை அரவணைத்தார். இதனைக் கண்டு நெபுகத்னேசர் அரசன், அவர்கள் மூன்று பேரையும் தீச்சூளைக்குள் இருந்து வெளியே வரும்படி கூறினான்.
அரசரின் அழைப்பின்படி அவர்கள் அந்த நெருப்பு பிழம்பைக் கடந்து வெளிவரும் போதும் கூட, அந்த நெருப்பு சூளை அணைக்கப்படவில்லை. எரிந்து கொண்டுதான் இருந்தது. தேவன் அவர்களோடு இருந்து பாதுகாத்தபடியால், கொட்டும் அருவி தண்ணீரின் ஒருபுறம் இருந்து மறுபுறம் ஊடாக கடந்து வருவது போல், அந்த நெருப்பு பிழம்புகளை கடந்து வந்தனர். அவர்கள் வெளியே வந்தபோது அவர்கள் மீது நெருப்புப் புகையின் நாற்றம் கூட இல்லை. அவர்களுடைய தலைமுடி மற்றும் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை விவிலியத்தின் வாயிலாக அறிகிறோம்.
இந்த நிகழ்வு மட்டுமல்ல, தானியேல் சிங்கக் குகையில் தூக்கி போடப்பட்ட போது, அவர் உள்ளே விழுந்த பிறகு அல்ல, அதற்கு முன்பே சிங்கத்தின் வாய்கள் தேவனால் கட்டப்பட்டிருந்தன.
இதற்குக் காரணம் அவர்களுடைய பிரச்சினையின் போதல்ல, அதற்கு முன்பே தேவனுடைய கரம் அவர்களுடன் இருந்து பாதுகாத்தது என்பதை நம்மால் அறிய முடிகிறது. இன்றும் தேவன் தாமாகவே நம்முடைய பிரச்சினையின் போது அல்ல, அதற்கு முன்பிருந்தே நமக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார். அதனால்தான் எத்தகைய பிரச்சினைகளை நாம் சந்திக்க நேர்ந்தாலும், அவை நம்மை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இயேசு நம்மை காப்பார் என்பதை உணர்ந்தவர்களாய், இன்னும் அதிகமாய் தேவனோடு நெருங்கி வாழ்வோம்.
ஆம், நாம் எந்த ஒரு ஆபத்தையோ அல்லது பிரச்சினையையோ கடந்து செல்லும் போது, இயேசு நமக்கு உதவி செய்வதுடன் அதில் இருந்து தப்பிக்கவும் வைக்கிறார். பல சமயங்களில் ஆபத்து நேரத்தில் அல்லாமல், அதற்கு முன்பே அவர் நம்மைக் காக்க விரைந்து வருகிறார். துன்பம் வரும்போது காக்கவும் செய்கிறார்.
விவிலியத்தில் தானியேல் 3-ம் அதிகாரத்தில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. தான் செய்து வைத்த சிலையை வணங்க மறுத்ததால், சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத் நெகோ ஆகிய மூன்று பேரையும் நெபுகத்னேசர் அரசன் தீச்சூளையில் போடும்படி கட்டளையிட்டான். அந்த தீச்சூளையையும் வழக்கத்தை விட ஏழு மடங்கு சூடாக்கும்படி ஆணை பிறப்பித்திருந்தான்.
படைவீரர்களில் பலசாலியான சிலர், அரசரின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக சாத்ராக்கு, மோசாக்கு, ஆபேத் நெகோ மூன்று பேரையும் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளோடு அவர்களை கட்டி, தீச்சூளையில் போட தூக்கிக்கொண்டு சென்றனர். ஆனால் சூளை ஏழு மடங்கு அதிகமாய் சூடாக்கப்பட்டிருந்த படியால் மூன்று பேரையும் தூக்கிச்சென்றவர்களை அந்த தீப்பிழம்புகள் சுட்டெரித்துக் கொன்றது.
தேவனுடைய கரம் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகிய மூன்று பேருடன் இருந்தபடியால், தூக்கிச் சென்றவர்களை கொன்ற தீச்சூளையின் நெருப்பு பிழம்புகள் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரை ஒன்றும் செய்யவில்லை. அவர்கள், மூன்று பேரும் எந்தவித பாதிப்பும் இன்றி தீச்சூளையின் நடுவில் போய் விழுந்தார்கள்.
கட்டப்பட்டவர்களாய் விழுந்த அவர்களின் கட்டுகளை விடுவித்த தேவன், அந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் அவர்களோடு நெருப்பின் நடுவில் உலாவி அவர்களை அரவணைத்தார். இதனைக் கண்டு நெபுகத்னேசர் அரசன், அவர்கள் மூன்று பேரையும் தீச்சூளைக்குள் இருந்து வெளியே வரும்படி கூறினான்.
அரசரின் அழைப்பின்படி அவர்கள் அந்த நெருப்பு பிழம்பைக் கடந்து வெளிவரும் போதும் கூட, அந்த நெருப்பு சூளை அணைக்கப்படவில்லை. எரிந்து கொண்டுதான் இருந்தது. தேவன் அவர்களோடு இருந்து பாதுகாத்தபடியால், கொட்டும் அருவி தண்ணீரின் ஒருபுறம் இருந்து மறுபுறம் ஊடாக கடந்து வருவது போல், அந்த நெருப்பு பிழம்புகளை கடந்து வந்தனர். அவர்கள் வெளியே வந்தபோது அவர்கள் மீது நெருப்புப் புகையின் நாற்றம் கூட இல்லை. அவர்களுடைய தலைமுடி மற்றும் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை விவிலியத்தின் வாயிலாக அறிகிறோம்.
இந்த நிகழ்வு மட்டுமல்ல, தானியேல் சிங்கக் குகையில் தூக்கி போடப்பட்ட போது, அவர் உள்ளே விழுந்த பிறகு அல்ல, அதற்கு முன்பே சிங்கத்தின் வாய்கள் தேவனால் கட்டப்பட்டிருந்தன.
இதற்குக் காரணம் அவர்களுடைய பிரச்சினையின் போதல்ல, அதற்கு முன்பே தேவனுடைய கரம் அவர்களுடன் இருந்து பாதுகாத்தது என்பதை நம்மால் அறிய முடிகிறது. இன்றும் தேவன் தாமாகவே நம்முடைய பிரச்சினையின் போது அல்ல, அதற்கு முன்பிருந்தே நமக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார். அதனால்தான் எத்தகைய பிரச்சினைகளை நாம் சந்திக்க நேர்ந்தாலும், அவை நம்மை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இயேசு நம்மை காப்பார் என்பதை உணர்ந்தவர்களாய், இன்னும் அதிகமாய் தேவனோடு நெருங்கி வாழ்வோம்.
பிரியமானவர்களே! சந்தோஷமாயிருங்கள், உங்களை நினைத்து உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள்.
இன்றைய சூழ்நிலையிலே அநேக சமயங்களிலே மனிதர்கள், ‘என்னை யாருமே நினைப்பதேயில்லை, எனக்கென்று இந்த உலகிலே யார் இருக்கிறார்கள்?’ என்று கூறுவதுண்டு.
