என் மலர்
இது புதுசு
- இந்துஸ்தான் மோட்டார்ஸ் மீண்டும் இந்திய சந்தையில் களமிறங்குகிறது.
- புதிய ஹெச்.எம். காண்டெசா எலெக்ட்ரிக் வெளியீடு பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் மீண்டும் களமிறங்கும் பணிகளில் இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தீவிரப்படுத்தி உள்ளது. முன்னதாக எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த இருப்பதாகவும், அம்பாசடார் மாடல் புது மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது.
அந்த வரிசையில், இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் காண்டெசா பிராண்டிற்கான் காப்புரிமை கோரி விண்ணப்பித்து உள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் மீண்டும் காண்டெசா பிராண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1980-க்களில் இந்திய சந்தையில் அதிக பிரபலமான கார் மாடல்களில் ஒன்றாக காண்டெசா விளங்கியது குறிப்பிடத்தக்கது.

அதன்படி காண்டெசா பிராண்டை தூசி தட்டி இம்முறை எலெக்ட்ரிக் வடிவில் காண்டெசா கார் அறிமுகம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. ஹெச்.எம். காண்டெசா முற்றிலும் புது பவர்டிரெயின் மற்றும் சேசிஸ் கொண்டிருக்கும். இதன் பாடி மற்றும் இண்டீரியர்களும் புதிய தோற்றம் பெற்று இருக்கும் என தெரிகிறது.
புதிய கார் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் என இருவித வேரியண்ட்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. காண்டெசா மாடலின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன், இன்றைய பாதுகாப்பு வழிமுறைகளுக்கு பொருந்தும் வகையிலான டிசைன் கொண்டிருக்கும். மொத்தத்தில் ஹெச்.எம். காண்டெசா ரெட்ரோ-மாடன் ஸ்டைல் கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய அம்பாசடர் மாடலை தொடர்ந்து ஹெச்.எம். காண்டெசா வெளியீடும் நடைபெறும் என கூறப்படுகிறது. புதிய ஹெச்.எம். அம்பாசடர் மாடல் 2023 அல்லது 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.
- ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிரெட்டா N லைன் அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்த காரின் இந்திய வெளியீடு பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் கிரெட்டா N லைன் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எஸ்.யு.வி. மாடல் கிரெட்டா காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் ஸ்போர்ட் வெர்ஷன் ஆகும். கிரெட்டா N லைன் மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய கிரெட்டா N லைன் மாடலில் பிரத்யேக ஸ்டைலிங் டச் மற்றும் மைனர் மெக்கானிக்கல் அப்டேட்களை கொண்டுள்ளது. இதன் முன்புறம் உயரமான பம்ப்பர் உள்ளது. ஏர் இண்டேக் அளவில் பெரியதாக, ஃபாக் லேம்ப் ஹவுசிங் கொண்டிருக்கிறது. முன்புற கிரில்-இல் டார்க் குரோம் உள்ளது. இந்த காரின் கிரில் மீது N லைன் பேட்ஜிங் காணப்படுகிறது.

மேலும் முன்புற ஃபெண்டர் மீதும் N லைன் பேட்ஜிங் உள்ளது. இத்துடன் 17 இன்ச் அலாய் வீல்கள், பின்புறம் வித்தியாசமான பம்ப்பர், ஃபௌக்ஸ் டிப்யுசர் மற்றும் ட்வின் எக்சாஸ்ட் டிப்கள் உள்ளன. காரினுள் சீட்கள், கியர் நாப், ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவைகளில் N லைன் தீம் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் சிவப்பு நிற ஸ்டிட்ச் செய்யப்பட்டு உள்ளது.
இந்த காரில் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 20 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் கிரெட்டா N லைன் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.
- மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. நிறுவனத்தின் புதிய GT பிளாக் சீரிஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்.
- இதன் விலை ரூ. 5 கோடியில் இருந்து துவங்குகிறது.
மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. GT பிளாக் சீரிஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதே கார் சர்வதேச சந்தையில் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய GT பிளாக் சீரிஸ் மாடலின் துவக்க விலை ரூ. 5 கோடியே 50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

