என் மலர்
கார்
இந்திய சந்தையில் ஸ்கோடா குஷக் எஸ்யுவி மாடல் MQB-A0-IN பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் குஷக் எஸ்யுவி மாடல் ஜூன் 28 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. புதிய குஷக் எஸ்யுவி மாடல் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாக அமைகிறது.

குஷக் எஸ்யுவி வோக்ஸ்வேகன் குழுமத்தின் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் உருவாகி இருக்கும் முதல் மாடல் ஆகும். இது இந்தியாவுக்கான பிரத்யேக MQB-A0-IN பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே பிளாட்பார்மில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் உருவாகி இருக்கிறது.
டைகுன் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் 2021 குஷக் மாடல் - ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என ஸ்கோடா தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த கார் ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா எஸ்யுவி மாடல் மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எஸ்யுவி மாடலாக கிரெட்டா இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த ஹூண்டாய் கிரெட்டா இந்திய சந்தை விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்த கிரெட்டா தற்போது ஆறு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.
அந்த வகையில் 1.06 லட்சம் யூனிட்கள் ஒன்பதே மாதங்களில் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் கிரெட்டா புது தலைமுறை வேரியண்ட் விற்பனைக்கு வந்தது. அறிமுகமான ஒரே ஆண்டிற்குள் இந்த மாடல் சுமார் 1.06 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

கடந்த மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் பட்டியலில் ஹூண்டாய் கிரெட்டா முதலிடம் பிடித்தது. முன்னதாக மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விப்ட் மாடல் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா மாடல் - 1.5 லிட்டர், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா மாடல் கியா செல்டோஸ், டாடா ஹேரியர் மற்றும் எம்ஜி ஹெக்டார் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு ஜூன் 30 வரை அசத்தலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜூன் மாதத்திற்கான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு டாடா மோட்டார்ஸ் ரூ. 65 ஆயிரம் வரையிலான சலுகை மற்றும் பலன்களை வழங்குகிறது.
அதன்படி டாடா டியாகோ, டிகோர், நெக்சான் மற்றும் ஹேரியர் போன்ற மாடல்களுக்கு அசத்தல் சலுகை வழங்கப்படுகிறது. இவை ஜூன் 30 ஆம் தேதி வரை கிடைக்கும். டாடா டியாகோ மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

டிகோர் சப்-காம்பேக்ட் செடான் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 15 ஆயிரம் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. நெக்சான் சப்-காம்பேக்ட் எஸ்யுவி டீசல் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. நெக்சான் பெட்ரோல் வேரியண்டிற்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.
டாடா ஹேரியர் மாடலுக்கு ரூ. 65 ஆயிரம் மதிப்பிலான சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஹேரியர் கமோ, டார்க் எடிஷன், XZ+ மற்றும் XZA+ போன்ற மாடல்களுக்கு வழங்கப்படவில்லை.
இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யுவி மாடல்களில் ஒன்றாக டாடா நெக்சான் இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2 லட்சமாவது நெக்சான் மாடலை தனது உற்பத்தி ஆலையில் இருந்து வெளியிட்டுள்ளது. புது மைல்கல் பற்றிய அறிவிப்பை டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. தற்போது இந்தியாவில் விற்பனையாகும் எஸ்யுவிக்களின் முதல் மூன்று மாடல்களில் ஒன்றாக டாடா நெக்சான் இடம்பெற்று இருக்கிறது.

உலகின் முன்னணி ஆட்டோமொபைல் சந்தைங்களில் ஆறாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் அறிமுகமாகும் கார்கள் எண்ணிக்கையும், அதற்கேற்ற போட்டியும் பலமாகவே இருக்கிறது. இந்தியாவில் எஸ்யுவி பிரிவு அதிக போட்டி மிக்கதாக இருக்கிறது.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யுவி மாடல்களில் ஒன்றாக டாடா நெக்சான் இருக்கிறது. நெக்சான் மூலம் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை டாடா மோட்டார்ஸ் குறிவைத்தது. இந்த மாடல் இந்திய சந்தையில் பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டேவியா மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் 2021 ஆக்டேவியா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புது ஆக்டேவியா துவக்க விலை ரூ. 25.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடல் ஸ்டைல் மற்றும் எல் அண்ட் கே என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புது ஆக்டேவியா ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.
புதிய ஸ்கோடா ஆக்டேவியா முந்தைய மாடலை விட வெளிப்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த காரில் புது எல்இடி ஹெட்லேம்ப்கள், பட்டர்பிளை கிரில், செங்குத்தான ஸ்லாட்கள், புதிய 17 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட், பாக் லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

