என் மலர்tooltip icon

    இது புதுசு

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் 2022 சி.இ.எஸ். நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய கார் மாடல் விவரங்கள் வெளியாகி உள்ளது.


    ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் 2022 சர்வதேச மின்சாதன விழாவில் (சி.இ.எஸ்.) முக்கிய அறிவிப்புகள் மட்டுமின்றி சுவாரஸ்யமான தகவல்களையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்வில் பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். எம்60 மாடலை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் நிறம் மாறும் தொழில்நுட்பத்தை பி.எம்.டபிள்யூ. அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய கார் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி காரின் வெளிப்புற நிறத்தை ஒரு பட்டனை தட்டினால் மாற்றிக் கொள்ளலாம். இந்த தொளழில்நுட்பத்தில் எத்தனை நிறங்களை மாற்றிக் கொள்ள முடியும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. புதிய தொழில்நுட்பம் எந்த காரில் அறிமுகமாகும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

     பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். டிரைவ் 50

    எனினும், இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய தொழில்நுட்பம் ஐ.எக்ஸ். எம்60 மாடலில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். எம்60 மாடலில் 111.5 கிலோவாட் ஹவர் பேட்டரி, இரட்டை மோட்டார்கள் வழங்கப்படுகிறது.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் ஆடம்பர எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பி.எம்.டபிள்யூ. மாடல் ஐ.எக்ஸ். என அழைக்கப்படுகிறது. இது எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் ஆகும். இந்தியாவில் புதிய பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். விலை ரூ. 1.16 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    இந்த மாடல் ஏற்கனவே அறிமுகமான மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி மற்றும் ஜாகுவார் எலெக்ட்ரிக் கார் மாடல்களுடன் இணைகிறது. புதிய பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். சி.பி.யு. முறையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த கார் மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ.சி., ஆடி இ-டிரான் மற்றும் ஜாகுவார் ஐ பேஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

     பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ்.

    இந்தியாவில் பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். மாடல் எக்ஸ்-டிரைவ்40 எனும் ஒற்றை வேரியண்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலின் வினியோகம் ஏப்ரல் 2022 வாக்கில் துவங்குகிறது. இந்த கார் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டுள்ளது. இது அலுமினியம் ஸ்பேஸ் பிரேம் பயன்படுத்துகிறது.

    புதிய பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். மாடலில் 76.6 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை காருக்கு 322 பி.ஹெச்.பி. திறன், 630 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்த செய்கின்றன. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 425 கிலோமீட்டர் வரை செல்லும்.
    மினி இந்தியா நிறுவனம் தனது கூப்பர் எஸ்.இ. எலெக்ட்ரிக் காரின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.


    மினி இந்தியா நிறுவனம் புதிய கூப்பர் எலெக்ட்ரிக் எஸ்.இ. மாடலுக்கான டீசரை அக்டோபர் மாத வாக்கில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தற்போது இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கியது. எனினும், முன்பதிவு துவங்கிய சில மணி நேரங்களில் 30 யூனிட்களும் விற்றுத்தீர்ந்தது.

    இந்த நிலையில், புதிய மினி கூப்பர் எஸ்.இ. மாடல் மார்ச் 22 ஆம் தேதி அறிமுகமாகும் என மினி இந்தியா அறிவித்து இருக்கிறது. பெயருக்கு ஏற்றார்போல் புதிய கூப்பர் எஸ்.இ. மாடல் எலெக்ட்ரிக் திறன் கொண்டிருக்கிறது. இதில் 32.6 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.

     மினி கூப்பர் எஸ்.இ.

    மேலும் இதில் உள்ள மோட்டார் 181 பி.ஹெச்.பி. திறன், 270 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதில் வழங்கப்படும் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 270 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது. மேலும் இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும்.
    எம்.ஜி. மோட்டார் நிறுவனம் குறைந்த விலையில் புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கார் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்றும் இது குறைந்த விலை எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    தற்போது எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இசட்.எஸ். எலெக்ட்ரிக் காரை மட்டும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இதன் விலை ரூ. 21 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 24.68 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     எம்.ஜி. எலெக்ட்ரிக் கார்

    எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    'அடுத்த நிதியாண்டு இறுதியில் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளோம். இது சர்வதேச பிளாட்பார்மை சார்ந்து உருவாகும் கிராஸ்-ஓவர் மாடல் ஆகும். இந்த பிளாட்பார்மில் தொடர்ந்து புதிய மாடல்கள் உருவாக்கப்பட இருக்கிறது,' என எம்.ஜி. மோட்டார் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சப்பா தெரிவித்தார்.
    லம்போர்கினி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் சூப்பர்கார் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    லம்போர்கினி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் சூப்பர்கார் மாடலை 2027 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக எலெக்ட்ரிக் கார் உருவாக்கி வருவதை லம்போர்கினி உறுதிப்படுத்தி இருந்தது. அந்த வரிசையில் இதன் வெளியீடு பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