இப்படி பலவிதமான சோர்வோடு காணப்படுகிற அன்பான சகோதர, சகோதரியே! உங்களுக்கு ஓர் நற்செய்தி, ‘ஆண்டவர் நம்மை மறப்பதேயில்லை. நாம் ஒரு நாளும் அவரால் மறக்கப்படுவதில்லை’.
ஏன் தெரியுமா? ‘அவர் நம்மை நினைத்திருக்கிறார்’.
‘நீ என் தாசன், நான் உன்னை உருவாக்கினேன். நீ என் தாசன், இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை’. (ஏசா.44:21)
தாய் மறந்தாலும் நான் மறப்பதில்லை
‘ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை’. (ஏசா.49:15)
ஒரு தாய் தான் பெற்ற குழந்தையை ஒருநாளும் மறக்கவே மாட்டாள். எத்தனை குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், தன் குழந்தையின் சத்தத்தை, அதன் அசைவுகளை அறிந்திருப்பாள். அந்தந்த நேரத்தில் அதற்கு என்ன தேவை என்பதை குழந்தை கேட்காமலே தந்து அதை அன்போடு வளர்ப்பவள்தான் தாய். அவள் எப்போதும் தன் குழந்தையை நினைத்துக் கொண்டிருப்பாள்.
ஆனால் இன்றைய சமுதாயத்தில் அப்படிப்பட்ட தாய் கூட தன் பிள்ளைகளை மறந்துவிடுகிறாள். தன் சொந்த இச்சைகளை நிறைவேற்றுவதற்காக குழந்தைகளை அநாதையாய் விட்டுவிட்டு ஓடு கிறாள். அல்லது தன் சொந்த குழந்தைகளையே கொலை செய்து விடுகிறாள். அப்படிப்பட்ட கொடிய, அன்பில்லாத காலத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் நம் அருமை ஆண்டவரோ, ஒருநாளும் நம்மை மறப்பதேயில்லை. நமக்கு இன்னது தேவை என்பதை அறிந்து பரம தகப்பன் நம்மை ஒருநாளும் கைவிடுவதேயில்லை.
ஒருநாளும் மனிதனைத் தேடிப்போகாதீர்கள். ஆண்டவரை நீங்கள் மறந்து விடாதிருங்கள். ஆண்டவரை நோக்கிப் பார்த்தால் நிச்சயம் அவர் உங்களை நினைத்து, ஆசீர்வதித்து உயர்த்துவார்.
உங்கள் பிரயாசங்களை மறப்பதில்லை
‘உங்கள் கிரியையும், நீங்கள் பரிசுத்தவான் களுக்கு ஊழியஞ்செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடு கிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே’. (எபி. 6:10)
ஒருவேளை நீங்கள் நினைக்கலாம்: ‘எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என் பிரயாசத்தின் பலன் எனக்குக் கிடைக்கவில்லையே. என் குடும்பத்திற்காக எவ்வளவு உழைத்தாலும் என்னை யாரும் மதிப்பதில்லையே, என்னை ஏளனமாய்ப் பார்க்கிறார்களே, என்னை தரக்குறைவாய்ப் பேசுகிறார் களே’.
பிரியமானவர்களே! நீங்கள் படுகிற பாடுகளை நம் தேவன் அறிந் திருக்கிறார். நீங்கள் ஆண்டவருக்காக செய்கிற ஒவ்வொரு பிரயாசங்களையும், கிரியைகளையும் தேவன் மறக்கவே மாட்டார்.
மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு பிள்ளைகள் பிறக்கும் போது, அவர்களை உயிரோடே விட்டு விட்டார்கள். அவர்கள் செய்த இந்த பிரயாசங்களை தேவன் மறக்கவில்லை. அவர்களுக்கு தேவன் நன்மை செய்தார்.
‘மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்’. (யாத்.1:21)
பிரியமானவர்களே! சந்தோஷமாயிருங்கள், உங்களை நினைத்து உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள்.
‘கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்’. (சங்.115:12)
சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை.
இப்படி பலவிதமான சோர்வோடு காணப்படுகிற அன்பான சகோதர, சகோதரியே! உங்களுக்கு ஓர் நற்செய்தி, ‘ஆண்டவர் நம்மை மறப்பதேயில்லை. நாம் ஒரு நாளும் அவரால் மறக்கப்படுவதில்லை’.
ஏன் தெரியுமா? ‘அவர் நம்மை நினைத்திருக்கிறார்’.
‘நீ என் தாசன், நான் உன்னை உருவாக்கினேன். நீ என் தாசன், இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை’. (ஏசா.44:21)
தாய் மறந்தாலும் நான் மறப்பதில்லை
‘ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை’. (ஏசா.49:15)
ஒரு தாய் தான் பெற்ற குழந்தையை ஒருநாளும் மறக்கவே மாட்டாள். எத்தனை குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், தன் குழந்தையின் சத்தத்தை, அதன் அசைவுகளை அறிந்திருப்பாள். அந்தந்த நேரத்தில் அதற்கு என்ன தேவை என்பதை குழந்தை கேட்காமலே தந்து அதை அன்போடு வளர்ப்பவள்தான் தாய். அவள் எப்போதும் தன் குழந்தையை நினைத்துக் கொண்டிருப்பாள்.
ஆனால் இன்றைய சமுதாயத்தில் அப்படிப்பட்ட தாய் கூட தன் பிள்ளைகளை மறந்துவிடுகிறாள். தன் சொந்த இச்சைகளை நிறைவேற்றுவதற்காக குழந்தைகளை அநாதையாய் விட்டுவிட்டு ஓடு கிறாள். அல்லது தன் சொந்த குழந்தைகளையே கொலை செய்து விடுகிறாள். அப்படிப்பட்ட கொடிய, அன்பில்லாத காலத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் நம் அருமை ஆண்டவரோ, ஒருநாளும் நம்மை மறப்பதேயில்லை. நமக்கு இன்னது தேவை என்பதை அறிந்து பரம தகப்பன் நம்மை ஒருநாளும் கைவிடுவதேயில்லை.
ஒருநாளும் மனிதனைத் தேடிப்போகாதீர்கள். ஆண்டவரை நீங்கள் மறந்து விடாதிருங்கள். ஆண்டவரை நோக்கிப் பார்த்தால் நிச்சயம் அவர் உங்களை நினைத்து, ஆசீர்வதித்து உயர்த்துவார்.
உங்கள் பிரயாசங்களை மறப்பதில்லை
‘உங்கள் கிரியையும், நீங்கள் பரிசுத்தவான் களுக்கு ஊழியஞ்செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடு கிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே’. (எபி. 6:10)
ஒருவேளை நீங்கள் நினைக்கலாம்: ‘எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என் பிரயாசத்தின் பலன் எனக்குக் கிடைக்கவில்லையே. என் குடும்பத்திற்காக எவ்வளவு உழைத்தாலும் என்னை யாரும் மதிப்பதில்லையே, என்னை ஏளனமாய்ப் பார்க்கிறார்களே, என்னை தரக்குறைவாய்ப் பேசுகிறார் களே’.