உள்புறம் 2 ஸ்போக் ஸ்டீரிங் வீல், ஷ்பிட்-பை-வயர் கியர்ஸ்டிக், 10 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டூயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 187 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி யூனிட் வழங்ப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அல்காசர் மாடல் இந்த தேதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஹூண்டாய் அல்காசர் மாடல் ஜூன் 18 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹூண்டாய் அல்காசர் மாடல் ஏப்ரல் மாத வாக்கில் காட்சிப்படுத்தப்பட்டது. பின் கொரோனாவைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இதன் வெளியீடு தாமதமானது.
தற்போது பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து அல்காசர் மாடல் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. புதிய ஹூண்டாய் அல்காசர் மாடலுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும்.

புதிய ஹூண்டாய் அல்காசர் மாடல் இந்திய வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. உலகின் மற்ற நாடுகளைவிட இந்த கார் முதற்கட்டமாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. அல்காசர் மாடல் பல்வேறு ஆடம்பர வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்கள் விலையை திடீரென மாற்றி அமைத்தது. இவற்றின் புதிய விலை விவரங்களை பார்ப்போம்.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது க்விட், டிரைபர், கைகர் மற்றும் டஸ்டர் போன்ற மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. புதிய விலை ஜூன், 2021 அன்று அமலுக்கு வந்தது.
விலை உயர்வின் படி ரெனால்ட் டிரைபர் மாடலின் பேஸ் RXE வேரியண்ட் விலை ரூ. 20 ஆயிரம் அதிகரித்து இருக்கிறது. இதன் புதிய விலை ரூ. 5.50 லட்சம் ஆகும். மற்ற வேரியண்ட்களான RXL, RXT, RXZ மற்றும் RXZ டூயல் டோன் விலை ரூ. 13,200 உயர்த்தப்பட்டு இருக்கிறது.

ரெனால்ட் டஸ்டர் மாடல் விலை ரூ. 13,050 உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த விலை உயர்வு டஸ்டர் மாடலின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். இந்த மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் க்விட் மாடல் விலை ரூ. 13,900 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. கைகர் மாடலின் விலை ஒவ்வொரு வேரியண்டிற்கு ஏற்ப ரூ. 3090 துவங்கி அதிகபட்சம் ரூ. 39030 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவன வாடிக்கையாளர்கள் தங்களின் கார் சர்வீஸ்க்கு இதை மட்டும் செய்தாலே போதும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் வாகன சர்வீஸ் சேவைக்கு முன்பதிவு முறையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பிஎம்டபிள்யூ கார் வைத்திருப்பவர்கள் வலைதளம் அல்லது ஸ்மார்ட்போன் செயலி மூலம் கார் சர்வீஸ் சேவைக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.

சர்வீஸ் முன்பதிவில் துவங்கி, பணம் செலுத்துவது வரை அனைத்து சேவைகளையும் கான்டாக்ட்லெஸ் முறையில் பிஎம்டபிள்யூ மாற்றி இருக்கிறது. பிஎம்டபிள்யூ வலைதளத்தில் லாக் இன் செய்து எந்த தேதியில் காரை சர்வீஸ் செய்ய வேண்டும் என குறிப்பிட வேண்டும்.
பிஎம்டபிள்யூ ஒன் செயலி மூலமாகவும் கார் சர்வீஸ் செய்ய முடியும். இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் கிடைக்கிறது. செயலியில் மெக்கானிக்குகள் கார் சர்வீஸ் செய்யப்படும் வீடியோக்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவர்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஆடம்பர எஸ்யுவி மாடல் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மேபக் GLS600 ஆடம்பர எஸ்யுவி மாடலை இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகம் செய்கிறது. GLS600 மெர்சிடிஸ் மேபக் சீரிசில் முதல் எஸ்யுவி மாடல் ஆகும். முன்னதாக 2019 வாக்கில் இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது உலகின் மற்ற சந்தைகளில் இது விற்பனை செய்யப்படுகிறது.

