என் மலர்
- வேட்பு மனு 2 படிவங்கள் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களிலும், உள்ளாட்சி அலுவலகங்களிலும் கிடைக்கும்.
- வாக்கு எண்ணிக்கையானது தேர்தல் முடிவுற்றவுடன் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகரக பகுதி உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளுக்காக மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பி னர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வருகிற 23-ந்தேதி நடத்தப்பட உள்ளது.
இத்தேர்தலில் ஊரகப்பகுதியில் 14 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பி னர்களில் இருந்து 7 உறுப்பினர்களும், நகர பகுதிகளில் 180 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் 260 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து மொத்தம் 5 உறுப்பினர்களும் என மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் வேட்பாளர் அல்லது அவரது முன்மொழிவாளரால் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 10-ந்தேதி வரை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனு 2 படிவங்கள் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவல கங்களி லும், உள்ளாட்சி அலுவல கங்களிலும் கிடைக்கும். வேட்புமனு பரிசீலினையானது 12-ந்தேதி 11 மணிக்கு நடைபெறும். வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பினை வருகிற 14-ந்தேதி அன்று 3 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கலாம். தேர்தலில் வாக்குப்பதிவு இருக்குமானால் 23-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப் பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடை பெறும்.வாக்கு எண்ணிக்கையானது தேர்தல் முடிவுற்றவுடன் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
- கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
நெல்லை:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று ஆகும்.
விநாயகர் திருவிழா
48 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முதல் உற்சவமான விநாயகர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் விமர்சையாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்காக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிப் பட்டம் கோவில் உட்பிரகா ரத்தில் பல்லக்கில் வீதி உலா கொண்டு வரப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பால், தயிர், மஞ்சள், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனையும் நடைபெற்றது. 6 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் விநாயகருக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோவில் உட்பிரகாரத்தில் வீதிஉலாவும் நடைபெறும். இதனைத்தொடர்ந்து 11-ந் தேதி முதல் மூவர் உற்சவமும், அதனைத் தொடர்ந்து 16-ந் தேதி முதல் சந்திரசேகரர் பவானி அம்பாள் உற்சவமும் நடைபெறுகிறது.
தேரோட்டம்
பின்னர் 24-ந்தேதி ஆனிப்பெரும் திருவிழா கொடியேற்றம் சுவாமி சன்னதி முன்புள்ள பெரிய கொடிமரத்தில் நடை பெறுகிறது. ஜூலை 2-ந்தேதி ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேரோட்டத் திருவிழா நடைபெறுகிறது.
இன்று காலை விநாயகர் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- புதிய கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
நெல்லை:
மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வள்ளியூரில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் இன்று நேரில் சென்று மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் பார்வதி, மூலைக்கரைப்பட்டி காங்கிரஸ் நகர தலைவர் முத்துகிருஷ்ணன், வட்டார தலைவர்கள் நளன், ராமஜெயம், மூலைக்கரைப்பட்டி தி.மு.க. நகர தலைவர் முருகையா பாண்டியன், வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு ரூ.111 கோடிக்கான பணப்பலன்கள் வழங்கப்பட்டது.
- நெல்லை மாவட்டத்தில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை:
ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள், வாரிசு தாரர்களுக்கு பணப்பலன்கள் வழங்கும் விழா, பணியாளர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை மற்றும் பாவனையாக்கி திறப்பு விழா நெல்லை வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணி மனையில் இன்று நடைபெற்றது.
அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் வரவேற்றார். கலெக்டர் கார்த்திகேயன், ஞானதிரவியம் எம்.பி., மேயர் சரவணன், அப்துல்வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளிரூட்டப்பட்ட ஓய்வறை மற்றும் பாவனை யாக்கியை சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி திறந்து வைத்தார். தொடர்ந்து, அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணப்பலன்களை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். அந்த வகையில் 297 பேருக்கு பணப்பலன்கள் வழங்கப்பட்டது.
பின்னர், பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 43 பேருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பணப்பலன்களை வழங்கினார். ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு ரூ.111 கோடிக்கான பணப்ப லன்கள் வழங்கப்பட்டது. பின்னர் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-
14-வது ஊதிய உயர்வு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முடிந்திருக்க வேண்டும். அதனை தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி இருக்கிறார். தமிழ்நாட்டில் நிதி நிலைமைகளை முதல்-அமைச்சர் சரி செய்து கொண்டிருக்கிறார்.
