என் மலர்tooltip icon

    பைக்

    யமஹா நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்கூட்டர் மாடலை அசத்தலான சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    யமஹா நிறுவனம் 2023 ஃபுளூ 125 ஸ்கூட்டரை பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதே ஸ்கூட்டர் இந்தோனேசியா சந்தையில் ஃபிரீ கோ எனும் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், புது மாடல் தோற்றத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

    டிசைன் மற்றும் ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய யமஹா ஃபுளூ மாடல் முந்தைய தலைமுறை யமஹா ரே இசட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் அப்ரிலியா எஸ்.ஆர். 125 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. புதிய ஃபுளூ மாடல் கூர்மையான தோற்றம் கொண்டிருக்காமல், ஃபன்கியாக காட்சியளிக்கிறது. 

    யமஹா ஃபுளோ

    புதுிய யமஹா ஃபுளூ மாடலில் 125சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9.6 பி.ஹெச்.பி. பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதே போன்ற செயல்திறன் வழங்கும் இரு ஸ்கூட்டர்களை யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் வற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

    தற்போது இந்திய சந்தையில் கிடைக்கும் யமஹா ரே இசட்.ஆர். 125 மற்றும் பசினோ 125 போன்ற மாடல்களும் இதே போன்ற வெளிப்படுத்துகிறது. எனினும், ஃபுளூ மாடலின் அம்சங்கள் வேற மாதிரி இருக்கும் வகையில் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    அந்த வகையில் புதிய யமஹா ஃபுளூ மாடலில் ஏ.பி.எஸ். வசதி, 25 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ், யு.எஸ்.பி. சார்ஜிங், முழுமையான எல்.இ.டி. லைட்டிங், சிறிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. 
    பி.எம்.டபிள்.யூ. நிறுவனம் இந்திய சந்தையில் F 850 GS மற்றும் பி.எம்.டபிள்.யூ. F 850 GS அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.



    பி.எம்.டபிள்.யூ. மோட்டராட் நிறுவனம் 2022 பி.எம்.டபிள்.யூ. F 900 XR மோட்டார்சைக்கிள் மாடலுடன் 2022 பி.எம்.டபிள்.யூ. F 850 GS மற்றும் 2022 பி.எம்.டபிள்.யூ. F 850 GS அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரண்டு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களிலும் 853சிசி, இன்-லைன், 2 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.

    முந்தைய மாடலில் இந்த என்ஜின் சர்வதேச சந்தையில் 94 பி.ஹெச்.பி. பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இந்திய சந்தையில் இந்த என்ஜின் செயல்திறன் 89 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 86 நியூட்டன் மீட்டர் டார்க் என சற்றே குறைக்கப்பட்டு இருந்தது. தற்போதைய பி.எஸ். 6 ரக என்ஜின் சர்வதேச சந்தையில் கிடைக்கும் அதே செயல்திறனுடன் கிடைக்கிறது.

     2022 பி.எம்.டபிள்.யூ. F 850 GS அட்வென்ச்சர்

    அந்த வகையில் புது மாடலில் 853சிசி என்ஜின் 94 பி.ஹெச்.பி. பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. பி.எம்.டபிள்.யூ. F 850 GS மிடில் வெயிட் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ஆகும். இதில் பி.எம்.டபிள்.யூ. F 850 GS அட்வென்ச்சர் மாடல் இந்தியாவுக்கு சி.பி.யு. முறையில் கொண்டுவரப்பட இருக்கிறது. இந்த மாடல் இந்திய சந்தையில் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். 

    அம்சங்களை பொருத்தவரை புது பி.எம்.டபிள்.யூ. மோட்டார்சைக்கிளில் ABS ப்ரோ, டைனமிக் டிராக்‌ஷன் கண்ட்ரோல், டைனமிக் எலெக்டிரானிக் சஸ்பென்ஷன், கீலெஸ் ரைடு, கியர் ஷிஃப்ட் அசிஸ்ட் ப்ரோ, ரைடிங் மோட்ஸ் ப்ரோ, ஹீடெட் க்ரிப்ஸ், குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு அம்சங்களாக வழங்கப்படுகின்றன. 