பிரியமானவர்களே! நீங்கள் படுகிற பாடுகளை நம் தேவன் அறிந் திருக்கிறார். நீங்கள் ஆண்டவருக்காக செய்கிற ஒவ்வொரு பிரயாசங்களையும், கிரியைகளையும் தேவன் மறக்கவே மாட்டார்.
மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு பிள்ளைகள் பிறக்கும் போது, அவர்களை உயிரோடே விட்டு விட்டார்கள். அவர்கள் செய்த இந்த பிரயாசங்களை தேவன் மறக்கவில்லை. அவர்களுக்கு தேவன் நன்மை செய்தார்.
‘மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்’. (யாத்.1:21)
பிரியமானவர்களே! சந்தோஷமாயிருங்கள், உங்களை நினைத்து உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள்.
‘கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்’. (சங்.115:12)
சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை.
பிரியமானவர்களே! சந்தோஷமாயிருங்கள், உங்களை நினைத்து உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள்.
இன்றைய சூழ்நிலையிலே அநேக சமயங்களிலே மனிதர்கள், ‘என்னை யாருமே நினைப்பதேயில்லை, எனக்கென்று இந்த உலகிலே யார் இருக்கிறார்கள்?’ என்று கூறுவதுண்டு.
இப்படி பலவிதமான சோர்வோடு காணப்படுகிற அன்பான சகோதர, சகோதரியே! உங்களுக்கு ஓர் நற்செய்தி, ‘ஆண்டவர் நம்மை மறப்பதேயில்லை. நாம் ஒரு நாளும் அவரால் மறக்கப்படுவதில்லை’.
ஏன் தெரியுமா? ‘அவர் நம்மை நினைத்திருக்கிறார்’.
‘நீ என் தாசன், நான் உன்னை உருவாக்கினேன். நீ என் தாசன், இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை’. (ஏசா.44:21)
தாய் மறந்தாலும் நான் மறப்பதில்லை
‘ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை’. (ஏசா.49:15)
ஒரு தாய் தான் பெற்ற குழந்தையை ஒருநாளும் மறக்கவே மாட்டாள். எத்தனை குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், தன் குழந்தையின் சத்தத்தை, அதன் அசைவுகளை அறிந்திருப்பாள். அந்தந்த நேரத்தில் அதற்கு என்ன தேவை என்பதை குழந்தை கேட்காமலே தந்து அதை அன்போடு வளர்ப்பவள்தான் தாய். அவள் எப்போதும் தன் குழந்தையை நினைத்துக் கொண்டிருப்பாள்.
ஆனால் இன்றைய சமுதாயத்தில் அப்படிப்பட்ட தாய் கூட தன் பிள்ளைகளை மறந்துவிடுகிறாள். தன் சொந்த இச்சைகளை நிறைவேற்றுவதற்காக குழந்தைகளை அநாதையாய் விட்டுவிட்டு ஓடு கிறாள். அல்லது தன் சொந்த குழந்தைகளையே கொலை செய்து விடுகிறாள். அப்படிப்பட்ட கொடிய, அன்பில்லாத காலத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் நம் அருமை ஆண்டவரோ, ஒருநாளும் நம்மை மறப்பதேயில்லை. நமக்கு இன்னது தேவை என்பதை அறிந்து பரம தகப்பன் நம்மை ஒருநாளும் கைவிடுவதேயில்லை.
ஒருநாளும் மனிதனைத் தேடிப்போகாதீர்கள். ஆண்டவரை நீங்கள் மறந்து விடாதிருங்கள். ஆண்டவரை நோக்கிப் பார்த்தால் நிச்சயம் அவர் உங்களை நினைத்து, ஆசீர்வதித்து உயர்த்துவார்.
‘உங்கள் கிரியையும், நீங்கள் பரிசுத்தவான் களுக்கு ஊழியஞ்செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடு கிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே’. (எபி. 6:10)
ஒருவேளை நீங்கள் நினைக்கலாம்: ‘எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என் பிரயாசத்தின் பலன் எனக்குக் கிடைக்கவில்லையே. என் குடும்பத்திற்காக எவ்வளவு உழைத்தாலும் என்னை யாரும் மதிப்பதில்லையே, என்னை ஏளனமாய்ப் பார்க்கிறார்களே, என்னை தரக்குறைவாய்ப் பேசுகிறார் களே’.
பிரியமானவர்களே! நீங்கள் படுகிற பாடுகளை நம் தேவன் அறிந் திருக்கிறார். நீங்கள் ஆண்டவருக்காக செய்கிற ஒவ்வொரு பிரயாசங்களையும், கிரியைகளையும் தேவன் மறக்கவே மாட்டார்.
மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு பிள்ளைகள் பிறக்கும் போது, அவர்களை உயிரோடே விட்டு விட்டார்கள். அவர்கள் செய்த இந்த பிரயாசங்களை தேவன் மறக்கவில்லை. அவர்களுக்கு தேவன் நன்மை செய்தார்.
‘மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்’. (யாத்.1:21)
பிரியமானவர்களே! சந்தோஷமாயிருங்கள், உங்களை நினைத்து உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள்.
‘கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்’. (சங்.115:12)
இப்படி பலவிதமான சோர்வோடு காணப்படுகிற அன்பான சகோதர, சகோதரியே! உங்களுக்கு ஓர் நற்செய்தி, ‘ஆண்டவர் நம்மை மறப்பதேயில்லை. நாம் ஒரு நாளும் அவரால் மறக்கப்படுவதில்லை’.
ஏன் தெரியுமா? ‘அவர் நம்மை நினைத்திருக்கிறார்’.
‘நீ என் தாசன், நான் உன்னை உருவாக்கினேன். நீ என் தாசன், இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை’. (ஏசா.44:21)
தாய் மறந்தாலும் நான் மறப்பதில்லை
‘ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை’. (ஏசா.49:15)
ஒரு தாய் தான் பெற்ற குழந்தையை ஒருநாளும் மறக்கவே மாட்டாள். எத்தனை குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், தன் குழந்தையின் சத்தத்தை, அதன் அசைவுகளை அறிந்திருப்பாள். அந்தந்த நேரத்தில் அதற்கு என்ன தேவை என்பதை குழந்தை கேட்காமலே தந்து அதை அன்போடு வளர்ப்பவள்தான் தாய். அவள் எப்போதும் தன் குழந்தையை நினைத்துக் கொண்டிருப்பாள்.
ஆனால் இன்றைய சமுதாயத்தில் அப்படிப்பட்ட தாய் கூட தன் பிள்ளைகளை மறந்துவிடுகிறாள். தன் சொந்த இச்சைகளை நிறைவேற்றுவதற்காக குழந்தைகளை அநாதையாய் விட்டுவிட்டு ஓடு கிறாள். அல்லது தன் சொந்த குழந்தைகளையே கொலை செய்து விடுகிறாள். அப்படிப்பட்ட கொடிய, அன்பில்லாத காலத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் நம் அருமை ஆண்டவரோ, ஒருநாளும் நம்மை மறப்பதேயில்லை. நமக்கு இன்னது தேவை என்பதை அறிந்து பரம தகப்பன் நம்மை ஒருநாளும் கைவிடுவதேயில்லை.