கடந்த காலத்தில் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்ட கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சபாநாயகர் அப்பாவு பேசும்போது, அரசு பள்ளி மாணவர்கள் சீருடையில் சென்றால் பஸ்சில் கட்டணம் வாங்க கூடாது என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தற்போது அது நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளிநாடு சென்று முதல்-அமைச்சர் வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்துள்ளார். சாமானியர்களுக்கு வேலை கிடைக்கவே முதல்-அமைச்சர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இது சாமானியர்களுக்கான ஆட்சி என்றார்.
விழாவில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் பஸ்சில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் வழங்கப்படுகிறது. எனவே இது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி.
48 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் இருக்கும் நிலையில் ரூ.111 கோடியே 95 லட்சம் போக்குவரத்து கழகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், இசக்கி சுப்பையா, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதன்மை நிதி அலுவலர் சங்கர் நன்றி கூறினார்.
- கண்ணம்மாள் வாழைத்தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகிறார்.
- வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது 10 குழாய்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
நெல்லை:
பாப்பாக்குடி அருகே கபாலிபாறை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ப வரது மனைவி கண்ணம்மாள் (வயது 43). இவர் அதே பகுதியில் வாழைத்தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகிறார். வாழை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு ரூ.24 ஆயிரம் மதிப்பிலான 10 குழாய்களை தோட்டத்தில் வைத்து இருந்தார்.
இந்நிலையில் வழக்கம்போல் நேற்று மாலை அவர் வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது 10 குழாய்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- ஆலன் மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தார்.
- உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஆலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
நெல்லை:
பாளை சீவலப்பேரி அருகே மேலபாலாடை பகுதியை சேர்ந்தவர் ஆலன் (வயது 23).
இவர் மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தார். நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டில் தூங்கச் சென்றார். இன்று காலை வெகு நேரமாகியும் அவரது அறையின் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஆலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சீவலப்பேரி போலீசார், ஆலன் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பணியிடத்தில் மன அழுத்தம் கொடுக்கப்பட்டதால் ஆலன் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என சீவலப்பேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இசக்கியப்பனுக்கும், முருகேசனுக்கும் தகராறு ஏற்பட்டது.
- ஆத்திரம் அடைந்த முருகேசன், இசக்கியப்பனை கம்பால் தாக்கினார்.
களக்காடு:
ஏர்வாடி அருகே உள்ள வேப்பங்குளம் கீழூர், நடுத்தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 65). தொழிலாளி. நேற்று இவரது மாடுகள் கருங்கண்ணன் குடியிருப்பு தெற்கு தெருவை சேர்ந்த விவசாயி முருகேசனுக்கு (48) சொந்தமான தோட்டத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது.
இதில் இசக்கியப்பனுக்கும், முருகேசனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகேசனை தேடி வருகின்றனர்.
- பூக்குழி நடைபெறும் திடலில் வேதம் முழங்க அக்னி வளர்க்கப்பட்டது.
- பக்தர்கள் சப்பரத்திற்கு முன்னே 'கோவிந்தா' கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.
சிவகிரி:
சிவகிரியில் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோவிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 8 மணிக்கு கோவில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள பூக்குழி நடைபெறும் திடலில் வேதம் முழங்க அக்னி வளர்க்கப்பட்டது.
சப்பரத்தில் எழுந்தருளி
மாலை 5.30 மணிக்கு கோவிலில் இருந்து திரவுபதி அம்மன், கிருஷ்ணன், அர்ச்சுனர் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு எழுந்தருளி சப்பரத்தில் அமர்ந்து புறப்பட்டு சென்றனர். பூக்குழி இறங்குவதற்காக 41 நாட்கள் விரதம் இருந்து வந்த பக்தர்கள் சப்பரத்திற்கு முன்னே கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.
சப்பரம் முத்துமாரியம்மன் கோவில் தெரு, முக்கிய ரத வீதிகள், சிவராமலிங்காபுரம் தெரு வழியாக வலம் வந்தனர். சப்பரம் 6.15 மணிக்கு கோவிலுக்கு முன்பாக சென்றவுடன் கோவில் பூசாரி மாரிமுத்து முதன்முதலாக பூக்குழி இறங்கினார். இதனைத் தொடர்ந்து 150 பெண்கள் உட்பட 736 பேர் பூக்குழி இறங்கினர்.
கலந்து கொண்டவர்கள்
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் கண்ணதாசன், நிர்வாக அதிகாரி கேசவராஜன், கணக்கர் குமார், காப்பு கட்டிகள் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள், ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.
பூக்குழித் திருவிழாவைக் காண சிவகிரி, புளியங்குடி, தளவாய்புரம், வாசுதேவ நல்லூர், ராஜபாளையம், ராயகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர்.