    இந்திய சந்தையில் புதிய பி.எம்.டபிள்.யூ. F 850 GS மாடல் விலை ரூ. 12 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2022 பி.எம்.டபிள்.யூ. F 850 GS அட்வென்ச்சர் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் 2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் 2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மோட்டார்சைக்கிள் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதிய அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் டூரர் மோட்டார்சைக்கிள் கம்ப்லீட்லி-பில்ட்-அப் யூனிட் வடிவில் கிடைக்கும். இந்திய சந்தையில் 2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மோட்டார்சைக்கிள் விலை ரூ. 12 லட்சத்து 30 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய 2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு பி.எம்.டபிள்யூ. மோட்டராட் விற்பனை மையங்களில் துவங்கி இருக்கிறது. இதன் வினியோகம் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் துவங்க பி.எம்.டபிள்யூ. நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

     2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ

    வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக மற்றும் கவர்ச்சிகர நிதி சலுகைகள் பி.எம்.டபிள்யூ. பைனான்சியல் சர்வீசஸ் இந்தியா மூலம் வழங்கப்படுகிறது. புதிய 2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மோட்டார்சைக்கிள் மாடலுக்கு மூன்று ஆண்டுகள் / வரம்பற்ற கிலோமீட்டர்களுக்கு ஸ்டாண்டர்டு வாரண்டி வழங்கப்படுகிறது. சற்றே கூடுதல் தொகை செலுத்தினால் நான்கு மற்றும் ஐந்தாவது ஆண்டுகளுக்கு வாரண்டியை நீட்டித்துக் கொள்ள முடியும்.

    அம்சங்களை பொருத்தவரை 2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மோட்டார்சைக்கிள் மாடலில் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், ப்ளூடூத் வசதி கொண்ட 6.5 இன்ச் ஃபுல் கலர் டி.எப்.டி. டிஸ்ப்ளே, ஏ.பி.எஸ்., டிராக்‌ஷன் கண்ட்ரோல், ரைடிங் மோட்ஸ் ப்ரோ, கீலெஸ் ரைடு, என்ஜின் பிரேக் கண்ட்ரோல், அடாப்டிவ் கார்னரிங் லைட்கள் மற்றும் ஹீடெட் க்ரிப்கள் வழங்கப்பட்டுள்ளன.

    2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மாடலில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 895சிசி, லிக்விட் கூல்டு, பேரலல் டுவின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103.2 பி.ஹெச்.பி. பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 
    இந்த ஸ்கூட்டர்கள் 6 நிறங்களில் கிடைக்கின்றன. மேலும் இந்த ஸ்கூட்டர் பேட்டரிக்கு 40000 கிமீ வரை வாரண்டியு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Wroley என்ற மின்சார வாகன தயாரிப்பு நிறுவனம் மூன்று புதிய மின்சார ஸ்கூட்டர்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு மார்ஸ், பிளாட்டினா, போஷ் என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 90 கி.மீ வரை செல்லும் என கூறப்படுகிறது. ஒரு கி.மீட்டருக்கு 0.10 முதல் 0.15 பைசா வரை மட்டுமே செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்கூட்டர்கள் சுப்பீரியர் தரத்துடனான லித்தியம் அயன் பேட்டரிகளில் வருகிறது. இது 48V மற்றும் 60V பவரை தரும் வல்லமை கொண்டது. இதில் ரிவர்ஸ் மோட், கீ ஸ்டார்ட், ஆண்டி தெஃப்ட் சென்சார், சைட் ஸ்டாண்டர்ட் சென்சார், க்ரூஸ் கண்ட்ரோல், பார்க்கிங் சென்சார், ரியர் டிஸ்க், லெட் ஹெட்லேம்ப், ஸ்டோரேஜ் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்த ஸ்கூட்டர்கள் 6 நிறங்களில் கிடைக்கின்றன. மேலும் இந்த ஸ்கூட்டர் பேட்டரிக்கு 40000 கிமீ வரை வாரண்டியு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    குறிப்பாக இந்திய சந்தையில் 25 முதல் 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த மின்சார வாகன தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. அவர்களுக்கு பெரிய பாதிப்பை இந்த விபத்துகள் ஏற்படுத்தும் என கூறியுள்ளது.
    இந்தியாவில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை மக்களை மின்சார வாகனங்களை நோக்கி தள்ளுகிறது. இந்தியாவில் இயங்கி வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் அதிக அளவில் மின்சார வாகனங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.

    இந்நிலையில் சமீபகாலமாக ஏற்பட்டு வரும் மின்சார ஸ்கூட்டர் தீவிபத்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து அடுதடுத்த மின்சார வாகன விபத்துக்கள் ஏற்படுத்துகின்றன. இந்த விபத்துகள் மின்சார வாகன துறையில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என சிரிசில் என்ற ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

    மின்சார வாகனங்கள் குறித்த தவறான எண்ணத்தை மக்களின் மனதில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தி விடுவதாகவும் கூறியுள்ளது.