ஒருநாளும் மனிதனைத் தேடிப்போகாதீர்கள். ஆண்டவரை நீங்கள் மறந்து விடாதிருங்கள். ஆண்டவரை நோக்கிப் பார்த்தால் நிச்சயம் அவர் உங்களை நினைத்து, ஆசீர்வதித்து உயர்த்துவார்.
‘உங்கள் கிரியையும், நீங்கள் பரிசுத்தவான் களுக்கு ஊழியஞ்செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடு கிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே’. (எபி. 6:10)
ஒருவேளை நீங்கள் நினைக்கலாம்: ‘எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என் பிரயாசத்தின் பலன் எனக்குக் கிடைக்கவில்லையே. என் குடும்பத்திற்காக எவ்வளவு உழைத்தாலும் என்னை யாரும் மதிப்பதில்லையே, என்னை ஏளனமாய்ப் பார்க்கிறார்களே, என்னை தரக்குறைவாய்ப் பேசுகிறார் களே’.
பிரியமானவர்களே! நீங்கள் படுகிற பாடுகளை நம் தேவன் அறிந் திருக்கிறார். நீங்கள் ஆண்டவருக்காக செய்கிற ஒவ்வொரு பிரயாசங்களையும், கிரியைகளையும் தேவன் மறக்கவே மாட்டார்.
மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு பிள்ளைகள் பிறக்கும் போது, அவர்களை உயிரோடே விட்டு விட்டார்கள். அவர்கள் செய்த இந்த பிரயாசங்களை தேவன் மறக்கவில்லை. அவர்களுக்கு தேவன் நன்மை செய்தார்.
‘மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்’. (யாத்.1:21)
பிரியமானவர்களே! சந்தோஷமாயிருங்கள், உங்களை நினைத்து உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள்.
‘கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்’. (சங்.115:12)
சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில் சாவை வென்று உயிர்த்தெழுந்த இயேசு சீடர்கள் முன்பு தோன்றிய நிகழ்வுகளை இங்கு காண்போம்.
“என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு” என்று இயேசு கிறிஸ்து கூறினார். தாம் சொன்னபடியே, சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில் சாவை வென்று உயிர்த்தெழுந்த இயேசு சீடர்கள் முன்பு தோன்றிய நிகழ்வுகளை இங்கு காண்போம்.
மகதலா மரியா
மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுது கொண்டிருந்தார்; அழுது கொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மரியாவிடம், “அம்மா, ஏன் அழுகிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை” என்றார். இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்க நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்து கொள்ளவில்லை. இயேசு அவரிடம், “ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து மரியா அவரிடம், “ஐயா, நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றார். இயேசு அவரிடம், “மரியா” என்றார். மரியா திரும்பிப் பார்த்து, “ரபூனி” என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு ‘போதகரே’ என்பது பொருள். (யோவான் 20:11-16)
பெண் சீடர்கள்
ஓய்வுநாள் முடிந்ததும் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் இயேசுவின் உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருள்கள் வாங்கினர். வாரத்தின் முதல் நாள் காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் அவர்கள் கல்லறைக்குச் சென்றார்கள். “கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்?” என்று அவர்கள் ஒருவரோடு ஒருவர் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அது பெரியதொரு கல். பிறகு அவர்கள் கல்லறைக்குள் சென்றபோது வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கக் கண்டு திகிலுற்றார்கள். அவர் அவர்களிடம், “திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம். நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ‘உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள்’ எனச் சொல்லுங்கள்” என்றார். அவர்கள் கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்; நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. (மாற்கு 16:1-8)
ஆண் சீடர்கள்
சீடர்கள் வீட்டுக்குள் பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். அதற்கு அவர், “நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்ளுகிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே” என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், “உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?” என்று கேட்டார். அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார். (லூக்கா 24:36-43)
திருத்தூதர் தோமா
பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்” என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றார். எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்” என்றார். தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்றார். இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார். (யோவான் 20:24-29)
கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலய தேர்பவனி நேற்று இரவு நடந்தது. இதில் அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள தூய அலங்கார அன்னை பேராலய ஆண்டு திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முதன்மை குரு அமிர்தசாமி கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதையொட்டி கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது. பின்னர் இரவு அலங்கார அன்னை அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டது.
கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் பிரார்த்தனை செய்து தேர்பவனியை தொடங்கி வைத்தார். இந்த தேர்பவனி ஆலயத்தை சுற்றி வந்தது. இதில் அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதையொட்டி கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது. பின்னர் இரவு அலங்கார அன்னை அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டது.
கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் பிரார்த்தனை செய்து தேர்பவனியை தொடங்கி வைத்தார். இந்த தேர்பவனி ஆலயத்தை சுற்றி வந்தது. இதில் அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று, அங்கு ஆட்கள் கூடியதும், அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவை பற்றிய செய்திகளைக் கூறியும், நோயாளிகளைச் சந்தித்தும் வந்தார்.
புனித பிரான்சிஸ் சவேரியார், 1506ம் ஆண்டு, ஏப்ரல் 7ம் நாள், இஸ்பெயின் நாட்டின் Navarre என்ற ஊரில், புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். அப்பகுதியில் பாஸ்கு மொழியே பேசப்பட்டது. இவரது தந்தை யுவான் தெயாசு அவர்கள், அந்நாட்டின் அரசவையில் நிதியமைச்சராகப் பணியாற்றி வந்தார். சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்றவர் அவர். பிரான்சிஸ் சவேரியார், தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்து, தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார்.
1525ம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டின், உலகப் புகழ் பெற்ற பாரிஸ் பல்கலைக்கழகத்தில், மெய்யியல் மற்றும் இறையியல் கற்கத் தொடங்கினார். 1530ம் ஆண்டு மெய்யியலில் முதுகலைப்பட்டம் பெற்றார். பின்னர் 1530ம் ஆண்டு முதல் 1534ம் ஆண்டு வரை, அதே கல்லூரியில் இறையியல் மாணவர்களுக்கு விரிவுரையாளராக பணியாற்றினார். அச்சமயத்தில், "இனிகோ' எனப்படும், இலொயோலா இஞ்ஞாசியார், தனது 39வது வயதில், அங்கு கல்வி கற்க வந்தார்.
இஞ்ஞாசியார், பிரான்சிஸ் சவேரியாரைப் பார்க்கும் போதெல்லாம், "பிரான்சிஸ், ஒருவர் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அதனால் அவருக்கு என்ன பயன்?'' என்ற, இயேசுவின் திருச்சொற்களைச் சொல்லி வந்தார். இந்த வார்த்தைகள் சவேரியாரின் வாழ்வையே திசை திருப்பின. இலொயோலா இஞ்ஞாசியாருடன் இணைந்தார் அவர். 1534ம் ஆண்டு இயேசு சபை என்னும் இயக்கத்தை தொடங்கிய புனித இஞ்ஞாசியாருடன் இருந்த முதல் ஆறு தோழர்களில் புனித பிரான்சிஸ் சவேரியாரும் ஒருவர்.
பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஏழு தோழர்களும், கல்வியை முடித்து, புனித பூமிக்குச் செல்லும் நோக்கத்தில், இத்தாலியின் வெனிஸ் நகருக்கு வந்தனர். அந்நகரில், 1537ம் ஆண்டு, ஜூன் மாதம் 24ம் நாள், சவேரியார், அருள்பணியாளராக திருப்பொழிவு செய்யப்பட்டார். வெனிஸ் நகரில் இவர்கள் தங்கியிருந்த சமயத்தில், இவர்களது போதனைகள் மற்றும் நோயாளிகள் மத்தியில் ஆற்றிய நற்பணிகளால், மத்திய இத்தாலியில் இவர்களது புகழ் பரவியது.
பல கத்தோலிக்க அரசர்கள், இவர்களின் பணிகளை நாடினர். புதிதாக பலரும் இவர்களுடன் இணைந்தனர். புனித பூமிக்குச் செல்லும் ஆவல் நிறைவேறாததால், இஞ்ஞாசியார் தலைமையில், இவர்கள் அனைவரும் உரோம் நகர் வந்து, அப்போதைய திருத்தந்தை 3ம் பவுல் அவர்களிடம் தங்களை அர்ப்பணித்தனர். அதேநேரம், போர்த்துக்கல் அரசர் 3ம் ஜான் அவர்கள், கிறிஸ்தவர்களுக்கும், ஆசியாவில் தனது புதிய காலனி நாடுகளில் நற்செய்தியை அறிவிக்கவும், உழைப்பில் ஊக்கமுள்ள அருள்பணியாளர்களைத் தந்து உதவுமாறு திருத்தந்தையிடம் வேண்டினார்.
திருத்தந்தையின் விருப்பத்தின்பேரில், புனித இஞ்ஞாசியார், தனது தோழர்களில் ஒருவரை, ஆசியாவுக்கென தேர்ந்தெடுத்தார். ஆனால் அவர், நோயால் தாக்கப்படவே, அவருக்குப் பதிலாக, சவேரியாரைக் குறித்தார், இஞ்ஞாசியார். தனது தலைவர் குறித்த அடுத்த நாளே, அதாவது, 1540ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் நாள், சவேரியார், இந்தியாவுக்குச் செல்வதற்காக, உரோம் நகரிலிருந்து முதலில் லிஸ்பன் நகருக்குப் பயணமானார். திருத்தந்தை 3ம் பவுல் அவர்களும், 1540ம் ஆண்டு செப்டம்பர் 27ம் நாள், இயேசு சபையை, ஒரு துறவு சபையாக அங்கீகரித்தார்.
புனித சவேரியார், லிஸ்பன் நகரில் ஓராண்டு இறைப்பணி செய்த பின்னர், இந்தியாவிற்கு கப்பல் பயணத்தை மேற்கொண்டார். 1542ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி கோவாவை வந்தடைந்த அவர், முதல் நான்கு மாதங்கள் கோவாவிலும், பின்னர் கோவாவிலிருந்து கேரளா வழியாக தென் தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கி இறைப்பணியாற்றினார். குறிப்பாக, கன்னியாகுமரி, கோட்டயம், குளச்சல், ஆலந்தலை, தூத்துக்குடி மற்றும் மணப்பாடு பகுதிகளில் தங்கி இறைப் பணியாற்றி வந்தார்.
இங்கு கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று, அங்கு ஆட்கள் கூடியதும், அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவை பற்றிய செய்திகளைக் கூறியும், நோயாளிகளைச் சந்தித்தும் வந்தார். புனித பிரான்சிஸ் சவேரியார், மணப்பாட்டில் தங்கியிருந்த குகை, அதற்குள் இருக்கும் சிறிய கிணறு ஆகியன, இன்றும் அவரின் புனித வாழ்வுக்குச் சான்றுகளாக உள்ளன. கடற்கரையில் உள்ள அந்தக் கிணற்று நீர், உப்பு இல்லாத நல்ல குடிநீராக இன்றும் புதுமையாக இருப்பதை, திருப்பயணிகள் சுவைத்து புனிதப் பரவசம் அடைகின்றனர்.
1525ம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டின், உலகப் புகழ் பெற்ற பாரிஸ் பல்கலைக்கழகத்தில், மெய்யியல் மற்றும் இறையியல் கற்கத் தொடங்கினார். 1530ம் ஆண்டு மெய்யியலில் முதுகலைப்பட்டம் பெற்றார். பின்னர் 1530ம் ஆண்டு முதல் 1534ம் ஆண்டு வரை, அதே கல்லூரியில் இறையியல் மாணவர்களுக்கு விரிவுரையாளராக பணியாற்றினார். அச்சமயத்தில், "இனிகோ' எனப்படும், இலொயோலா இஞ்ஞாசியார், தனது 39வது வயதில், அங்கு கல்வி கற்க வந்தார்.
இஞ்ஞாசியார், பிரான்சிஸ் சவேரியாரைப் பார்க்கும் போதெல்லாம், "பிரான்சிஸ், ஒருவர் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அதனால் அவருக்கு என்ன பயன்?'' என்ற, இயேசுவின் திருச்சொற்களைச் சொல்லி வந்தார். இந்த வார்த்தைகள் சவேரியாரின் வாழ்வையே திசை திருப்பின. இலொயோலா இஞ்ஞாசியாருடன் இணைந்தார் அவர். 1534ம் ஆண்டு இயேசு சபை என்னும் இயக்கத்தை தொடங்கிய புனித இஞ்ஞாசியாருடன் இருந்த முதல் ஆறு தோழர்களில் புனித பிரான்சிஸ் சவேரியாரும் ஒருவர்.
பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஏழு தோழர்களும், கல்வியை முடித்து, புனித பூமிக்குச் செல்லும் நோக்கத்தில், இத்தாலியின் வெனிஸ் நகருக்கு வந்தனர். அந்நகரில், 1537ம் ஆண்டு, ஜூன் மாதம் 24ம் நாள், சவேரியார், அருள்பணியாளராக திருப்பொழிவு செய்யப்பட்டார். வெனிஸ் நகரில் இவர்கள் தங்கியிருந்த சமயத்தில், இவர்களது போதனைகள் மற்றும் நோயாளிகள் மத்தியில் ஆற்றிய நற்பணிகளால், மத்திய இத்தாலியில் இவர்களது புகழ் பரவியது.
பல கத்தோலிக்க அரசர்கள், இவர்களின் பணிகளை நாடினர். புதிதாக பலரும் இவர்களுடன் இணைந்தனர். புனித பூமிக்குச் செல்லும் ஆவல் நிறைவேறாததால், இஞ்ஞாசியார் தலைமையில், இவர்கள் அனைவரும் உரோம் நகர் வந்து, அப்போதைய திருத்தந்தை 3ம் பவுல் அவர்களிடம் தங்களை அர்ப்பணித்தனர். அதேநேரம், போர்த்துக்கல் அரசர் 3ம் ஜான் அவர்கள், கிறிஸ்தவர்களுக்கும், ஆசியாவில் தனது புதிய காலனி நாடுகளில் நற்செய்தியை அறிவிக்கவும், உழைப்பில் ஊக்கமுள்ள அருள்பணியாளர்களைத் தந்து உதவுமாறு திருத்தந்தையிடம் வேண்டினார்.