    'முழுமையாக எலெக்ட்ரிக் திறன் கொண்டு இயங்கும் லம்போர்கினியின் முதல் கார் 2027 அல்லது 2028 ஆண்டு வாக்கில் அறிமுகமாகும். பிளக்-இன் ஹைப்ரிட் மாடல்கள் இதற்கு முன்பே அறிமுகமாகிவிடும்,' என லம்போர்கினி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீபன் வின்கில்மேன் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

     லம்போர்கினி சூப்பர்கார்

    எலெக்ட்ரிக் பிரிவில் கவனம் செலுத்த லம்போர்கினி நிறுவனம் 150 கோடி டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. லம்போர்கினி அறிமுகம் செய்த முதல் எஸ்.யு.வி. மாடல் சந்தையில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது. இது விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட அனைத்து சந்தைகளிலும் அசத்தலான விற்பனையை பதிவு செய்து வருகிறது.
    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் புதிய டைகர் 1200 மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.


    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் புதிய டிரையம்ப் டைகர் 1200 மாடலை அறிமுகம் செய்துள்ளது. டிரையம்ப் டைகர் 1200 மாடல் முற்றிலும் புது மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த மாடல் டிரிபில் என்ஜின், புதிய சேசிஸ் மற்றும் குறைந்த எடை கொண்டிருக்கிறது. 

     2022 டிரையம்ப் டைகர் 1200

    டைகர் 900 மாடலை போன்றே 2022 டிரையம்ப் டைகர் 1200 மாடலும்- டைகர் 1200 ஜி.டி. மற்றும் டைகர் 1200 ரேலி ரேன்ஜ் என இரண்டு பிரிவுகளில் கிடைக்கிறது. இவற்றில் ரேலி ரேன்ஜ் ஆஃப்-ரோடு சார்ந்த மாடல் ஆகும். இதில் 21 இன்ச் மற்றும் 18 இன்ச் டியூப்லெஸ் ஸ்போக் வீல்கள் உள்ளன. ஜி.டி. ரேன்ஜ் மாடல்களில் 19 இன்ச் மற்றும் 18 இன்ச் அலுமினியிம் வீல்கள் உள்ளன. 

    புதிய டைகர் 1200 மாடலில் 1160 சிசி, டிரிபில் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 148 பி.ஹெச்.பி. திறன், 130 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் 30 லிட்டர் டேன்க் வழங்கப்படுகிறது.

    வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய டிகுவான் பேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    வோக்ஸ்வேகன் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் டிகுவான் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பேஸ்லிப்ட் மாடலின் விலை ரூ. 31.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது.

    புதிய டிகுவான் பேஸ்லிப்ட் மாடல் நைட்ஷேட் புளூ, பியூர் வைட், ஆனிக்ஸ் வைட், டீப் பிளாக், டால்பின் கிரே, ரிப்ளெக்ஸ் சில்வர் மற்றும் கிங்ஸ் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் டூயல் பாட் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல் வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மேம்பட்ட பம்ப்பர், பெரிய ஏர் இன்டேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

     வோக்ஸ்வேகன் டிகுவான் பேஸ்லிப்ட்

    வோக்ஸ்வேகன் டிகுவான் பேஸ்லிப்ட் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187 பி.ஹெச்.பி. திறன், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ஹைனெஸ் சி.பி.350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.


    ஜப்பான் நாட்டை சேர்ந்த மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான ஹோண்டா இந்திய சந்தையில் புதிய ஹைனெஸ் சி.பி.350 ஆனிவர்சரி எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஹோண்டா ஹைனெஸ் சி.பி.350 ஆனிவர்சரி எடிஷன் விலை ரூ. 2.03 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய விற்பனையில் ஒரு ஆண்டை நிறைவு செய்ததை அடுத்து ஹோண்டா ஹைனெஸ் சி.பி.350 ஆனிவர்சரி எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஹோண்டா நிறுவனம் 35 ஆயிரத்திற்கும் அதிக ஹைனெஸ் சி.பி.350 மாடல்களை விற்பனை செய்து இருக்கிறது.