    நேற்று மகாராஷ்டிரா நாசிக் அருகே 20 ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்தன. இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை அதேபோல ஒகினாவா, ஓலா உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் ஸ்கூட்டர்களும் தீப்பற்றுகின்றன.

    குறிப்பாக இந்திய சந்தையில் 25 முதல் 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த மின்சார வாகன தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. அவர்களுக்கு பெரிய பாதிப்பை இந்த விபத்துகள் ஏற்படுத்தும் என கூறியுள்ளது.

    இந்த விபத்துகளுக்கு காரணமாம் லித்தியம் அயன் பேட்டரி தான் என கூறப்படுகிறது. விபத்து ஏற்படாத வகையில் பேட்டரியை அமைக்க வேண்டியது. போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் அவசியம் என சிரிசில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

     மக்களின் நன்மதிப்பை மீட்டு எடுப்பது மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு அவசியம் என கூறியுள்ளது.
    தொடர்ந்து நடைபெற்றும் வரும் மின்சார ஸ்கூட்டர் தீ விபத்துகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடந்து மக்கள் மின்சார வாகனங்களை நோக்கி செல்கின்றனர். 

    பிரபல நிறுவனங்களும் மின்சார பைக், ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. இருப்பினும் இந்தியாவில் கடந்த ஒரு மாதத்தில் 4 மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டுவிட்டது. இது மக்கள் மனதில் மின்சார வாகனங்கள் குறித்த பயத்தை ஏற்படுத்தியது. 

    இந்நிலையில் தற்போது ஒரே நாளில் டிரக் தீப்பிடித்ததால் 20 மின்சார ஸ்கூட்டர்கள் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பை ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் நாசிக் அருகே 40 மின்சார வாகனங்களை ஏற்றி சென்ற டிரக் ஒன்று தீப்பிடித்தது. இதில் 20 ஸ்கூட்டர்கள் எரிந்து சாம்பலாகின. இதன்பின் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த மின்சார வாகங்களில் உள்ள லித்தியம் அயன் பேட்டரிகள் இந்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. லித்தியம் அயன் பேட்டரியை நீரில் தூக்கியெறிந்தாலும் தீ அணைவதில்லை, மேலும் கொழுந்துவிட்டு எரிகிறது என கூறப்பட்டுள்ளது. காரணம் நீரில் லித்தியம் அயன் பேட்டரியை போடும்போது எலக்ட்ரோலைட்டில் உள்ள லித்தியம் குறைந்து ஹைட்ரஜன் வாயு வெளியேறுகிறது. இது அதிகம் தீப்பற்றக்கூடியது.

    தொடர்ந்து நடைபெற்றும் வரும் மின்சார ஸ்கூட்டர் தீ விபத்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
    கடந்த வாரம் பூனேயில் ஓலா ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்த பிரச்சனை எழுந்த நிலையில் தற்போது ரிவர்ஸ் மோட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
    ஓலா நிறுவனத்தின் எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டர் மாடல் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. இருப்பினும் சமீபத்தில் புனேவில் இந்த ஸ்கூட்டார் தீப்பிடித்து எரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இந்த ஸ்கூட்டர் புதிய பிரச்சனை ஒன்றை சந்தித்து வருகிறது.

    இதன்படி இந்த ஸ்கூட்டரை பின்பக்கம் இழுக்கும்போது தானாகவே 'Reverse Mode' ஆன் ஆகி விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆக்சலேட்டர் கொடுத்தால் வண்டி வேகமாக பின்பக்கத்தில் செல்கிறது.

    இதனால் வண்டியில் பேலன்ஸ் விடுப்பட்டு விபத்து ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    பெங்களூரில் பயனர் ஒருவர் இதுபோன்று ரிவர்ஸ் மோடில் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவர் ஓலா நிறுவனத்தை தொடர்புகொண்டும் எந்த வித பதிலும் 48 மணி நேரத்திற்கு சரியாக அளிக்கப்படவில்லை என கூறினார்.

    இந்த பிரச்சனையை சரி செய்யக்கோரி பல ஓலா பயனர்களும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
    ஆக்டிவா 6ஜி மொத்தம் 6 நிறங்களிலும், ஆக்டிவா 125 5 நிறங்களிலும் கிடைக்கின்றன. லிமிட்டெட் எடிஷன் ஆக்டிவா 2 நிறங்களில் வருகிறது.
    இந்தியாவில் அதிகம் விற்கப்படும் ஸ்கூட்டர்களில் முதன்மையானதாக ஹோண்டா ஆக்டிவா இருக்கிறது. இந்நிலையில் ஆக்டிவா 125 மற்றும் ஆக்டிவா 6ஜி ஆகிய ஸ்கூட்டர்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

    இந்த ஸ்கூட்டர்களின் விலை ரூ.500 முதல் ரூ.1000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஆக்டிவா 6ஜி ஸ்டாண்டர்ட் ஸ்கூட்டர் ரூ.70,599-ல் இருந்து ரூ.71,432-ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆக்டிவா 6ஜி டீலக்ஸ் ஸ்கூட்டரின் விலை ரூ.72,345-ல் இருந்து ரூ.73,177-ஆக விலை உயர்ந்துள்ளது.