திருத்தந்தையின் விருப்பத்தின்பேரில், புனித இஞ்ஞாசியார், தனது தோழர்களில் ஒருவரை, ஆசியாவுக்கென தேர்ந்தெடுத்தார். ஆனால் அவர், நோயால் தாக்கப்படவே, அவருக்குப் பதிலாக, சவேரியாரைக் குறித்தார், இஞ்ஞாசியார். தனது தலைவர் குறித்த அடுத்த நாளே, அதாவது, 1540ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் நாள், சவேரியார், இந்தியாவுக்குச் செல்வதற்காக, உரோம் நகரிலிருந்து முதலில் லிஸ்பன் நகருக்குப் பயணமானார். திருத்தந்தை 3ம் பவுல் அவர்களும், 1540ம் ஆண்டு செப்டம்பர் 27ம் நாள், இயேசு சபையை, ஒரு துறவு சபையாக அங்கீகரித்தார்.
புனித சவேரியார், லிஸ்பன் நகரில் ஓராண்டு இறைப்பணி செய்த பின்னர், இந்தியாவிற்கு கப்பல் பயணத்தை மேற்கொண்டார். 1542ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி கோவாவை வந்தடைந்த அவர், முதல் நான்கு மாதங்கள் கோவாவிலும், பின்னர் கோவாவிலிருந்து கேரளா வழியாக தென் தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கி இறைப்பணியாற்றினார். குறிப்பாக, கன்னியாகுமரி, கோட்டயம், குளச்சல், ஆலந்தலை, தூத்துக்குடி மற்றும் மணப்பாடு பகுதிகளில் தங்கி இறைப் பணியாற்றி வந்தார்.
இங்கு கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று, அங்கு ஆட்கள் கூடியதும், அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவை பற்றிய செய்திகளைக் கூறியும், நோயாளிகளைச் சந்தித்தும் வந்தார். புனித பிரான்சிஸ் சவேரியார், மணப்பாட்டில் தங்கியிருந்த குகை, அதற்குள் இருக்கும் சிறிய கிணறு ஆகியன, இன்றும் அவரின் புனித வாழ்வுக்குச் சான்றுகளாக உள்ளன. கடற்கரையில் உள்ள அந்தக் கிணற்று நீர், உப்பு இல்லாத நல்ல குடிநீராக இன்றும் புதுமையாக இருப்பதை, திருப்பயணிகள் சுவைத்து புனிதப் பரவசம் அடைகின்றனர்.
சில நேரங்களில் இந்த இளவரசனை போல நாமும் சிறு, சிறு தோல்விகளை கண்டு சோர்ந்து போய், நம்மை நாமே எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று முடிவு செய்துவிடுகின்றோம்.
மோசே கர்த்தருடைய சன்னிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை. பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான். (யாத் 6:12)
பட்டத்து இளவரசன் ஒருவன் எதிரி நாட்டின் மீது போர்த் தொடுக்கப் போகும் பெரிய படைக்கு தலைமை தாங்கி செல்ல ஆயத்தமாகிக் கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக எலி ஒன்று குறுக்கிடவே வாளை எடுத்துக் கொண்டு அதனை வெட்ட துரத்தினான். அவன் எவ்வளவோ முயன்றும் முடியாமல் எலி தப்பியோடிவிட்டது. சோர்ந்து போன இளவரசன், கேவலம் ஒரு எலியை கூட வெட்ட இயலாத நான் எப்படி எதிரி நாட்டோடு சண்டையிட்டு வெற்றி பெற போகிறேன் என்று எண்ணி, யுத்தத்திற்கு போகாமல் பின்வாங்கினான்.
சில நேரங்களில் இந்த இளவரசனை போல நாமும் சிறு, சிறு தோல்விகளை கண்டு சோர்ந்து போய், நம்மை நாமே எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று முடிவு செய்துவிடுகின்றோம். இஸ்ரவேல் மக்களை விடுவிக்கும்படி எகிப்து சென்ற மோசேக்கு தொடக்கத்தில் அந்த மக்களே செவி கொடுக்கவில்லை. எனவே சோர்ந்து போன அவன், இவர்களே எனக்குச் செவி கொடுக்காதபோது, எகிப்தின் ராஜா எனக்கு எப்படிச் செவிகொடுப்பான் என்று தயங்கி நின்றான். ஆனாலும் அதே மோசேயின் முன்னால் தேவன் அந்த நாட்டு மன்னனையே அடங்கிப் போகவைத்தார்.
நாம் பெரிய பலசாலிகளாக இருந்தாலும், சில நேரங்களில் சில சின்ன விஷயங்களில் நாம் தோற்றுப் போய் விடக்கூடும். நாம் மிகப்பெரிய திறமை சாலிகளாக இருந்தாலும், சாதாரண சில காரியங்களில் அந்தத் திறமை நமக்கு கை கொடுக்காமல் போக முடியும். மிக வலிமையான ஆவிக்குரிய நிலைகளை உடைய பலர் சில சின்னக்காரியங்களில், சாதாரண மனிதன் அடையும் வெற்றியைக் கூட அடைய முடியாமல், தோல்வி அடையும் வேளைகள் உண்டு. ஆனாலும் இந்தச் சின்ன தோல்விகள், பெரிய வெற்றிகளுக்கு நாம் தகுதியானவர்கள் அல்ல என்பதை முடிவு செய்துவிட முடியாது.
ஏசுவை சிலுவையின் பாதையில் பின்பற்ற விரும்பிய பேதுருவால் அது கூடவில்லை. ஆனாலும் கர்த்தருடைய வேளை வந்தபோது, பேதுரு அதை விட மிகக்கடுமையான சூழ்நிலைகளிலும் கர்த்தருடைய பலத்தில் மிகப்பெரிய சாதனைகளை புரிந்தான். முதல் தோல்வி, முற்றிலும் தோல்வி என்ற நிலை ஏற்படவில்லை.
சிறிய சபை கூடுகையில் சில நிமிடங்கள் சில வார்த்தைகளை பிரசங்கிக்க வலுவின்றி நின்ற பலர், பிற்காலத்தில் லட்சம் பேர்களுக்கு முன்னால் நின்று பவுலைப் போல தைரியமாகப் பிரசங்கித்திருக்கிறார்கள். ஆம், சிறு தோல்விகளை சுட்டிக்காட்டி, பெரிய வெற்றிகளுக்கு நேராக நாம் போகக்கூடாதபடி தடை செய்ய விரும்பும் சாத்தானுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
– சாம்சன் பால்
பட்டத்து இளவரசன் ஒருவன் எதிரி நாட்டின் மீது போர்த் தொடுக்கப் போகும் பெரிய படைக்கு தலைமை தாங்கி செல்ல ஆயத்தமாகிக் கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக எலி ஒன்று குறுக்கிடவே வாளை எடுத்துக் கொண்டு அதனை வெட்ட துரத்தினான். அவன் எவ்வளவோ முயன்றும் முடியாமல் எலி தப்பியோடிவிட்டது. சோர்ந்து போன இளவரசன், கேவலம் ஒரு எலியை கூட வெட்ட இயலாத நான் எப்படி எதிரி நாட்டோடு சண்டையிட்டு வெற்றி பெற போகிறேன் என்று எண்ணி, யுத்தத்திற்கு போகாமல் பின்வாங்கினான்.