மேபக் ஸ்டான்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது GLS600 மேபக் பல்வேறு மாற்றங்களை கொண்டிருக்கிறது. GLS600 மேபக் பிஸ்போக் அம்சங்கள், உள்புறம் ஆடம்பர அம்சங்கள் பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. வெளிப்புறத்தில் உள்ள ட்ரிம் பீஸ்கள் குரோம் பினிஷ் செய்யப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் மேபக் GLS600 மாடலில் 4.0 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 550 பிஹெச்பி பவர், 730 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் இகியூ பூஸ்ட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் கொண்டுள்ளது. இது 249 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் மே மாதத்தில் விற்பனை செய்த வாகன விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் மே மாதத்தில் மட்டும் 46,555 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இதில் 33,771 யூனிட்கள் உள்நாட்டிலும், 11,262 யூனிட்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு மே மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது இது 151 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

எனினும், ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது மே மாத விற்பனை சரிவடைந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் 1,59,691 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. பயணிகள் வாகனங்கள் பிரிவில் மாருதி சுசுகி மினி, காம்பேக்ட் மாடல்களில் ஆல்டோ, எஸ் பிரெஸ்ஸோ, வேகன் ஆர், செலரியோ, இக்னிஸ், பலேனோ மற்றும் டிசையர் மாடல்களை விற்பனை செய்கிறது.
இவை மட்டும் மே மாதத்தில் 25,103 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. யுடிலிட்டி வாகனங்கள் மற்றும் வேன்கள் பிரிவில் ஜிப்சி, எர்டிகா, எஸ் கிராஸ், எக்ஸ்எல்6, விட்டாரா பிரெஸ்ஸா, ஈகோ போன்ற மாடல்கள் 7451 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
மஹிந்திரா நிறுவன கார் மாடல்களில் இந்த வேரியண்ட்களை தான் அதிக வாடிக்கையாளர்கள் தேர்வு செய்கின்றனர் என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பயன்பாட்டு வாகனங்களில் டீசல் என்ஜின் மாடல்களே அதிக பிரபலமாக இருந்து வந்தன. ஆனால் இந்த மோகம் சமீப காலங்களில் குறைய துவங்கி இருக்கிறது. பிஎஸ் 6 புகை விதிகள் அமலாகி இருப்பதை தொடர்ந்து பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் கொண்ட மாடல்களை பலர் வாங்க துவங்கியுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வும் இந்த மாற்றத்திற்கு காரணமாக பார்க்கப்படுகின்றன. 2020-21 நிதியாண்டில் மஹிந்திரா நிறுவனம் 1,55,540 யூனிட்களை விற்பனை செய்தது. மொத்த விற்பனையில் 19,061 யூனிட்கள் பெட்ரோல் மாடல்கள் ஆகும். மீதமுள்ள 1,36,469 யூனிட்கள் டீசல் மாடல்கள் ஆகும்.

அதாவது மஹிந்திரா நிறுவன வாகனங்கள் விற்பனையில் 12 சதவீதம் பெட்ரோல் மாடல்களாகவும், 88 சதவீதம் டீசல் மாடல்களாகவும் இருந்தது. 2021 நிதியாண்டில் முதல் முறையாக மஹிந்திராவின் பெட்ரோல் வாகனங்கள் விற்பனை 10 சதவீதத்தை கடந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் KUV100NXT பெட்ரோல் வேரியண்ட் விற்பனை குறைந்தது. ஆனாலும், 2021 நிதியாண்டில் XUV300 பெட்ரோல் வேரியண்ட் விற்பனை அதிகரித்து இருக்கிறது. சமீபத்தில் மஹிந்திரா அறிமுகம் செய்த தார் மாடலும் பெட்ரோல் வேரியண்ட் அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் மாடல் புது மாற்றத்துடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் எஸ்யுவி மாடலுக்கு புதிய அலாய் வீல்களை சமீபத்தில் வழங்கியது. இதைத் தொடர்ந்து புது அலாய் வீல்களை கொண்ட நெக்சான் யூனிட்கள் விற்பனையகம் வரத்துவங்கி உள்ளன. முந்தைய வி வடிவ ஸ்போக் அலாய் வீல்களுக்கு மாற்றாக இம்முறை 5 ஸ்போக் கொண்ட 16 இன்ச் டூயல் டோன் டைமண்ட் கட் அலாய் வீல் வழங்கப்பட்டு இருக்கின்றன.
சமீபத்தில் நெக்சான் டெக்டானிக் புளூ நிற வேரியண்ட் விற்பனையை டாடா மோட்டார்ஸ் நிறுத்தியது. தற்போது நெக்சான் மாடல் - போலியஜ் கிரீன், கேல்கேரி வைட், பிளேம் ரெட், பியூர் சில்வர் மற்றும் டேடோனா கிரே என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.

புதிய டைமண்ட் கட் அலாய் வீல்கள் - XZ+, XZ+ (S), XZ+ (O), XZA+, XZA+ (O) மற்றும் XZA+ (S) என தேர்வு செய்யப்பட்ட சில வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. புது அலாய் வீல்கள் தவிர நெக்சான் மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்தியாவில் டாடா நெக்சான் விலை ரூ. 7.19 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12.95 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.