    ஆக்டிவா 125 டிரம் ஸ்கூட்டர் விலை ரூ.74,157-ல் இருந்து ரூ.74,898-ஆகவும், ஆக்டிவா 12 டிரம் அலாய் ஸ்கூட்டரின் விலை ரூ.77,725-ல் இருந்து ரூ.78,657-ஆகவும், ஆக்டிவா 125 டிஸ்க்கின் விலை ரூ.81,280-ல் இருந்து ரூ.82,162-ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    ஆக்டிவா 125 லிமிட்டர்ட் எடிஷன் டிரம் ரூ.78,725-ல் இருந்து ரூ.79,657-ஆகவும், ஆக்டிவா 125 லிமிட்டெட் எடிஷன் டிஸ்க் ரூ.82,280-ல் இருந்து ரூ.83,162-ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    ஆக்டிவா 6ஜி மொத்தம் 6 நிறங்களிலும், ஆக்டிவா 125, 5 நிறங்களிலும் கிடைக்கின்றன. லிமிட்டெட் எடிஷன் ஆக்டிவா 2 நிறங்களில் வருகிறது.
    இந்த பைக்கில் ஒவ்வொரு ட்ரிமிற்கும் மாறுபடும் வகையில் ரூ.1,500 முதல் ரூ.2000 வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
    யமஹா நிறுவனம் தனது YZF-R15 ஸ்போர்ட் பைக்கிற்கான விலை உயர்வை அறிவித்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக் இதுவரை 3 முறை விலை உயர்வு செய்யப்ப்பட்டுள்ளது.

    இந்த பைக்கில் ஒவ்வொரு ட்ரிமிற்கும் மாறுபடும் வகையில் ரூ.1,500 முதல் ரூ.2000 வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி யமஹா R15 V4 மெட்டாலிக் ரெட்- ரூ.1,76,300-ஆக அதிகரித்துள்ளது. டார்க் நைட் விலை ரூ.1,77,300-ஆக அதிகரித்துள்ளது. ரேசிங் ப்ளூ ரூ.1,81,300-ஆகவும், மோட்டோ ஜிபி எடிஷன் (எம்) ரூ.1,82,800-ஆகவும், மெட்டாலிக் கிரே (எம்) ரூ.1,86,300-ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளன.

    இந்த பைக்கில் 155சிசி லிக்விட் கூல்டு இன்ஜின், மாறுபட்ட வால்வ் அக்யூட்டேஷன் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது.இந்த இன்ஜின் 18.1 bhp, அதிகபட்சமாக 14.2Nm பீக் டார்க்கை வழங்கக்கூடியது. 

    இந்த இன்ஜின் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், க்யுக் ஷிப்டர்களுடன் டாப் ஸ்பெக் கொண்ட எம் ட்ரீமில் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தைவிர அசிஸ்டெண்ட், ஸ்லிப்பர் கிளட்ச், டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட முதல் தர அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
    அந்நிறுவனம் 4.5 லட்சம் வாடிக்கையாளர்களுடன் நேருக்கு நேர் உரையாடல் நிகழ்த்தி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளது.
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வதை தொடர்ந்து மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.

    பெரிய நிறுவனங்கள் மின்சார ஸ்கூட்டர், பைக், கார்களை அறிமுகம் செய்து வருகின்றன.

    இருப்பினும் சமீபத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்ததை தொடர்ந்து மக்களுக்கு மின்சார வாகனங்களின் மீதான பயம் தொடர்ந்து இருந்து வருகிறது.  இந்நிலையில் மக்களின் பயத்தை போக்கும் வகையிலும், மின்சார ஸ்கூட்டர் விற்பனையை அதிகரிக்கும் வகையில் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் இந்த ஏப்ரல் மாதத்தை  ‘மின்சார வாகன பேட்டரி பாதுகாப்பு’ வாரமாக கொண்டாட இருக்கிறது.