சில நேரங்களில் இந்த இளவரசனை போல நாமும் சிறு, சிறு தோல்விகளை கண்டு சோர்ந்து போய், நம்மை நாமே எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று முடிவு செய்துவிடுகின்றோம். இஸ்ரவேல் மக்களை விடுவிக்கும்படி எகிப்து சென்ற மோசேக்கு தொடக்கத்தில் அந்த மக்களே செவி கொடுக்கவில்லை. எனவே சோர்ந்து போன அவன், இவர்களே எனக்குச் செவி கொடுக்காதபோது, எகிப்தின் ராஜா எனக்கு எப்படிச் செவிகொடுப்பான் என்று தயங்கி நின்றான். ஆனாலும் அதே மோசேயின் முன்னால் தேவன் அந்த நாட்டு மன்னனையே அடங்கிப் போகவைத்தார்.
நாம் பெரிய பலசாலிகளாக இருந்தாலும், சில நேரங்களில் சில சின்ன விஷயங்களில் நாம் தோற்றுப் போய் விடக்கூடும். நாம் மிகப்பெரிய திறமை சாலிகளாக இருந்தாலும், சாதாரண சில காரியங்களில் அந்தத் திறமை நமக்கு கை கொடுக்காமல் போக முடியும். மிக வலிமையான ஆவிக்குரிய நிலைகளை உடைய பலர் சில சின்னக்காரியங்களில், சாதாரண மனிதன் அடையும் வெற்றியைக் கூட அடைய முடியாமல், தோல்வி அடையும் வேளைகள் உண்டு. ஆனாலும் இந்தச் சின்ன தோல்விகள், பெரிய வெற்றிகளுக்கு நாம் தகுதியானவர்கள் அல்ல என்பதை முடிவு செய்துவிட முடியாது.
ஏசுவை சிலுவையின் பாதையில் பின்பற்ற விரும்பிய பேதுருவால் அது கூடவில்லை. ஆனாலும் கர்த்தருடைய வேளை வந்தபோது, பேதுரு அதை விட மிகக்கடுமையான சூழ்நிலைகளிலும் கர்த்தருடைய பலத்தில் மிகப்பெரிய சாதனைகளை புரிந்தான். முதல் தோல்வி, முற்றிலும் தோல்வி என்ற நிலை ஏற்படவில்லை.
சிறிய சபை கூடுகையில் சில நிமிடங்கள் சில வார்த்தைகளை பிரசங்கிக்க வலுவின்றி நின்ற பலர், பிற்காலத்தில் லட்சம் பேர்களுக்கு முன்னால் நின்று பவுலைப் போல தைரியமாகப் பிரசங்கித்திருக்கிறார்கள். ஆம், சிறு தோல்விகளை சுட்டிக்காட்டி, பெரிய வெற்றிகளுக்கு நேராக நாம் போகக்கூடாதபடி தடை செய்ய விரும்பும் சாத்தானுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
– சாம்சன் பால்
நாகை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில், கொரோனா நோய் தொற்று 3-ம் அலை பரவுவதை தடுக்கும் பொருட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் சில வழிபாட்டு தலங்களுக்கும் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்வதற்கு ஏற்கனவே அனுமதி இல்லை என்று ஆணை வெளியிடப்பட்டது.
தற்போது நிலவிவரும் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிற 31-ந் தேதி வரை பொதுமக்களுக்கான தரிசனம் மற்றும் அனைத்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் முற்றிலுமாக ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய திருவிழாவையொட்டி வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
பேராலயத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் காணொலிக்காட்சி வாயிலாக ஒளிபரப்பலாம். மேலும் வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து தங்கும் விடுதிகளும் இந்த நாட்களில் திறக்கப்படாது. திருவிழாவை முன்னிட்டு தற்காலிக கடைகள் அமைப்பதற்கும், பிற கடைகள் மற்றும் உணவகங்கள் திறப்பதற்கும் அனுமதியில்லை.
எனவே நாகை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில், கொரோனா நோய் தொற்று 3-ம் அலை பரவுவதை தடுக்கும் பொருட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் சில வழிபாட்டு தலங்களுக்கும் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்வதற்கு ஏற்கனவே அனுமதி இல்லை என்று ஆணை வெளியிடப்பட்டது.
தற்போது நிலவிவரும் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிற 31-ந் தேதி வரை பொதுமக்களுக்கான தரிசனம் மற்றும் அனைத்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் முற்றிலுமாக ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய திருவிழாவையொட்டி வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
பேராலயத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் காணொலிக்காட்சி வாயிலாக ஒளிபரப்பலாம். மேலும் வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து தங்கும் விடுதிகளும் இந்த நாட்களில் திறக்கப்படாது. திருவிழாவை முன்னிட்டு தற்காலிக கடைகள் அமைப்பதற்கும், பிற கடைகள் மற்றும் உணவகங்கள் திறப்பதற்கும் அனுமதியில்லை.
எனவே நாகை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கயத்தாறு அருகே கம்மாப்பட்டி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நடைபெற்று வருகிறது. மாலையில் சப்பர பவனி தொடங்கியது.
கயத்தாறு அருகே கம்மாப்பட்டி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நடைபெற்று வருகிறது. 9-ம் நாள் திருவிழா கூட்டு திருப்பலியுடன் தொடங்கியது. இவ்விழாவிற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.வுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவர், புனித மிக்கேல் அதிதூதர் சொரூபத் துக்கு மாலை அணிவித்து வணங்கி சப்பர பவனியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கயத்தாறு மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வினோபாஜி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வக்குமார், மாவட்ட கவுன்சிலர் பிரியாகுருராஜ், சிறுபான்மை பிரிவு பிரான்சிஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர், புனித மிக்கேல் அதிதூதர் சொரூபத் துக்கு மாலை அணிவித்து வணங்கி சப்பர பவனியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கயத்தாறு மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வினோபாஜி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வக்குமார், மாவட்ட கவுன்சிலர் பிரியாகுருராஜ், சிறுபான்மை பிரிவு பிரான்சிஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள தேவன் முழு மனுக்குலத்தினையும் மீட்டெடுக்க கிருபையாய் தமது குமாரனை அனுப்பினார். வேதனைகளின் மத்தியில் வாழ்ந்த ஜனங்களைப்பார்த்து கிறிஸ்துவானவர் மனதுருகினார்.
இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளைக் காணும்போது பிதாவாகிய தேவன் தமது ஜனத்தின் மீது விளங்கப்பண்ணின அவரது அன்பையும் நாம் காண இயலும்.
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
ஆதாமின் பாவத்தின் மூலம் அடிமைப்பட்டுப்போன முழு மனுக்குலத்தின் மீட்பிற்காக தேவன் தம்முடைய சொந்தக் குமாரனை சிலுவையிலே ஒப்புக்கொடுத்தார்.
