search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காரைக்காலில், 135 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித தேற்றரவு அன்னை ஆலய திருவிழா
    X
    காரைக்காலில், 135 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித தேற்றரவு அன்னை ஆலய திருவிழா

    காரைக்காலில், 135 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித தேற்றரவு அன்னை ஆலய திருவிழா

    காரைக்காலில் 135 ஆண்டுகள் பழமைவாய்ந்த தூய தேற்றரவு அன்னை ஆலயத்தின் 280-வது ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    காரைக்காலில் 135 ஆண்டுகள் பழமைவாய்ந்த தூய தேற்றரவு அன்னை ஆலயம், காரைக்கால் மாதாகோவில் வீதியில் உள்ளது. இந்த ஆலயத்தின் 280-வது ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக ஆலயத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட மாதா கொடியை, பங்குத்தந்தை அந்தோணிராஜ் அடிகளார் தலைமையில், குறைவான பங்கு மக்களால், சமூக இடைவெளியுடன் ஊர்வலமாக சுமந்துவரப்பட்டது. அதுசமயம் பங்கு மக்கள் கொடிக்கு மலர் தூவி தொட்டு வணங்கினர். பின்னர் மாலை 6.30 மணிக்கு மாவட்ட பங்குத்தந்தை அந்தோணிராஜ் கொடியை ஏற்றி வைத்தார்.

    விழாவையொட்டி குறைவான பக்தர்களுடன் தினசரி திருப்பலி நடைபெறும். விழாவின் 10-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 15-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. கொரோனா தொற்று காரணமாக, பெரிய தேர்பவனி ரத்து செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×