    இதன்படி ஹீரோ நிறுவனம் 4.5 லட்சம் வாடிக்கையாளர்களுடன் நேருக்கு நேர் உரையாடல் நிகழ்த்தி பேட்டரி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளது. மேலும் மின்சார ஸ்கூட்டர்களை வைத்திருக்கும் வாடிகையாளர்களுக்கு நாடு முழுவதும் உள்ள சர்வீஸ் செண்டர்களில் இலவச சர்வீஸ் வழங்கப்படவுள்ளது. குறிப்பாக கோடைக்காலத்தில் பேட்டரிகள் தீப்பிடிக்காமல் பாதுகாக்க இந்த முன்னெடுப்பு எடுக்கப்படுகிறது.

    இதுகுறித்து அந்நிறுவனத்தின் சி.இ.ஓ சோஹிந்தர் கில் கூறுகையில், ஏற்கனவே சாலையில் சென்றுகொண்டிருக்கும் மின்சார வாகனங்களின் பாதுகாப்பு முக்கியம். பேட்டரி மற்றும் சார்ஜிங் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது எங்கள் நோக்கம். இதற்காக சர்வீஸ் நிபுணர்களுடன் வாடிக்கையாளர்களை நேரடியாக உரையாட அழைத்துள்ளோம். 

    இத்துடன் மின்சார வாகனங்களை எப்படி பராமரிக்க வேண்டும் என்று கையேடு ஒன்றையும் வழங்கவுளோம். இந்தியாவில் 500 நகரங்களில் கட்டணம் இல்லாமல் சர்வீஸும் இந்த மாதம் முழுவதும் வழங்கப்படும் என கூறியுள்ளார்.
    இந்த ஸ்கூட்டர் பழைய அவெனிஸ் ஸ்கூட்டரின் புதிய வேரியண்டாகும். இது ஸ்போர்ட்டி இன்ஜினுடன் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சுஸூகி நிறுவனத்தின் அவெனிஸ் ஸ்கூட்டரின் புதிய ட்ரிம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்த ஸ்கூட்டரில் 125cc இன்ஜின் FI தொழில்நுட்பத்துடன் தரப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6750 rpm-ல் 8.7 PS அதிகப்பட்ச சக்தியையும், 5500 rpm-ல் 10Nm டார்க்கையும் உருவாக்கக்கூடியது. இந்த ஸ்கூட்டர் 106 கிலோ எடையை கொண்டுள்ளதால் குறைந்த எடை கொண்ட ஸ்கூட்டர்கலில் ஒன்றாக இருக்கிறது.

    மேலும் இந்த ஸ்கூட்டரில் எல்.இ.டி லைட்டிங் ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்பிற்கு தரப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் வெளிப்புற ஹிஞ்ச் வகை எரிபொருள் கேப் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சீட்டிற்கு கீழே உள்ள இடம் மேலும் பெரிதாக்கப்பட்டுள்ளது.

    இந்த பைக் ஸ்போர்ட்டி இன்ஜினுடன் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.86,500-ஆக அறிவிக்கபட்டுள்ளது. இது முந்தைய ட்ரிம்மை விட ரூ.200 குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்த பைக்கை ரூ.5000-ல் இருந்து ரூ.10000 வரை கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
    யமஹா மோட்டார் இந்தியா புதிய எம்டி15 வெர்ஷன் 2.0 பைக்கை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது.

    இந்த பைக் கிரே, வைட், கிளாசிக் பிளாக் மற்றும் ரேஷிங் ப்ளூ ஆகிய நிறங்களில் வருகிறது.

    இது மேம்பட்ட ஸ்டிரீட் நேக்கட் மோட்டார் சைக்கிள் மாடலில் கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்ட யுஎஸ்டி முன்புற ஃபோர்க்குளை கொண்டிருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் டூயல் சேனல் ஏ.பி.எஸ்., டிராக்‌ஷன் கண்ட்ரோல், குவிக் ஷிஃப்டர், இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆகியவை இடம்பெறும் என கூறப்படுகிறது. 

    இதன் ரியல்டைம் டேட்டாவை ஸ்மார்ட்போனிலேயே பார்த்து தெரிந்துகொள்ளும் அம்சமும் இடம்பெற்றுள்ளது.

    இந்த பைக்கில் 155சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் மற்றும் விவிஏ தொழில்நுட்பம் வழங்கப்படவுள்ளது. மேலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அப்-குயிக் ஷிஃப்டர் தரப்படுகிறது. இந்த இன்ஜின் 18.1 பி.ஹெச்.பி. பவர், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறனை கொண்டுள்ளது.

    இந்த பைக்கை ரூ.5000-ல் இருந்து ரூ.10000 வரை கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். 

    இந்த பைக்கின் விலை ரூ.1.46 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×