search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏர்வாடி அருகே தொழிலாளி மீது தாக்குதல்
    X

    ஏர்வாடி அருகே தொழிலாளி மீது தாக்குதல்

    • இசக்கியப்பனுக்கும், முருகேசனுக்கும் தகராறு ஏற்பட்டது.
    • ஆத்திரம் அடைந்த முருகேசன், இசக்கியப்பனை கம்பால் தாக்கினார்.

    களக்காடு:

    ஏர்வாடி அருகே உள்ள வேப்பங்குளம் கீழூர், நடுத்தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 65). தொழிலாளி. நேற்று இவரது மாடுகள் கருங்கண்ணன் குடியிருப்பு தெற்கு தெருவை சேர்ந்த விவசாயி முருகேசனுக்கு (48) சொந்தமான தோட்டத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது.

    இதில் இசக்கியப்பனுக்கும், முருகேசனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகேசனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×