     ஹோண்டா ஹைனெஸ் சி.பி.350 ஆனிவர்சரி எடிஷன்

    புதிய ஹைனெஸ் சி.பி.350 ஆனிவர்சரி எடிஷன் மாடல் பியல் இக்னியஸ் பிளாக் மற்றும் மேட் மார்ஷல் கிரீன் மெட்டாலிக் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. இதன் பியூவல் டேன்க் மீது ஆனிவர்சரி எடிஷன் லோகோ இடம்பெற்று இருக்கிறது.

    ஹோண்டா ஹைனெஸ் சி.பி.350 மாடலில் 348.38சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.8 பி.ஹெச்.பி. திறன், 30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், அசிஸ்ட் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது.
    டிரையம்ப் நிறுவனம் புதிய டைகர் ஸ்போர்ட் 660 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது.


    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் புதிய டைகர் ஸ்போர்ட் 660 அட்வென்ச்சர்-ஸ்டைல் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. புதிய டைகர் ஸ்போர்ட் 660 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    தற்போது முன்பதிவு மட்டும் துவங்கி இருக்கும் நிலையில், இதன் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்தியாவில் புதிய டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 மோட்டார்சைக்கிள் இம்மாத இறுதியிலோ அல்லது ஜனவரி 2022 துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

     டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660

    ஏற்கனவே புதிய டைகர் ஸ்போர்ட் 660 மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய டைகர் ஸ்போர்ட் 660 மாடல் டிரையம்ப் இந்தியா வலைதளத்தில் ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மாடலில் 660சிசி, இன்-லைன் 3 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    மசிராட்டி நிறுவனம் டிரோஃபியோ மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    மசிராட்டி நிறுவனம் டிரோஃபியோ சீரிஸ் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய டிரோஃபியோ சீரிஸ் துவக்க விலை ரூ. 1.99 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் புதிய டிரோஃபியோ சீரிஸ்- எண்ட்ரி லெவல் ஜிப்ளி, குவாட்ரோபோர்ட் மற்றும் லெவாண்ட் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடல்களில் ஃபெராரியின் சக்திவாய்ந்த வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள 3.8 லிட்டர் வி8 என்ஜின் 573 பி.ஹெச்.பி. திறன், 730 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

     மசிராட்டி டிரோஃபியோ

    லெவாண்ட் மாடல் மணிக்கு அதிகபட்சம் 302 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. குவாட்ரோபோர்ட் மற்றும் ஜிப்ளி மாடல்கள் மணிக்கு அதிகபட்சம் 326 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கின்றன.
    டொயோட்டா நிறுவனத்தின் புதிய ஹிலக்ஸ் பிக்கப் டிரக் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது ஹிலக்ஸ் பிக்கப் டிரக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது இந்த மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    ஏற்கனவே இந்த மாடல் உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை இந்த மாடல் சுமார் 1.8 கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. டொயோட்டா ஹிலக்ஸ் மாடல் ஐ.எம்.வி.-2 பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டொயோட்டாவின் பார்ச்சூனர் மற்றும் இன்னோவா க்ரிஸ்டா போன்ற மாடல்கள் இதே பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளன.

     டொயோட்டா ஹிலக்ஸ்

    இந்திய சந்தையில் புதிய டொயோட்டா ஹிலக்ஸ் மாடலின் விலை ரூ. 30 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இங்கு அறிமுகமாகும் பட்சத்தில் டொயோட்டா ஹிலக்ஸ் மாடல் இசுசு வி-கிராஸ் மாடலுக்கு போட்டியாக அமையும்.
    நிசான் நிறுவனம் நான்கு எலெக்ட்ரிக் வாகன கான்செப்ட் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஜப்பானை சேர்ந்த கார் உற்பத்தியாளரான நிசான் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது. 2030 ஆண்டிற்குள் 23 எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய நிசான் திட்டமிட்டுள்ளது. இதில் 15 மாடல்கள் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகும். 

    இது தவிர நிசான் நிறுவனம் நான்கு கான்செப்ட் இ.வி. மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த கான்செப்ட் மாடல்கள் சில்-அவுட், மேக்ஸ்-அவுட், சர்ஃப்-அவுட் மற்றும் ஹேங்-அவுட் என அழைக்கப்படுகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமின்றி நிசான் நிறுவனம் கோபால்ட்-ஃபிரீ பேட்டரிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. 

     நிசான் எலெக்ட்ரிக் கான்செப்ட்

    இவை உற்பத்தி செலவை மேலும் குறைக்கும். 2026 ஆண்டு வாக்கில் பேட்டரி உற்பத்தியை 52 GWh ஆகவும், 2030-க்குள் 130 GWh ஆகவும் அதிகரிக்க நிசான் திட்டமிட்டுள்ளது.

    ×