முன்னதாக புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அசோக் தலைமையில் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர். வாசுதேவநல்லூர் தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் பொறுப்பு கருப்பையா தலைமையில் தீயணைப்பு துறையினரும், சிவகிரி பேரூராட்சிமன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்த ரவடிவேலு, துணைத்தலைவர் லட்சுமி ராமன், செயல் அலுவலர் வெங்கடகோபு, கவுன்சிலர்கள், கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன், கணேசன், தலையாரிகள் வேல்முருகன், அழகுராஜா, வனத்துறையினர் மற்றும் பலர் பூக்குழித் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
- சவுந்தரராஜன் தனது வீட்டின் சுற்றுபுறம் தென்னந் தட்டிகளால் வேலி அமைத்துள்ளார்.
- தீ மளமளவென பரவி தென்னந்தட்டிகள் முழுவதும் எரிந்து சாம்பலாயின.
கடையம்:
கடையம் அருகே உள்ள மேட்டூர் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது53). பாத்திர வியாபாரி. இவரின் வீட்டின் சுற்றுபுறம் தென்னந் தட்டிகளால் வேலி அமைத்துள்ளார்.
இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர், தென்னந்தட்டிகள் மீது தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதில் தீ மளமளவென பரவி தட்டிகள் முழுவதும் எரிந்து சாம்பலாயின. தட்டிகள் முழுவதும் எரிந்து சாம்பலாகி கிடப்பதை கண்ட சவுந்த ரராஜன் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் கடையம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
- கூட்டத்தில் பங்கு பெற மாற்றுதிறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை , உள்ளிட்ட சான்றுகளின் நகல்களை கொண்டு வர வேண்டும்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்கள் பயன் பெற வேண்டி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டரின் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. மாற்றுத்தி றனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களுக்கு உதவிகள் பெற மாற்றுதிறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை , குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவையின் நகல்களை கொண்டு வந்து பயன்பெறலாம். இந்த தகவலை கலெக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
- ஞாயிறு பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- 3-ந் தேதி சேகர அளவிலான பெண்கள் பண்டிகை நடைபெற்றது.
கடையம்:
கடையம் அருகே மேட்டூர் பரி.திரித்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை நடைபெற்றது. கடந்த 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் ஆயத்த ஆராதனை நடைபெற்றது. இதில் செங்கோட்டை சேகர தலைவர் கலந்து கொண்டு செய்தி அளித்தார். பின்னர் ஞாயிறு பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 3-ந் தேதி (சனிக்கிழமை) காலையில் சேகர அளவிலான பெண்கள் பண்டிகை நடைபெற்றது. இதில் அருள் சோபா குழுவினர் கலந்து கொண்டு பண்டிகையை நடத்தினர். இதையடுத்து நேற்று காலையில் நடை பெற்ற பண்டிகை ஆராதனையில் இந்திய மிஷனெரி சங்க தேசிய பணித்தள ஒருங்கிணைப்பாளர் குரு இம்மானுவேல் பால் செய்தி அளித்தார். தொடர்ந்து ஐக்கிய விருந்து நடை பெற்றது. பண்டிகை ஆரா தனையில் சேகர தலைவர் கிங்ஸ்லி ஜான் ஸ்டீபன், கவுரவ குரு லதா கிங்ஸ்லி, குரு வானவர்கள் சில்வா ன்ஸ், ராபர்ட் ,ஜெயமணி மேட்டூர் சேகர குரு ஜோயல் ஷாம் மெர்வின்,ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், சேகர செயலர் செல்வராஜ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் டேவிட் செல்வராஜ், சிம்சோன் தேவதாசன் மற்றும் சேகர கமிட்டி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
- நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சிவகிரி:
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், சிவகிரி பூக்குழித் திருவிழாவை முன்னிட்டும், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின் படி, சிவகிரி வடக்கு ரத வீதியில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட துணைத் தலைவர் மனோ கரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார். பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கட கோபு, துணைத்தலைவர் லட்சுமி ராமன், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மருது பாண்டியன், மருத வள்ளி முருகன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுந்தரவடிவேலு, உதயநிதி ஸ்டாலின் மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் புல்லட் கணேசன், 9-வது வார்டு செயலாளர் பிச்சைமணி ஆகியோரின் ஏற்பாட்டில் அன்ன தானம் வழங்க ப்பட்டது.நிகழ்ச்சியில் நல்லசிவம், முனி யாண்டி, துரைராஜ், கார்த்திக், பரமசிவன், ராம்குமார், அய்யாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.