தம்முடைய ஒரே பேறான குமாரனை ஒப்புக்கொடுத்து அவருடைய மரணத்தின் மூலம் உலகை மீட்பதே பிதாவின் மீட்பின் திட்டம்.
தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல் நமக்காக இயேசுவை சிலுவையில் அறையும்படி பிதாவாகிய தேவன் ஒப்புக்கொடுத்ததே அவரது அன்பு ஆகும்.
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்(ரோ:5:7,8)என்று வேதம் தேவனுடைய அன்பை வெளிப்படுத்துகிறது.
பழைய ஏற்பாட்டுக் காலத்திலே நியாயப்பிரமாணம் பாவம் செய்தவர்களிடத்தில் அன்பையோ, இரக்கத்தையோ காண்பிக்கவில்லை.
பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் கூறுகிறது. பாவம் செய்த மனுக்குலத்திற்கு எவ்வித இரக்கமும் பாராட்டாமல் கடுமையான தண்டனையும், தேவ கோபாக்கினையும் மட்டுமே அந்நாட்களில் வெளிப்படுத்தப்பட்டது.
ஆனாலும் அன்புள்ள தேவன் முழு மனுக்குலத்தினையும் மீட்டெடுக்க கிருபையாய் தமது குமாரனை அனுப்பினார். வேதனைகளின் மத்தியில் வாழ்ந்த ஜனங்களைப்பார்த்து கிறிஸ்துவானவர் மனதுருகினார்.
கிருபையுள்ள வார்த்தைகளை ஜனங்கள் மத்தியிலும், தேவாலயத்திலும் பிரசங்கித்தார். பாவத்திலே வாழ்ந்து தங்களுக்கு மீட்பே இல்லையா என ஏங்கித் தவித்த முழு மனுக்குலத்துக்காகவும் தம் அன்பை வெளிப்படுத்த கல்வாரி சிலுவையிலே ஜீவனையும் கொடுத்தார். நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.
முழு உலகமும் கிறிஸ்துவானவர் தம் அன்பால் சிந்தின ரத்தத்தினாலே மீட்பைப் பெற்றது. பாவத்தின் சம்பளம் மரணம் தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு (எபே:2:8) நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்(1 யோ:3:16) என்று வேதம் கூறுகிறது.
பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.
அவருடைய பிள்ளைகளாகிய நாம் கிறிஸ்துவின் அன்பை உலகிலே வெளிப்படுத்துவோம். நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம் என்று வேதம் அனைவருக்கும் இந்தக் கிருபையைப்பெற்றுக்கொள்ள அழைப்புக்கொடுக்கிறது. நாமும் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவோம். தேவனுக்குரியவர்களாய் வாழ்வோம்.
போதகர். அமல்ராஜ், பெத்தேல் ஏ.ஜி.திருச்சபை, மண்ணரை,திருப்பூர்.
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
ஆதாமின் பாவத்தின் மூலம் அடிமைப்பட்டுப்போன முழு மனுக்குலத்தின் மீட்பிற்காக தேவன் தம்முடைய சொந்தக் குமாரனை சிலுவையிலே ஒப்புக்கொடுத்தார்.
தம்முடைய ஒரே பேறான குமாரனை ஒப்புக்கொடுத்து அவருடைய மரணத்தின் மூலம் உலகை மீட்பதே பிதாவின் மீட்பின் திட்டம்.
தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல் நமக்காக இயேசுவை சிலுவையில் அறையும்படி பிதாவாகிய தேவன் ஒப்புக்கொடுத்ததே அவரது அன்பு ஆகும்.
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்(ரோ:5:7,8)என்று வேதம் தேவனுடைய அன்பை வெளிப்படுத்துகிறது.
பழைய ஏற்பாட்டுக் காலத்திலே நியாயப்பிரமாணம் பாவம் செய்தவர்களிடத்தில் அன்பையோ, இரக்கத்தையோ காண்பிக்கவில்லை.
பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் கூறுகிறது. பாவம் செய்த மனுக்குலத்திற்கு எவ்வித இரக்கமும் பாராட்டாமல் கடுமையான தண்டனையும், தேவ கோபாக்கினையும் மட்டுமே அந்நாட்களில் வெளிப்படுத்தப்பட்டது.
ஆனாலும் அன்புள்ள தேவன் முழு மனுக்குலத்தினையும் மீட்டெடுக்க கிருபையாய் தமது குமாரனை அனுப்பினார். வேதனைகளின் மத்தியில் வாழ்ந்த ஜனங்களைப்பார்த்து கிறிஸ்துவானவர் மனதுருகினார்.
கிருபையுள்ள வார்த்தைகளை ஜனங்கள் மத்தியிலும், தேவாலயத்திலும் பிரசங்கித்தார். பாவத்திலே வாழ்ந்து தங்களுக்கு மீட்பே இல்லையா என ஏங்கித் தவித்த முழு மனுக்குலத்துக்காகவும் தம் அன்பை வெளிப்படுத்த கல்வாரி சிலுவையிலே ஜீவனையும் கொடுத்தார். நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.
முழு உலகமும் கிறிஸ்துவானவர் தம் அன்பால் சிந்தின ரத்தத்தினாலே மீட்பைப் பெற்றது. பாவத்தின் சம்பளம் மரணம் தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு (எபே:2:8) நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்(1 யோ:3:16) என்று வேதம் கூறுகிறது.
பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.
அவருடைய பிள்ளைகளாகிய நாம் கிறிஸ்துவின் அன்பை உலகிலே வெளிப்படுத்துவோம். நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம் என்று வேதம் அனைவருக்கும் இந்தக் கிருபையைப்பெற்றுக்கொள்ள அழைப்புக்கொடுக்கிறது. நாமும் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவோம். தேவனுக்குரியவர்களாய் வாழ்வோம்.
போதகர். அமல்ராஜ், பெத்தேல் ஏ.ஜி.திருச்சபை, மண்ணரை,திருப்பூர்.
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்திற்குள் திரளானோர் சென்று பிரார்த்தனை செய்தனர். வருகிற 12-ந்தேதி(வியாழக்கிழமை)வரை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க வாரத்தின் கடைசி 3 நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டது.
அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா பேராலயம் மற்றும் நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில், நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் வாரத்தின் கடைசி நாட்களான கடந்த 6,7 மற்றும் 8-ந்தேதி ஆகிய 3 நாட்கள் மூடப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் வாசலில் நின்று தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு நேற்று நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம் திறக்கப்பட்டது. இதனால் திரளானோர் பேராலயத்திற்குள் சென்று பிரார்த்தனை செய்தனர். வருகிற 12-ந்தேதி(வியாழக்கிழமை)வரை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா பேராலயம் மற்றும் நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில், நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் வாரத்தின் கடைசி நாட்களான கடந்த 6,7 மற்றும் 8-ந்தேதி ஆகிய 3 நாட்கள் மூடப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் வாசலில் நின்று தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு நேற்று நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம் திறக்கப்பட்டது. இதனால் திரளானோர் பேராலயத்திற்குள் சென்று பிரார்த்தனை செய்தனர். வருகிற 12-ந்தேதி(வியாழக்கிழமை)வரை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.