ஏ.எம்.ஜி. GT ரேஸ் கார் 720 ஹெச்.பி. பவர், 800 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தை 9 நொடிகளுக்குள் எட்டிவிடும். இந்த காரில் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. GT பிளாக் சீரிஸ் மாடலில் காயில்-ஓவர் சஸ்பென்ஷன் செட்-அப், அடாப்டிவ் டேம்பிங் மற்றும் வீல் கேம்பர் மற்றும் ஆண்டி-ரோல் பார்களுக்கு மேனுவல் அட்ஜஸ்ட்மெண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் செலக்ட் செய்யக் கூடிய 9 ஸ்டெப் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.
- வால்வோ XC40 ரிசார்ஜ் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.
- இந்த மாடலின் விலை அதிகளவு போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது.
வால்வோ இந்தியா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் XC40 ரிசார்ஜ் மாடல் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. புதிய வால்வோ எலெக்ட்ரிக் கார் பெங்களூருவில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் மாடல் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு, வினியோகம் அக்டோபர் மாதத்தில் துவங்க இருக்கிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் முதல் ஆடம்பர வாகன உற்பத்தியாளர் என்ற பெருமையை வால்வோ நிறுவனம் பெற்று இருக்கிறது. இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் போது வால்வோ XC40 ரிசார்ஜ் விலையை அதிகளவு போட்டி ஏற்படுத்தும் வகையில் நிர்ணயிக்க முடியும்.

வால்வோ XC40 ரிசார்ஜ் காரில் 240 ஹெச்.பி. திறன் வழங்கும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இவை 408 ஹெச்.பி. பவர், அதிகபட்சம் 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.9 நொடிகளில் எட்டி விடும்.
வால்வோ நிறுவனத்தின் ஆல் எலெக்ட்ரிக் XC40 ரிசார்ஜ் மாடலில் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 418 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என ஐரோப்பிய WLTP டெஸ்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- சிட்ரோயன் நிறுவனத்தின் C3 மாடல் ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமாகிறது.
- இந்த மாடல் இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது C3 மாடல் இந்திய சந்தையில் ஜூலை 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. புதிய மைக்ரோ எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவு ஜூலை 1 ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் இந்த மாடல் இருவதி பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
சிட்ரோயன் C3 மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப், டூயல் குரோம் ஸ்லாட் முன்புற கிரில், டூயல் டோன் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், பிளாஸ்டிக் கிளாடிங் மற்றும் சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லேம்ப்கள் உள்ளன. புதிய சிட்ரோயன் C3 மாடல் நான்கு மோனோ டோன் மற்றும் இரண்டு டூயல் டோன் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.
இதன் மோனோ டோன் வேரியண்ட்கள் போலார் வைட், ஸ்டீல் கிரே, செஸ்டி ஆர்ஞ்சு மற்றும் பிளாட்டினம் கிரே நிறங்களிலும், டூயல் டோன் வேரியண்ட்கள் செஸ்டி ஆரஞ்சு, பிளாட்டினம் கிரே ரூஃப் மற்றும் போலார் வைட், செஸ்டி ஆரஞ்சு நிற ரூஃப் நிறங்களில் கிடைக்கிறது.

புதிய சிட்ரோயன் C3 ஹேச்பேக் மாடலில் 1.2 லிட்டடர் பெட்ரோல் மற்றும் 1டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த கார் டீசல் என்ஜின் ஆப்ஷனை கொண்டிருக்காது என்றே கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் சிட்ரோயன் C3 மாடல் மாருதி இக்னிஸ், டாடா பன்ச் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. இதன் பேஸ் மாடல்கள் டாடா நெக்சான், விட்டாரா பிரெஸ்ஸா, நிசான் மேக்னைட் மற்றும் கைகர் போன்ற மாடல்களை எதிர்கொள்ளலாம்.
- லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய ரேன்ஜ் ரோவர் பிளக் இன் ஹைப்ரிட் விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- இதில் உள்ள பேட்டரி பேக் உடன் அதிகபட்சம் 50 கிலோவாட் DC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு உள்ளது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் பிளக் இன் ஹைப்ரிட் (PHEV) மாடலின் இந்திய விலை விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அதன்படி புதிய லேண்ட் ரோவர் ஹைப்ரிட் மாடல் விலை இந்தியாவில் ரூ. 2 கோடியே 61 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை அதிகபட்சமாக ரூ. 4 கோடியே 15 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இத்தகைய விலைப் பட்டியலில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இந்திய சந்தையில் கிடைக்கும் விலை உயர்ந்த பிளக் இன் ஹைப்ரிட் வாகனமாக புதிய ரேன்ஜ் ரோவர் மாடல் அமைந்துள்ளது. ரேன்ஜ் ரோவர் ஹைப்ரிட் மாடல் ரெகுலர் மற்றும் லாங்-வீல்பேஸ் என இரண்டு விதமான பாடி ஸ்டைலிங்கில் கிடைக்கிறது.

புதிய ரேன்ஜ் ரோவர் ஹைப்ரிட் மாடலில் 3.0 லிட்டர் இன்ஜெனியம் 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 38.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. ஸ்டாண்டர்டு ரேன்ஜ் ரோவர் ஹைப்ரிட் மாடல் - P440e மற்றும் P510e என இருவித டியூனிங்கில் கிடைக்கிறது. இதில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 105 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 38.2 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
செயல்திறனை பொருத்தவரை P440e மாடல் 435 பி.ஹெச்.பி. பவர், 620 நியூட்டன் மீட்டர் டார்க் வழங்குகிறது. இதன் P510e மாடல் 503 பி.ஹெச்.பி. பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த ஹைப்ரிட் மாடலில் உள்ள எலெக்ட்ரிக் பவர்டிரெயின் கொண்டு லேண்ட் ரோவர் மாடல் 113 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. நிஜ பயன்பாடுகளில் இந்த மாடல் 88 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும்.
- சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய கார் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- இது சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் மேட் இன் இந்தியா மாடல் ஆகும்.
சிட்ரோயன் நிறுவனம் தனது முதல் மேட் இன் இந்தியா வாகனம், சிட்ரோயன் C3 காரை இந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே தகவலை டீலர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் டீலர் தரப்பில் புதிய சிட்ரோயன் C3 மாடலுக்கான முன்பதிவும் துவங்கி உள்ளது. சிட்ரோயன் C3 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஃபிளாக்ஷிப் C5 ஏர்கிராஸ் மாடலை அறிமுகப்படுத்தி சிட்ரோயன் நிறுவனம் களமிறங்கியது. புதிய C3 மாடல் மூலம் பிரெஞ்சு பிராண்டு சந்தையில் தனது இடத்தை நிலைநிறுத்த முடிவு செய்து உள்ளது. அசத்தலான டிசைன், காண்டிராஸ்ட் ட்ரிம் எலிமண்ட்களை கொண்ட சிட்ரோயன் C3 மாடல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய சிட்ரோயன் C3 ஹேச்பேக் மாடலில் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இந்த கார் டீசல் என்ஜின் ஆப்ஷனை கொண்டிருக்காது என்றே கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் சிட்ரோயன் C3 மாடல் மாருதி இக்னிஸ், டாடா பன்ச் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. இதன் பேஸ் மாடல்கள் டாடா நெக்சான், விட்டாரா பிரெஸ்ஸா, நிசான் மேக்னைட் மற்றும் கைகர் போன்ற மாடல்களை எதிர்கொள்ளலாம்.











